CJ for You: sugumarje

sugumarje

Showing posts with label sugumarje. Show all posts
Showing posts with label sugumarje. Show all posts

Oh God, don't you have any mercy? Part 01


 இறைவா, உனக்கு இரக்கமே இல்லையா?!

கடவுளே இல்லை என்ற மாற்றுக்கருத்து கொண்டவர்கள், இந்த கட்டுரையையும், எழுதுபவனையும் கூட புறம் தள்ளி விடலாம். அவர்களுக்கு இந்த விளக்கம் அவசியமற்றது. ஒரு வார்த்தைக்காக, ‘இறைவனே’ என்று எழுதினால் கூட, ஆண்பாலாக சொல்லுகிறாய், இதை எதற்கு நான் படிக்கவேண்டும் என்று தூர தள்ளும் ‘அதி மேதாவிகளுக்கும்’ இக்கட்டுரை தேவையில்லை.  அப்படியானால் யார் படிக்கலாம்? இறை என்பது என்ன? என்ற தேடுதலும், அதன் உண்மை அறிய விருப்பம் உள்ளவர்களும், யோகத்தில் தங்களை இணைத்துக்கொண்டவர்களும் வருக, நீங்கள் தொடரலாம்.

உங்கள் வாழ்க்கையில் எப்போதாவது இந்த வார்த்தையை சொல்லி இருக்கிறீர்களா? இல்லவே இல்லை என்று மறுத்தால், உங்கள் மனசாட்சி உங்களை உறுத்தகூடும். எனவே பிறர் அறியாமல், ஏற்றுக்கொள்வதில் தவறொன்றும் இல்லை. ஏன்? இப்படியான வார்த்தையை, இறையை நோக்கி, வானத்தை நோக்கி, ‘என்மேல் இரக்கமே இல்லையா?’ என்று கேட்க ஆரம்பிக்கிறோம்? கவனிக்கலாமா?

காலம் காலமாக, வழிவழியாக இறை என்ற தெய்வீக தன்மையை, நாம் அறிந்திருக்கிறோம். அறிந்து என்பதை விட தெரிந்து வைத்திருக்கிறோம் என்று சொல்லலாம். நம்முடைய தாய் தந்தை வழியாக, தாத்தா பாட்டி வழியாக நிச்சயமாக வந்துவிடும். ஆனால், தமிழ்நாட்டில், ஒவ்வொரு குடும்பத்திலும் கிட்டதட்ட மூன்று தலைமுறைகளுக்கும் மேலாக, இந்த இறை நம்பிக்கை அவசியமற்று போய்விட்டது. அதனால் ஏற்படுகின்ற, ஏற்பட்டுக்கொண்டு இருக்கின்ற மாற்றத்தையும் நாம் அனுபவித்துக் கொண்டுதான் வருகிறோம்.

ஒரு குடும்பத்தின் பரம்பரை உறுப்பினர்கள் வழியாக, பக்தியும், வழிபாடும், அதில் ஒழுங்கும், ஒழுக்கமும் குழந்தை பருவத்தில் இருந்தே கிடைக்கிறது. பக்தி தேவையா? என்று கேட்டால், வேதாத்திரி மகரிஷி ‘அவசியம்’ என்றுதான் சொல்லுகிறார். காரணம், குழந்தையை அதன் இயற்கை தன்மையோடு பொருந்தி வளர்வதற்கும், சமூகத்தின் நன்மைக்கும், உயர்வுக்குமான வழக்க பழக்கங்களை பெற்று, தனக்கும் பிறருக்கும் துன்பம் விளைவிக்காத விழிப்புணர்விக்கும் ‘பக்தி’ அவசியமே என்று சொல்லுகிறார். ஆனால், அங்கே இன்னொரு தொடர் விளக்கத்தை தருவதை மறந்துவிடக்கூடாது.

எதுவரை பக்தி அவசியம்? இறை என்பது என்ன? என்ற கேள்வி எழும்வரை அவசியமானது. இந்த இறை என்பது என்ன என்று தேடவேண்டுமானால், யோகத்திற்கு வந்துவிட வேண்டும். ஆனால், நம்முடைய வாழ்நாள் முழுவதும் நமக்கு பழக்க தோசத்தில், பக்தியே போதுமானதாக இருந்துவிடுகிறது. யோகத்திற்கு வருவதற்கு நிறைய முட்டுக்கடைகள், தடைகள், தடுமாற்றம், யோசனைகள் உண்டாகிவிடுகிறது. எளியமுறை குண்டலினி யோகம் இருப்பதையும் மறந்துவிடுகிறோம். ஆனால் வேதாத்திரியர்கள் அப்படியல்ல. தானாக யோகத்தில் ஆர்வம் கொண்டு பயணிப்போரும் அப்படியல்ல.

என்றாலும் கூட, பக்தி என்ற பழக்கதோசம் முற்றிலுமாக நம்மை விட்டு நீங்கிவிடவில்லை என்பது தான் உண்மை. என்னய்யா, இப்படி சொல்லுகிறாயே? என்று நீங்கள் கேட்கலாம். மறுக்கலாம். ஆனால் உண்மையாகவே சொல்லுகிறேன். இன்னும் பக்தியின் மயக்கம் நமக்கு, நம்மை விட்டு நீங்கிவிடவில்லை. இதில் ஆரம்பகால வேதாத்திரி மகரிஷியும் சிக்கித்தான் இருந்தார். ஆனால், பல ஆண்டுகள் ஆராய்ச்சியின் வழியாக, அந்த மயக்கத்தில் இருந்து விடுபட்டு, உண்மை தெளிந்தார் என்பதை ‘ஞானக்களஞ்சியம்’ கவிதைகள் வழியாக நாம் தெரிந்துகொள்ள முடியும்.

‘சரிய்யா, இப்போ அதுல என்ன பிரச்சனை? அதைச்சொல்லு’ என்கிறீர்களா? எழுகின்ற பிரச்சனைக்கே நாம் தான் காரணம் என்கிறேன் நான். ஆனால் நாம் அதை நம்பத் தயாராகாமல், இறை மேல் பழியைப் போட்டு. ‘ஏன்னையா இப்படி என்னை சோதிக்கிறாய்? உனக்கு இரக்கமே இல்லையா?!’ என்று இங்கேதான் ஆரம்பிக்கிறோம். சரியா? உண்மைதானே?

‘ஏன்னையா இப்படி என்னை சோதிக்கிறாய்? உனக்கு இரக்கமே இல்லையா?!’

என்று நம்மிடமிருந்து ஒரு கதறல், புலம்பல், வேதனை வந்தால் என்ன அர்த்தம்? அதில் இருக்கும் உண்மை என்ன? விளக்கம் என்ன? என்று அறியலாமா? அடுத்த பதிவில் அறியலாமே!



French Beard and Spiritual Journey by Sugumarje


குறுந்தாடியும் ஆன்மீக பயணமும் - ஒரு அலசல்


Sugumarje - Image Created by AI based on prompt

        இந்த குறுந்தாடிக்கு பின்னால், நான் தான் இருக்கிறேன் எனினும், அதற்கென்று தனிக்கதை ஏதுமில்லை. இராயிரத்து மூன்றுவரை மீசை மட்டுமே பிரதானமாக (மூக்கின் கீழே) இருந்துவந்தது. பொதுவாகவே வாரத்தில் ஆறுநாள் தாடியும், மறுநாள் அதை (சுய) வழித்தலும் தொடர்ந்தது. எப்போதாவது மீசை ஓரம் ஒதுங்கிப்போக, முழுமையான வழித்தலும் நிகழ்ந்ததுண்டு. இராயிரத்து ஐந்துகளில் சிலமாதங்கள், மீசையும் இல்லாத நிலை நீடித்தது. எனினும், வாழ்க்கை தந்த அடியில், பாடம் நிறைய படித்ததால், அந்த அனுபவத்திற்குப் பின், மாற்றம் தேடி, இராயிரத்து ஏழில், சென்னையில் ஒருமாதம் தங்கி இருந்து சில வேலைகள் செய்யவேண்டி அமைந்தது. 

வேலைப்பளுவில், வழித்தலுக்கு நேரமும், ஆர்வமும் இன்றி தாடி, மீசையோடு ஆள் மாறி இருந்தேன். அப்போதுதான் இந்த குறுந்தாடி வைக்கலாமா? என்ற சிந்தனையும் வந்தது. அந்த குறுந்தாடிக்குறிய சில குணாதசியங்களையும் நான் வளர்த்துக்கொண்டிருந்தேன். அதனால் நம்பிக்கையும் வந்தது. உடனடியாகவே அது செயல்வடிவமும் பெற்று, என் அடையாளமாக மாறிக்கொண்டது.

விமர்சனங்களை கடந்த மனநிலையும், பக்குவம்பெற்ற அனுபவ நிலையும், நிறைத்துக்கொண்ட தகுதியும், ஒழுங்கும், நடவடிக்கைகளும் எனக்கு உறுதியை தந்தது. கேரிகேச்சர் ஓவியர் சுகுமார்ஜெ என்பதற்கான அடையாளமாகவும் மாறிவிட்டது.  இந்த வடிவ அமைப்பை, சுய வழித்தலில் கொண்டுவருதல் கடினம் என்றுதான் பலரும் சொல்லிக்கொண்டனர். சொல்லுகின்றனர். ஆனால் எனக்கொன்றும் சிரமம் இருக்கவில்லை. ஒரே அளவில் நிறுத்துக் கொள்ளுதல் என்ற நிலை, இராயிரத்து பதினெட்டுகளில் மாறிவிட்டது. காரணம், அந்த காலத்தில், வேதாத்திரி மகரிஷியின் மனவளக்கலை வழியாக, ஆராய்ச்சிகளில் ஈடுபட்டிருந்தேன். அந்த நெடும் பயணம், பல்வேறு பிரச்சனைகளை விளைவித்தது. 

வாழும் பொழுதே இறத்தல் என்பது போல, இருக்கும் சுமையெல்லாம் கழித்தல் (கர்ம வினை) அவ்வளவு சுலபமா என்ன? இன்றுவரை வாழ்வியலில் சில கடினம் தொடர்கிறது. என் நண்பர்களிடம் சொல்லிக்கொள்வதுண்டு. 'by Spiritually I am a winner and loser in Matirialistic' எனினும், ஒவ்வொரு நாளையும், இறையாற்றல் எனக்கு கொடுக்கும் கொடையாக, நிறைவாக, புரிந்து கடந்து போகிற மனபக்குவம் எனக்கு கிடைத்துவிட்டதால், இயல்பாக ஒவ்வொரு நாளையும் அதன் போக்கிலே விட்டுவிடுகிறேன். படகில் பயணிக்கிறேன். படகின் துடுப்பை நான் இயக்குவதில்லை. இலக்கின்றியும் நான் பயணிக்கவில்லை என்பதையும் தெளிவு செய்கிறேன். என் இலக்கு நிறைவுற்றது. நீண்ட நேரம் குளத்தில் குளித்தபிறகு, சும்மா மிதக்கலாமே என்று தோன்றுமல்லவா? அது தான் இங்கே நிகழ்ந்துகொண்டிருக்கிறது.

இதை என் அனுபவமாக கொண்டாலும், அதுகுறித்து விளக்கிட எனக்கு ஆர்வமில்லை. அதை எத்தனையோ குருமார்கள் சொல்லிவிட்டார்கள். என்னுடைய ‘Vethathiriya Sky Lead' என்ற Youtube-லும் கூட மூன்று மாதங்களாக ஏதும் பதிவிடவில்லை. போதும் என்றாகிவிட்டது. ஆனாலும் சில பதிவுகள் அன்பர்களுக்காக இனிமேல் வரும். இத்தகைய அனுபவங்களுக்குப் பிறகு, மறுபடியும் சில மாற்றங்கள் குறுந்தாடியில் நிகழ்கிறது. தேடல் முடிந்துவிட்டாலும், வாழ்க்கை தொடர்கிறது அல்லவா? அந்த வாழ்விற்காக. இதன் காரணமாகவே, இங்கேயும் தொடர்கிறேன்.

உலகில் பிறந்துவாழும் நாம் ஒவ்வொருவருக்கும், அந்த தேடலும், கடமையும் இருக்கிறது. ஆனால், நாம் நம்மை அதில் ஈடுபடுத்துவதற்கு பதிலாக, இறையாற்றலை செயல்படு, செய்துகொடு, வரமாக கொடு, வழிநடத்து, துணை இரு, சாட்சியாக இரு என்று கேட்டுக்கொண்டிருக்கிறோம். உங்களுக்கு யோகம், ஆன்மீகம், பொருளாதாரம், வாழ்க்கை, உறவுகள், பிறவிக்கடமை, கர்ம வினை, இறை, தெய்வம், கடவுள், இயற்கை, கோள்கள், பிரபஞ்சம், விஞ்ஞானம், மெய்ஞானம் குறித்த சந்தேகங்கள் இருந்தால் என்னோடு உரையாடலாம். 

#vethathiriya #vethathiriyaskylead #sugumarje #caricaturist #caricatureartist #youtube #facebook #instagram #vethathiri #maharishi #manavalakalai #skyyoga 


Not speak is silence, isn't it? What's the big deal about that? And is it possible not to speak in this world? Some men, saints and gurus are silent. Is that really silence too? Explain


வாழ்க வளமுடன் ஐயா, வாய்பேசாமல் இருந்தாலே மௌனம் தானே? அதில் என்ன பெரிய விசயம் இருக்கிறது? மேலும் இந்த உலகில் பேசாமல் இருக்கமுடியுமா? சில மனிதர்கள், சாமியார்கள், ஞானிகள் பேசாமல் இருக்கிறார்களே? அதும் மௌனமா? விளக்கம் தருக.

உங்கள் ஆர்வத்தை வரவேற்கிறேன். மௌனம் இறைவனின் மொழி என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? இந்த பிரபஞ்சம் முழுவதுமே அப்படியான மௌனம் நிரம்பி இருக்கிறது. நமக்குள்ளும் அப்படியான மௌனம் இருந்தது. இருக்கிறது. ஆம், நாம் தாயின் கருவறையில் இருக்கும் பொழுது அப்படித்தான் இருந்தோம். பிறந்த பிறகுதான் அந்த மௌனத்தை கலைத்தோம். இன்றுவரை, இப்போது வரை அந்த மௌனத்தை கடைபிடிக்கவில்லை என்றும் சொல்லலாம் தானே?

மௌனம் யோகத்தில் மிக சிறப்பானது. எனினும் வாய்மூடி பேசாமல் இருப்பதற்கும், மௌனமாக இருப்பதற்கும் மிகப்பெரிய வித்தியாசம் உண்டு. இந்த வித்தியாசத்தை தொலைத்துவிட்டுத்தான், பெரும்பாலோர் மௌனம் இருக்கிறேன் என்று சொல்லிக் கொள்கின்றனர். 

