CJ for You: pancha bootha navahraha thavam

pancha bootha navahraha thavam

Showing posts with label pancha bootha navahraha thavam. Show all posts
Showing posts with label pancha bootha navahraha thavam. Show all posts

They say there is a planetary dosha in my horoscope. As a remedy for this, they say that a puja should be performed, which will cost so much money. I don't have that much money. While there is hope in that, is there any simple solution?


வாழ்க வளமுடன் ஐயா, என்னுடைய ஜாதத்தில் கிரக தோஷம் இருப்பதாக சொல்லுகிறார்கள். இதற்கு பரிகாரமாக, பூஜை செய்யவேண்டும், அதற்கு இவ்வளவு பணம் ஆகும் என்று சொல்லுகிறார்கள். என்னிடம் அவ்வளவு பணமும் இல்லை. அதில் நம்பிக்கை இருந்தாலும், ஏதேனும் எளிய தீர்வு இருக்கிறதா? இருந்தால் எனக்கு சொல்லுவீர்களா?

கிரக தோஷம் என்பது, நாம் பிறந்த பொழுது இருக்கிற கிரக நிலைகளின் அடிப்படையில் அமையும் நிலைகளாகும். இது என்றும் மாறாதது. எனினும் பரிகாரம் செய்வதால், நம்முடைய உடலும், மனமும் அதை ஏற்றுக்கொண்டு செயல்படும் பக்குவதை பெற்றுவிடும். பொதுவாக, நம்முடைய உடலில் ஒவ்வாத பிரச்சனையும், நோய்க்கான அறிகுறியும் வந்தால், மருந்து எடுத்துக் கொள்கிறோம். ஒருபக்கம் நோயை தீர்க்கவில்லை என்றாலும், அந்த நோய் தாக்கத்தை, தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தியை அளிக்கிறது அல்லவா, அதுபோல பரிகாரமும் செயல்படும்.

பரிகாரமே இல்லை என்பதுதான் உண்மையான கருத்து. ஆனால், இதை வியாபாரமாக செய்பவர்களை நாம் கண்டுகொள்ள வேண்டியதில்லை. ஆனால், ஜாதகத்தின் வழியாக, பரிகாரம் வேண்டுவோருக்கு நன்மைகள் செய்துதரும், உண்மையான ஜோதிடர்களும் இருக்கிறார்கள். இவர்கள், குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட கோவில்களுக்கு சென்று வழிபடவும், அங்கே சில பூஜைகளை செய்யவும் உதவுவார்கள். சிலருக்கு, காசி, ராமேஸ்வரம் என்றும் போய்வர சொல்லுவார்கள். நதி, கடல் நீர் நிலைகளிலும் பூஜை செய்ய வழிகாட்டுவார்கள். இவை எல்லாமே, நமக்கு ஓரளவில் திருப்தி அளிக்கும். மன உறுதியை தந்து, பரிகாரமாக செயல்பட்டு, வழக்கமான நம் வேலைகளை பார்த்திட உதவும்.

இத்தகைய பரிகாரம், உண்மையிலேயே நம்முடைய நேரத்தையும், பணத்தையும் எடுத்துகொள்ளும் என்பதுதான் நிஜம். ஆனால் இது வியாபாரமாக செய்யும் ஏமாற்றுவேலை அல்ல. அந்த அளவில் திருப்தி பெற்றுக் கொள்ளலாம்.

எனினும், பக்தி கடந்த, பக்தியின் உண்மை நிலையாகிய, யோகத்தில், நாமே நமக்கான பரிகாரத்தை செய்துகொள்ள முடியும். நம்முடைய கர்ம வினைகளையும், அதன் பாவப்பதிவுகளையும் நாம் போக்கிக் கொள்ளமுடியும். இதற்கென்று சிறப்பாக வடிவமைக்கப்பட்ட தியானம், தவம் செய்து தீர்க்கலாம். வேறு ஏதேனும் பெரும் செலவு இதில் இல்லை. மேலும் இருக்கும் இடத்திலேயே செய்துகொள்ளலாம். வேதாத்திரிய மனவளக்கலையில் வழங்கப்படும், பஞ்ச பூத நவக்கிரக தவம், மிகச்சிறந்த தேர்வு ஆகும்.

