CJ for You: artwork

artwork

Showing posts with label artwork. Show all posts
Showing posts with label artwork. Show all posts

PHOTOSHOP DOODLE ART - 5



Today,
I did this Photoshop Digital painting, and like to share with you and how i do it?

First
See the Final Result


Work process:

Gesture - I choose one photograph (from Google Search)

Secondly the unclean base sketch is ready

Base Color form - You can use pen tool for best curve lines or make it manual with mouse pen ( I used) 

Layer and over layer color process - You can use many layers

Background - finally I use motion blur filter effect

Final Result


Hope you like it and do study now :)

Photoshop Doodle Art - 3


Hi all
Today the Next one, this time I do not use blend. It looks very different but awesome.
See the Result...




Anyone can do like this, if you a art lover or art student? Break the rules, jump over the circle around you... Start just, start... do like new learner in Sketch and Paint!

Keep Going your study!!

PHOTOSHOP DOODLE ART - 2


Based on Photograph,
I started this sketch at nights for this doodle artwork with digital brushes, after 120 minutes, I got this result... It looking as simple lightings, but give a pain to fingers :P But I Love this result...

You can Try!


Click image, see bigger result

Photoshop Doodle Art


போட்டோஷாப் (Photoshop) என்னும் மென்பொருளில் வரையும் இத்தகைய ஓவியங்கள் (Doodle Art) மிகச்சிறந்த கவனத்தை பெறுகின்றன. இதற்கென தனி ஓவிய பொருட்கள் (Photoshop Brush) இலவசமாகவும், வாங்கக்கூடியவிலையிலும் கிடைக்கின்றன.

இவை பேஸ்டல் (Pastel) எனும் வரை பொருளில் வரைந்தது போலவே தோற்றமளிக்கின்றன. ஓவிய பாடமுறைகளில் இவை காட்சி வடிவமைப்பு (Visual Development) என்று அழைக்கப்படுகிறது. கார்டூன் (Cartoon), அனிமேசன் (3D Animation) திரைப்படங்களில் ஒரு காட்சி எப்படி இருக்கவேண்டும் என்று வரையப்படும், கோட்டு ஓவியங்களைக்கடந்து, இத்தகைய வண்ணமய ஓவியங்கள் நிலைப்பெற்றிருக்கின்றன. இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற எல்லையில்லாது, ஓவியரின் காட்சித்திறனை அப்படியே பெற்று ஒளிர்கின்றன.

கதாபாத்திரங்களின் தன்மையை, உணர்ச்சியை, ஆற்றலை, காட்சியின் காலநிலையை, கடந்துசெல்லும் ஒளி, காட்சிப்பொருளோடு இருக்கும் இருள், அதன் நிழல் இவற்றை அழகாக சொல்லுகின்றன. 30 நிமிடங்கள் முதல் முப்பது மணி நேரம் வரையிலும்கூட இந்த ஓவியங்கள் நேரத்தை எடுத்துக்கொள்கின்றன.

இந்த ஓவியபாணியை கற்றுக்கொண்டால் ஹாலிவுட் சினிமா ஸ்டுடியோக்களில் பணிபுரியம் வாய்ப்புக்கு நீங்கள் தயாராவிர்கள் என்பது உறுதி. அதோடு கதை நூல்கள், காமிக்ஸ், விளம்பர ஓவியங்கள் இவற்றை தனியாகவோ, நிறுவனத்திற்கோ தயார்செய்யும் நிலைக்கு உயரலாம்...

நான் வழக்கமாக கேரிகேச்சர் ஓவியங்கள் வரைந்தாலும், கற்றுக்கொள்ளதூண்டிய இந்த வகை ஓவியங்களை வரைந்து பழகினேன். அந்த வகையிலான ஒன்றை நானும் பகிர்ந்துகொள்கிறேன்...


நீங்கள் முயற்சி செய்யுங்களேன்... 

No more Answers


விடையில்லா சந்தேகங்கள்    


        ஒவ்வொரு முறையும் நான் மாம்பழம் நறுக்கும் பொழுது, இதில் வண்டு இருக்குமா என்று யோசித்துக்கொண்டே இருப்பேன். ரசாயன உரங்களை பயன்படுத்தி இந்த வண்டுகளை அழித்தே விட்டார்களோ என்றும் நினைத்தேன். ஆனால் இன்று அந்த கேள்விகளுக்கு விடை கிடைத்துவிட்டது.

மாம்பழத்தின் கண்ணப்பகுதிகளை வெட்டிய மாத்திரத்தில் இது வண்டு விழுந்த பழம் என்று தெரிந்துகொண்டேன். மாங்கொட்டையை சுற்றியுள்ள சதைகளை நறுக்கி எடுத்துவிட்டு, அதை தட்டிய வேளையில் உள்ளிருந்து வண்டு வெளியேவந்துவிட்டது.

