CJ for You: facebook

facebook

Showing posts with label facebook. Show all posts
Showing posts with label facebook. Show all posts

Invitation for Friend and Followers


அன்பர்களுக்கும் நண்பர்களுக்கும் ஒர் அழைப்பு!


Facebook, Twitter, Instagram, WhatsApp and Telegram, YouTube, SnapChat,  Etc. ஆகிய அனைத்து சமூகத்திற்கு,

வயது வித்தியாசம் இன்றி, ஒரே கருத்துப் பரிமாற்றம், எனக்கு பிடித்திருக்கிறது என்ற ஒரு உள்ளார்ந்த விருப்பம், எதிராளை பாராட்டுதல், ஊக்குவித்தல், இப்படியான நோக்கம் அமைந்து, சமூக இணையதளங்களில் கலந்திருக்கிறோம். ஒவ்வொருநாளும் முடிவின்றி அது தொடர்கின்றது.

நாம் இங்கே, நட்பாக இணைந்திருக்கிறோம். எத்தனை ஆண்டுகால நட்பில் நெருங்கி உறவினர்கள் போலான நெருக்கத்தையும் பெற்றிருக்கிறோம். நேராகவும் பார்த்து, எந்த வித்தியாசமும் இன்றி பழகுகிறோம். அன்பு பாராட்டுகிறோம். அதை ஒருவருக்கொருவர் பகிர்ந்தும் கொள்கிறோம். அதுமட்டுமே, மகிழ்ச்சி, பூரிப்பு, சந்தோசம், கவலை, துக்கம், சினம், வெறுப்பு, சிரிப்பு, மெல்லிய நகைச்சுவை, கேலி, கிண்டல் இப்படி எல்லா உணர்வுகளையும் கூட பகிர்ந்துகொள்கிறோம். பிடிக்கவில்லை என்றால் கண்டிப்பும் காட்டுகிறோம். அதை மாற்றிக்கொள்ளவில்லை என்றால் பிளாக்செய்து நீக்கியும் விடுகிறோம், நீங்கியும் விடுகிறோம்.

நமக்கென்று இருக்கின்ற, இருந்த பிரச்சனைகளில் சிக்கினாலும் கூட தனித்து நின்று, அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், அதைச்சொல்லி புலம்பாமல், இன்னொருவரையும் கஷ்டப்படுத்தாமல், பேஸ்புக் சமூக குடும்பத்தில் ஒரு இறப்பு நிகழந்தால் பரிதவிக்கிறோம், அஞ்சலி செலுத்துகிறோம். அவர் ஆன்மா சாந்தியடைய இறையை வேண்டுகிறோம். ஒரு குழந்தை பிறந்தால் மகிழ்கிறோம். அன்பையும் வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறோம். நண்பர்களின் பிறந்தநாளில் நாமும் குதூகலம் அடைகிறோம். 

ஒருவருக்கொருவர் வேற்றுமையில் ஒற்றுமை என்று சொன்னால் மிகப்பொருத்தம். பால்பேதம் அற்றும்கூட பழகுதல் இங்கேதான் சாத்தியமாகிற்று என்றும் சொல்லலாம்.

அதுபோக உலகில் நாம் காணும், வஞ்சம், பழிவாங்குதல், ஏற்றத்தாழ்வு, மதியாதிருத்தல் அனுபவங்களும் கூட லேசாக உண்டுதான் எனினும் அவர்களை எளிதாக விலக்கியும், கடந்தும் வந்திருக்கிறோம். நட்பு எண்ணிக்கை அதிகம் ஆகிவிட, அரசியல் மேடையாகிப் போனது என்பது சோகம் தான். எனினும் அவர்களோடு நட்பை முறித்துவிடவில்லையே?! இங்கே இதுவரை சொன்ன எல்லாமே இன்னமும் தொடர்கிறதுதான். எனினும்... ஏதோ ஒன்றை விட்டுவிட்டு கலந்திருக்கிறோம் என்று மனம் உறுத்துகிறது. அது என்ன?

ஒரு நட்பாக நாம் இங்கே இணைந்திருந்தாலும், ஓவ்வொருவராக இழந்துகொண்டும் வருகிறோம், காலத்தால், அவர்களின் வயதால், உடல் பிரச்சனைகளால், பொருந்தாத சூழ்நிலைகளால்! அப்படியான சூழல் நம்மை சூழ்ந்துவிடுவதற்கு முன்னால், எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்ட நாம், நம்மை யார்? என்று அறிவதற்கான பகிர்வை பகிர்ந்தோமா? அதுகுறித்து உண்மைகளை அறிந்தோமா? என்றால் இல்லைதானே?

ஒரு மனிதனாக, இந்த உலகில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து, நட்பாகி, அனுபவித்து, பகிர்ந்து, பெற்று வாழ்ந்து மறைவது மட்டுமா? இந்த பிறப்பு ஏன் நிகழ்ந்தது? பிறப்பில் ஏதேனும் கடமை இருக்கிறதா? நோக்கம் இருக்கிறதா? மனிதனானவன் யார்? நான் யார்? பிறக்கும் முன் எங்கிருந்தேன்? எங்கே போகப்போகிறேன்? அவ்வளவுதானா? வேறேதேனும் உண்மை உள்ளதா? கடவுள் உண்டா? இல்லவே இல்லையா? இருந்தால் எப்படி இருக்கிறது? இல்லையென்றால் எப்படி நிரூபணம் செய்வது?  மிதக்கும் உலகை தாங்கிப்பிடிப்பது யார்? அது இயற்கை என்றால் இயற்கை என்பது என்ன? இப்படி பலவாறாக கேட்டுக்கொண்டோமா? அதை மற்றவர்களிடம் கேட்டோமா? பதில் அறிய முயற்சித்தோமா? தெரிந்த பதிலையாவது சொன்னோமா? என்ற கேள்விகள்தான் என்னுடைய மனதை உறுத்துகிறது.

இங்கே நான் ஏதோ எனக்கு தெரிந்த வழியில் சொல்லுவதாக நினைக்காமல், இதே பதிவையே நீங்கள் எழுதியதாக நினைத்து, உங்களுக்குத் தெரிந்ததை பகிர்ந்து கொள்ள முயற்சிக்கலாம் என்பதும், பகிர்வுகள் இல்லாமல் நீங்களாகவே தேடிக்கொள்ளலாம் என்பதும் என்னுடைய விருப்பம்.

ஒருவேளை இந்த மாற்றத்திற்கான விதையை நானும் விதைக்காமல் போனால், இதை, இப்படி ஒரு திருத்தத்தை, வழியை, யோசனையை, இப்படியும் ஒரு வாழ்கைக்கான நோக்கமும் பாதையும் உண்மையும் இருக்கிறது என்றுகூட சொல்லாமல் ஏமாற்றிவிட்டானே என்று நீங்கள் சொல்லக்கூடும். ஏமாற்றியதற்காக நானும் ஏதோ ஒருநாளில் வருந்தக்கூடும். சரிதானே?!

