2020 | CJ

2020

The other side of man - Part 01



ந்த சமூகத்தில் ஆளுமை கொண்ட நபர்கள், தன் திறமையினால், தங்கள்படைப்புக்களால் மட்டுமே. இப்படியான நபர்கள், மக்களிடத்தில் எந்த பிம்பத்தையும் ஏற்படுத்துவது இல்லை என்பது உண்மைதான். ஆனால் சகமனிதனான “இவன்” இப்படியெல்லாம் படைக்கிறானே! என்றொரு பெருமிதமும், மகிழ்ச்சியும், உத்வேகமும், பாராட்டும் நல்ல குணமும் உருவாவது இயல்புதானே?!

ஆனால், தன்னைக்காட்டும் நிலைக்கண்ணாடிக்கும் மறுபக்கம் உண்டு என்று சொல்லுவார்கள் தானே. அப்படி, ஓவ்வொருவருக்கும் ஒரு மறுபக்கம் அல்லது மறுமுகம் உண்டு. மறு மனிதன் என்றுகூட சொல்லலாம். அந்த மறு மனிதன் எப்படிப்பட்டவன் என்ற கருத்து நம்மால் முன்கூட்டியே அனுமானிக்க இயலாது.

இதென்ன ஆணுக்கு மட்டும்தானா? இல்லை பெண்களுக்கும் உண்டுதான், ஆனால் இங்கே ஆண்கள் மட்டுமே உதாரணம் கொண்டு சிந்திப்போமே.

என்னுடைய நண்பர், சித்தூர் முருகேசன் ஜோதிட வல்லுனர். இயல்பான வாழ்க்கையில் எதையும் கடந்து செல்ல எளிய வழியை சொல்லுபவர். தன்னிடம் ஜாதகம் தந்து பலன் கேட்க விரும்புவோருக்கு சொல்லும் வழி என்ன தெரியுமா? என் மின்னஞ்சலுக்கு உங்கள் ஜாதக விபரம் அனுப்புங்கள். அல்லது தபால் மூலமாக என் முகவரிக்கு அனுப்புங்கள். தயவு செய்து என்னை நேரில் வந்து பார்த்து, பலன் தெரிந்துகொள்ளவேண்டும் என்று அடம்பிடிக்காதீர்கள். உங்கள் நல்லதுக்குத்தான் சொல்லுகிறேன். நீங்கள் இப்படி, அப்படி என்று கற்பனை செய்து வைத்திருக்கும் பிம்பத்திற்குள் நான் சிக்கமாட்டேன். அதனால் உங்களுக்கு ஏமாற்றம் வரும். அதனால் நேரில் வரவேண்டாம் அது அவசியமும் இல்லை என்று அடிக்கடி சொல்லிக்கொண்டே இருப்பார். 

காரணம் “தனக்கு தானாக அவரைப்பற்றி, இவர்கள் கட்டிக்கொண்ட பிம்பம்தான்”

//அந்த மறு மனிதன் எப்படிப்பட்டவன் என்ற கருத்து நம்மால் முன்கூட்டியே அனுமானிக்க இயலாது.// ஏற்கனவே சொன்னது போலவே, இந்த பிம்பக்கணக்கு எப்படி நிகழ்கிறது? இதுவரை ஒருவரின் செயலுக்கும், அவரின் தன்மைக்கும் ஏற்படுத்திக்கொண்ட முடிச்சுத்தான்.  “வெள்ளையாக இருக்கிறவன் பொய் சொல்லமாட்டான், குண்டாக இருப்பவன் சூதுவாது அறியாதவன்” இப்படியெல்லாம் பொதுவாக சொல்லுவோம் அல்லவா?! அதுதான் இந்த முடிச்சு.

ஆளைப்பார்த்து, ரகம் பிரிப்பதும், மதிப்பளிப்பது என்றும் சரியாக இருந்ததில்லை. அன்பே சிவம் திரையின் வசனம் போல, “தீவிரவாதி என்பவன் என்னைப்போல கொடூரமுகத்தோட இருக்கனும்னு அவசியமில்லை, உங்களைப்போல அழகாகவும் இருக்கலாமே” 

இந்த முடிச்சால் உருவான பிம்பம் உடையும்போது, இவனால் மதிக்கப்பட்ட அந்த மனிதர் கீழே இறக்கப்படுகிறார், கேலியும் கிண்டலும் செய்யபடுகிறார் அல்லது இவனெல்லாம் ஒரு மனிதனா? என்று தாழ்த்தியும் விடப்படுகிறார்.

இசைஞானி இளையராஜா அவர்கள், என்று சொன்னதுமே,  இங்கே இரு நிலைப்பாடுகள் வந்திருக்கும்தானே?! மொத்த கூட்டத்தில் ஒருபாதி, இருபாதியாக பிரிந்து வம்பு இழுத்துக்கொண்டிருப்பது இப்போதும் சமூக வலைத்தளங்களில் காணமுடியும். விஜய் டிவியில், நீயா நானாவில் ஒரு அன்பர், “எனக்கு பொழுதுபோகவில்லை என்றால், இளையராஜாவை போற்றி, பாராட்டி, தூக்கிப்பிடித்து ஒரு டிவிட் போடுவேன், அப்படியே பத்திக்கும்” என்று சொன்னது ஞாபகமிருக்கிறது.

ஒரு தனிநபராக, உலக அளவில் ஓவியனாக வேலைகளை அவ்வப்பொழுது வாங்கி, பிழைப்பை ஓட்டிக்கொண்டிருக்கும் எனக்கே கூட இப்படியான, முடிச்சால் உருவான பிம்பம் உருவாக்கி விட்டிருக்கிறார்கள். “நீ என்னாய்யா இப்படி வேகமா பேசுறே, ஒன்னுமே புரியலை” என்று சொல்லியிருக்கிறார்கள். அந்த முடிச்சை அவிழ்க்க நான் படாதபாடு பட்டேன், பட்டுக்கொண்டும் இருக்கிறேன்.  

ஆனால் நானே கூட அப்படியான முடிச்சு பிம்பத்தை உருவாக்கியும் வைத்திருக்கிறேன் என்பது கொடுமை. அதில் சில உதாரணங்களை காண்போம். ஒருவர், இளையராஜா, இன்னொருவர் பி.சி ஸ்ரீராம்.

அடுத்தபதிவில் சந்திப்போம். 


Why stopped to draw human faces - Part 02



ஒரு ஓவியன், கண்களால் பார்ப்பதைமட்டுமே வரைவதில்லை. அவனின் பார்வை அளவில் சிக்கிய, அவனுக்குமட்டுமே முக்கியமாகப்படும் விசயத்தையோ, பொருளையோ மையப்படுத்தி, இயல்பாக அங்கே கிடைக்கும் வெளிச்சம், நிழல் ஆகியவற்றை கவனித்து, அதில் கூடுதலாக ‘இன்னும் என்ன செய்யலாம்?’ என்ற சிந்தனை தெளிவோடு வரைவான்.

காட்சிப்பொருளை வரையாது, தன் மனதிற்குள் எழுவதை வரைகிறேன் என்ற, மாடர்ன் ஆர்ட் ஓவியர்கள் இதில் சிக்கமாட்டார்கள். அவர்கள் தனி உலகம்.

இத்தனை காலமாக, நான் ஒருபோதும் இயற்கை காட்சிகளையோ, தெரு, நகரம் இப்படியான காட்சிகளையோ வரைந்ததில்லை. அதில் நிறைய நுணுக்கங்களை சேர்க்கவேண்டியதிருக்கும் என்பதால், அதற்கான பொறுமை என்னிடமில்லை.  ஒரு ஓவியத்தை நீண்ட நாளாக வரைந்துகொண்டே இருக்கும் பழக்கமும் என்னிடமில்லை. அதோடு நாம் உழைத்தால், அதற்கான பலன் கிடைக்கவேண்டுமேயன்றி, சும்மா ‘எனக்கும் வரையத்தெரியும் என்பதற்கோ, இப்படியெல்லாம் கஷ்டப்பட்டு வரைந்தேன்’ என்று பெருமையடித்துக்கொள்வதற்கும் நான் வரைவதில்லை. ஒரு ஓவியம் வரைந்தால் அது எனக்கு என்ன கொடுக்கும் என்பதில் எனக்கு அக்கறை உண்டு. எனவே, நான் ஒரு ஓவியன் என்பதை வெளிக்காட்டுவதற்காக வரைந்த ஓவியங்களைத்தவிர வேறெந்த ஓவியமும் நான் வரைந்து வைத்துக்கொள்வதில்லை. சில நண்பர்களுக்கு சும்மாவேணும் நட்புக்காக வரைந்து கொடுத்ததுண்டு, இன்னமும் அப்படி கொடுத்துக்கொண்டிருக்கிறேன்.

இதனால், கேட்பதை வரைந்து தருகிறேன் என்றவகைக்கு வந்துவிட்டேன். ஒரு நிறுவனம் மூலமாக வரையும் வேலைகளும், தனி நபர் வேலைகளும் நீண்டகாலமாக செய்துவந்தேன். அவ்வப்போது அதற்கான வருமானமும் வந்துகொண்டிருந்தது. நீங்கள் யார்? என்றால் நான் ஒரு ஓவியர் என்று பதிலளிக்கமுடிந்தது. இதைத்தவிர வருமானத்திற்கு என்ன செய்கிறீர்கள்? என்ற அர்த்தமில்லா கேள்விக்கு என்னால் புன்னகைக்க முடிந்தது.

நிறுவனம் மூலமாக கிடைக்கும் வேலைகளில் 10:2 என்ற அளவில் திருத்தங்கள் வரும். அந்த திருத்தங்களை ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தால், திருத்திக்கொடுப்பதுண்டு. சில இப்படித்தான் அந்த ஓவியத்தில் வரையமுடியும் என்ற நியாயமான விசயத்தை சொல்லி புரியவைப்பதும் உண்டு. தனி நபர்களில், என் ஆரம்ப காலங்களில் வரைந்து தருவதை, மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டவர்கள் 50:50 மட்டுமே.

முக்கியமாக, தனி நபர் கேட்கும் திருத்தங்களை கவனித்தால், அவர்களுக்கு ஓவிய அறிவு கொஞ்சமும் இல்லை என்பது தெரியவரும். அடுத்தவருடைய ஓவியத்தைப்பார்த்து “அப்படியே நிஜமாக இருக்கு, அருமை” என்பவர்கள் தன் முகம் வரைந்தால்மட்டும் “வேறே யாரோ மாதிரி இருக்கு” என்று ஏற்றுக்கொள்ள மறுப்பார்கள். அதோடு தோலின் நிறம், நிழலின் அடர்த்தி, வெளிச்சத்தின் பாதிப்பு இவைகளும் பெரும் குறையாக அவர்களுக்கு தோன்றும். 

ஒருவருடைய முகத்தை வரைய பல நுட்பமான வழிகள் உள்ளன. இதில் கணித சமன்பாடுகளைக்கூட உபயோகப்படுத்தலாம். நான் அதிலும் சில வழிகளை தேர்ந்தெடுத்தே, கோட்டு ஓவியம் வரைந்து, அவர்களிடம் காட்டி, உங்கள் முகம் போல இருக்கிறதா? என்று கேட்டுவிட்டே அடுத்த நிலைக்கு செல்வது வழக்கம்.  கோட்டு ஓவியம் அருமை என்று பதில் தந்துவிட்டு, கடைசியில் என் முகம் இல்லை என்று சண்டைபோடுவது பெரும்பாலோரின் வழக்கம். சரி, எனக்கு இது பிழைப்பு, நீ பணம் தருகிறாய் எனவே, திருத்தங்கள் தருகிறேன் என்று அவர்கள் சொல்லுகிறவகையில் திருத்தி வரைந்து அனுப்பிவைப்பேன்.

