CJ for You: பாவம்

பாவம்

Showing posts with label பாவம். Show all posts
Showing posts with label பாவம். Show all posts

Is it right to think that we suffer like this because of the sin?


நாம் செய்த பாவத்தால் தான் இப்படி துன்பப்படுகிறோம் என்று நினைப்பது சரிதானா?

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, நாம் செய்த பாவத்தால் தான் இப்படி துன்பப்படுகிறோம் என்று நினைப்பது சரிதானா?


பதில்:

ஒரு தெளிவில்லாமல் அப்படி நினைத்துக்கொள்வது தவறு. இப்படி நினைப்பது உங்களை இன்னமும் துன்பத்தில் ஆழ்த்திவிடும் என்பதையும் மறவாதீர்கள். துன்பப்படுவதற்கு காரணம் பாவம் அல்ல. பாவம் புண்ணியம் என்ற புரிதலை விட்டு விலகியும் விடுங்கள். அது எப்படியோ இருந்துவிட்டு போகட்டும். மேலும் நீங்கள் செய்த பாவம் ஒன்றுமே இல்லை. ஆனால் உங்கள் பரம்பரையில், முன்னோர்கள் செய்த கர்ம வினைப்பதிவுகள் தொடர்கிறது என்பது உண்மையே!

மேலும் துன்பப்படுவதற்கு காரணம் பாவமோ, கர்மாவோ அல்ல, அதை புரிந்து கொள்ளாமல் நாம் செயல்படுவதால்தான் என்பதையும் தெளிவாக புரிந்துகொள்ளுங்கள். ஒரு நெருப்பு எரிகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அது தீபமாகவோ, அடுப்பாகவோ, வேறேதெனும் நெருப்பாகவோ இருக்கலாம். அதை நீங்கள் தொடுவீர்களா? தொட்டுத்தான் பார்ப்போமே? என்றாவது நினைப்பீர்களா? இல்லைதானே? ஏன் தொடமாட்டீர்கள்? விட்டு விலகுவீர்கள்? கடந்து போவீர்கள்?

அந்த நெருப்பு சுடும், சுட்டு பொசுக்கியும் விடும், தொடப்பட்ட விரலை, கையை புண்ணாக்கி விடும் என்று உங்களுக்குத் தெரியும் அல்லவா? வாழ்வில் ஏதேனும் ஒரு நாளில் அந்த அனுபவம் கிடைத்திருக்கும், அப்படியாக நெருப்பில் சிக்கிய, பாதிக்கப்பட்ட நபர் யாரையாவது பார்த்திருப்பீர்கள். ஏதேனும் யாரேனும் சொல்லக்கேட்டுருப்பீர்கள், படித்திருப்பீர்கள். அந்த விழிப்புணர்வு இப்போதும், எப்போதும் உங்களுக்கு வாழ்க்கையில் உதவுகிறது. நெருப்பு என்பது இப்படிப்பட்டது, இது தரும் விளைவுகள் அத்தகையது. எனவே நெருப்போடு எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்ற உணர்வு வந்துவிட்டது.

அதுப்போலவே, நாம் விரும்பி, எதிர்பார்த்து, தனக்காகவும் ஒரு செயல் செய்து அதன் தவறான விளைவில் துன்பபட்டு வருந்தியதும், பிறருக்கு கேடு விளைவித்து அதன்வழியாக அவருக்கு துன்பம் ஏற்படுத்தியதும், அவருடைய வருத்தமும் நம்முடைய கர்மா என்ற வினைபதிவாக பதிந்து விடுகிறது. காலத்தால் அது தானாக நம்முடைய செயல்களில் வெளிப்படுகிறது. விழிப்புணர்வாக திருத்தி செய்யாவிட்டால், மேலும் துன்பம் உண்டாகிறது.

