CJ for You: waste

waste

Showing posts with label waste. Show all posts
Showing posts with label waste. Show all posts

In this yoga of yours, only one who is lazy without any job, who has an inferiority complex, who does not know how to make a living, who hates life, who has withdrawn himself from society, who has experienced problems in family and who wants to escape from worldly duty will come. Will a person who has a good education, a job, an earning, a fulfilling life and happiness come? Isn't all this deception in God's name? Will you get money if you meditate first? Will you answer?


உங்களுடைய இந்த யோகத்தில், வேலைவெட்டி இல்லாத சோம்பேறியும், தாழ்வு மனப்பான்மை கொண்டவனும், பிழைக்கத்தெரியாதவனும், வாழ்க்கையை வெறுத்தவனும், தன்னை சமுதாயத்திலிருந்து விலக்கிக்கொண்டவனும், குடும்பத்தில் பிரச்சனை அனுபவித்தவனும், உலக கடமையில் இருந்து தப்பிக்க நினைக்கிறவனும்தான் வருவான். நல்ல படிப்பு, வேலை, சம்பாத்தியம், நிறைவான வாழ்க்கை, சுகம் என்று இருப்பவன் வருவானா? இதெல்லாம் கடவுள் பெயரைச் சொல்லி ஏமாற்றும் வேலை அல்லவா? முதலில் தியானம் செய்தால் பணம் வருமா? பதில் தருவீர்களா?


வேதாத்திரிய அன்பர்களுக்கும், யோகத்தில் ஆர்வமுள்ளவர்களுக்கும் விளக்கம் அளிக்கவே எமது வேதாத்திரியா சேவை வழங்கப்படுகிறது. எனினும், உங்களைபோன்றோருக்கு விளக்கம் அளிக்கும் வகையில், அவ்வப்பொழுது பொதுவான தலைப்புக்களில் பதிவும், விளக்கமும் தருவது உண்டு. எனினும் யாரையும் நாம் வற்புறுத்துவதில்லை.

யோகத்திற்கு தன்னை இணைத்துகொள்ள ஒரு மனிதன்  வரவேண்டுமானால், ஒரு மாங்காய், இயல்பாக மாம்பழமாக பழுப்பதைப் போல நிகழவேண்டும். கால்சியம் கார்பைட் (Calcium carbide) இரசாயனத்தை  மாங்காய்களோடு கலந்து, இயற்கைக்கு மாறாக பழுக்கவைப்பதில் பிரயோஜனம் இல்லை. எனினும் விளக்கிச் சொல்லுவதிலும், புரியவைப்பதிலும் தவறில்லை. முடிவு உங்கள் வசமே என்பதை மறவாதீர்கள்.

நீங்கள் பிறந்த இவ்வுலகில், ஏதேனும் கடமை, நோக்கம், காரணம் இருக்கிறதா? என்று சிந்தித்திருக்கிறீர்களா? உங்களோடு பிறந்தவர்கள் வாழ்வதுபோலவே, இதற்கு முன்னே வாழ்ந்தது போலவும், பல்வேறு வகையில் வாழ்ந்து, எல்லாம் அனுபவித்து, இவ்வுலகைவிட்டு நீங்கினால் போதுமானதா? அப்படியானால் ஏன்? எதற்காக? சித்தர்களும், ஞானிகளும், மகான்களும், இறை தூதர்களும் தோன்றினார்கள்? அவர்களுக்கு எல்லாமே நீங்கள் சொல்லுவது போல, வேறு வேலை ஏதும் இல்லையோ?

இந்த யோகத்தில், வேலைவெட்டி இல்லாத சோம்பேறியும், தாழ்வு மனப்பான்மை கொண்டவனும், பிழைக்கத்தெரியாதவனும், வாழ்க்கையை வெறுத்தவனும், தன்னை சமுதாயத்திலிருந்து விலக்கிக்கொண்டவனும், குடும்பத்தில் பிரச்சனை அனுபவித்தவனும், உலக கடமையில் இருந்து தப்பிக்க நினைக்கிறவனும்தான் வருவான். நல்ல படிப்பு, வேலை, சம்பாத்தியம், நிறைவான வாழ்க்கை, சுகம் என்று இருப்பவன் வருவானா? என்று கேட்பது, உங்களின் அறியாமையையும், இந்த உலகில் எந்த வகையில் நீங்கள் சிக்கி இருக்கிறீர்கள் என்பதையுமே, எடுத்துக் காட்டுகிறது.