ஒரு முகம், வெளிச்சத்தில் ஒருமாதிரியும், அதிகவெளிச்சத்தில் ஒருமாதிரியும், லேசான வெளிச்சத்தில் ஒருமாதிரியும் இருப்பது உண்மை. எனக்கு அவர்கள் அனுப்பிவைக்கும் ஒளிப்படத்தைக்கொண்டே, மாதிரி எடுத்துக்கொள்ளவேண்டியுள்ளது. எனவே அதில் என்ன அளவில் ஒளியும், நிழலும் இருக்கிறதோ அதைத்தான் ஓவியத்தில் கொண்டுவர முடியும், ஆனால் அவர்கள் அதை புரிந்துகொள்வதில்லை. 

ஓவியத்தில் எல்லாம் முடித்தபிறகு, இன்னொடு ஒளிப்படத்தை உடனே அனுப்பி “இதைபாருங்கள், நான் இப்படித்தான் இருப்பேன், நீங்கள் வரைந்தது நான் அல்ல” என்பார்கள். அப்படியானால் முந்தைய ஒளிப்படத்தில் இருப்பது நீ இல்லையா? பிறகு ஏன் அந்த ஒளிப்படத்தை எனக்கு அனுப்பினாய்? இந்த ஒளிப்படத்தை முன்னதாகவே அனுப்பியிருக்கலாமே? என்று கேட்டால் பதில் வராது.

இதில் இன்னும் சிலர், பக்கவாட்டில் முகம் திரும்பிய ஒளிப்படத்தை அனுப்பிவிட்டு, நேராக பார்க்கிறமாதிரி வரைந்துகொடுங்கள் என்று கேட்பார்கள். “ஐயா, எனக்கு இறைவன் அந்த வரத்தை தரவில்லை, என்னால் முடியாது” என்று சொல்லிவிடுவேன்.

எனக்குத்தெரிந்து, கிட்டதட்ட நான்கு தலைமுறைகள், ஓவியம் குறித்த அறிவே இல்லாது வந்துவிட்டார்கள் என்று நம்புகிறேன்.இந்நிலை இந்தியா முழுதும் என்று என்னால் சொல்லமுடியும். அவர்களுக்கு ஒரு ஓவியன், விளக்கி சொன்னாலும் கூட புரிந்து கேட்டுக்கொள்ளும் மனநிலை அவர்களுக்கு இல்லை. 

முக்கியமாக ஒளிப்படத்தில் இருக்கிற குறைகளையும், அவர்கள் முகத்தில் இருக்கிற குறைகளையும் சரி செய்துதான் ஓவியன் வரைவான். அதாவது மேலும் அழகுபடுத்துவான். கேரிகேச்சர் (இருப்பதை மிகைப்படுத்தும் கலை) என்று வரைந்தாலும் கூட, நான் குறைகளை மிகைப்படுத்துவதில்லை. 

சரி, இருப்பதை அப்படியே வரைவதற்கு ஓவியன் தேவையா? ஒரு கேமரா மூலமாகவே அதை செய்துவிடலாமே? அதோடு ஓவியன் கற்றுத்தேர்ந்ததையும் இணைத்துத்தானே தருவான். அவன் என்ன இயந்திரமா? அப்படியே நகலெடுக்க? 


அடுத்ததாக, கிடைக்கின்ற மென்பொருள்களில், Photoshopல்  Smudge என்றெரு tool இருக்கிறது. இதை வைத்துக்கொண்டு, ஒளிப்படத்தையே, அப்படியும், இப்படியும் தேய்த்து மழுக்கி, லேயர் லேயராக வண்ணத்தை பரப்பிவிட்டு, டிஜிட்டல் ஆர்ட் என்று தடவும் டிஜிட்டல் ஆர்டிஸ்ட்கள் (Digital Art - Digital Artist) செய்கிற, இருப்பத்தை அப்படியே வரைந்து தரும் ஓவியம் என்ற திருட்டுத்தன வேலைகள், மக்களை மயக்குகின்றன. 

எனவே ஓவியவேலை தருபவர்கள், ஒரு ஓவியன் “அப்படியே, அப்படியே” வரைந்து தரவேண்டும். இல்லையேல் அவன் தேறாத ஓவியன், அனுபவமில்லை என்ற முடிவுக்கு வந்துவிடுகிறார்கள்.  

நீ சும்மாவா கொடுக்கிறாய்? பணம் வாங்குகிறாய் அல்லவா? நான் கேட்பதை வரைந்து கொடுக்காமல் வேறெதாவது வரைந்து கொடுத்தால், வாங்குவதற்கு நான் முட்டாளா? எனக்கும் ஓவிய அறிவு இருக்கிறது(?!) என்று ஓவியனிடம் மல்லுகட்டுவார்கள். அதற்காகவே ஒரு ஓவியன் “குரங்காட்டம்” ஆடவேண்டிருக்கிறது.

முக்கியமாக, ஒரு படைப்பை திருத்துகிற உரிமை எவனுக்குமே இல்லை. மறு பதிப்பு என்பதுதான் நியதியே தவிர வேறெதுமில்லை. அந்தவகையில் கதை எழுத்தாளர்களுக்கும், கவிஞர்களுக்கும் இருக்கிற, துணிச்சலான, தைரியமான, நம்பகமான வெளிப்பாடு ஓவியனுக்கு இல்லை.  இன்னும் விளக்கமாக காசுவாங்கிக்கொண்டு வரைந்துதரும் ஓவியனுக்கு இல்லை என்று சொல்லலாமா?

இத்தகைய அறிவு எனக்கு உள்முகமாக வந்த பிறகு, முகம் வரைவதற்கான ஆர்வம் எனக்கில்லை. ஒரு ஓவியனாக மக்களிடம் தோற்கிறேன். நான் ஓவியன் என்று சொல்லுவதற்கு குறைபட்டதில்லை, ஆனால் ஒரு ஓவியம் வரைய என் கைகள் கூச ஆரம்பித்துவிட்டது. கூடவே கரோனா தொற்றும் வேலைகளை குறைக்க, சரி இதுதான் நல்ல சமயம் என்றெண்ணி, வரும் வேலைகளையும் “பார்க்க ஆளில்லை, வரைந்துதரவும் ஓவியர்களில்லை” என்று சொல்லி தடுத்து நிறுத்திவிட்டேன்.

அப்படியானால் வயிற்றுப்பாட்டு? நல்லவேலையாக எனக்கு தெரிந்த ஓவியமல்லாத வேறு சில வேலைகளை செய்துவந்ததினால் தப்பித்தேன். இன்றும்கூட அவைதான் என் வாழ்க்கைக்கு உதவுகின்றன. முக்கியமாக இந்த வேலைகளில், எந்த திருத்தமும் இல்லை. யாரும் குறைசொல்லும் வழியும் இல்லை. எனக்கு நேரடியாக வேலைக்கு பணம் வழக்கும் மக்களுமில்லை. அவர்களின் திருத்தங்களை கேட்கவேண்டிய அவசியமும் இல்லை. இதற்கு இவ்வளவா என்று கேட்டவர்களிடம் பேரம் பேசி அவர்களுக்கு புரியவைக்கும் வேலையும் இல்லை.

நிம்மதியாக, சுதந்திரமாக, தைரியமாக, உண்மையாக என்படைப்புக்களை தந்துகொண்டிருக்கிறேன். பலன் பெறுகிறேன்.  என் ஓவிய கைகள் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கின்றன. அது நல்லதுதான். 

பின்குறிப்பு: ஆனால் இன்னமும்  அங்கே  ஆர்டர்கள் பெறப்படும் என்று இருக்கிறதே? என்று கேட்டால், அதன் விலைப்பட்டியலை, தெளிவான விபரங்களை பார்த்துவிட்டு, முடிவுக்கு வரவும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். 

Why stopped to draw human faces - Part 01


 மனித முகங்களை வரைவது மற்றெல்லாவகை ஓவிய நுணுக்கங்களைவிட கடினமானது. அது எனக்கும் அவ்வளவு இயல்பாக வந்துவிடவில்லை.

Pen Art_Sugumarje (6)
(பள்ளிக்காலத்தில் பேனாவால் வரைந்த ஓவியங்கள்)

ஆனால்  சிறுவயது முதல், ஒருவருடைய முகத்தை அதில் அமைந்திருக்கிற வடிவங்களை கவனிப்பேன். இவருடைய காது நீண்டு இருக்கிறது, யானைக்காது போல இருக்கிறது. முகத்திற்கு, வழக்கத்தைவிட வெளியே தள்ளி அமைந்திருக்கிறது, இவருடைய மூக்கு ஊசி முனை, இந்த மூக்கு மிக விரிந்தது, நுனி மேல் தூக்கி நிற்கிறது,  மூக்கின் மேலே இரண்டு வளைவுகள் இருக்கின்றன, கண்கள் சுருங்கியுள்ளது, விரிந்து முட்டைக்கண்ணாக உள்ளது, நெற்றி இவ்வளவு அகலமா? நெற்றிக்கு முன்பே இவ்வளவு முடி இருக்கிறதே என்று இப்படியெல்லாம் பார்த்து மனதிற்குள்ளாக குறிப்பெடுத்துக் கொள்வேன். 


இன்னொரு முக்கிய விசயமாக, ஒரு கணவன் மனைவி என்று எடுத்துக்கொண்டால், அவர்களுக்கு இடையே இருக்கிற முக ஒற்றுமையை கவனிக்கமுடியும். கூடுதலாக அவர்களின் குழந்தைக்கு, தாயின் முகமா, தந்தை முகமா, தாய்வழி பெற்றோர், தந்தைவழி பெற்றோர் முகமா என்றெல்லாம் ஆராய்ச்சியும் செய்யலாம்.  

சிறுவயதில் இருந்தே யாரோடும் பேசும் பிள்ளை அல்ல நான். முக அறியாத மனிதரோடு பேச தயக்கம் கொண்டவனும் அல்ல. யாராவது எதேனும் கேட்டால், எனக்குத்தெரிந்த அதற்கான பதிலைசொல்லுவேன். என்வீட்டிலேயும் “ரொம்ப அமைதியான பையன்”. ஆனால் என் மனஓட்டம் மிக சிந்தனைக்குறியதாக இருக்கும். என் நேரத்தை எனக்குள்ளாக சிந்தனைகளாக ஓட்டிக்கொண்டிருப்பதே என் அன்றாட நடவடிக்கையாக இருக்கும். ஒருவேளை அது கற்பனை கோட்டையாகவும் இருக்கலாம், ஆனால் நான் கற்பனையில் பறந்தாலும், தரையில் நிற்பதை மறக்கமாட்டேன், அந்த சிறுவயதிலேயே. போதும் சுயபுராணம் என்றாலும், இந்தக்கட்டுரையில் சொல்லித்தான் ஆகவேண்டும்.


ஒரு செவ்வகம் போட்டு அதன் அடிப்படையில் எம்ஜியார் அவர்களை வரைவதுதான் என் ஆரம்பகால முகம். என் சகோதரன் அப்படி வரைந்து காட்டியதை நான் பழக முயற்சித்தேன். ஆனாலும் பின்னாளில் நான் அவரைவிட பொறுமை பெற்றிருந்ததால், இன்றுவரையிலும் ஓவியனாக நிற்க முடிந்திருக்கிறது. அந்த எம்ஜியார் “நல்ல நேரம்” திரைப்பட தோற்ற கொண்டவர். அதோடு அப்போது எங்களுக்கு படிக்க கிடைத்த, வார, மாத தமிழ் நூல்கள், அதில் இருந்த ஓவியங்கள் கூடுதலாக முகம் வரைவதற்கு பயிற்சி அளித்தன.  அந்த ஓவியர்களின் பெயர்கள், செல்லம், புஜ்ஜாய், ஆழி, மணியம், சில்பி, ஸ்ரீ தர், லதா, ராமு, மாருதி, கோபுலு, ஜெ, ஜி.கே. சங்கர், அரஸ், ம.செ., மதன், நடனம்,  (மன்னிக்கவும், சில பெயர்கள் ஞாபகமில்லை) இவர்கள் காலத்திற்குபிறகு ஸ்யாம் பிறகு கதைகளும் அதற்கான ஓவியங்களும் அருகிப்போகின.

