CJ for You: illustration

illustration

Showing posts with label illustration. Show all posts
Showing posts with label illustration. Show all posts

No more Answers


விடையில்லா சந்தேகங்கள்    


        ஒவ்வொரு முறையும் நான் மாம்பழம் நறுக்கும் பொழுது, இதில் வண்டு இருக்குமா என்று யோசித்துக்கொண்டே இருப்பேன். ரசாயன உரங்களை பயன்படுத்தி இந்த வண்டுகளை அழித்தே விட்டார்களோ என்றும் நினைத்தேன். ஆனால் இன்று அந்த கேள்விகளுக்கு விடை கிடைத்துவிட்டது.

மாம்பழத்தின் கண்ணப்பகுதிகளை வெட்டிய மாத்திரத்தில் இது வண்டு விழுந்த பழம் என்று தெரிந்துகொண்டேன். மாங்கொட்டையை சுற்றியுள்ள சதைகளை நறுக்கி எடுத்துவிட்டு, அதை தட்டிய வேளையில் உள்ளிருந்து வண்டு வெளியேவந்துவிட்டது.

வண்டை பார்த்ததும் எனக்குள் நான் சிறுவனானேன்... மாம்பழம் நறுக்கி, வண்டை தட்டி வெளியேற்றி எனக்கு தந்தபிறகும் பயந்துகொண்டே கொட்டையை சப்பிப்போட்ட நினைவு வந்தது... ”ஒரு கொட்டையில் ஒரு வண்டுதான் இருக்கும்டா, பயப்படாம சாப்பிடு” என் அத்தை விளக்கினார். அதெப்படி என்று தெரியவில்லை...

“அடடா, அது பறந்து வீட்டிலேயே இருந்துட போகுது, தூக்கி வெளியே போடுங்க” என்றார் என் மனைவி.

“உள்ளே இருந்ததை வெளியே வரவழைத்ததே பாவம், இதை எப்படி வெளியே விடுவது...” சொல்லிக்கொண்டே அந்த வண்டை ஒரு ஓவியம் வரையாத காகிதத்தில் எடுத்து வாசல் கதவை திறந்து, மதில் சுவருக்கு வெளியே விட்டுவிட்டேன்.

வண்டு விழுந்தபழம் ருசிக்கும் என்பதற்கு மாறாக ஒரு சுவையும் இன்றி புதுச்சுவையாக இருந்தது... சாப்பிட்டுக்கொண்டிருக்கும் பொழுது...

இந்த வண்டு இனி என்ன செய்யும், இன்னொரு மாம்பழத்தை தேடுமோ? ஒரு கொட்டையின் உள்ளே, வெளிச்சம் நுழையாத இருட்டிலே இத்தனைகாலம் இருந்ததே, இனி என்ன செய்யுமோ? இதுவரை இது தன் உணவுக்கு கொட்டையின் உள்பகுதியையும், அதன் வழியே வந்த சாறுகளையும் தின்றிருக்கும். இனி அதற்கான உணவாக என்ன தேடும்? அதற்கு இந்த புதிய சூழல் ஏற்றுக்கொள்ளுமா என்ன?

இந்த வண்டு இருக்கும் பழம் எங்கே முளைத்ததோ, பிடுங்கி எங்கே விற்கப்பட்டதோ, அதை நான் எனக்காக வாங்கி, நறுக்கி, அந்த வண்டுக்குரிய வாழ்க்கை சக்கரத்தை திசை திருப்பிவிட்டோனோ? ஒருவேளை வாங்காமலிருந்தால் இந்த வண்டு இன்னேரம் எப்போதும் போல இருந்திருக்குமே?

ஒருவேளை இதன் விடுதலைக்கு நான் ஒரு காரணியா என்ன? என் மூலமாக அது தன் இருட்டு வாழ்விலிருந்து, வெளிச்சத்திறகு வரவேண்டும் என்பதா? அந்த விடுதலை, வண்டுக்கான மறு வாழ்வா, இல்லை அது இனி சாகுமா?

இப்படி கேள்விகள் மேல் கேள்வியா கேட்டுக்கொண்டே, அதை இந்தவலையிலும் எழுதிவிட்டேன்...

வாழ்க்கை சுவாரஸ்யம் மிகுந்த பதில் தெரியாத கேள்விகளை உள்ளடக்கியது... இந்தவண்டாக நான், என்னைக்கூட உதாரணமாகக் கொள்ள முடிகிறது...

தொடர்வேன்...