இதை யார்வேண்டுமானாலும் இயற்றலாம் என்பது அதன் மற்றொரு சிறப்பு. தனிப்பட்ட தீட்சை அவசியமில்லை. வயது வித்தியாசமும் இல்லை. அந்த உண்மையை இந்த காணொளி வழியாக அறியலாம். கூடுதலாக, பஞ்ச பூத நவக்கிரக தவம் காணொளியும் உள்ளது.

இந்த தவம் எப்படி செய்வது? அமைதியாக உட்கார்ந்து கொண்டு, கண்கள் மூடி இறைவணக்கம் செய்வது போன்று பாவனை செய்யலாம். கை விரல்களை ஒன்றோடு ஒன்று கோர்த்து, மடியில் வைத்துக்கொள்ளலாம். முதுகுத்தண்டு நேராக இருக்கும்படி நிமிர்ந்து உட்காரவும் வேண்டும். சுகாசனம் என்ற நிலை போதும், அதாவது சம்மணம் இட்டு உட்கார்வது போல.

ஒரு ஒலிபெருக்கி வழியாக, இந்த கானொளியை ஒலிக்கச்செய்து, அதன் வார்த்தைகளை கேட்டு, வேறெந்த கற்பனையும் எழுப்பிக் கொள்ளாமல், வெளியே என்ன நடக்கிறது? என்று சிந்திக்காமல் இருந்தால் போதுமானது. அரைமணி நேரத்திற்குள் தவம் முடிந்துவிடும். இப்படியாக தினமும் காலையும், மாலையும் செய்துவரலாம். இதுவே மிகப்பெரிய பரிகாரமாக வாழ்வில் செயல்படுவதை நீங்களே உணர்ந்துகொள்வீர்கள்.

எவ்வளவு நாட்கள் செய்யவேண்டும் என்று கேட்டால், அதற்கு கணக்கு ஏதும் இல்லை. தினமும் இதை செய்வதால், எண்ணற்ற நன்மைகளை பெற, உங்களை தகுதியாக்கிக் கொள்கிறீர்கள். எனவே வாழ்நாள் முழுவதும் தொடரலாம்.

உங்கள் ஜாதகம் வழியாக பரிகாரம் என்னவென்று தேடுகிறீர்களா? உண்மை விளக்கம் அறிக! Human Astrology Planets

பஞ்சபூத நவக்கிர தவம் நடத்தும் வேதாத்திரி மகரிஷி / Panchabhutha Navagraha Thavam Vethathiri Maharishi

வாழ்க வளமுடன்.

How to compose Pancha Bhuta Navagraha Penance? What is the method? Can you explain how it works?


வாழ்க வளமுடன் ஐயா, பஞ்ச பூத நவக்கிரக தவம் எப்படி இயற்றுவது? அதற்கான வழிமுறை என்ன? எப்படி பயன் தருகிறது என்ற விளக்கம் சொல்லுவீர்களா?

இந்தியாவில் இருக்கின்ற பெரும்பாலான, சிறு பெரு ஆலயங்களிலும், கோவிகளிலும், நவக்கிரகங்களுக்கு தனிப்பட்ட சந்நிதியும், ஒன்பது கிரங்கள் இணைந்து இருக்கும் வழிபாட்டு அமைப்பும் இருக்கும். ஆலயம் மற்றும் கோவிலில், முக்கியமான மூலவரை வணங்குவிட்டு, நவக்கிரகங்களை வழிபடுவது வழக்கம். இது இன்னமும் தொடருகின்ற பழக்கமும் ஆகும். எங்கோ இருக்கும் கிரகங்களை, இங்கே, இந்த இடத்தில் இருந்து வழிபடுவது தகுமா? என்றுதான் கேள்வி எழும். ஆனால், மனிதனின் மனதிற்கு எங்கே? ஏது எல்லை? பிரபஞ்சமும் நொடியும் அவன் மனதிற்குள்ளாக இருக்கும். பிரபஞ்சத்திற்கு அப்பாலும் மனம் செல்லும் அல்லவா?

