CJ for You: covid19

covid19

Showing posts with label covid19. Show all posts
Showing posts with label covid19. Show all posts

I am suffering from debt. But yoga has nothing to do with money, has nothing to do with it, even if it is opposite, can there be any explanation through you? I am asking this question in anticipation. It doesn't matter if some others make fun of me. Tell me the way to get rid of debt.


வாழ்க வளமுடன் ஐயா. கடன் தொல்லையால் அவதிப்படுகிறேன். ஆனால் யோகத்திற்கும் பணத்திற்கும் தொடர்பில்லை, சம்பந்தமில்லை, எதிர் எதிரானது என்றாலும், உங்கள் வழியாக ஏதேனும் விளக்கம் கிடைக்குமா? என்று எதிர்பார்த்தே இந்த கேள்வியை கேட்கிறேன். வேறு சிலர் என்னை கிண்டல் செய்தாலும் பரவாயில்லை. கடன் தொல்லை தீர வழி சொல்லுங்கள்.

உங்கள் கேள்வியில் எந்த தவறுமே இல்லை. யோகத்திற்கு எதிரானது இந்த உலக இன்ப வாழ்வும், அதுதொடர்பான பணமும், பொருளும் என்ற கருத்தை விட்டு விலகுங்கள். நீங்கள் மட்டுமல்ல, இந்த உலகில் யார் வாழ்ந்தாலும், பணமும், பொருளும் அவசியமானது, தன்னுடைய வாழ்நாள் முழுவதும் என்பதை மறவாதீர்கள்.

ஒரு ஞானியும், மகானும் கூட பணமும் பொருளும் இல்லாமல் வாழமுடியாது. அவர்கள் மக்களை அருள் துறையில் உயர்த்திட பாடுபடுவார்கள். மற்றவர்கள், அதாவது பொருள் துறையில் இருப்பவர்கள், அந்த ஞானிகளை, மகான்களை ஏற்று பார்த்துக்கொள்வார்கள் என்பதுதான் உண்மை.

உதாரணமாக, ஒரு குழந்தை பிறந்து வளரும் காலத்தில், அதற்கு பணம், பொருள் ஈட்ட முடியாது. எனினும் அதன் தேவை இல்லாமல் இருக்கமுடியுமா? அந்த தேவையை, அக்குழந்தையின் பெற்றோரும், சமூகமும் ஏற்கும் அல்லவா? அதுபோலவே, வயதான நம் பெற்றோரை நாம் கவனித்துக் கொள்ள வேண்டியதும் இருக்கிறது. உண்மைதானே?

இந்நிலையில், யோகம் இதற்கெல்லாம் எதிரானது என்று நினைத்துக் கொள்வது, அறியாமை ஆகும். எல்லாவற்றையும் விட்டு விட்டு யோகத்திற்கு வந்து என்ன செய்யப்போகிறீர்கள்? அடுத்த வேளை பசியாற என்ன வழி? யோசித்தீர்களா? அப்படி ‘எல்லாவற்றையும் விட்டுவிட்டு வா’என்று யார் உங்களை அழைத்தார்கள்? எனவே, யோகம், உலகில் வாழ்வுக்கு எதிரானது அல்ல. உண்மையாகவே பொருந்தி, உங்கள் உலக வாழ்வை, அனுபவமாக்கி உயர்த்தக்கூடியதே ஆகும்.

கடன் தொல்லை எல்லோருக்கும் உண்டு. அது அளவில் சிறிதாக, பெரிதாக இருக்கலாம் என்பதுதான் உண்மை. பல்வேறு சூழ்நிலைகளில், திட்டமிடாத பல வேலைகள், செயல்கள் வழியாக இழப்பு நேரிடலாம். இயற்கை சீரழிவு வழியாகவும் நாம் பாதிக்கப்படலாம். கோவிட்19 தொற்று போல இருக்கலாம். எனினும் கடனை தீர்த்திட வழிதேடி பயணிக்க வேண்டும். அது எப்படி என்பதை குருமகான் வேதாத்திரி மகரிஷியே விளக்கமும் தருகிறார்.

உங்களுக்குத் தெரியுமா? வேதாத்திரி மகரிஷி, தான் வாழும் காலத்தில், பெரும் தொழில் அதிபர். பல்வேறு மக்களுக்கு வேலை கொடுத்து, நிர்வாகம் செய்தவர். அவருக்கும் கடன் தொல்லைகள் இருந்தது. அந்த அனுபவத்தை, தன் வாழ்க்கைப்பயணம் எனும் நூலிலும் தருகிறார். அவருக்கு நேர்ந்திட்ட அந்த சூழ்நிலை, நிச்சயமாக நாம் அனுபவிக்கவில்லை என்பதுதான் உண்மையாக இருக்கும் என்று நினைக்கத் தோன்றுகிறது. எனினும் அதை நான் இங்கே விளக்கவில்லை. அதை அவருடைய நூலில், அவருடைய கருத்தாகவே படித்து அறிந்து கொள்ளுங்கள். அப்போதுதான் உங்களுக்கான, தன்னம்பிக்கை கூடும். வேதாத்திரி மகரிஷியின் அனுபவ கருத்தை  இதோ, இந்த காணொளி, உங்களுக்கான விளக்கமாக அளிக்கும்.

உங்களை வருத்தும் கடன் பிரச்சனை தீர வேதாத்திரி மகரிஷி சொன்ன வழிமுறை! How to solve the credit and loan

வாழ்க வளமுடன்.

-

Everyone was talking about going for a walk as if it were a great exercise. Now it's exercise season. Isn't this all extreme?


ஐயா. ஒரு நேரத்தில் வாக்கிங் போவதையே பெரிய உடற்பயிற்சி மாதிரி எல்லோரும் பேசிக் கொண்டிருந்தார்கள். இப்போது உடற்பயிற்சி சீசன். அதிலும் எளியமுறை உடற்பயிற்சி சக்கைபோடு போடுகிறது. இதெல்லாம் ஓவராக இல்லையா?



இந்த கேள்வியை நான் வரவேற்கிறேன். அப்போதுதானே, உடற்பயிற்சி குறித்த, அதிலும் நீங்கள் குறிப்பிட்ட எளியமுறை உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தை நான் சொல்ல முடியும். நீங்கள், மனவளக்கலை அன்பரா இல்லையா என்பது தெரியவில்லை. மனவளக்கலை அன்பராக இருந்தாலும் கூட, சிலர், உண்மையை அனுபவமாக பெறாமல் இப்படி கேட்கவும் கூடும். எனினும் நீங்கள் யாராக இருந்தாலும், இதற்கான பதிலை தர விரும்புகிறேன்.

கடந்த 2019 கோவிட் தொற்றுநோய் பரவலில் இருந்து உங்களை நீங்கள் காத்துக்கொண்டு இருக்கிறீர்கள் என்பது மகிழ்ச்சி. அதற்கு மருந்து உதவியதா? உங்கள் உடல் சக்தி உதவியதா? என்பதை அறியேன். என்றாலும் நீங்கள் இப்போது இங்கே இருக்கிறீர்கள். அதுதான் சிறப்பு. ஆனாலும், இந்த உண்மையை நீங்கள் உணர்ந்தீர்களா? என்பது தெரியவில்லை. ஏனென்றால் உங்களுக்கு உங்கள் மீதும் அக்கறையில்லை, உங்கள் உடல்மீதும் அக்கறை இல்லை. இதனோடு, மற்றவர்கள் தங்கள் உடல்மேல் வைத்திருக்கும் நம்பிக்கையை, அவமதிக்கிறீர்களே? இது சரிதானா?