        யாராவது எதாவது கேட்பார்கள், நாம் எதையாவது சொல்லி மாட்டிக் கொள்வோம் என்பதற்காகவே, மற்றவர்களோடு பேசுவதை தவிர்த்து, மௌன நாடகம் நடிப்பவர்களும் இந்த உலகில் உண்டு. அப்படி தோற்றம் தருகின்ற பல்லாயிரக்கணக்கான குருமார்கள், ஞானிகள், சாமியார்கள் என்ற ‘அடைமொழிக்குள்’ அவர்கள் இருக்கிறார்கள். நீங்கள் எளிதில் அவரை அடையாளம் கண்டு, அவரிடம் இருந்து ஒதுங்கி விலகி, ஏமாறாமல் உங்களை காத்துக்கொள்ளலாம்.

சிக்கல் என்ன என்றால், யார் வாய்மூடி இருக்கிறார்கள், மௌனமாக இருக்கிறார்கள் என்று உடனடியாக அறிந்துகொள்ள முடியாது. ஆனால், சிறிது நேரம், அவரின் அருகே இருந்து கவனித்தால், அவர் உண்மையாகவே மௌனத்தில் இருக்கிறாரா? வாய்மூடி இருக்கிறாரா? என்பதை அறிந்துவிடலாம்.

எப்படி? இதற்கான விளக்கத்தை இந்த காணொளி வழியாக தெரிந்து கொள்ளலாம். மேலும், உங்கள் கேள்விக்கான உண்மையும் இந்த காணொளியில் கிடைக்கும்.

நாம் பேசாமல் இருந்தால் இறைவன் பேசுகிறானா? மௌனம் உண்மைவிளக்கம் அறிவோமா?#silence #divine

வாழ்க வளமுடன்

In what way does Vethathiriyam support life? So what's so special about it? Isn't it a collection of spiritual truths that have already been told by many? How can it be right to call it Vethathiriyam? Are you deceiving people?


வேதாத்திரியம் எந்த வகையில் வாழ்க்கைக்கு துணை நிற்கிறது? அப்படியென்ன அதில் சிறப்பு இருக்கிறது? ஏற்கனவே பலரும் சொன்ன ஆன்மீக உண்மைகளின் தொகுப்புத்தானே? அதை வேதாத்திரியம் என்று சொல்லிக் கொள்வது எப்படி சரியாகும்? மக்களை ஏமாற்றுகிறீர்களா?


இந்த கேள்வியை வரவேற்கிறேன். வேதாத்திரியம் குறித்து சராசரி பதிவாக சொல்லுவதற்கு மாறாக, இப்படியான கேள்விக்கு பதில் தரும்பொழுதுதான், சிறப்பான உண்மையை எல்லோரும் புரிந்து கொள்ள முடியும். வேதாத்திரியம் என்பது, வேதாத்திரி மகரிஷி அவர்கள், மெய்ப்பொருள் உண்மையை உணர்ந்தறிந்த, தன்னுடைய முப்பத்தைந்து வயது முதல், தொன்னூற்றி ஆறு வயது வரை, உலக மக்களை, ஆன்மீகத்தில் உயர்வடையச் செய்து, இன்பம், பேரின்பம், அமைதி என்ற வகையில் வாழ்வதற்கு வழிவகை செய்தவர் ஆவார். இன்னமும் அவருடைய சேவை, என்னைப்போன்ற ஆசிரியர்களால் தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது.

நீங்கள் சொல்லுவதுபோல, ஆன்மீக உண்மைகள் பல, இந்த உலகில் இருக்கின்றன. ஆனால் அவை எல்லாம் சிதறிப்போய், உண்மை பலவாறாக திரிந்து போய்விட்டது. காரணம் எடுத்துச் சொல்லுபவர்கள், படித்திருக்கிறார்களே தவிர, உணர்ந்தறிந்தவர்கள் இல்லை. அப்படி இருந்தாலும் அவர்கள், மிகக் குறைவே. இதனால், யார் யாரோ, ஆன்மீகத்தின் வழியாக, உண்மை சொல்கிறேன் என்று, ஒப்பித்து, மக்களை, குறிப்பாக உங்களை ஏமாற்றிவிட்டார்கள்.  இந்த கேள்வி கேட்கும் நீங்களே ஏன் இந்த சேவையை, மக்களுக்குத் தரக்கூடாது? உங்களுக்குத்தான், பலரும் சொன்ன ஆன்மீகத்தின் தொகுப்புக்கள் குறித்த விபரங்கள் தெரிந்திருக்கிறதே? அந்த தகுதி போதுமே? அதைவிட்டுவிட்டு, வேதாத்திரியத்தை குறை சொல்வானேன்?

பக்தி, ஆன்மீகம், விஞ்ஞானம் என்று திசைக்கொன்றாக, பிரிந்துபோய், உண்மையறியாமல், வாழ்க்கைச்சூழலில் சிக்கித்தவித்த மக்களுக்கு, விளக்கம் அளித்திடவே, தான் அறிந்த மெய்ப்பொருள் உண்மையை விளக்கிட, உலக சமுதாய சேவா சங்கம் என்பதை துவங்கி, தன்னுடைய பயிற்சிகளை, முப்பத்தைந்து வயதிலேயே தொடங்கிவிட்டார். கவனிக்கவும், மெய்பொருள் உண்மையை நன்கு விளங்கிக் கொண்ட பிறகுதான். ஏதோ படித்தோம், பகிர்வோம் என்றில்லை.

தன்னுடைய அனுபவ விளக்கத்தை, மிகத்தெளிவாக வேதாத்திரி மகரிஷி பதிவு செய்கிறார். பக்தி கடந்த உண்மையே ஞானம் என்று வலியுறுத்துகிறார். எனினும் பருவத்திற்கு முன்பு வரை, பக்தி அவசியம் என்றும் சொல்லுகிறார். பருவம் வந்த அனைவருமே, பிரம்மஞானம் என்ற மெய்ப்பொருள் தத்துவம் அறிந்து கொள்ள பயிற்சி வடிவமைத்தார். சித்தர்களின் வெட்டவெளி தத்துவத்தை, வற்றாயிருப்பு, பேராற்றல், பேரறறிவு, காலம் என்ற வளம் கொண்டதாக தெரிவிக்கிறார். காந்த தத்துவத்தையும், பிரபஞ்ச பரிணாமத்தையும், உயிரின பரிணாமத்தையும், உங்கள் விஞ்ஞானத்தின் துணை கொண்டும் விளக்குகிறார். நான் யார்? என்ற கேள்விகான விடையை அறியத்தருகிறார். உண்மையை அறிய திணறும் விஞ்ஞானத்திற்கு, வழியும் காட்டுகிறார். அவ்வுண்மைகளை, உலக விஞ்ஞானிகள் கூட்டத்திலும் பகிர்ந்திருக்கிறார்.

நீங்கள் உங்கள் அறிவில், எல்லாம் ஏற்கனவே இருப்பதுதானே? இருந்தது தானே? என்று நினைத்தால் அது உங்களின் அறியாமை. எனினும், வேதாத்திரியத்தில் இணைந்து, இதையெல்லாம் தெரிந்து கொள்ளுங்கள் என்று நான் அழைக்கமாட்டேன். அது உங்கள் விருப்பம். உங்களின் உரிமை. ஆனால், விளக்கத்தை உங்களுக்குச் சொல்லவேண்டியது என்னுடைய கடமை. இங்கே ஒரு அன்பரின் வாழ்க்கை அனுபவ குறிப்பு காணொளி பதிவு, மற்றொரு புரிதலை உங்களுக்குத் தரலாம். 

உறவுகளோடு இனிய வாழ்க்கைக்கு வேதாத்திரியம் - pleasant life with relatives by Vethathiriyam

வாழ்க வளமுடன்.

-

AKASH TECHNOLOGIES AND CULTURAL EDUTATION presents SEREVIYO


AKASH TECHNOLOGIES AND CULTURAL EDUTATION

ஆகாஷ் தொழிநுட்பம் மற்றும் கலாச்சார கல்வி

வணக்கம் அன்பர்களே,

கடந்த அக்டோபர் மாத்தில், ஆகாஷ் தொழிநுட்பம் மற்றும் கலாச்சார கல்வி (AKASH TECHNOLOGIES AND CULTURAL EDUTATION) என்ற பெயரில் தனிப்பட்ட ஒரு சேவை நிறுவனம் அமைத்தாகி விட்டது! 

இதன்வழியாக, ஒரு குறிப்பிட்ட வரையறை எல்லைக்குள்ளாகவும், வளையத்திற்குள்ளாகவும் செயல்பட்டாகவேண்டிய கட்டாயத்திலிருந்து விடுதலை கிடைத்துவிடுகிறது. ஏனென்றால், ஒருவரை பின்பற்றி நடந்தால் (அதாவது குரு மகான் வேதாத்திரி மகரிஷியை), நாம் பெற்ற வேதாத்திரிய கருத்துக்களைக்கூட சொல்ல முடியவில்லை. இது அவருடையதா, உன்னுடையதா? என்று சந்தேகிக்கின்றனர். அதை பல பின்னூட்டங்கள் வழியாக நான் அறிவேன். இதனோடு எப்படி, நாம் பெற்ற நம்முடைய அனுபவங்களை சொல்லமுடியும்? 

மேலும் அப்படியான ஒருவரை, பின்பற்றி அவர் வழி நடக்க மாபெரும் சங்கமும் இருக்கிறது, மக்களும் இருக்கின்றனர். சிலவேளை, நாம் பகிர்கின்ற ஒரு சில பதிவுகளை, கருத்துக்களை ‘எங்களுடையது’என்று காப்புரிமை கோருகிறார்கள். என்னுடைய வேதாத்திரிய யோகா காணொளி பதிவிலும் அப்படி ஒரு பிரச்சனை எழுந்து, அதை ஏற்று, அழிக்கவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டேன். ஏனென்றால், YouTube அதை என்னிடம் சொல்லி, நீக்குமாறு எச்சரிக்கையாக சொல்லிவிட்டது. அதை நாம் மீறினால் குற்றம் என்றாகிவிடும். பிறகு நம்முடைய காணொளி சேவையும் நீக்கப்படும்.

இதுகுறித்து எனக்கு கவலையில்லை. என்றாலும், இதை நாம் எளிமையாக கடந்து நகர்வோம். ஏனென்றால், நமக்கு அந்த ஒருவரும், அவர் தந்த உண்மை விளக்கமும், அதன் வழியாக நாம் பெற்ற உண்மையும், அனுபவமும் நமக்கு கிடைத்திருக்கிறது. அதுபோதும்!

அதனால்தான், இந்த வட்டத்தை விட்டு வெளியே வரவேண்டும், அது அவசியமானதாக இருக்கிறது என்ற சிந்தனை எனக்குள் எழுந்தது. அந்த அடிப்படையில்தான், ஆகாஷ் தொழிநுட்பம் மற்றும் கலாச்சார கல்வி என்ற் அமைப்பின் வழியாக, சேரெவியோ எனும் அறம், யோகம் வழியாக தன்னையறிதல் (Sereviyo : Self-Realization with Virtue and Yoga) என்ற சேவை தொடங்கப்பட்டது. 

இதனுடைய நோக்கம், ஏற்கனவே தீட்சை எடுத்துக்கொண்ட அன்பர்களுக்கு ஊக்கமளித்து, அவர்களை உயர்த்திட துணை செய்வதும், தீட்சை பெறாதோர்க்கும், சராசரி அன்பர்களுக்கும், வாழ்வில் துன்புற்று வருந்தி, கலங்குவோருக்கும் உதவிடும் வகையில், பதிவுகள் அமைந்திருக்கும்.

பதிவுகளை கேட்டுக்கொண்டே எல்லோரும் தவம் இயற்றிடவும் இங்கே வழிகள் சொல்லித்தரப்படும். அது உங்களையும், உங்கள் மனதை புரிந்துகொள்ள உறுதுணையாக இருக்கும். தொடர்ந்து இங்கே பயணம் செய்வது மட்டுமே உங்களை, தன்னையறிதலை நோக்கி நகர்த்தும் என்பது உண்மை.

முக்கியமாக, இங்கே உங்களுக்கு இருக்கின்ற எல்லாவிதமான நம்பிக்கைகளையும், வழக்க, பழக்கங்களையும் கைவிட்ட நிலையில் நீங்கள் இணைந்துகொண்டால், உங்கள் வளர்ச்சி அபரிதமாக அமையும் என்பது என்னுடைய கணிப்பு. ஆனால் அதை விட்டுவிலகுதலும், கைவிடுதலும் அவ்வளவு சுலபமும் அன்று. ஆனால் அதை நீங்களே முடிவு செய்யலாம். தொடர்ந்து பதிவுகளை காணுங்கள். உங்களை வரவேற்று மகிழ்வதில் பெருமிதம் கொள்கிறேன். நன்றி

இது தொடர்பான விளக்கங்கள், மேலும்...

Sereviyo Welcomes you!

செரெவியோ வழியாக உங்களை வரவேற்கிறோம். ஏற்கனவே தீட்சை பெற்றவர்கள் மட்டுமல்லாமல், எளிமையான வழியில், தீட்சை பெறாதவர்களுக்கும், சராசரி மனிதர்களுக்காகவும்! முன்னுரையாக எப்படி செயல்பட விரும்புகிறோம் என்பதையும், அது உங்களுடைய வாழ்விற்கு எவ்விதம் உதவும் என்ற வகையிலும் விளக்கம் தந்துள்ளோம். கண்டு கேட்டு பயன்பெறுக. நாம் தொடர்ந்து பயணிப்போம். நன்றி!

வேதாத்திரிய உண்மைகளை, இயல்பான வாழ்வோடு கலந்து, இன்னொரு பரிணாமத்தில், நம்மை அறிவதற்கான பயணம் இது. விருப்புவோர் இணைந்துக்கொண்டு, உங்களுக்கு விருப்பமானவர்களுக்கும் பகிருங்கள்!

https://www.youtube.com/@sereviyo

-

முதல் காணொளி பதிவு (அறிமுகம்)

Do you like to understand the secret of you and this universe? ரகசியத்தை அறிந்துகொள்ள விருப்பமா? 

https://www.youtube.com/watch?v=iOKawT1Ghu8

-

Sereviyo WhatsApp Group

Sereviyo என்பது, அறம், யோகம் வழியாக தன்னையறிதல் என்ற சேவை ஆகும். இது ஏற்கனவே தீட்சை பெற்றவர்கள் மட்டுமல்லாமல், எளிமையான வழியில், தீட்சை பெறாதவர்களுக்கும், சராசரி மனிதர்களுக்காகவும் வழங்கப்படுகிறது!

