CJ for You: avoid and reject

avoid and reject

Showing posts with label avoid and reject. Show all posts
Showing posts with label avoid and reject. Show all posts

Is worship necessary? What should it look like? Has Vethathiri Maharshi told you about it? Give an explanation.


வாழ்க வளமுடன் ஐயா, இறைவழிபாடு அவசியம் தானா? அது எப்படி இருக்கவேண்டும்? வேதாத்திரி மகரிஷி அதுகுறித்து சொல்லி இருக்கிறாரா? விளக்கம் தருக.


இறைவழிபாடு என்பது மனிதனுக்கு அவசியம். அதை புறம்தள்ளுவதும், விட்டுவிலகுவதும், அவசியமில்லை என்று கருதுவதும் அவனுடைய அறியாமை. அது தன்முனைப்புக்கும் வழிவகுக்கும். அவனின் வாழ்க்கைப்பாதையை மாற்றும். பிறப்பின் நோக்கமும், கடமையையும் அறிந்துகொள்ளும் வழியில் இருந்து தள்ளிவைக்கும். ஆனால், பெரும்பாலோர் இதை ஏற்கவும் மாட்டார்கள். இறையும், இறைவழிபாடும் தேவையில்லாத ஒன்று என்பதுதான் அவர்கள் கண்ணோட்டம்.

இறைவழிபாடு என்பது ஆதி மனிதனின் உள்ளுணர்வு ஆகும். தன்னைவிடவும் வலிமையானது, தன்னிலும் பிரமாண்டமானது, தன்னையே காப்பது என்ற, தான் அறிந்த உண்மையின், வியப்பின், மரியாதையின் உச்சமே ‘இறைவழிபாடாக’ வாழ்வியலில் கலந்தது. மேலும் அந்த இறைவழிபாடுதான், நான் யார்? என்ற தன்னையறிதலுக்கு தூண்டுகோலாகவும் இருந்தது,

நான் யார்? என்று ஆராய்வதின் வழியில் நமக்கு கிடைக்கும் விடை, தனக்கும், இந்த இறைக்கும் உள்ள தொடர்புதான். எனினும் அது எளிமையானதல்ல. குண்டலினி யோகம் வழியாக, மனதை அறிந்து, மனதின் மூலமாக உயிரை அறிந்து, உயிருக்குள் அறிவாக இருந்து இயங்கும், இறையை அறிந்து உணரவேண்டியது அவசியம். இதற்கு கால நீடிப்பு ஆகலாம், என்றாலும் மனிதன் வாழ்நாளுக்குள் அறியமுடியும். அதுவரை நமக்கு இறைவழிபாடு தேவை. அது மனதிற்கான ஒரு பயிற்சியும் கூட. குழந்தைகளுக்கு பக்தி வழியாகவும், பெரியவர்களுக்கு யோகம் வழியாகவும் இந்த இறைவழிபாடு பயன்பாட்டில் நம்மிடையே கலந்திருக்கிறது.

உங்கள் கேள்விக்கான பதிலை, எளியவகையில், வேதாத்திரி மகரிஷி சொல்லுகிறார். இதோ இந்த காணொளி வழியாக அறியலாம்.

இறைவழிபாடு எப்படி இருக்கவேண்டும்? How should worship be performed? by Vethathiri Maharishi
வாழ்க வளமுடன்
-

Why does the mind often confuse me. No matter what you do, the mind refuses to budge. Shall we leave it as it is and go back to normal? Is it possible to separate the mind?


என்னுடைய மனம் ஏன் என்னை அடிக்கடி குழப்புகிறது. என்ன செய்தாலும் மனம் அடங்க மறுக்கிறது. அதை அப்படியே விட்டுவிட்டு, வழக்கமான செயலை செய்து கொள்ளலாமா? மனதை பிரித்து வாழ முடியுமா? மனம் என்பதை ஏன் முழுமையாக புரிந்து கொள்ள முடியவில்லை? 


மனமும் மனிதனும் இணைபிரியாத கூட்டணி ஆகும். எந்த வகையிலும் பிரிக்கமுடியாது. விலகி நிற்கவும் முடியாது. ஏதோ ஒரு சில நொடி மனம் இல்லாதது போலவும், பிரிந்து நிற்பது போலவும் தோன்றலாம். ஆனால் அது மாயை. மனதை விட்டு விலகி நின்று வாழ முயற்சிப்பது என்ற செயல் கேலியானது. மனம் இன்றி மனிதனே இல்லை என்ற நிலையில், இது எப்படி நிகழும்? விலகினாலும் அது உங்களோடுதான் இருக்கும். மனம் இல்லை என்றால், அவன் ஒரு ஜடப்பொருளாகி விடுவான். அதாவது உயிரற்ற தன்மைக்கு போய்விடுவான் என்பதுதான் உண்மை.