அதுதான் இங்கே நிகழ்கிறது. கண்மூடி வணங்கும் நேரத்தில் மனம், அந்தந்த நவக்கிரங்களோடு தொடர்பு கொள்கிறது. அருள் கிடைக்கிறது. இதே தத்துவம், வேதாத்திரி மகரிஷி அவர்கள் இயற்றிய, பஞ்ச பூத நவக்கிரக தவத்திலும் இருக்கிறது. நவக்கிரகங்களுக்கு முன்னதாக, பஞ்ச பூத தன்மைகளையும் இங்கே வணங்கிக் கொள்கிறோம். இத்தவம் செய்வதற்கு தனியே எங்கும் செல்லவேண்டிய அவசியம் இல்லை. இருக்கும் இடத்திலேயே, வீட்டிலேயே செய்துவரலாம். குருவின் வழிகாட்டுதல் போதுமானது. யோகத்தில் இணைவதும், குண்டலினி தீட்சையும் தேவையில்லை.

எல்லோரும், எவ்வயதிலும் செய்துவரலாம். எளிமையானது, பாதுகாப்பானது, மிகவும் நன்மையானது. ஜோதிட பரிகாரம் என்பதாக, எங்கெங்கோ கோவில், குளம், காடு, மலை, குளம், நதி, கடல் என்று தேடிப்போகாமல், எல்லோரும் ஒரே இடத்தில் இருந்தே, பஞ்ச பூத நவக்கிரக தவம் செய்து அதற்கான நன்மையை பெறலாம். வாழ்விலும் மாற்றத்தை உணரலாம்.

இந்த பஞ்ச பூத நவக்கிரக தவம் இயற்ற வேண்டுமானால், அதற்கென்று நேரம் ஒதுக்குக. மனதை அமைதியாக வைத்துக்கொண்டு, இந்த பஞ்ச பூத நவக்கிரக தவம் விளக்கத்தை, காதால் கேட்டுக்கொண்டே, வார்த்தைகளில் கவனம் வைத்துக்கொண்டே, தவம் செய்யலாம். பொதுவாக அதிகாலை நேரம் முதலாக மாலை வரை செய்யலாம். இரவு 7, 8 மணிக்கு மேலாக செய்யவேண்டியதில்லை. இத்தவத்தை நீங்களாகவே வார்த்தைகளை சொல்லி செய்யலாம் எனினும், எல்லாவற்றையும் கவனம் வைத்துக்கொள்வது கடினம். எனவே யாராவது சொல்லக்கேட்டு, நீங்கள் தவம் செய்வது சிறப்பாகும். இதோ உங்களுக்காக, தவ செய்முறை பதிவு.

வேதாத்திரி மகரிஷியின் பஞ்சபூத நவக்கிரக தவம் - Panchabootha Navakraha Thavam by Vethathiri Maharishi

வாழ்க வளமுடன்

-

Pancha Bhootha Navagraha Penance has never been heard of. Will all this new penance help? And they say that everyone can do this? Do you know that penance has its own rule? If everyone could do it, it would be just a ritual.


பஞ்ச பூத நவக்கிரக தவம் இதுவரை கேள்விப்பட்டதே இல்லை. இப்படியெல்லாம் புதிது புதிதான தவம் எல்லாம் உதவுமா? மேலும் இதை எல்லோரும் செய்யலாம் என்றும் சொல்லுகிறார்களே? தவம் என்றால் அதற்கென்று ஒரு விதி இருக்கிறது தெரியுமா? எல்லோரும் செய்யமுடியும் என்றால் அது வெறும் சடங்காக மட்டுமே இருக்கும். சரிதானே? விளக்கம் தருக.