ஓரளவு எனக்கு முகம் வரையபழகிய பிறகு, விதவிதமாக முகங்களை வரைந்து பழகிக்கொண்டேன். ஒருபக்கமாக திரும்பிய முகம், மேல்புறம் பார்க்கும் முகம், கீழே குனிந்த முகம், முக்கால் பாகம் முன்னால் தெரியும் முகம், முழு நேர்பார்வை முகம் இப்படியாக முகங்கள், முகங்கள். அதுவும் கை எடுக்காமலும் வரையும் வேகமும் உண்டு. சில நண்பர்கள், ஏதேனும் வரைந்து காட்டுங்களேன் என்று கேட்டால், உடனே எதேனும் ஒரு பெண்ணின் முகம் வரைவேன், அழகிய கூந்தலோடு, கொஞ்சம் மலர்கள் வைத்து காண்பிப்பேன். 

என் ஓவிய பாடசாலைக்கு, தன் தந்தையோடு வந்த ஒரு சிறுமி, 

“ஏன் அங்கிள், எப்போ சாம்பிள் வரையச்சொன்னாலும், கேர்ள்தான் வரையனுமா?”

“இல்லடா, அவங்கதானே பார்க்கவும் அழகா இருக்காங்க, ஓவியத்திலும் அழகா இருப்பாங்களே அதான்” என்று சமாளித்தேன்.

ஒரு ஆணுக்கு முதல் கவர்ச்சி பெண் தானே?! இதில் ஓவியன் விதிவிலக்கா? மேலும் வளைவு, நெளிவையும் ரசித்து கோடுகளிலும், வண்ணங்களிலும் பதிப்பவன் தானே ஓவ்வொரு ஓவியனும்.

எனக்கு சில தொழில்முறை ஓவியர்களின் பழக்கம் இருந்ததால், அவர்களிடம் நான் வரைந்த முக ஓவியங்களை காட்டி திருத்தங்கள் கேட்பேன். அவர்கள் சொல்லும் திருத்தம், வேண்டுமென்றே குறை சொல்லுவதுபோல தோன்றும். ஆனாலும் அந்த இடத்தில் பொறுமையாக கேட்டுக்கொண்டு, வழக்கமான என் பாணியிலே கொஞ்சம் மாற்றம் செய்துவருவேன். பள்ளியிலேயே, ஒரு நடிகை (சுஹாசினி) ஓளிப்படம் கொடுத்து இதை பென்சில் ஆர்ட்டாக கொடு என்று கேட்ட நண்பனிடம் பணம் (வாழ்வின் முதல் ஆர்டர்?!) பெற்று வரைந்துகொடுத்தேன். 


Girl_Sugumarje_Pencil (7)
(பள்ளிக்காலத்தில் பென்சிலால் வரைந்த ஓவியங்கள்)

கிட்டதட்ட 2005 ஆண்டு வரை, முகங்களை வரைவதும், அதை பாதுகாப்பதும், பிறகு அந்த ஓவியத்தை மறந்துவிடுவதுமாக,  ஓவியத்தைச் சாராத வேறு சில பணியில் இருந்ததால், நேரமிருந்தால் வரைவது என்றிருந்தேன். எந்த ஓவியத்தையும் கண்காட்சி வைத்ததும் இல்லை, விற்பனை செய்ததும் இல்லை. ஆனால் 2007 தனித்து இயங்க துவங்கியபொழுது, எனது யாகூ வெப் பேஜிலும் (Yahoo web page), கூகுள் சைட்டிலும் (Google site), பிறகு பிளாக்கிலும் (Blog) என் ஓவியங்களை கண்டு, எனக்கு ஓவியங்கள் வரைந்துதர இயலுமா? என்று சில வெளிநாட்டினர் கேட்க, இதற்கென இருக்கும் பெரிய சந்தையை அறிந்துகொண்டேன். அந்த சில வேலைகளுக்காகவே, உலகில் இருக்கக்கூடிய ஓவியர்களின் தரத்தை ஒத்த அளவில் நானும் என்னை, பல நாட்கள் வரைந்து புதிய நுணுக்கங்களை கற்றுக்கொண்டு, பத்திற்கு ஒன்பது தேர்ச்சி என்று அவர்களே பாராட்டும் அளவுக்கு உயர்ந்தேன். முக்கியமாக இன்னமும் கூட, புகழ் பெற்ற ஓவியர்களின் ஓவியங்களையும், புதிதாக ஓவியம் கற்றுவரும் இளைஞர்களின் ஓவியங்களையும் கூட கவனித்து, அவர்கள் தரும் நுணுக்கங்களை பழகிக்கொண்டுதான் வருகிறேன். இந்த மாற்றங்களை ஒரு ஓவியன் ஏற்று தேரவில்லை என்றால், அவன் காலத்தால் பின் தங்கிவிடுவான். ஓவியனின் கையை, மரணம் மட்டுமே நிறுத்தமுடியும் என்று நம்புகிறேன்.

இப்பொழுது ஒரு உண்மை தெரியவரும். ஒரு முகத்தை வரைவதற்கான சிரமமும், அதில் எத்தகைய தேர்ச்சியும் தேவையாக இருக்கிறது என்பதும். என் கையால் வருவதுதான் ஓவியம் என்று சும்மாவேனும் கிறுக்கித்தள்ள முடியாது. ஒரு ஓவியம் என்பது படைப்பு, அதில் மறைந்திருக்கும் செய்தியும் உண்டு, வெளிப்படையான காட்சிப்பொருளும் உண்டு. 

என் ஓவியங்கள், பார்ப்பதை வரைவது என்ற வகையை கொண்டது, அதிலும் மனிதர்களுக்கானது. அத்தேர்வு, ஓவியரின் மன நிலையையும், பண நிலையையும் சார்ந்தது. எனக்கோ இரண்டாம் நிலை. வரைந்து வைத்துக்கொண்டு, ஊர் ஊராய் தூக்கிக்கொண்டுபோய் காட்சிப்படுத்துவதில் எனக்கு ஆர்வமில்லை. வரைகிறோமா, வித்தோமா என்பது என்பாணி. 

Vethathri_Sugumarje_Pencil (1)
(18 வயதில் வரைந்த சில ஓவியங்கள்)

எனது மாணவர் 

“சார், உங்க வீட்டிற்கு வந்து உங்க ஓவியங்களை பார்க்கலாமா?”

“வீட்டில், பெரிய பெரிய கேன்வாசில் வரைந்து வைத்திருக்கிறேன் என்று நினைக்கிறாயா?”

“ஆமாம் சார்”

“அப்படியெல்லாம் ஒன்று கூட இல்லை, அப்படி வரைந்த ஓவியங்களைக்கூட பரிசாக பிறருக்கு தந்துவிட்டேன். என்னிடமிருப்பது, இந்த கணிணியில் இருக்கும் ஓவியங்கள் மட்டுமே. ஒரு சில பேப்பர் ஓவியங்கள் கைவசம் இருக்கின்றன. ஆனால் அவையெல்லாம் கற்றுக்கொள்ள வரைந்தவை, காட்சிப்படுத்தலுக்கு அல்ல”

கடைசிவரை அந்த மாணவர், நான் சொன்னதை நம்பவே இல்லை.

இப்படியாக, முகங்களை வரைந்து, காசாக்கிக் கொண்டிருந்த நான், கடந்த நவம்பர் 2019 முதல் இனி யார் ஓவியம் கேட்டாலும் வரைவதே இல்லை என்று சபதம் எடுத்தேன். என் வாட்சப்பில் கூட “We stopped new orders" என்று வாசகம் வைத்தேன். அது கரோனா (Covid-19) பாதிப்பால் அல்ல.


தொடரும்...

I am just standing in the dark



நானும்தான் இருட்டில் நின்றுகொண்டிருக்கிறேன். 

இன்று மாலை மணி 5.25 , என் வீட்டின் மூன்றாவது தள மாடிக்கு வந்து நடந்துகொண்டிருந்தேன்.  வீட்டிற்குள்ளேயே “எளிய முறை உடற்பயிற்சி” செய்வதால், நடைபயணத்திற்கு செல்வதில்லை. என்றேனும் சூரியனின் மறைவு காட்சியை காண்பதற்காகவே, மாடிக்கு செல்வதுண்டு.

பாதி சூரியன் அடிவான மேகத்தால் மறைந்தும், கொஞ்சம் வெளிக்காட்டியும், மஞ்சளும் ஆரஞ்சும் கலந்து அடிக்கும் அந்த வண்ணக் கலவைக்காகவே, கண் இமைக்காது பார்த்துக்கொண்டே இருக்கலாம். மாலை சூரியன், வேகமாக பூமிக்கடியில் புதைவது போல தோன்றுவது ஒருவகை மாயைதான். சூரியன் மறைந்துகொண்டிருக்கும் அதேவேளையில் எதிர் கிழக்குவானில் மேகக்கூட்டங்கள் அதே வண்ணக்கலவையை கடன் வாங்கி பூசிக்கொண்டு மிளிரும் காட்சி அற்புதமானது. 

வடமேற்கிலிருந்து மிகப்பெரிய அம்பின் நுனிவிளிம்பு மட்டும் பாய்ந்து வருவதுபோல பறவைகள் கூட்டம், ஒரு கருப்பு கோடுகளாக தெரிகிறது, அருகில் வர வர, ஒரே அடுக்காக, ஒவ்வொரு பறவைக்கும் இதுதான் இடைவெளி என்று வகுத்துக்கொண்டு அந்த அளவு மாறாமல், ஒரு கீச்சும் இல்லாமல் என் தலைக்குமேல் என்னை கடந்து செல்கிறது. 



பார்த்துக்கொண்டே வியக்கிறேன்.  இவைகள் எங்கிருந்தன, இப்போது எங்கு செல்கின்றன என யோசிக்கிறேன்.  அடுத்தடுத்து இப்படி நான்கு பறவைகூட்டங்களை கண்டேன். சில கூட்டங்களில் அந்த அம்புநுனி விளிம்புக்கு முன்பு வழிகாட்டியாக சில பறவைகள் முன்சென்றதையும் கவனித்தேன்.

எப்படியான வாழ்வு இவைகளுக்கு? எப்படியான சுதந்திரம் இவைகளுக்கு? காலையும் மாலையும் இப்படியான ஊர்வலம். மனிதர்களைப்போல இவைகளும் “தினம்” இருக்கிறது. நட்பு, காதல், ஒற்றுமை, ஒழுங்கு, அறிவு எல்லாம் இருக்கிறது. பறவைகளுக்கு ஐந்தறிவுதான், இருக்கலாம். ஆனால் மனிதன் அதினினும் சிற்றறிவாக இருக்கிறானே? 

இவைகளைப்போல ஒரு மனிதனால், ஒரு தனி மனிதாகக்கூட வாழ முடியாத மனிதசமுதாயம் நாம் பெற்றிருக்கிறோம். வாழ வழி இல்லையென்றால் செத்துப்போ என்று முடிவுசெய்கிற அல்லது தூற்றுகிற மனிதம் இங்கே?! 

தன் காலடித்தடத்தை வானில் பதிக்காத பறவையினங்கள், விதைக்கவும் தெரியாத, அறுவடையும் செய்யாத நிலையிலும், அவைகளுக்கான வாழ்வு இந்தபுவியில் இருக்கிறதே! ஓவ்வொரு உயிரினமும் தனக்கென இருக்கின்ற வாழ்வை வாழ்கின்றன. முக்கியமாக இயற்கையோடு தன்னை இணைத்துக் கொள்கின்றன. தனக்கு விதிக்கப்பட்டது எது என ஆராயும் அறிவு அவைகளுக்கு இல்லை என்றாலும், எதனோடும் எல்லை மீறுவதற்கு கூட தெரியாது. 

மனிதனுக்குத்தான் எத்தனை பிணக்குகள்?! தன்னோடும் பிறரோடும், இந்த உலக மக்களோடும், இத்தனைக்கும் மேலாக இந்த இயற்கையின் மீதும்?! ஏன்? ஏன் இப்படி சிக்கிக்கொண்டான்? கண்ணுக்குத்தெரியாத காப்புகளை தானே எடுத்து பூட்டிகொண்டான். எல்லாம் நிறைவாக இருக்கும் இந்த உலகில், ஏன் வறுமையும், செழுமையும் எதிரெதிராக? 