இங்கே, நான் மனதை வென்றுவிட்டேன். மனதை தள்ளி வைத்துவிட்டேன், என் வழக்கமான வேலைகளை உற்சாகமாக கவனிக்கிறேன். எனக்கு எந்த தடையும் இல்லை என்று சிலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். இதற்கென்று பயிற்சிகளும்கூட கிடைக்கிறது. நல்லதுதான். அப்படியான மாற்றம் பெற்றவர்களை நான் வாழ்த்துகிறேன். ஆனால், அந்த நிலையில் அவர்கள், எவ்வளவு காலம் நீடித்து இருக்கிறார்கள்? வாழ்நாள் முழுவதும் அதே நிலைமையில் தொடர்கிறார்களா? என்ற கேள்விக்கு பதில் இல்லை. அப்படி மனதை தள்ளி வைத்துவிட்டு, என்னதான் செய்கிறார்கள்? என்றும் தெரியவில்லை. உண்மையாக இது மிகப்பெரிய ஏமாற்றுவித்தை என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. எனினும், ஏதேனும் ஒருவகையில் மனம் குறித்த விளக்கம், உங்களுக்கு கிடைத்தால் சரிதான். நல்லதும் கெட்டதும் அனுபவபட்டால்தானே தெரியும்? அதனால் நான் வரவேற்கிறேன்.

மனதை புரிந்துகொண்டு, அறிந்துகொண்டு, அதன் இயக்கத்தோடு கலந்து, அதன் உண்மையை, அந்த மனதிற்கே புரியவைத்துவிட்டால் மட்டுமே, அது தானாக தன்னை முழுமை செய்துகொள்ளும். அப்போது அது உங்களோடு கைகோர்க்கும். இதற்கு தியானம் என்ற தவம், அகத்தாய்வு எனும் தற்சோதனை மிக முக்கியமாகும். 

மேலும் மனம் குறித்த உண்மைகள் அறிய, இந்த காணொளி உதவிடும்.


மனம் என்பது உங்களுக்கு இத்தனை அவசியமா? உண்மை விளக்கம் - Importance of the Mind

வாழ்க வளமுடன்.

-

Should we accept that there is suffering in life? Can't suffering be solved completely? What is the reason for this? What is the way to solve it?


ஐயா, வாழ்வில் துன்பமும் இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டுமா? துன்பத்தை முழுமையாக தீர்க்க முடியாதா? இதற்கு காரணம் என்ன? அதை தீர்த்திட வழி என்ன?

நமக்கு வாழ்வதற்கு வாழ்க்கை மட்டுமே இருக்கிறது. அதில் இன்பமும், மகிழ்ச்சியும் இருக்கிறது. அதன் காரணத்தையும், அதில் இருக்கின்ற உண்மையையும் அறிந்து கொண்டால், நம் பிறப்பும், வாழ்வும், நம்முடைய மூலமான நிலையையும் அறிந்துவிட்டால், பேரின்பமாக இருக்கும். இதைத்தான் பிறவிக்கடமை, பிறவி நோக்கம் என்று சொல்லியிருக்கிறார்கள்.

ஆனால் நாம் பேரின்பம் என்றால், வேறு ஏதோ ஒன்று என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். அதைத்தான் செயல்படுத்திடவும் செய்கிறோம் அல்லவா? புலன்களைக் கடந்த ஓர் இன்பம் இருக்கிறது என்பதை நாம் ஏற்றுக்கொள்வதில்லை. அதெப்படி ஐயா, புலன் கடந்து இன்பமாவது ஒன்றாவது? என்று எதிர்கேள்வி கேட்டு, இந்த உண்மையையும், அதை சொன்னவரையும் கூட ஒதுக்கித் தள்ளிவிடுகிறோம்.

பொதுவாகவே நம் வாழ்வில், பலப்பல உண்மைகள், நமக்கு காலம் கடந்து தான் தெரியருகிறது. அது மனிதருடைய இயலாமைதான். நமக்கு முன்னே புகையும், பனியும் படர்ந்து இருக்குமானால், அருகில் இருப்பவரை பார்க்க முடியாது. அவர் யார் என்று அடையாளம் காணவும் முடியாது. இப்படியாகத்தான், பல உண்மைகளை நாம் மறுத்து, கடந்து போய்விடுகிறோம். இன்னமும் கூடுதலாக, இதெல்லாம் தெரியாவிட்டால், தெரிந்து கொள்ளாவிட்டால் என்னய்யா? என்ன குடிமுழுகி போய்விடப்போகிறது? என்றுதான் நாம் நினைக்கிறோம். அப்படித்தான், உங்களுக்கு முன் பிறந்த, உங்களின் முன்னோர்கள், கைவிட்டு விட்டார்கள். நாமும் அதே தவறை செய்யலாமா?

இந்த காணொளி வழியாக, உண்மையும், தீர்வும் பெறலாம். மிக எளிமையாக புரிந்து கொள்ள முடியும்.

உங்கள் வாழ்வில் துன்பச்சிக்கல் இருந்தால் அதை தீர்க்க வழி என்ன? உண்மை விளக்கம் Difficulties & problems

வாழ்க வளமுடன்