நீங்கள் வேதாத்திரியத்தில் இல்லை என்று கருத இடமிருக்கிறது. கிட்டதட்ட ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாகவே, அல்லது உங்கள் வயதிற்கு மேலாகவே, இந்த பஞ்ச பூத நவக்கிரக தவம், வேதாத்திரியத்தின் வழியாக அன்பர்களுக்கு கிடைக்கிறது. இது புதிய தவமாக, வேதாத்திரி மகரிஷி அவர்களால் வடிவமைக்கப்பட்டது. அன்பர்களுக்கு உதவும் வகையில், முழுமையான பலன்களை பெறுவதற்கும், தன் மனதை பிரபஞ்ச அளவில் விரித்துப்பழகிடவும் இத்தவம் உதவுகிறது. இதன் எளிமை கருதியே, வேதாத்திரியத்தில் அல்லாத மற்றவர்களும் இத்தவத்தை செய்யலாம் என்று சொல்லப்படுகிறது. விருப்பமுள்ளோர் இந்த, பஞ்ச பூத நவக்கிரக தவம் இயற்றி பயன் பெறுகின்றனர். உங்களைப் போல கேள்வி கேட்போர் தவிர்த்து விடுகின்றனர்.

பொதுவாக, இறையை வணங்கு, உனக்கு நல்லது நடக்கும் என்ற கருத்து எல்லோருக்கும் பொருந்தும் தானே? இதற்கு ஏதேனும் தனிப்பட விதி இருக்கிறதா? இல்லையே. வணங்குபவரின் மனம் ஒன்றிப்போனால் போதுமானது.

நீங்கள் சொல்லும் விதி, குண்டலினி யோகம் என்ற தியானத்திற்கு மட்டுமே இருக்கிறது. அதில் எட்டுவிதமான படிநிலைகளும் உண்டு. அதில் தியானம் என்பது ஏழாவது நிலையாகும். ஆனால், பஞ்ச பூத நவக்கிரக தவம் மிக எளிமையானது. இதில் எந்தவித தடையோ, பிரச்சனையோ, குழப்பமோ ஏற்பட வழியும் இல்லை. குண்டலினி என்ற உயிராற்றல் எழுப்பும், தீட்சைக்கும் இதற்கும் தொடர்பு இல்லை. குருவின் வழிகாட்டுதல், இதை எப்படி செய்யவேண்டும் என்பதில் மட்டுமே இருக்கிறது. மற்றபடி, பஞ்ச பூத நவக்கிரக தவம், வீட்டிலே இருந்தபடி செய்யவும் முடியும்.

நீங்கள் சொல்வதுபோல, சடங்கும் சாதாரணமானது அல்ல. விதிகளை உள்ளடக்கியதுதான் சடங்கு என்றும் மாறிவிடுகிறது. ஆனால், இது தவம். இதில் சடங்கு என்பது இல்லை. மனம் ஒன்றிச்செய்யும் தவம், சடங்குகளைவிட மேலானது என்பதை அறிவீர்களா? இப்போது உங்களுக்கான விளக்கம் கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன். கூடுதல் விபரம் அறிய, இந்த காணொளி உதவும்.

பஞ்சபூத நவக்கிரதவங்களை யார் வேண்டுமானாலும் இயற்றமுடியுமா? எப்படி? ஏன்? #Vethathiriya

வாழ்க வளமுடன்

Explain the Maharishi's note about astrology, horoscope and benefits!


சோதிடம், ஜாதகம், கிரகங்கள், அவற்றின் நிலையும், பயன்களும் குறித்து வேதாத்திரி மகரிஷி எவ்வாறு குறிப்பிட்டு இருக்கிறார்? அது குறித்த விளக்கம் தருவீர்களா?

