CJ for You: by Guru

by Guru

Showing posts with label by Guru. Show all posts
Showing posts with label by Guru. Show all posts

What is the kind of knowing through yoga extremely needed?


இந்த யோகசாதனையின் வழியாக நாம் அப்படி என்னதான் பெரிதாக அறிந்துகொள்கிறோம்?!


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, இந்த யோகசாதனையின் வழியாக நாம் அப்படி என்னதான் பெரிதாக அறிந்துகொள்கிறோம்?!


பதில்: 

ஏதோ மிக சலிப்பாக கேட்பதுபோல தோன்றுகிறது. வாழும் இந்த வாழ்க்கையில், யோகத்திற்கு நாம் கொடுக்கின்ற முக்கியத்துவம் அப்படி ஆகிவிட்டதுதான் என்னசெய்ய? இந்த பொருள்முதல்வாத உலகில், பணத்தையும், வசதி வாய்ப்புக்களையும், வேலைவாய்ப்புக்களையும் தேடுவதற்கே நேரம் போதவில்லையே, இதற்கிடையில் யோகம் வேறா? என்ற சிந்தனையில்தான் இந்தக்கேள்வி பிறக்கிறது. தவறில்லை இது இயல்புதான்!

ஆனால், இந்த உலகில் பிறந்து வாழ்ந்து வெறுமனே மறைந்து போவது ஏன்? எதற்காக பிறந்தோம்? எதற்காக இப்படி வாழ்கிறோம்? வாழும் பொழுது இன்பமும் துன்பமும் ஏன்? துன்பம் நீக்கி வாழ வழி என்ன? நம்முடைய மூலம் என்ன? அது என்ன ஆறாவது அறிவு? எதற்கு பயனாகிறது? இந்த இயற்கை என்பது என்ன? இப்படி பல கேள்விகளுக்கு விடை தெரியாமல், தெரிந்து கொள்ளாமல், இந்த உலகை விட்டு நீங்கிவிடுவது சரிதானா?

வாழ்நாள் எல்லாம் தன்னை வருத்திக்கொண்டு, உழைத்து வருமானம் ஈட்டியதும், வாழ்க்கைக்கான பொருளை சேர்த்ததும், வீடு, வாசல், தோட்டம், தொறவு என்று பிரமாண்டம் காட்டியதும், பகட்டாக ஆடையணிந்து, நகை அலங்காரம் கூட செய்து, மிடுக்காக வாழ்ந்ததுமான இப்படி எல்லாவற்றையும் நொடியில் விட்டுவிட்டு போவதின் அர்த்தம் என்ன? இப்படி விட்டுவிட்டு போவதற்காகவா இவ்வளவு கஷ்டப்பட்டோம்?! என்றெல்லாம் சிந்தனையும், ஆராய்ச்சியும் செய்வதே இல்லையே?!

இதற்கெல்லாம் விடைதேடியே யோகத்திற்கு வருகிறோம். குருவின் துணையோடு பயணிக்கிறோம். இதெல்லாம் தெரிந்துதான் ஆகவேண்டுமா? அப்படி தெரிந்து கொண்டு என்னதான் ஆகப்போகிறது? என்பதுதானே உங்கள் கேள்வி? அப்படி உங்களுக்குத் தோன்றினால் விட்டுவிடலாம். இந்த பிறவியை எப்படி நீங்கள், இப்பொழுது வாழ்கிறீர்களோ அப்படியே வாழ்ந்து கடந்து செல்லுங்கள். ஒரு பிரச்சனையும் இல்லை!

உள்ளுணர்வாக உங்களுக்கு தோன்றாத வரையில், நீங்கள் யோகத்திற்கு வந்து ஒரு பிரயோஜனமும் இல்லை. அப்படி வரவேண்டிய கட்டாயமும் உங்களுக்கு தேவையில்லை. Just like that, என்றபடி இந்த உலக வாழ்க்கையை வாழ்ந்து முடியுங்கள். அதிலே நீங்கள் திருப்தி அடையுங்கள்!

வாழ்க வளமுடன்.

-

Someone told to me, the vasiyoga is the best way. Please explain!