இன்றோ, நாளையோ, எதாவது ஒருநாளோ, இனி நம்மை அறிந்து உணர விருப்பம் கொள்ளலாமா? யோசித்து முடிவெடுங்கள்! இதெல்லாம் ஆகாத வேலை என்றால் கடந்தும் விடலாம், தவறில்லை. நமக்காக வேறு யாரேனும் ஒருவர் நம் குடும்பத்திலேயே பிறவி வழியாக பிறந்து வந்து நம் கடனையும் சேர்த்து அவரின் கடன் தீர்ப்பார் என்பதுதான் உண்மை!

-

Bharati Mani - Pattaiya


 பாரதி மணி... (Bharati Mani) 


பேஸ்புக்கில் அறிமுகம்

மணி என்பது பெயராகவும், பாரதி என்பது துணைப்பெயராகவும் இருக்கிறது என்பதை யோசித்துக்கொண்டேன்... ஓவியர் ஜீவாநந்தன் தன் நிலை தகவல்களிலும், பிறரது தகவல்களிலும் தனக்கே உரிய பொருத்தமான கேலியில் அந்த தகவலை மேலும் சுவாரசியமாக்குவார். அப்படியாகவே பாரதி மணி அவர்களின், அதற்கு பதிலடியையும், பிறகு அவரின் மண்வாசம் மிகுந்த மனவெளிப்பாடுகளையும் நான் படித்துக்கொண்டு வந்தேன்.

பொதுவாகவே தன்னை, தன் அறிவை, வளர்ச்சியை, அனுபவத்தை, ஆற்றலை, பலமின்மையை, தாழ்ச்சியை, மதிப்பை உணர்ந்தவர்கள் மட்டுமே இந்த உலகில் தன் வாழ்நாளில் அலை இல்லாத குளமாக (கடலாக) இருக்கமுடியும். பாரதி மணி அப்படி ஒருவாராக இருப்பார் என்பதை நான் நம்புகிறேன்.

பாரதி மணி என்பவர்தான் பாபாவில் முதலமைச்சராக வருவார் என்பது அப்பொழுதான் தெரியும். இல்லையென்றார் “யார்ரா இவரு?” என்பதாகவே இருந்திருக்கும். பிறகு விசயமறிந்தால் கப்பல் வியாபாரியாக இருந்திருக்கிறார், நீதிபதியாக இருந்திருக்கிறார்... இன்னும் பலபல...

பாரதி மணி அய்யா, சார் என்று சொன்னால் ஒரு அன்னிய பாவம் வரும் :) ஆனால் பாட்டையா என்று பாசத்தோடு அழைக்கின்றனர்... எனக்கோ பாட்டையா என்றால் ரொம்ப வயாதானவரோ என்ற எண்ணம் உருவாவதினால் அய்யா போதுமானது. நிலைத்தகவல் மூலமாக அவரைப்பற்றிய ஒரு முழு வடிவம் அவரின் சினேகிதத்தை உருவாக்கியது. நான் அவரின் நண்பரானேன். என்னுடைய சில நிலைத்தவகலுக்கும் அவர் அவருடைய பாணியிலேயே பதில் தந்திருக்கிறார். 

ஒரு புதியவரோடு குரலால் பேசினால் அதில் தொணிக்கும் குரல் உச்ச, கீழ் ஸ்தாயி எதிராளியையும், நம்மையும் புடம்போட்டு காட்டிவிடும்...பின்னர் விவகாரத்தையும் ஏற்படுத்தும்... நேரில் பார்ப்பதோ ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தி தள்ளிவைக்கும்... ஆனால் முகம் காணாது எழுத்துக்களால் பேசிக்கொள்ளும்பொழுது நம் மனம்தான் பேசிக்கொள்ளும். நம் அனுபவமே எதிராளுக்காக வடிவம் எடுத்து தானே உருமாறிக்கொள்ளும். அப்படி பாரதி மணி எனக்குள் ஒரு வடிவத்தை ஏற்படுத்தியிருந்தார்...


கேரிகேச்சர் ஓவியம்

நிஜமாகவே பாரதி மணி எழுத்தாளரா, நாடக நடிகரா, கட்டுரையாளரா எனபதாக அவரைப்பற்றி எனக்கு வேறெந்த விசயமும் எனக்கு தெரியாது. ஆனால் அவரின் வார்த்தைகள் அந்த நுணுக்கங்களை கொண்டிருந்தன... தமிழோடு வார்த்தைகளால் விளையாடுவது எனக்கு வரும் என்பதால்... அதை யார் செய்தாலும்,அது எனக்கு பிடிக்கும்... பாரதி மணி அய்யாவையும் அப்படி பிடித்திருந்தது... வழக்கமாக என் நண்பர் குழாமுக்கு அவர்களின் பிறந்தாநாளின் அன்று என் பாணியில் ஒரு கேலி சித்திரம் தருவது உண்டு. பாரதி மணி அய்யாவுக்கு தனியாக ஒரு பரிசாக தருவது என்று முடிவெடுத்து அவரின் ஒளிப்படம் ஒன்றை சேகரித்து, அவருக்கே தெரியாமல் அதை வரைந்துமுடித்து என் பக்கத்தில் வெளியிட்டேன்...

கடவுளின், பெற்றோர்களின் ஆசீர்வாதத்தால் யாரை வரைந்தாலும் அதில் அவர்களின் முகபாவனையை அப்படியே கொண்டுவரும் தகைமை எனக்கு இருப்பதாக நான் நம்புகிறேன்... அந்தவகையாகவே பாரதி மணி அவர்களின் ஓவியம் அவராலேயே மிகச்சிறப்பாக பாராட்டப்பட்டது... அந்த ஓவியத்தின் பக்கத்திலேயே மிக அருமையான கலந்துரையாடலும் நடைபெற்றது...

அந்த ஓவியத்தை அவரின் பிறந்தநாளுக்கே பயன்படுத்திக்கொண்டேன்... ஒரு சில நாட்களுக்கு பிறகு ஒரு நன்றியுரை எனக்கு கிடைத்தது.


எனக்களித்த பதில்

---

அன்புள்ள சுகுமார்ஜி: என்னையும் ஒரு பொருட்டாக மதித்து என் பிறந்தநாளுக்கு யாரும் தரமுடியாத ஒரு பரிசை தந்திருக்கிறீர்கள். என் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்துப்போனது.

என் மனமார்ந்த நன்றி....God bless you!

பாரதி மணி

---

அதற்கு பிறகு என்னையும் அவர் புரிந்துகொண்டிருப்பார் (!?) என்ற நம்பிக்கையில் அவரின் தவலுக்கு நானும் என்பாணியில் கேலியோடு கூடிய பதில்கள் தர ஆரம்பித்தேன். கொஞ்சம் ஒட்டி வந்துட்டோம் அல்லவா... அதான் :)

சென்னை பலநாட்கள் போய்வரும் வேலை எனக்கிருப்பதால் வாய்ப்பு கிடைத்தால் சந்திக்கிறேன் அய்யா என்றுதான் சொல்லியிருந்தேன். நான் அதிகபட்சமாக ஒருநாளுக்கு மேல் சென்னையில் தங்குவதுமில்லை. சென்றமாதத்தில் ஓவியர் ஜீவாநந்தன் அவரை சந்திந்த வேளை நானும் சென்னையில் வேறு ஒரு அலுவலில் இருந்ததால் பார்க்க இயவில்லை. நான் இருப்பது தெரிந்து “நீங்களும் வந்திருக்கலாமே சுகுமார்” என்றார்...