கொரானா நோய் தொற்று இருந்த காலத்தில், ஒவ்வொருவரும் எந்த அளவிற்கு தங்கள் உடல் மேலும், தங்கள் மீதும், குழந்தைகள் மீதும், தங்கள் வாழ்க்கையின் மேலும் எந்த அளவுக்கு, அக்கறையாக, முயற்சியாக இருந்தார்கள் என்பதை நீங்கள் பார்க்கவில்லையா? 

ஒரு மனிதனுடைய ஆயுட்காலம் சராசரி 60 ஆண்டுகள் என்றாலும், 90 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ வழி உண்டு. இயற்கையின் கொடை என்னவோ 120 ஆண்டுகள். ஏதோ மிகச்சிலரே 100 வயதையும் தாண்டி வாழ்கிறார்கள் எனலாம். வாழ்வதற்காகவே பிறந்த நமக்கு, இந்த உடல் ஒரு கருவி. இந்த உடலின்றி உலகவாழ்க்கை நமக்கில்லை. உடலை உதாசீனம் செய்திடவும் வழியில்லை.

நோய் வரமால் காப்பது சிறப்பு என்றால், வந்த நோயை தீர்ப்பதும் சிறப்பே. ஒவ்வொரு நாளும், நம்மிடம் இருந்து போய்க்கொண்டே இருக்கிறது தவிர, திரும்பி வர வாய்ப்பில்லை. இளமையில் இருந்து முதுமைக்கு நகர்ந்தால், நாம் ஒன்றுமே செய்வதற்கில்லை. ஆனால், முதுமையை தள்ளிப்போடவும், முதுமையிலும் இளமை காக்கவும் வழி உண்டு. பரிதாபமாக, உங்களுக்கு அதெல்லாம் தெரியாது. அதில் உங்களுக்கு அக்கறையும் இல்லை.

இளமை காக்கும் வழிகள், சித்தர்களால், முன்னோர்களால், ஞானிகளால், மகான்களால் நமக்கு வழங்கப்பட்டது. அப்படி கிடைத்த ஒன்றுதான், காயகல்ப யோக பயிற்சியும், எளியமுறை உடற்பயிற்சியும் ஆகும். உடலை பேணி காக்க இன்னொரு ரகசிய காரணமும் உண்டு. இந்த உலகில் இன்பம் மட்டுமே நுகர்ந்து வாழ்வது மட்டுமில்லாமல், நாம் யார்? என்பதை தேடிக் கண்டடையவும் வேண்டும். உடல்பயிற்சிக்கே அக்கறை இல்லாத நீங்கள், இந்த நான் யார்? என்பதற்கு வருவீர்களா? என்றாலும் சொல்லுவதை சொல்லிவைக்கிறேன்.

உங்கள் மீது உங்களுக்கே அக்கறை இல்லை என்றால், வேறு வழி ஏதுமில்லை. அது உங்கள் வழி, உங்கள் முடிவு. எனினும் வாழ்க வளமுடன் என்று வாழ்த்துகிறோம். மேலும் சில உண்மைகள் அறியவேண்டுமென்றால். இந்த காணொளி உதவலாம்.

உடற்பயிற்சி அவசியம் தேவை என்று சொல்லப்படுவது ஏன் தெரியுமா?
வாழ்க வளமுடன்
-

Be Breathe Ease


சுலபமாக சுவாசம் செய்!




காயத்தை அறிந்து கொள்ளாமல்

காதலோடு வலுப் படுத்தாமல்

காசுபணம் புகழ்தேடி அலைந்து

காலத்தை வீணே போக்கிவிட்டு

காற்றுக்கு காத்திருக்கும் காலமேனோ?!


காயம் என்றால் அது உடலை குறிக்கும். காயமே இது பொய்யடா என்று தொடங்கும் சித்தர் பாடல் உங்களுக்கு ஞாபகம் வரக்கூடும். இந்த உடல் இருக்குமட்டுமே நமக்கான வாழ்க்கை இங்கே, இந்த புவியில் அமைகிறது. உடலுக்குள் உயிர் இருக்கும் வரையில் நாமும் இருப்போம் என்பது எல்லோரும் அறிந்த உண்மை.


இந்நிலையில் இந்த உடலை நாம் வாழும் காலம் வரையில், நமக்கு இறப்பு எப்பொழுது என்று நிச்சயமாக தெரியாது எனினும், அதுவரையில் உடலை நன்கு பராமரிக்க வேண்டும். எப்படி நமக்கு விருப்பமான ஒரு பொருளை பாதுக்காக்கிறோமே, அதுபோலவே இந்த உடலை பாதுகாக்க வேண்டும். 

இந்த உடல் இயக்கம் என்பது என்ன? 

எப்படி அதை இயக்கி வலுப்படுத்த வேண்டும்?

உடற்பயிற்சிகள் என்னென்ன?

மூச்சுப்பயிற்சிகள் என்னென்ன?

உடல் அசைவுகள் எப்படி உடலை சுறுசுறுப்பாக்குகின்றன?

என்ற வகையில் பயிற்சிகள் தொடர்ந்து செய்து, உடலை எப்போதும் சுறுசுறுப்பான தன்மையுடன் வைத்துக்கொள்ள வேண்டும். உடல் வலுப்பெற்றால் உயிர், மனம் பாதுகாக்கப்படும். எளிதில் நோய்வாய்ப்படும் தன்மை குறையும். எதிர்ப்புத்திறன் கிடைக்கும்.  மிகச்சரியான தூக்கமும், அதிகாலை விழிப்பும் வசப்படும். என்றென்றும் உற்சாகம் இருக்கும். மன மகிழ்ச்சிக்கு வெளியே தேடி அலையவேண்டிய அவசியமிருக்காது.


அதை விடுத்து, உடல் அக்கறை இல்லாது, மகிழ்ச்சி வேண்டும், அதை அடைய பணம் வேண்டும், பிறரைப்போல பணக்காரர் ஆகவேண்டும். அவரைப்போல வீடு கட்டவேண்டும், அவர்வைத்திருக்கும் கார் போல வாங்கவேண்டும், அவரைப்போல புகழ் பெற வேண்டும் இப்படி, தன்னிலை மறந்து, தன் வாழ்வையும், தன் மனதையும், தன் உடலையும் கெடுத்துக்கொள்கின்றனர். இதனால் மதிப்பு வாய்ந்த வாழ்க்கை வீணாகிறது. உடலை அதன் போக்கில் கட்டமைக்க நமக்கு கிடைத்த நேரங்கள், பணம், புகழ் தேடலில் கழிந்துவிடுகிறது. இதனால் உடல் தன் முழுமையை இழக்கிறது. உடல் பலமின்றி, பல வகையான நோய்தாக்குதலுக்கு ஆளாகிறது. இறப்பும் நேரிடுகிறது.


இந்த கரோனா நோய்தொற்று காலத்தில், நன்றாக சுவாசம் பழகி, நுரையீரலின் எல்லா பகுதிகளையும் இயக்கும் திறன் இல்லாததால், Oxygen என்கிற பிராணவாயு கிடைக்காமல் அவதியுறுகின்றனர். நாம் பிறந்தது முதலே சுவாசம் செய்கிறோம். ஆனால் அது இயற்கையின் ஒத்த இயல்பில், தானாக இயங்குவதால், அது குறித்து நம் வாழ்நாள் முழுக்க நாம் கவனம் கொள்வதில்லை.  முக்கியமாக அதன் இயல்பான சுவாச ஒழுங்கை, நம் தவறான வழக்க பழக்கங்களினால் கெடுத்துவிடுகிறோம் என்பதே உண்மை. 