Android Game Illustrations


எதை செய்தாலும் நன்றாக செய்யவேண்டும் என்பது என் எண்ணம் என்றாலும், நினைத்தமாத்திரத்தில் அப்படியே நிறுத்திவிடவும், விட்டதை அதே இடத்திலிருந்து தொடரவும் செய்வேன். ஒரு வேலையை ஆரம்பிக்கத்தான் எனக்கு காலதாமதம் ஆகும், அந்த வேலையை எடுத்து செய்ய ஆரம்பித்தால் உணவை, தூக்கத்தை  தவிர்த்து செய்துமுடித்துவிடுவேன். (இதை ஒரு பஞ்ச் டயலாக் செய்யலாம்... “ நான் வேலை எடுக்கமாட்டேன், எடுத்தா முடிக்காம வைக்கமாட்டேன்” )

நண்பர்கள் உதவிகேட்டால், என்னால் முடியுமானால் சீக்கிரமும், இல்லையென்றால் மிக தாமதமும் ஆகும்... பொதுவாக யார் உதவிகேட்டாலும் “சரி” என்பது என் வழக்கம். சிலவேளை அது எனக்கு தொடர்பானதில்லை, முயற்சிக்கிறேன் என்றும் சொல்லிவிடுவேன்.

காலப்போக்கில் கேரிகேச்சர் ஓவிய சேவைக்காக, தடையில்லாது
இயங்கும்படி என்னை மாற்றிக்கொண்டேன்.

அதோடு எனக்குத்தெரிந்த, நான் கற்றுக்கொண்ட வேறு எல்லா திறமைகளையும் சற்று நிறுத்திவிட்டு, கேரிகேச்சர், அது தொடர்பான ஓவியங்கள் மட்டும் போதும் என்று என்னை நிலைப்படுத்திக்கொண்டேன்.

சில நேரம் என் தொழில்சார்ந்த நண்பர்கள் தங்களுக்கான சில ஓவிய  தேவைகளை கேட்பார்கள். அந்தவகையில்தான் “நிலாடெக்”(Nilatech) செந்தில்வேலன் தன் நிறுவனத்தின் வெளியீடான தொடுதிரை கைபேசி விளையாட்டுக்கான ஓவிய தேவைகளை கேட்டுக்கொண்டார். (Android Mobile Game Development)
 
தன்னுடைய “Sixer Cricket" விளையாட்டுக்கு சிறு திருத்தம் கேட்டவர், நான் செய்துகொடுத்த மாற்றம், செந்தில்வேலன் அவர்களுக்கு பிடித்துப்போக. அந்த விளையாட்டின் முழு ஓவியம், வண்ண அமைப்பையும் நீங்களே மாற்றி அமைத்துகொடுத்துவிடுங்களேன் என்று சொல்லிவிட்டார். அடுத்த இரண்டு நாட்களில், இரவு தூக்கங்களை தவிர்த்து அதை முடித்துக்கொடுத்தேன். அந்த Android Mobile Game ல் எனக்குத்தெரிந்த சில மாற்றங்களையும் செய்யலாம் என்று சொன்னேன். பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொண்டு அதன்படியே செய்தார். Nilatech ன் குழுவினரும் ஒட்டுமொத்தமாக என் ஓவியத்தை பாராட்டினர்...

இப்பொழுது “Sixer Cricket Hero" என்ற பெயரில் விலையில்லா வகையில் (Free Game)- Play.google.com ல் கிடைக்கிறது.

இந்த  “Sixer Cricket Hero” வழக்கமாக தளத்தில் கிடைக்கும் கிரிக்கெட் விளையாட்டிலிருந்து மாறுபடுகிறது. முதலாவதாக, இத்தனை மீட்டர் தீர்வோடு, அதை ஆறு பந்து வீச்சுகளில், அதிவேகமாக சிக்சர்களாக அடிக்கப்பட்டு வெற்றி பெற வேண்டும்.

உங்களிடமும் Android கைபேசி இருந்தால், உங்கள் ஓய்வுநேரத்தில் இந்த விளையாட்டை, கைபேசியில் நிறுவி விளையாடலாம். உங்கள் கருத்துக்களை நானும், Nilatech குழுவினரும் வரவேற்கிறோம்.

தொடர்வேன்...

You-are-sexiest


இந்த உலகம், இணையதளங்களால் ஒரே கிராமமாக மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டன. இணையத்தில் இருக்கிற சமூகவலைத்தளங்கள் இந்த சேவையை சிறப்பாக செய்துவருகின்றன...



முதன்மையாக பேஸ்புக்... எனக்கு இரண்டு பெயர்களில் கணக்கு இருக்கிறது. Caricaturist Sugumarje, Sugumarje Caricaturist என்று மட்டுமே. என் ஓவியங்களும், என் கருத்துக்களும், பின்னூட்டங்களும் இதில் வலம் வந்துகொண்டிருக்கிறது... எனக்குப்பிடித்த கருத்துக்கள் இருந்தால் அதை என் பக்கங்களில் பகிர்ந்துகொள்வதும் உண்டு... நான் ஓவியன் என்பதால், என் ஓவிய நண்பர்கள், வளரும் ஓவியர்கள் எனக்கு தன் ஓவியங்களை தெரிவிப்பார்கள். அதில் என் கருத்துக்கள் இடம்பெறும்.

