CJ for You: concentrate

concentrate

Showing posts with label concentrate. Show all posts
Showing posts with label concentrate. Show all posts

Is exercise a separate necessity when there is yoga? Yoga has everything, isn't it? Is that true?


வாழ்க வளமுடன் ஐயா, யோகாசனம் இருக்கும் பொழுது உடற்பயிற்சி என்பது தனியே அவசியமா? யோகாசனத்திலும் எல்லாமே இருக்கிறது அல்லவா? உண்மைதானே? விளக்குக.

யோகாசனம் என்பதற்கு உண்மைப் பொருள் என்ன? என்பதை நீங்கள் பொதுப்பெயராக எடுத்துக் கொண்டீர்களா? அது வடமொழி சொல். யோக ஆசனம் என்பது உடலுக்கான பயிற்சி என்பதைத்தான் சொல்லுகிறது. யோகம் என்பது ஒழுங்குமுறை செய்தல், ஆசனம் என்பது உடலுக்கான நிலைகள். ஆனால் நீங்கள் யோகாசனம் வேறு, உடற்பயிற்சி வேறு என்று சொல்லுகிறீர்களே?  உண்மையாகவே இரண்டும் ஒன்றுதான்.

யோகாசனம் என்றால், கால்மடக்கி அமர்வது, மூச்சை கவனிப்பது, மூச்சை அடக்கி பிறகுவிடுவது, நிமிர்ந்து அமர்வது, வளைந்து நிற்பது, தலைகீழாக நிற்பது, கைகளால் உடலை தாங்குவது, கால்களால் உடலை தாங்குவது என்று பலவித ஆசனங்கள் இருக்கின்றன. இவை எல்லாவற்றையும், எல்லோராலும் செய்ய முடியுமா?

மேலும் பொதுவாக உடற்பயிற்சி என்றால், ஓடுவது, நடப்பது, குதிப்பது, அமர்ந்து எழுவது, கைகால்களை சுழற்றுவது, குனிந்து நிமிர்வது என்றுதான் இருக்கிறது. கூடவே கைகளில் சில பொருட்களை தூக்குவதும், அவற்றை சுழற்றுவதும் இதில் உண்டு. இன்னமும் கூட கால்மூலம் குறிப்பிட்ட எடையை தாங்குவது, இழுப்பது என்றெல்லாம் நவின உடற்பயிற்சிகள் இருக்கின்றன. இதெல்லாம் எல்லோராலும் செய்ய முடியுமா?

பருவ வயதிலும், சுமாராக நாற்பது வயதுவரை உள்ள ஆண்கள் செய்யமுடியும். உடல் தளர்ந்தவர்கள் செய்யமுடியாதே? இந்த எல்லா பயிற்சிகளையும் பெண்களால் செய்யமுடிவதில்லை. சிலர் செய்கிறார்கள் என்றாலும் அவர்களின் உடல்வாகு மாறியும் விடுகிறது.

இப்படியான நிலையில்தான், உடலுக்கு ஏற்றபடி, எல்லோரும் செய்யலாம், எப்போதும் செய்யலாம், எந்த நிலையிலும் செய்யலாம் என்ற வகையில்தான், வேதாத்திரிய எளியமுறை உடற்பயிற்சி நமக்கு கிடைத்திருக்கிறது. இப்போது ஒரு உண்மை புரியவரும். வழக்கமான யோகாசனம், உடற்பயிற்சி என்பதில் இருந்து சற்றே உயர்ந்த நிலையில் இருப்பது புரியவரும். அப்படி உங்கள் கருத்து இல்லை என்றாலும் சரி, இந்த  எளியமுறை உடற்பயிற்சியை கற்றுக்கொண்டு, செய்து பலன் பெறலாம்.

இங்கே எளியமுறை உடற்பயிற்சி என்பதை, எப்படி செய்யவேண்டும் என்றால், எதோ கை காலை அசைக்கிறோம் என்றில்லாமல், இது உடலுக்கான ஒழுங்கமைப்பை சீர் செய்கிறோம் என்ற கவனமும், நினைவும் அவசியம். அந்த அடிப்படையில் தான், எளியமுறை உடற்பயிற்சியை யோகமாக செய்யவேண்டும் என்று சொல்லப்படுகிறது. இந்த உண்மையை மேலும் அறிய, இந்த காணொளி உங்களுக்கு உதவும்.

உடற்பயிற்சியை யோகமாக செய்ய வேண்டிய அவசியம் என்ன? உண்மை விளக்கம் ரகசியம்

வாழ்க வளமுடன்.

How to concentrate on the Thuvathasanga when we practice the Thuriyatheetha Meditation?


துரியாதீத தவம் செய்யும் பொழுது சொல்லக்கூடிய, துவாதசாங்கம் எப்படி நினைவுக்கு கொண்டுவருவது என்று விளக்குவீர்களா?