ஒருபங்கு காற்றை இழுத்து, மூன்று பங்கு காற்றை வெளியேற்ற வேண்டும் என்பது முறை. ஆனால் ஒருபங்கு கலவையான காற்றை இழுத்து, அதில் ஆக்ஸிஜன் (O2) பிரித்தெடுத்து வைத்துக்கொண்டு, கார்பன் - டை- ஆக்ஸைடை  (CO2) வெளியே தள்ளும் முறைதான் சுவாசம் ஆகும். இதில் CO2 அதிகபட்சமாக உள்ளேயே தங்கிவிட்டால், மூச்சுத்திணறல் வந்துவிடும். ஆனால் மிக எளிமையான உடற்பயிற்சிகள் இக்குறையை போக்கி, சரியான சுவாசத்தை வழங்கும் என்பதை மறந்துவிடுகிறோம். காலக்கடைசியில் நமக்காக, ஒரு சுவாச இயந்திரம் செயல்படும் நிலைக்கு கீழிறிங்கி விடுகிறோம். அந்த சுவாச இயந்திரம் இயங்குவதற்கு, ஆக்ஸிஜன் வேண்டும், அதோடு அதற்கு மின்சாரமும் வேண்டும். இன்றோ அந்த ஆக்ஸிஜனுக்கும் தட்டுப்பாடு. இயற்கையாக, சும்மா கிடைக்கும் ஒன்றின் மதிப்பறியாமல், வீணாக்கி விட்டு, உயிரை பலியாக்கும் நிலையில் இருந்து மாறலாமே?!


திருத்தம் நம்மிடம் இருக்கும்பொழுது, கிடைத்த வாய்ப்பை இழக்கலாமா? இந்த உண்மையை, நீங்கள் அறிந்து மாற்றம் கொண்டுவாருங்கள். பிறருக்கும் அறிவுறுத்துங்கள். நோய்தொற்றிலிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள். 


வாழ்க வளமுடன்.


--------

Photo thanks to: bruce mars


Get ready to live now - Part 02


 



முந்தைய பதிவு செல்ல Part 01

வாழ்வதற்கு தயாராகுக - இரண்டு

கடந்த பதிவின் தொடர்ச்சி!


பொய் சூழ்நிலை

பிறக்கும்பொழுதே சில குழந்தைகள், தாயின் ஊட்டசத்து குறைபாடால், தசை நோயால் பாதிக்கப்படுகிறார்கள். இக்குழந்தைகளால் நிற்க முடியாது, ஒரே இடத்தில் உட்காரவும் முடியாது, நாம் தூக்கி வைத்துக்கொள்ளவும் முடியாது. ஏனென்றால் கொஞ்ச நேரத்தில் அவர்களின் தசை இறுகி அல்லது தளர்ந்து மிகப்பெரும் வலியை கொடுக்கும். இப்படியான குழந்தைகளுக்கு இயற்கை முறையில் சில சிகிச்சைகள் வழங்குவதுண்டு. அதில் முக்கியமான ஒன்று, மணலில் பள்ளம் தோண்டி, அக்குழந்தைகளை அதில் நிற்க வைத்து அல்லது உட்காரவைத்து, தலை தவிர்த்து மற்ற உடல் பாகங்களை எல்லாம் மண்ணால் மூடி விடுதல். சிறிது நேரம் கழித்து அவர்களை விடுவித்துவிடலாம். இதில் என்ன நடக்கிறது என்றால், மண்ணில் இருக்கக்கூடிய சில சத்துக்களும், பாக்டீரியாக்கள் எனும் நுண்ணுயிரிகளும் உடலில் கலக்கின்றன. உடலை, சதையை பலப்படுத்துகின்றன. கூடவே எதிர்ப்பு சக்தியை உருவாக்குகின்றன. இந்த நவீன காலத்தில் மண்ணைத்தொட்டுப் பார்த்த குழந்தைகளை, விரல் விட்டு எண்ணி விடலாம். 

எதைத்தொட்டாலும் நோய் வரும் என்று பயந்து பயந்து வளர்த்து, அது கரோனாவால் உண்மையாகிப்போனதுதான் மிச்சம். இயல்பான எதிர்ப்பு உடலில் இல்லாமல் போய்விட்டது.

வருடம் முழுதும் சாராசரி வெப்பமான ஒரு நகரில், எந்நேரமும் சென்டர்லைஸ்ட் ஏர்கண்டிசனிங் வீட்டில், பளிங்கு தரையில், செருப்புக்காலோடு சிலர் வாழ்ந்துவருவதாக கேள்விப்பட்டிருக்கிறேன். என்ன ஒரு இயற்கை முரண்பாடு?! இந்த உடலுகென்று ஒரு வெப்ப நிலை இருக்கிறது. அதை சமநிலையில் வைத்துக்கொள்வதற்கு இந்த உடல்படும் பாடு நமக்குத்தெரியாது. நமக்குத்தான் என்றைக்குமே உள்முக பார்வை இல்லையே. ஏற்கனவே தொழிற்சாலை, வாகன புகைகளால் குழப்பமடைந்த இயற்கை மனிதர்களின் சராசரி வெப்பத்தை தாக்கிக்கொண்டிருக்கிறது. இதிலிருந்து தப்பிப்பதாக நினைத்துக்கொண்டு, தற்காலிக செயற்கை குளிருக்குள் அடங்குகிறார்கள். இது நிச்சயமாக உங்கள் உடலையும், உயிரையும் கெடுக்கும். இயல்பாக இந்த உடல், தனக்கு ஏற்ற சூழ்நிலைக்கு ஏற்றவாறு, தகவமைத்துகொள்வதில் நீங்கள் வாய்ப்பு கொடுக்காமல் தவிர்க்கிறீர்கள். இதனால் உங்கள் உடல் தேவையில்லாது தடுமாறுகிறது. அதுவே எல்லா நோய்க்கும் காரணமாகிறது. 


தீப்பெட்டி வீடுகள்

நமது தமிழ்நாட்டில் இருக்கிற வீடு கட்டிடக்கலை நிபுணர்கள், மேஸ்திரிகள், கொத்தனார்கள் இவர்களை கூட்டி வந்து “எப்படி வீடுகட்டுவது?” என்று யாராவது மறுபடி பாடம் நடத்தினால் நல்லது. ஏனென்றால் இவர்கள் கட்டுகிற எந்த வீட்டிலும், 

1) வெளிக்காற்று உள்ளே வராது. உள்காற்று வெளியே போகாது.

2) வீட்டின் எந்த அறையிலும் வெளிச்சம் வர வாய்ப்பு இருக்காது.

3) அறையின் வெப்பக்காற்று வெளியேற எந்த வழியும் தரப்பட்டிருக்காது.

4) ஓவ்வொரு அறையிலும் மேற்சுவற்றின் வழியாக வெப்பம் இறங்கும்

5) கதவு, ஜன்னல்களில் கண்ணாடி பதிக்கப்பட்டு, அதீத வெளிச்சமும், அதீத வெப்பம் வீட்டிற்குள் வரும்.

6) சமையல் அறையில் புகை, வெப்பம் வெளியேபோக முடியாது. மிளகாய், கடுகு தாளித்தால் வீட்டிலிருக்கிற எல்லோருக்கும் “காரத் தும்மல்” இலவசம்

7) ஜன்னலுக்கு வெளிப்புறம், மழை, வெயில் தடுப்பு வழியாகவும், தண்ணீர் வீட்டிற்குள் வரும், வெயிலும் வரும்.

8) வயிமுட்ட சாப்பிட்டு எழுந்து கை கழுவ நடக்க முடியாது என்பதால், அருகிலேயே கைகழுவும் தொட்டி இருக்கும், அவ்வப்பொழுது அது அடைத்து துர்நாற்றமும் தரும்.

9) குளியலறையும், கழிவறையும், சமயலறைக்கு அருகில் இருக்கும் அல்லது சாப்பாடு பரிமாறும் அறைக்கு அருகில் இருக்கும்.

10) குளியறையில் கை தூக்கி, கை நீட்டி சோப்பு போட முடியாது ஏனென்றால் கை சுவரில் இடிக்கும்

11) கழிப்பறையில் கொஞ்சம் குண்டான ஆட்கள் உள்ளே நுழையவே முடியாது,  நுழைந்தாலும் உடலை திருப்பி வெளியே வர முடியாது.