உங்களுடைய கருத்துக்கள், பின்னூட்டங்கள் தெரிவிக்கலாம். பதிவுகள் குறித்த முன்னூட்டம், விளக்கம் பெறலாம். உங்களுக்கான ஆறுதல், சந்தேக தீர்வு, கேள்விக்கான பதில்களை பெறலாம்.

https://chat.whatsapp.com/H6KiDLTtSfG9gXusm9czGp

-

Can those who have joined yoga look at the horoscope?


யோகத்தில் இணைந்தவர்கள் ஜாதகம் பார்க்கலாமா?


ஜோதிட பலன்கள்

பெரும்பாலான சோதிடர்களின் சேவை மிகச் சிறப்பாக நிகழ்கிறது. அக்காலத்தைவிட இணையம் வழியாக, யாரும், எங்கேயிருந்தும் அவர்களுக்கான ஜோதிடவழியான ஆலோசனைகளை கேட்டுக் கொள்கிறார்கள். அதற்கான கட்டணத்தையும் தவறாது செலுத்துகிறார்கள். பரிகாரம் என்ற வகையில் பணம் கொடுக்கிறார்கள் அல்லது அவரவர்களாகவே ஏதேனும் கோவிலுக்குச்சென்று தீர்த்துக் கொள்கிறார்கள். 

ஜோதிடர்களை, எப்போதும் குறைத்து மதிப்பிடக் கூடாது. ஒவ்வொரு நாளும் அவர்கள் கற்றுக்கொண்டே இருக்கிறார்கள் என்பதால், அவர்களின் ஜோதிட அறிவு விசாலமாகிக் கொண்டேதான் இருக்கும். மேலும் அவர்கள் சிந்தனை அடிக்கடி, பிரபஞ்சத்தில் நிலைத்து இருக்கும் என்பதும் உண்மை. சில அரைகுறை, ஆர்வக்கோளாறு சோதிடர்கள் உண்டுதான். அவர்களிடம் நாம்தான் கவனமாக இருக்கவேண்டுமே தவிர, மொத்த ஜோதிடர்களையும் எடை போட்டுவிடக் கூடாது.

ஜோதிட ஆய்வு பெரும் கடல், முழுமையான வரையறைக்குள் இன்னமும் சிக்கவில்லை. அதனால் ஒருவர் சொன்னதுதான் சரியானது என்ற முடிவுக்கு வரமுடியாது. அதில் மாற்றுக்கருத்து நிறைய உண்டு என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

ஜாதகம் என்பது என்ன? ஏன் எழுதப்படுகிறது?

ஒரு உயிரின் ஜென்மம் புதிதாக துவங்குகிறது. அந்த ஜென்மம் எந்தெந்த குறிப்புக்களை தாங்கியிருக்கிறது? எதற்காக வந்திருக்கிறது? என்ன செய்தது? என்ன செய்யப்போகிறது? என்ற கேள்விகளுக்கெல்லாம் ஒரு விபரக்குறிப்பு அது. 

எதைசொன்னாலும் எசப்பாட்டு பாடுபவர்கள் கேட்பார்கள். ‘ஏன் எழுதாம போய்ட்டா, அவனோ/அவளோ பூமியிலே வாழமுடியாதோ?’

‘ஒரு பொருள் வாங்கினால், அந்த பொருளை எப்படி உபயோகப்படுத்த வேண்டும் என்ற விபரக்குறிப்பு உள்ளது, அதை ஏன் அப்பொருளோடு தருகிறார்கள்? தேவையில்லைதானே? உங்களுக்குத்தான் நிறைய பகுத்து பார்க்கும் அறிவு இருக்கிறதே?’

இதற்கு ‘அதுவேறு இதுவேறு’ என்று பதிலளிப்பார்கள்.

ஜாதகம் எழுதப்படாதவர் வாழ்க்கை?!

தனக்கு ஜாதகம் எழுதப்படவில்லை, தனக்கு தான் பிறந்த குறிப்பு விபரங்கள் எதுவுமே இல்லை என்றால், மனம் போன போக்கான வாழ்க்கைதான் அமையும். ஒவ்வொரு நாளும் பாடமும், பரிச்சையும் அதற்கான விடையும் கிடைத்துக்கொண்டே இருக்கும். கற்றுத் தெளிய வேண்டியதுதான் மிச்சம். ஜாதக குறிப்பு எழுதப்பட்டிருந்தால், தன்னுடைய குணாதசியம் கூட அக்கட்டங்கள் வழியாகவும், நிற்கும் கோள்கள் மூலமாகவும் தெரிந்து கொள்ளலாமே?! உங்களுக்கு தேவையில்லையா அவை? நான் எப்படி இருந்தால் எனக்கென்ன, என்று அடுத்தவரிடம் உங்களால் பழகிட முடியுமா? அவர் உங்களை ஏற்பாரா? இதுபோல எத்தனையோ முன் விளக்கங்களை, ஜாதக கட்டம் சொல்லுகிறதே? அதெல்லாம் எப்படி?

ஜாதகப்படி ஏதும் நிகழ்வதில்லை, பின் எதற்காக?

ஒரு குறிப்பாக இருக்கிற விபரங்களை, அறிந்து கொள்வதற்காக மட்டுமே ஜாதகத்தை உபயோகம் செய்யலாம் என்பதே என்னுடைய நிலைபாடு. அதாவது ஒரு ஜாதகத்தில் விதி என்ற ஒன்று இல்லை. ஆனால் மதியால் செயல்பட ஊக்கம் தருகிறது என்பதை நீங்கள் மறுப்பீர்களா?!

சிவப்பு எரிந்தால் நிற்க வேண்டும் என்ற விபரம் உங்களுக்குத் தெரியுமே? பிறகு ஏன் அதற்குப்பிறகும் போகத் துடிக்கிறீர்கள்? ஜாதகம் என்பது சாலை சந்திப்பில் இருக்கும் பச்சை, ஆரஞ்சு, சிவப்பு போன்றவை. எப்போது நிற்கலாம், போகலாம், காத்திருக்கலாம், தயாராகலாம் என்று தெரிந்து கொள்வது தவறில்லையே?!

இதெல்லாம் நான் ஏற்கமாட்டேன், நம்பமாட்டேன்!

சரி ஆளைவிடுங்கள். நாம் உங்கள் ஜாதகத்தை கேட்கவில்லை, பார்க்கவும் தயாரில்லை. ஏனென்றால் நீங்கள் ஏற்கமாட்டீர்கள், நம்ப மாட்டீர்கள் என்பது உங்கள் பிறப்பிலேயே இருக்கிறதே!

ஏன் இந்த கேள்வி?

யோகத்தில் இணைந்தவர்கள் ஜாதகம் பார்க்கலாமா? இதுதான் இந்த கட்டுரையின் முதன்மை கேள்வி. கேட்பது யார் தெரியுமா? யோகத்திலும் இணையாமல், ஜாதகத்தையும் நம்பாமல் இருக்கும் கூட்டத்தினர்தான். இவர்களுக்கு எல்லாமே மிதமிஞ்சிய கற்பனையிலும், யோசனையிலும், ஆராய்சிலும் மிதப்பார்கள். சப்பைகட்டாக, பகுத்தறிவு, விஞ்ஞான, தத்துவ கருத்துக்களை காட்டுவார்கள். அறிவில்லாதவன் செய்கிற வேலை என்று ஒதுக்கித் தள்ளுவார்கள். வழியை மறித்து அடுத்தவரையும் போகவிட மாட்டார்கள். அதில் அவர்களுக்கு ஓர் திருப்தி.

நான் 20 ஆண்டுகளுக்கு முன்பே சொன்ன ஒரு செய்தியை சொல்லுகிறேன். உங்களிடம் எகப்பட்ட சட்டைகள் அடுக்கப்பட்டிருக்கலாம்.  அதில் எந்த வண்ணம் தோய்த்த சட்டையை தேர்ந்தெடுத்து உடுத்துவீர்களோ அதை, அந்த நேரத்தில் அலைவீசிக் கொண்டிருக்கும், கோள் தீர்மானிக்கிறது என்று சொன்னால் நம்பவா முடிகிறது?

இதற்கு என்ன காரணம்?

நீங்கள் தான் ஜோதிடம் பொய் என்று சொல்லுபவர்கள் ஆகிற்றே?! பிறகு எதற்கைய்யா சொல்ல வேண்டும்? ஆளைவிடுங்களய்யா!

ஆயிரம், பல்லாயிரம்!

நான் இந்த ஜோதிட ஆலோசனையை, ரூபாய் 2500/- என்பதாக மட்டும் நன்கொடையாக செலுத்த கேட்டுக் கொண்டுள்ளேன். வழக்கமான ஆய்வுகளோடு, அதை முழுதாக படித்து முடித்த பிறகு,  7 கேள்விகளையும் கேளுங்கள் என்று சொல்லியுள்ளேன். அடிப்படை முதல்,
உங்கள் உடல் நலம்,
கர்ம வினைகள்,
யோகத்தில் உங்கள் நிலை மற்றும் முன்னேற்றம்,
தொழில், வேலை,
பண வரவுகள்,
வாழ்க்கை வளம்
ஆகிய உண்மைகளையும் தருகிறேன். 

அடிப்படையான இவை போதும், மேலும் பரிகாரம் என்று ஏதுமில்லை, அது தேவையும் இல்லை. பரிகாரம் என்பது ஒரு ஏமாற்று என்றால் நீங்கள் நம்புவீர்களா என்பதும் எனக்குத் தெரியாது. யோகத்தில் இருக்கும் ஒருவருக்கு பரிகாரம் என்பது அவசியமில்லை. அவரின் யோகவாழ்வே அதை தீர்த்துவிடும் எனவே குழப்பமும் இல்லை. இதற்காக பல்லாயிரம் செலவு செய்யவும் தேவையில்லை.

சேவை ஆரம்பமாகிவிட்டது!

ஆம், கடந்த மே மாதம் 15 தேதி முதலாகவே, இந்த ஜோதிட ஆலோசனை சேவை ஆரம்பமாகிவிட்டது. ஒரு ஆய்வுக்கு 7 முதல் 15 நாட்கள் வரை காத்திருக்க நேரலாம். உங்கள் ஜாதகம் அதற்குள்ளாக வந்து நிற்க, உடனடியாக wa.me/+919442783450 என்ற வாட்சாப் வழியாக அனுப்பலாம். நன்கொடை செலுத்திய விபரத்தையும் இணைத்து அனுப்புக.

மின்னஞ்சலில் அனுப்புவதாக இருந்தால்: checkmyhoroscope@gmail.com

நன்கொடை செலுத்த இணையம் வழி: 9442783450@UPI

நன்கொடை செலுத்தாத, ஜாதக குறிப்பு, எந்த ஒரு ஆய்வுக்கும் ஏற்றுக்கொள்ளப்படாது.

நன்றி!


அன்பன்

சுகுமார்ஜெ (Sugumarje)

வாழ்க வையகம், வாழ்க வையகம், வாழ்க வளமுடன்!


Name changes, self-description post by Sugumarje


sugumarje


ஒத்துபோகிற தன்மை!

ஒரு கேரிகேச்சர் என்ற கேலிச்சித்திரம் எழுதுபவனாக இருந்தவன், தன்னையறியும் பயணத்தில் எனக்கு கிடைத்த அனுபவத்தின் உந்துதலில் இதை பிறருக்கும் சொல்லலாம் என்ற கருத்தில் 2018 உருவானதுதான், வேதாத்திரிய சானல். தொடங்கும் பொழுது அதற்கு சூட்டப்பட்ட பெயர், Coincide Channel, இதன் நேரடியான தமிழ் மொழிபெயர்ப்பு ‘ஒத்துப்போகிற தன்மை’ என்பதாகும், இந்த பெயரிலேயே, என்னுடைய உண்மை விளக்கத்தை சொல்ல நினைத்தேன். அதாவது மனிதனின் மனமும், இறைநிலையும் ஒத்துப்போகிற தன்மையில் இருக்கிறது என்பதே ஆகும். இதன் மூலக்கருத்து ‘அலையலையாய் இயங்கும் மனதின் அடித்தளமே நிலைபொருள், அது தெய்வம்’ என்று குரு மகான் வேதாத்திரி மகரிஷி சொன்னதாகும்.


வேதாத்திரிய சானல்

என் பள்ளித்தோழர், சக வேதாத்திரிய பயணி, இந்த YouTube பெயரை கேட்டுவிட்டு, இப்படியெல்லாம் பெயர்வைத்தால், வேதாத்திரிய அன்பர்களுக்கு பயன்படுவதில் சிரமம் இருக்கும், பெயரை மாற்றுக  என்றார். உடனடியாக ‘வேதாத்திரிய சானல்’என்று பெயர் மாற்றம் செயப்பட்டது. அதுதான் இன்னமும் தொடர்கிறது, பதிவுகளையும் வழங்கி வருகிறோம்.

நீண்ட பயணம்

நான் யார்? என்று தன்னையறிதல் என்பது நீண்டபயணம் தான். அதற்கு முயற்சி, ஆர்வம், சூழ்நிலை, செயல்பாடு என்று எல்லாமே கூடி வர வேண்டும். முக்கியமாக நம் கர்மா என்ற வினைப்பதிவுகளின் வெளிப்பாடுகளை ஏற்றுக்கொள்ளவும் தயாராக வேண்டும். ‘என்ன வாழ்வதை விட்டுவிட்டு தன்னை அறிகிறயா, விடுவேனா உன்னை!’ என்று பல குழப்பத்தை ஏற்படுத்தும். அடிக்கிற காற்றில் பறக்கிற சருகு போல நாம் இருந்துவிட வேண்டியது அவசியம். இதை தாங்கிக்கொள்ள முடியாமலும், இதெல்லம் நமக்கு அவசியமா? குறுக்கு கேள்வியாலும்தான், நான் யார்? தன்னையறிதலை கைவிட்டு விடுகிறார்கள். எனக்கு என் முன்னோர்களின் ஆசி இருந்ததாக கருதுகிறேன்.

தன்னிலை விளக்கம்

என்னுடைய வாழ்வில் என்னை / என் வாழ்க்கையை புரட்டிப்போட்ட ஆண்டு 2016 என்று சொல்லலாம். 2017 கிட்டதட்ட தன்னையறிதலுக்கு தகுதியாகிவிட்டேன். 2018 ம் ஆண்டு, எனக்குள் இறையாற்றல், அறிவாகவும் இருந்து செயல்படுகிறது என்பதையும், வெளியாக இருக்கிற இறையாற்றலின் சூழ்ந்தழுத்தத்தினால் தான் நான் இயங்கிக்கொண்டும் இருக்கிறேன், அதே இறையாற்றலினால்தான் நான் உலகியல் வாழ்வில் உணர்வைப் பெறும், இறையாற்றலையே உணரக்கூடிய  மனமாகவும் இருக்கிறேன் என்பதை உணர்வாக பெற்றேன். இதோ, என்னுடய வேதாத்திரிய பயணம் விபரம்...