என்பெயரில் சுகுமார்ஜி என்பதில் சுகுமார்தான் என்பெயர் ஜி என் தந்தையின் ஆங்கிலமுதல் எழுத்து... ஆனால் ஜி ஹிந்தி ஜியை தோற்றுவிக்கும்... பிரான்ஸ் நாட்டில் இருக்கும் தமிழ் ஆர்வலர் சாமிநாதன் (சாம் விசய் )

“நான் சுகுமார்னுதான் கூப்பிடுவேன்... ஜிலாம் சொல்லமாட்டேன்” என்றார்...

“அய்யா அந்த விளக்கமே வேண்டாம்... உங்களுக்கு எப்படி பிரியமோ அப்படி கூப்பிடுங்கள்” என்று சொல்லிவிட்டேன்...

அதேபோல நண்பர் வட்டாரத்தில் “சுகு”  மட்டும்தான்... நிலைத்தகவலில் இதை தெரிவித்தவுடன் பாரதி மணி அய்யாவும் சுகு என்றே அழைக்க ஆரம்பித்தார்.


முதல் சந்திப்பு

நேற்று (07-01-2013) காலை தாம்பரத்திலிருந்து பாரதி மணி அய்யாவை கைபேசியில் அழைத்தேன்...

என்னை நான் அறிமுகபடுத்திக்கொண்டதும் மகிழ்ந்தார்... ஆனால் “கடவுள் வந்திருந்தார்” சுஜாதாவின் நாடக பயிலரங்குக்கு செல்லவிருப்பதால் நீங்கள் நாளை காலை வாருங்களேன் என்றார். எனக்கும் (!?) நாளை நேரமிருப்பதால் சரி அய்யா என்றேன்.

“நீங்க இருந்து கண்டிப்பா நாளைக்கு பார்த்துட்டுத்தான் போவனும்” என்றார்.

செவ்வாய்கிழமை காலை எழு மணிக்கு மீண்டும் அழைத்தேன். வணக்கத்திற்குப்பின் உங்கள் இல்ல முகவரியை எனக்கு அனுப்பிவையுங்கள் என்றேன். குறுஞ்செய்தி வந்த சில நிமிடங்களில் வடபழனி பேருந்தில் ஏறிவிட்டேன். அங்கேயிருந்து சாலிகிராமம் கடைசி நிறுத்தம் என்பதை அறியாமல், வேறு ஒரு பேருந்தில் சாயி நகர் இறங்கி மூன்றாவது பிரதான சாலை சென்று ஒரு முட்டுச்சந்தில் (!? - அவரே சொன்னது) இருந்த தங்க (முட்டையிடும்)குடிலை அடைந்து வாசலில் நிற்க...

கைபேசியில் அழைத்தார்... எங்கிருக்கீங்க சுகுமார்?

உங்க வாசலில்...

ஓ... வந்தாச்சா... இந்தாவாரேன்...

கதவு திறந்த அந்த மனிதரை பார்த்ததும் ஏற்கனவே அறிமுகமான ஒருவராகவே அவரைக்கண்டாலும், வணக்கம் செலுத்தி உள்ளே நுழைந்தேன்... என் தோளில் கைபோட்டு தன் அன்பை வெளிக்காட்டி தன் அறைக்கு அழைத்துச்சென்றார்...

அமர்ந்ததும் நான் ஆரம்பித்தேன்...

ரொம்பநாளைக்குப்பிறகு என்னை “டேய் சுகுமாரா”ன்னு சொன்னது நீங்கதான் அய்யா என்றேன்.

“ஹே” என்பதாக பாவனை காட்டி சிரித்தார்...

“என்னை அப்படி என் தந்தைமட்டுமே அழைப்பார், நீங்க அப்படி அழைத்தது எனக்கும் சந்தோசமாக் இருந்தது” என்றேன்...


அடேய் சுகுமாரா

இந்த “அடேய் சுகுமாரா” ஒரு பிளாஷ் பேக்...

பாரதிமணி அய்யா தகவல் தந்திருந்தார்...

Bharati Mani ஐயோ.....ஹரன்! நானா?.......எனக்கு கோணல் இல்லாமல் ஒரு நேர்கோடு போடத்தெரியாது! இது ஓவியர் ரஷ்மி வரைந்தது! எனக்கு பார்த்து ரசிக்க மட்டும் தான் தெரியும்!

Caricaturist Sugumarje Bharati Mani Sir... ஒரு படம் வரைந்துதான் பாருங்களேன்!

Bharati Mani சுகு! சில விஷயங்கள் எனக்கு வராதென்ற பிடிவாதமான நம்பிக்கை எனக்குண்டு. காதல் வயப்பட்டபோதே ஒரு கவிதை நான் எழுதியதில்லை. பள்ளிக்கூடத்தில் ட்ராயிங் கிளாசுக்கு மட்டம்.......காரணம் எனக்கு வரையத்தெரியாது! சமீபகாலம் வரையிலும் எழுத்து எனக்கு வராதென்பதை பிடிவாதமாக நம்பினேன்.......இப்போதும் நம்புகிறேன்!

Caricaturist Sugumarje இருக்கலாம்... ஆனால் உங்கள் எழுத்துக்களை தொகுத்தால் அருமையான புத்தகமாக உருவெடுக்கும்... (பிச்சி, பிச்சி எழுதுவதால் அதன் முழுவடிவம் கிடைக்காதிருக்கிறது என்று நினைக்கிறேன்)

Bharati Mani அடேய்......சுகுமாரா! என்ன வார்த்தை சொல்லிவிட்டாய்? நான் One Book wonder! என்பது உனக்குத்தெரியாதா? இரண்டாம் புத்தகம் எழுதி வாசகர்களை துன்புறுத்தமாட்டேனென்று சபதம் வேறு செய்திருக்கிறேன்! தண்டனையாக என் ஒரே புத்தகம் ‘பல நேரங்களில் பல மனிதர்கள்’ தொகுப்பை ஒரே மூச்சில் படிக்கக்கடவது!

Caricaturist Sugumarje ஏற்கனவே ஒரு சபதம் போனமாதம் சொன்னீர்கள்... (முதல்வராக மாட்டேன் என்று) இப்பொழுது இன்னொன்று... நீங்கள் புத்தகம் போடவேண்டாம்... நாங்கள் தொகுத்துக்கொண்டாலே ஆயிற்று

Caricaturist Sugumarje புத்தகம் படிப்பது தண்டனையல்ல... அது ஒரு ஆத்மாவோடு வாழ்வது

Bharati Mani அடாடா! மெச்சினோம்! எம் வீட்டுக்கு வந்தால், எனது புத்தகம் ‘பல நேரங்களில் பல மனிதர்கள்’ ஒரு பிரதி இலவசமாகக் கொடுக்கப்படும் என்பதை இந்த நல்ல நேரத்தில் அறிவித்துகொல்கிறோம்!

Caricaturist Sugumarje கொடைக்கு நன்றி அய்யா!


 பதிவின் முடிவாக

ஆக நேற்று காலை ஒருமணிநேரத்திற்கும் மேலாக அவரோடு முடிவே இல்லாது கலந்து பேசிக்கொண்டிருந்தாலும் என் மதிய ஊர்திரும்பும் எண்ணம் அப்போதைக்கு முடித்துவைத்தது... இன்னும் நிறைய அவரோடு பேச விசயங்களும், நேரமும் காத்திருக்கின்றன...