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா! சோதிடம், ஜாதகம், கிரகங்கள், அவற்றின் நிலையும், பயன்களும் குறித்து வேதாத்திரி மகரிஷி எவ்வாறு குறிப்பிட்டு இருக்கிறார்? அது குறித்த விளக்கம் தருவீர்களா?


பதில்:

வேதாத்திரிய யோகத்தில், இந்த ஜோதிடம், ஜாதகம், அவற்றின் விளக்கம், உண்மைகள் இவற்றிற்கு எல்லாம் இடமில்லை என்று நிறைய அன்பர்கள் கருதுகிறார்கள். ஆனால், குரு மகான் வேதாத்திரி மகரிஷி, இது குறித்து நிறைய விளக்கங்களை, தன்னுடைய பெரும்பாலான உரைகளிலும், கட்டுரைகளிலும் தந்திருக்கிறார் என்பதுதான் உண்மை. நேரடியாக, தனியாக சொல்லவில்லையே தவிர, பல உண்மைகளை நமக்கு சொல்லி விளக்கம் அளித்துள்ளார். சில கேள்வி பதில் நேரங்களிலும், அன்பர்களுக்கு விளக்கம் தந்துள்ளார்.

முக்கியமாக, நம் வேதாத்திரியத்தில், பஞ்ச பூத நவக்கிரக தவம் உள்ளதே? அதை நாம் மறக்கலாகுமா? இந்த தவத்தின் உண்மையிலேயே, உங்கள் கேள்விக்கான பதில் உள்ளே அடங்கி இருக்கிறது என்று சொல்லிவிடலாமே?

வானில் மிதந்து, உருண்டுகொண்டு, சூரியனையும் சுற்றிக்கொண்டிருக்கும், இந்த பூமியில் வாழும் நமக்கு, நம் பூமியைச்  சுற்றும் சந்திரனாலும், பூமியின் அண்டை கிரகங்களான, புதன், சுக்கிரன், செவ்வாய், வியாழன் என்ற குரு, சனி ஆகிய கிரங்களோடு, நிழல் கிரகங்களான ராகு மற்றும் கேது ஆகிய எல்லா கிரகங்களையும் நாம், இந்த பஞ்ச பூத நவக்கிரக தவம் வழியாக உணர்ந்தறிந்து நன்மையை பெறுகிறோம் என்பது உங்களுக்குத் தெரியும் அல்லவா?

வேதாத்திரியத்தில், அலை இயக்கம் என்ற ஒரு பாடம் உண்டு. சுத்தவெளியின் தன்னிறுக்க சூழந்தழுத்தும் ஆற்றல் நிலையில் இருந்து, தானே மடிந்து, நொறுங்கி வந்த பரமாணு முதலாகவே, அலை இயக்கம் தொடங்கி வந்துகொண்டே இருக்கிறது. சுத்தவெளியின் தன்மையில் தனக்குள்ளாக, இருந்த அதிர்வுகள் அலைவடிவமானதே, இந்த பரமாணு வழியாக என்ற உண்மையும் நாம் மறக்கலாகாது. இந்த அலைகள், இன்னொன்றில் ஏற்படுத்தும் தாக்கமும், அதிலிருந்து ஏற்படும் விளைவும், மாற்றமும் இயல்பானது. இதுதான் எல்லாவற்றிற்கும் அடிப்படையாகிறது.

இந்த தாக்கம், விளைவு, மாற்றம் ஆகியவையே சோதிட கணக்குகளின் அடிப்படையாக உள்ளது. இதில் ஓவ்வொருவரின் ஆராய்ச்சி, அனுபவம் ஆகியனவும் கலந்து ஒன்றுக்கும் மேற்பட்ட நிலைகள் வந்து, குழப்பங்களை ஏற்படுத்துகிறது எனினும் அடிப்படை என்றும் மாறாதது தானே?

குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள், ஜோதிடம், ஜாதகம் என்பதை விடவும், கோள்கள் குறித்தும், அதன் அலை இயக்கம், தூண்டுதல், விளைவு, மாற்றம் ஆகியன குறித்து அதிக விரிவான விளக்கங்கள் தந்திருக்கிறார். அந்த விளக்கங்களை, ஒரே கட்டுரையாக நாம், இங்கே காணமுடியாது எனினும், அவ்வப்பொழுது நான் தந்துகொண்டே இருக்கிறேன். மேலும், நிச்சயமாக மகரிஷியின் அந்த உண்மை விளக்கங்கள், உறுதியாக ஜோதிட, ஜாதக விளக்கங்களுக்கும் உதவுகிறது என்பதே உண்மையாகும்.

வாழ்க வளமுடன்.

-

Guide me with truth of Pancha Bootha Navagraha Thavam!


பஞ்ச பூத நவக்கிரக தவம் செய்துவந்தால், நம் ஜாதகத்தில் அவ்வப்பொழுது இருக்கின்ற பிரச்சனைகளுக்கு பரிகாரமாக அமையுமா? கோள்களின் நன்மையை பெறமுடியுமா? ஆலோசனை தேவை.



வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி: 

வாழ்க வளமுடன் ஐயா, பஞ்ச பூத நவக்கிரக தவம் செய்துவந்தால், நம் ஜாதகத்தில் அவ்வப்பொழுது இருக்கின்ற பிரச்சனைகளுக்கு பரிகாரமாக அமையுமா? கோள்களின் நன்மையை பெறமுடியுமா? ஆலோசனை தேவை.

பதில்:

யோகத்தில் இணைந்து தீட்சை பெறாவிட்டாலும் கூட, தனிநபராகவே இந்த பஞ்ச பூத நவக்கிரக தவம் செய்து நன்மையை பெறலாம் என்பது, இத்தவத்தின் சிறப்பாகும். இந்த பிரபஞ்சமும் உலகமும் உண்டாவதற்கு காரணமான பஞ்ச பூத தோற்றங்களை வணங்குவதும், அதன் அருளைப் பெறுவதும், நாம் வாழும் இந்த பூமி உட்பட, சூரிய குடும்பத்தில் உள்ள 7 கோள்களையும், நிழல் கிரகங்களான ராகு கேது ஆகியவற்றையும் வணங்கி அருளைப்பெறுவதும்தான் இந்த ‘பஞ்ச பூத நவக்கிரக தவம்’ஆகும்.

பரிகாரம் என்ற ஒன்று ஜோதிடத்தில் இருந்தாலும், அந்த பரிகாரம் செய்வதால் எதும் மாறிவிடுவதில்லை. அது அகன்றுவிடுவதும் இல்லை. தீர்மானிக்கப்பட்ட ஒன்று, நிச்சயிக்கப்பட்ட ஒன்று நிகழ்ந்தே தீரும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. வில்லில் ஏற்றப்பட்ட அம்பு, பின்னோக்கி இழுக்கப்பட்டால், அது பாய்ந்துதானே தீரும்?! அதை நாம் நிறுத்திட முடியுமா? எனவே பரிகாரம் செய்தாலும்கூட, அது நிகழந்தே தீரும் என்பது உறுதி. எனினும் அதை தாங்கிக் கொள்ளக்கூடிய திடம் கிடைத்துவிடும்.

ஒரு கோவிலுக்குச் சென்று, பூஜை, பரிகாரம், வழிபாடு, நவகிரகங்களை சுற்றிவருதல் ஆகியன எப்படி உங்களுக்கு திருப்தியும், பலனும் அளிக்குமோ, அதைவிடவும் நிறைவான முழுமையான திருப்தியை, பலனை,  ‘பஞ்ச பூத நவக்கிரக தவம்’ செய்வதால் பெறலாம். ஆனால், ஏதோ ஒருநாள் செய்துவிட்டால் போதும் என்று நினைத்துவிட முடியாது. குறிப்பிட்ட காலம் வரை தொடர்ந்து செய்துவர வேண்டும். பொதுவாக வாரத்தில் மூன்று நாள் காலையிலோ, மாலையிலோ செய்துவரலாம்.

