CJ for You

Never Forget Accident


Hi all,

They usually say forget the accident. But, if we forget it, we also forget the life lesson for us. The accident, its pain, the comfort and love that came with it, the advice, the help, the cooperation will all be an opportunity to forget. The mercy of all the human beings involved will be wasted.

In this world of love and compassion, what is the chance to feel it, and what if it is missed? Only if I realize it can I return to this community.

Later on 22th July 2016, I met a accident, with my bike. On that case, it is my fault. I skidded off the road and crashed into a truck, avoiding colliding with two women who were coming my way.

Just recall from FB post.

Me: Doctor, there will be a live on August 20th. Can you untie and train before that?

Doctor: (Laughs) That's not possible, even if it's the President of the United States for four weeks, wait until August 24. Right?

-

But that live, has been confirmed. To my left is “Live Caricature on Event” at Wedding Reception, Tiruchirappalli.


#LiveCaricature #Caricature #Sugumarje #Caricaturelives #accident #loveandcompassion

Everyone has a end-tip on the Mayarope


மாயக்கயிறு



நாம் எல்லோருமே ஒரு மாயக்கயிறால் இணைந்திருப்பதை அறியமுடியும். ஆனால் அதற்கென்று தனித்தனியான பெயர்கள் இடப்பட்டிருக்கின்றன. உதாரணமாக சொல்லுவதன்றால், 

அன்பு
கருணை
பாசம்
காதல்

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். ஓவ்வொரு கயிறின் முனையும் ஓவ்வொரிடமும் இருக்கிறது. இங்கிருந்து நகர்ந்தால் நாம் அந்த மறுமுனையில் இருப்பரிடம் சென்றுவிடலாம், அவர்களோடு மகிழலாம். ஏன்? சண்டைகூட போடலாம்தான். பொதுவாக நாம், மனிதர்களை, மனிதர்களுக்குள்ளாக இணைக்கும் மாயக்கயிறைத்தான் நாம் பேசிக்கொண்டிருக்கிறோம் அல்லது ஏற்றுக்கொண்டிருக்கிறோம். 

இறையோடும் ஒரு மாயக்கயிறு இருக்கிறது. நம்மில் சிலரே அந்த மாயக்கயிற்றின் முனையை பிடித்திருக்கிறார்கள். சிலர் விட்டுவிட்டார்கள். சிலர் மறந்தும் விட்டார்கள். இதென்னய்யா இறை? அப்படியொன்று இருக்கிறதா? என்று கேட்பவர்களுக்கு, பதிலும் இருக்கிறது.

இறை என்றால் என்ன என்று நினைக்கிறீர்கள்? உங்களுக்குள் இருக்கும் பழைய கருத்துக்களை அப்படியே விட்டுவிடுங்கள். இப்பொழுது சொல்வதை புதிதாக கேட்டுக்கொள்ளுங்கள். ஆனால் ஆராய்ந்து பார்த்து பிறகு ஏற்றுக்கொள்ளுங்கள் உங்களுக்கு அதில் உண்மையிருந்தால்!

இறை என்றால் இறைந்துகிடக்கும் தன்மையான மெய்ப்பொருள். மெய்ப்பொருள் என்று ஏன் சொல்லுகிறோம்?!, இருந்தது, இருக்கிறது, இருக்கும் என்ற தகமை கொண்டதாகும். அந்த இறை என்பதற்கு, ஆழத்தில் இருந்து எடுத்துக்கொள்ளுதல்  என்று ஒரு அர்த்தமும் கிடைக்கும். ஆக இறை என்றால் உங்களுக்கு எல்லா பக்கங்களிலும் இறைந்து கிடப்பது என்று தெரிகிறது. ஆம் தெரிகிறது, ஆனால் நம்மால்தான் பார்க்கமுடியவில்லை.

ஆகாயத்தை பார்க்கிறீர்கள், அந்த ஆகாயம் என்ற ஒன்று இல்லை என்றால் ஆகாயத்தை பார்க்க முடியாது. ஆனால் அந்த ஆகாயத்திற்கும், உங்களுக்கும் இடையிலே இருப்பது என்ன? சரி காற்று இருக்கிறது, வெப்பம் இருக்கிறது, தூசுகள் இருக்கிறது... இன்னும் சில. அப்போது அவற்றையும் நீக்கிவிட மீதமிருப்பது என்ன? அதுதான் இறைந்து கிடக்கிறது! ஆம் இதைத்தான் நம் கண்களால் காணமுடிவதில்லை. ஆனால் அது நம்மோடு மாயக்கயிற்றால் பிணைக்கப்பட்டுத்தான் இருக்கிறது. கயிற்றையும், அதன் முனையையும் விட்டுவிட்டோம். இங்கே இந்ததளத்தில், அதை பற்றிக்கொள்ளும் ஒருசில வழிகளை, ஆய்வுகளாக காண்போம், எந்த சுவாரஸ்யத்திற்கு குறைவும் இன்றி.

மாயக்கயிறு என்பதை இன்னமும் உதாரணமாக காண்போமா? 

உங்கள்முன் யாரேனும் சிரித்தால், முதலில் அவரொரு பைத்தியம் என்றுதானே நினைப்பீர்கள், ஆனால் கொஞ்சம் நேரம் செல்லச்செல்ல அந்த பைத்தியக்கார சிரிப்பு உங்களையும் தொற்றிக்கொள்ளும்.