12) வெஸ்டர்ன் டாய்லெட் செட் தான் இருக்கும். நீங்களாக வயிறை முக்கினால், குடலிறக்க நோய் நிச்சய பரிசு உண்டு. 

13) சரி, கால் மடக்கியாவது உட்காரலாம் என்றால், கீழே விழுமளவுக்கு பாத டைல்ஸ் பதிந்திருக்கும். பிடிக்கவும் ஏதும் வசதியிருக்காது. 

14) ______________________________________ இதில் உங்க வீட்டை சுற்றிப்பார்த்து ஏதேனும் எழுதிக்கொள்ளவும். 

இப்படியான வீட்டில் மனுசன் குடியிருப்பானா? என்று கேட்கிறீர்களா? சரிதான்! இப்படி அரும், பெரும் வசதிகள் வீட்டில் இருந்தால், உடலும், மனமும் எப்படி நன்றாக இருக்கும்?!


நேரமில்லாத நிலை

குனிந்து நிமிரக்கூட நேரமில்லை என்பார்கள் பொதுவாக. நிஜமாகவே இக்காலத்தில் அப்படி ஆகிவிட்டதோ என்று எண்ணிவிடத்தோன்றுகிறது. எல்லோரும் தன்னை, கையடக்க கைபேசிக்குள் புதைத்துக்கொண்டுவிட்டார்கள். இவர்களாக எதுவுமே செய்வதில்லை. யாராவது சிரித்தால் சிரிக்கிறார்கள், யாராவது பாடினால் கேட்கிறார்கள், யாராவது அழுகாச்சி செய்தால் இவர்களும் அழுகிறார்கள், யாராது சண்டை போட்டால் குத்துடா, வெட்டுடா என்கிறார்கள். யாராவது உடற்பயிற்சி செய்தால் பார்த்து மகிழ்கிறார்கள். இப்படியாக எல்லாமே யாரோ அல்லது யாராவது செய்துகொண்டிருந்தால் இவர்களுக்கு போதுமானது. தானாக எதுவுமே செய்யமாட்டார்கள். உடற்பயிற்சி செய்வதா? அதற்கெல்லாம் நேரமில்லையே என்பதுதான் இவர்களின் பதில். 

கூட்டமாக இருக்காதீர்கள், தும்மும்போதும் இருமும்போதும் கைகளால் மறைத்து கொள்ளுங்கள் அல்லது துணி வைத்துக்கொள்ளுங்கள். எதையும் தேவையில்லாது தொடாதீர்கள், கைகளை 20 நொடி நன்றாக சோப்பு போட்டு கழுவுங்கள். மூக்கு, வாய், கண் அடிக்கடி தொடாதீர்கள். எங்கே சென்றாலும் முககவசம் அணியுங்கள், ஒரு அடி தள்ளி நின்றே பேசுங்கள். இப்படியெல்லாம் சொன்னால், யாருக்கோ சொல்வதாக நினைத்துக்கொண்டு, இந்த வழிமுறைகளை கடைபிடிப்பதே இல்லை, அதில் அக்கறை கொள்வதும் இல்லை. இப்படியான துயர் சூழலில் பழகிக்கொள்வதும் இல்லை

இப்படியானவர்களைக் கண்டால் கரோனாவுக்கு குஷி ஏற்படாதா என்ன? 


தீர்வை நோக்கி

காலம் இன்னும் கடந்துவிடவில்லை. இன்று ஆரம்பித்தாலும்கூட நாளடைவில் உங்களை, உங்கள் உடலை பலப்படுத்திவிடலாம். உங்கள் தவறுகளிலிருந்து பாடம் படித்தது போதும். இனி அத்தவறுகளிலிருந்து விலகுங்கள். உங்களை, உங்கள் கவனத்தை திசை திருப்பும் எல்லாவற்றிலிருந்தும் வெளியே வாருங்கள். அடிப்படை தேவைகள் என்ன? எந்தெந்த வகையில் நான் என்னை திருத்திக்கொள்ள வேண்டும், திருத்திக்கொள்ள முடியும் என்பதை வகைப்படுத்துங்கள். காலம் நகர்ந்துகொண்டே இருக்கும். ஒரு நொடி கூட உங்களால் தக்கவைக்க முடியாது. 

நீங்கள் இன்னும் வாழ வேண்டும் என்றால், தப்பிக்க நினைக்காதீர்கள், உங்களை திருத்தப்பாருங்கள். உடலை வளப்படுத்தாமல் ஒருபோதும் உங்களால் வாழ முடியாது என்பதை புரிந்துகொள்ளுங்கள். அடிக்கடி சொல்வது போல, இயற்கையின் உன்னத பரிசு இந்த உடல், அதை பாழாக்காதீர்கள்.

அல்லது உங்களுக்குள்ளாக நான் வாழ்ந்து முடித்துவிட்டேன், இனி வாழ்வில் ஒன்றுமில்லை என்ற நிறைவிலாவது திருப்தி கொள்ளுங்கள். உங்கள் மீத வாழ்க்கையை கரோனாவுக்கு கொடுத்து விடுங்கள் என்று சொன்னால் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா? 

அந்நிலை வேண்டவே வேண்டும். இன்றே தீர்வை நோக்கி நகர்க, 

வாழ்க வளமுடன். 


-----------------

Image Thanks to: Brooke Cagle and shutterstock

Get ready to live now - Part 01


 


வாழ்வதற்கு தயாராகுக

இது கரோனா நோய்தொற்றின் இரண்டாம் அலைக்காலம். தற்பொழுது ஜெர்மனி நாட்டில், மூன்றாவது அலைக்காலமும் வந்துவிட்டதாக தகவல். எல்லோருக்கும் கொஞ்சமாவது அடிவயிற்றில் பயம் இருக்கும் என்பது உண்மையே. ஏனென்றால், நம்மை பெற்றவர்களை. உடன் பிறந்தோரை, குடும்ப உறுப்பினர்களை, நம் நண்பர்களை, நமக்கு தெரிந்தவர்களை இழந்திருக்கிறோம் தானே! அதுமட்டுமல்லாது, சமூகத்தில் மிகப்பெரும் பெயர்பெற்ற நபர்களும் இந்த கரோனா நோய்க்கிருமியால் தாக்கப்பட்டும் அல்லது எதிர்பாராத, நிரூபிக்கபடாத பக்க விளைவுகளாலும் தங்கள் உயிரை பறிகொடுத்துவிட்டார்கள். 

 

கரோனா நோய்தொற்றின் எதிர்காலம்!

இந்த கரோனா நோய்தொற்றின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு, மருத்துவ அறிவியல் வல்லுனர்கள் பதில் சொல்லும்போது,

“கரோனா இன்னும் பரவும், மக்களிடையே இருக்கும் ஆனால் காலப்போக்கில் பலமிழந்துவிடும்” என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்கள். 

குரைக்கிர நாய் கடிக்காது என்பது எனக்கு தெரியும், அது அந்த நாய்க்கு தெரியுமா? என்பதுபோலவே “இது கரோனாவுக்கு” தெரியுமா என்ற கேள்வி எழுகிறது. 


தற்காப்பு இழந்த உடல்

உலக ஒரே சந்தை பொருளாதாரம் எல்லா நாடுகளிலும் திறந்துவிடப்பட்டு, சராசரி அல்லது கடைக்கோடி மக்களும் ஏற்று தன் எல்லா வழக்க பழக்கங்களையும், வாழ்க்கை முறைகளையும் மாற்றி வைத்துவிட்டது. கிட்டதட்ட ஒரு 50 வருடம் என்று உதாரணமாக எடுத்துக்கொண்டால் கூட, மெட்ரோ நகரங்களில் கிடைக்கும் உணவுப்பொருட்கள், நகரத்தில் கிடைப்பதில்லை. நகரத்தில் கிடைப்பது ஊர்களில் கிடைப்பதில்லை, ஊரில் கிடைப்பது கிராம சிற்றூரில் கிடைப்பதில்லை.