நீங்கள் இன்னமும் அந்தக்கால, வாழ்க்கையை விட்டு ஓடும், யோகத்திலேயே நின்றுவிட்டீர்கள். யோகம் குறித்த உண்மையை நீங்கள் அறியவில்லை, மேலும் உண்மையை மறுக்கிறீர்கள். யோகம் உங்கள் பிறப்பின் ரகசியத்தை அறியும் வழி. இயற்கையோடு உங்களை ஒன்றிணைக்கும் பயிற்சி. நான் யார்? என்று உங்களுக்குள் கேள்வி எழுப்பி பதில் தேடும் பாடம். மனித பிறவியின் நோக்கமும், கடமையும் அறிவதற்கான, தீர்ப்பதற்கான செயல்முறை. மேலும் கடவுள் என்றால்,  கட உள், கடந்து உள்ளே போய் கவனி என்பதுதான் அர்த்தமாகும். யாரையாவது சுட்டிக்காட்டி, இதுதான் கடவுள் என்று காட்டுவதல்ல. அது எங்களைப்போன்ற யோகியர்களின் வேலையும் அல்ல.

இப்போது, கேள்வியின் முக்கிய நிலைக்கு வரலாமா? முதலில் தியானம் செய்தால் பணம் வருமா? பதில் தருவீர்களா? தருகிறேன். இதோ, இந்த பதிவின் வழியாக, உண்மை விளக்கத்தை அறிந்து கொள்க.

உங்களுக்கு பணம், பொருள், செல்வ வளம் பிரபஞ்ச இயற்கையாற்றல் தருமா? முழு பதிவு!

வாழ்க வளமுடன்.

-


Why human need food? can we avoid? any science truth on it?


மனிதனுக்கு உணவு ஏன் தேவை? உணவின் தேவையின்றி வாழ முடியாதா? அதில் ஏதேனும் விஞ்ஞான விளக்கம் உள்ளதா?

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்

கேள்வி:

வாழ்க வளமுடன் சுவாமிஜி, மனிதனுக்கு உணவு ஏன் தேவை? உணவின் தேவையின்றி வாழ முடியாதா? அதில் ஏதேனும் விஞ்ஞான விளக்கம் உள்ளதா?


வேதாத்திரி மகரிஷியின் பதில்:

மனிதன் இப்பூவுலகின் மீது வாழ்ந்து கொண்டிருக்கிறான்.  இப்பூவுலகம் 25000 மைல் சுற்றளவு உடையது.  தன்னைத் தானே மணிக்கு 1042 மைல் வேகத்தில் சுற்றிக் கொண்டுள்ளது.  எந்த ஒரு பொருளும் வேகமாகச் சுற்றும் பொழுது இறைவெளியின் சூழ்ந்தழுத்தம் (Self Compressive Surrounding Pressure Force) காரணமாக ஒரு மைய ஈர்ப்பு விசை அமைந்துவிடுகிறது.

        உலகம் சுழலுகின்ற வேகத்தில் அதன் விளிம்பில் மையத்தை விட்டு விலக்கும் சக்தி (Gravitational Repulsive Force) அல்லது தள்ளும் சக்தி உண்டாகிறது.

உடலானது கோடானகோடி செல்களால் கட்டப்பட்டுள்ளது. 

பலகோடி பிறவிகளில் வந்த பரிணாம வேகத்தில் உடலில் உள்ள விண் என்ற லேசான நுண்ணியக்கத் துகள்கள் மேல் நோக்கு வேகத்தைப் பெற்றுள்ளன.  பூமியின் மையத்தை விட்டு விலகும் ஆற்றலால் பூமியின் மேல் வாழுகின்ற மனித உடலில் உள்ள நுண்ணியக்கத் துகள்கள் உடலை விட்டுத் தொடர்ந்து (Thrown Up) விசிறியடிக்கபடுகின்றன.  அதனால் உடலில் நுண்ணியக்க ஆற்றலில் தொடர்ந்து இழப்பு ஏற்படுகிறது.

அதே போல பூமியின் மைய ஈர்ப்பு ஆற்றலால் வேகம் குறைந்த முதிர்வுற்ற (Worn  out Cells) துகள்கள் பூமியை நோக்கி உதிர்ந்து விடுகின்றன.  இவ்வாறு ஒவ்வொரு நிமிடத்திற்கும் மனித  உடலில் உள்ள தசை,  நரம்பு, எலும்பு, மூளைகளிலிருந்து கோடிக்கணக்கான செல்களை உடல் இழந்து கொண்டிருக்கிறது.