சூரியன் மறைந்தபிறகும் மேற்குவானம் சிவந்து, பின் நீலமும், கருநீலமுமாக இருள் படரத்துவங்குவது வரை பார்த்துக்கொண்டே இருக்கலாம். இதோ ஒரு நாள் முடிவுக்கு வந்துகொண்டிருக்கிறது, நாட்காட்டியில் ஒரு தாள் கிழிக்கப்படும், நம் வாழ்வில் ஒரு நாள் கழிக்கப்படும். 

சிந்தித்துக்கொண்டிருக்கையில், என்மீதும் இருள்படர ஆரம்பித்தது. நானும்தான் இருட்டில் நின்றுகொண்டிருக்கிறேன். 

-----------------------

Thanks to image: My mobile photos

The path and ride on opposite directions




எதிரெதிர் திசைகளில் பாதையும் பயணமும்.

ஒரு படைப்பாளி தான் கற்றுத்தேர்ந்த திறமைய வெளிக்காட்டவும், அதன் மூலமாக தன்னை முன்னிறுத்தி, தன் பெயர் நிலைக்கவும், கலையின் தரம் உயர்த்தி, வகைப்படுத்தவும், பிறரையும் அதில் ஆர்வம் வரச்செய்யவும் நினைத்துத்தான் செயல்படுகிறான்.

கூடவே இந்தக்காலங்களின் பொருளாதார தேவைகளை முன்னிட்டு, தனக்காக என்றில்லாமல், பிறர் கேட்டுக்கொண்டபடி, அவர்களுக்கு தேவையான கலைப்பொருளை வடித்துக்கொடுத்து, தன் வயிற்றுப்பாட்டையும் சமப்படுத்திக்கொள்கிறான்.

ஆனாலும், இந்த படைப்பாளிகளில் ஓவியனுக்கு இருக்கிற மரியாதையும், மதிப்பும்; மக்களைச்சார்ந்து, அவர்களின் தேவை கேட்டு வழங்கும் ஓவியங்களில் இல்லை என்றே சொல்லலாம். சில விதிவிலக்காக, இவர்களில் நல்ல மக்களையும், அவர்கள் ஓவியத்தின் மேலும், ஓவியரின் மேலும் மதிப்பும், மரியாதையும் தருவதை எண்ணி வியந்திருக்கிறேன்.

தான் நினைத்ததை மட்டுமே தரும் படைப்பாளியாக, எழுத்தாளனும், சிற்பியும், மரபு ஓவியர்களும் இருக்கிறார்கள். இவர்கள் யாருக்காகவும் தன்னை, தன் படைப்பில் சமரசம் செய்துகொள்வதில்லை. இதுதான் என் படைப்பு, உனக்கு பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் எனக்கு குறையில்லை என்ற ரீதியில் இயங்குவார்கள். இவர்களில் சிலர், சமூகத்தில் தன்னை நிலைப்படுத்திக்கொள்ள பெரும்பாடு. சிலர் வறிய நிலையிலும் இருக்க காணலாம். 

இந்த பொருளாதார சமூகத்தில், படைப்புக்கான மதிப்பும், கிடைக்ககூடிய பணமும் ஒரு படைப்பாளி சமரசம் செய்துகொள்ளும் பொழுதுதான் கிடைக்கிறது என்பது சோகம். இந்நிலை மாறவேண்டும். 

படைப்பாளி, இந்த உலகை வழிநடத்தும் திறமைகொண்டவன். அவன் இந்த உலகை, சமூகத்தை, உங்களை, என்னை பதிவுசெய்கிறான். அடுத்த பரம்பரைக்கும், வருங்கால சமூகத்திற்கு செய்தியை எடுத்துச்செல்கிறான். புதிய சமுகமே, உங்களுக்கு முன் இருந்த சமூகம் இப்படி இருந்தது என்று வெளிக்காட்டுகிறான். அது பாடமாகவும், அறிவுரையாகவும், பெருமையாகவும், எச்சரிக்கையாகவும் இருக்கமுடியும்.

ஒரு படைப்பாளி, இறந்தபிறகும், காலம் கடந்தபிறகும் போற்றப்படுவதுதான் அவனுக்கு கிடைத்த விதியாக இருக்கலாம். ஆனால் மன்னர்களும், புரவலர்களும், அரசுகளும் படைப்பாளிகளை போற்றிய காலங்கள் கடந்து, அவன் இந்த சமூகத்தை நோக்கி நகர்ந்துவந்துவிட்டான். இதனால், மக்களில் தேவையறிந்து, கேட்பதை தரும் நிலைக்கு சமரசம் செய்துகொண்டிருக்கிறான். 

அந்த படைப்பாளியையும், படைப்பையும், பணத்துக்கு நிகராக மதிப்பளிக்கும் வரை சரியானதுதான். ஆனால், அந்த பணத்திற்காக தன் இசைவுக்கு ஏற்ப வாலாட்டு என்று நினைப்பது தவறான நிலை. இதற்கு அந்த படைப்பாளியே ஒருகாரணமாகவும் அமைந்துவிடுவது சோகம்.

படைப்பாளி கிழக்கே போனால் இந்த சமூகம் மேற்கே போகிறது.  இரண்டுபேரும் சந்திக்கும் காலம்வரும். காத்திருப்போம்.

--------------------

Thanks to image: Kelli McClintock @kelli_mcclintock

 


Choice to be a tributary or a river


 



பெரும் நதியும் - கிளை ஆறும்
------------------------------------------------

எப்போதும் பெரும் நதி திரண்டு

கரை புரண்டு எல்லாம் தன்னோடு,

புரட்டி இழுத்து சென்றிடும் நில்லாது

அப்பெரும் நதியில் கிளை ஆறு. 

தானாய் கிளைவிட்டு மண்ணில் பாயும்

தேங்கும் படரும் செழிக்கச் செய்யும்

மண்ணையும் உயிரையும் தன் போக்கில்.

சித்தனும் புத்தனும் பித்தனும் அப்படியே

தேர்ந்து எடுப்பது நதியோ ஆறோ,

உன்கடனும் அப்படியே சென்று சேரும்,

மழையா மண்ணில் உரமா தேர்ந்துகொள்.


----------------

Images thanks to: Marc Zimmer @knipszimmer 

Rebuild the art business for our customer



என்னைப்பொறுத்தவரை இந்தியர்களுக்கு ஓவிய அறிவு கொஞ்சம் அதிகம் தான். எப்படியென்றால், ஒரு ஓவியருக்கே தெரியாத, அறியாத, கற்றுத்தேறாத ஓவிய அறிவு நம் இந்தியமக்களுக்கு உண்டு. அவ்வறிவை அந்த ஓவியருக்கே கற்றுத்தரவும் தயங்காத ஆற்றல் கொண்டவர்கள். 

இதனால்தான், ஒரு ஓவியராக இந்தியாவில் பிழைப்பை நடத்துவது பஞ்சப்பாடு தரும். இது என் அனுபவத்திலிருந்து தருகிறேன். ஒருவேளை இவர்களோடு எப்படி ஓவிய வியாபாரம் செய்வது என்று அறியாத ஓவியனாகக்கூட நான் இருந்திருக்கலாம். அதனால் இந்த, என்னுடைய கணிப்பில் தவறிருந்தால்  சக ஓவியர்கள் என்னை மன்னிக்கவும்.

கிட்டதட்ட பதிமூன்று ஆண்டுகளாக, ஓவியத்தை மட்டுமே தொழிலாக வைத்துக்கொண்டு பிழைப்பை ஓட்டியிருக்கிறேன். கொஞ்சம் அங்கங்கே பஞ்சர் ஆன இடங்களில் எனக்கு தெரிந்த பிற, Graphics design, web design and developing, sound and video editing என்றெல்லாம் அவதாரம் எடுத்து சரி செய்திருக்கிறேன்.

ஒரு விரலை சுட்டினால், மூன்றுவிரல் நம்மைத்தான் காட்டுமாமே?! அப்படி ஏதேனும் இந்த சமூகத்தை குறை சொன்னால் “நீ” சரி இல்லை என்பதுதான் இந்த சமூகத்தின் பதிலடி. இருக்கலாம். அதன் பாடத்தை அல்லது விளக்கத்தை கடந்த ஒரு வருடத்தில் படித்து தெளிந்தேன். என்னா அடி?! தவிலுக்கு இரண்டுபக்கமும் அடி என்பதுபோல.

வாங்கிய  ஓவிய வேலைகளில் ஒருவர் கூட மிச்சம் வைக்காமல், இதை திருத்து, அதை திருத்து, இது என் மூஞ்சி இல்லை, தாடையை குறை, கன்னத்தை குறை, முடியை இப்படி திருத்து?! என்றெல்லாம் எனக்கு ஓவியம் கற்றுக்கொடுத்தார்கள்

முக்கிய நிகழ்வாக ஒரு கஷ்டமர்,  அவர் கேட்ட மாதிரிபடம் போல வரைந்து கொடுத்த பிறகு, இது நான் இல்லை, ஏற்கனவே கொடுத்த என் போட்டொ பார்த்து வரைந்து தாருங்கள் என்றார். மறுபடி முதலிருந்து வரைந்து கொடுக்க, இந்த பெண் முகம் குண்டாக இருக்கிறது சரி செய்க என்றார். சரி செய்து கொடுக்க இரண்டாவது முறை ஒப்புக்கொண்டார். ஏறக்குறைய வேலை முடிந்தது.  அடுத்து எழுத்துக்கள் பதிக்கும் வேலை. ஒரு கொடிபோல போட்டு அதில் எழுத்து கேட்க அப்படியே வரைந்து கொடுத்தேன். எனக்கு இந்த கொடி வேணாம், வேறு வேண்டும் வேறு வண்ணத்திலும் வேண்டும் என்றார்.

நான் எதற்கடா வம்பு என்று ஒரு பத்து கொடி மாதிரிகளையும், பத்து வண்ணங்களையும் கொடுத்து எதுவேண்டும் என்று சொல்லுக என்றேன். அதற்கு அந்த கஷ்டமர், இப்படி கேட்ட எப்படி? அந்த படத்தில் வைத்து காமிக்கவும் என்றார். 

யப்பா சாமி, இதுக்காக, உங்க சாய்ஸ்க்காக 10 மாதிரி அனுப்பிவைக்கிற பழக்கம் என்கிட்ட இல்லை. எதுவேண்டுமென்று சொன்னால் அதை வைத்து முடித்து அனுப்புகிறேன் என்றேன். அதற்கு அவரிடம் பதிலில்லை. சரி என்று நானே ஒரு மாதிரிவடித்து அனுப்ப, எனக்கு பிடிக்கலை,  வேறே வேண்டும் இத்தனை ஓவியம் செய்யறீங்க, எது பெட்டர்னு நீங்கதானே தரனும்?! என்று அந்த கஷ்டமர் பதில்தர,

என் அனுபவத்தில் எது சரியாக இருக்கும் என்று கொடுத்தால்தான் நீங்க மாற்ற சொல்லுகிறீர்களே? இதெல்லாம் சரிபட்டுவராது, உங்களுகாக என் முழு நேரத்தையும், முழு வேலைலையும் செய்துகொண்டிருக்க முடியாது, என்ன வேணும் என்று சொன்னால்தான் கேட்பதை தரமுடியும். எல்லாமே புதிதாக வரைவது தான் எங்கள் வேலை. பழசை புதிதாக தரும் மாயம் எங்களுக்கு தெரியாது. உங்களுக்கு தேர்ந்தெடுக்க தெரியாவிட்டால், இத்தோடு நிறுத்திக்கொள்வோம். உங்களுக்கு பிடித்தவகையில் வேறு யாரிடமாவது ஓவியம் வாங்கிக்கொள்க என்று சொன்னேன். நான் சொன்னதை புரிந்துகொள்ளும் நிலையில் அந்த கஷ்டமர் இல்லை. அவர் கொடுத்து சிறு அட்வான்சோடு நிறுத்திவிட்டேன். எனக்குத்தான் 5 நாள் ஓவியவேலை கெட்டது. அந்த ஓவியம் அந்த கஷ்டமரின் விருப்பம் என்பதால் வேறு யாருக்கும் மாற்றித்தரவும் முடியாது.