வரும்பொழுது அவரின் வார்த்தைபடியே தண்டனையாக (பரிசாக) புத்தகமும் வாங்கியாயிற்று... இனி ஒரே மூச்சில் படிக்கனும்... தண்டனையின் அடுத்த சாராம்சம் அதானே :)

இதற்கு துணை நின்ற முகநூலுக்கு நன்றி!


facebook - http://on.fb.me/VkzC2I


மறுபதிப்பு சோகம்

இத்தனை ஆண்டுகளுக்குப்பிறகு, இப்பதிவை மறுபதிப்பாக தருவதில் காரணமிருக்கிறது. ஆம், பாட்டையா பாரதி மணி, கடந்த செப்டம்பர் மாதம் 24 ம் தேதி கொண்டாட்டத்திற்குப் பிறகும் கடந்த அக்டோபர் 26 வரை பேஸ்புக் பதிவுகளிலும் இருந்திருக்கிறார். பிறகான நாட்கள் உடல் பிரச்சனைகளோடு இருந்து, அவற்றை தனக்கே உரித்தான இயல்பில் ஏற்று போராடி, நேற்று மாலை (17-10-2021) 5 மணி அளவில், தன் வாழ்க்கையை 84 வயதில், நிறைவு செய்துகொண்டார்.

இந்த பொருளாதாரத்தில் தூணாக விளங்கும் Birla தனியார் துறை நிறுவனத்தில் CEO ஆக பணியாற்றி, ஓய்வு பெற்று அதை தன் பழக்கத்தில் கொஞ்சமும் காட்டிக்கொள்ளாதவர். அதைப்பற்றி கேட்டால் கூட பேசாதவர். அத்தகைய எளிமை அவரிடமிருந்தது. 

அவர் இல்லத்திற்கு செல்லும்பொழுதெல்லாம் சுடச்சுட, அவர் கைகளாலேயே அரைத்த காப்பி கிடைக்கும், சரியான நேரத்திற்கு போனால், அவரே சமைத்த சாப்பாடும் கிடைக்கும். ஒரு தந்தைக்கு சமமாக என்னோடு பழகியவர். எனக்காக என் வேலைகள் குறித்து, என் வாடிக்கையாளர்களிடம் “நான் பேசுகிறேன்” என்று உதவியாக நின்றவர். 

இறையின் விருப்பமான,  உலக பிறப்பிலும் வாழ்விலும் மகிழ்ந்திருந்தவர் பாட்டையா பாரதி மணி அவர்கள், இப்பொழுது இறப்பிலும் மகிழ்வாகவே சென்றிருப்பார். இறையின் அரவணைப்பில், இந்த பிரபஞ்சம் முழுமையில் இருந்து, கலந்திருக்க நான் “பாட்டையாவை” வாழ்த்தி வணங்குகிறேன். 

வாழ்க வளமுடன்.

The mind and social media Its problems


 மனமும் சமூக வலைத்தளங்களும், அதன் பிரச்சனைகளும்


மனம் எப்படிப்பட்டது?

உதாரணமாக சொல்லுவதென்றால். மூன்று தாள் கொண்ட ஒரு தொகுப்பு என்று வைத்துக்கொள்ளலாம். 

1) முற்றிலும் புதிய வெள்ளைத்தாள்

2) பழைய குறிப்புக்களோடு எழுதப்பட்ட தாள்

3) எழுதவே இடமில்லாதபடி எழுத்துக்களால் நிரம்பிய தாள்

இந்த மூன்று தாளுக்கும் உள்ள உறவு என்ன என்றால், ஒன்றில் எழுதுவது பிறகு மற்றொரு தாளுக்குள் போய் ஒட்டிக்கொள்ளும்.  மூன்றாவது தாளில் இருப்பதும் அங்கே நிலைப்பதில்லை. அதுவேறெங்கோ சென்று விடுகிறது. அது எங்கே என்று வேதாத்திரிய அன்பர்களுக்கு தெரியும், அதை தனியாக கட்டுரை செய்கிறேன். எனவே இந்தக்கட்டுரைக்கு இதுவரையில் போதுமானது. 

ஒருதாள், வெள்ளைத்தாள் போல இருக்கிறதே, அதில்தான் நாம் தினமும் ஏதேனும் எழுதி அவ்வப்பொழுது ஞாபகப்படுத்திக் கொள்கிறோம். இந்த தாள் நிரம்பிவிட்டால், அந்த செய்திகள் 2ம் தாளுக்கு நகர்ந்துவிடுவதால் மீண்டும் 1ம் தாள் காலியாக இருக்கும். இது தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே இருக்கும்.


புள்ளியும் கோலமும்

ஒரு வெள்ளைத்தாளை அப்படியே வெள்ளைத்தாளாக வைத்திருக்க யாருக்கும் விருப்பமில்லை. பொதுவாகவே, அப்படி வைத்திருக்கவும் முடியாது. யோகிகளுக்கும், மகரிஷிகளுக்கும் மட்டுமே அப்படியான திறமை உண்டு. அவர்கள் மட்டுமே, எந்நாளும் வெள்ளைத்தாளை அப்படியே வைத்திருப்பார்கள். நாம் வழக்கமாக புள்ளி வைப்போம், அதில் கோலம் போடுவோம். சில நேரங்களில் மையை கொட்டி தாளை அசிங்கப்படுத்தியும் விடுவோம். ஆனாலும் அதைக்குறித்து நாம் கவலை கொள்வதில்லை. நாளைக்கு கிடைக்கும் வெள்ளைத்தாளையும் இப்படியே அசிங்கமாக்கி கசக்கிப் போடுவோம்.

ஆனால் பெரும்பாலும் எல்லோருமே, “மனசுதான்யா எல்லாம்” என்று சொல்லிக் கொண்டிருப்பதைக் காணலாம். அதிர்ஷ்டவசமாகவோ, துர் அதிர்ஷ்டவசமாகவோ, இந்த தாளானது, தானகவே எழுதிக்கொள்ளும் திறமைகொண்டது. அது இந்த இயற்கையின் ஒழுங்கமைப்பு விதியில் இணைந்திருக்கிறது. இதை “எழுதிக்கொள்ளாதே” என்று நீங்கள் கட்டளை இட முடியாது. அதுபோலவே இன்னதுதான் நான் எழுதியிருக்கிறேன் அல்லது இதைத்தான் நீ எழுதியிருக்கிறாய் என்றும் நம்மிடம் காட்டாது. நாமும் விரும்பி, என்ன எழுதினேன் என்று தாளில் பார்க்கவும் முடியாது.

ஒருவேளை நீங்கள் யோகசாதனையில் இறங்கினால், ஓரளவு என்ன எழுதியிருக்கிறது என்று காணலாம். நீண்ட பயிற்சிக்குப்பிறகு, முதல் தாளின் வழியாக திருத்தியும் அமைக்கலாம். ஆனால் இதற்கு “குரு” தேவைப்படுகிறார்.


நிரப்பியது குப்பையா?

நீங்கள் எந்த அளவுக்கு, உங்களைச்சார்ந்த சூழலில் தெளிவாக இருக்கிறீர்களோ, அந்த அளவுக்கு, அத்தாளில் நிரப்படுவது குறையும்.  