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, சித்தர்களின் வாசியோகமே மிகச்சிறந்த வழி என்று என்னிடம் சொல்லுகின்றனர். அது சரிதானா?


பதில்:

சித்தர்களின் வாசியோகமே மிகச்சிறந்த வழி என்று அவர்கள் சொல்லுவதில் தவறில்லை. ஆனால், இப்போது அதை கற்றுக்கொள்வது மிக கடினமாயிற்றே. ஏற்கனவே வாசியோகத்தின் வழியாக, குண்டலினியை மூலாதாரத்தில் இருந்து மேலேற்றி, ஆக்கினைக்கு கொண்டுவந்து நிறுத்திப் பழகியவர் மட்டுமே, அதை பிறருக்கு சொல்லமுடியும். இந்தப்பயிற்சியில் ஏகப்பட்ட தடைகள் வரலாம். உடல் பிரச்சனைகளும், மன பிரச்சனைகளும் வரக்கூடும். எல்லோருக்குமே முதல் முயற்சியிலேயே, மூலாதாரத்திலிருந்து குண்டலினி எழுந்துவிடுவதும் இல்லையே. முதலில் இதற்கான நுட்பத்தை சொற்களால் விளங்கிக் கொள்வதே கடினம்.

சரி, இன்னமும் இந்த வாசியோகம் முறையில்தான், குண்டலினி சக்தியை ஏற்றிக்கொள்ள வேண்டுமா? வேறு ஏதேனும் வழிகளே இல்லையா? கிடையாதா? கிடைத்தாலும் பயன்படுத்தக்கூடாதா? அப்படி பயன்படுத்தினால் என்னதான் சிக்கல்?

சித்தர்கள் காலத்தில், கிட்டதட்ட மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக தொடர்ந்து கடைபிடிக்கப்பட்ட அதே வாசியோகம் தான் இன்னமும் இருக்கிறது என்று எப்படி நம்புவீர்கள்? அதுப்போலவே அந்தக்கால கடின சாதனைகளை இப்போதும் நாம் செய்யத்தான் முடியுமா? அதற்கான உடல் வலுவும், மன வலுவும் கூட இருக்கிறதா? 

ஆனால், இயற்கையும், அந்த தெய்வீகமுமே, சித்தர்களின் ஆராய்ச்சி வழியாக, ஏற்கனவே தன்னிலை அறிந்து, மெய்ப்பொருள் அறிந்த ஒருவர், தன்னுடைய தவ ஆற்றல் சக்தியினாலேயே, மற்றறொருவருடைய குண்டலினி சக்தியை தொட்டு எழுப்பி, உடனடியாக, ஆக்கினை சக்கரத்திற்கு கொண்டுவந்துவிட முடியும் என்ற விளக்கம் வந்துவிட்டதே?! குரு மகான் வேதாத்திரி மகரிஷியின் ஆண்டுக்காலத்திற்கு முன்னேலாயே நடைமுறையில் இருந்திருக்கிறது.  ஆனால் பரவலாக்கப்படவில்லை. ஆனால், வேதாத்திரி மகரிசி தானும் பெற்று, விளங்கிக் கொண்டு, தன்னுடைய ‘எளியமுறை குண்டலினி யோகம்’ வழியான ‘மனவளக்கலை’ மூலம் உலகில் உள்ள எல்லோருக்கும் கற்றுத்தந்து இன்னமும், அந்த தொட்டு எழுப்பி உயர்த்தும் முறை கடைபிடிக்கப்படுகிறது.

ஆனால், இன்னமும் பழமையே சிறப்பு என்று தன்னை வருத்திக்கொள்வதில் பலன் என்ன? காலம்தான் வீணாகும் அல்லவா? ஆனால் உங்கள் விருப்பம்போல தேர்ந்தெடுக்க உங்களுக்கு உரிமை உள்ளது. அதையாரும் தடுப்பதற்கில்லை!

வாழ்க வளமுடன்.

-

Shall we learn kundalini yoga self from old notes or books?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்

கேள்வி

வாழ்க வளமுடன் ஐயா, என் நண்பர் ஒருவர், சித்தர்களின் நூல்களை படித்தே குண்டலினி சக்தியை உயர்த்திக் கொள்ளலாம் என்று சொல்லுகிறார். அது சரியா?


