They say there is a planetary dosha in my horoscope. As a remedy for this, they say that a puja should be performed, which will cost so much money. I don't have that much money. While there is hope in that, is there any simple solution? | CJ for You

They say there is a planetary dosha in my horoscope. As a remedy for this, they say that a puja should be performed, which will cost so much money. I don't have that much money. While there is hope in that, is there any simple solution?

They say there is a planetary dosha in my horoscope. As a remedy for this, they say that a puja should be performed, which will cost so much money. I don't have that much money. While there is hope in that, is there any simple solution?


வாழ்க வளமுடன் ஐயா, என்னுடைய ஜாதத்தில் கிரக தோஷம் இருப்பதாக சொல்லுகிறார்கள். இதற்கு பரிகாரமாக, பூஜை செய்யவேண்டும், அதற்கு இவ்வளவு பணம் ஆகும் என்று சொல்லுகிறார்கள். என்னிடம் அவ்வளவு பணமும் இல்லை. அதில் நம்பிக்கை இருந்தாலும், ஏதேனும் எளிய தீர்வு இருக்கிறதா? இருந்தால் எனக்கு சொல்லுவீர்களா?

கிரக தோஷம் என்பது, நாம் பிறந்த பொழுது இருக்கிற கிரக நிலைகளின் அடிப்படையில் அமையும் நிலைகளாகும். இது என்றும் மாறாதது. எனினும் பரிகாரம் செய்வதால், நம்முடைய உடலும், மனமும் அதை ஏற்றுக்கொண்டு செயல்படும் பக்குவதை பெற்றுவிடும். பொதுவாக, நம்முடைய உடலில் ஒவ்வாத பிரச்சனையும், நோய்க்கான அறிகுறியும் வந்தால், மருந்து எடுத்துக் கொள்கிறோம். ஒருபக்கம் நோயை தீர்க்கவில்லை என்றாலும், அந்த நோய் தாக்கத்தை, தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தியை அளிக்கிறது அல்லவா, அதுபோல பரிகாரமும் செயல்படும்.

பரிகாரமே இல்லை என்பதுதான் உண்மையான கருத்து. ஆனால், இதை வியாபாரமாக செய்பவர்களை நாம் கண்டுகொள்ள வேண்டியதில்லை. ஆனால், ஜாதகத்தின் வழியாக, பரிகாரம் வேண்டுவோருக்கு நன்மைகள் செய்துதரும், உண்மையான ஜோதிடர்களும் இருக்கிறார்கள். இவர்கள், குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட கோவில்களுக்கு சென்று வழிபடவும், அங்கே சில பூஜைகளை செய்யவும் உதவுவார்கள். சிலருக்கு, காசி, ராமேஸ்வரம் என்றும் போய்வர சொல்லுவார்கள். நதி, கடல் நீர் நிலைகளிலும் பூஜை செய்ய வழிகாட்டுவார்கள். இவை எல்லாமே, நமக்கு ஓரளவில் திருப்தி அளிக்கும். மன உறுதியை தந்து, பரிகாரமாக செயல்பட்டு, வழக்கமான நம் வேலைகளை பார்த்திட உதவும்.

இத்தகைய பரிகாரம், உண்மையிலேயே நம்முடைய நேரத்தையும், பணத்தையும் எடுத்துகொள்ளும் என்பதுதான் நிஜம். ஆனால் இது வியாபாரமாக செய்யும் ஏமாற்றுவேலை அல்ல. அந்த அளவில் திருப்தி பெற்றுக் கொள்ளலாம்.

எனினும், பக்தி கடந்த, பக்தியின் உண்மை நிலையாகிய, யோகத்தில், நாமே நமக்கான பரிகாரத்தை செய்துகொள்ள முடியும். நம்முடைய கர்ம வினைகளையும், அதன் பாவப்பதிவுகளையும் நாம் போக்கிக் கொள்ளமுடியும். இதற்கென்று சிறப்பாக வடிவமைக்கப்பட்ட தியானம், தவம் செய்து தீர்க்கலாம். வேறு ஏதேனும் பெரும் செலவு இதில் இல்லை. மேலும் இருக்கும் இடத்திலேயே செய்துகொள்ளலாம். வேதாத்திரிய மனவளக்கலையில் வழங்கப்படும், பஞ்ச பூத நவக்கிரக தவம், மிகச்சிறந்த தேர்வு ஆகும்.

இதை யார்வேண்டுமானாலும் இயற்றலாம் என்பது அதன் மற்றொரு சிறப்பு. தனிப்பட்ட தீட்சை அவசியமில்லை. வயது வித்தியாசமும் இல்லை. அந்த உண்மையை இந்த காணொளி வழியாக அறியலாம். கூடுதலாக, பஞ்ச பூத நவக்கிரக தவம் காணொளியும் உள்ளது.

இந்த தவம் எப்படி செய்வது? அமைதியாக உட்கார்ந்து கொண்டு, கண்கள் மூடி இறைவணக்கம் செய்வது போன்று பாவனை செய்யலாம். கை விரல்களை ஒன்றோடு ஒன்று கோர்த்து, மடியில் வைத்துக்கொள்ளலாம். முதுகுத்தண்டு நேராக இருக்கும்படி நிமிர்ந்து உட்காரவும் வேண்டும். சுகாசனம் என்ற நிலை போதும், அதாவது சம்மணம் இட்டு உட்கார்வது போல.

ஒரு ஒலிபெருக்கி வழியாக, இந்த கானொளியை ஒலிக்கச்செய்து, அதன் வார்த்தைகளை கேட்டு, வேறெந்த கற்பனையும் எழுப்பிக் கொள்ளாமல், வெளியே என்ன நடக்கிறது? என்று சிந்திக்காமல் இருந்தால் போதுமானது. அரைமணி நேரத்திற்குள் தவம் முடிந்துவிடும். இப்படியாக தினமும் காலையும், மாலையும் செய்துவரலாம். இதுவே மிகப்பெரிய பரிகாரமாக வாழ்வில் செயல்படுவதை நீங்களே உணர்ந்துகொள்வீர்கள்.

எவ்வளவு நாட்கள் செய்யவேண்டும் என்று கேட்டால், அதற்கு கணக்கு ஏதும் இல்லை. தினமும் இதை செய்வதால், எண்ணற்ற நன்மைகளை பெற, உங்களை தகுதியாக்கிக் கொள்கிறீர்கள். எனவே வாழ்நாள் முழுவதும் தொடரலாம்.

உங்கள் ஜாதகம் வழியாக பரிகாரம் என்னவென்று தேடுகிறீர்களா? உண்மை விளக்கம் அறிக! Human Astrology Planets

பஞ்சபூத நவக்கிர தவம் நடத்தும் வேதாத்திரி மகரிஷி / Panchabhutha Navagraha Thavam Vethathiri Maharishi

வாழ்க வளமுடன்.