நீங்கள் எந்த அளவுக்கு, உங்களுக்கு தேவையானது என்ற தேர்வில் தெளிவாக இருக்கிறீர்களோ, அந்த அளவுக்கு, அத்தாளில் நிரப்படுவது குறையும்.  

நீங்கள் எந்த அளவுக்கு, இயற்கைக்கு மாறாத செயலில் தெளிவாக இருக்கிறீர்களோ, அந்த அளவுக்கு, அத்தாளில் நிரப்படுவது குறையும்.  

நீங்கள் எந்த அளவுக்கு, நீங்கள் செய்யும் செயல்களின் விளைவுகளில் தெளிவாக இருக்கிறீர்களோ, அந்த அளவுக்கு, அத்தாளில் நிரப்படுவது குறையும்.  

நீங்கள் எந்த அளவுக்கு, பிறருக்கு தீங்கிழைக்க கூடாது என்று தெளிவாக இருக்கிறீர்களோ, அந்த அளவுக்கு, அத்தாளில் நிரப்படுவது குறையும். 

நீங்கள் எந்த அளவுக்கு, யாரோ ஒருவர் துன்பத்திற்கு உதவுவதில் தெளிவாக இருக்கிறீர்களோ, அந்த அளவுக்கு, அத்தாளில் நிரப்படுவது குறையும். 


மெனு கார்டாக மாறும் தாள்

நாமே நிரப்பி, நிரப்பி தொடர்ந்து கொடுக்கும் நிர்பந்தத்தால், இந்த தாளில் பதிந்த விபரங்கள் மூளைக்கு அனுப்பப்படும்.  மூளை, அந்த தாளில் இருக்கிற விபரங்களை உள்வாங்கிக் கொண்டு, சிந்தனையாகத் தரும் அல்லது செயல்பட தூண்டும். அது நல்லதா கெட்டதா என்பது நீங்கள் ஏற்கனவே அந்த தாளில் என்ன கொடுத்தீர்கள் என்பதை பொறுத்தது தான். 

எனவே நீங்கள் கேட்டதை, அல்லது உங்களுக்கு விருப்பமானதை தரும் ஒன்றாக, இந்த தாள் “மறைமுகமாக” செயல்படுகிறது.


மனப்பிறழ்வில்... 

சமீபகாலமாக நீங்கள் சமூக வலைத்தளங்களில் இயங்குபவராக இருந்தால் உங்களுக்கு மனப்பிறழ்வு என்ற நோய்க்கு சமமான மன நோயில் சிக்கியிருப்பீர்கள். 

மனம் ஒரு வெள்ளைக் காகிதம் என்பதை இந்த கட்டுரையின் ஆரம்பத்திலேயே பார்த்தோம், அதன்படி அதை நீங்கள் அப்படியே வைத்திருக்கலாம், புள்ளி வைக்கலாம், அழகான கோலமும் ஆக்கலாம், அலங்கோலமும் ஆக்கலாம், அல்லது அதில் மை கொட்டி அழுக்காகவும் ஆக்கலாம், கசக்கியும் போடலாம் என்பதையும் பார்த்தோம்.

ஆனால் எல்லாவற்றிற்கும் “அது” எதிர்வினை ஆற்றும். சமூக வலைத்தளங்களான, பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிரம், வாட்ஸாப், டெலிகிராம் இன்னும் ஏதேதோ ஆகியவற்றில், நீங்கள் ஒரு புதிய பதிவு பதியாவிட்டாலும், அந்த சமூக வலைத்தளங்களில் நுழையும் பொழுதே, உங்களோடு நண்பர்களாக பழகுபவர்களின் பதிவுகள் டைம்லைனில் (Timeline) காணக்கிடைக்கும். 


அங்கே நப்பது என்ன?

நீங்கள் ஒரு மகிழ்ச்சிகரமான மன நிலையில் இருப்பீர்கள். அங்கே ஒரு அன்பரின் இறப்புச்செய்தி, கொலை செய்தி, தற்கொலை விபரம், விபத்தில் மரணம் இவையெல்லாம் உங்கள் மகிழ்ச்சியை பிடிங்கிவிடும்.

பலவருசமாக தூங்கிவிட்டு, இன்று எழுந்து, என்ன மகாத்மா காந்தியை சுட்டுட்டாங்களா? என்பது மாதிரியான பதிவுகள், உங்களை கோபத்தின் உச்சிக்கே கொண்டு செல்லும்.

உங்களுக்கு முற்றிலும் முரண்பாடான, எதிர்மறையான பதிவுகளையே எப்பொழுதும் பதிந்து கொண்டிருப்பவரும் உங்கள் நண்பர்தான்.

சமுகத்தில் நடக்கும் எந்த நல்ல விசயங்களையும், குறை சொல்லிக்கொண்டே, தன் கருத்தை, தன் மரபை, தன் தத்துவங்களை திணிக்கும் நண்பரும் அங்கே இருப்பார்.

எப்போது பார்த்தாலும், எந்த விசயத்திற்கும், எந்த கருத்திற்கும் பகடி, கிண்டல் செய்துகொண்டே இருக்கும் நண்பரும் அங்கே பதிவிடுவார், பின்னூட்டமும் இடுவார்.

இன்றைக்கு இந்த பாடல் கேட்டேன் என்று அதர பழசான ஒன்றை, உங்களுக்கு பிடிக்கவே பிடிக்காத அந்தப்பாடலை, வரிக்கு வரி அழகு செய்து அங்கே பதிவிட்டிருப்பார் உங்கள் நண்பர்.

இதையெல்லாம் தாண்டி, உங்கள் மனநிலைக்கு ஏற்ப ஏதோ சில நல்ல பதிவுகளும் இருக்கலாம் தான், ஆனால் இப்படியான வலைத்தளங்களின் அல்காரிதம், பரபரப்பை மட்டுமே செய்தியாக்கும் படியாக அமைக்கப்பட்டிருக்கும். எனவே இப்படியான பதிவுகளே, உங்களுக்கு காட்டிக்கொண்டிருக்கும்


திணிக்காதீர்கள், ஏற்காதீர்கள்.

எனவே, நீங்கள் சமூக வலைத்தளங்களில் இயங்கும்பொழுது, உங்களுக்கு பிடிக்காத, மனம் ஏற்றுக்கொள்ளாத எதையும் “விருப்பம்” செய்யாதீர்கள்.  விருப்பமில்லா செய்தியாக இருந்தால், அதை தவிருங்கள், அப்பதிவை மேலோட்டமாகக் கூட படிக்காதீர்கள். மனம் ஏற்காத அந்த பதிவினை கடந்துவிடுங்கள். அப்படியான பதிவை பதிந்த, அந்த நபரை நீக்கலாம் (Unfriend), மறைக்கவும் செய்யலாம் (Block). உங்கள் மனதை கெடுத்துக்கொள்ளாதிருங்கள். உங்களுக்கு உண்மையில்லாத ஒன்றை நீங்களும் பகிராதீர்கள். ஏற்பில்லாத விளம்பரம் வந்தால் அதை மறைக்கலாம் (Hide All).

