In this yoga of yours, only one who is lazy without any job, who has an inferiority complex, who does not know how to make a living, who hates life, who has withdrawn himself from society, who has experienced problems in family and who wants to escape from worldly duty will come. Will a person who has a good education, a job, an earning, a fulfilling life and happiness come? Isn't all this deception in God's name? Will you get money if you meditate first? Will you answer? | CJ for You

In this yoga of yours, only one who is lazy without any job, who has an inferiority complex, who does not know how to make a living, who hates life, who has withdrawn himself from society, who has experienced problems in family and who wants to escape from worldly duty will come. Will a person who has a good education, a job, an earning, a fulfilling life and happiness come? Isn't all this deception in God's name? Will you get money if you meditate first? Will you answer?

In this yoga of yours, only one who is lazy without any job, who has an inferiority complex, who does not know how to make a living, who hates life, who has withdrawn himself from society, who has experienced problems in family and who wants to escape from worldly duty will come. Will a person who has a good education, a job, an earning, a fulfilling life and happiness come? Isn't all this deception in God's name? Will you get money if you meditate first? Will you answer?


உங்களுடைய இந்த யோகத்தில், வேலைவெட்டி இல்லாத சோம்பேறியும், தாழ்வு மனப்பான்மை கொண்டவனும், பிழைக்கத்தெரியாதவனும், வாழ்க்கையை வெறுத்தவனும், தன்னை சமுதாயத்திலிருந்து விலக்கிக்கொண்டவனும், குடும்பத்தில் பிரச்சனை அனுபவித்தவனும், உலக கடமையில் இருந்து தப்பிக்க நினைக்கிறவனும்தான் வருவான். நல்ல படிப்பு, வேலை, சம்பாத்தியம், நிறைவான வாழ்க்கை, சுகம் என்று இருப்பவன் வருவானா? இதெல்லாம் கடவுள் பெயரைச் சொல்லி ஏமாற்றும் வேலை அல்லவா? முதலில் தியானம் செய்தால் பணம் வருமா? பதில் தருவீர்களா?


வேதாத்திரிய அன்பர்களுக்கும், யோகத்தில் ஆர்வமுள்ளவர்களுக்கும் விளக்கம் அளிக்கவே எமது வேதாத்திரியா சேவை வழங்கப்படுகிறது. எனினும், உங்களைபோன்றோருக்கு விளக்கம் அளிக்கும் வகையில், அவ்வப்பொழுது பொதுவான தலைப்புக்களில் பதிவும், விளக்கமும் தருவது உண்டு. எனினும் யாரையும் நாம் வற்புறுத்துவதில்லை.

யோகத்திற்கு தன்னை இணைத்துகொள்ள ஒரு மனிதன்  வரவேண்டுமானால், ஒரு மாங்காய், இயல்பாக மாம்பழமாக பழுப்பதைப் போல நிகழவேண்டும். கால்சியம் கார்பைட் (Calcium carbide) இரசாயனத்தை  மாங்காய்களோடு கலந்து, இயற்கைக்கு மாறாக பழுக்கவைப்பதில் பிரயோஜனம் இல்லை. எனினும் விளக்கிச் சொல்லுவதிலும், புரியவைப்பதிலும் தவறில்லை. முடிவு உங்கள் வசமே என்பதை மறவாதீர்கள்.

நீங்கள் பிறந்த இவ்வுலகில், ஏதேனும் கடமை, நோக்கம், காரணம் இருக்கிறதா? என்று சிந்தித்திருக்கிறீர்களா? உங்களோடு பிறந்தவர்கள் வாழ்வதுபோலவே, இதற்கு முன்னே வாழ்ந்தது போலவும், பல்வேறு வகையில் வாழ்ந்து, எல்லாம் அனுபவித்து, இவ்வுலகைவிட்டு நீங்கினால் போதுமானதா? அப்படியானால் ஏன்? எதற்காக? சித்தர்களும், ஞானிகளும், மகான்களும், இறை தூதர்களும் தோன்றினார்கள்? அவர்களுக்கு எல்லாமே நீங்கள் சொல்லுவது போல, வேறு வேலை ஏதும் இல்லையோ?

இந்த யோகத்தில், வேலைவெட்டி இல்லாத சோம்பேறியும், தாழ்வு மனப்பான்மை கொண்டவனும், பிழைக்கத்தெரியாதவனும், வாழ்க்கையை வெறுத்தவனும், தன்னை சமுதாயத்திலிருந்து விலக்கிக்கொண்டவனும், குடும்பத்தில் பிரச்சனை அனுபவித்தவனும், உலக கடமையில் இருந்து தப்பிக்க நினைக்கிறவனும்தான் வருவான். நல்ல படிப்பு, வேலை, சம்பாத்தியம், நிறைவான வாழ்க்கை, சுகம் என்று இருப்பவன் வருவானா? என்று கேட்பது, உங்களின் அறியாமையையும், இந்த உலகில் எந்த வகையில் நீங்கள் சிக்கி இருக்கிறீர்கள் என்பதையுமே, எடுத்துக் காட்டுகிறது.

நீங்கள் இன்னமும் அந்தக்கால, வாழ்க்கையை விட்டு ஓடும், யோகத்திலேயே நின்றுவிட்டீர்கள். யோகம் குறித்த உண்மையை நீங்கள் அறியவில்லை, மேலும் உண்மையை மறுக்கிறீர்கள். யோகம் உங்கள் பிறப்பின் ரகசியத்தை அறியும் வழி. இயற்கையோடு உங்களை ஒன்றிணைக்கும் பயிற்சி. நான் யார்? என்று உங்களுக்குள் கேள்வி எழுப்பி பதில் தேடும் பாடம். மனித பிறவியின் நோக்கமும், கடமையும் அறிவதற்கான, தீர்ப்பதற்கான செயல்முறை. மேலும் கடவுள் என்றால்,  கட உள், கடந்து உள்ளே போய் கவனி என்பதுதான் அர்த்தமாகும். யாரையாவது சுட்டிக்காட்டி, இதுதான் கடவுள் என்று காட்டுவதல்ல. அது எங்களைப்போன்ற யோகியர்களின் வேலையும் அல்ல.

இப்போது, கேள்வியின் முக்கிய நிலைக்கு வரலாமா? முதலில் தியானம் செய்தால் பணம் வருமா? பதில் தருவீர்களா? தருகிறேன். இதோ, இந்த பதிவின் வழியாக, உண்மை விளக்கத்தை அறிந்து கொள்க.

உங்களுக்கு பணம், பொருள், செல்வ வளம் பிரபஞ்ச இயற்கையாற்றல் தருமா? முழு பதிவு!

வாழ்க வளமுடன்.

-