பதில்:

குரு இல்லாத வித்தை பாழ் என்று ஒரு பழமொழி உண்டு. அதை அந்த நண்பருக்கு சொல்லுங்கள். அந்தக்காலங்களில் வழிவழியாக குருகுலம் என்ற வகையில், குருவின் நேரடி பார்வையில்தான் யோகம் கற்றுத்தரப்பட்டது. யோகத்தில் விருப்பமில்லாதவர்களுக்கு, பக்தியும், வழிபாடுகளும் போதும் என்றும் சொல்லப்பட்டது. இன்றைக்கு அந்த குருகுலம் இல்லை. பக்தியும் வேறுமாதிரி திரிந்து விட்டது.

சித்தர்களின் நூல்களில் இலைமறைகாயாக யோக பயிற்சி முறைகள் சொல்லப்பட்டிருப்பது உண்மைதான். ஆனால் அதெல்லாம், பரிசோதனைக்கும், ஒப்பிட்டுப்பார்க்கவும் தான் உதவுமே தவிர, நேரடியாக இந்தமாதிரியாக கற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்லப்படவில்லை. அதாவது பயிற்சி முறைகளாக, படிப்படியாக சொல்லவில்லை. ஆனால் உண்மை இருக்கிறது அதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

யோகம், தகுந்த ஒரு குருவின் வழியாகவே பெறவேண்டும். தீட்சையும் அவர் கண்காணிப்பில்தான் பெறப்பட வேண்டும். இன்றுதான் காலம் மாறிவிட்டதே. குரு மகான் வேதாத்திரி மகரிஷி, எளியமுறை குண்டலினி யோகமான, மனவளக்கலை இருக்கிறதே? மேலும் அது தொட்டுத்தரும் தீட்சையாகவும் மலர்ந்துவிட்டது. அந்தக்காலம் மாதிரியான கடின முறைகளும் கிடையாதே!

மேலும், யோகத்தை கற்றுக்கொள்ள வேறு பல யோக மையங்களும் இங்கே உருவாகிவிட்டன. யாரும் எங்கு வேண்டுமானலும், யோகம் கற்றுக்கொள்ள வாய்ப்பும் கிடைக்கிறது. இனிமேலும், நூல்களை படித்து தானாகவே கற்றுக்கொள்வேன் என்பது அவசியமில்லை. இதனால், காலவிரயம் மட்டுமல்ல, அறிவுத் தடங்கலும் ஆகிவிடும்.

முக்கியமாக, தானாக பழைய நூல்கள், ஓலைச்சுவடிகள் படித்து யோகம் கற்க ஆரம்பித்தால், அந்தக்காலம் மாதிரியே, குண்டலினி சக்தி பாதையில் தடை வந்தால் என்ன செய்வீர்கள்? எப்படி அதை போக்குவீர்கள்? மூலாதாரத்தில் இருந்து ஆக்கினை செலுத்துவதற்கு முயற்சிக்கையில், அதற்கு இடையிலான மற்ற ஆதாரங்களில் நின்றுவிட்டால், அது உடலுக்கும், மனதுக்கும், உயிருக்கும்  சிக்கலை உருவாக்கிவிடுமே? வாழ்நாளையும் சிதைக்கும் அளவுக்கு மாறிவிடவும் கூடும். அவற்றை, அந்த தடைகளை நீக்கிடவும், பாதிப்பில்லாமல் மேல்நோக்கி நகர்த்தவும் அறிவாரா? இப்படி இன்னும் நிறைய பிரச்சனைகள் எழக்கூடும் என்பதால். அவரை, உங்கள் நண்பரை ஏதேனும், யோக மையங்களில் இணையச்சொல்லி அறிவுரை சொல்லுங்கள்!

இன்னும் தெளிவாக சொல்லப்போனால், உடல் நலம் சீர்கெடும், நிற்க நடக்க முடியாமல் போகலாம், பேச்சில் குழப்பம், சிந்தனையில் பதட்டம், புத்தி தடுமாற்றம் பெறும், மன நலம் பாதிக்கும், பிற ஆவி, ஆன்மாக்களின் தொந்தரவும் வரும் என்பதை அவருக்கு தெளிவுபடுத்துக!

