CJ for You: kundalini initiation

kundalini initiation

Showing posts with label kundalini initiation. Show all posts
Showing posts with label kundalini initiation. Show all posts

I have a passion for yoga. However, I haven't gotten into that yet. For, as far as I can see, there is only lies and distortions about yoga here. That's why I'm not interested in learning. Can you tell me which is the best way of yoga? Maybe I should just pass it on? What will happen to me?


ஐயா. எனக்கு யோகம் குறித்த ஆர்வம் உண்டு. எனினும் அதில் நான் இன்னும் இறங்கிடவில்லை. ஏனென்றால், நான் பார்த்தவரையில், இங்கே யோகம் குறித்து பொய்யும் புரட்டும்தான் இருக்கிறது. அதனாலேயே கற்றுக்கொள்ள ஆர்வமும் இல்லை.  நல்ல சிறந்த யோகவழி எது என்று சொல்லுவீர்களா? ஒருவேளை அப்படியே நான் கடந்துபோய்விடுவது நல்லதா? எனக்கு என்ன பாதிப்பு வரும்? விளக்கம் தருக.


இந்த கேள்வி கேட்டதற்காக உங்களை பாராட்டுகிறேன். உங்களைப்போலவே பலரும் இங்கே இருக்கிறார்கள். அவர்களின் தாத்தா, பாட்டி, உறவினர் சொல்லக்கேட்டு, பக்தி கடந்த யோகத்தில் ஆர்வம் வருவதுண்டு. அந்த பெரியவர்களே அதை தேடமுடியாமல், கைவிட்டுப்போனதை, உங்களுக்கு கடத்திவிட்டார்கள். நீங்களும் அவர்கள் சொன்ன அதே போன்ற, எதிர்பார்ப்பில், இப்போதும் யோகத்தை தேடுகிறீர்கள். அவர்கள் சொன்ன யோகம் எப்படிப்பட்டதென்று ஓரளவில் என்னால் யூகிக்க முடியும். எனினும் அதை இங்கே விளக்கிட வேண்டியதில்லை.

ஒரு ஆப்பிள் என்ன சுவை தரும் என்பதைக்கொண்டு, ஒரு கூடை ஆப்பிளையும் தீர்மானிக்க முடியாது. அதில் அதிக இனிப்பும் இருக்கலாம், புளிப்பு, கசப்பு சுவை கொண்டதும் இருக்கலாம். ஆனால் இதற்காக, ஒரு கூடை ஆப்பிளையும் ருசி பார்த்திடவும் முடியாது. அது காலவிரயம் என்பதோடு, வயிற்றுக்கும் கெடுதல். அதுபோலவே, யோகம் பல்வேறு நிலைகளில், பல்வேறு மகான்கள், ஞானிகள், யோகிகள் வழியாக வழங்கப்பட்டு வருகிறது. எல்லோருக்கும் நோக்கம் ஒன்றுதான். ஆனால் பாதைகள் வேறு. இதில் எது சிறந்தது என்று நான் கூறவேண்டிய அவசியமும் இல்லை. நான் வேதாத்திரியத்தில் இருப்பதால், அதை கடைபிடிப்பதால், அதுவே சிறந்தது என்றும் சொல்லிவிட மாட்டேன். என்னளவில் அது சிறப்பு அவ்வளவுதான். நீங்கள் எதை தேர்ந்தெடுத்தாலும் அதில் கொஞ்சகாலம், பயணிக்கவும் வேண்டும். பிறகுதான் அது சரியான பாதையா? என்பதை நீங்கள் தீர்மானிக்க முடியும். நானே உங்கள் கையைப்பிடித்து, ‘வேதாத்திரியத்திற்கு வாருங்கள்’ என்று அழைப்பது முறையல்ல.

யோகசாதனை அமைப்புக்கள், வேதாத்திரியத்திற்கு முன்பாக பல இருந்தன, வேதாத்திரியத்திற்கு பின்பாகவும் பல இருக்கின்றன. இதுதான் காலத்தின் நியதி. உங்கள் விருப்பம், தேர்வு, அதில் கிடைக்கும் அனுபவம் ஆகியன மட்டுமே, சிறந்தது எது என்று தீர்மானிக்கும். எனவே என்னிடம் கேட்கவேண்டாம். நான் சொல்லவும் தயாரில்லை.