இவை எல்லாவற்றிலும் எளிய, அற்புதமான வழி என்ன தெரியுமா? சமூக வலைத்தளங்கில் இருக்கும் உங்கள் கணக்குகளை நிறுத்தி வையுங்கள். ஆமாம், நீங்கள் உங்கள் கணக்கை, நீங்கள் உருவாக்கிய கணக்கை அழிக்க உங்களுக்கு அனுமதி மறுக்கபடுவதை அறிந்துகொள்ளுங்கள். 

சமூக வலைத்தளங்களினால் ஏற்படும் மன நிலை, உங்கள் வாழ்க்கையையே தடம் மாற்றும் எனவே, உங்கள் சுவரையும், உங்கள் மனதையும் அழுக்காக வேண்டாம். அப்படியான செய்கைதான் உங்கள் வாழ்க்கையையும் அழகாக்கும்.  

வாழ்க வளமுடன்.

-------------

Present by:





Photos and Images: Thanks to Google, Copyrighted to Owners

 





Build-up bulwark around me


நீண்ட நாட்களுக்குப்பிறகு தொடர்கிறேன்...

எல்லோருமே என்னை விட அறிவாளிகளாகிக்கொண்டிருப்பதாகவும், நான் முட்டாளாகிக்கொண்டே இருப்பதாகவும் (ஏற்கனவே அப்படித்தானோ) தோன்றுகிறது. இந்த 48 வயதை நெருங்கும் நேரங்களில் காலம் நன்கு பாடம் நடத்திக்கொண்டிருப்பதால் இருக்கலாமோ?!

போதுமப்பா என்று எல்லாவற்றிலும் ஒரு நிறைவு, புதிய பொழுதுபோக்கு முயற்சிகளில் ஆர்வமின்மை. என் கடந்த உலகை விட்டுக்கொடுக்க இயலாமல், கண்ணால் காணும் புதிய உலக நோக்கம்.  காதை தீய்க்கும் இசையிலிருந்து பாதுகாக்க புதியஇசை கேளாமை,  சில வரி ஆரம்பத்திலேயே விசயம் சொல்லாமல் இழுக்கும் கதை தவிர்த்தல், அதீத ஆர்ப்பாட்ட கவிதை, எழுத்து, குளத்தில் பாறாங்கல்லை போட்டதைப்போல குழப்பவாதிகளின் கட்டுரைகள் விட்டு ஓடிவிட தோன்றுகிறது.

எதற்கு சிரிக்கிறார்கள் என்பது புரிந்துகொள்ள இயலாத நகைச்சுவையில் தொலைக்காட்சி, திடீர் திடீர் என அழுவாச்சி அல்லது நெஞ்சு பூரிப்பு அப்படியே எதிர்பதமாக வில்லத்தன்மை, போட்டி, பொறாமை கூடவே ஆவிகளும் பேய்களுமாக தொலைக்காட்சி தொடர்கள்...

செய்தி திரித்து நாடி பிடிக்கும் செய்தி தொலைகாட்சிகள், நிம்மதியை குலைக்கும் விளம்பரங்கள்...

எதைபோட்டாலும் புரிந்துகொள்ளாமல் ஆளைக்கவ்வும் பேஸ்புக் நடைமுறை

கீச்சிலும் வன்மம் கொடுக்கும் வல்லூறாக அப்டேட்கள்

தலைப்பில் நிர்வாணம் காட்டும் யுடுயூப் பதிவுகள்...

போதும்... எனக்கான சுதந்திரத்திற்காக நான் போராட வேண்டியதில்லை. என்னைச்சுற்றி ஒரு சுவர் அமைத்துக்கொண்டால் போதும்போலிருக்கிறது... என்ன ஒரு முரண்?!

Doodle Art 6


After long break, i do this doodle art.

I love this solid color based out-put, it gives a great feel. It is really very different from my official caricature art. But i like do more

it is very fun and enjoyed

Click the photos and see big size and  feel it. If  you have a any question, let me know via email. Thanks :)
This is me :P

One of  my Girl, she called me as Grandpa :D

Based on Photo ,got on Google

Based on Photo- I follow her on Instagram

Pinup Girl - I am a Instagram follower 

Based on Photo on Tumblr Search

Based on Photo of my friend photo collection on Facebook

Revival Words


சமீபமாக ஃபேஸ்புக்கில் என் பக்கத்திலிருந்து விலகிவிட்டேன்...  அற்புதமான நண்பர்களை கொஞ்சம் இழந்திருக்கிறேன் தற்பொழுது. ஈடில்லாத இழப்புத்தான், ஆனால் அவர்களை அங்கே (ஃபேஸ்புக்கில்) இருந்தால்தான் இணைப்பில் வைத்திருக்கமுடியும் என்பதில்லை.

பொழுபோக்குக்காக சாப்பிட்ட மருந்து, விசமாகும் தருணத்தை உணர்ந்ததால் இந்த அவசர முடிவு எடுத்துக்கொண்டேன். சில நேரங்களில் அங்கே எப்படி நடந்துகொள்வது என்று அறியாமலிருக்கிறேன். இந்த இடைவெளி அதை எனக்கு கற்றுக்கொடுக்கும் என்று நினைக்கிறேன்.

ஊடகம் ஊடகமாக இருந்த நிலையில் எல்லாமே நன்றாக இருந்தது. அதில் தனிநபர் திணிப்பு இருந்தாலும் கூட, வெளித்தெரியாத நிலையில்... ஆனால் அது அதுகுறித்த அனுபவம், அறிவு, கல்வி இல்லாதவர்கைகளுக்கு மாறியவுடன், அதன் வீச்சு அதிகமாக மாறி, ஓவ்வொரு தனி மனிதரின் மன அழுத்தங்களை தரவிறக்கி, இயல்பான மனிதர்களின் மனதை சுழற்றியடிக்கிறது. எனக்கு அதன் தாக்கம் தாங்கமுடியவில்லை...

இணையத்தில் எதோ தேடிக்கொண்டிருக்கையில், இந்த பாடலை பார்க்கவேண்டி எண்ணினேன்,... பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் வரிகளில்தான் எத்தனை அர்த்தம்... காலம் கடந்தும் உயிர்ப்போடு... பாடல்வரிகளோடு பாடலையும் பகிர்ந்திருக்கிறேன்.



பாடல் வரிகள்:

தர்மமென்பார் நீதியென்பார் தரமென்பார்
 சரித்திரத்தைச் சான்று சொல்வார்
 தாயன்புப் பெட்டகத்தைச் சந்தியிலே எறிந்துவிட்டுத்
 தன்மான வீரரென்பார்
 மர்மமாய்ச் சதிபுரிவார் வாய்பேசா அபலைகளின்
 வாழ்வுக்கு நஞ்சுவைப்பார்
 கர்மவினை யென்பார் பிரம்மனெழுத் தென்பார்
 கடவுள்மேல் குற்றமென்பார்...................
கர்மவினை யென்பார் பிரம்மனெழுத் தென்பார்
 கடவுள்மேல் குற்றமென்பார்.........