காசை வாங்கி ஓவியம் தருவதாலும், கஷ்டமர் நமக்கு கடவுள் (மகாத்மா காந்தி சொன்னது) என்பதாலும், கொஞ்சம் கூட கோபமே என்வார்த்தைகளில் வராத வகையில் மிக மிக அமைதியாகவேதான் பதில் கொடுப்பேன். ஆனாலும் அந்த வார்த்தைகளுக்கு அவர்களின் பதிலடி பலமாகவே இருக்கும். தரையோடு படுத்து காலை ஏதாவது செய்வதற்கு, கைகொடுத்து நட்பாக விலகிவிடலாமே?! ஆனாலும் சிலரை திருப்தி படுத்த இறையாலும் முடியாது.

இப்படியான கொடுமையான நிகழ்வில், கரோனா தொற்று நோயும் கலந்துகொள்ள, என் ஓவியவேலைகளும் தனிமைப்படுத்திக் கொண்டுவிட்டன. சரி, இந்த இடைவெளியும் நல்லதுதான், என்னை ஆற்றுப்படுத்தும் என்றெண்ணி, சிலர் அப்படியும் கேட்ட ஓவியங்களை, வாங்குவதில்லை என்று சொல்லிவிட்டேன். என் வாட்ஸப்பில், இந்த ஓவியர் புது ஓவிய வேலைகளை வாங்குவதில்லை என்றும் ஸ்டேடஸ் போட்டுவிட்டிருந்தேன்.

வழக்கமாக எனக்கு பிடித்த வேலைகளிலும், பொழுதுபோக்குகளிலும் நேரம் கழிந்தன. இதற்கிடையில் நான், இனிமேலும் இப்படி ஓவியம் வரைந்துதான் பிழைக்கனுமா? என்று அகத்தாய்வு செய்ய ஆரம்பித்துவிட்டேன். 

மேலும் இந்த எல்லாம் தெரிந்த, ஓவியரைவிடவும், ஓவிய அறிவுகொண்ட இந்திய மக்களை சும்மா விடலாமா? வேலை தருகிறார்களோ இல்லையோ ஒரு ஓவியரையும், ஓவியத்தையும் மதிக்க கற்றுக்கொடுக்க வேண்டாமா? சிந்தித்தேன்.

அதன் விளைவுதான் என் புதிய “caricaturelives website" அவதாரம். இனி உங்க போக்குக்கு நான் இல்லை. 

1) இதுதான் ஓவியம், நீயே தேர்ந்தெடுத்து தரும் உன் போட்டோ கொண்டு அதன் மாதிரியாக - கவனிக்கவும், அதன் மாதிரியாக ஓவியம் கிடைக்கும்

2) திருத்தங்களுக்கு இடமில்லை

3) தலைப்புக்கு, வாக்கியத்துக்கு இடமுண்டு

4) எழுத்துப்பிழை திருத்தம் உண்டு, எழுத்து மாற்றமில்லை (போட்டது போட்டதுதான்)

5) இதைச்சேர், அதைச்சேர் என்று சேர்க்கும் பொருளுக்கெல்லாம் இடமில்லை

6) இந்த குதிரை சவாரி, மாட்டுவண்டி சவாரி, பைக், கார், பிளேன் சவாரி எல்லாம் கிடையாது

7) விலை திருத்தம் கிடையாது

8) ஒரு ஓவியத்திற்கு 14 நாள் ( இருவாரம்) ஆகும்

 9)பின்புலம் வெள்ளை வண்ணம்தான். 

10) இந்த சும்மா Soft copies கிடையாது, ஒரே விலை ஒரே High resolution soft copies any format (without layers)

என்று மாற்றங்களை, கடந்த அக்டோபர் 10 முதல் கொண்டுவந்துவிட்டேன்.  இனி தொடங்கும் வேலைகளுக்கு காத்திருக்கிறேன். Coustmer ஆ கஷ்டமாரா என்று பார்த்துவிடவேண்டியதுதான்.


இவண்

சுகுமார்ஜி


    

Pattaiya Bharati Mani


 பாரதி மணி...



மணி என்பது பெயராகவும், பாரதி என்பது துணைப்பெயராகவும் இருக்கிறது என்பதை யோசித்துக்கொண்டேன்... ஓவியர் ஜீவாநந்தன் தன் நிலை தகவல்களிலும், பிறரது தகவல்களிலும் தனக்கே உரிய பொருத்தமான கேலியில் அந்த தகவலை மேலும் சுவாரசியமாக்குவார். அப்படியாகவே பாரதி மணி அவர்களின், அதற்கு பதிலடியையும், பிறகு அவரின் மண்வாசம் மிகுந்த மனவெளிப்பாடுகளையும் நான் படித்துக்கொண்டு வந்தேன்.


பொதுவாகவே தன்னை, தன் அறிவை, வளர்ச்சியை, அனுபவத்தை, ஆற்றலை, பலமின்மையை, தாழ்ச்சியை, மதிப்பை உணர்ந்தவர்கள் மட்டுமே இந்த உலகில் தன் வாழ்நாளில் அலை இல்லாத குளமாக (கடலாக) இருக்கமுடியும். பாரதி மணி அப்படி ஒருவாராக இருப்பார் என்பதை நான் நம்புகிறேன்.

பாரதி மணி என்பவர்தான் பாபாவில் முதலமைச்சராக வருவார் என்பது அப்பொழுதான் தெரியும். இல்லையென்றார் “யார்ரா இவரு?” என்பதாகவே இருந்திருக்கும். பிறகு விசயமறிந்தால் கப்பல் வியாபாரியாக இருந்திருக்கிறார், நீதிபதியாக இருந்திருக்கிறார்... இன்னும் பலபல...

பாரதி மணி அய்யா, சார் என்று சொன்னால் ஒரு அன்னிய பாவம் வரும் :) ஆனால் பாட்டையா என்று பாசத்தோடு அழைக்கின்றனர்... எனக்கோ பாட்டையா என்றால் ரொம்ப வயாதானவரோ என்ற எண்ணம் உருவாவதினால் அய்யா போதுமானது. நிலைத்தகவல் மூலமாக அவரைப்பற்றிய ஒரு முழு வடிவம் அவரின் சினேகிதத்தை உருவாக்கியது. நான் அவரின் நண்பரானேன். என்னுடைய சில நிலைத்தவகலுக்கும் அவர் அவருடைய பாணியிலேயே பதில் தந்திருக்கிறார். ஒரு புதியவரோடு குரலால் பேசினால் அதில் தொணிக்கும் குரல் உச்ச, கீழ் ஸ்தாயி எதிராளியையும், நம்மையும் புடம்போட்டு காட்டிவிடும்...பின்னர் விவகாரத்தையும் ஏற்படுத்தும்... நேரில் பார்ப்பதோ ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தி தள்ளிவைக்கும்... ஆனால் முகம் காணாது எழுத்துக்களால் பேசிக்கொள்ளும்பொழுது நம் மனம்தான் பேசிக்கொள்ளும். நம் அனுபவமே எதிராளுக்காக வடிவம் எடுத்து தானே உருமாறிக்கொள்ளும். அப்படி பாரதி மணி எனக்குள் ஒரு வடிவத்தை ஏற்படுத்தியிருந்தார்...

நிஜமாகவே பாரதி மணி எழுத்தாளரா, நாடக நடிகரா, கட்டுரையாளரா எனபதாக அவரைப்பற்றி எனக்கு வேறெந்த விசயமும் எனக்கு தெரியாது. ஆனால் அவரின் வார்த்தைகள் அந்த நுணுக்கங்களை கொண்டிருந்தன... தமிழோடு வார்த்தைகளால் விளையாடுவது எனக்கு வரும் என்பதால்... அதை யார் செய்தாலும்,அது எனக்கு பிடிக்கும்... பாரதி மணி அய்யாவையும் அப்படி பிடித்திருந்தது... வழக்கமாக என் நண்பர் குழாமுக்கு அவர்களின் பிறந்தாநாளின் அன்று என் பாணியில் ஒரு கேலி சித்திரம் தருவது உண்டு. பாரதி மணி அய்யாவுக்கு தனியாக ஒரு பரிசாக தருவது என்று முடிவெடுத்து அவரின் ஒளிப்படம் ஒன்றை சேகரித்து, அவருக்கே தெரியாமல் அதை வரைந்துமுடித்து என் பக்கத்தில் வெளியிட்டேன்...

கடவுளின், பெற்றோர்களின் ஆசீர்வாதத்தால் யாரை வரைந்தாலும் அதில் அவர்களின் முகபாவனையை அப்படியே கொண்டுவரும் தகைமை எனக்கு இருப்பதாக நான் நம்புகிறேன்... அந்தவகையாகவே பாரதி மணி அவர்களின் ஓவியம் அவராலேயே மிகச்சிறப்பாக பாராட்டப்பட்டது... அந்த ஓவியத்தின் பக்கத்திலேயே மிக அருமையான கலந்துரையாடலும் நடைபெற்றது...

அந்த ஓவியத்தை அவரின் பிறந்தநாளுக்கே பயன்படுத்திக்கொண்டேன்... ஒரு சில நாட்களுக்கு பிறகு ஒரு நன்றியுரை எனக்கு கிடைத்தது.

---
அன்புள்ள சுகுமார்ஜி: என்னையும் ஒரு பொருட்டாக மதித்து என் பிறந்தநாளுக்கு யாரும் தரமுடியாத ஒரு பரிசை தந்திருக்கிறீர்கள். என் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்துப்போனது.

என் மனமார்ந்த நன்றி....God bless you!

பாரதி மணி
---
அதற்கு பிறகு என்னையும் அவர் புரிந்துகொண்டிருப்பார் (!?) என்ற நம்பிக்கையில் அவரின் தவலுக்கு நானும் என்பாணியில் கேலியோடு கூடிய பதில்கள் தர ஆரம்பித்தேன். கொஞ்சம் ஒட்டி வந்துட்டோம் அல்லவா... அதான் :)

சென்னை பலநாட்கள் போய்வரும் வேலை எனக்கிருப்பதால் வாய்ப்பு கிடைத்தால் சந்திக்கிறேன் அய்யா என்றுதான் சொல்லியிருந்தேன். நான் அதிகபட்சமாக ஒருநாளுக்கு மேல் சென்னையில் தங்குவதுமில்லை. சென்றமாதத்தில் ஓவியர் ஜீவாநந்தன் அவரை சந்திந்த வேளை நானும் சென்னையில் வேறு ஒரு அலுவலில் இருந்ததால் பார்க்க இயவில்லை. நான் இருப்பது தெரிந்து “நீங்களும் வந்திருக்கலாமே சுகுமார்” என்றார்...

என்பெயரில் சுகுமார்ஜி என்பதில் சுகுமார்தான் என்பெயர் ஜி என் தந்தையின் ஆங்கிலமுதல் எழுத்து... ஆனால் ஜி ஹிந்தி ஜியை தோற்றுவிக்கும்... பிரான்ஸ் நாட்டில் இருக்கும் தமிழ் ஆர்வலர் சாமிநாதன் (சாம் விசய்)
“நான் சுகுமார்னுதான் கூப்பிடுவேன்... ஜிலாம் சொல்லமாட்டேன்” என்றார்...
“அய்யா அந்த விளக்கமே வேண்டாம்... உங்களுக்கு எப்படி பிரியமோ அப்படி கூப்பிடுங்கள்” என்று சொல்லிவிட்டேன்...

அதேபோல நண்பர் வட்டாரத்தில் “சுகு”  மட்டும்தான்... நிலைத்தகவலில் இதை தெரிவித்தவுடன் பாரதி மணி அய்யாவும் சுகு என்றே அழைக்க ஆரம்பித்தார்.

நேற்று (07-01-2013) காலை தாம்பரத்திலிருந்து பாரதி மணி அய்யாவை கைபேசியில் அழைத்தேன்...
என்னை நான் அறிமுகபடுத்திக்கொண்டதும் மகிழ்ந்தார்... ஆனால் “கடவுள் வந்திருந்தார்” சுஜாதாவின் நாடக பயிலரங்குக்கு செல்லவிருப்பதால் நீங்கள் நாளை காலை வாருங்களேன் என்றார். எனக்கும் (!?) நாளை நேரமிருப்பதால் சரி அய்யா என்றேன்.
“நீங்க இருந்து கண்டிப்பா நாளைக்கு பார்த்துட்டுத்தான் போவனும்” என்றார்.