18 வயதில் தீட்சை (1988 ம் ஆண்டு) 

21 வயதில் அருள்நிதி (1991 ம் ஆண்டு)

47 வயதில் தன்னையறிதல் (2017 ம் ஆண்டு)

53 வயதில் நிறைபேற்று நிலை (2023 ம் ஆண்டு)

மொத்தமாக 34 ஆண்டுகள் ஆகும்.

நான் யார்?

இந்த விளக்கங்களை, அதாவது, நான் இந்த வேதாத்திரியத்தில் பெற்ற அனுபவங்களை, என்னுடைய எழுத்திலும், குரலிலும் பதிந்து வெளியிட்டுள்ளேன். ஏன் அப்படி ஒரு திட்டமும் ஆர்வமும் எழுந்தது என்றால்? வேதாத்திரி மகரிஷி சொன்னது போல, ‘அறிந்த உண்மை நம்மை சும்மா விடாது, அதை எப்படியாவது பிறரிடம் சொல்லி, அவர்களும் அந்நிலை பெற துணையாக நிற்கும்’ என்பதே உண்மை. ஆனால், இந்த நவீன காலத்தில், கரோனா நோய்த்தொற்றுக்குப்பிறகு, தகவல் தொடர்பாகவும், கருத்து பரிமாற்றமாகவும், யுடுயூப் (YouTube) மாறிவிட்ட பிறகு, எனக்கும் அதுவே சரியாக தோன்றியது. 2009 ம் ஆண்டில் இருந்து YouTube உறுப்பினராக இருந்தாலும் கூட, நம் வேதாத்திரியம் 2018ம் ஆண்டுதான் பகிர ஆரம்பித்தேன்.அதுவும் சந்தேகமற, உண்மை அறிந்த பிறகே!. ஆனால், கிட்டதட்ட ஐந்து ஆண்டுகளாக, இன்றுவரை 729 காணொளிகள் பதிவேற்றிய நிலையிலும், என்னைவிட என்பகிர்வுகளை புரிந்து கொண்டு, வேதாத்திரிய சானலை பகிர்ந்துள்ள 18200 அன்பர்களைக் கடந்தும் கூட, சிலர்  என்னை நீ யார்? என்றுதான் கேட்கத்தான் செய்கிறார்கள்.

 1) ஒரு செய்தியை, விளக்கத்தை, பதிவை, கட்டுரையை, காணொளியை, குரல்பதிவை தருவது யார்?

2) அவருடைய அனுபவம் என்ன?

3) எப்போது இருந்து இந்த சேவையை பகிர்ந்தளிக்கிறார்?

4) அவருடைய சிறப்பு ஏதேனும் உள்ளதா?

5) இதற்குமுன் என்ன செய்தார்?

6) அவர் பின்புலம் என்ன? என்றெல்லாம் ஆராய்வதே இல்லை. பதிவாக செய்திருந்தாலும் அதை பார்ப்பதில்லை, படிப்பதில்லை.

வேதாத்திரி மகரிஷியின் ஓவியத்தை காட்டி,
அவரிடமே கையெழுத்து வாங்கிய பொழுது (1993 ம் ஆண்டு)


நேற்று முளைத்த காளான்

கடந்த முப்பத்திநான்கு ஆண்டுகளாக வேதாத்திரிய பயணத்தில், என் அனுபத்தில், தன்னிலை விளக்கம் பெற்றபிறகு, என்னை அவர்கள் பார்க்கும் பார்வையும், பதிலுரைக்கும் முறையும், நேற்று முளைத்த காளான் என்றுதான் இருக்கிறது. ஒரு உண்மை சொல்லட்டுமா? ஓவ்வொரு மனிதனும் முகம்பார்க்கும் கண்ணாடி மாதிரி. ஒருவர் தன் அனுபத்தை வைத்துத்தான், அடுத்தவர் எப்படிப்பட்டவர் என்று பார்ப்பார். அதில் தன் முகம்தான் அதில் தெரியும். பழகிப்பார்க்கும் பொழுதுதான், ‘அடடா இவர் நம்மளை மாதிரி இல்லையே, நாம நினைச்ச மாதிரியும் இல்லையே’ என்று தோன்றும். 

சேவையில் எழுந்த தயக்கம்

வேதாத்திரி மகரிஷி அவர்களின் நேரடியான வகுப்பில் கலந்து அருள்நிதி ஆகிவிட்ட பிறகு, மன்றத்தில் சேவையில் இருந்தாலும் கூட, நான் யார்? என்று தன்னையறியாமல், இறையுணர்வு பெறாமல், சுத்தவெளி தத்துவம் உணர்வாக பெறாமல் எனக்கு சேவையில் ஈடுபட முடியவில்லை. லட்டை சுவைத்தால் தானே லட்டு எப்படி இருக்கும் என்று பிறருக்கு சொல்லமுடியும்? லட்டு குறித்து பிறர் சொன்னதையும், படித்ததையும் அடுத்தவருக்கு எப்படி சொல்வது என்று எனக்குள் தயக்கம். அதனால் நானாகவே மன்ற செயல்பாடுகளில் விடுவித்துக்கொண்டேன்.

அதன்பிறகு எந்த ஒரு மன்றத்தில் நான் சேவையில் இல்லை. ஆனாலும் வேதாத்திரியத்தை நானும் விடவில்லை, அதுவும் என்னை விடவில்லை. இதனால் எனக்கு மன்றம் சார்ந்த சேவையில் எந்த நிலைபாடும் பெறவில்லை.அதாவது, பெயருக்கு முன்னால் போட்டுக்கொள்ளும் தகுதி நிலையிலும், பெயருக்குப் பின்னால் போட்டுக்கொள்ளும் தகுதி நிலையிலும் எனக்கு அக்கறையில்லை.

by Sugumarje for Caricaturelives

by Sugumarje for personal collection


சுகுமார்ஜெ (Sugumarje)

கடந்த 1996 ம் ஆண்டு முதல் என்னோடு கணிணி இணைந்து கொண்டது, அந்த கணிணி ஆர்வத்தின் வழியாகவே, வேலைகளிலும் ஆர்வம் வர, 2003 ம் ஆண்டு மல்டிமீடியா எனும் வேலையில் தொடர்ந்து வருகிறேன். 2007 ம் ஆண்டு நிறுவனம் சாராத, தனி நபர் சேவையாக, CARICATURELIVES என்ற கேரிகேச்சர் ஓவிய நிறுவனம் நடத்தி வருகிறேன். இப்போதும் சில ஓவிய வேலைகள் உண்டு. இந்த வேலை நிறுவனத்தின் வழியாக என்பெயர் சுகுமார்ஜெ (Sugumarje). இன்றும் கூட இணையத்தில் தேடினால் என்னைபற்றி தெரிந்து கொள்ளமுடியும். ஆனால், வேதாத்திரிய சானலை பொறுத்தவரை, அதற்கு தகுதியுள்ள பெயராக வைப்போம் என்றுதான், அருள்நிதி சுகுமாரன்.ஜெ. (திருச்சிராப்பள்ளி) என்று வைத்துக்கொண்டேன். ஏதோ கொஞ்சம் தெரிந்தவர், அறிந்தவர் சொல்லுகிறாரே என்று நம்புவார்கள் அல்லவா? அதனால்தான்!

அருள்நிதி என்பது முழுமையை குறிக்கும் சொல். தகுதி இல்லாவிட்டாலும், நமக்கு அது கிடைத்துவிடுகிறது. ஒரு பிச்சைக்காரர் தன் குழந்தையை ‘ராஜா’ என்று கொஞ்சுவது போல. யார் கண்டார்கள், அக்குழந்தை நிஜமாகவே ராஜா ஆகலாம் அல்லவா? அதுபோல ‘நீ உன் தகுதியில் நின்றிரு’ என்பதற்காகத்தான் ‘அருள்நிதி’ என்ற பட்டம் கிடைக்கிறது. ‘நிற்க அதற்குத் தக’ என்ற ஆசான் திருவள்ளுவரின் குறளை நினைவு கூர்க.

பெயரில் குழப்பம்?

ஆனால் என்ன நிகழ்ந்தது என்றால், அருள்நிதி என்றுதானே இருக்கிறது, எனவே பதிவுகளை பார்ப்போர், என்னடா இது அருள்நிதி என்று பெயருக்கு முன்னால் போட்டிருக்கு? இவ்வளவு பேசுகிறானே? எல்லாம் தெரிந்த்து போலவேறு பேசுகிறான்? இந்த ஆண்டுதான் அருள்நிதி ஆனாலும் ஆகிருப்பான். இப்பவே இவ்வளோ திமிறா? என்று நினைப்பார்கள் போலிருக்கிறது. அதனால்தான் அடிக்கடி நம் வேதாத்திரிய சேனலில், என்மீது வன்ம கருத்துக்கள் பதியப்பட்டன சிலரால். நான், என்கருத்தை, உண்மையை, அதை விளக்கமாக சொல்லியும், பெரிய இவனா நீ?  நீ என்ன மகரிஷியா? அவரை வைத்து பிழைக்கிறாயே? என்ற அளவில் கேட்டுவிட்டனர். அருள்நிதிக்கு பதிலாக, துணை பேராசிரியர், பேராசிரியர், முதுநிலை பேராசிரியர் என்று போட்டிருந்தால், பேசாமல் போயிருப்பார்களோ என்னவோ?! வாட்சாப் குழுவிலும் ‘உனக்கு ரொம்ப தெரியுமோ?’ என்று யாரேனும் கேட்பதுண்டு.

ஆனால் நான் எதையுமே பிரச்சனையாக கருதாமல், எது உண்மையோ, எது விளக்கமோ, எதை புரியவைக்க வேண்டுமோ அதில் நான் தவறுவதில்லை, பூசிமொழுகி பேசும் கலை எனக்கு வரவில்லை. ஆனாலும் நம் வேதாத்திரிய இரண்டொழுக்க பண்பாட்டின் படி, மனதுக்கு துன்பம் தருவதில்லை (அவர்கள் எனக்கு கொடுத்தாலும் கூட) அந்த உண்மையை அவர்கள் புரிந்து கொள்ளாமலேயே அடுத்தடுத்த கேள்விவை வாக்குவாதமாக மாற்றுவது எனக்கு பிடிக்கவில்லை. எனவேதான் வேதாத்திரிய சானலில், பின்னூட்டமிடுவது முடக்கப்பட்டது.  இங்கேயும் ஒரு உண்மை சொல்லட்டுமா? பின்னூட்டம் வழியாக, பெரும்பாலோர் தான் என்ற அகங்காரத்தைத்தான் பதிவு செய்கிறார்கள்.

இனி என் பெயர்...

அருள்நிதி சுகுமாரன்.ஜெ. (திருச்சிராப்பள்ளி) என்ற பெயருக்குப் பதிலாக, சுகுமார்ஜெ (Sugumarje) என்றே செயல்பட முடிவு செய்துள்ளேன். பெயரில் மதிப்பை தூக்கி அலைவது எனக்கு தேவையில்லை என்று கருதுகிறேன். அந்த விளக்கத்திற்காகவே, இந்த மிக நீண்ட கட்டுரை.

ஒரு பூ மலர்கிறது, வாசனை பரப்புகிறது. நாம் பார்த்தாலும் பார்க்காவிட்டாலும், ரசித்தாலும் ரசிக்காவிட்டாலும், பயன்கொண்டாலும், கொள்ளாவிட்டாலும், இழப்பு அந்த பூவுக்கு இல்லை என்பது உங்களுக்கு தெரியும் தானே?! 

'ஐயா, இதென்ன கதை? நாளைக்கும் பூ பூக்கும் தானே?!’

’ஆமாம், நாளைக்கும் பூக்கும், மறுநாளும் பூக்கும், அடுத்த மாதமும், ஆண்டும் பூக்கும். ஆனால் அதே பூ பூப்பதில்லையே; 

வாழ்க வையகம், வாழ்க வளமுடன்!







Medicine that doesn't work?!


வேலை செய்யாத மருந்து?!



கேட்காமல் கொடுப்படும் எந்த மருந்தும் நன்கு பலன் அளிக்காது. இந்த வார்த்தையின் உண்மை என்னவென்றால், அந்த மருந்துக்கு மதிப்பிருக்காது, அதாவது நோயாளி, கேட்காமல் வைத்தியர் கொடுத்த மருந்து அல்லவா? அதனால் இது வேலை செய்வதில் சந்தேகம் கொண்டு, நோயாளி நம்பிக்கை இழப்பார். சில நேரம், வைத்தியரையே “ஆகாத” வைத்தியர் என்று நோயாளி நினைத்துவிடவும் வாய்ப்பு அதிகம்.

“ஐயோ என்னால், தாங்க முடியவில்லை. இந்த நோய் துன்பத்திலிருந்து என்னை விடுவியுங்கள்” என்றவாறு நோயாளி நொந்து, வைத்திரியரிடம் மருந்து கேட்டிருந்தால், வைத்தியர் எந்த மருந்தை கொடுத்திருந்தாலும் கூட, நோயாளியின் நம்பிக்கையில் குணமாகிவிட சாத்தியம் உண்டு. 

இந்த உதாரணங்களைப்போலவே, நவீன கால உலகில், YouTubeல், வேதாத்திரிய சானல் வழியாக யோக, தவ, இறை உண்மைகளை விளக்கும் காணொளிகளை நாங்கள் தருவதும், அதை அன்பர்கள் பார்ப்பதும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

பெரும்பாலான அன்பர்களின் ஆதரவு, வேதாத்திரிய சானலுக்கு உண்டு. அவர்களை வாழ்த்தி மகிழ்கிறோம். ஆனால் உண்மைகள் மிகுதியாக போய் சேரவில்லையே என்ற ஆதங்கம் எங்களுக்கு உண்டு.

அன்பர்களே, இந்தக்கதையை கேளுங்கள்.

ஒரு ஞானியைக் கண்டு, ஒருவன் ,

“எனக்கும் யோகத்தில் ஆர்வமாக இருக்கிறது. கற்றுக்கொடுங்கள்”

“அப்படியா நாளைக்காலை என் ஆசிரமத்திற்கு வா”

“இன்றைய நாளிலேயே என்னை ஏற்றுக்கொள்ள மாட்டீர்களா?” என்றான் ஆர்வத்தில்.

“நாளைதான் உனக்கு பரிட்சை, அதில் தேர்ந்தால் ஏற்றுக்கொள்கிறேன்”

மறுநாள் அதிகாலை ஆசிரமம் சென்றுவிட்டான். ஞானி அப்பொழுதான் ஆற்றில் குளிக்க தயாராக நின்று கொண்டிருந்தார்.