இந்தத் _ திண்ணைப் பேச்சு வீரரிடம் _ ஒரு
கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி

இந்தத் _ திண்ணைப் பேச்சு வீரரிடம் _ ஒரு
கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி

 _ நாம

 ஒண்ணாயிருக்கணும் அண்ணாச்சி

 எந்நாளும் உலகில் ஏமாற்றும் வழிகள்
 இல்லாத நன்னாளை உண்டாக்கணும்

எந்நாளும் உலகில் ஏமாற்றும் வழிகள்
 இல்லாத நன்னாளை உண்டாக்கணும்

 இந்தத் _ திண்ணைப் பேச்சு வீரரிடம் _ ஒரு
 கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி _ நாம
 ஒண்ணாயிருக்கணும் அண்ணாச்சி


பொதுநலம் பேசும் புண்ணியவான்களின்
 போக்கினில் அனேக வித்தியாசம்
 புதுப்புது வகையில் புலம்புவதெல்லாம்
 புவியை மயக்கும் வெளிவேஷம் _ அந்தப்
 பொல்லாத மனிதர் சொல்லாமல் திருந்த
 நல்லோரை எல்லோரும் கொண்டாடணும் இந்த
 திண்ணைப் பேச்சு வீரரிடம் _ ஒரு
 கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி


கடவுள் இருப்பதும் இல்லை என்பதும் சபைக்கு உதவாத வெறும் பேச்சு
கடவுள் இருப்பதும் இல்லை என்பதும் சபைக்கு உதவாத வெறும் பேச்சு

 கஞ்சிக் கில்லாதார் கவலை நீங்கவே
 கருதவேண்டியதை மறந்தாச்சு _ பழங்
 கதைகளைப் பேசி காலம் வீணாச்சு;
கையாலே முன்னேற்றம் கண்டாகணும்

இந்தத் _ திண்ணைப் பேச்சு வீரரிடம் _ ஒரு
 கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி _ நாம
 ஒண்ணாயிருக்கணும் அண்ணாச்சி

நாடி தளர்ந்தவங்க ஆடி நடப்பவங்க
 நல்லவங்க கெட்டவங்க நம்பமுடி யாதவங்க
நாடி தளர்ந்தவங்க ஆடி நடப்பவங்க
 நல்லவங்க கெட்டவங்க நம்பமுடி யாதவங்க

 பாடி கனத்தவங்க தாடி வளர்த்தவங்க
 பலபல வேலைகளில் பங்கெடுத்துக் கொண்டவங்க
 படிப்பவங்க வீடு புடிப்பவங்க
 பொடிப்பசங்க பெரும் போக்கிரிங்க
படிப்பவங்க வீடு புடிப்பவங்க
 பொடிப்பசங்க பெரும் போக்கிரிங்க
 இன்னும் _ பொம்பளைங்க ஆம்பளைங்க
 அத்தனை பேரையும்வச்சு மாடாஇழுக்கிறோம் வேகமா;
நம்ம வாழ்க்கை கெடக்குது ரோட்டோரமா
 வண்டியை உருட்டி வறுமையை வெரட்டி
 உண்டாலும் காய்ந்தாலும் ஒன்றாகணும் நம்ம

வண்டியை உருட்டி வறுமையை வெரட்டி
 உண்டாலும் காய்ந்தாலும் ஒன்றாகணும்

 இந்தத் _ திண்ணைப் பேச்சு வீரரிடம் _ ஒரு
 கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி _ நாம
 ஒண்ணாயிருக்கணும் அண்ணாச்சி

எந்நாளும் உலகில் ஏமாற்றும் வழிகள்
 இல்லாத நன்னாளை உண்டாக்கணும்


 இந்தத் _ திண்ணைப் பேச்சு வீரரிடம் _ ஒரு
 கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி _ நாம
 ஒண்ணாயிருக்கணும் அண்ணாச்சி

Caricature service for all


Nowadays, I am available on 16 hours per day for my clients via Caricaturelives. Yes.. it helps to make a wonderful caricature on clients satisfaction.
Images based on free Stock
Now everyone loves Caricature, but no one ready to see their exaggerated face... so most of client needs Portrait type face and tiny body or cartoon type body.

On my Caricaturelives, gives perfect style face and bodies with world standard style and format. Caricaturelives never use template on orders. Each one client's order is created with individual style. theme, concept and dress-codes. Caricaturelives ready to do new type with client's interest.

Caricaturelives has own website... www.caricaturelives.com
Most of search engines listed and helps to reach my website directly. This site is build with clear details, rate and samples also. Someone says... "Your website has great story" Yeah... lot of details on there. Caricaturelives not believe on fluorescent words!

And Why I am available on 16 hours? Every client takes attention on their caricature. They want best result... so I give a updates, "what is going on?" via sms, whatsapp, facebook messenger and emails. Smart-phones works well on this section...

Whatsapp is now mostly used by all. easy to share our notes, images and video too. (Recorded voice service available)

My clients send their photos, concept detail etc via whatsapp. And I reply as same as by their sketch and updates. Original Master Digital document will be send via email or cloud storage only.

I try to give my best service to my clients. So get connect with me by name of Caricaturelives on...

Mobile: +91 9442783450
Whatsapp: +91 9442783450
Hike: +91 9442783450
BBMme: 7E2333AE

and
Blog: caricaturist-journal.blogspot.com
Facebook: Facebook.com/Caricaturelives
Twitter: twitter.com/Caricatuelives

Facebook and Duty


நீண்ட நாளுக்குப்பிறகு...

என் கேரிகேச்சர்லைவ்ஸ் (Caricaturelives - www.caricaturelives.com) நிறுவனத்திற்கான வலைத்தளம் மாற்றிஅமைக்கவேண்டியிருந்ததால் கொஞ்சம் இடைவெளி. கிடைக்கும் நேரத்திலும் பேஸ்புக்கில் ஆழ்ந்துவிடுவதாலும் இங்கே பதிவுகள் இடாமல்போயிற்று. பேஸ்புக்கின் வாயிலாக நம் நண்பர்களும், நிறைய ரசிகர்களும் எப்பொழுதும் இருப்பதால் நம் பதிவுகளுக்கான பாராட்டும், வசையும் அங்கேயே கிடைத்துவிடுகின்றன. ஓவ்வொரு நாளும் புதியநாளாக, புதுப்புது பதிவுகளோடு எல்லோரும் வலம் வருவதால் இந்த நாட்கள் அப்படியேவும் கடந்துவிடுகிறது.



ஆனால் சில ஆர்வக்கோளாறுகள், எளிதில் உணர்ச்சிவசப்படுவோர், எழுத்துமூலம் திடீர்விளம்பரம் தேடுவோர், சமய, மத, நாடு, இனம், சாதி, ஆண்பால், பெண்பால், நடிகர், நடிகை, திரைப்படம், அரசியல், அரசியல் தலைவர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், இலக்கியம், இலக்கியவாதிகள் இப்படி கிடைக்கும் எல்லாவற்றிலும் புகுந்து, இவற்றிலான சண்டைகள் மூலம் தன்னை நிரூபிக்க நினைக்கும் சிலர், குழப்பம் விளைவிக்க நினைக்கும் சிலர் செய்யும் பதிவுகளாலும், விளம்பரங்களாலும் பேஸ்புக் நம்மை சோர்வடையவைப்பது உண்மைதான்.