வண்டை பார்த்ததும் எனக்குள் நான் சிறுவனானேன்... மாம்பழம் நறுக்கி, வண்டை தட்டி வெளியேற்றி எனக்கு தந்தபிறகும் பயந்துகொண்டே கொட்டையை சப்பிப்போட்ட நினைவு வந்தது... ”ஒரு கொட்டையில் ஒரு வண்டுதான் இருக்கும்டா, பயப்படாம சாப்பிடு” என் அத்தை விளக்கினார். அதெப்படி என்று தெரியவில்லை...

“அடடா, அது பறந்து வீட்டிலேயே இருந்துட போகுது, தூக்கி வெளியே போடுங்க” என்றார் என் மனைவி.

“உள்ளே இருந்ததை வெளியே வரவழைத்ததே பாவம், இதை எப்படி வெளியே விடுவது...” சொல்லிக்கொண்டே அந்த வண்டை ஒரு ஓவியம் வரையாத காகிதத்தில் எடுத்து வாசல் கதவை திறந்து, மதில் சுவருக்கு வெளியே விட்டுவிட்டேன்.

வண்டு விழுந்தபழம் ருசிக்கும் என்பதற்கு மாறாக ஒரு சுவையும் இன்றி புதுச்சுவையாக இருந்தது... சாப்பிட்டுக்கொண்டிருக்கும் பொழுது...

இந்த வண்டு இனி என்ன செய்யும், இன்னொரு மாம்பழத்தை தேடுமோ? ஒரு கொட்டையின் உள்ளே, வெளிச்சம் நுழையாத இருட்டிலே இத்தனைகாலம் இருந்ததே, இனி என்ன செய்யுமோ? இதுவரை இது தன் உணவுக்கு கொட்டையின் உள்பகுதியையும், அதன் வழியே வந்த சாறுகளையும் தின்றிருக்கும். இனி அதற்கான உணவாக என்ன தேடும்? அதற்கு இந்த புதிய சூழல் ஏற்றுக்கொள்ளுமா என்ன?

இந்த வண்டு இருக்கும் பழம் எங்கே முளைத்ததோ, பிடுங்கி எங்கே விற்கப்பட்டதோ, அதை நான் எனக்காக வாங்கி, நறுக்கி, அந்த வண்டுக்குரிய வாழ்க்கை சக்கரத்தை திசை திருப்பிவிட்டோனோ? ஒருவேளை வாங்காமலிருந்தால் இந்த வண்டு இன்னேரம் எப்போதும் போல இருந்திருக்குமே?

ஒருவேளை இதன் விடுதலைக்கு நான் ஒரு காரணியா என்ன? என் மூலமாக அது தன் இருட்டு வாழ்விலிருந்து, வெளிச்சத்திறகு வரவேண்டும் என்பதா? அந்த விடுதலை, வண்டுக்கான மறு வாழ்வா, இல்லை அது இனி சாகுமா?

இப்படி கேள்விகள் மேல் கேள்வியா கேட்டுக்கொண்டே, அதை இந்தவலையிலும் எழுதிவிட்டேன்...

வாழ்க்கை சுவாரஸ்யம் மிகுந்த பதில் தெரியாத கேள்விகளை உள்ளடக்கியது... இந்தவண்டாக நான், என்னைக்கூட உதாரணமாகக் கொள்ள முடிகிறது...

தொடர்வேன்...

Android Game Illustrations


எதை செய்தாலும் நன்றாக செய்யவேண்டும் என்பது என் எண்ணம் என்றாலும், நினைத்தமாத்திரத்தில் அப்படியே நிறுத்திவிடவும், விட்டதை அதே இடத்திலிருந்து தொடரவும் செய்வேன். ஒரு வேலையை ஆரம்பிக்கத்தான் எனக்கு காலதாமதம் ஆகும், அந்த வேலையை எடுத்து செய்ய ஆரம்பித்தால் உணவை, தூக்கத்தை  தவிர்த்து செய்துமுடித்துவிடுவேன். (இதை ஒரு பஞ்ச் டயலாக் செய்யலாம்... “ நான் வேலை எடுக்கமாட்டேன், எடுத்தா முடிக்காம வைக்கமாட்டேன்” )

நண்பர்கள் உதவிகேட்டால், என்னால் முடியுமானால் சீக்கிரமும், இல்லையென்றால் மிக தாமதமும் ஆகும்... பொதுவாக யார் உதவிகேட்டாலும் “சரி” என்பது என் வழக்கம். சிலவேளை அது எனக்கு தொடர்பானதில்லை, முயற்சிக்கிறேன் என்றும் சொல்லிவிடுவேன்.

காலப்போக்கில் கேரிகேச்சர் ஓவிய சேவைக்காக, தடையில்லாது
இயங்கும்படி என்னை மாற்றிக்கொண்டேன்.

அதோடு எனக்குத்தெரிந்த, நான் கற்றுக்கொண்ட வேறு எல்லா திறமைகளையும் சற்று நிறுத்திவிட்டு, கேரிகேச்சர், அது தொடர்பான ஓவியங்கள் மட்டும் போதும் என்று என்னை நிலைப்படுத்திக்கொண்டேன்.

