CJ for You: kundalini raising

kundalini raising

Showing posts with label kundalini raising. Show all posts
Showing posts with label kundalini raising. Show all posts

Sir, who initiates a disciple into Kundalini and enhances his kundalini energy? Give an explanation.


ஐயா, ஒரு சீடனுக்கு குண்டலினி தீட்சை கொடுத்து, குண்டலினி சக்தியாற்றலை உயர்த்துவது யார்? விளக்கம் தருக.

நல்ல சிந்தனைக்குறிய கேள்வி. இந்த கேள்விக்கு, நம் வேதாத்திரியாவில், தனியாக ஒரு பதிவு தரப்பட்டுள்ளது. அதை இந்த பதிவோடு இணைத்துள்ளேன். அதற்கு முன்பாக சில உண்மைகளை இங்கேயும் காண்போம்.

மெய்ப்பொருள் உண்மையை உணர்ந்தறிந்த, குரு மட்டுமே, ஒரு சீடனுக்கும், தன்னை நாடி வரும், சுய தேடல் ஆர்வம் உள்ள அன்பருக்கும், குண்டலினி தீட்சையை வழங்க முடியும். குரு என்பவருக்கு நிகராக யாரையும் சொல்ல முடிவதில்லை. எனினும் ஒரு சீடன், குருவால் உயர்த்தப்படும் பொழுது, சீடனும் பிறருக்கு மெய்விளக்கம் தரும் வாய்ப்பை பெற்றுவிடுகிறான். இங்கே சீடனுக்கு, தன்னிலை விளக்கமும், மெய்ப்பொருள் உன்மை விளக்கமும் கிடைக்கவில்லை என்றாலும் கூட, குருவின் அன்பும், கருணையும் அவனுக்கு இருக்கிறதல்லவா?

அப்படியல்லாது, ஏதோ ஒருவருடம் படித்தேன், தவம் செய்ய பழகிக் கொண்டேன். படித்தேன், குருவின் விளக்கம் கேட்டேன். மெப்பொருள் உண்மை புரிந்து கொண்டேன், அதற்கான சான்றிதழ் பெற்றுக்கொண்டேன். நானும் ஆசிரியர் என்ற ரீதியில், யாரும் மற்றவர்களுக்கு தீட்சை வழங்கிட முடியாது. அது இந்த இரு நபர்களுக்குமே பிரச்சனை ஆகிவிடும். ஒரு சீடன் உண்மையாகவே தன்னையறிந்து, மெய்ப்பொருள் உண்மை விளங்கிக் கொள்ள,  சீடனின் தவம், தற்சோதனை, அகத்தாய்வு, ஆராய்ச்சி என்ற வகையில், பல ஆண்டுகளை செலவிட வேண்டிய அவசியம் உண்டாகும். குறைந்தது பத்தாண்டுகள் முதல் முப்பது ஆண்டுகள் ஆகலாம், ஆனாலும், அவனின் கர்மா என்ற வினைப்பதிவு தீர்க்கப்பட வேண்டும்.

எனவே, தீட்சை வழங்கும் நிலைக்கு, ஒருவர் உயர்ந்தாலன்றி, தீட்சை அளித்திட முடியாது. என்றாலும் கூட, வேதாத்திரியத்தில், குறிப்பிட்ட தகுதிநிலை பெற்றவர், முற்றிலும் புதிய ஒருவருக்கு தீட்சை அளிக்கலாம் என்பது நடைமுறையில் உள்ளது. இது, மகான் வேதாத்திர் மகரிஷி அவர்களே, ஏற்படுத்தித் தந்த வழிமுறை ஆகும். இந்நிகழ்வை, ஓவ்வொருவரோடும் இணைந்து, வான் காந்தத்தில் தன்னை கலக்கவிட்டுக் கொண்ட, வேதாத்திரி மகரிஷி அவர்களே, ஒழுங்குசெய்து கொள்கிறார். ஆனால் பெரும்பாலோர் இதை நம்ப மறுப்பார்கள்.

என்னுடைய அனுபவத்தில், எனது 21 வயதில்  அப்போதைய ‘Master’ பயிற்சி வழியாக, உயர்ந்த நிலையிலும், எனக்கு முழுயான, இறையுண்மை அனுபவமாக பெறாததாலும், பிறருக்கு தீட்சை வழங்க, தயக்கம் இருந்தது. அதனாலேயே, மூன்றாண்டுகளில், அந்த சேவையிலிருந்து என்னை விடுவித்துக்கொண்டு, என்னளவில் முயற்சித்து, வேதாத்திரி மகரிஷி காட்டியவழியில் தன்னையறிந்து, மெய்ப்பொருள் உண்மை விளங்கிக் கொள்ள முடிவு செய்து பயணித்தேன். கிட்டதட்ட முப்பது ஆண்டுகள் அனுபவம் அது. அந்நிலையில்தான் நான் நிறைபேற்று நிலை பெற்றேன். அதன் பிறகுதான், பிறருக்கு, உண்மை விளக்கம் தரும் பணியை கடமையாகக் கொண்டேன். இது உங்களுக்கும், ஒவ்வொரு வேதாத்திரிய அன்பருக்கும் நிகழலாம்.

