CJ for You: songs

songs

Showing posts with label songs. Show all posts
Showing posts with label songs. Show all posts

Shall we chant mantra or play bhakti songs when we practice meditation?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, தவம் செய்யும் பொழுது, மந்திரம் சொல்லலாமா? பக்தி பாடல்கள் கேட்கலாமா? 

பதில்:

தவம் செய்யும் பொழுது மந்திரம் சொல்லுவது உண்டு. அதுபோல தவம் செய்யும் பொழுது பக்தி பாடல்கள் கேட்பதும் உண்டு. பாடல்கள் பாடியே கொண்டாட்டமாக தவம் செய்வதும் உண்டு. இது இன்னமும் உலக அளவில் ஒவ்வொரு அன்பர்களாலும் தொடரப்பட்டு வருவதுதான். அதில் எந்த சந்தேகமும் இல்லை.

இவை எல்லாம், பதஞ்சலி முனிவர் வகுத்த அஷ்டாங்க யோகத்தில் இருக்கும் நிலைகள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், தியானம் என்ற நிலைக்கு நாம் உயர விரும்பினால், இதையெல்லாம் விட்டுவிட வேண்டியது அவசியமாகிறது. ஆனால் நாம் தவம் என்பதாக, இந்த மந்திரம் சொல்லுவதையும், பக்தி பாடல் கேட்பதையும், நாமே பாடி ஆடுவதையும் ஏற்றுக்கொண்டுவிட்டோம். குருமகான் வேதாத்திரி மகரிஷி வழங்கிய, மனவளக்கலையான, எளியமுறை குண்டலினி யோகத்தில், மந்திரமோ, தந்திரமோ, எந்திரமோ இல்லை. அதை எல்லாம் கடந்த, அஷ்டாங்க யோகத்தில் ஏழாவது நிலையாகிய, தியானத்திற்கு, உடனே வந்துவிடுகிறோம் என்பதே உண்மை.

இதனால், சராசரியாக தவம் செய்ய விரும்பும் அன்பருக்கும், மனவளக்கலை கற்ற அன்பருக்கும் தவம் செய்வதில் வித்தியாசம் வந்துவிடுகிறது. எனவே மனவளக்கலையில் பயணிக்கும், அன்பர்கள் தவம் செய்யும்பொழுது, இதையெல்லாம் செய்யவேண்டியதில்லை. தவம் இயற்றுவதற்காக, மனவளக்கலை ஆசிரியர் சொல்லிக் கொடுக்கப்பட்ட வழிமுறைகளை செய்துவந்தால் போதுமானது.

வாழ்க வளமுடன்.

-

வேதாத்திரியம் குறித்த கேள்வி பதில்கள் இந்த WhatsApp குழுவழியாகவும் பெறலாம்!