CJ for You: கவிதை

கவிதை

Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Move now


ஆ, ரம்பம்...

யாரோ ஒருவர் நம்மை கவனித்துகொண்டே இருப்பதுபோலான எண்ணத்தின் அடிப்படையில் இங்கே சுயவிளக்கம் தரவேண்டிதாகிறது... இது ஏளத்திற்குரியதுதான்...

எழுதுவதை நிறுத்தியதற்கு காரணம் கிடைத்தது போலவே எழுத ஆரம்பிக்கவும் காரணங்கள் கிடைக்கிறது. கடந்த பத்து மாதங்களுக்குப்பிறகு அதே தளத்தில் வேறாக நிற்கிறேன்... அதனால் என் எழுத்துக்களில் ஓவியப்பின்ணணி கலந்திருக்கும் என்று நம்பலாம். என் ஓவிய வேலைகளின் அனுபவம் சார்ந்த நிகழ்ச்சிகளை தருவேன்... முன்சொன்னதுபோலவே எழுத்துக்கள் மூலமாக கொஞ்சம் என்னை நிறுத்திச்செல்லும் நிகழ்வாக ஆரம்பித்திருக்கிறேன்.

இதுமுடிவாக
நினைத்த மறுகணம்
வேறென்றின் நுனி
பற்றியிருந்திருக்கிறேன்...
பின்னது மறந்து
கடந்துசெல்ல
ஏதேனும் ஒன்றின் ஆரம்பம்
ஓவியனுக்கு மட்டுமல்ல
எல்லோருக்கும்
தேவையாகவே இருக்கிறது...
சுவாசித்தல் அற்றுப்போகும்வரை.