CJ for You: event

event

Showing posts with label event. Show all posts
Showing posts with label event. Show all posts

We welcomes you for the Vethathiriya Discussion


வேதாத்திரிய கலந்துடையாடல் நிகழ்வுக்கான அழைப்பு!


வேதாத்திரியம் குறித்து...

நீங்கள், கலந்துரையாட விரும்புகிறீர்களா? அந்த கலந்துரையாடலில் உங்களுடைய 

கேள்விகளுக்கு பதில் அறிய விரும்புகிறீர்களா?

சந்தேகங்களில் தெளிவு பெற விரும்புகிறீர்களா?

மெய்ஞானத்தில் உயர்ந்திட விரும்புகிறீர்களா?

வேதாத்திரியத்தில் முழுமை விரும்புகிறீர்களா?

அறிந்த உண்மையை பகிர விரும்புகிறீர்களா?

உங்கள் அனுபவத்தை சொல்ல விரும்புகிறீர்களா?

ஆம் என்பது உங்கள் பதிலானால் வேதாத்திரியச்சேனல் உங்களை வரவேற்கிறது!

-

கலந்துகொள்ள தகுதியுடையோர் யார் என்று அறிவோமா?

வேதாத்திரியத்தில்,  ஒரு ஆண்டு, அதற்கு மேலான ஆண்டுகள் முன்னதாக, பிரம்மஞானம் முடித்து, ஆசிரியர் பயிற்சி வழியாக அருள்நிதி பட்டயம் பெற்றிருக்க வேண்டும். இத்தகுதியில் நிறைவுபெற்ற ஆர்வமுள்ளோர் வரவேற்கப்படுகிறார்கள். 

(மனவளக்கலை மன்ற செயல்பாடுகளில் இருப்போர் தவிர்க்கலாம்).

உதவி பேராசிரியர்*, பேராசிரியர்* தகுதியுள்ளோரும் வரவேற்கப்படுகிறார்கள்.

(*கலந்துகொள்வதில் பிரச்சனைகள் எழுமென்றால் தவிர்க்கலாம்).

நல்ல குரல் வளம், பொறுமை, பக்குவம், வேதாத்திரிய பயிற்சிகளில் அனுபவம் அவசியம். தொடர்ந்து காயகல்பம், உடற்பயிற்சி, தவம், அகத்தாய்வு தினமும் தவறாமல் செய்துவருபவராக இருக்க வேண்டியதும் முக்கியம். மௌனம் அனுபவம் இருந்தாலும் சிறப்பு. தகுதியுடைய பெண், ஆண் இருபாலரும் நிகழ்வில் கலந்துகொள்ளலாம்.

-

இந்த நிகழ்வின் நோக்கம் என்ன?

உங்கள் ஓய்வு நேரத்தை பயன்படுத்திக்கொண்டு, ‘வேதாத்திரியச்சேனல் இயக்குனர், சுகுமார்ஜெ’ அவர்களோடு கலந்துரையாடலாம். இந்நிகழ்வு நேரடியாகவும், கைபேசி வழியாகவும், இணையம் வழியாகவும் நடக்கலாம். ஒவ்வொரு நிகழ்வும், குறைந்தது பத்து நிமிடங்கள் முதல் நாற்பத்தைந்து நிமிடங்கள் வரை எடுத்துக் கொள்ளலாம்.

நிகழ்வு ‘ஒலி / ஒளி’ பதிவு செய்யப்பட்டு, வேதாத்திரியச்சானலில் காணொளியாக வெளியிடப்படும்.

-

பதிவேற்றப்படும் பதிவுகளில், கலந்து கொண்ட அன்பரின் பெயர், தகுதி, வசிப்பிடம், ஊர், ஒளிப்படம், காணொளி இணைத்து, வேதாத்திரியச்சானலில் வெளியிடப்படும். பதிவின் உரிமை வேதாத்திரியச்சானல் பெற்றுக்கொள்கிறது.

-

இந்நிகழ்வின் பயன்கள்

சேவை நோக்கத்தோடு செய்யப்படும் பதிவு என்பதால், கலந்து கொள்ளும் அன்பர்கள், எந்த எதிர்பார்ப்பும் இன்றி, சேவை நோக்கத்தோடு இருத்தல் வேண்டும். உங்களை பயன்படுத்தி நாங்கள் உயர்கிறோம் என்ற மாற்றுச்சிந்தனைக்கு இடமில்லை. வேறெதும் எதிர்பார்ப்புக்கும் இடமில்லை. இங்கே நிகழ்வது, வேதாத்திரியத்தின் வழியாக மெய்ப்பொருள் உண்மை கருத்துப்பரிமாற்றம் மட்டுமே!

