பொதுவாகவே, நம்முடைய இப்போதைய வாழ்வில், நம் முன்னோர்களின் சடங்குகள் காலாவதி ஆகிக் கொண்டு இருக்கின்றன என்பதுதான் உண்மை. அனேகமாக, நம் தாத்தா பாட்டி, அப்பா அம்மா செய்ததைக் கூட செய்வதில்லை அல்லவா? காரணம் அதில், அந்த சடங்குகளில், இக்கால சந்ததியினர் உண்மையையை தெரிந்து கொண்டுவிட்டார்கள் என்பதல்ல. அவர்களுக்கு செய்வதற்கு விருப்பம் இல்லை. அது ஏன் செய்ய வேண்டும் அல்லது விலக்க வேண்டும் அல்லது மாற்றிக்கொள்ள வேண்டும் என்று ஆராய்ச்சி செய்வதும் இல்லை. எனக்கு அதில் ஆர்வமில்லை, நேரம் இல்லை என்று விட்டுவிடுவார்கள்.
இதனால் அவர்கள் இழப்பது நிறைய நன்மைகளையும், உண்மைகளையும், விளக்கங்களையும் சேர்த்துத்தான் என்பது தெளிவு. எப்போதுமே மனிதனின் அறிவு, ‘ஏன்?’ என்று ஆராயும் பொழுதான் வளர்கிறது, தன்னை மேம்படுத்திக் கொள்கிறது. அது இல்லாமல், விட்டுவிடுதலும், விலகுப்போவதும் குறையாகவே நின்றுவிடும். அதுதான் இங்கே, இப்போது நடக்கிறது, நம்முடைய வாழ்வில். அதை நீங்களும் கண்டிருப்பீர்கள்.
ஆனாலும், நாம் செய்துவருகின்ற சில சடங்குகளில், வழிமுறைகளில் உண்மை இருக்கிறது. அது எது எது என்று ஆராய்ந்து பார்த்துக்கொண்டு ஏற்பதும் நல்லதுதானே? குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்களும், இத்தகைய விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறார். மனவளக்கலை என்பதே, மானிட உலகுக்கு ‘புதிய பாதை’ என்பது இன்னமும் பலருக்கு தெரியவில்லை. எனினும் காலம் மாறிவருகிறது. மக்களிடமும் சென்று சேர்ந்திருக்கிறது. வேதாத்திரி மகரிஷியின் உண்மை தத்துவங்கள் உலகம் முழுவதும் உள்ள மனிதர் மனதிற்குள்ளாக பரவிக்கொண்டு இருக்கிறது.
நம் வாழ்வில் நாம் பற்றிக் கொண்டிருக்கிற, சில சடங்குகள் குறித்து வேதாத்திரி மகரிஷி அவர்கள், உண்மை விளக்கம் தந்திருக்கிறார். அதை நாம் பல ஆண்டுகளுக்கு முன்பே @Vethathiriya வில் பதிந்திருக்கிறோம். இதோ அந்த காணொளி வழியாக, அவரே சொல்லும் திருத்தங்களை கவனிப்போம்.
Rituals Fake Characters-சமூக சடங்குகளில் போலித்தன்மை -Vethathiri Maharishi
வாழ்க வளமுடன்
-