செவ்வாய்கிழமை காலை எழு மணிக்கு மீண்டும் அழைத்தேன். வணக்கத்திற்குப்பின் உங்கள் இல்ல முகவரியை எனக்கு அனுப்பிவையுங்கள் என்றேன். குறுஞ்செய்தி வந்த சில நிமிடங்களில் வடபழனி பேருந்தில் ஏறிவிட்டேன். அங்கேயிருந்து சாலிகிராமம் கடைசி நிறுத்தம் என்பதை அறியாமல், வேறு ஒரு பேருந்தில் சாயி நகர் இறங்கி மூன்றாவது பிரதான சாலை சென்று ஒரு முட்டுச்சந்தில் (!? - அவரே சொன்னது) இருந்த தங்க (முட்டையிடும்)குடிலை அடைந்து வாசலில் நிற்க...
கைபேசியில் அழைத்தார்... எங்கிருக்கீங்க சுகுமார்?
உங்க வாசலில்...
ஓ... வந்தாச்சா... இந்தாவாரேன்...

கதவு திறந்த அந்த மனிதரை பார்த்ததும் ஏற்கனவே அறிமுகமான ஒருவராகவே அவரைக்கண்டாலும், வணக்கம் செலுத்தி உள்ளே நுழைந்தேன்... என் தோளில் கைபோட்டு தன் அன்பை வெளிக்காட்டி தன் அறைக்கு அழைத்துச்சென்றார்...

அமர்ந்ததும் நான் ஆரம்பித்தேன்...
ரொம்பநாளைக்குப்பிறகு என்னை “டேய் சுகுமாரா”ன்னு சொன்னது நீங்கதான் அய்யா என்றேன்.
“ஹே” என்பதாக பாவனை காட்டி சிரித்தார்...
“என்னை அப்படி என் தந்தைமட்டுமே அழைப்பார், நீங்க அப்படி அழைத்தது எனக்கும் சந்தோசமாக் இருந்தது” என்றேன்...

இந்த “டேய் சுகுமாரா” ஒரு பிளாஷ் பேக்...
பாரதிமணி அய்யா தகவல் தந்திருந்தார்...

---

Bharati Mani ஐயோ.....ஹரன்! நானா?.......எனக்கு கோணல் இல்லாமல் ஒரு நேர்கோடு போடத்தெரியாது! இது ஓவியர் ரஷ்மி வரைந்தது! எனக்கு பார்த்து ரசிக்க மட்டும் தான் தெரியும்!

Caricaturist Sugumarje Bharati Mani Sir... ஒரு படம் வரைந்துதான் பாருங்களேன்!

Bharati Mani சுகு! சில விஷயங்கள் எனக்கு வராதென்ற பிடிவாதமான நம்பிக்கை எனக்குண்டு. காதல் வயப்பட்டபோதே ஒரு கவிதை நான் எழுதியதில்லை. பள்ளிக்கூடத்தில் ட்ராயிங் கிளாசுக்கு மட்டம்.......காரணம் எனக்கு வரையத்தெரியாது! சமீபகாலம் வரையிலும் எழுத்து எனக்கு வராதென்பதை பிடிவாதமாக நம்பினேன்.......இப்போதும் நம்புகிறேன்!

Caricaturist Sugumarje இருக்கலாம்... ஆனால் உங்கள் எழுத்துக்களை தொகுத்தால் அருமையான புத்தகமாக உருவெடுக்கும்... (பிச்சி, பிச்சி எழுதுவதால் அதன் முழுவடிவம் கிடைக்காதிருக்கிறது என்று நினைக்கிறேன்)

Bharati Mani அடேய்......சுகுமாரா! என்ன வார்த்தை சொல்லிவிட்டாய்? நான் One Book wonder! என்பது உனக்குத்தெரியாதா? இரண்டாம் புத்தகம் எழுதி வாசகர்களை துன்புறுத்தமாட்டேனென்று சபதம் வேறு செய்திருக்கிறேன்! தண்டனையாக என் ஒரே புத்தகம் ‘பல நேரங்களில் பல மனிதர்கள்’ தொகுப்பை ஒரே மூச்சில் படிக்கக்கடவது!

Caricaturist Sugumarje ஏற்கனவே ஒரு சபதம் போனமாதம் சொன்னீர்கள்... (முதல்வராக மாட்டேன் என்று) இப்பொழுது இன்னொன்று... நீங்கள் புத்தகம் போடவேண்டாம்... நாங்கள் தொகுத்துக்கொண்டாலே ஆயிற்று

Caricaturist Sugumarje புத்தகம் படிப்பது தண்டனையல்ல... அது ஒரு ஆத்மாவோடு வாழ்வது

Bharati Mani அடாடா! மெச்சினோம்! எம் வீட்டுக்கு வந்தால், எனது புத்தகம் ‘பல நேரங்களில் பல மனிதர்கள்’ ஒரு பிரதி இலவசமாகக் கொடுக்கப்படும் என்பதை இந்த நல்ல நேரத்தில் அறிவித்துகொல்கிறோம்!

Caricaturist Sugumarje கொடைக்கு நன்றி அய்யா!

---
ஆக நேற்று காலை ஒருமணிநேரத்திற்கும் மேலாக அவரோடு முடிவே இல்லாது கலந்து பேசிக்கொண்டிருந்தாலும் என் மதிய ஊர்திரும்பும் எண்ணம் அப்போதைக்கு முடித்துவைத்தது... இன்னும் நிறைய அவரோடு பேச விசயங்களும், நேரமும் காத்திருக்கின்றன...

வரும்பொழுது அவரின் வார்த்தைபடியே தண்டனையாக (பரிசாக) புத்தகமும் வாங்கியாயிற்று... இனி ஒரே மூச்சில் படிக்கனும்... தண்டனையின் அடுத்த சாராம்சம் அதானே :)

இதற்கு துணை நின்ற முகநூலுக்கு நன்றி!

பாட்டையா பாரதி மணி அவர்களின் Facebook ID 

LONG LIVE SP BALASUBRAHMANYAM


பன்முக திறைமைகளை தன்னகத்தே கொண்ட, திரு. எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அவர்கள், 


ஏற்கனவே காற்றில் கலந்துவிட்ட குரலோசை போதும் என்று, நம் மனம் கவர்ந்த பாடகர், எஸ்.பி. பாலசுப்பிரமணியம் (SPB) முடித்துக் கொண்டு விட்டார். கரோனா, இந்த ஆண்டுகளில் ஏற்படுத்திய சோகம் அளவில்லாதது, எத்தனையோ விழிப்புணர்களில் இருந்தும்கூட, எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அவர்களும் சிக்கிக்கொண்டதை ஏற்கமுடியவில்லை. 

கரோனா சுயகட்டுப்பாடு என்ற வகையில், வீட்டில் இருந்தபடி, எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அவர்களே, இப்படி சொல்லியிருந்தார்.  இயற்கையை நாம் சீரழித்துவிட்டோம், அதன் பழிவாங்கல்தான் இந்த கரோனா எனவே இதை சபிக்காதீர்கள். இந்த பாதிப்பை உள்வாங்கிக்கொண்டு, இனிமேலாவது இயற்கையை சீரழிக்காத மாற்றத்தை நாம் ஏற்று செயல்படுத்தவேண்டும் என்று, தன் குரலை பதிந்திருந்தார்.

கரோனா பரவல் காரணமாக, வீட்டில் மன, உடல், பொருளாதார பாதிப்பில் இருந்த அவரின் ரசிகர்களுக்காக, தன் வீட்டிலிருந்தபடியே பாடல்களை பாடி, காணொளியாக சமூக தளத்திலும் தந்துகொண்டிருந்தார்.

ஆயிரமாயிரம் ரசிகர்களின் முன்னே பாடியிருந்த, அப்படி பாடவே பழக்கப்பட்டிருந்த தான், யார் தனக்கு முன்னே இருக்கிறார்கள், யார் ரசிக்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்ள முடியாத வகையில், இப்படி தனியாக பாடுவதைக்கூட தான் விரும்புவதாகவும், புது அனுபவமாகவும், இனியும் வருங்காலம் எப்படியெல்லாம் நம்மை மாற்றியமைக்குமோ என்றுகூட அவர் சொல்லியிருந்தார். 

 

தன்னுடைய 14 வயதிலிருந்து தன் குரலை பிறர் மகிழ தந்து, தன் திரைப்பயணத்தை தொடங்கியிருக்கிறார். தெலுங்கை தாய்மொழியாக கொண்டதால், ஆரம்பகாலத்தில் தமிழில் பாட, மெல்லிசை மன்னர், எம்.எஸ், விஸ்வநாதன் அவர்கள், தமிழ் கற்றுவிட்டு பிறகு பாடவா என்று அழைத்திருக்கிறார். எஸ்.பி. பாலசுப்பிரமணியம் தெலுங்குவாடை இல்லாமல் பேச பாட தெரிந்தபிறகும் தயக்கத்தோடு, மெல்லிசை மன்னரை சந்திக்கவில்லை. ஆனாலும், அவரே எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தை பார்த்து, ஏன் என்னை வந்து பார்க்கவில்லை என்று கோபித்துக்கொண்டு, முதல் பாடல் வாய்ப்பை தந்தார் என்று, எஸ்.பி. பாலசுப்பிரமணியம் ஒரு மேடையில் சொல்லியிருந்தார். “அத்தானோடு இப்படி இருந்து எத்தனை நாளாச்சு” என்று “ஹோட்டல் ரம்பா” என்ற (வெளிவராத, பாடகி, எல். ஆர். ஈஸ்வரி அவர்களோடு பாடிய) திரைப்பட பாடலாக தொடங்கி, நிற்காத குரல் பயணம்.கின்னஸ் சாதனையோடு, 16 மொழிகளில், கிட்டதட்ட 40,000 மேலாக தொடந்திருக்கிறது.

70 ஆண்டுக்காலமாக, இந்திய மொழிகளில் பாடி, ரசிகர்களின் மனதை குளிர்வித்தவர். இசையே ஒரு மனிதனின் உணர்ச்சிகளுக்கு வடிகால் என்றாலும், அதனோடு பாடலும், குரலும் இணையும் பொழுது அதை, தனக்கு இன்னும் நெருக்கமாக ரசிகன் உணர்கிறான்.

இத்தனை உயரங்களை தொட்டிருந்தாலும், அந்த உயரத்தை, ஆளுமையை, சாதனையை தன் தலையில் ஏற்றுக்கொள்ளாமல், மிக எளிமையாக தன்னை நிறுத்திக்கொண்டவர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம். பிறரை அடையாளப்படுத்துவதில் அவருக்கு நிகர் அவரே. பெரியவர்களிடம் காட்டும் மரியாதையும், இளைஞரோடு காட்டும் தோழமையும், குழந்தைகளிடம் காட்டும் அன்பும், ஊக்குவிப்பும் எல்லோரும் அறிவார்கள். 

கங்கை அமரன் ஒரு நேர்கானலில்,

எஸ்.பி. பாலசுப்பிரமணியம் மாதிரி பிறரை மதிப்பதில் ஒரு ஆளை நான் வாழ்க்கையில் பார்த்ததே இல்லை. என்னமாதிரி உயரத்திலே இருக்காரு, எத்தனை ஆயிரம் பாட்டு பாடியிருக்காரு, உலகம்பூரா எஸ்பிபி என்று சொன்னாலே தெரிந்துவிடும். கொஞ்சம் கூட தலைக்கனம் இல்லாம ரொம்ப எளிமையா இருப்பாரு. இப்பவும் இருக்காங்களே, ஒரு பாட்டு பாடி, ஒரு படத்துலே வெளிவந்துட்டா போதும், ஆளை பிடிக்கமுடியாது, ஒரு மரியாதையும் தெரியாது. இவங்களெல்லாம் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் காலை கழுவி, அதை குடித்தால் கூட புத்திவராது, என்று கோபமாக சொல்லியிருந்தார்.