ஆனால் இக்காலத்தில் எங்கோ வெளிநாட்டில் கிடைக்கும் “குப்பை” உணவுப்பொருள், கிராம சிற்றூரில் கிடைக்கிறது. அதை குழந்தைகள் விரும்பி சாப்பிடுகிறார்கள். குப்பையை உலகமக்களெல்லாம் விரும்பு சாப்பிடுவதில் என்ன பெருமை இருக்கமுடியும்?

இப்படியாக, நானும் கெட்டேன், நீயும் கெட்டாய் என்று எல்லோருமே உடலின் குறிப்பிட்ட தற்காப்பு சக்தியையும், உடல் உறுப்புக்களின் நல்ல செயல்பாடுகளையும் கெடுத்துக்கொண்டோம் என்பது பொய்யில்லை. திடகாத்திரமான உடல் என்பது நூலிலும், அகராதியிலும் மட்டுமே குறிப்பிடப்பட்டிருக்கும் காலமாகவிட்டது. உணவே மருந்து, மருந்தே உணவு என்பது கேலியாகி விட்டது. அதுபோலவே இதைசொல்லியும் வியாபாரமாக்கும் “வியாபாரிகளும்” பெருகிவிட்டனர். 


அருகிவிட்ட சமைத்தல்

பசிக்கிறதா? சாப்பாட்டை கைபேசி வழியாக ஆர்டர் செய்க என்று என்று எல்லோரும் மாறிவிட்டனர். ஏன்? என்று கேட்டால், சமைக்க நேரமில்லை? ஏன் நேரமில்லை? வேறு நிறைய வேலையிருக்கிறது? அப்படி என்ன நிறைய வேலையிருக்கிறது? இதற்கு நீங்கள் தான் பதில் தரவேண்டும்.

ஒரு வீட்டில் சமையல் செய்துதான் ஆகவேண்டும் என்ற கட்டாயமில்லைதான். ஆனால் உங்கள் உடலுக்கு ஏற்ற உணவை, உங்களுக்கு பிடித்த உணவாக, நீங்களே அரிசி, காய் கறிகளை தொட்டு, சுத்தம் செய்து கழுவி, நறுக்கி, போதுமான வெப்பத்தில் சமைத்து, ருசிக்கு கூடுதாலக ஏதேனும் சேர்த்து, இறக்கி, குடும்ப உறுப்பினர்களோடு பகிர்ந்து, கையால் சாப்பிட்டால், அது உங்களுக்கும், உங்கள் உடலுக்கும், உடல் உறுப்புகளுக்கும் பலன் அளிக்குமே.

ஒரு உணவை உங்கள் கைகளால் பிசைந்து சாப்பிடும் பொழுது, உங்களின் சக்தி அவ்வுணவுக்கு சென்று, உணவைக்கூட திருத்தி அமைக்கும் என்ற உண்மை உங்களுக்கு தெரியுமா? அதுபோலவே, நீங்களே உணவை சமைத்தால் எப்படியான பலன் கிடைக்கும் என்று சிந்திக்கமுடிகிறதா?

இங்கே சமைப்பதில் ஆண், பெண் இருபாலருமே இணைந்து கொள்வதுதான் நல்லது. முடிந்தால் இதில் குழந்தைகளைக்கூட கொஞ்சம் பழக்கிக்கொடுக்கலாம் என்பது என் தீர்வு.

உணவால், சரியானபடி உடலை வளர்க்காமல், பாதுகாப்பு அளிக்காமல், வேறு எப்படித்தான் வாழப்போகிறீர்கள்?

பல்லாண்டுகாலமாக, தமிழர்கள் வாழ்வியலில் “உணவு” வியாபாரமாக்கபடவே இல்லை என்பது தான் உண்மை. ஆனால் இன்றோ, இயற்கையின் கொடையான, தண்ணீரும் விலையாகிப் போனது. காற்றும் விலையாகிக் கொண்டிருக்கிறது ஆனால் இன்னும் பரவலாக்கப்படவில்லை. பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் நகரத்தில் வேலையில்லை, உள்ளே வந்துவிட்டால் உணவு, நீர் வாங்குவதற்கு அவைகளிடம் பணமில்லை. பணமில்லா மனிதனுக்கும் உணவு, நீர், காற்று பணமின்றி கிடைக்காது என்றால், யோசித்துப்பார்க்கையில் பயமாக இருக்கிறது. 


இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில்!

அடுத்த பதிவு செல்ல Part 02

--------------

Image Thanks to: Brooke Cagle and shutterstock

Corona Prevention Game


 கரோனாக்கு எதிரான தடுப்பாட்டம்



தடுப்பாட்டம்

அன்பர்களே, கரோனா நோய் தொற்றுக்கு எதிராக நாம் தடுப்பாட்டம் ஆடிக் கொண்டிருக்கிறோம். இதில் தனக்கு தெரியாமலேயே சிக்கி, தன்னையே இரையாக கொடுத்தவர்கள் நமக்கு பாடம் புகட்டிக் கொண்டிருக்கிறார்கள். நாம் அவர்களை இழந்து தவித்தபடியும், தற்காப்பு செய்துகொண்டும் இரண்டாவது அலையில் சிக்கியுள்ளோம். 

கரோனா இயற்கையின் முரண் என்று சொல்லுவதற்கில்லை. ஏனென்றால் எப்போதோ நாம் இந்த இயற்கையை பழித்ததின் விளைவாக வெகுண்ட இயற்கை, இப்படி நோய் தொற்றாக எழுவதுண்டு. நோயும் ஒருவகையில் நமக்கு நன்மை பயப்பதுதான், எப்படியெனில், குப்பையிலும், மண்ணிலும் விளையாடும் குழந்தை ஒருவித நோய் எதிர்ப்பாற்றலையும் வளர்த்துக் கொள்கிறது. இந்த கரோனா நோய்தொற்று அப்படியானதுதான், ஆனால் அதை தாங்கி, திருப்பித்தாக்கும் வலிமையை நாம் இழந்துவிட்டோமோ என்று கருதவேண்டியுள்ளது. 


அன்றும் ஆடினோம்

கொஞ்சம் பின்னோக்கி பார்த்தால், இன்று நாம் உயிரோடு இருப்பது நிஜம் என்றால், இந்த மனித உயிரினம் தோன்றி, இத்தனை ஆண்டுக் காலமாக எந்தவித நோய்க்கும், நோய்தொற்றுக்கும் ஆளாகாமல், தப்பித்து தொடர் தொடராக, தாய் தந்தை வழியாக பிறந்து வந்திருக்கிறோம் என்பது உண்மைதானே?! பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளால் நாம் தடுப்பாட்டம் ஆடித்தான் உயிர் பிழைத்திருக்கிறோம். எனவே கவலைப்படாதீர்கள். கரோனா தொற்றுக்கு எதிராகவும் சரியான தடுப்பாட்டம் ஆடுவோம் என்பது உறுதி. நம்பிக்கை இழக்காதீர். அதேநேரத்தில் அசட்டு தைரியம் கொள்ளாதீர்.



