How Vethathiriya Kayakalpa yoga practice helps to fertility? | CJ

How Vethathiriya Kayakalpa yoga practice helps to fertility?

How Vethathiriya Kayakalpa yoga practice helps to fertility?


வேதாத்திரிய காயகல்ப யோக பயிற்சி, குழந்தைப் பிறப்புக்கான உயிரணுக்களை ஊக்கப்படுத்துகிறதா? விளக்கம் தருக.

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா! வேதாத்திரிய காயகல்ப யோக பயிற்சி, குழந்தைப் பிறப்புக்கான உயிரணுக்களை ஊக்கப்படுத்துகிறதா? விளக்கம் தருக.


பதில்: 

மரபு, நவீன மருத்துவ உண்மைகளைகடந்து, இப்பயிற்சி வழியான உண்மை மட்டுமே இங்கே சொல்லப்படுகிறது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால், சித்தர்கள் தங்களின் யோகவாழ்வின் சிறப்புக்காகவும், வாழ்நாளின் நீட்டிப்புக்காகவும் உருவாக்கிய, காயகல்ப யோகபயிற்சி உலகெங்கும், உயர்ந்த ஞானிகளி வழியாக பரவினாலும், சராசரி மக்கள் அதில் ஆர்வம் கொள்ளததால், காலப்போக்கில் காயகல்ப யோகபயிற்சி அழியாமல் இருந்தாலும் கூட, அந்த வழிமுறைகள் சிதறிப்போய் விட்டது. முழுமையான அதை உணர்ந்து செய்தவர்கள் யாருமில்லாத நிலை ஆகிவிட்டது.

ஆண்பெண் உடலுறவுக்கு உதவும், அந்த இன்பத்தில் நிலைத்திருக்க துணையாக இருக்கும், அந்த உறவுகளில் உடல் சோர்வை நீக்கி உற்சாகப்படுத்தும் பயிற்சிதான் இந்த காயகல்ப யோகபயிற்சி என்ற நிலையில்தான், உலகில் ஆங்காங்கே சிதறி செயல்பட்டுவந்தது. சொல்லித்தருபவரின் நிலையும் இதுதான், கற்றுகொள்பவரின் நிலையும் இதுதான். ஆனால் இந்த காயகல்ப யோகத்தின் நோக்கமும், உண்மையும் சித்தர்கள் பாடல்களில் குறிப்பிடப்பட்டிருப்பதும் உண்மை ஆனால் அதில் எப்படிச் செய்வது என்ற விளக்கம் அதில் இல்லை, அக்கவி நூல்குறிப்புக்கள் இன்னமும் நம் கைகளில் இருப்பதும் உண்மை.

அந்த காயகல்ப கவிகள் குறித்து ஆராய்ந்த, குருமகான் வேதாத்திரி மகரிஷி, தனக்கு தெரிந்தவற்றோடு, உலகெங்கும் பரவிக்கிடக்கும் அரைகுறையான அந்த பயிற்சிகளையும், சிலரிடம் கேட்டும், நேரிலே பார்த்து விளக்கம் பெற்றும், அந்த பயிற்சி குறித்து ஆராய்ந்து உண்மை அறிந்தார். அதை செய்துபார்த்து, விளைவுகளை கணித்து, திருத்தமும் பெற்று, முழுமையாக்கினார். அதை வேதாத்திரியத்தின் வழியாக, எல்லா மக்களுக்கும் கிடைக்கச்செய்ய ‘காயகல்ப யோக பயிற்சி’ திட்டமாகவும் கொண்டுவந்தார்.

அத்தகைய காயகல்ப யோக பயிற்சிதான், ஆணுக்கும் பெண்ணுக்குமான வித்து நாத சக்தியை அடைப்படையாகக் கொண்டதாகும். மேலும் அந்த வித்துநாதத்தை ஊக்கப்படுத்தி, உயிரணுக்களை வலுப்படுத்துகிறது. உயிராற்றலையும், அதன் படர்க்கை நிலையான மனதையும் வளப்படுத்துகிறது. இந்த உண்மையை, குரு மகான் வேதாத்திரி மகரிஷி, 1980ம் ஆண்டுகளின் வெளிநாட்டு பயிற்சி வகுப்புக்களிலே விளக்குகிறார். அந்த வகுப்பில் கலந்து கொண்ட அன்பர், தன் மனைவிக்கு, குழந்தைப்பேறு பிரச்சனை நீங்கி, உயிரணுக்களின் எண்ணிக்கை அபரிதமாக உயர்ந்ததை சொல்லுகிறார். அதுபோலவே இங்கும் பலருக்கு அத்தகைய மாற்றம், ஆணுக்கும், பெண்ணுக்கும் கிடைத்த உண்மைகளை அறியமுடிகிறது.

        நான் மருத்துவன் அல்ல, யோக ஆராய்ச்சியாளன். எனக்கு கிடைத்த உண்மை தகவல்களின் அடிப்படையில் இக்கருத்துகளை உங்களுக்கு அளிக்கிறேன்.

நீங்களும், காயகல்ப யோக பயிற்சிக்கு முன்னதாக ஒரு மருத்துவ அறிக்கையை பெற்றுக்கொண்டு, அந்த காயகல்ப யோக பயிற்சி தொடர்ந்து செய்துவந்து, குறைந்தது மூன்று மாதங்களுக்குப் பிறகு இன்னொரு மருத்துவ பரிசோதனை செய்து உண்மையை அறியமுடியும். மேலும் விளக்கங்களின் உண்மை அறிய, மனவளக்கலை மன்றத்தை அணுகலாம். ஆழியாறு காயகல்ப யோக பயிற்சி ஆராய்ச்சி மையத்தை அணுகலாம்.

வாழ்க வளமுடன்.

-