யோகம் குறித்த விளக்கங்களில் பொய்யும் புரட்டும் தருகிறார்கள் என்றால் அவர்கள் அதில், ஆழ்ந்து போகவில்லை என்பதுதான் குறை. ஏதோ நூல்களில் படித்ததையும், சினிமாவில் பார்த்ததையும், புராண கதைகளை கேட்டும், பிறர் சொல்லக்கேட்டும் இவர்களாகவே, இட்டுக்கட்டும் கதைகள் உண்டு. ‘மாஸ்டர் ஆஃப் ஆல் சப்ஜெக்ட்’ என்ற ரீதியில் புட்டுபுட்டு வைப்பார்கள். இவர்களையும், இவர்கள் கருத்துக்களையும் புறம் தள்ளுவதே நல்லது. இவர்களைப்பார்த்து, உங்களுக்கு சூடு வைத்துக்கொள்ள தேவையில்லை. உண்மை எது என்று தேடுங்கள். ஆர்வத்தை இதனால் தொலைக்காதீர்கள்.

ஏதோ சிறிதளவாவது யோகம் என்பதை அறிந்த நீங்கள், இந்த பிறப்பை வீண் செய்வதில் அர்த்தமில்லை. பிறவியின் நோக்கமும், கடமையும் தீராமல், உங்கள் பிறவி முழுமை அடைவதில்லை. வாழும் காலம் போதுமானது. அதை தேடுதலில் வீணாக்காமல், விருப்பமான ஏதோ ஒரு யோகசாதனையில் இணைந்துகொள்க. கற்றுக்கொண்டு பயன்பெறுக. அது உங்களுக்கு திருப்தி இல்லை என்றால், தெரிந்த அளவில் உள்ள அனுபவத்தால், மிகச்சிறந்த இன்னொரு யோக சாதனையை பெற்றுக்கொள்ள தயாராகுங்கள். இதில் எந்த இழப்பும் இல்லை. இழப்பின் வழியாக, மிகச் சிறந்ததை அடைகிறீர்கள் என்பதுதான் முக்கியம். அந்தவகையில், வேதாத்திரியாவையும் ஒருகை பார்த்துவிடுங்களேன். சரியா?

கூடுதலாக இந்த காணொளி பதிவு உங்களுக்கு உதவலாம்.

யோகம் குறித்த பதிவுகளை நான் தவிர்ப்பது ஏன்? Why do I avoid the any posts on yoga?

வாழ்க வளமுடன்

-

Sir, who initiates a disciple into Kundalini and enhances his kundalini energy? Give an explanation.


ஐயா, ஒரு சீடனுக்கு குண்டலினி தீட்சை கொடுத்து, குண்டலினி சக்தியாற்றலை உயர்த்துவது யார்? விளக்கம் தருக.

நல்ல சிந்தனைக்குறிய கேள்வி. இந்த கேள்விக்கு, நம் வேதாத்திரியாவில், தனியாக ஒரு பதிவு தரப்பட்டுள்ளது. அதை இந்த பதிவோடு இணைத்துள்ளேன். அதற்கு முன்பாக சில உண்மைகளை இங்கேயும் காண்போம்.

மெய்ப்பொருள் உண்மையை உணர்ந்தறிந்த, குரு மட்டுமே, ஒரு சீடனுக்கும், தன்னை நாடி வரும், சுய தேடல் ஆர்வம் உள்ள அன்பருக்கும், குண்டலினி தீட்சையை வழங்க முடியும். குரு என்பவருக்கு நிகராக யாரையும் சொல்ல முடிவதில்லை. எனினும் ஒரு சீடன், குருவால் உயர்த்தப்படும் பொழுது, சீடனும் பிறருக்கு மெய்விளக்கம் தரும் வாய்ப்பை பெற்றுவிடுகிறான். இங்கே சீடனுக்கு, தன்னிலை விளக்கமும், மெய்ப்பொருள் உன்மை விளக்கமும் கிடைக்கவில்லை என்றாலும் கூட, குருவின் அன்பும், கருணையும் அவனுக்கு இருக்கிறதல்லவா?

