CJ for You: வேதாத்திரி

வேதாத்திரி

Showing posts with label வேதாத்திரி. Show all posts
Showing posts with label வேதாத்திரி. Show all posts

வேதாத்திரி மகரிசி பிறப்பின் ரகசியம் அறிந்த அவரின் தந்தை




வேதாத்திரி பிறப்பின் ரகசியம்

தன் தந்தையாரின் வார்த்தைகளின்படியே, வேதாத்திரிக்கு;

கடவுள் என்பது எது?

வறுமை என்றால் என்ன?

மனித வாழ்க்கையிலே ஏன் துன்பங்கள் தோன்றுகின்றன?

என்ற மூன்று கேள்விகள் அவ்வப்போது ஒலித்துக்கொண்டே இருந்தன. இவற்றிற்கு காரணங்கள் கண்டு தெளிவு பெறுவதற்காக, ஆராய்ச்சியிலும் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். விளைவாக தனது 35வது வயதில் தன்னிலை விளக்கமாக இறைநிலையை உணர்ந்தார். அதன் அடிப்படையில் உலக மக்களுக்காக அவர் அளித்த வாழ்க்கை நெறியே மனவளக்கலை ஆகும். தனது 48ம் வயதில் உலக அமைதிக்காக உலக சமாதானம் (World Peace) எனும் நூலாக, 200 பாடல்களை இயற்றி 1957ம் ஆண்டு வெளியிட்டார்.


அருட்தந்தை வேதாத்திரி மகரிசி அவர்களுடைய பிறப்பின் ரகசியத்தை, ஓவிய நூலாக நாங்கள் வெளியிட்டிருக்கிறோம். படித்து இன்புறுக.

இலவசபதிப்பு மின்னூல் : வேதாத்திரி ரகசியம்

வேதாத்திரி மகரிசி மாக்கோலமாய் விளைந்த மதிவிருந்து தத்துவங்கள்


வேதாத்திரிய தத்துவங்கள்: Vethathiriya Philosophy Collection (Tamil Edition) Kindle Edition

 
அருட்தந்தை வேதாத்திரி மகரிசி, எளிய மக்களின் ஞானி. தன் வாழ்நாள் முழுதும், மக்களுக்காகவே, மக்களையே இறையாக பாவித்து தொண்டு செய்து உய்வித்தவர். வாழ்க வையகம், வாழ்க வளமுடன் என்ற அற்புத மந்திர வார்த்தைக்கு சொந்தக்காரர். எவரொருவரும் தன்னை அறிந்து, உணர்ந்து, அந்த வழியாகவே இறையை அறிந்து கொள்ளும், எளிய யோக சாதனையை, மனவளக்கலை மூலம் இந்த உலகுக்கு தந்தவர். உலக சமுதாய சேவா சங்கத்தின், நிறுவனர்.

ஓவ்வொரு தனி மனிதனும், தன் களங்கங்களை போக்கி, தன்னை மனதை, தன் அறிவை உயர்த்திக்கொள்வதன் மூலமாகவே, எல்லைகளில்லா ஓர் உலகமும், கூட்டாட்சியும், அதன் வழியாக உலக சமாதானமும் மலர வழி அமைத்து, எல்லோரையும் வழி நடத்துபவர். அவரின் தத்துவங்கள், கல்லூரி பாடமாகவும், பாடநூலாகவும் இளைய சமுதாத்தினரை சென்று சேர்ந்திருக்கிறது.

மனம் என்றால் என்ன என்பதற்கும், இறை என்றால் என்ன என்பதற்கும் தெளிவான விளக்கம் கொடுத்தவர். அந்த மனதை அறிந்தாலே அதனுள்ளே உறைந்திருக்கும் இறையையும் அறிய வழி கொடுத்தவர்.

இருபத்தைந்து ஆண்டுகளாக, 1953 ம் ஆண்டு முதலாக, அருட்தந்தை வேதாத்திரி மகரிசி அவர்களில் துணைவியார், வாசலில் கோலமிடும்பொழுது, மகரிசி சொல்லும் அருளுரைகளையும் எழுதுவது வழக்கமாக இருந்திருக்கிறது. அந்த அருளுரைகளை நூலாக பதிவு செய்து, “மாக்கோலமாய் விளைந்த மதிவிருந்து” எனும் தலைப்பில் உலக சமுதாய சேவா சங்க அன்பர்கள், வெளியிட்டிருக்கிறார்கள்.

அந்த அருளுரைகளின் சாரத்தை, இங்கே தத்துவமாக விரித்து, கருத்தாக்கம் செய்திருக்கிறேன். அருட்தந்தை வேதாத்திரி மகரிசியின் வார்த்தைளில் கண்ட உண்மைகளை, அவர் சொல்லிச்சென்ற வார்த்தைகளின், அனுபவங்களின் வாயிலாகவே தர முனைந்திருக்கிறேன்.

அருட்தந்தை வேதாத்திரி மகரிசி வழி செல்லும் அன்பர்களுக்கும், மாணவர்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும், தேடலை துவங்கும் தனிமனிதருக்கும் உபயோகமாக இருக்கும் என்று நம்புகிறேன். அவர்களை, இறைநிலையோடு இணைந்து நின்று வாழ்த்தி மகிழ்கிறேன். வாழ்க வையகம், வாழ்க வளமுடன்.

அமேசான் மின்னூல் வரிசையில் விற்பனைக்கு கிடைக்கிறது.

https://amzn.to/38ewMWY