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா! துரியாதீத தவம் செய்யும் பொழுது சொல்லக்கூடிய, துவாதசாங்கம் எப்படி நினைவுக்கு கொண்டுவருவது என்று விளக்குவீர்களா?


பதில்: 

பெரும்பாலான யோக சாதனை நிலையங்களில், துரியாதீத தவம் கிடையாது. அதுகுறித்து அவர்களுக்குத் தெரியாது. அதை மிகச்சரியாக புரிந்துகொள்ளவும் வாய்ப்பில்லை. ஏனென்றால், துரியாதீத தவம் என்பது, குரு மகான் வேதாத்திரி மகரிஷி தானாக வடிவமைத்து, தன் அன்பர்களுக்கும், இந்த உலகுக்கும் தந்த ஒரு அற்புதமான தியானமும் தவமும் ஆகும்.

யோகத்தில், ராஜயோகமாக கருதப்படும் நிலையில், சகஸ்ரதாரா என்ற 1008 இதழ் தாமரைக்கு ஒப்பாக சொல்லும், துரியம் என்ற தவ நிலைதான் உயர்வானதாகும். துரியத்திற்கு மேலான தவம் இல்லை என்பதுதான் இங்கே இருக்கும் நிலை. ஆனால் வேதாத்திரியத்தில், கூடுதலாக ‘துரியாதீதம்’ உண்டு. அது ஏன்? எப்படி? எதற்காக? என்பதெல்லாம் இன்னொரு பதிவாக பார்க்கலாம். இப்பொழுது நீங்கள் கேட்ட, கேள்விக்கு வரலாம்.

துவாத சாங்கம் என்பது ஓர் ஆதாரமோ, மைய சக்கரமோ, நிலையோ அல்ல என்பது தான் உண்மை. ஆனால் அதை அனுமானமாக, உளப்பூர்வமாக, உணர்வாக நாம் அறியலாம். இது யோகத்தில் குறிப்பிடக்கூடிய ஒரு நிலைதான் என்பதும் உண்மை. இந்த துவாத சாங்கம் குறித்து அனேக யோக சாதனையாளர்களும் சொல்லியுள்ளனர். பொதுவாகவே, ஜடப்பொருளோ, உயிர்ப்பொருளோ எடுத்துக்கொண்டால், அவற்றைச்சுற்றிலும் ஒரு அலை இயக்கம் நிகழ்ந்துகொண்டே இருக்கும். இது நவீன விஞ்ஞானத்தாலும் நிரூபணம் செய்யப்பட்ட உண்மையாகும். அந்த அலை குறிப்பிட்ட வண்ணங்களில் கூட இருக்கிறது என்று, அகச்சிவப்பு கதிர் காமெரா, புற ஊதா கதிர் காமெரா இவற்றின் வழியாக, ஒளிப்படமாக எடுத்திருக்கிறார்கள் என்பதையும் நாம் அறிவோம்.

அப்படியான அலை இயக்கம், மனிதனுக்கும் இருக்கும்தானே? ஆம். அவனுக்குள்ளாக இயங்கும் ஆற்றலானது. அவனைச் சுற்றிலும், உடலுக்கு வெளியில், குறிப்பாக ‘ஒருஅடி தூரத்தில்’ வீசிக்கொண்டே இருக்கிறது. இந்த அலை இயக்கம் சிலவேளைகளில் சுருங்கவும் செய்யலாம், கூடுதலாக விரியவும் செய்யலாம். அதற்கான காரணங்கள் பல இருக்கின்றன. இப்போது அது நமக்கு தேவையில்லை. இந்த ஒருஅடி தூர அளவிற்கு (12 அங்குலம் / 12Inch) அளவினால அலை இயக்கத்திற்கு, ஓரு புள்ளியை ‘மானசீகமாக’ அமைக்கிறோம். அதுதான் தலைக்குமேலே, உச்சியில் இருந்து மேல்நோக்கிய நிலையில் இருக்கும் ‘துவாத சாங்கம்’ என்ற நிலையாகும். நீங்கள் தவம் செய்யும் பொழுது, உங்கள் மனதாலேயே அந்த இடத்தை நினைவுப்படுத்திக் கொள்ளலாம். மிகச்சரியாக இடத்தை தீர்மானிப்பதும், அங்கே கவனத்தை நிலைப்படுத்துவதும், மனதை ஒன்றினைப்பதும் கடினமே. எனினும் தொடர்ந்து தவம் செய்யச்செய்ய அது உங்களுக்கு கைகூடும் என்பது உறுதி.

        முக்கியமாக, இதை ஆரா (Aura) என்று அர்த்தப்படுத்திக்கொள்ளக் கூடாது. ஆரா என்பது வேறுமாதிரியான தன்மை கொண்டதாகும்.

வாழ்க வளமுடன்.

-