உங்கள் மனைவியோ, கணவரோ, நண்பரோ, நெருங்கிய உறவினரோ தன்னுடைய கஷ்டத்தில் அழுதால், இதுவரை கல்நெஞ்சம் என்று பெயர்வாங்கிய நீங்களும் அழுதுவிடுவீர்கள்.

உங்கள் குழந்தையின் குதூகலத்தை கொஞ்ச நேரம் கவனியுங்கள், அந்த மகிழ்ச்சி உங்களையும் தொற்றிக்கொள்ளும்.  

ஆக, இதெல்லாம் மாயக்கயிற்றின் இணைப்பில்லாது நிகழுமா? இது போக இன்னும் எதுவெல்லாம் நிகழும் என்பதை தொடர்ந்துவரும் பதிவுகளில் காண்போமா? வாருங்கள், இணைந்திருங்கள்.

வாழ்க வையகம், வாழ்க வளமுடன். 




All Boys are Girls - எல்லா ஆண்மகனும் பெண்மகளே!


இந்த உலகத்தில், ஆண், பெண், மூன்றாம் பாலினம் இப்படி கலந்துதான் வாழ்ந்து வருகிறோம். ஆனாலும் தனித்த பாலினமாக நாம் உணர்வது எப்போது? எப்படியானாலும், தன் பாலினம் மீதும், பிற பாலினம் மீதும் கவர்ச்சி ஏற்பட்டுக்கொண்டேதான் இருக்கிறது.

சில வேலைகளில், சிலர் தன் பாலினத்தை இயற்கையை மீறி மாற்றிகொள்ளவும் துணிகின்றனர். அப்படியான விபரங்கள் குறித்த ஒரு காணொளி. 

வேதாத்திரி மகரிசி மாக்கோலமாய் விளைந்த மதிவிருந்து தத்துவங்கள்


வேதாத்திரிய தத்துவங்கள்: Vethathiriya Philosophy Collection (Tamil Edition) Kindle Edition

 
அருட்தந்தை வேதாத்திரி மகரிசி, எளிய மக்களின் ஞானி. தன் வாழ்நாள் முழுதும், மக்களுக்காகவே, மக்களையே இறையாக பாவித்து தொண்டு செய்து உய்வித்தவர். வாழ்க வையகம், வாழ்க வளமுடன் என்ற அற்புத மந்திர வார்த்தைக்கு சொந்தக்காரர். எவரொருவரும் தன்னை அறிந்து, உணர்ந்து, அந்த வழியாகவே இறையை அறிந்து கொள்ளும், எளிய யோக சாதனையை, மனவளக்கலை மூலம் இந்த உலகுக்கு தந்தவர். உலக சமுதாய சேவா சங்கத்தின், நிறுவனர்.

ஓவ்வொரு தனி மனிதனும், தன் களங்கங்களை போக்கி, தன்னை மனதை, தன் அறிவை உயர்த்திக்கொள்வதன் மூலமாகவே, எல்லைகளில்லா ஓர் உலகமும், கூட்டாட்சியும், அதன் வழியாக உலக சமாதானமும் மலர வழி அமைத்து, எல்லோரையும் வழி நடத்துபவர். அவரின் தத்துவங்கள், கல்லூரி பாடமாகவும், பாடநூலாகவும் இளைய சமுதாத்தினரை சென்று சேர்ந்திருக்கிறது.

மனம் என்றால் என்ன என்பதற்கும், இறை என்றால் என்ன என்பதற்கும் தெளிவான விளக்கம் கொடுத்தவர். அந்த மனதை அறிந்தாலே அதனுள்ளே உறைந்திருக்கும் இறையையும் அறிய வழி கொடுத்தவர்.

இருபத்தைந்து ஆண்டுகளாக, 1953 ம் ஆண்டு முதலாக, அருட்தந்தை வேதாத்திரி மகரிசி அவர்களில் துணைவியார், வாசலில் கோலமிடும்பொழுது, மகரிசி சொல்லும் அருளுரைகளையும் எழுதுவது வழக்கமாக இருந்திருக்கிறது. அந்த அருளுரைகளை நூலாக பதிவு செய்து, “மாக்கோலமாய் விளைந்த மதிவிருந்து” எனும் தலைப்பில் உலக சமுதாய சேவா சங்க அன்பர்கள், வெளியிட்டிருக்கிறார்கள்.

அந்த அருளுரைகளின் சாரத்தை, இங்கே தத்துவமாக விரித்து, கருத்தாக்கம் செய்திருக்கிறேன். அருட்தந்தை வேதாத்திரி மகரிசியின் வார்த்தைளில் கண்ட உண்மைகளை, அவர் சொல்லிச்சென்ற வார்த்தைகளின், அனுபவங்களின் வாயிலாகவே தர முனைந்திருக்கிறேன்.

அருட்தந்தை வேதாத்திரி மகரிசி வழி செல்லும் அன்பர்களுக்கும், மாணவர்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும், தேடலை துவங்கும் தனிமனிதருக்கும் உபயோகமாக இருக்கும் என்று நம்புகிறேன். அவர்களை, இறைநிலையோடு இணைந்து நின்று வாழ்த்தி மகிழ்கிறேன். வாழ்க வையகம், வாழ்க வளமுடன்.

அமேசான் மின்னூல் வரிசையில் விற்பனைக்கு கிடைக்கிறது.

https://amzn.to/38ewMWY