தீட்சை வழங்கப்படும் பொழுது, தீட்சை பெறப்படும் பொழுதும் அங்கே ஓர் அதிசயமும் நிகழ்கிறது. அது என்ன என்பதை, இந்த காணொளி மூலமாக அறியலாம்.


ஆக்கினைசக்கரத்தில் குண்டலினி தீட்சை எனக்கு அளிப்பது யார்?  Who initiate My Kundalini in Agna Chakra?

வாழ்க வளமுடன்

-

What is the kind of knowing through yoga extremely needed?


இந்த யோகசாதனையின் வழியாக நாம் அப்படி என்னதான் பெரிதாக அறிந்துகொள்கிறோம்?!


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, இந்த யோகசாதனையின் வழியாக நாம் அப்படி என்னதான் பெரிதாக அறிந்துகொள்கிறோம்?!


பதில்: 

ஏதோ மிக சலிப்பாக கேட்பதுபோல தோன்றுகிறது. வாழும் இந்த வாழ்க்கையில், யோகத்திற்கு நாம் கொடுக்கின்ற முக்கியத்துவம் அப்படி ஆகிவிட்டதுதான் என்னசெய்ய? இந்த பொருள்முதல்வாத உலகில், பணத்தையும், வசதி வாய்ப்புக்களையும், வேலைவாய்ப்புக்களையும் தேடுவதற்கே நேரம் போதவில்லையே, இதற்கிடையில் யோகம் வேறா? என்ற சிந்தனையில்தான் இந்தக்கேள்வி பிறக்கிறது. தவறில்லை இது இயல்புதான்!

ஆனால், இந்த உலகில் பிறந்து வாழ்ந்து வெறுமனே மறைந்து போவது ஏன்? எதற்காக பிறந்தோம்? எதற்காக இப்படி வாழ்கிறோம்? வாழும் பொழுது இன்பமும் துன்பமும் ஏன்? துன்பம் நீக்கி வாழ வழி என்ன? நம்முடைய மூலம் என்ன? அது என்ன ஆறாவது அறிவு? எதற்கு பயனாகிறது? இந்த இயற்கை என்பது என்ன? இப்படி பல கேள்விகளுக்கு விடை தெரியாமல், தெரிந்து கொள்ளாமல், இந்த உலகை விட்டு நீங்கிவிடுவது சரிதானா?

வாழ்நாள் எல்லாம் தன்னை வருத்திக்கொண்டு, உழைத்து வருமானம் ஈட்டியதும், வாழ்க்கைக்கான பொருளை சேர்த்ததும், வீடு, வாசல், தோட்டம், தொறவு என்று பிரமாண்டம் காட்டியதும், பகட்டாக ஆடையணிந்து, நகை அலங்காரம் கூட செய்து, மிடுக்காக வாழ்ந்ததுமான இப்படி எல்லாவற்றையும் நொடியில் விட்டுவிட்டு போவதின் அர்த்தம் என்ன? இப்படி விட்டுவிட்டு போவதற்காகவா இவ்வளவு கஷ்டப்பட்டோம்?! என்றெல்லாம் சிந்தனையும், ஆராய்ச்சியும் செய்வதே இல்லையே?!

இதற்கெல்லாம் விடைதேடியே யோகத்திற்கு வருகிறோம். குருவின் துணையோடு பயணிக்கிறோம். இதெல்லாம் தெரிந்துதான் ஆகவேண்டுமா? அப்படி தெரிந்து கொண்டு என்னதான் ஆகப்போகிறது? என்பதுதானே உங்கள் கேள்வி? அப்படி உங்களுக்குத் தோன்றினால் விட்டுவிடலாம். இந்த பிறவியை எப்படி நீங்கள், இப்பொழுது வாழ்கிறீர்களோ அப்படியே வாழ்ந்து கடந்து செல்லுங்கள். ஒரு பிரச்சனையும் இல்லை!

உள்ளுணர்வாக உங்களுக்கு தோன்றாத வரையில், நீங்கள் யோகத்திற்கு வந்து ஒரு பிரயோஜனமும் இல்லை. அப்படி வரவேண்டிய கட்டாயமும் உங்களுக்கு தேவையில்லை. Just like that, என்றபடி இந்த உலக வாழ்க்கையை வாழ்ந்து முடியுங்கள். அதிலே நீங்கள் திருப்தி அடையுங்கள்!

வாழ்க வளமுடன்.

-