“என்னோடு வா”

இவனும், ஞானியோடு கூட நடந்து ஆற்றை வந்தடைந்தான். ஞானி அவனின் கை பிடித்து இழுத்துக்கொண்டே, ஆற்றுக்கு நடுவில் இடுப்பளவு நீரில் நின்றுகொண்டார். திடீரென, அவனின் கழுத்தை பிடித்து அழுத்தி, தலை முழுதும் நீருக்குள் இருக்குமாறு அழுத்தப்பிடித்து அமுக்கினார். பதறிப்போய் அவன் தன்னை விடுவித்துக்கொள்ள போராடினான். ஞானி தன் கைகளை விலக்கி அவனை மேலே எழச்செய்தார். அவனோ மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கிக்கொண்டிருந்தான்.

“இப்போது உனக்கு என்ன தேவையாக இருந்தது?” என்று ஞானி கேட்டார்.

“மூச்சுக்காற்று”

“அதுபோல உனக்கு எப்போது யோகம் தேவைப்படுகிறதோ அப்போது என்னிடம் வா” என்று சொல்லிவிட்டு, “என்னிடம் உன்னை ஒப்புவிக்க உன் மனம் எப்பொழுது தயாராகிறதோ அதுவரை காத்திரு” என்றார்.

சீடனாக வந்தவனுக்கு, அப்பொழுதான் ஒரு ஞானியிடம், யோகம் கற்பதற்கான தகுதி என்ன என்பதை உணர்ந்தான்.

நாளை இன்னொரு உதாரண கதையோடு தொடர்வோம் அன்பர்களே!

வாழ்க வளமுடன்!




Still going on


இன்னும் தொடரும்...



எழுத்தும் நானும்

வழக்கமாக எப்பொழுதாவது கவிதை எழுதுவதுதான் என் வழக்கம். அதுவும் குறிப்பிட்ட நோக்கமின்றி, ஏதோ தோன்றும் கருத்தில் எழுதி வழங்குவது ஆகும். ஆனால் 2018ம் ஆண்டுகளின் தொடக்கத்தில் இருந்து, எழுதியது எல்லாமே, வேதாத்திரியத்தின் அடிப்படையில் அமைவதாக வளர்ந்துவிட்டது. 

காரணம் 2015ம் ஆண்டின் ஆகஸ்டு மாதம் முதல் தொடர்ந்து, நீண்ட நேரம் வேதாத்திரிய இறை தத்துவ ஆராய்ச்சியில் என்னை ஈடுபடுத்திக் கொண்டதுதான் காரணம். அப்படியானால் அதற்கு முன்பு இல்லையா என்று கேட்டால், இருந்தது ஆனால் என்னுடைய ஓவிய பணிகளுக்கு இடையே, காயகல்பம், உடற்பயிற்சி, தவம் செய்து என் உடலை, மனதை உற்சாகமாக வைத்துக்கொண்டதோடு சரி, இறை குறித்தான ஆராய்ச்சியை தொடங்கவில்லை. புரிந்ததுபோலும், புரியாததுபோலும் வாழ்க்கையில் ஓடிக்கொண்டிருந்தேன். 


Please Take Diversion to வேதாத்திரியம்!

ஆனால், உனது இந்த ஓட்டம் சரியல்ல என்று இறையே எனக்கு கடிவாளம் போட்டு, நீ இப்படியாக திரும்பு என்று, “ஒரு விபத்து” நடத்தி என்னை திருப்பியது. சொல்லி கேட்கவில்லை என்றால், அனுபவித்துத்தான் கேட்க வேண்டும் அல்லவா? அப்படியான அந்த இருசக்கர வாகன விபத்து, தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று என்பதுபோல, பிழைத்து எழுந்தேன். வாழ்க்கையின் நிலைதன்மை சொல்லும் உண்மை புரிந்துகொண்டேன். ஒரு நொடியில் சிறுகூறு போதும் நாம் இறந்துமடிவதற்கு.

அத்தகைய வாழ்விற்குள்ளாக, நான் யார்? என்பதை உணர்ந்து, வினைப்பயன் நீக்கி, பிறவிகடனாக தன் வாழ்வை தூய்மை செய்தல் மிக முக்கியம் என்பதை அன்றே உணர்ந்தேன். இனியும் காலம்போக்க வழியில்லை, பிழைத்தது கிடைத்தவாய்ப்பு அதற்கே என்று எண்ணி என்பாதையை நானும் “வேதாத்திரியத்தில்” திருப்பினேன்.

கிடைத்தபலன், என்னை முழுமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன். அந்த முழுமை எத்தகையது என்பதை, என் என்ணம், சொல், செயல்கள், பகிர்வுகள் மூலமாக நீங்களே அறிந்துகொள்ளலாம், நான் தனியாக சொல்லிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை, அது முறையும் இல்லை.


திட்டமும் பகிர்வும்

இந்த சூழ்நிலை மாற்றத்தின் வழியாக, நான் எழுத நினைத்ததே, தினம் ஒரு கவிதை என்ற வகையில் onthisway.blogspot.com என்ற மூன்று பதிவுகளோடு நின்றிருந்த ஒரு வலைப்பூவை (Blog) தூசி தட்டி, புதிப்பித்து எழுதி வருகிறேன்.  2021, ஆகஸ்டு மாதம் 31 நாட்களும், தினம் ஒரு கவிதை எழுதியே தீருவது என்று முடிவு செய்தேன். ஆரம்பம் கொஞ்சம் கடினமாக இருந்தாலும், எழுத எழுத தானாகவே வார்த்தைகள் வளர்ந்தது, கருத்தும் நிறைந்தது. 


பிரபஞ்ச மனம்

ஒரு உண்மை உங்களுக்கு தெரியுமா? ஒரு படைப்பாளி, மனம் ஒன்றி செயல்பட்டால், இந்த பிரபஞ்சமே அவனுடைய மனமாக மாறிவிடும். இதை நம் குரு மகான் வேதாத்திரி மகரிசி அவர்களும் மெய்பித்திருக்கிறார். அப்படியான சிறப்புபெற்றது இந்த இயற்கை. ஆனால் உங்கள் மனம் எந்த நிலையில், இந்த பிரபஞ்ச மனதோடு தொடர்புகொள்கிறது என்பதும் கட்டாயம். முக்கியமாக, தன் நலம் சார்ந்த எண்ணங்களுக்கு, ஒருபோதும் பிரபஞ்ச மனம் உதவாது என்பதை தெளிவாக புரிந்துகொள்ளுங்கள். ஒருவேளை நீங்கள் அப்படி விரும்பினால் வரும் விளைவுகளை நீங்கள் தாங்கிக்கொள்ளவும் வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். 


வெற்றிகரமாக!

இந்த பதிவை எழுதும் இந்த நாளோடு, வெற்றிகரமாக 31 நாட்களுக்கு 31 தலைப்பிலான கவிதைகளும், அக்கவிதையின் விளக்கங்களும் எழுதி வெளியிட்டு முடிந்தாயிற்று. அடுத்து எழுதுவேனா என்று என்னை நானே கேட்டுக்கொள்கையில், ஆம் என்று தான் பதில் தர விரும்புகிறேன். ஏனென்றால், ஒரு வலைப்பூவை படிப்பது என்பதும், படிக்கவைப்பது என்பதும் இருபது ஆண்டுக்காலத்திற்கு முன்பு அவ்வளவு வரவேற்பை தரும். ஆனால் நம் காலைசுற்றி ஏகப்பட்ட இணைய வலைப்பின்னல்களில் சிக்கிவிடாமல், இப்போதும் ஆர்வமாக குறைந்தபட்சமாக 200 அன்பர்கள், அதிகபட்சமாக 1500 அன்பர்கள் படித்து இன்புறும் வகையிலும், இக்கவிதை பதிவுகள் வரவேற்று பெற்றிருக்கிறது. இதுவே என் மகிழ்ச்சிக்கு காரணம். அன்பர்களின் ஊக்கமும், ஆதரவும் மேலும் என்னை எழுத்தூண்டுகிறது என்பது உண்மையே.

இந்த கவிதைகள் பலவழிகளில் பலருக்கு பகிரப்பட்டிருக்கலாம், அந்த வழியில் யாரேனும் ஒருவருக்காவது, இக்கவிதைகளில் உள்ளார்ந்த உண்மை, அவர்கள் மனதில் ஒளிபரவச்செய்தால் இன்னும் மகிழ்வேன். இக்கவிதைகளின் உள்நோக்கம், வேதாத்திரிய வழியில், அன்பர்களை இறை உணரச்செய்வதே ஆகும். 


எல்லாம் இறையின் வெளிப்பாடே!

எல்லாமே இறையாகவே பரிணமித்து மலர்ந்திருப்பதால், எந்த வகையில் எழுதினாலும் அது இறையுணர்வை விளக்குவதாகவே அமைந்திருக்கும் என்பதை நாம் புரிந்துகொள்ள முடியும். நம் குரு வேதாத்திரி மகரிசி அவர்களே இதற்கு சான்று. மகரிசியின் தத்துவங்களை, விளக்கங்களை, ஞானக்கவிகளை, தத்துவ சொற்பொழிவுகளை படிக்கும் பொழுதும், கேட்கும்பொழுதும், அவர் இறைநிலையில் இருந்தே, இறையாகவே சொல்லுவதை நாம் உணரலாம்.


இன்னும் என்ன?

கூடுதலாக, மனம் குறித்து வேதாத்திரியத்தின் வழியே நான் அறிந்ததை விளக்கமாக தர விரும்புகிறேன். வானியல், கோள்கள் இவற்றில் மனிதனுக்கு உண்டாகும் மாற்றங்களின் தொடர்பு என்ன? அவற்றை எப்படி சாதகமாக ஏற்றுக்கொள்ள முடியும் என்ற விளக்கங்களையும் தொடர்ந்து தருவேன். வேதாத்திரிய தத்துவங்களை, மகரிசி என்ன கொடுத்தாரோ அதே முறையில், மாறாத தன்மையில் தரவும் விரும்புக்கிறேன். இவை அடுத்ததடுத்த நாட்களில் நிகழும் என்று நம்புகிறேன். 

அன்பர்களே, நீங்கள் அனைவரும், அருட்பேராற்றலின் கருணையினால், உடல் நலம், நீளாயுள், நிறை செல்வம், உயர்புகழ், மெய் ஞானம் பெற்று ஓங்கி வாழ்க என வாழ்த்தி மகிழ்கிறேன்.

வாழ்க வையகம், வாழ்க வையகம், வாழ்க வளமுடன். 

The Other Side of Man - Part 2


 


சைஞானி இளையராஜா அவர்கள் எப்போது பேட்டி கொடுத்தாலும், (பெரும்பாலும் தருவதில்லை) எதாவது “இவரை சிக்கவைக்க ஏதேனும் சொல்லுவாரா?!” என்று பெரும்பாலும் எண்ணுவார்கள்.  உள்ளதை உள்ளபடியும், சுற்றி வளைக்காமலும், எளிய வார்த்தைகளாக பேசக்கூடியவர்களில் இவரும் ஒருவர். அதனால்  இசைஞானி இளையராஜா எது சொன்னாலும் அதில் வில்லங்கம் இருக்கிறது என்று கிளம்புவார்கள். உண்மையிலேயே பிரச்சனை, நம் மக்களின் “மறு மனிதன் சிந்தனையில்தான்” இருக்கிறது.

இசைஞானி இளையராஜா, தானாக மேடைகளில் பேசினாலும், அப்படியான வில்லங்க பிரச்சனையாக மாறிவிடும் அல்லது மாற்றிவிடுவார்கள். உண்மையில் இசைஞானி இளையராஜா உள்முக தேடலில் ஆழ்ந்துபோனவர் என்றே நான் கருதுகிறேன். எனக்கு கிடைத்த சில குறிப்புக்களின் வழியாக, அவர் “தீட்சை” பெற்று தவம் பயின்றவராகவே இருக்கிறார். இதனால், குறிப்பாக, எளிமையாக, தனக்கு தோன்றுவதை சொல்லிவிடும் தன்மை வந்துவிடுவது இயல்பு.

இப்படியான மனிதர்களிடம் நாம் கலந்துரையாடுவதற்கு எளியவழி உண்டு. அது, நாம் இயல்பாக இருப்பதுதான். எதிராளைப்பற்றிய எந்த பிம்பத்திற்கும் நாம் வந்துவிடக்கூடாது. முக்கியமாக  “மறு மனிதன் சிந்தனை” வேண்டவே வேண்டாம்.

திருட்டுத்தனம் உள்ளவர்தான், உலக இயல்பில், இதை பேசினால் தப்பாகிவிடும், இதைச்செய்தால் தப்பாகிவிடும், இவர் என்னை தப்பாக நினைப்பார், பிரச்சனை உருவாகிவிடும் என்று பயந்தும், தயங்கியும், தான் நினைத்ததிற்கு மாறாக ஒன்றைச்சொல்லி தப்பித்துவிடுவார். அல்லது தன்மேல் எந்த தவறும் வராதவாறு அந்த விசயத்தை கடந்துவிடுவார். 

திரை ஒளிப்பதிவாளர், இயக்குனர் பி.சி. ஸ்ரீராம் அவர்கள். திரைக்கு பின்னே இருந்த ஒளிப்பதிவாளார்களை, மக்களின் மனதில் நிலைக்கச்செய்தவர்களில் முன்னோடி. இவரைபார்க்கும் ஓவ்வொருவரும் “மகா கலைஞன்” என்பதோடு தனக்குள் “இன்னொரு பிம்பத்தையும், மறு மனிதன் சிந்தனையும்” கொண்டுவிடுவார்கள். ஆனால் பி.சி. ஸ்ரீராம்  மிக எளியவராகவே இருக்கிறார். ஆரம்பநாட்களில், எனக்கே அப்படியான பிம்பமும், சிந்தனையும் இருந்தது உண்மைதான். காரணம், அமைதியாக தோற்றமளிப்பார், பேச ஆரம்பித்தால் கீச்சுக்குரலில் வேகமாக, சுருக்கமாக பேசுவார். அவரின் இயல்பே இதுதான் என்றதும், நான் என் இயல்புக்கு உடனே வந்துவிட்டேன். 

சமீபத்தில் ஒரு காணொளி செவ்வியில், (Video interview) தன்னை பேட்டி கண்டவரிடம் சொல்கிறார். “ எனக்கும் இது ரொம்ப நாளைக்குப்பிறகு ஒரு நல்ல பேட்டியாக இருந்தது. நான் சொல்வதை புரிந்துகொண்டு அடுத்த அடுத்த நல்ல கேள்விகளுக்கு வந்தீர்கள். அதற்காக நன்றி. நிறையபேர் நான் சொல்றதை, நீங்க என்ன சொல்றீங்கன்னே தெரியலை என்று என்னிடம் சொல்லுவார்கள்” என்று பேட்டியை முடித்துக்கொண்டார்.  இதன் காரணம் உங்களுக்கும் புரிந்திருக்குமே!