இந்த பணிவு என்று சொல்லும் பொழுது இந்தக்காட்சி நினைவுக்கு வருகிறது. ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சியில், நடக்கவே தடுமாறும் நிலையில், எம்.எஸ். விஸ்வநாதனும், பி.பி. ஸ்ரீனிவாஸும் ஒருவர் காலில் ஒருவர் விழ, இருவரும் எழுந்து நீங்க என் காலில் விழலாமா? என்று இருவருமே சைகையால் கேட்டுவிட்டு, ஒருவரை ஒருவர் கட்டிக்கொண்டு சிரித்துக்கொண்டனர். அந்த அளவுக்கு மரியாதையும், பணிவும் கொண்டிருந்தனர். 

எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அவர்களிடமிருந்த, இந்த பணிவும், பண்பும்தான், 70 ஆண்டுகளாக, பாடல்களுக்கும் மேலாக, ரசிகர்களை கவர்ந்திருக்கிறது என்று சொல்லவேண்டும். அத்தகைய பண்பை நாம் பெற முடிந்தால் நல்லதே. 

எஸ்.பி. பாலசுப்பிரமணியம் குரல், தனித்த, புல்லாங்குழலில் காற்று நுழைந்து எழும் இசைபோல நயமானது. ஆண்மைக்கான கம்பீரம் என்றில்லாமல், ஆண்மைக்கான அன்பான குரல் இது. ஓய்வில்லாது ஒலித்துக்கொண்டிருந்த குரல் ஓய்வை தேடிக்கொண்டது. மனம் துடித்து, கதறி அழும் சோகம்தான், இயற்கையின் பாதையில் இது ஒரு நிலை. ஆனால் கரோனா தொற்றால் முடிவு செய்யப்பட்டதுதான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

45 நாட்களுக்கு மேலாக, மருத்துவமனையில் அவர் பட்டிருக்கிற  அவஸ்தைகளை, காணொளி, ஒளிப்படங்கள் வாயிலாக கண்டபோது, இந்த இம்சைகளுக்கு, மரணம் நல்லதே என்று தோன்றிவிட்டது.

இத்தனை ஆண்டுகாலமாக, உங்களின் குரலை எங்களோடு கலந்துவிட்டதற்கு, மனமார்ந்த நன்றி எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அவர்களே. உங்கள் குரல் எங்கள் காதுகள் கேட்கும் வரையிலும் ஒலித்துக்கொண்டுதான் இருக்கும். எங்களுக்கும், உங்களுக்கும் இடையிலிருக்கும் உறவு மாறாதது. இன்னும் பல நூற்றாண்டு எங்களுக்குப்பிறகும் ஒலிக்கும், மகத்தான குரல் உங்களுடையது. வாழ்க, அமைதியாய், இயற்கையில் ஓய்வெடுங்கள். 

நேற்றைய நாள், 25-09-2020 (13.40 Hr) வரை இந்தத் தன்மையோடுதான் தன்னை குரலாக கரைத்துக்கொண்டிருக்கிறார். இந்த மாற்றம், அவரின் ரசிகர்களை வருத்தசெய்தாலும், இனி வரும் இளம் பாடல் கலைஞர்களுக்கு இன்னமும் ஊக்குவிப்பு சக்தியாக இருந்து உதவுவார் என்பது உறுதி. உலகெங்கும் உள்ள எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அவர்களின் ரசிகர்களின் வாழ்த்தொலிகளால், இயற்கையின் மடியில் தன்னை விரைவாக கலந்துவிடுவார் என்றே நம்புகிறேன். 

இறை அவர் ஆன்மாவுக்கான சாந்தியை தரட்டும். நாமும் இறையோடு இணைந்து வாழ்த்தி வேண்டிக்கொள்வோம். வாழ்க வளமுடன்.

 

படங்கள் உதவி: https://spbindia.com/about-spb/

Open Statement for Commercial Caricature from Artist



Open Statement:

Stopped working for commercial caricature service.

Dear ones! We stopped working and provide a caricature paintings you liked, adorable. We're really sorry.

The main reason for this, is that, we do not have knowledge and experience to the extent you know the art and painting.

Anyway a painting is a creation. Just as nature creates its creations. A creation is always completed piece. This is the truth.

The painter creates a painting. That is the completeness of his knowledge. But you are disgusted by the painter and the creation by saying, "You change this, change that, draw like this, draw like that, it is chubby, it is fat, slim, and curvy, not like me, looks like someone else". Yes, you can comment like this, why you are giving some money to the Artist.

In fact, does the artist draw from your photocopy you provided? Are you unaware of this fact?

Thus for every work he buys, for every person, if he continues to learn painting, what is the fate of that painter? So you okay to teach a art to the Artist?

Otherwise without this difficulty for you, the right method is to draw yourself.

It was only after receiving this explanation that we stopped offering caricature painting. Please forgive us. Thanks to the loved ones who have supported so far.

by Caricaturelives

---------------------

ஒரு மனம் திறந்த அறிக்கை:

வியாபார ரீதியிலான கேரிகேச்சர் சேவை நிறுத்தப்பட்டது.

அன்பானவர்களே! நீங்கள் விரும்பிய, கேட்கக்கூடிய கேரிகேச்சர் ஓவியங்கள் வரைவதை நிறுத்திவிட்டோம். உண்மையிலேயே நாங்கள் வருந்துகிறோம்.

அதற்கான காரணங்களில் முக்கியமானது, உங்களுக்கு ஓவியம் தெரிந்த அளவிற்கு, எங்களுக்கு அது குறித்த அறிவும், அனுபவமும் இல்லை என்பதுதான்.

ஆனால், ஓரு ஓவியம் என்பது படைப்பு. எப்படி இந்த இயற்கை தன் படைப்புக்களை உருவாக்குகிறதோ அப்படியானது. ஒரு படைப்பு என்பது எப்போதுமே முழுமையானது. இதுதான் உண்மை.

ஒரு ஓவியத்தை ஓவியன் படைக்கிறான். அவனுடைய கற்று தேர்ந்த அறிவின் முழுமை அப்படைப்பு. ஆனால் நீங்கள், காசு தருகிறேன் என்பதற்காக, இதைமாற்று, அதை மாற்று, இப்படி வரை, அப்படி வரை, குண்டாக இருக்கிறது, ஒல்லியாக இருக்கிறது, என் முகம் போல இல்லை, வேறுயாரோபோல இருக்கிறது என்று சொல்லி ஓவியனையும், படைப்பையும் அசிங்கபடுத்துகிறீர்கள்.

உண்மையில், ஓவியன் நீங்கள் வழங்கிய உங்களின் புகைப்பட பிரதியில்ருந்துதானே வரைந்து தருகிறான்? இந்த உண்மையை நீங்கள் அறியாது இருக்கிறீர்களா?

உங்கள் விருப்படி ஓவியம் வரையவேண்டுமென்றால், உங்களிடம் இருந்துதான் அந்த ஓவியன் கற்றுக்கொள்ள வேண்டும். இப்படியாக தான் வாங்கும் ஓவ்வொரு வேலைக்கும், ஓவ்வொரு நபரிடமும், அவன் ஓவியம் கற்றுக்கொண்டே இருந்தால், அந்த ஓவியனின் கதி என்னாவது? 

இல்லையெனில் உங்களுக்கு இந்த சிரமம் இல்லாமல், நீங்களே வரைந்துகொள்வதுதான் சரியான முறை. 

இந்த விளக்கம் பெற்ற பிறகுதான், நாங்கள் ஓவியம் வழங்குவதை நிறுத்திவிட்டோம். தயவு செய்து எங்களை மன்னிக்கவும். இதுவரை ஆதரவு அளித்த அன்பர்களுக்கு நன்றி. 

கேரிகேச்சர்லைவ்ஸ்

---------------------

WHAT’S YOUR REAL NAME AND ADDRESS ?


Image thanks to: Christina @ wocintechchat.com


WHAT’S YOUR REAL NAME AND ADDRESS ?

One’s name and address are so often asked for, just taken for granted, that they don’t geta second thought. But let’s give this identity a second thought now, together. My name is a symbol for ‘me’ as contrasted to ‘another’. My address is my location, usually on afairly permanent basis. Some would say, it’s ‘where I can be reached’, or ‘my house’.

My name and address are symbols of the present time and present space. The name and address indicate bounded (limited), particular identity and place. They indicate here vs.there; now vs. then; for us humans -- I vs. the other; for inanimate they mean ‘this’ vs.‘that’.


The genetic center is a characterized bio-magnetic domain, it is the ‘soul’ according to Swamiji’s terminology: it is my address in the fullest sense. In ordinary terms, my address indicates where I am located on earth. In science they speak of the address of a particle: it includes the time factor in addition to location in three dimensions. We say, I have a name and address; my address that is my genetic center not only pinpoints my location in space and time but also includes all my other parameters and qualities.

I can think of my body as the house of my soul – i.e. the characterized wave domain that is my personality. I’m the only and original tenant of this house; after death it will be useless and fall apart in sorrow and despair that I’ve gone. I built my house brick by brick from my inheritance and then added on to it over the years – for better and for worse -- and it is fit for none other than me.

Meanwhile, I’ve furnished the interior of this ‘house’ with all I have: my heirlooms and acquisitions; I’ve made it my home. Just like our concrete and brick homes, it is ‘permanent’ i.e. up to my lifetime. There are many rooms and I walk about in them all day. Sentimental objects, symbols, notes to myself, things of beauty, dirt and dust as well, junk that I’ve been trying to throw away since forever but just can’t seem to get rid of -- the whole mishmash of acquisitions from the past and vague dreams of the future. When my attention goes outside I watch the neighbors, chat with them, gossip, work and play.

But, just like a house in real life, I am not my house and the things I’ve put in it: I’m the owner, enlivener and enjoyer of the house: I’m the one for whom it all is there; I am the consciousness. If I just stop looking at the things I ‘have’, stop fidgeting with them and thinking about them, stop wondering about what the neighbors are up to, chatting with them, quarreling with them, stop exerting myself to ‘have’ or ‘get’ more things and experiences, and rather sit down quietly, I can then find myself in the Present Space.

The present of Now and Here is infinite in extension: it is VAST, so much bigger and greater than my house and full of all the beauty there is; all the things I have plus all that I don’t, all imaginable qualities and all places….sitting here I see all that lies outside my house and it’s staggering, almost too much, to behold.

I thanks to share, Original Article by, Shri. Uma Vethathiri and Shri. Dr.Alagar Ramanujam


வேதாத்திரி மகரிசி பிறப்பின் ரகசியம் அறிந்த அவரின் தந்தை




வேதாத்திரி பிறப்பின் ரகசியம்

தன் தந்தையாரின் வார்த்தைகளின்படியே, வேதாத்திரிக்கு;

கடவுள் என்பது எது?

வறுமை என்றால் என்ன?

மனித வாழ்க்கையிலே ஏன் துன்பங்கள் தோன்றுகின்றன?

என்ற மூன்று கேள்விகள் அவ்வப்போது ஒலித்துக்கொண்டே இருந்தன. இவற்றிற்கு காரணங்கள் கண்டு தெளிவு பெறுவதற்காக, ஆராய்ச்சியிலும் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். விளைவாக தனது 35வது வயதில் தன்னிலை விளக்கமாக இறைநிலையை உணர்ந்தார். அதன் அடிப்படையில் உலக மக்களுக்காக அவர் அளித்த வாழ்க்கை நெறியே மனவளக்கலை ஆகும். தனது 48ம் வயதில் உலக அமைதிக்காக உலக சமாதானம் (World Peace) எனும் நூலாக, 200 பாடல்களை இயற்றி 1957ம் ஆண்டு வெளியிட்டார்.


அருட்தந்தை வேதாத்திரி மகரிசி அவர்களுடைய பிறப்பின் ரகசியத்தை, ஓவிய நூலாக நாங்கள் வெளியிட்டிருக்கிறோம். படித்து இன்புறுக.