அப்படியல்லாது, ஏதோ ஒருவருடம் படித்தேன், தவம் செய்ய பழகிக் கொண்டேன். படித்தேன், குருவின் விளக்கம் கேட்டேன். மெப்பொருள் உண்மை புரிந்து கொண்டேன், அதற்கான சான்றிதழ் பெற்றுக்கொண்டேன். நானும் ஆசிரியர் என்ற ரீதியில், யாரும் மற்றவர்களுக்கு தீட்சை வழங்கிட முடியாது. அது இந்த இரு நபர்களுக்குமே பிரச்சனை ஆகிவிடும். ஒரு சீடன் உண்மையாகவே தன்னையறிந்து, மெய்ப்பொருள் உண்மை விளங்கிக் கொள்ள,  சீடனின் தவம், தற்சோதனை, அகத்தாய்வு, ஆராய்ச்சி என்ற வகையில், பல ஆண்டுகளை செலவிட வேண்டிய அவசியம் உண்டாகும். குறைந்தது பத்தாண்டுகள் முதல் முப்பது ஆண்டுகள் ஆகலாம், ஆனாலும், அவனின் கர்மா என்ற வினைப்பதிவு தீர்க்கப்பட வேண்டும்.

எனவே, தீட்சை வழங்கும் நிலைக்கு, ஒருவர் உயர்ந்தாலன்றி, தீட்சை அளித்திட முடியாது. என்றாலும் கூட, வேதாத்திரியத்தில், குறிப்பிட்ட தகுதிநிலை பெற்றவர், முற்றிலும் புதிய ஒருவருக்கு தீட்சை அளிக்கலாம் என்பது நடைமுறையில் உள்ளது. இது, மகான் வேதாத்திர் மகரிஷி அவர்களே, ஏற்படுத்தித் தந்த வழிமுறை ஆகும். இந்நிகழ்வை, ஓவ்வொருவரோடும் இணைந்து, வான் காந்தத்தில் தன்னை கலக்கவிட்டுக் கொண்ட, வேதாத்திரி மகரிஷி அவர்களே, ஒழுங்குசெய்து கொள்கிறார். ஆனால் பெரும்பாலோர் இதை நம்ப மறுப்பார்கள்.

என்னுடைய அனுபவத்தில், எனது 21 வயதில்  அப்போதைய ‘Master’ பயிற்சி வழியாக, உயர்ந்த நிலையிலும், எனக்கு முழுயான, இறையுண்மை அனுபவமாக பெறாததாலும், பிறருக்கு தீட்சை வழங்க, தயக்கம் இருந்தது. அதனாலேயே, மூன்றாண்டுகளில், அந்த சேவையிலிருந்து என்னை விடுவித்துக்கொண்டு, என்னளவில் முயற்சித்து, வேதாத்திரி மகரிஷி காட்டியவழியில் தன்னையறிந்து, மெய்ப்பொருள் உண்மை விளங்கிக் கொள்ள முடிவு செய்து பயணித்தேன். கிட்டதட்ட முப்பது ஆண்டுகள் அனுபவம் அது. அந்நிலையில்தான் நான் நிறைபேற்று நிலை பெற்றேன். அதன் பிறகுதான், பிறருக்கு, உண்மை விளக்கம் தரும் பணியை கடமையாகக் கொண்டேன். இது உங்களுக்கும், ஒவ்வொரு வேதாத்திரிய அன்பருக்கும் நிகழலாம்.

தீட்சை வழங்கப்படும் பொழுது, தீட்சை பெறப்படும் பொழுதும் அங்கே ஓர் அதிசயமும் நிகழ்கிறது. அது என்ன என்பதை, இந்த காணொளி மூலமாக அறியலாம்.


ஆக்கினைசக்கரத்தில் குண்டலினி தீட்சை எனக்கு அளிப்பது யார்?  Who initiate My Kundalini in Agna Chakra?

வாழ்க வளமுடன்

-