ஒரு ஓவியர் சொன்னார் “அழகாக இருக்கும் பெண்களெல்லாம் அறிவாளிகள் என்று நினைத்து பேசவே பயந்திருக்கிறேன்”. 

எனக்கும் அத்தகைய பயம் இருந்திருக்கிறது. என் கேரிகேச்சர் வேலைகளில், தமிழே பேசத்தெரியாத, தமிழ் பேசினாலும் புரிந்துகொள்ள முடியாத, தமிழ்நாடு, சென்னையில் வாழும்  “ஒரு அழகான பெண்” பைசா செலவு செய்யாமல் என்னிடம் வேலைகளை வாங்கிவிட்டு, மூன்று முறை அலைக்கழித்துவிட்டு, கைவிரித்துவிட்டார். அந்த வேலையில் நான் ஈடுபட காரணம், அவள் பெண் என்பதும், அழகும், பணக்காரத்தனமும், அவள் வேலைபார்த்த நிறுவனமும், அவளின் வேலை தகுதியும், அது தந்த “பிம்பமும், மறு மனித சிந்தனையும்” தான். அதோடு நானும் இது “விதியின் சதி” என்று நினைத்து விட்டுவிட்டேன். இன்றுவரை எந்தப்பதிலும் இல்லை. 

ஆகவே, ஒரு மனிதர் (ஆண், பெண் இருபாலரும்) இயல்பாக இருப்பதுதான் நியதி. யாருக்காகவும் அவர்கள் தன்னை மாற்றிக்கொள்வதில்லை, மாற்றிக்கொள்ள வேண்டியதும் இல்லை. அதைப்போலவே அவரை, நாமும் எந்த “பிம்பத்திற்கும், மறு மனித சிந்தனைக்குள்ளும்” அடக்கிவைக்க வேண்டியதில்லை. அவர்களைப்போலவே நாமும் இயல்பாக இருக்கப்பழவேண்டியது அவசியமானதாகும்.

முக்கியமாக, உங்கள் மனைவியே, கணவனோ, குழந்தைகளோ, நண்பர்களோ கூட இயல்பாக இருப்பதை உணர்ந்து கொள்ளுங்கள். நீங்களும் அப்படியே இயல்பாக அவர்களிடம் பழகிப்பாருங்கள். வாழ்வில் இனிமை இருப்பதை உங்களுக்குள்ளும், தக்கவைப்பீர்கள்.

வாழ்க வளமுடன்.



New Year Artwork from Paintstorm Studio


 புத்தாண்டிற்காக ஏதேனும் எழுதியே தீருவது என்று நினைத்த நொடி, அந்த புதிய நாளின் இறுதி நேரத்திற்கு (23.06 மணி) எழுதிய பதிவு. :D

புத்தாண்டு சபதம் என்றெ கொள்கையெல்லாம் பள்ளிக்காலத்திலேயே கைகழுவியாயிற்று. எந்த தவறும் என்னிடமில்லை என்ற ஓர் உயர்ந்த நோக்கம் என்னிடம் உண்டு. யாரேனும் சுட்டிக்காட்டும் தவறுகளை அவ்வப்பொழுதே திருத்திக் கொள்ளும் பக்குவமும் எனக்குண்டு. 

முக்கியமாக, இணையதளம் என்ற பொதுவெளிக்கும், பரந்த உலகளாவிய வேலைகள் என்ற நிலையிலும் என்னை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது. இந்த “சுகுமார்ஜி யார்?” என்று தேடினால் கொட்டிக்கிடக்கும் விபரங்களே போதுமானது.

சமீபத்தில் கூட, ஒரு நண்பர் ஓவிய வேலைகள் மூலமாக அழைத்திருந்தார். தேர்தல் நெருங்குவதைப் பொருட்டு, சில பல கேலிச்சித்திரங்கள் “கேரிகேச்சராக” வரும், வளரும் அரசியக் கட்சி தலைவர்கள் குறித்த ஓவியம் தேவைப்படுகிறது. நீங்கள் வரைந்து தாருங்கள் என்றார். அவர் விவரித்து சொல்லிக்கொண்டிருக்கும் பொழுதே... 

“இல்லை, இதற்கு நான் தயாரில்லை. இதுவரை எந்த அரசியல் தலைவரையும், ஏதேனும் கருத்துக்களோடு கேலிச்சித்திரங்கள் வரைந்ததில்லை. (என்னுடைய வளர்ச்சியில் பழகிய நிலைக்காக சில ஓவியங்கள் மட்டுமே உண்டு.) எனவே என்னால் இயலாது” என்று உடனேயே தெரிவித்து விலகிக்கொண்டேன்.

கூடவே இன்னொன்றையும் சொன்னேன். “ஒருவேளை எனக்கு “அந்தபத்திரிக்கையில்” எனக்கு ஒரு வேலை வாங்கி, நிறுவன கேலிச்சித்திரக்காரர் ஆகிவிட்டால் வரைந்து தர சம்மதம்” என்றேன்.  அதற்கு பிறகு அழைப்பு இருபக்கமும் முடித்துக் கொள்ளப்பட்டது. 

ஒரு ஓவியன் ஏற்கனவே மனதிருப்தியில் இருப்பவன். அவன் வெறுமனே புகழுக்காக வரைவதில்லை. பெரும்பாலும் “ஓவியர்கள்” போய்ச்சேர்ந்த பிறகுதான் மதிக்கப்படுவார்கள். இது உலக இயல்பு. ஆனால் இதற்கெல்லாம் ஓவியன் கவலைப்படுவதில்லை. அடுத்தவர் பாராட்டவேண்டும் என்பதற்கு முன்னேலேயே தான் தன்னால் புகழ்ந்து நிறைவைப் பெற்றுவிடுகிறான் அந்த ஓவியன்.

இந்த நாளில் சும்மாவேணும் ஒரு கிறுக்கலை வரைந்து கொண்டிருந்தபொழுது, அது நன்றாக வெளிவந்திருப்பதாக தோன்றியது, சரி, நிறுத்தாமல் கொஞ்சம் கொஞ்சமாக நேர்த்தி செய்து, வண்ணக்கலவை கொடுக்க, அழகான பெண் ஓவியம் மலர்ந்தது. எனக்கும் திருப்தியாக இருந்தது. என் நண்பர் சு. கிருஷ்ணமூர்த்தியிடம் பகிர்ந்துகொண்டேன்.  இந்த பதிவுக்காக உங்களிடமும் பகிர்ந்து கொள்கிறேன்.






Final Result


Software: Paintstorm Studio

Tool: Wacom Digital Tab

Time: 2 hours

Model: Nil


இந்த புதிய ஓவிய மென்பொருள், போட்டோஷாப் க்கு ஒரு பெரிய மாற்றாக இருக்கிறது. (ஓவிய வேலைகளுக்கு மட்டும்). 


எழுதிய பதிவை 23.56 மணிக்கு ஏற்றியாகிவிட்டது. :D


Why stopped to draw human faces - Part 02



ஒரு ஓவியன், கண்களால் பார்ப்பதைமட்டுமே வரைவதில்லை. அவனின் பார்வை அளவில் சிக்கிய, அவனுக்குமட்டுமே முக்கியமாகப்படும் விசயத்தையோ, பொருளையோ மையப்படுத்தி, இயல்பாக அங்கே கிடைக்கும் வெளிச்சம், நிழல் ஆகியவற்றை கவனித்து, அதில் கூடுதலாக ‘இன்னும் என்ன செய்யலாம்?’ என்ற சிந்தனை தெளிவோடு வரைவான்.

காட்சிப்பொருளை வரையாது, தன் மனதிற்குள் எழுவதை வரைகிறேன் என்ற, மாடர்ன் ஆர்ட் ஓவியர்கள் இதில் சிக்கமாட்டார்கள். அவர்கள் தனி உலகம்.

இத்தனை காலமாக, நான் ஒருபோதும் இயற்கை காட்சிகளையோ, தெரு, நகரம் இப்படியான காட்சிகளையோ வரைந்ததில்லை. அதில் நிறைய நுணுக்கங்களை சேர்க்கவேண்டியதிருக்கும் என்பதால், அதற்கான பொறுமை என்னிடமில்லை.  ஒரு ஓவியத்தை நீண்ட நாளாக வரைந்துகொண்டே இருக்கும் பழக்கமும் என்னிடமில்லை. அதோடு நாம் உழைத்தால், அதற்கான பலன் கிடைக்கவேண்டுமேயன்றி, சும்மா ‘எனக்கும் வரையத்தெரியும் என்பதற்கோ, இப்படியெல்லாம் கஷ்டப்பட்டு வரைந்தேன்’ என்று பெருமையடித்துக்கொள்வதற்கும் நான் வரைவதில்லை. ஒரு ஓவியம் வரைந்தால் அது எனக்கு என்ன கொடுக்கும் என்பதில் எனக்கு அக்கறை உண்டு. எனவே, நான் ஒரு ஓவியன் என்பதை வெளிக்காட்டுவதற்காக வரைந்த ஓவியங்களைத்தவிர வேறெந்த ஓவியமும் நான் வரைந்து வைத்துக்கொள்வதில்லை. சில நண்பர்களுக்கு சும்மாவேணும் நட்புக்காக வரைந்து கொடுத்ததுண்டு, இன்னமும் அப்படி கொடுத்துக்கொண்டிருக்கிறேன்.

இதனால், கேட்பதை வரைந்து தருகிறேன் என்றவகைக்கு வந்துவிட்டேன். ஒரு நிறுவனம் மூலமாக வரையும் வேலைகளும், தனி நபர் வேலைகளும் நீண்டகாலமாக செய்துவந்தேன். அவ்வப்போது அதற்கான வருமானமும் வந்துகொண்டிருந்தது. நீங்கள் யார்? என்றால் நான் ஒரு ஓவியர் என்று பதிலளிக்கமுடிந்தது. இதைத்தவிர வருமானத்திற்கு என்ன செய்கிறீர்கள்? என்ற அர்த்தமில்லா கேள்விக்கு என்னால் புன்னகைக்க முடிந்தது.

நிறுவனம் மூலமாக கிடைக்கும் வேலைகளில் 10:2 என்ற அளவில் திருத்தங்கள் வரும். அந்த திருத்தங்களை ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தால், திருத்திக்கொடுப்பதுண்டு. சில இப்படித்தான் அந்த ஓவியத்தில் வரையமுடியும் என்ற நியாயமான விசயத்தை சொல்லி புரியவைப்பதும் உண்டு. தனி நபர்களில், என் ஆரம்ப காலங்களில் வரைந்து தருவதை, மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டவர்கள் 50:50 மட்டுமே.

முக்கியமாக, தனி நபர் கேட்கும் திருத்தங்களை கவனித்தால், அவர்களுக்கு ஓவிய அறிவு கொஞ்சமும் இல்லை என்பது தெரியவரும். அடுத்தவருடைய ஓவியத்தைப்பார்த்து “அப்படியே நிஜமாக இருக்கு, அருமை” என்பவர்கள் தன் முகம் வரைந்தால்மட்டும் “வேறே யாரோ மாதிரி இருக்கு” என்று ஏற்றுக்கொள்ள மறுப்பார்கள். அதோடு தோலின் நிறம், நிழலின் அடர்த்தி, வெளிச்சத்தின் பாதிப்பு இவைகளும் பெரும் குறையாக அவர்களுக்கு தோன்றும். 

ஒருவருடைய முகத்தை வரைய பல நுட்பமான வழிகள் உள்ளன. இதில் கணித சமன்பாடுகளைக்கூட உபயோகப்படுத்தலாம். நான் அதிலும் சில வழிகளை தேர்ந்தெடுத்தே, கோட்டு ஓவியம் வரைந்து, அவர்களிடம் காட்டி, உங்கள் முகம் போல இருக்கிறதா? என்று கேட்டுவிட்டே அடுத்த நிலைக்கு செல்வது வழக்கம்.  கோட்டு ஓவியம் அருமை என்று பதில் தந்துவிட்டு, கடைசியில் என் முகம் இல்லை என்று சண்டைபோடுவது பெரும்பாலோரின் வழக்கம். சரி, எனக்கு இது பிழைப்பு, நீ பணம் தருகிறாய் எனவே, திருத்தங்கள் தருகிறேன் என்று அவர்கள் சொல்லுகிறவகையில் திருத்தி வரைந்து அனுப்பிவைப்பேன்.

ஒரு முகம், வெளிச்சத்தில் ஒருமாதிரியும், அதிகவெளிச்சத்தில் ஒருமாதிரியும், லேசான வெளிச்சத்தில் ஒருமாதிரியும் இருப்பது உண்மை. எனக்கு அவர்கள் அனுப்பிவைக்கும் ஒளிப்படத்தைக்கொண்டே, மாதிரி எடுத்துக்கொள்ளவேண்டியுள்ளது. எனவே அதில் என்ன அளவில் ஒளியும், நிழலும் இருக்கிறதோ அதைத்தான் ஓவியத்தில் கொண்டுவர முடியும், ஆனால் அவர்கள் அதை புரிந்துகொள்வதில்லை. 

ஓவியத்தில் எல்லாம் முடித்தபிறகு, இன்னொடு ஒளிப்படத்தை உடனே அனுப்பி “இதைபாருங்கள், நான் இப்படித்தான் இருப்பேன், நீங்கள் வரைந்தது நான் அல்ல” என்பார்கள். அப்படியானால் முந்தைய ஒளிப்படத்தில் இருப்பது நீ இல்லையா? பிறகு ஏன் அந்த ஒளிப்படத்தை எனக்கு அனுப்பினாய்? இந்த ஒளிப்படத்தை முன்னதாகவே அனுப்பியிருக்கலாமே? என்று கேட்டால் பதில் வராது.

இதில் இன்னும் சிலர், பக்கவாட்டில் முகம் திரும்பிய ஒளிப்படத்தை அனுப்பிவிட்டு, நேராக பார்க்கிறமாதிரி வரைந்துகொடுங்கள் என்று கேட்பார்கள். “ஐயா, எனக்கு இறைவன் அந்த வரத்தை தரவில்லை, என்னால் முடியாது” என்று சொல்லிவிடுவேன்.

எனக்குத்தெரிந்து, கிட்டதட்ட நான்கு தலைமுறைகள், ஓவியம் குறித்த அறிவே இல்லாது வந்துவிட்டார்கள் என்று நம்புகிறேன்.இந்நிலை இந்தியா முழுதும் என்று என்னால் சொல்லமுடியும். அவர்களுக்கு ஒரு ஓவியன், விளக்கி சொன்னாலும் கூட புரிந்து கேட்டுக்கொள்ளும் மனநிலை அவர்களுக்கு இல்லை. 