        அதே நேரத்தில் ஒவ்வொரு நிமிடமும் கோடிக்கணக்கான  புதிய சக்தி மிக்க செல்கள் உணவிலிருந்தும், காற்றிலிருந்தும், நீரிலிருந்தும், கோள்களிலிருந்தும் உடலைப் புதுப்பித்துப் கொண்டிருக்கின்றன.  இதனால் உடலின் இழப்பானது சரிகட்டப்படுகிறது.

இதை ஒரு உதாரணத்தினால் அறிந்து கொள்ளலாம்.  நாம் உடலைச் சரியாக எடை போட்டுக் கொள்வோம்.  ஒரு முழுநாள் நீரைத் தவிர எந்த உணவும் எடுத்துக் கொள்ளாமல் இருப்போம்.  அடுத்தநாள் காலை உடலை எடை போட்டுப் பார்த்தால் குறைந்த பட்சம் 50 கிராமிலிருந்து அதிக பட்சம் 200 கிராம்வரை உடலின் எடை குறைந்திருக்கும்.  இதிலிருந்து உடல் தான் இழந்த அணுக்களை உணவால் புதுப்பித்துக் கொள்வதை அறியலாம்.

இவ்வாறு உடலின் ஆற்றல் இழப்பிற்கும் சேர்க்கைக்கும் இடையில் நாள் தோறும் மனிதன் சாவிலிருந்து தப்பிபிழைத்துக் கொண்டேயிருக்கிறான்.  இதனால் தான் வாழ்க்கைக்கு பிழைப்பு என்றே பெயர் வந்தது.

வாழ்க வையகம்    வாழ்க வளமுடன்.

-

What is VithuNatham as Sanskrit? As woman have it?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, வித்துநாதம் என்றால் என்ன? அது பெண்களுக்கும் உண்டா?


பதில்:

நாம் இந்த உலகில் பிறப்பதற்கு காரணமே, வித்து நாதம் சேர்க்கைதானே?! வித்து என்பது ஆண்கள் உடலில் உருவாகும் ஏழாவது தாது ஆகும், நாதம் என்பது பெண்கள் உடலில் உருவாகும் ஏழாவது தாது ஆகும். ஆனால் பிரித்துச்சொல்லாமல், வித்துநாதம் என்றுதான் அக்காலம் முதல் சொல்லுவது வழக்கம். பெண்களுக்கும் உண்டா? என்று கேட்பது உங்களின் அறியாமையை வெளிப்படுத்துகிறது. அதை திருத்திக்கொள்ள வேண்டும்.

பொதுவாக பெண்களுக்கு, காம இன்பத்தின் உச்சத்தில், ஆண்களுக்கு வெளிப்படுவது போலவே வெளிப்படுவது இல்லை. ஏனென்றால் பெண்களுக்கான பாலுறவு சக்தி என்ற நாதம், ஆண்களுக்கான பாலுறவு சக்தியான வித்து (விந்து) போல இல்லை என்பதே உண்மை. இதனால் வெளிப்பட்டாலும் கூட அதை நாம் தெரிந்துகொள்வதும் கடினமே. இதன் காரணமாக, பெண்களுக்கு இல்லை என்று கருதுவிடக்கூடாது.

பெரும்பாலும் அது ஏதும் நிறமற்ற நீர் போல, திரவம் போல வெளிப்பட்டுவிடும் என்பதுதான் உண்மை.

இந்த நாதமும், வித்துவும் கூடி, சக்திபெற்று, அதன்வழியாகவே கருமுட்டையை அடைந்து ஜீவனாக வளரும்படி இயற்கை வியத்தகு நிகழ்ச்சியை நடத்துகிறது. எனவே வித்து நாதம் என்பது, ஆண், பெண்ணுகான பாலுறவு சக்திதான் என்பதை அறிந்து கொள்க.

முக்கியமாக, இந்த வித்துநாதம், இயல்பாக திணிவு பெற்றால்தான், பாலுறவில் ஆர்வம் வரும். ஆனால் இக்காலத்தில், அப்படியல்லாது ஆர்வத்திலும், பழக்கத்திலும், விருப்பத்திலும் அதை வெளியேற்றி இன்பம் அடைவது என்று பருவ வயதினரும், இளம் வயதினரும் வாழ்கிறார்கள். வித்துநாதம் வீணாக வெளியேறினால் அது உடலையும், மனதையும், உயிரையும் பாதிக்கும். எனவே அப்பழக்கத்தை, தகுந்த ஆலோசனையோடு மாற்றிடவேண்டியது அவசியமாகும்.

வாழ்க வளமுடன்.