CJ for You: thai tamil month

thai tamil month

Showing posts with label thai tamil month. Show all posts
Showing posts with label thai tamil month. Show all posts

Pongal is the festival of Tamils. There are some who call it the New Year. What's so special about it? Has Vethathiri Maharshi said anything? Explain


வாழ்க வளமுடன் ஐயா. பொங்கல் என்பது தமிழர்களின் பண்டிகை. இதையே புத்தாண்டு என்று சொல்வோரும் உண்டு. இதில் என்ன சிறப்பு? வேதாத்திரி மகரிஷி ஏதேனும் சொல்லி இருக்கிறாரா? விளக்கம் தருக.

பொங்கல் தமிழர்களின் பாரம்பரியமான பண்டு ஈகை என்பதில் ஐயம் ஏதுமில்லை. மகிழ்ச்சி நம்மோடு பொங்கிட வேண்டும் என்ற கருத்தில், இயற்கையையும், சூரியனையும், நிலத்தையும், அதற்கு துணையாக இருக்கும் காளை மாடுகளையும் மதிப்பு செய்து, வணங்கி மகிழ்ந்து, சக்கரைப்பொங்கல் படையலிட்டு வழிபடும் நாள் இதுவே. மேலும், தங்களைடைய சந்தோசங்களையும், தன்னிடமிருக்கும் பொருளையும், பிறருக்கு தந்து மகிழ்ந்து, அவர்கள் தருவதை பெற்று மகிழும் பண்டு ஈகை என்ற பண்டிகையாகவும் இருக்கிறது. அதுவே இன்னமும் தொடர்கிறது. எனினும் தற்போது சிற்சில மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன.

காரணம், அன்றைய காலம் போல, விவசாயம், விளைபொருட்கள் விளைவிக்கும் தொழில், வேலை என்பதில் இருந்து மனிதர்களாகிய நாம் விலகிவந்து, வெவ்வேறு தொழில்களில் வளர்ந்து விட்டோம். மேலும் அதில் புதிய தொழில் நுட்பங்களையும் கொண்டுவந்து, இயந்திரங்களே அதை செய்திடும் அளவிற்கு மாற்றமும் செய்துவிட்டோம். நாம் அந்த நுட்பங்களை கவனிக்கும், முறைப்படுத்தும், ஒழுங்குபடுத்தும் வேலைகளை மட்டும் செய்து வருகிறோம். அதனால், பாரம்பரியம் என்பது கொஞ்சம் கொஞ்சமாக விட்டுப்போகிறது. இதற்கு மாற்றுவழி ஏதுமில்லை. இவ்வுலக நடைமுறையில் பயணிப்பதுதான் நமக்கும் நல்லது. எதிர் திசையில் பயணிப்பது, நம்மை மட்டுப்படுத்திவிடும் அல்லவா?

பொங்கள் திருநாளை, தை முதல் நாளாக சொல்லுவதில், பல்வேறு மாற்றுக்கருத்துக்கள் இருக்கும் நிலையில், நாம் ஒன்றும் சொல்லுவதற்கில்லை. இதைக்குறித்து குரு மகான் வேதாத்திரி மகரிஷியும் எதும் சொன்னதில்லை. எனினும், மெய்ப்பொருள் உண்மையை, இந்த பொங்கல் திருநாளில், வாழ்த்தாக ஒரு கவிதை வழியாக சொல்லி இருக்கிறார். அதில் இருக்கும் உண்மையை, இந்த காணொளி பதிவு வழியாக அறியலாம். இதோ அதற்கான இணைப்பு.

வேதாத்திரி மகரிஷி பொங்கல் வாழ்த்து மதிவிருந்து கவிதை - Pongal Greeting Poems by Vethathiri Maharishi

வாழ்க வளமுடன்.

-