முக்கியமாக ஒளிப்படத்தில் இருக்கிற குறைகளையும், அவர்கள் முகத்தில் இருக்கிற குறைகளையும் சரி செய்துதான் ஓவியன் வரைவான். அதாவது மேலும் அழகுபடுத்துவான். கேரிகேச்சர் (இருப்பதை மிகைப்படுத்தும் கலை) என்று வரைந்தாலும் கூட, நான் குறைகளை மிகைப்படுத்துவதில்லை. 

சரி, இருப்பதை அப்படியே வரைவதற்கு ஓவியன் தேவையா? ஒரு கேமரா மூலமாகவே அதை செய்துவிடலாமே? அதோடு ஓவியன் கற்றுத்தேர்ந்ததையும் இணைத்துத்தானே தருவான். அவன் என்ன இயந்திரமா? அப்படியே நகலெடுக்க? 


அடுத்ததாக, கிடைக்கின்ற மென்பொருள்களில், Photoshopல்  Smudge என்றெரு tool இருக்கிறது. இதை வைத்துக்கொண்டு, ஒளிப்படத்தையே, அப்படியும், இப்படியும் தேய்த்து மழுக்கி, லேயர் லேயராக வண்ணத்தை பரப்பிவிட்டு, டிஜிட்டல் ஆர்ட் என்று தடவும் டிஜிட்டல் ஆர்டிஸ்ட்கள் (Digital Art - Digital Artist) செய்கிற, இருப்பத்தை அப்படியே வரைந்து தரும் ஓவியம் என்ற திருட்டுத்தன வேலைகள், மக்களை மயக்குகின்றன. 

எனவே ஓவியவேலை தருபவர்கள், ஒரு ஓவியன் “அப்படியே, அப்படியே” வரைந்து தரவேண்டும். இல்லையேல் அவன் தேறாத ஓவியன், அனுபவமில்லை என்ற முடிவுக்கு வந்துவிடுகிறார்கள்.  

நீ சும்மாவா கொடுக்கிறாய்? பணம் வாங்குகிறாய் அல்லவா? நான் கேட்பதை வரைந்து கொடுக்காமல் வேறெதாவது வரைந்து கொடுத்தால், வாங்குவதற்கு நான் முட்டாளா? எனக்கும் ஓவிய அறிவு இருக்கிறது(?!) என்று ஓவியனிடம் மல்லுகட்டுவார்கள். அதற்காகவே ஒரு ஓவியன் “குரங்காட்டம்” ஆடவேண்டிருக்கிறது.

முக்கியமாக, ஒரு படைப்பை திருத்துகிற உரிமை எவனுக்குமே இல்லை. மறு பதிப்பு என்பதுதான் நியதியே தவிர வேறெதுமில்லை. அந்தவகையில் கதை எழுத்தாளர்களுக்கும், கவிஞர்களுக்கும் இருக்கிற, துணிச்சலான, தைரியமான, நம்பகமான வெளிப்பாடு ஓவியனுக்கு இல்லை.  இன்னும் விளக்கமாக காசுவாங்கிக்கொண்டு வரைந்துதரும் ஓவியனுக்கு இல்லை என்று சொல்லலாமா?

இத்தகைய அறிவு எனக்கு உள்முகமாக வந்த பிறகு, முகம் வரைவதற்கான ஆர்வம் எனக்கில்லை. ஒரு ஓவியனாக மக்களிடம் தோற்கிறேன். நான் ஓவியன் என்று சொல்லுவதற்கு குறைபட்டதில்லை, ஆனால் ஒரு ஓவியம் வரைய என் கைகள் கூச ஆரம்பித்துவிட்டது. கூடவே கரோனா தொற்றும் வேலைகளை குறைக்க, சரி இதுதான் நல்ல சமயம் என்றெண்ணி, வரும் வேலைகளையும் “பார்க்க ஆளில்லை, வரைந்துதரவும் ஓவியர்களில்லை” என்று சொல்லி தடுத்து நிறுத்திவிட்டேன்.

அப்படியானால் வயிற்றுப்பாட்டு? நல்லவேலையாக எனக்கு தெரிந்த ஓவியமல்லாத வேறு சில வேலைகளை செய்துவந்ததினால் தப்பித்தேன். இன்றும்கூட அவைதான் என் வாழ்க்கைக்கு உதவுகின்றன. முக்கியமாக இந்த வேலைகளில், எந்த திருத்தமும் இல்லை. யாரும் குறைசொல்லும் வழியும் இல்லை. எனக்கு நேரடியாக வேலைக்கு பணம் வழக்கும் மக்களுமில்லை. அவர்களின் திருத்தங்களை கேட்கவேண்டிய அவசியமும் இல்லை. இதற்கு இவ்வளவா என்று கேட்டவர்களிடம் பேரம் பேசி அவர்களுக்கு புரியவைக்கும் வேலையும் இல்லை.

நிம்மதியாக, சுதந்திரமாக, தைரியமாக, உண்மையாக என்படைப்புக்களை தந்துகொண்டிருக்கிறேன். பலன் பெறுகிறேன்.  என் ஓவிய கைகள் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கின்றன. அது நல்லதுதான். 

பின்குறிப்பு: ஆனால் இன்னமும்  அங்கே  ஆர்டர்கள் பெறப்படும் என்று இருக்கிறதே? என்று கேட்டால், அதன் விலைப்பட்டியலை, தெளிவான விபரங்களை பார்த்துவிட்டு, முடிவுக்கு வரவும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். 

Rebuild the art business for our customer



என்னைப்பொறுத்தவரை இந்தியர்களுக்கு ஓவிய அறிவு கொஞ்சம் அதிகம் தான். எப்படியென்றால், ஒரு ஓவியருக்கே தெரியாத, அறியாத, கற்றுத்தேறாத ஓவிய அறிவு நம் இந்தியமக்களுக்கு உண்டு. அவ்வறிவை அந்த ஓவியருக்கே கற்றுத்தரவும் தயங்காத ஆற்றல் கொண்டவர்கள். 

இதனால்தான், ஒரு ஓவியராக இந்தியாவில் பிழைப்பை நடத்துவது பஞ்சப்பாடு தரும். இது என் அனுபவத்திலிருந்து தருகிறேன். ஒருவேளை இவர்களோடு எப்படி ஓவிய வியாபாரம் செய்வது என்று அறியாத ஓவியனாகக்கூட நான் இருந்திருக்கலாம். அதனால் இந்த, என்னுடைய கணிப்பில் தவறிருந்தால்  சக ஓவியர்கள் என்னை மன்னிக்கவும்.

கிட்டதட்ட பதிமூன்று ஆண்டுகளாக, ஓவியத்தை மட்டுமே தொழிலாக வைத்துக்கொண்டு பிழைப்பை ஓட்டியிருக்கிறேன். கொஞ்சம் அங்கங்கே பஞ்சர் ஆன இடங்களில் எனக்கு தெரிந்த பிற, Graphics design, web design and developing, sound and video editing என்றெல்லாம் அவதாரம் எடுத்து சரி செய்திருக்கிறேன்.

ஒரு விரலை சுட்டினால், மூன்றுவிரல் நம்மைத்தான் காட்டுமாமே?! அப்படி ஏதேனும் இந்த சமூகத்தை குறை சொன்னால் “நீ” சரி இல்லை என்பதுதான் இந்த சமூகத்தின் பதிலடி. இருக்கலாம். அதன் பாடத்தை அல்லது விளக்கத்தை கடந்த ஒரு வருடத்தில் படித்து தெளிந்தேன். என்னா அடி?! தவிலுக்கு இரண்டுபக்கமும் அடி என்பதுபோல.

வாங்கிய  ஓவிய வேலைகளில் ஒருவர் கூட மிச்சம் வைக்காமல், இதை திருத்து, அதை திருத்து, இது என் மூஞ்சி இல்லை, தாடையை குறை, கன்னத்தை குறை, முடியை இப்படி திருத்து?! என்றெல்லாம் எனக்கு ஓவியம் கற்றுக்கொடுத்தார்கள்

முக்கிய நிகழ்வாக ஒரு கஷ்டமர்,  அவர் கேட்ட மாதிரிபடம் போல வரைந்து கொடுத்த பிறகு, இது நான் இல்லை, ஏற்கனவே கொடுத்த என் போட்டொ பார்த்து வரைந்து தாருங்கள் என்றார். மறுபடி முதலிருந்து வரைந்து கொடுக்க, இந்த பெண் முகம் குண்டாக இருக்கிறது சரி செய்க என்றார். சரி செய்து கொடுக்க இரண்டாவது முறை ஒப்புக்கொண்டார். ஏறக்குறைய வேலை முடிந்தது.  அடுத்து எழுத்துக்கள் பதிக்கும் வேலை. ஒரு கொடிபோல போட்டு அதில் எழுத்து கேட்க அப்படியே வரைந்து கொடுத்தேன். எனக்கு இந்த கொடி வேணாம், வேறு வேண்டும் வேறு வண்ணத்திலும் வேண்டும் என்றார்.

நான் எதற்கடா வம்பு என்று ஒரு பத்து கொடி மாதிரிகளையும், பத்து வண்ணங்களையும் கொடுத்து எதுவேண்டும் என்று சொல்லுக என்றேன். அதற்கு அந்த கஷ்டமர், இப்படி கேட்ட எப்படி? அந்த படத்தில் வைத்து காமிக்கவும் என்றார். 

யப்பா சாமி, இதுக்காக, உங்க சாய்ஸ்க்காக 10 மாதிரி அனுப்பிவைக்கிற பழக்கம் என்கிட்ட இல்லை. எதுவேண்டுமென்று சொன்னால் அதை வைத்து முடித்து அனுப்புகிறேன் என்றேன். அதற்கு அவரிடம் பதிலில்லை. சரி என்று நானே ஒரு மாதிரிவடித்து அனுப்ப, எனக்கு பிடிக்கலை,  வேறே வேண்டும் இத்தனை ஓவியம் செய்யறீங்க, எது பெட்டர்னு நீங்கதானே தரனும்?! என்று அந்த கஷ்டமர் பதில்தர,

என் அனுபவத்தில் எது சரியாக இருக்கும் என்று கொடுத்தால்தான் நீங்க மாற்ற சொல்லுகிறீர்களே? இதெல்லாம் சரிபட்டுவராது, உங்களுகாக என் முழு நேரத்தையும், முழு வேலைலையும் செய்துகொண்டிருக்க முடியாது, என்ன வேணும் என்று சொன்னால்தான் கேட்பதை தரமுடியும். எல்லாமே புதிதாக வரைவது தான் எங்கள் வேலை. பழசை புதிதாக தரும் மாயம் எங்களுக்கு தெரியாது. உங்களுக்கு தேர்ந்தெடுக்க தெரியாவிட்டால், இத்தோடு நிறுத்திக்கொள்வோம். உங்களுக்கு பிடித்தவகையில் வேறு யாரிடமாவது ஓவியம் வாங்கிக்கொள்க என்று சொன்னேன். நான் சொன்னதை புரிந்துகொள்ளும் நிலையில் அந்த கஷ்டமர் இல்லை. அவர் கொடுத்து சிறு அட்வான்சோடு நிறுத்திவிட்டேன். எனக்குத்தான் 5 நாள் ஓவியவேலை கெட்டது. அந்த ஓவியம் அந்த கஷ்டமரின் விருப்பம் என்பதால் வேறு யாருக்கும் மாற்றித்தரவும் முடியாது.

காசை வாங்கி ஓவியம் தருவதாலும், கஷ்டமர் நமக்கு கடவுள் (மகாத்மா காந்தி சொன்னது) என்பதாலும், கொஞ்சம் கூட கோபமே என்வார்த்தைகளில் வராத வகையில் மிக மிக அமைதியாகவேதான் பதில் கொடுப்பேன். ஆனாலும் அந்த வார்த்தைகளுக்கு அவர்களின் பதிலடி பலமாகவே இருக்கும். தரையோடு படுத்து காலை ஏதாவது செய்வதற்கு, கைகொடுத்து நட்பாக விலகிவிடலாமே?! ஆனாலும் சிலரை திருப்தி படுத்த இறையாலும் முடியாது.

இப்படியான கொடுமையான நிகழ்வில், கரோனா தொற்று நோயும் கலந்துகொள்ள, என் ஓவியவேலைகளும் தனிமைப்படுத்திக் கொண்டுவிட்டன. சரி, இந்த இடைவெளியும் நல்லதுதான், என்னை ஆற்றுப்படுத்தும் என்றெண்ணி, சிலர் அப்படியும் கேட்ட ஓவியங்களை, வாங்குவதில்லை என்று சொல்லிவிட்டேன். என் வாட்ஸப்பில், இந்த ஓவியர் புது ஓவிய வேலைகளை வாங்குவதில்லை என்றும் ஸ்டேடஸ் போட்டுவிட்டிருந்தேன்.

வழக்கமாக எனக்கு பிடித்த வேலைகளிலும், பொழுதுபோக்குகளிலும் நேரம் கழிந்தன. இதற்கிடையில் நான், இனிமேலும் இப்படி ஓவியம் வரைந்துதான் பிழைக்கனுமா? என்று அகத்தாய்வு செய்ய ஆரம்பித்துவிட்டேன். 

மேலும் இந்த எல்லாம் தெரிந்த, ஓவியரைவிடவும், ஓவிய அறிவுகொண்ட இந்திய மக்களை சும்மா விடலாமா? வேலை தருகிறார்களோ இல்லையோ ஒரு ஓவியரையும், ஓவியத்தையும் மதிக்க கற்றுக்கொடுக்க வேண்டாமா? சிந்தித்தேன்.

அதன் விளைவுதான் என் புதிய “caricaturelives website" அவதாரம். இனி உங்க போக்குக்கு நான் இல்லை. 

1) இதுதான் ஓவியம், நீயே தேர்ந்தெடுத்து தரும் உன் போட்டோ கொண்டு அதன் மாதிரியாக - கவனிக்கவும், அதன் மாதிரியாக ஓவியம் கிடைக்கும்

2) திருத்தங்களுக்கு இடமில்லை

3) தலைப்புக்கு, வாக்கியத்துக்கு இடமுண்டு

4) எழுத்துப்பிழை திருத்தம் உண்டு, எழுத்து மாற்றமில்லை (போட்டது போட்டதுதான்)

5) இதைச்சேர், அதைச்சேர் என்று சேர்க்கும் பொருளுக்கெல்லாம் இடமில்லை

6) இந்த குதிரை சவாரி, மாட்டுவண்டி சவாரி, பைக், கார், பிளேன் சவாரி எல்லாம் கிடையாது

7) விலை திருத்தம் கிடையாது

8) ஒரு ஓவியத்திற்கு 14 நாள் ( இருவாரம்) ஆகும்

 9)பின்புலம் வெள்ளை வண்ணம்தான். 

