இந்த கேள்வியை நான் வரவேற்கிறேன். அப்போதுதானே, உடற்பயிற்சி குறித்த, அதிலும் நீங்கள் குறிப்பிட்ட எளியமுறை உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தை நான் சொல்ல முடியும். நீங்கள், மனவளக்கலை அன்பரா இல்லையா என்பது தெரியவில்லை. மனவளக்கலை அன்பராக இருந்தாலும் கூட, சிலர், உண்மையை அனுபவமாக பெறாமல் இப்படி கேட்கவும் கூடும். எனினும் நீங்கள் யாராக இருந்தாலும், இதற்கான பதிலை தர விரும்புகிறேன்.
கடந்த 2019 கோவிட் தொற்றுநோய் பரவலில் இருந்து உங்களை நீங்கள் காத்துக்கொண்டு இருக்கிறீர்கள் என்பது மகிழ்ச்சி. அதற்கு மருந்து உதவியதா? உங்கள் உடல் சக்தி உதவியதா? என்பதை அறியேன். என்றாலும் நீங்கள் இப்போது இங்கே இருக்கிறீர்கள். அதுதான் சிறப்பு. ஆனாலும், இந்த உண்மையை நீங்கள் உணர்ந்தீர்களா? என்பது தெரியவில்லை. ஏனென்றால் உங்களுக்கு உங்கள் மீதும் அக்கறையில்லை, உங்கள் உடல்மீதும் அக்கறை இல்லை. இதனோடு, மற்றவர்கள் தங்கள் உடல்மேல் வைத்திருக்கும் நம்பிக்கையை, அவமதிக்கிறீர்களே? இது சரிதானா?
கொரானா நோய் தொற்று இருந்த காலத்தில், ஒவ்வொருவரும் எந்த அளவிற்கு தங்கள் உடல் மேலும், தங்கள் மீதும், குழந்தைகள் மீதும், தங்கள் வாழ்க்கையின் மேலும் எந்த அளவுக்கு, அக்கறையாக, முயற்சியாக இருந்தார்கள் என்பதை நீங்கள் பார்க்கவில்லையா?
ஒரு மனிதனுடைய ஆயுட்காலம் சராசரி 60 ஆண்டுகள் என்றாலும், 90 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ வழி உண்டு. இயற்கையின் கொடை என்னவோ 120 ஆண்டுகள். ஏதோ மிகச்சிலரே 100 வயதையும் தாண்டி வாழ்கிறார்கள் எனலாம். வாழ்வதற்காகவே பிறந்த நமக்கு, இந்த உடல் ஒரு கருவி. இந்த உடலின்றி உலகவாழ்க்கை நமக்கில்லை. உடலை உதாசீனம் செய்திடவும் வழியில்லை.
நோய் வரமால் காப்பது சிறப்பு என்றால், வந்த நோயை தீர்ப்பதும் சிறப்பே. ஒவ்வொரு நாளும், நம்மிடம் இருந்து போய்க்கொண்டே இருக்கிறது தவிர, திரும்பி வர வாய்ப்பில்லை. இளமையில் இருந்து முதுமைக்கு நகர்ந்தால், நாம் ஒன்றுமே செய்வதற்கில்லை. ஆனால், முதுமையை தள்ளிப்போடவும், முதுமையிலும் இளமை காக்கவும் வழி உண்டு. பரிதாபமாக, உங்களுக்கு அதெல்லாம் தெரியாது. அதில் உங்களுக்கு அக்கறையும் இல்லை.
இளமை காக்கும் வழிகள், சித்தர்களால், முன்னோர்களால், ஞானிகளால், மகான்களால் நமக்கு வழங்கப்பட்டது. அப்படி கிடைத்த ஒன்றுதான், காயகல்ப யோக பயிற்சியும், எளியமுறை உடற்பயிற்சியும் ஆகும். உடலை பேணி காக்க இன்னொரு ரகசிய காரணமும் உண்டு. இந்த உலகில் இன்பம் மட்டுமே நுகர்ந்து வாழ்வது மட்டுமில்லாமல், நாம் யார்? என்பதை தேடிக் கண்டடையவும் வேண்டும். உடல்பயிற்சிக்கே அக்கறை இல்லாத நீங்கள், இந்த நான் யார்? என்பதற்கு வருவீர்களா? என்றாலும் சொல்லுவதை சொல்லிவைக்கிறேன்.
உங்கள் மீது உங்களுக்கே அக்கறை இல்லை என்றால், வேறு வழி ஏதுமில்லை. அது உங்கள் வழி, உங்கள் முடிவு. எனினும் வாழ்க வளமுடன் என்று வாழ்த்துகிறோம். மேலும் சில உண்மைகள் அறியவேண்டுமென்றால். இந்த காணொளி உதவலாம்.
உடற்பயிற்சி அவசியம் தேவை என்று சொல்லப்படுவது ஏன் தெரியுமா?
வாழ்க வளமுடன்
-