இப்போது இதுதான் உங்கள் பிரச்சனை. நீங்கள் விளைவில் நல்லது நிகழும்படி ஒன்றைச் செய்தால், உங்களுக்கும் நன்மை, அதனால் பிறரும் நன்மையடைய வாய்ப்பு கிடைத்திடும். இதுதான் கர்மா என்ற வினைப்பதிவுகளை தீர்க்கும் வழி. என்றாலும் இது மட்டுமே போதாது, முழுமையாக தீர்க்க யோகம் ஒன்றே சிறந்த வழியாகும். இதை நீங்கள் புரிந்துகொண்டால், நீங்கள் வாழ்க்கையில் வருந்த வேண்டிய அவசியம் இருக்காது. மாறாக கர்மா என்ற வினையை தீர்த்து, இன்பவாழ்வுக்கு அஸ்திவாரம் போடலாம்!

வாழ்க வளமுடன்.

What is Mukti and Moksha? Perfect Informations!


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, முக்தி மோட்சம் என்றால் என்ன? அதை எப்படி அடைவது?

பதில்:

நாம் வாழும் இந்த உலகில், இந்த முக்தி, மோட்சம் என்பதை எப்படியாவது உள்வாங்கி விடுகிறோம். நம் குடும்பத்திலும், வெளி உலகிலும் இந்த வார்த்தைகளும், விளக்கங்களும் நமக்கு கிடைத்துவிடுகின்றன. மேலும் நூல்கள், பிறருடைய கருத்துக்கள் வழியாகவும் நமக்கு அறியவருகிறது. ஆனால் தெளிவாக உண்மையான விளக்கம் கிடைக்கிறதா? என்றால் அதான் இல்லை. எதோ கதை மாதிரியாக, இப்படி, அப்படி என்று ஏதோ புரிதலுக்காக சொல்லப்படுகிறதே தவிர, முழுமையான விளக்கம் இல்லை.

சிலர், உனக்கு தெரியவில்லை என்றால் விட்டுவிடு, இல்லை என்று சொல்லாதே என்று வம்புக்கு வருவார்கள். பெரும்பாலும், எதையுமே நம்பிக்கை அடிப்படையில் இருப்பதை கேள்வி கேட்கவே நமக்கு வாய்ப்பு வழங்கப்படாது என்பதுதான் உலக வழக்கம்.

சரி, சொல்லப்பட்டபடி முக்தி, மோட்சம் அறிந்துவிட்டோம் என்றே வைத்துக்கொள்ளலாம். அது எப்போதைய்யா கிடைக்கும்? என்று கேளுங்கள். அதற்கு என்னபதில் கிடைக்கும் தெரியுமா? முக்தி மோட்சம் என்பது நாம் இறந்த பிறகு கிடைக்கும் என்பார்கள். ஐயா, நான் இறந்த பிறகு கிடைப்பதற்கு இப்போது நான் இதை, நீங்கள் சொல்வதை கடைபிடிக்கவேண்டுமா? அப்போது கிடைப்பதை நான் எப்படி அறியமுடியும்? என்று மறு கேள்வி கேட்டால், அதற்கு பதில் கிடைக்குமா? யார் அதற்கான பதிலை தருவார்கள்?

இப்படியான சூழலில்தான், சொர்க்கம் நரகம் என்பது காலாவதி ஆகிவிட்டது. பாவம் புண்ணியமும் சிலருக்கு காலாவதி ஆகிவிட்டது. அதுபோல இந்த முக்தி மோட்சம் என்பது காலாவதி ஆகிவிடுமோ?!

ஆனால், பாவம் புண்ணியம் இருக்கிறது, அது பாவம், அறம் என்ற சித்தர்களின் கருத்தாக. அதுபோல முக்தி மோட்சம் இருக்கிறது. எங்கே? இறந்த பிறகா? நாம் வாழும் பொழுதே இருக்கிறது, கிடைக்கிறது என்பதுதான் உண்மை.

ஆனால் உலகில் வாழும் பெரும்பாலோர், எல்லாவற்றையுமே மறுத்து, ஒதுங்கி வாழ்கிறார்கள் என்பதையும் நாம் அறிவோம் தானே?! இப்பொழுது நாம்  முக்தி மோட்சம் என்பதற்கான, உண்மை அறிதலுக்கு வருவோம். 

இதோ இந்த இணைப்பின் வழியாக, இணையத்தில் காணலாம்: உலகின் மிகச்சிறந்த முக்தி மோக்ஷம் உண்மை விளக்கம்!

வாழ்க வளமுடன்.