10) இந்த சும்மா Soft copies கிடையாது, ஒரே விலை ஒரே High resolution soft copies any format (without layers)

என்று மாற்றங்களை, கடந்த அக்டோபர் 10 முதல் கொண்டுவந்துவிட்டேன்.  இனி தொடங்கும் வேலைகளுக்கு காத்திருக்கிறேன். Coustmer ஆ கஷ்டமாரா என்று பார்த்துவிடவேண்டியதுதான்.


இவண்

சுகுமார்ஜி


    

Pattaiya Bharati Mani


 பாரதி மணி...



மணி என்பது பெயராகவும், பாரதி என்பது துணைப்பெயராகவும் இருக்கிறது என்பதை யோசித்துக்கொண்டேன்... ஓவியர் ஜீவாநந்தன் தன் நிலை தகவல்களிலும், பிறரது தகவல்களிலும் தனக்கே உரிய பொருத்தமான கேலியில் அந்த தகவலை மேலும் சுவாரசியமாக்குவார். அப்படியாகவே பாரதி மணி அவர்களின், அதற்கு பதிலடியையும், பிறகு அவரின் மண்வாசம் மிகுந்த மனவெளிப்பாடுகளையும் நான் படித்துக்கொண்டு வந்தேன்.


பொதுவாகவே தன்னை, தன் அறிவை, வளர்ச்சியை, அனுபவத்தை, ஆற்றலை, பலமின்மையை, தாழ்ச்சியை, மதிப்பை உணர்ந்தவர்கள் மட்டுமே இந்த உலகில் தன் வாழ்நாளில் அலை இல்லாத குளமாக (கடலாக) இருக்கமுடியும். பாரதி மணி அப்படி ஒருவாராக இருப்பார் என்பதை நான் நம்புகிறேன்.

பாரதி மணி என்பவர்தான் பாபாவில் முதலமைச்சராக வருவார் என்பது அப்பொழுதான் தெரியும். இல்லையென்றார் “யார்ரா இவரு?” என்பதாகவே இருந்திருக்கும். பிறகு விசயமறிந்தால் கப்பல் வியாபாரியாக இருந்திருக்கிறார், நீதிபதியாக இருந்திருக்கிறார்... இன்னும் பலபல...

பாரதி மணி அய்யா, சார் என்று சொன்னால் ஒரு அன்னிய பாவம் வரும் :) ஆனால் பாட்டையா என்று பாசத்தோடு அழைக்கின்றனர்... எனக்கோ பாட்டையா என்றால் ரொம்ப வயாதானவரோ என்ற எண்ணம் உருவாவதினால் அய்யா போதுமானது. நிலைத்தகவல் மூலமாக அவரைப்பற்றிய ஒரு முழு வடிவம் அவரின் சினேகிதத்தை உருவாக்கியது. நான் அவரின் நண்பரானேன். என்னுடைய சில நிலைத்தவகலுக்கும் அவர் அவருடைய பாணியிலேயே பதில் தந்திருக்கிறார். ஒரு புதியவரோடு குரலால் பேசினால் அதில் தொணிக்கும் குரல் உச்ச, கீழ் ஸ்தாயி எதிராளியையும், நம்மையும் புடம்போட்டு காட்டிவிடும்...பின்னர் விவகாரத்தையும் ஏற்படுத்தும்... நேரில் பார்ப்பதோ ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தி தள்ளிவைக்கும்... ஆனால் முகம் காணாது எழுத்துக்களால் பேசிக்கொள்ளும்பொழுது நம் மனம்தான் பேசிக்கொள்ளும். நம் அனுபவமே எதிராளுக்காக வடிவம் எடுத்து தானே உருமாறிக்கொள்ளும். அப்படி பாரதி மணி எனக்குள் ஒரு வடிவத்தை ஏற்படுத்தியிருந்தார்...

நிஜமாகவே பாரதி மணி எழுத்தாளரா, நாடக நடிகரா, கட்டுரையாளரா எனபதாக அவரைப்பற்றி எனக்கு வேறெந்த விசயமும் எனக்கு தெரியாது. ஆனால் அவரின் வார்த்தைகள் அந்த நுணுக்கங்களை கொண்டிருந்தன... தமிழோடு வார்த்தைகளால் விளையாடுவது எனக்கு வரும் என்பதால்... அதை யார் செய்தாலும்,அது எனக்கு பிடிக்கும்... பாரதி மணி அய்யாவையும் அப்படி பிடித்திருந்தது... வழக்கமாக என் நண்பர் குழாமுக்கு அவர்களின் பிறந்தாநாளின் அன்று என் பாணியில் ஒரு கேலி சித்திரம் தருவது உண்டு. பாரதி மணி அய்யாவுக்கு தனியாக ஒரு பரிசாக தருவது என்று முடிவெடுத்து அவரின் ஒளிப்படம் ஒன்றை சேகரித்து, அவருக்கே தெரியாமல் அதை வரைந்துமுடித்து என் பக்கத்தில் வெளியிட்டேன்...

கடவுளின், பெற்றோர்களின் ஆசீர்வாதத்தால் யாரை வரைந்தாலும் அதில் அவர்களின் முகபாவனையை அப்படியே கொண்டுவரும் தகைமை எனக்கு இருப்பதாக நான் நம்புகிறேன்... அந்தவகையாகவே பாரதி மணி அவர்களின் ஓவியம் அவராலேயே மிகச்சிறப்பாக பாராட்டப்பட்டது... அந்த ஓவியத்தின் பக்கத்திலேயே மிக அருமையான கலந்துரையாடலும் நடைபெற்றது...

அந்த ஓவியத்தை அவரின் பிறந்தநாளுக்கே பயன்படுத்திக்கொண்டேன்... ஒரு சில நாட்களுக்கு பிறகு ஒரு நன்றியுரை எனக்கு கிடைத்தது.

---
அன்புள்ள சுகுமார்ஜி: என்னையும் ஒரு பொருட்டாக மதித்து என் பிறந்தநாளுக்கு யாரும் தரமுடியாத ஒரு பரிசை தந்திருக்கிறீர்கள். என் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்துப்போனது.

என் மனமார்ந்த நன்றி....God bless you!

பாரதி மணி
---
அதற்கு பிறகு என்னையும் அவர் புரிந்துகொண்டிருப்பார் (!?) என்ற நம்பிக்கையில் அவரின் தவலுக்கு நானும் என்பாணியில் கேலியோடு கூடிய பதில்கள் தர ஆரம்பித்தேன். கொஞ்சம் ஒட்டி வந்துட்டோம் அல்லவா... அதான் :)

சென்னை பலநாட்கள் போய்வரும் வேலை எனக்கிருப்பதால் வாய்ப்பு கிடைத்தால் சந்திக்கிறேன் அய்யா என்றுதான் சொல்லியிருந்தேன். நான் அதிகபட்சமாக ஒருநாளுக்கு மேல் சென்னையில் தங்குவதுமில்லை. சென்றமாதத்தில் ஓவியர் ஜீவாநந்தன் அவரை சந்திந்த வேளை நானும் சென்னையில் வேறு ஒரு அலுவலில் இருந்ததால் பார்க்க இயவில்லை. நான் இருப்பது தெரிந்து “நீங்களும் வந்திருக்கலாமே சுகுமார்” என்றார்...

என்பெயரில் சுகுமார்ஜி என்பதில் சுகுமார்தான் என்பெயர் ஜி என் தந்தையின் ஆங்கிலமுதல் எழுத்து... ஆனால் ஜி ஹிந்தி ஜியை தோற்றுவிக்கும்... பிரான்ஸ் நாட்டில் இருக்கும் தமிழ் ஆர்வலர் சாமிநாதன் (சாம் விசய்)
“நான் சுகுமார்னுதான் கூப்பிடுவேன்... ஜிலாம் சொல்லமாட்டேன்” என்றார்...
“அய்யா அந்த விளக்கமே வேண்டாம்... உங்களுக்கு எப்படி பிரியமோ அப்படி கூப்பிடுங்கள்” என்று சொல்லிவிட்டேன்...

அதேபோல நண்பர் வட்டாரத்தில் “சுகு”  மட்டும்தான்... நிலைத்தகவலில் இதை தெரிவித்தவுடன் பாரதி மணி அய்யாவும் சுகு என்றே அழைக்க ஆரம்பித்தார்.

நேற்று (07-01-2013) காலை தாம்பரத்திலிருந்து பாரதி மணி அய்யாவை கைபேசியில் அழைத்தேன்...
என்னை நான் அறிமுகபடுத்திக்கொண்டதும் மகிழ்ந்தார்... ஆனால் “கடவுள் வந்திருந்தார்” சுஜாதாவின் நாடக பயிலரங்குக்கு செல்லவிருப்பதால் நீங்கள் நாளை காலை வாருங்களேன் என்றார். எனக்கும் (!?) நாளை நேரமிருப்பதால் சரி அய்யா என்றேன்.
“நீங்க இருந்து கண்டிப்பா நாளைக்கு பார்த்துட்டுத்தான் போவனும்” என்றார்.

செவ்வாய்கிழமை காலை எழு மணிக்கு மீண்டும் அழைத்தேன். வணக்கத்திற்குப்பின் உங்கள் இல்ல முகவரியை எனக்கு அனுப்பிவையுங்கள் என்றேன். குறுஞ்செய்தி வந்த சில நிமிடங்களில் வடபழனி பேருந்தில் ஏறிவிட்டேன். அங்கேயிருந்து சாலிகிராமம் கடைசி நிறுத்தம் என்பதை அறியாமல், வேறு ஒரு பேருந்தில் சாயி நகர் இறங்கி மூன்றாவது பிரதான சாலை சென்று ஒரு முட்டுச்சந்தில் (!? - அவரே சொன்னது) இருந்த தங்க (முட்டையிடும்)குடிலை அடைந்து வாசலில் நிற்க...
கைபேசியில் அழைத்தார்... எங்கிருக்கீங்க சுகுமார்?
உங்க வாசலில்...
ஓ... வந்தாச்சா... இந்தாவாரேன்...

கதவு திறந்த அந்த மனிதரை பார்த்ததும் ஏற்கனவே அறிமுகமான ஒருவராகவே அவரைக்கண்டாலும், வணக்கம் செலுத்தி உள்ளே நுழைந்தேன்... என் தோளில் கைபோட்டு தன் அன்பை வெளிக்காட்டி தன் அறைக்கு அழைத்துச்சென்றார்...

அமர்ந்ததும் நான் ஆரம்பித்தேன்...
ரொம்பநாளைக்குப்பிறகு என்னை “டேய் சுகுமாரா”ன்னு சொன்னது நீங்கதான் அய்யா என்றேன்.
“ஹே” என்பதாக பாவனை காட்டி சிரித்தார்...
“என்னை அப்படி என் தந்தைமட்டுமே அழைப்பார், நீங்க அப்படி அழைத்தது எனக்கும் சந்தோசமாக் இருந்தது” என்றேன்...

இந்த “டேய் சுகுமாரா” ஒரு பிளாஷ் பேக்...
பாரதிமணி அய்யா தகவல் தந்திருந்தார்...

---

Bharati Mani ஐயோ.....ஹரன்! நானா?.......எனக்கு கோணல் இல்லாமல் ஒரு நேர்கோடு போடத்தெரியாது! இது ஓவியர் ரஷ்மி வரைந்தது! எனக்கு பார்த்து ரசிக்க மட்டும் தான் தெரியும்!

Caricaturist Sugumarje Bharati Mani Sir... ஒரு படம் வரைந்துதான் பாருங்களேன்!

Bharati Mani சுகு! சில விஷயங்கள் எனக்கு வராதென்ற பிடிவாதமான நம்பிக்கை எனக்குண்டு. காதல் வயப்பட்டபோதே ஒரு கவிதை நான் எழுதியதில்லை. பள்ளிக்கூடத்தில் ட்ராயிங் கிளாசுக்கு மட்டம்.......காரணம் எனக்கு வரையத்தெரியாது! சமீபகாலம் வரையிலும் எழுத்து எனக்கு வராதென்பதை பிடிவாதமாக நம்பினேன்.......இப்போதும் நம்புகிறேன்!

Caricaturist Sugumarje இருக்கலாம்... ஆனால் உங்கள் எழுத்துக்களை தொகுத்தால் அருமையான புத்தகமாக உருவெடுக்கும்... (பிச்சி, பிச்சி எழுதுவதால் அதன் முழுவடிவம் கிடைக்காதிருக்கிறது என்று நினைக்கிறேன்)

Bharati Mani அடேய்......சுகுமாரா! என்ன வார்த்தை சொல்லிவிட்டாய்? நான் One Book wonder! என்பது உனக்குத்தெரியாதா? இரண்டாம் புத்தகம் எழுதி வாசகர்களை துன்புறுத்தமாட்டேனென்று சபதம் வேறு செய்திருக்கிறேன்! தண்டனையாக என் ஒரே புத்தகம் ‘பல நேரங்களில் பல மனிதர்கள்’ தொகுப்பை ஒரே மூச்சில் படிக்கக்கடவது!

Caricaturist Sugumarje ஏற்கனவே ஒரு சபதம் போனமாதம் சொன்னீர்கள்... (முதல்வராக மாட்டேன் என்று) இப்பொழுது இன்னொன்று... நீங்கள் புத்தகம் போடவேண்டாம்... நாங்கள் தொகுத்துக்கொண்டாலே ஆயிற்று

Caricaturist Sugumarje புத்தகம் படிப்பது தண்டனையல்ல... அது ஒரு ஆத்மாவோடு வாழ்வது

Bharati Mani அடாடா! மெச்சினோம்! எம் வீட்டுக்கு வந்தால், எனது புத்தகம் ‘பல நேரங்களில் பல மனிதர்கள்’ ஒரு பிரதி இலவசமாகக் கொடுக்கப்படும் என்பதை இந்த நல்ல நேரத்தில் அறிவித்துகொல்கிறோம்!

Caricaturist Sugumarje கொடைக்கு நன்றி அய்யா!

---
ஆக நேற்று காலை ஒருமணிநேரத்திற்கும் மேலாக அவரோடு முடிவே இல்லாது கலந்து பேசிக்கொண்டிருந்தாலும் என் மதிய ஊர்திரும்பும் எண்ணம் அப்போதைக்கு முடித்துவைத்தது... இன்னும் நிறைய அவரோடு பேச விசயங்களும், நேரமும் காத்திருக்கின்றன...

வரும்பொழுது அவரின் வார்த்தைபடியே தண்டனையாக (பரிசாக) புத்தகமும் வாங்கியாயிற்று... இனி ஒரே மூச்சில் படிக்கனும்... தண்டனையின் அடுத்த சாராம்சம் அதானே :)

இதற்கு துணை நின்ற முகநூலுக்கு நன்றி!

பாட்டையா பாரதி மணி அவர்களின் Facebook ID