இலவசபதிப்பு மின்னூல் : வேதாத்திரி ரகசியம்

Secret of Vethathiri Maharishi Birth by His Father Words


 


As per as Father's words, Vethathiri Strove to find answers to three questions:

What is God?

What is Life?

Why is poverty in the World?

The search to find these answers as well as to further his lot in life led him into various fields of endeavor, including becoming a qualified practitioner of two systems of Indian indigenous medicine, Ayurveda and Siddha and certified practitioner homeopathy as well. Vethathiri led the life of a householder until he was 50, and then changed the course of his life from being a businessman to teach and write about his experiences of purported divine revelations. He published many books in English and Tamil.


Here welcome to read a Comic book about for more detailed of the Secret of Vethathiri Birth.

Free Download PDF : Secret of Vethathiri Birth


Learn - not only at this corona time


 

பழகு

--------


எப்போதும் 

இரண்டு வாய்ப்புக்கள்

கிடைத்துத்தான் இருக்கிறது.

நாம் தேர்ந்தெடுப்பதோ,

எப்போதும் ஒன்று.

கரோனாவுக்கும் அப்படியே!

ஒன்று இருக்கப்பழகு,

உன்னையும், பிறரையும் மதித்து.

அல்லது இறக்கப்பழகு.

உன்னையும், பிறரையும் அவமதித்து.


Learn

--------


Always 

Two Opportunities

We've got it.

We choose,

Always one.

So for Corona!

One is to be learn and live,

By respect yourself and others.

or to be learn to die.

By insulting you and others.





Never Forget Accident


Hi all,

They usually say forget the accident. But, if we forget it, we also forget the life lesson for us. The accident, its pain, the comfort and love that came with it, the advice, the help, the cooperation will all be an opportunity to forget. The mercy of all the human beings involved will be wasted.

In this world of love and compassion, what is the chance to feel it, and what if it is missed? Only if I realize it can I return to this community.

Later on 22th July 2016, I met a accident, with my bike. On that case, it is my fault. I skidded off the road and crashed into a truck, avoiding colliding with two women who were coming my way.

Just recall from FB post.

Me: Doctor, there will be a live on August 20th. Can you untie and train before that?

Doctor: (Laughs) That's not possible, even if it's the President of the United States for four weeks, wait until August 24. Right?

-

But that live, has been confirmed. To my left is “Live Caricature on Event” at Wedding Reception, Tiruchirappalli.


#LiveCaricature #Caricature #Sugumarje #Caricaturelives #accident #loveandcompassion

Everyone has a end-tip on the Mayarope


மாயக்கயிறு



நாம் எல்லோருமே ஒரு மாயக்கயிறால் இணைந்திருப்பதை அறியமுடியும். ஆனால் அதற்கென்று தனித்தனியான பெயர்கள் இடப்பட்டிருக்கின்றன. உதாரணமாக சொல்லுவதன்றால், 

அன்பு
கருணை
பாசம்
காதல்

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். ஓவ்வொரு கயிறின் முனையும் ஓவ்வொரிடமும் இருக்கிறது. இங்கிருந்து நகர்ந்தால் நாம் அந்த மறுமுனையில் இருப்பரிடம் சென்றுவிடலாம், அவர்களோடு மகிழலாம். ஏன்? சண்டைகூட போடலாம்தான். பொதுவாக நாம், மனிதர்களை, மனிதர்களுக்குள்ளாக இணைக்கும் மாயக்கயிறைத்தான் நாம் பேசிக்கொண்டிருக்கிறோம் அல்லது ஏற்றுக்கொண்டிருக்கிறோம். 

இறையோடும் ஒரு மாயக்கயிறு இருக்கிறது. நம்மில் சிலரே அந்த மாயக்கயிற்றின் முனையை பிடித்திருக்கிறார்கள். சிலர் விட்டுவிட்டார்கள். சிலர் மறந்தும் விட்டார்கள். இதென்னய்யா இறை? அப்படியொன்று இருக்கிறதா? என்று கேட்பவர்களுக்கு, பதிலும் இருக்கிறது.

இறை என்றால் என்ன என்று நினைக்கிறீர்கள்? உங்களுக்குள் இருக்கும் பழைய கருத்துக்களை அப்படியே விட்டுவிடுங்கள். இப்பொழுது சொல்வதை புதிதாக கேட்டுக்கொள்ளுங்கள். ஆனால் ஆராய்ந்து பார்த்து பிறகு ஏற்றுக்கொள்ளுங்கள் உங்களுக்கு அதில் உண்மையிருந்தால்!

இறை என்றால் இறைந்துகிடக்கும் தன்மையான மெய்ப்பொருள். மெய்ப்பொருள் என்று ஏன் சொல்லுகிறோம்?!, இருந்தது, இருக்கிறது, இருக்கும் என்ற தகமை கொண்டதாகும். அந்த இறை என்பதற்கு, ஆழத்தில் இருந்து எடுத்துக்கொள்ளுதல்  என்று ஒரு அர்த்தமும் கிடைக்கும். ஆக இறை என்றால் உங்களுக்கு எல்லா பக்கங்களிலும் இறைந்து கிடப்பது என்று தெரிகிறது. ஆம் தெரிகிறது, ஆனால் நம்மால்தான் பார்க்கமுடியவில்லை.

ஆகாயத்தை பார்க்கிறீர்கள், அந்த ஆகாயம் என்ற ஒன்று இல்லை என்றால் ஆகாயத்தை பார்க்க முடியாது. ஆனால் அந்த ஆகாயத்திற்கும், உங்களுக்கும் இடையிலே இருப்பது என்ன? சரி காற்று இருக்கிறது, வெப்பம் இருக்கிறது, தூசுகள் இருக்கிறது... இன்னும் சில. அப்போது அவற்றையும் நீக்கிவிட மீதமிருப்பது என்ன? அதுதான் இறைந்து கிடக்கிறது! ஆம் இதைத்தான் நம் கண்களால் காணமுடிவதில்லை. ஆனால் அது நம்மோடு மாயக்கயிற்றால் பிணைக்கப்பட்டுத்தான் இருக்கிறது. கயிற்றையும், அதன் முனையையும் விட்டுவிட்டோம். இங்கே இந்ததளத்தில், அதை பற்றிக்கொள்ளும் ஒருசில வழிகளை, ஆய்வுகளாக காண்போம், எந்த சுவாரஸ்யத்திற்கு குறைவும் இன்றி.

மாயக்கயிறு என்பதை இன்னமும் உதாரணமாக காண்போமா? 

உங்கள்முன் யாரேனும் சிரித்தால், முதலில் அவரொரு பைத்தியம் என்றுதானே நினைப்பீர்கள், ஆனால் கொஞ்சம் நேரம் செல்லச்செல்ல அந்த பைத்தியக்கார சிரிப்பு உங்களையும் தொற்றிக்கொள்ளும்.

உங்கள் மனைவியோ, கணவரோ, நண்பரோ, நெருங்கிய உறவினரோ தன்னுடைய கஷ்டத்தில் அழுதால், இதுவரை கல்நெஞ்சம் என்று பெயர்வாங்கிய நீங்களும் அழுதுவிடுவீர்கள்.

உங்கள் குழந்தையின் குதூகலத்தை கொஞ்ச நேரம் கவனியுங்கள், அந்த மகிழ்ச்சி உங்களையும் தொற்றிக்கொள்ளும்.  

ஆக, இதெல்லாம் மாயக்கயிற்றின் இணைப்பில்லாது நிகழுமா? இது போக இன்னும் எதுவெல்லாம் நிகழும் என்பதை தொடர்ந்துவரும் பதிவுகளில் காண்போமா? வாருங்கள், இணைந்திருங்கள்.

இதுதொடர்பான மேலும் பல பதிவுகளை காண இந்த சுட்டியை அழுத்தவும்
https://mayarope.com

வாழ்க வையகம், வாழ்க வளமுடன். 




All Boys are Girls - எல்லா ஆண்மகனும் பெண்மகளே!


இந்த உலகத்தில், ஆண், பெண், மூன்றாம் பாலினம் இப்படி கலந்துதான் வாழ்ந்து வருகிறோம். ஆனாலும் தனித்த பாலினமாக நாம் உணர்வது எப்போது? எப்படியானாலும், தன் பாலினம் மீதும், பிற பாலினம் மீதும் கவர்ச்சி ஏற்பட்டுக்கொண்டேதான் இருக்கிறது.

சில வேலைகளில், சிலர் தன் பாலினத்தை இயற்கையை மீறி மாற்றிகொள்ளவும் துணிகின்றனர். அப்படியான விபரங்கள் குறித்த ஒரு காணொளி. 

வேதாத்திரி மகரிசி மாக்கோலமாய் விளைந்த மதிவிருந்து தத்துவங்கள்


வேதாத்திரிய தத்துவங்கள்: Vethathiriya Philosophy Collection (Tamil Edition) Kindle Edition

 
அருட்தந்தை வேதாத்திரி மகரிசி, எளிய மக்களின் ஞானி. தன் வாழ்நாள் முழுதும், மக்களுக்காகவே, மக்களையே இறையாக பாவித்து தொண்டு செய்து உய்வித்தவர். வாழ்க வையகம், வாழ்க வளமுடன் என்ற அற்புத மந்திர வார்த்தைக்கு சொந்தக்காரர். எவரொருவரும் தன்னை அறிந்து, உணர்ந்து, அந்த வழியாகவே இறையை அறிந்து கொள்ளும், எளிய யோக சாதனையை, மனவளக்கலை மூலம் இந்த உலகுக்கு தந்தவர். உலக சமுதாய சேவா சங்கத்தின், நிறுவனர்.

ஓவ்வொரு தனி மனிதனும், தன் களங்கங்களை போக்கி, தன்னை மனதை, தன் அறிவை உயர்த்திக்கொள்வதன் மூலமாகவே, எல்லைகளில்லா ஓர் உலகமும், கூட்டாட்சியும், அதன் வழியாக உலக சமாதானமும் மலர வழி அமைத்து, எல்லோரையும் வழி நடத்துபவர். அவரின் தத்துவங்கள், கல்லூரி பாடமாகவும், பாடநூலாகவும் இளைய சமுதாத்தினரை சென்று சேர்ந்திருக்கிறது.

மனம் என்றால் என்ன என்பதற்கும், இறை என்றால் என்ன என்பதற்கும் தெளிவான விளக்கம் கொடுத்தவர். அந்த மனதை அறிந்தாலே அதனுள்ளே உறைந்திருக்கும் இறையையும் அறிய வழி கொடுத்தவர்.

இருபத்தைந்து ஆண்டுகளாக, 1953 ம் ஆண்டு முதலாக, அருட்தந்தை வேதாத்திரி மகரிசி அவர்களில் துணைவியார், வாசலில் கோலமிடும்பொழுது, மகரிசி சொல்லும் அருளுரைகளையும் எழுதுவது வழக்கமாக இருந்திருக்கிறது. அந்த அருளுரைகளை நூலாக பதிவு செய்து, “மாக்கோலமாய் விளைந்த மதிவிருந்து” எனும் தலைப்பில் உலக சமுதாய சேவா சங்க அன்பர்கள், வெளியிட்டிருக்கிறார்கள்.

அந்த அருளுரைகளின் சாரத்தை, இங்கே தத்துவமாக விரித்து, கருத்தாக்கம் செய்திருக்கிறேன். அருட்தந்தை வேதாத்திரி மகரிசியின் வார்த்தைளில் கண்ட உண்மைகளை, அவர் சொல்லிச்சென்ற வார்த்தைகளின், அனுபவங்களின் வாயிலாகவே தர முனைந்திருக்கிறேன்.

அருட்தந்தை வேதாத்திரி மகரிசி வழி செல்லும் அன்பர்களுக்கும், மாணவர்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும், தேடலை துவங்கும் தனிமனிதருக்கும் உபயோகமாக இருக்கும் என்று நம்புகிறேன். அவர்களை, இறைநிலையோடு இணைந்து நின்று வாழ்த்தி மகிழ்கிறேன். வாழ்க வையகம், வாழ்க வளமுடன்.

அமேசான் மின்னூல் வரிசையில் விற்பனைக்கு கிடைக்கிறது.

https://amzn.to/38ewMWY