66A தீவிரமாக்கப்பட்ட பிறகு என் கருத்துக்களை பல முறை சோதனை செய்தபிறகே பதிப்பது வழக்கம். நான் ஓவியராக இருந்தபோதும் அரசியல், தனிமனித நையாண்டி தவிர்த்துவருகிறேன்... பொதுவாகவே சிரிப்பை மறந்த நம் மனிதர்களுக்காக, மனதை பாதிக்காத வகையில் கேலி, கிண்டல் செய்து பின்னூட்டமும், தகவலும் தருவது என் வழக்கம். ஆனபோதிலும் அதை தவறாக சுட்டிக்காட்டினால் அதை அழித்துவிடவும் தயங்குவதில்லை.

சமூக வலை என்பதால், எந்த நாட்டினரும் நம் நண்பராகும் சாத்தியம்  நிறைவேறுகிறது. அப்படி சில பெண் நண்பர்களும் என் நட்புவட்டத்தில் இருக்கிறார்கள். பாலுணர்வை தூண்டும் எந்த பதிவையும் நான் செய்ததில்லை. சில் நண்பர்கள் ஒருசில அரைகுறை பதிவு போட்டால் அதையும் அவர்கள் பக்கமே கேலி செய்வதுண்டு. முரண்பாடான படங்களோ, கருத்தோ என் நட்புக்களில் காணப்பட்டால், என்னை தொடரும் பெண் நண்பர்களுக்கும் பாதிக்குமே என்பதால், அதை சுட்டிக்காட்டி திருத்தமுயல்வேன். இல்லையேல் என் நட்புவட்டத்திலிருந்து நீக்கிவிடுவேன். அப்படியான ஒருவரை என் நட்பாக இணைப்பதும் இல்லை.

ஒரு பெண் நண்பர் தன் ஒளிப்படங்களை பதிவிட்டபோது, வழக்கம்போலவே வேடிக்கையாக...

 “உங்கள் முகம் தெளிவில்லாமல் இருக்கிறது?!”
 “நீங்கள் ஏன் நல்ல போட்டோகிராபரை தேர்ந்தெடுக்க கூடாது?”
 “இதில் அழகாக இருக்கிறீர்கள்!”
 “இந்த போட்டொவில் இருப்பது நீங்களா? அடையாளமே தெரியவில்லை”

இப்படியெல்லாம் பின்னூட்டமிட்டிருந்தேன்... இந்த வாரத்தின் முதல்நாள் அந்த பெண் நண்பர் தன் பக்கத்தில் பதிக்கிறார்...

“சிலர் என் ஒளிப்படத்தில் எனக்குப்பிடிக்காத சிலவற்றை பின்னூட்டமிடுகின்றனர். எது சொன்னாலும் சந்தேகம் அவர்களுக்கு... நான் இறைவனை வணங்குகிறேன்... இனிமேல் அவர்கள் என் ஒளிப்படங்களின் மீது ***** ***** நிறுத்திக்கொள்ள வேண்டும். 

இனிமேல் இப்படி செய்தால் அவர்களை நீக்க எனக்கு எந்த தயக்கமும் இல்லை. என் தனிவாழ்க்கையில் நுழைய இவர்கள் யார்?

**** ***

இப்படி சொன்னதிற்கு மன்னிக்கவும்!”

இதற்கு நான் “இப்படி செய்வது வருந்ததக்க ஒன்று... அவர்களை நீக்கிவிடுங்கள்” என்றேன்..

அதற்கு அவர் “இந்த கூட்டத்தில் நீயும்தான் இருக்கிறாய்... இதை சொல்ல வருத்தமாக இருக்கிறது” என்றார்.

இதை படித்தவுடன், நான் “சரி, இனி இவரிடமிருந்து விலகிக்கொள்ளலாம்” என்று முடிவு செய்து, அந்தப்பக்கம் இனி போகக்கூடாது என்று முடிவெடுத்தேன்...

ஒரு அரைமணிக்குப்பிறகு என் தகவல் பலகைக்கு, அந்த பெண் நண்பரே பேச ஆரம்பித்தார்...

என் மீது குற்றச்சாட்டை அடுக்க ஆரம்பித்தார்.... கடைசியாக... “நட்பாக இருப்பதென்றால் இரு, இல்லையேல் வெளியேறு” என்றார்...

“சரி. இனிமேல், இந்த நொடிமுதல் நான் உங்கள் நண்பரில்லை. வணக்கம்” சொல்லிவிட்டு அவரை எந்தகாரண,கருத்தும் சொல்லாது என் நட்புவட்டத்திலிருந்து நீக்கிவிட்டேன்....

கடைசியாக அவர் சொன்னது இதுதான் - “You are a Sexiest!"