என்னைப்போல சிலர் தொழில்ரீதியாகவும் செயல்படுகின்றனர். சிலர் ஓய்வுநேரத்தை பயன்படுத்தியும், சிலர் தன் அலுவலகத்தின் இடைஞ்சலுக்கு நடுவேயும் பேஸ்புக்கில் செயலாற்றி சந்தொசமோ, துக்கமோ அறுவடை செய்கின்றனர். வாழ்வில் இழந்த நட்பை அங்கே பெறமுடிகிறது, புதிதாக நட்புக்கொள்ளமுடிகிறது, நீண்டநாள் பழகிய நிலைக்கு சென்று அவர்களோடு கலந்துரையாடமுடிகிறது. இதுவே இன்னும் நம்மை பேஸ்புக்கில் ஒட்டவும், ஓடவும் வைத்துக்கொண்டிருக்கிறது.

தொடர்வேன்...

You-are-sexiest


இந்த உலகம், இணையதளங்களால் ஒரே கிராமமாக மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டன. இணையத்தில் இருக்கிற சமூகவலைத்தளங்கள் இந்த சேவையை சிறப்பாக செய்துவருகின்றன...



முதன்மையாக பேஸ்புக்... எனக்கு இரண்டு பெயர்களில் கணக்கு இருக்கிறது. Caricaturist Sugumarje, Sugumarje Caricaturist என்று மட்டுமே. என் ஓவியங்களும், என் கருத்துக்களும், பின்னூட்டங்களும் இதில் வலம் வந்துகொண்டிருக்கிறது... எனக்குப்பிடித்த கருத்துக்கள் இருந்தால் அதை என் பக்கங்களில் பகிர்ந்துகொள்வதும் உண்டு... நான் ஓவியன் என்பதால், என் ஓவிய நண்பர்கள், வளரும் ஓவியர்கள் எனக்கு தன் ஓவியங்களை தெரிவிப்பார்கள். அதில் என் கருத்துக்கள் இடம்பெறும்.

66A தீவிரமாக்கப்பட்ட பிறகு என் கருத்துக்களை பல முறை சோதனை செய்தபிறகே பதிப்பது வழக்கம். நான் ஓவியராக இருந்தபோதும் அரசியல், தனிமனித நையாண்டி தவிர்த்துவருகிறேன்... பொதுவாகவே சிரிப்பை மறந்த நம் மனிதர்களுக்காக, மனதை பாதிக்காத வகையில் கேலி, கிண்டல் செய்து பின்னூட்டமும், தகவலும் தருவது என் வழக்கம். ஆனபோதிலும் அதை தவறாக சுட்டிக்காட்டினால் அதை அழித்துவிடவும் தயங்குவதில்லை.

சமூக வலை என்பதால், எந்த நாட்டினரும் நம் நண்பராகும் சாத்தியம்  நிறைவேறுகிறது. அப்படி சில பெண் நண்பர்களும் என் நட்புவட்டத்தில் இருக்கிறார்கள். பாலுணர்வை தூண்டும் எந்த பதிவையும் நான் செய்ததில்லை. சில் நண்பர்கள் ஒருசில அரைகுறை பதிவு போட்டால் அதையும் அவர்கள் பக்கமே கேலி செய்வதுண்டு. முரண்பாடான படங்களோ, கருத்தோ என் நட்புக்களில் காணப்பட்டால், என்னை தொடரும் பெண் நண்பர்களுக்கும் பாதிக்குமே என்பதால், அதை சுட்டிக்காட்டி திருத்தமுயல்வேன். இல்லையேல் என் நட்புவட்டத்திலிருந்து நீக்கிவிடுவேன். அப்படியான ஒருவரை என் நட்பாக இணைப்பதும் இல்லை.

ஒரு பெண் நண்பர் தன் ஒளிப்படங்களை பதிவிட்டபோது, வழக்கம்போலவே வேடிக்கையாக...

 “உங்கள் முகம் தெளிவில்லாமல் இருக்கிறது?!”
 “நீங்கள் ஏன் நல்ல போட்டோகிராபரை தேர்ந்தெடுக்க கூடாது?”
 “இதில் அழகாக இருக்கிறீர்கள்!”
 “இந்த போட்டொவில் இருப்பது நீங்களா? அடையாளமே தெரியவில்லை”

இப்படியெல்லாம் பின்னூட்டமிட்டிருந்தேன்... இந்த வாரத்தின் முதல்நாள் அந்த பெண் நண்பர் தன் பக்கத்தில் பதிக்கிறார்...

“சிலர் என் ஒளிப்படத்தில் எனக்குப்பிடிக்காத சிலவற்றை பின்னூட்டமிடுகின்றனர். எது சொன்னாலும் சந்தேகம் அவர்களுக்கு... நான் இறைவனை வணங்குகிறேன்... இனிமேல் அவர்கள் என் ஒளிப்படங்களின் மீது ***** ***** நிறுத்திக்கொள்ள வேண்டும். 

இனிமேல் இப்படி செய்தால் அவர்களை நீக்க எனக்கு எந்த தயக்கமும் இல்லை. என் தனிவாழ்க்கையில் நுழைய இவர்கள் யார்?

**** ***

இப்படி சொன்னதிற்கு மன்னிக்கவும்!”

இதற்கு நான் “இப்படி செய்வது வருந்ததக்க ஒன்று... அவர்களை நீக்கிவிடுங்கள்” என்றேன்..

அதற்கு அவர் “இந்த கூட்டத்தில் நீயும்தான் இருக்கிறாய்... இதை சொல்ல வருத்தமாக இருக்கிறது” என்றார்.

இதை படித்தவுடன், நான் “சரி, இனி இவரிடமிருந்து விலகிக்கொள்ளலாம்” என்று முடிவு செய்து, அந்தப்பக்கம் இனி போகக்கூடாது என்று முடிவெடுத்தேன்...

ஒரு அரைமணிக்குப்பிறகு என் தகவல் பலகைக்கு, அந்த பெண் நண்பரே பேச ஆரம்பித்தார்...

என் மீது குற்றச்சாட்டை அடுக்க ஆரம்பித்தார்.... கடைசியாக... “நட்பாக இருப்பதென்றால் இரு, இல்லையேல் வெளியேறு” என்றார்...

“சரி. இனிமேல், இந்த நொடிமுதல் நான் உங்கள் நண்பரில்லை. வணக்கம்” சொல்லிவிட்டு அவரை எந்தகாரண,கருத்தும் சொல்லாது என் நட்புவட்டத்திலிருந்து நீக்கிவிட்டேன்....

கடைசியாக அவர் சொன்னது இதுதான் - “You are a Sexiest!"


Pen-ink-gift-caricature


Personal Caricature - Free Gift to facebook friends
by Caricaturist Sugumarje

Face-animation-expression


Yep! I did this for facebook expressions...
எத்தனை நாளைக்குத்தான் வெறும் எழுத்துக்களாலே பின்னூட்டம் இடுவது?! பிறருடைய ஓவியங்களை நான் இடுவதிற்கு மாற்றாக நானே என்னுடைய முகத்தையே ஓவியமாக வரைந்து செய்தால் என்ன? என்ற கேள்விக்கு கிடைத்தவிடைதான் இந்த ஓவியங்கள்...

எல்லாமுக உணர்ச்சிகளையும் ஒருங்கே அடுத்தடுத்து பார்த்ததில் அழகான அனிமேசன் உருவானது...

அதை அப்படியே இங்கு பகிர்ந்தும் கொண்டேன்...