அவசர கோலத்தில் இல்லாமல், பொறுமையாக, அதற்குரிய நேரம் கொடுத்து, தவம் இயற்றிவருதல் சிறப்பு. நீங்களே வார்த்தைகளாக சொல்லியும் தவம் இயற்றலாம். காணொளி, ஒலி வழியாகவும் கேட்டு தவம் இயற்றலாம். எப்படியாயினும், தவத்தில் நல்ல ஓர்மை நிலை இருக்கவேண்டும். மனம் அதில் ஒன்றி இருப்பது அவசியம்.

இந்த  ‘பஞ்ச பூத நவக்கிரக தவம்’ வழியாக, விண், காற்று, வெப்பம், நீர், மண் ஆகிய பஞ்ச பூதங்களோடு மனதை இணைத்து அதன் நன்மையையும், காப்பையும் பெறுகிறோம். அதுபோலவே, சூரியன், புதன், சுக்கிரன், சந்திரன், செவ்வாய், குரு, சனி, ராகு, கேது ஆகிய கிரகங்களின் மீது மனதை ஒன்றிணைத்து, நன்மையையும், காப்பையும் பெறுகிறோம்.  ‘பஞ்ச பூத நவக்கிரக தவம்’ நம் உடலுக்கும், மனதிற்கும், உயிருக்கும் சிறப்பை தரக்கூடியதவம். நிச்சயமாகவே நம் ஜாதகத்தில் காணப்படுகின்ற ‘கோளாறுகளுக்கு’ தீர்வாகவே அமையும் என்பது உறுதி.  யோகத்தில் தீட்சை பெற்று, இத்தவம் இயற்றும்பொழுது, கூடுதலான ஒரு விளக்கமும், முன்னேற்றமும் கிடைக்கும் என்பதும் உண்மை.

வாழ்க வளமுடன்
-

Is Pancha bootha Navagraha Thavam helps to horoscope problem?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, ஜாதகத்தில் வரக்கூடிய பிரச்சனைகளுக்கு பரிகாரமாக, நவக்கிரக தவம் செய்யலாமா?


பதில்:

ஒரு சோதிட குறிப்பில், குழந்தை பிறந்த நேரம் என்பதைக் கொண்டு, வானில் எந்தெந்த கிரங்கங்கள் எங்கிருந்து தன்னுடைய காந்த அலையை வீசுகிறது என்பதைத்தான் நாம் ஜாதகம் என்று சொல்லுகிறோம். பெரும்பாலான ஜாதகங்களில், மிகச்சரியான நேரம் என்பது குறைவுதான். மேலும் வாக்கியம், திருக்கணிதம் ஆகிய இரண்டுவகையான பஞ்சாங்க உதவியும் கூட பிறந்த குழந்தையின் லக்கனம், பிறந்த நட்சத்திர பாதம் ஆகியவற்றையும், வக்கிர, நகர்ந்த கிரகங்களின் இருப்பிடத்தை மாற்றிவிடும். என்றாலும் கூட கிரகங்களின் காந்த அலை வீச்சு என்பது உறுதியானதுதான்.