வாழ்க வளமுடன்.  

Why and What the important of the re-touch?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்

இன்றுமுதல் வேதாத்திரிய கேள்வி பதில்களும் பதிவாக வழங்கப்படுகிறது. வாழ்க வளமுடன்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, மறுதீட்சை என்பது அவசியம்தானா?


பதில்:

மறுதீட்சை என்ற வார்த்தையை நன்கு கவனியுங்கள். கொடுக்கப்பட்ட தீட்சையை, கற்றுக்கொடுக்கப்பட்ட தீட்சையை சரியாக பயன்படுத்திக் கொள்ளாதவர்களுக்கு நிச்சயமாக, மறுதீட்சை அவசியமே! குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்களின், எளியமுறை குண்டலினி யோகமான மனவளக்கலையைக் கூட, அவர்களால் தொடர்ந்து பயணிக்க முடியாத சூழலில் சிக்கி விடுகிறார்கள்.

இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். பொதுவாக வேலைப்பளு, குடும்பத்தில் அன்றாடம் நிகழக்கூடிய நிகழ்வு, பிரச்சனைகள், மனவளக்கலை மன்றத்தை விட்டு தூரமாக விலகி இருத்தல், நீண்ட நோய் தொந்தரவு, ஊர் விட்டு ஊர் மாறிவிடுதல், வெளிநாடு சென்று விடுதல், தவம் செய்யவே நேரம் கிடைக்காமை, விபத்தில் உண்டான காயம், உடல் வலி பிரச்சனை, உடலில் ஏற்றுக்கொண்ட அறுவைசிகிச்சை என்று இருக்கலாம்.

இவர்கள் அனைவரும், முழுமையான யோககல்வி கற்றிருந்தாலும், மறுபடி தவம் செய்ய நினைத்தால், செய்யலாம் என்பது சரிதான். ஆனால் அங்கே ஒரு தடை ஏற்பட்டிருக்க வாய்ப்பு இருக்கலாமே?! அந்த தடையினால், குண்டலினி சக்தியின் பாதையிலும் அதன் ஓட்டத்திலும் பிரச்சனை உருவாகலாம். அதனால் ஆக்கினை தவம் செய்தால், மிகச்சரியாக ஆக்கினையில் பொருந்திவர வேண்டுமே? அதுபோல சாந்தி தவம் செய்தால், மூலாதாரத்தில் நிலைபெற வேண்டுமே? அப்படி இல்லையென்றால் அது, பலவித உடல், மன பிரச்சனைகளை உருவாக்கக்கூடும். 

எனவே, மறுதீட்சை அவசியம்தானா? என்ற கேள்வியை விட்டுவிட்டு, இத்தனை நாட்கள், மாதங்கள், வருடங்கள் காலமாக, தவம் செய்யாததால், வேறு ஏதேனும் பிரச்சனை ஏற்படுத்திக் கொள்வதை தவிர்க்கும் பொருட்டு, மனவளக்கலை மன்றத்தை அணுகியோ அல்லது தகுந்த ஆசிரியரைத் தேடியோ, அவரிடம் நேரில், மறுதீட்சை பெறுவது நல்லதுதான்.

தவம் எடுத்துக்கொண்ட எல்லோருமே, மறுதீட்சை பெற்றுக்கொண்டுதான் இருக்கிறார்களா? என்று எதிர்கேள்வி கேட்டு உதாசீனம் செய்தால், அதற்கான பலனை அனுபவிக்கவேண்டியது நீங்களேதான்!

மேலும், மறுதீட்சை என்பது கட்டாயமாக்கப்படவில்லை என்பதையும் இங்கே தெள்வுபடுத்திக் கொள்க. உங்கள் விருப்பத்தில் மறுதீட்சை பெற்றுக் கொள்வது சிறந்த வழி. எனவே அக்கறையின் வழியாகவே இதற்கான பதில் தரப்படுகிறது!

வாழ்க வளமுடன்.

வேதாத்திரியம் குறித்த கேள்வி பதில் என்ற இந்த WhatsApp குழுவழியாகவும் பெறலாம்!