இறப்பும் பிறப்பும்

வேதாத்திரி மகரிசி சொல்லுவார், “இந்த உலகத்தில் பிறந்த அனைவருக்கும், இரண்டு கடவுட்சீட்டு தரப்பட்டுள்ளது. ஒன்றில் நம் வந்த தேதி குறிப்பிடப்பட்டுள்ளது. இன்னொன்றில் தேதி குறிப்பிடப்படவில்லை. அந்த திரும்பும்சீட்டை யாருமே நீக்க முடியவில்லை, இந்த தேதிதான் என்று நாம் குறிப்பிடவும் முடியாது. பயணத்தை ரத்து செய்யவும் முடியாது”

உண்மைதானே?! நாம் பிறந்தபோதே, இறப்பு நிச்சயம் என்று தெரியாது போனாலும், நாம் வாழும் காலத்தில், நம்மை சுற்றி நிகழும் இறப்பின் வாயிலாக, இறப்பு நிச்சயம் உண்டு என்பதை நாம் அறிந்து கொள்கிறோம். மிக நெருக்கமானவர் இறந்தாலும், காலப்போக்கில் அதை, அந்த இழப்பை இயல்பாக்கிக்கொண்டு சராசரி வாழ்வுக்கும் வந்துவிடுகிறோம். அவர் இறந்துவிட்டாரே, நான் ஏன் வாழவேண்டும் என்று நாமும் உயிரை மாய்த்துக் கொள்வதில்லை. (சில ஜோடிகள் விதிவிலக்கு)

இறப்பு வரும்போது வரட்டுமே, என்று மனதை தேற்றிகொண்டு “மரண பயமின்றி” வாழ்க்கை கடன்களை செய்துவருவோம். அதுபோலவே கரோனாவும் பிறரின் உயிரைபறித்தாலும் நமக்கு பயமில்லை என்று சொல்லிக்கொண்டு வாழ்ந்துவருகிறோம்.


கரோனாவின் அறிவு மற்றும் வலிமை

கரோனா தனக்கென்று அறிவு கொண்டுள்ளது. எந்த பொருளுக்குமே உள்ளடக்கமாக அறிவு என்பது உண்டு. அது கல் ஆகட்டும், கல்கண்டு ஆகட்டும், ஆப்பிள் ஆகட்டும், ஆரஞ்சு ஆகட்டும் அறிவு உண்டுதான். கரோனாவிலிருக்கும் அறிவு தன்னை, ஓவ்வொரு சூழலிலும் தன்னை மேம்படுத்துகிறது என்பதை நுண்கிருமி ஆய்வாளார்களும், மருத்துவர்களும் சொல்லுகிறார்கள். குறிப்பாக நுரையீரல் சுவாசம் தொடர்பான மருத்துவர்கள் மிக விளக்கமாக கரோனாவின் செயல்பாடுகளை சொல்லுகிறார்கள்.

தற்போது வந்திருக்கும் இரண்டாம் அலை கரோனா, மறைந்திருந்து தாக்குகிறது என்று “எதிரி ராணுவத்தினரை” சொல்லி விளக்குவது போல விளக்குகிறார்கள். எந்த தடயமும் இல்லாமல் அல்லது தடயத்தை மாற்றி மாற்றி தன்னை பரப்பிக்கொள்கிறது என்கிறார்கள்.


தடுப்பாட்டம் பலன் தருமா?

இந்திய அரசின் கோவாக்சின், கோவிட்ஷீல்ட் இரண்டும் போதுமான அளவில் தாக்குதலை தடுக்கும் ஆற்றலை மேம்படுத்தி தருகிறது என்கிறார்கள். முற்றிலும் கரோனாவை தடுக்கும் தடுப்பு மருந்துகள் இன்னும் ஆராய்ச்சியில்தான் உள்ளது. காலத்தாலும், ஆராய்ச்சியாளர்களின் முயற்சியாலும் சீக்கிரம் உலக மக்களுக்கு கிடைக்கவேண்டும். அதை நாம் இந்த இயற்கையிடமே வேண்டுவோம்.

இதற்கிடையில், நாம் ஒருவகையில் இந்த இயற்கையிடம் தோற்றுக் கொண்டிருக்கிறோம் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். மனிதனும் இயற்கையின் பிரதிதான். ஆனால் மனிதனுக்காக இயற்கை படைக்கப்பட்டது எனும் “தன்முனைப்பு” மிக அதிகமாகிவிட்டது. எந்தவகையிலாவது இயற்கையை கெடுத்துக்கொண்டே இருப்பது என்பது மனிதனுக்கு வழக்கமாகிவிட்டது. 


இயற்கைக்கு முன் நாம் ஒன்றுமே இல்லை. மனிதனுக்காக (?!) இயற்கை பணியும் என்பது அர்த்தமில்லாதது. தன்னை முன்னிறுத்தி தன்னையே இல்லாதது ஆக்கிவிடும் பெரும் சக்தி அதனிடம் உண்டு. கொஞ்சமாவது இயற்கையின் முன் நான் அற்பம் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டியது அவசியம்.



முன்னெச்சரிக்கை

எப்படியாயினும், எங்கே சென்றாலும், யாரோடு சென்றாலும் முக கவசம் அணிந்து பழகுங்கள். மூக்கையும், வாயையும் மூடவேண்டுமே தவிர, உங்கள் தாடையை மூடவேண்டிய அவசியம் இல்லை என்பதை தெரிந்துகொள்ளுங்கள். எதிரிலிருப்பவர் நண்பராக இருந்தாலும், காதலராக இருந்தாலும் முகமுடி தேவையில்லாது பழகுங்கள் ஆனால் முக கவசம் மறக்காதீர்கள்.

கண்ட இடங்களில் கைவைத்து, கைபிடித்து நடக்காதீர்கள், தேவையற்ற பொருட்களை தொடாதீர்கள். கடையில் பொருட்கள், காய்கறிகள், அசைவ வகைகள் நேரடியாக கை பட்டால் உடனே, அவ்வப்பொழுது 20 நொடி “கை கழுவும்” நீரால் கழுவிக்கொள்ளுங்கள். கையோடு அந்த பாட்டிலையும் எடுத்துச்செல்வது நல்லதே.

தேவையற்ற பயணம், பொழுதுபோக்கு, ஆட்டம், ஆர்ப்பாட்டம் தவிர்த்து விடுங்கள். உங்களுக்கும் பிறருக்குமான இடைவெளி மூன்று அடிதூரம் வைத்துக்கொள்ளலாம். குறைந்தபட்சமாக ஒரு அடியாவது தள்ளி நில்லுங்கள்.

வெளியே சென்றுவிட்டு, வீட்டிற்குள் வந்தவுடன் கை கால்களை மீண்டும் அதே 20 நொடி கழுவிக்கொள்ளுங்கள். பிறகு ஆடைகளை தனி அறையில் வைத்துவிட்டு, புதிய ஆடைகள் உடுத்திக்கொண்ட பிறகே யாரோடு அருகிலும் செல்லுங்கள். குறிப்பாக வளர்ப்பு பிராணிகளிடமும் இந்த பாதுகாப்பு பிறகே கொஞ்சுங்கள். 

கவனம், கவனம், கவனம்!


உடலும் இயற்கையே

எப்போதும், தூங்கும் நேரம் தவிர இந்த உடலுக்கும், மனதிற்கும், புலன்களுக்கும் வேலை அளித்துக்கொண்டே இருப்பது மிகக் கொடுமையானது. சுழற்றிய சக்கரம் தானாக நின்றாலும் கூட ஒடு, ஓடு என்று உதைத்து தள்ளிக்கொண்டே இருந்தால் எப்படி? 99% மக்களின் வாழ்க்கையில் இப்படித்தான் இருக்கிறது. “அது யார்யா அந்த 1% சதவீகிதம்?” என்று கேட்டால் அதை பிறகு சொல்லுகிறேன். 

இந்த உடலும் நீங்களும் தனித்தனிதான் என்பதை இனிமேலாவது புரிந்துகொள்வீர்களா? இந்த உடலை எவ்வளவு கவனமாக, உங்கள் காதலரைவிடவும் மேலாக, வாழ்க்கை துணைவரை விடவும் மேலாகவும், உங்கள் செல்லத்தை விடவும் மேலாகவும் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம் என்பதை எப்போது உணர்வீர்கள்?