ஒரு ஜாதக கணிப்பில், ஆராய்ச்சியில் ஏற்கனவே இருக்கிற ஒரு பிரச்சனை தீரவும், வரக்கூடிய பிரச்சனையை முன்கூட்டியே அறிந்து தீர்க்கவும் நிச்சயமாக முடியாது என்பதுதான் உண்மை. ஆனால் அதை ஏற்றுக்கொள்ளக்கூடிய மனநிலையை நாம் உருவாக்கிக் கொள்ளமுடியும். ஒரு ஆறுதலான வார்த்தைகள் தந்து உதவுவது போல. பெரும்பாலானவை அனுபவித்து தீர்ப்பது என்பதாகவே இருக்கும். ஆனாலும் வாழும் மனிதனுக்கு இயற்கை கொஞ்சம் கருணை காட்டத்தான் செய்கிறது. அதனால் மனம் உடைந்து கலங்கவேண்டிய அவசியமில்லை

இங்கே பரிகாரம் என்பது, மன நிறைவு, மனதுக்கு ஆறுதல் என்பதுதானே தவிர வேறெதும் இல்லை. இந்த பரிகாரம் என்று சொல்லி பணம் பறிக்கும் பல்லாயிர சோதிடர்கள் இருக்கிறார்கள் என்பதும் இப்போதைய நிலைதான். அதை நாம் குறைசொல்ல முடியாது எனினும் அவர்களிடம் சிக்காமல் விலகி இருக்கவேண்டும். கோவிலுக்கு போவது, பூஜை செய்வது, அபிஷேகம் செய்வது, தானம் செய்வது, யாகம் வளர்ப்பது என்று எத்தனையோ செய்தாலும் கூட இருப்பதும், வரப்போவதும் ஜாதகத்தில் மாறிவிடுவதில்லை. ஆனால் இதையெல்லாம் செய்தால் ஏற்படும் மன மாற்றம் நமக்கு உள்முகமாக நம்பிக்கையைத் தரும்.

ஆனால், வேதாத்திரியத்தின் வழியாக பயணிக்கின்ற ஒருவர், இந்த பரிகாரம் என்பதற்கு, பஞ்ச பூத நவக்கிரக தவம் செய்தால், வழக்கமான பரிகாரதிற்கு மாற்றா? என்று கேட்டால் அது இல்லை என்பதுதான் உண்மை. நிச்சயமாக பஞ்ச பூத நவக்கிரக தவம்  எந்த பரிகாரத்திற்கும் உதவுவதில்லை. என்றாலும் கூட, ஒவ்வொரு கிரத்தின், கோளின் மீதும் நம்முடைய மனதை நிறுத்தி, தவமாக செய்துவருகையில், அந்த கிரகம், கோளின் காந்த அலைவீச்சின் தாக்கத்தை, சமன் செய்துகொள்ளும் வகையில் மனம் மாறுகிறது என்பது உண்மையே! அந்த வகையில், வாழ்க்கையில் ஏற்படுகின்ற, ஏற்படப்போகும் நிலைக்கு மனம் உறுதிபடுகிறது என்றும் சொல்லலாம். இது பரிகாரம் அல்ல எனினும் நமக்கு ஊக்கமளிக்கும் ஒன்றாகும். 

தொடர்ந்து பஞ்ச பூத நவக்கிரக தவம் செய்துவரும் பொழுது, மனதின் சக்தியும், கிரகங்கள், கோள்களின் சக்தியும் கலப்புறுகிறது. அதன்வழியாக நாம் நன்மையே பெறலாம், பெற முடியும் என்ற ஒரு நம்பிக்கை நமக்குள்ளாக வந்துவிடும். நம்முடைய கடந்த கால நிலையை மாற்றிட முடியாது எனினும், வரப்போகிற நிலைமையை சரி செய்துவிடக்கூடிய விழிப்புணர்வு நமக்கு கிடைக்கும் என்பது உறுதி.

இந்த பஞ்ச பூத நவக்கிரக தவம் மட்டும், வேதாத்திரியத்தில் பயணிக்கும் ஒருவர் மட்டுமல்லாது, யார்வேண்டுமானாலும், தீட்சை பெற்றுக்கொள்ளாத எந்த ஒருநபரும் செய்து அதற்கான பலனைப் பெறலாம் என்பதுதான் இத்தவத்தின் சிறப்பாகும்! 

வாழ்க வளமுடன்.