-

கூடுதல் விபரங்கள் அறிக

நிகழ்வு குறித்த விபரங்கள், முன்னதாகவே வழங்கப்படும். போதுமான நேரத்தை, வழங்க ஆர்வமாக இருத்தல் அவசியம். அதற்காக உங்களை பிற பிணைப்பிலிருந்து தற்காலிகமாக விலக்கிக் கொள்ளலாம். ஆர்வமில்லை என்றாலோ, நேரமில்லை என்றாலோ, வேறேதும் காரணம் என்றாலோ முன்கூட்டியே தெரிவித்தல் நன்று. நிகழ்வு குறித்த விளக்கங்களை, தகவல்களை எப்போது வேண்டுமானாலும், கேட்டு அறியலாம். 

மேலும் விபரங்கள் அறிய https://wa.me/9442783450

-

வாழ்கவளமுடன்.

Can we practice kundalini yoga meditation, exercise, kayakalpa in open places?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, திறந்த வெளியில், காயகல்பம், உடற்பயிற்சி, தவம் செய்யலாம் என்றும் நல்ல சக்தி ஊட்டம் கிடைக்கும் என்றும் சொல்லுகிறார்களே? இது சரியா?


பதில்:

திறந்த வெளியில், எல்லோரும் கூடி உடற்பயிற்சி செய்வதையும், சிலர் கூடி வழிபாடு செய்வதையும் கண்டு அப்படியான முடிவுக்கு வந்திருக்கலாம். ஏதாவது ஒருநாள், ஒரு சிறப்பு விழா, கொண்டாட்ட, நிகழ்வுகளில் பலர் கூடி அப்படி செய்து, மற்றவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் செய்யப்படுவதே அந்தமாதிரியான நிகழ்ச்சியாகும். இந்த உண்மையை, அதை நிகழ்த்தியோரும், அமைப்பும் தெரிந்தேதான் செய்வார்கள்.

ஆனால், யோகத்தில், அதுவும் மனவளக்கலை யோகத்தில் இணைந்திருக்கிற நாம், திறந்தவெளியில் காயகல்பம், உடற்பயிற்சி, தவம் செய்வதை தவிர்ப்பது நல்லது. எந்த ஒரு நேரத்திலும், அது அதிகாலையோ, பகலோ, மாலை நேரமோ செய்யவேண்டாம் என்பதே கருத்தாக இருக்கிறது. பெரும்பாலும், கூரை, சுவர்களற்ற திறந்த வெளியில், காற்றின் போக்கு அதிகம் இருக்கும். வெப்பதட்ப தாக்குதல் அதிகம் இருக்கும். அந்த இடங்களை சுற்றி எழும் ஒலிமாசு உங்கள் காதுகளை பாதிக்கும். ஏதேனும் சில பூச்சி, பறவை, விலங்கு இனங்கள் தாக்கம் இருக்கும். அவைகள் உங்களை தொந்தரவு தருபவராக நினைக்கவும் கூடும். இவை எல்லாமே உடலுக்கும் மனதிற்கும் ஒவ்வாத சூழலை தருவதாக அமைந்திருக்கும். அங்கே எழும் தூசி, அதன் தன்மை, கெடுதியான வாசனை ஆகியனவும் பாதிப்பு தரும்.

மேலும் முக்கியமாக, உடல், மனம் இவற்றின் இயல்பான சக்தியை உறிஞ்சி எடுக்கும் தன்மை அங்கே இருக்கக்காணலாம். இது வெகு சீக்கிரமாக உங்களுக்கு சோர்வை ஏற்படுத்தும். சக்தி இழப்பை ஏற்படுத்தும். தவத்தில் தடைகளை உண்டாக்கும். திறந்தவெளி என்பதால், பலவித தேவையில்லாத சக்தி இழப்பு உடனடியாக தாக்கும். இவை உங்கள் உடலை மட்டுமல்ல, மனதையும் பலவகையில் பாதிக்கும், குழப்பத்தை உருவாக்கும். என்னதான் இடத்தூய்மை, மனத்தூய்மை, அருட்காப்பு இட்டுக்கொண்டாலும் கூட, நன்மை தராது என்பதே உண்மை.

எனவே நிச்சயமாகவே, வெளியில், காயகல்பம், உடற்பயிற்சி, தவம் செய்வதை தவிர்த்து விடுங்கள். மேற்கூரை, தடுப்பு சுவர்கள் கொண்ட இடம், அறை தேவை என்பதில் கவனம் கொள்ளுங்கள். உங்கள் மனவளக்கலை யோக பயணத்தில் தடையின்றி பயணம் செய்து உயருங்கள்.

வாழ்க வளமுடன்.