யார் சொன்னதையும் கேட்பதில்லை, சொல்வதில் அர்த்தமிருக்கிறதா என்றும் சிந்திப்பதில்லை. பொறுப்பற்ற வகையில் “வதந்தி” பரப்புவர்களும் உண்டுதான் என்றாலும், கிடைக்கும் தகவலின் உண்மை உங்களுக்கு தெரியாதா என்ன? அக்காலம் முதல், உணவே மருந்து என்பது உள்ளது. 


மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது

அற்றது போற்றி உணின். (குறள் 942) 


மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்

வளிமுதலா எண்ணிய மூன்று.  (குறள் 941)


அறியாதவர்களா நீங்கள்? நாம்தான் தாத்தா பாட்டியை எல்லாம் ஓரம்கட்டி வைத்து விட்டோமே? மேற்குலக வெள்ளை ஆராய்ச்சி அறிஞர்கள் சொன்னால்தானே எல்லாம் நம்புவோம்?! அப்படித்தானே?!

உணவு முறை, உணவுப்பொருட்கள், உணவு பழக்க வழக்கம் மாற்றத்தொடங்குக. உடலை பழக்கினால், எந்த நோய்த்தொற்றுக்கும் நீங்கள் தடுப்பாட்டம் ஆடவேண்டாம். உங்களுக்காக உங்கள் உடலே ஆடிக்கொள்ளும்.


சுவாசம் சுருங்கிட்டது?!

இந்த பொருளாதார உலகில் நீங்கள் மற்றவர்களைபார்த்து, பெருமூச்சு விட்டு விட்டே பழகிக்கொண்டீர்கள். அந்த பெருமூச்சை மட்டும் எப்படியோ கற்றுக்கொண்டீர்கள். ஆனால் எப்படி மூச்சு விடுவது? சுவாசிப்பது என்பதை மறந்தே விட்டீர்கள். அதனால்தான் கரோனா நோய்தொற்று காலத்தில், உங்களுக்குப்பதிலாக, இரு இயந்திரக்கருவிகள் சுவாசிக்கின்றன. இந்தக்கொடுமை உங்களுக்கு தேவைதானா?

உள்ளே இழுத்த மூச்சு ஒன்று என்றால் வெளியிடும் மூச்சு மூன்று என்ற அளவில் இருந்தால்தான் அது மிகச்சரியான சுவாசம்.  நுரையீரல் மட்டும் சுவாசம் என்பதில்லை, உதரவிதானம் என்ற வயிற்றின் மேல்பகுதி, ஏறி இறங்கி, காற்றை உள்ளிழுத்து வெளியே தள்ள வேண்டும். 

கை தூக்குக எத்தனை பேர் இப்படியான சுவாசம் செய்கிறீர்கள் என்று!

எல்லா குறைகளையும் நாம் செய்துகொண்டு இயற்கையை பழிப்பதில் ஏதும் அர்த்தமில்லை.


வந்தவேலை என்ன?

இந்த உலகில் பிறந்த நமக்கு வந்த வேலை என்ன என்று தெரியுமா? உங்கள் தாத்தாவைப்போல, அப்பாவைப்போல இருமடங்கு சொத்து சேர்ப்பதா? அல்லது ஏழையாக பிறந்த நீங்கள் கோடீஸ்வரனாக மிளிர்வதா? இல்லவே இல்லை. வாழ்க்கைக்கு பொருள் தேடல் மிகமிக அவசியமே. தேவை என்ற அளவில் நின்றால் போதுமானது. பொருள் தேடலில் வாழ்க்கை வீணடித்தால், எப்போது இன்பமாக வாழ்வீர்கள்?

உங்கள் கண்களால், அடுத்தவரின் வாழ்க்கையை பார்த்து அளவீடு செய்யாதிருங்கள். உங்கள் அடிப்படை தேவை போதுமானதா என்று சிந்தனை செய்யுங்கள். அடுத்தபடியாக உங்கள் வாழ்வை கொண்டாடி வாழ பழகுங்கள். 

நமக்கு வந்த வேலை இரண்டு. 1) தன்னை அறிதல் 2) இன்புற்று வாழ்தல் 

இந்த இரண்டையும் நாம் விட்டுவிட்டோம். ஆனால் இன்புற்று வாழ்வதற்காகத்தான் நான் உழைத்துக்கொண்டே இருக்கிறேன் என்று பதில் தருவார்கள் என்பதே உண்மை.


எப்படி இறப்பது?

வேதாத்திரி மகரிசி “உங்களை அறியாமல் உங்கள் உயிர் போகக்கூடாது என்பது சித்தர்களின் வாக்கு” என்று சொல்லுகிறார். அதாவது, எப்படி நீங்கள் தூங்கப்போகிறேன் என்று சொல்லிவிட்டு, படுக்கையில் தன்னை மறந்து தூங்குகிறீர்களோ அப்படித்தான் நீங்கள் இறக்கவும் வேண்டும்.


உங்களால் முடியுமா?

அதற்கு என்ன வழி? 

சிந்தனை செய்க! வாழ்க வளமுடன்!! 


 -----------------


Photo thanks to: Fusion Medical Animation & News Cn




Corona Effect at Madurai


 மதுரையில் கரோனா பாதிப்பு

West tower gateway - image source to age Fotostock

கடந்த செவ்வாய்கிழமை, குடும்ப நிகழ்ச்சி காரணமாக மதுரை (Madurai City, Tamilandu, India) நகரில் இருந்தேன். என் சகோதரியின் மகனோடு, சில பொருட்கள் வாங்குவதற்காக, மதுரை நகரின் மையப்பகுதிக்கு செல்லவேண்டியதாக இருந்தது. கிட்டதட்ட மதுரை சொக்கநாதர், மீனாட்சி அம்மன் கோவிலின் மேற்கு கோபுர வாசலின் அருகே. (Sokkanathar, Meenakshi Amman Temple, South Tower Gateway)

பெருகிப்போன வாகனங்களின் நடுவே, நாங்களும் இருசக்கர வாகனத்தில் நீந்தி, தங்க ரீகல் திரையரங்கு (Regal Cinema Theater) எதிரே இருக்கும், டவுன்ஹால் (TownHall Road) சாலையில் நுழைந்து, மக்களின் நெருக்கடி காரணமாக, அங்கே இருந்த நடைபாதை நிறுத்தத்தில் வாகனத்தை நிறுத்தி வைத்துவிட்டு, பாதையில் உள்நோக்கி நடந்தோம்.

மதுரை முன்னைவிடவும் மிக நெரிசலில் சிக்கித்தவிப்பதை அறியமுடிகிறது. இதோடு, ஸ்மார்ட் சிட்டி (Smart City Project) எனும் திட்டத்தில், மதுரை சிக்கி சின்னாபின்னமாகி இருக்கிறது. மாமிசம் வெட்டித்தரும் இடத்திலிருக்கும், அடிமரத்தின் மேல்பகுதி போல நல்ல அடி வாங்கியிருக்கிறது நகரின் எல்லா சாலைகளும். எனக்குத்தெரிந்து மதுரை மக்கள் பொறுமைசாலிகள், சீண்டாமல் தன்னை வெளிக்காட்டமாட்டார்கள். ஆனால், இப்படி குண்டும் குழியும் பல தசம ஆண்டுகளாக இருந்தும், ஏன் இப்படி அமைதியாக இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. மாநகராட்சி (City Corporation) நிர்வாகமும் குழப்பமடைந்திருக்கிறதோ என்னவோ?

மதுரை நகரம் முழுதும், பனி படர்ந்து தவழ்ந்துவந்து நம் கண்ணை மறைப்பதுபோலவே எங்கும் மணல், தூசி படலம் பறந்துகொண்டே இருக்கிறது. ஒருநாள் முழுதும் மதுரை நகரை சுற்றிவந்தால் “மோட்சம்” நிச்சயம்.

