Karma is a lie, horoscope and astrology are false. In this case, is it correct to find karma through the horoscope?
ஐயா, கர்மா என்பதே பொய், ஜாதகம், ஜோதிடம் என்பதும் பொய். அப்படி இருக்கையில், ஜாதகம் வழியாக கர்மாவை கண்டுபிடிக்கிறேன் என்று கிளம்புவது சரியா? எதற்கு இந்த ஏமாற்று வேலை?
மை விளக்கம் தர முயற்சிக்கிறேன். ஆம், ஒன்றை குறை சொல்லுவது என்றால், அதில் இருக்கிற உண்மையும் தெரியவேண்டும், பொய்யும் தெரியவேண்டும் அல்லவா? ஆனால் உங்களுக்கு அதில் இருக்கிற பொய்யை மட்டுமே அறிந்திருக்கிறீர்கள்.
நீங்கள் பிறந்து வாழும் இந்த பூமியாவது ஒரு கிரகம் என்பதை, அறிவீர்களா? இல்லையா? ஒவ்வொரு நாளும் இந்த பூமி, தன்னைச் சுற்றிக்கொண்டே, சூரியனை சுற்றுகிறது என்பதை தெரிந்து கொண்டிருப்பீர்கள் தானே? இரவும் பகலும், பருவகாலங்களும் ஆண்டுமாறாமல், வந்துகொண்டே இருப்பதை புரிந்து கொண்டீர்களா? இன்றைய மார்கழி, தை அல்லது டிசம்பர், ஜனவரி மாதங்களில் சூரியஒளி குறைந்து, குளிர்காலம் நிறைந்திருப்பது தெரியும் தானே? அதுபோலவே சித்திரை, வைகாசி அல்லது ஏப்ரல், மே மாதங்களில் சூரியஒளி அதிகரித்து வெப்பம் அதிகமாவதும் தெரியும் தானே? இவற்றிற்கு காரணம் சூரியனிடம் இருந்து வரும் வெப்ப அலைகள் தானே? இல்லை என்று மறுப்பீர்களா?
ஒவ்வொருநாளும் குளிர் வெப்பம் இருந்தாலும், சாராசரியாக ஒரு குளுமையை, பொருத்தமான வெப்பத்தை தரும் சந்திரன் என்ற நிலாவை நீங்கள் அறிவீர்கள் தானே? அது ஒரு நாள் ஒளிதராமல், தன்னில் இருளைக் கொண்டிருந்தாலும், இந்த பூமிக்கு தகுந்த வெப்ப நிலையை தந்து, நம்மையும் மற்ற உயிர்களையும் காக்கும் அலைகள் எங்கிருந்து வருகின்ற என்பதை நீங்கள் தெரிந்துகொண்டு இருக்கிறீர்களா?
இதையெல்லாம் ஏன் நீங்கள் ஏற்கவேண்டும்? இதையும் மறுத்து ஒதுக்கிட வேண்டியதுதானே? ஜோதிடம் என்பது நிஜம். அதை விவரித்து சொல்லுவதில்தான் மாற்றுக்கருத்தும், குழப்பமும், பொய்யும் கலந்திருக்கின்றன எனலாம். எப்போதுமே, எதிராளிடமும், அன்பர்களிடமும், மாணவர்களிடமும் ‘புரிகிறதா?’ என்று நான் கேட்பதே இல்லை. எடுத்துச் சொன்னால் புரிந்துகொள்ளும் அறிவு, நிச்சயமாக இருக்கிறது என்று எனக்குத் தெரியும். அதனால், அதை புரிகிறதா? என்று நான் கேட்கவேண்டிய அவசியமும் இல்லை. அது கேட்பவரை கேவலப்படுத்தும் கேள்வி என்பதை நான் அறிவேன்.
அடுத்து கர்மா என்பதற்கு வரலாமா? ஒரு செயலுக்கு, ஆற்றலுக்கு எதிர்விளைவு உண்டு என்பது உங்களுக்குத் தெரியும் அல்லவா? ஆமாம். உங்களுக்கு பிடித்த ‘அறிவியல்’ விஞ்ஞானி நியூட்டன் சொல்லி இருக்கிறார். ஆனால் நீ ஒரு செயலை செய்தால், அதற்கு எதிர்விளைவாக, உனக்குள் கர்மா என்ற வினையாக பதிவாகிறது என்று முன்னோர்கள் சொன்னால் அது ‘பொய்’ ஆகிவிடுகிறது அல்லவா?
நல்லது செய்தால் ஏதும் குறையில்லை, ஆனால் தனக்கும், பிறருக்கும், இயற்கைக்கும் தீங்கிழைத்தால், அது கர்மா என்ற வினைப்பதிவாக, பாவப்பதிவாக, நமக்குள் பதிவாகிறது. அதை திருத்தும்வரை அது, நம்முடைய செயல்களில் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கும் என்பதுதான் உண்மை. இத்தகைய தொகுப்பு, பரம்பரை பரம்பரையாக, கருவழியாகவே நமக்கு தொடர்ந்து வருகிறது. அந்த உண்மையை கண்டு அறிவதுதான் இந்த ‘ஜோதிட ஆய்வு’ ஆகும்.
ஒரு மனிதனின் பிறப்பில், இந்த கர்மா என்ற வினை முக்கியத்துவம் பெறுகிறது. நீங்கள் ஏற்றாலும், ஏற்காவிட்டாலும் அது இருக்கும். உங்களிடமிருந்து வெளிப்படும். அது உங்கள் உடல், மனம், உயிரை, பாதிக்கும். உங்களைச் சார்ந்தோர் வழியாக எதிரொலிக்கும். இந்த விளக்கங்களை மேலும் அறிய, இந்த காணொளி பதிவை காணலாம்.
உங்கள் ஜாதகம் அதன் கிரக நிலைகள் உங்களுடைய பாவப்பதிவு கர்ம வினைப்பதிவுகளை சொல்லுகிறதா?
வாழ்க வளமுடன்.
-