CJ for You: முகநூல்

முகநூல்

Showing posts with label முகநூல். Show all posts
Showing posts with label முகநூல். Show all posts

Revival Words


சமீபமாக ஃபேஸ்புக்கில் என் பக்கத்திலிருந்து விலகிவிட்டேன்...  அற்புதமான நண்பர்களை கொஞ்சம் இழந்திருக்கிறேன் தற்பொழுது. ஈடில்லாத இழப்புத்தான், ஆனால் அவர்களை அங்கே (ஃபேஸ்புக்கில்) இருந்தால்தான் இணைப்பில் வைத்திருக்கமுடியும் என்பதில்லை.

பொழுபோக்குக்காக சாப்பிட்ட மருந்து, விசமாகும் தருணத்தை உணர்ந்ததால் இந்த அவசர முடிவு எடுத்துக்கொண்டேன். சில நேரங்களில் அங்கே எப்படி நடந்துகொள்வது என்று அறியாமலிருக்கிறேன். இந்த இடைவெளி அதை எனக்கு கற்றுக்கொடுக்கும் என்று நினைக்கிறேன்.

ஊடகம் ஊடகமாக இருந்த நிலையில் எல்லாமே நன்றாக இருந்தது. அதில் தனிநபர் திணிப்பு இருந்தாலும் கூட, வெளித்தெரியாத நிலையில்... ஆனால் அது அதுகுறித்த அனுபவம், அறிவு, கல்வி இல்லாதவர்கைகளுக்கு மாறியவுடன், அதன் வீச்சு அதிகமாக மாறி, ஓவ்வொரு தனி மனிதரின் மன அழுத்தங்களை தரவிறக்கி, இயல்பான மனிதர்களின் மனதை சுழற்றியடிக்கிறது. எனக்கு அதன் தாக்கம் தாங்கமுடியவில்லை...

இணையத்தில் எதோ தேடிக்கொண்டிருக்கையில், இந்த பாடலை பார்க்கவேண்டி எண்ணினேன்,... பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் வரிகளில்தான் எத்தனை அர்த்தம்... காலம் கடந்தும் உயிர்ப்போடு... பாடல்வரிகளோடு பாடலையும் பகிர்ந்திருக்கிறேன்.



பாடல் வரிகள்:

தர்மமென்பார் நீதியென்பார் தரமென்பார்
 சரித்திரத்தைச் சான்று சொல்வார்
 தாயன்புப் பெட்டகத்தைச் சந்தியிலே எறிந்துவிட்டுத்
 தன்மான வீரரென்பார்
 மர்மமாய்ச் சதிபுரிவார் வாய்பேசா அபலைகளின்
 வாழ்வுக்கு நஞ்சுவைப்பார்
 கர்மவினை யென்பார் பிரம்மனெழுத் தென்பார்
 கடவுள்மேல் குற்றமென்பார்...................
கர்மவினை யென்பார் பிரம்மனெழுத் தென்பார்
 கடவுள்மேல் குற்றமென்பார்.........

இந்தத் _ திண்ணைப் பேச்சு வீரரிடம் _ ஒரு
கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி

இந்தத் _ திண்ணைப் பேச்சு வீரரிடம் _ ஒரு
கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி

 _ நாம

 ஒண்ணாயிருக்கணும் அண்ணாச்சி

 எந்நாளும் உலகில் ஏமாற்றும் வழிகள்
 இல்லாத நன்னாளை உண்டாக்கணும்

எந்நாளும் உலகில் ஏமாற்றும் வழிகள்
 இல்லாத நன்னாளை உண்டாக்கணும்

 இந்தத் _ திண்ணைப் பேச்சு வீரரிடம் _ ஒரு
 கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி _ நாம
 ஒண்ணாயிருக்கணும் அண்ணாச்சி


பொதுநலம் பேசும் புண்ணியவான்களின்
 போக்கினில் அனேக வித்தியாசம்
 புதுப்புது வகையில் புலம்புவதெல்லாம்
 புவியை மயக்கும் வெளிவேஷம் _ அந்தப்
 பொல்லாத மனிதர் சொல்லாமல் திருந்த
 நல்லோரை எல்லோரும் கொண்டாடணும் இந்த
 திண்ணைப் பேச்சு வீரரிடம் _ ஒரு
 கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி


கடவுள் இருப்பதும் இல்லை என்பதும் சபைக்கு உதவாத வெறும் பேச்சு
கடவுள் இருப்பதும் இல்லை என்பதும் சபைக்கு உதவாத வெறும் பேச்சு

 கஞ்சிக் கில்லாதார் கவலை நீங்கவே
 கருதவேண்டியதை மறந்தாச்சு _ பழங்
 கதைகளைப் பேசி காலம் வீணாச்சு;
கையாலே முன்னேற்றம் கண்டாகணும்

இந்தத் _ திண்ணைப் பேச்சு வீரரிடம் _ ஒரு
 கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி _ நாம
 ஒண்ணாயிருக்கணும் அண்ணாச்சி

நாடி தளர்ந்தவங்க ஆடி நடப்பவங்க
 நல்லவங்க கெட்டவங்க நம்பமுடி யாதவங்க
நாடி தளர்ந்தவங்க ஆடி நடப்பவங்க
 நல்லவங்க கெட்டவங்க நம்பமுடி யாதவங்க

 பாடி கனத்தவங்க தாடி வளர்த்தவங்க
 பலபல வேலைகளில் பங்கெடுத்துக் கொண்டவங்க
 படிப்பவங்க வீடு புடிப்பவங்க
 பொடிப்பசங்க பெரும் போக்கிரிங்க
படிப்பவங்க வீடு புடிப்பவங்க
 பொடிப்பசங்க பெரும் போக்கிரிங்க
 இன்னும் _ பொம்பளைங்க ஆம்பளைங்க
 அத்தனை பேரையும்வச்சு மாடாஇழுக்கிறோம் வேகமா;
நம்ம வாழ்க்கை கெடக்குது ரோட்டோரமா
 வண்டியை உருட்டி வறுமையை வெரட்டி
 உண்டாலும் காய்ந்தாலும் ஒன்றாகணும் நம்ம

வண்டியை உருட்டி வறுமையை வெரட்டி
 உண்டாலும் காய்ந்தாலும் ஒன்றாகணும்

 இந்தத் _ திண்ணைப் பேச்சு வீரரிடம் _ ஒரு
 கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி _ நாம
 ஒண்ணாயிருக்கணும் அண்ணாச்சி

எந்நாளும் உலகில் ஏமாற்றும் வழிகள்
 இல்லாத நன்னாளை உண்டாக்கணும்


 இந்தத் _ திண்ணைப் பேச்சு வீரரிடம் _ ஒரு
 கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி _ நாம
 ஒண்ணாயிருக்கணும் அண்ணாச்சி