வீட்டிலிருந்து கிளம்பும்பொழுதே, 

“எனக்கும் தலைக்கவசம் (Helmet) வேண்டுமா? கேட்பார்களா?”

“இல்லை, ஆனா மாஸ்க் (corona mask) நிச்சயம் வேண்டும், ஃபைன் (Fine) கேட்பார்கள்”

ஏற்கனவே என்னிடமிருந்த மாஸ்க், வியர்வையில் நனைந்து, நசிந்து போனதால், இந்தமுறை 20 ரூபாய் மாஸ்க் இரண்டு வாங்கி, ஒன்றை அணிந்துகொண்டேன். இந்த மாஸ்க், நம்மை மூச்சுமூட்டவைக்கிறது உண்மைதான். ஆனால் இன்னமும், கரோனா தொற்று புரியாத மனிதர்கள் 1) ஒருஅடிக்குள்ளும் நெருங்கி பேசுவதும் 2) கைமூடாமல், மறைக்காமல் தும்முவதும் 3) பேச்சினிடையே இருமுவதும் நடக்கிறது. இவர்களுக்காகவே, நாம் மாஸ்க் அணிவது முக்கியமாகிறது.

உங்கள் கவனத்திற்காக


உங்கள் கவனத்திற்காக


ஆனால் மிகச்சிலரே, இங்கே மாஸ்க் அணிந்திருப்பதை காணமுடிந்தது. பிறரைப்பற்றி நமக்கென்ன? நான் அணிந்திருக்கிறேன் நல்லதே என்றெண்ணி கடந்தோம்.

பள்ளம், மேடு, சமதளம், வெளியே பாய்ந்து நிற்கும் இரும்பு கம்பிகள், செங்கல், சிமெண்ட் தடுப்பு, தற்காலிக மரப்பாலம், இரும்பு வலைப்பாலம் இவற்றில் எல்லாம் கவனம் வைத்து நடந்து, அங்கங்கே இருந்த தடுப்பு வளையங்களையும் கடந்து, மேற்கு கோபுரவாசல் வந்துவிட்டோம். அந்த வீதியின் முனையில் இருந்த தடுப்பு வளையத்தின் அருகே, ஒரு காவல் துணை ஆய்வாளர் (Sub-Inspecter) தன் இருசக்கரவாகனத்தில் உட்கார்ந்திருந்தார், ஒரு காவலர் (Police) கையில் நோட்டும், பேனாவோடும், விறைப்பாக நின்றிருந்தார். இருவருமே மாஸ்க் அணிந்திருந்தனர்.

நான் இவர்களை பார்த்துக்கொண்டேதான் அந்த வீதியில் நுழைந்தேன். உண்மையிலேயே இப்படியான காவலர்களின் பாடுதான் மிகுந்த அவஸ்தை. மழையும், வெயிலும், வேலையின் கடுமையும், சமூகத்தின் அக்கறையும் கூட இவர்களை சினம் கொள்ளவைக்கும். அமைதியான காவலரை, பணி ஓய்வு பெற்ற நிலையிலும் காண் இயலாது என்பதுதான் உண்மை. நம் ஆறுதல் வார்த்தைகள் கூட இவர்களின் மன நிலையை வெறி ஏற்றும்.

கால் இடறும்படி, கொத்திப்போட்ட வீதியின் உள்ளே உள்ள, கடைகளில் பொருட்களை வாங்கிவிட்டு நடந்துவருகையில், நான் மாஸ்கை கழற்றி ஒரு கையில் பிடித்துக்கொண்டு, கைத்துணியால் முகத்தை துடைத்துக்கொண்டு, மீண்டும் மாஸ்க் அணிய தாயாரானேன், அதற்குள் நாங்கள் உள் நுழைந்த, காவலர்கள் நின்றிருந்த தடுப்பு வளையம் வந்துவிட்டது. 

“இங்கவாங்க, 200 ரூபாய் ஃபைன் கட்டுங்க”

என்ற குரல் கேட்டு நிமிர்ந்தேன். அடப்பாவிகளா? அதுகுள்ளேயுமா? என்று மனதில் நினைத்தபடி அருகில் சென்றேன். ஒரு நோட்டில், ஓவ்வொரு நிலைக்கும் இந்த இந்த தண்டனை தொகை என்று அச்சிடப்பட்டிருந்தது. என் சகோதரியின் மகன் திகைத்து நின்றான். என்னையும் பார்த்தான். அதில் “நான் அப்பவே சொன்னேன்ல” என்ற அர்த்தம் இருந்தது. 

“இங்கே பாருங்க, எனக்கு அடிக்கடி வியர்க்கும். அதுனாலே அப்பப்போ துடைத்துக்கொள்வேன். கையிலேதான் கழற்றிய மாஸ்க் வைத்திருக்கிறேன். மறுபடி அணிந்துகொள்வதற்குள் இப்படி கேட்டா என்ன செய்வது?” என்றேன். இருபக்கமும் கொஞ்சம் அமைதி நிலவியது.

“சிட்டி எப்படி மோசமான நிலையிலிருக்கு?! கவனமா இருங்க” என்று சொல்லிவிட்டு என்னமோ முணங்கிக்கொண்டார் அந்த காவலர்.

“சரி, இனி கவனமாக இருக்கிறேன். நன்றி” சொல்லிவிட்டு, அங்கேயே மாஸ்க் சரியாக அணிந்திருக்கிறேனா என்பதை கவனித்துவிட்டு நகர்ந்தேன்.

செவ்வாய் கிரக (Mars Planet) ஆளுமைக்கும், செவ்வாய் கிழமைக்கும் (Friday) எனக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்று என் நண்பர் சொல்லுவார். ரொம்ப உதார் விடாதீங்க, மாட்டிக்குவீங்க என்று பயமுறுத்தியிருக்கிறார். அதனாலே “அடக்கி வாசிப்பது” பழக்கம். இதை என் இன்னொரு நண்பரிடம் சொன்னபொழுது, அடக்கி வாசிச்சா எப்படி கிதார் (Guitar) பழக முடியும் என்று கிண்டலடித்தார். நான் கிதார் வைத்திருக்கிறேன். கொஞ்சம் கிதார் வாசிப்பேன்.

குறிப்பாக என்னை நிறுத்தியது எப்படி என்பது எனக்கு புரியவில்லை. அந்த காவலர்களை கடந்து, எங்கும் தலைதிருப்பி பார்த்ததில், கொஞ்சமும் பயமின்றி, மாஸ்க் இல்லாத பல முகங்களை காணமுடிந்தது. நல்லவேலையாக அவர்களிடம் தண்டனைத் தொகை இல்லைபோலும். ஆனாலும் இது எனக்கொரு பாடமே. மனதிற்கு அக் காவலரை வாழ்த்திக்கொண்டே வீடு நோக்கி நகர்ந்தேன். 

“நல்லவேளையே தப்பிச்சீங்க” என்றான் என சகோதரியின் மகன்.

Learn - not only at this corona time


 

பழகு

--------


எப்போதும் 

இரண்டு வாய்ப்புக்கள்

கிடைத்துத்தான் இருக்கிறது.

நாம் தேர்ந்தெடுப்பதோ,

எப்போதும் ஒன்று.

கரோனாவுக்கும் அப்படியே!

ஒன்று இருக்கப்பழகு,

உன்னையும், பிறரையும் மதித்து.

அல்லது இறக்கப்பழகு.

உன்னையும், பிறரையும் அவமதித்து.


Learn

--------


Always 

Two Opportunities

We've got it.

We choose,

Always one.

So for Corona!

One is to be learn and live,

By respect yourself and others.

or to be learn to die.

By insulting you and others.