சில நேரம் என் தொழில்சார்ந்த நண்பர்கள் தங்களுக்கான சில ஓவிய  தேவைகளை கேட்பார்கள். அந்தவகையில்தான் “நிலாடெக்”(Nilatech) செந்தில்வேலன் தன் நிறுவனத்தின் வெளியீடான தொடுதிரை கைபேசி விளையாட்டுக்கான ஓவிய தேவைகளை கேட்டுக்கொண்டார். (Android Mobile Game Development)
 
தன்னுடைய “Sixer Cricket" விளையாட்டுக்கு சிறு திருத்தம் கேட்டவர், நான் செய்துகொடுத்த மாற்றம், செந்தில்வேலன் அவர்களுக்கு பிடித்துப்போக. அந்த விளையாட்டின் முழு ஓவியம், வண்ண அமைப்பையும் நீங்களே மாற்றி அமைத்துகொடுத்துவிடுங்களேன் என்று சொல்லிவிட்டார். அடுத்த இரண்டு நாட்களில், இரவு தூக்கங்களை தவிர்த்து அதை முடித்துக்கொடுத்தேன். அந்த Android Mobile Game ல் எனக்குத்தெரிந்த சில மாற்றங்களையும் செய்யலாம் என்று சொன்னேன். பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொண்டு அதன்படியே செய்தார். Nilatech ன் குழுவினரும் ஒட்டுமொத்தமாக என் ஓவியத்தை பாராட்டினர்...

இப்பொழுது “Sixer Cricket Hero" என்ற பெயரில் விலையில்லா வகையில் (Free Game)- Play.google.com ல் கிடைக்கிறது.

இந்த  “Sixer Cricket Hero” வழக்கமாக தளத்தில் கிடைக்கும் கிரிக்கெட் விளையாட்டிலிருந்து மாறுபடுகிறது. முதலாவதாக, இத்தனை மீட்டர் தீர்வோடு, அதை ஆறு பந்து வீச்சுகளில், அதிவேகமாக சிக்சர்களாக அடிக்கப்பட்டு வெற்றி பெற வேண்டும்.

உங்களிடமும் Android கைபேசி இருந்தால், உங்கள் ஓய்வுநேரத்தில் இந்த விளையாட்டை, கைபேசியில் நிறுவி விளையாடலாம். உங்கள் கருத்துக்களை நானும், Nilatech குழுவினரும் வரவேற்கிறோம்.

தொடர்வேன்...

swindle-the-artist


ஓவியரை ஏமாற்றும் வித்தை

என் வாடிக்கையாளர்கள், (Customer) கஷ்டமராக மாறிவிடுவர். எப்படி ஒரு தேள் தன்னை காப்பற்றுபரைக்கூட தன் கொடுக்கால் கொட்டி வலியையும், விஷத்தையும் தருமோ, அதுபோலவே நானும் கடிபெற்றுக்கொண்டிருக்கிறேன். என்னைதேடிவரும் ஓவ்வொரு தேள்களால்...

அது என்னுடைய தவறுதானே!

ஒரு வேலைகொடுத்தால், அதை ஆர்வத்தோடுதான் செய்யவிழைவது வழக்கம். இதற்கு இவ்வளவு பணம் கொடுத்தால்தான் செய்வேன், செய்யமுடியும் என்று சொல்லுவது என் வழக்கமில்லை...

சிறிய, பெரிய நிறுவனங்களும், சில தனிமனிதர்களும் தான் கேட்டவேலைகள் செய்துமுடித்தபின்னரே அதற்கான பணத்தை காசோலைகளாக தருவது வழக்கம். இதற்கு கிட்டதட்ட 15 நாட்கள் நான் காத்திருக்க வேண்டியதுவரும். அப்படியும் சிலர் காசோலையோ, அல்லது தாமதத்திற்கான பதிலோ கூட தருவதில்லை...


செய்துகொடுத்த வேலைக்கான கூலி, நகைச்சுவை நடிகர் கவுண்டமணி சொன்னது போல “உஊஊஊ” தான்...

இந்த ஓவியம் நகைச்சுவை நடிகர் செந்திலுக்கானது...



ஆனால் இதனாலெல்லாம், இந்த மனிதர்களாலெல்லாம் நான் சலிப்படைந்துவிடுவதில்லை... மக்களில் சிலர் அப்படித்தான் இருப்பார்கள்... இவர்களுக்காக நல்ல மனிதர்களை இழக்கமுடிவதில்லை. ஓவ்வொரு முறையும் நான் கவனமாக இருக்க நினைப்பதும், பிறகு ஏமாற்றபடுவதும் தொடர்கதை...

அதில் நிறைய ஓவியங்களும், என் உழைப்பும், நேரமும் வீணாகபோயிருக்கின்றன. இந்த கார்டூனும் இதில் சேர்த்திதான்... கார்டூன் என் பணி இல்லை என்றாலும், செய்வதில் ஆர்வமிருந்ததால் “கேட்ட ஒருவருக்காக” செய்தேன்... இதுவரை ஒரு பதிலும் இல்லை...






இதில் வேடிக்கை... இந்த கார்ட்டூன் அந்த அரசியல் தலைவர்களை படம்பிடித்து காட்டவில்லை என்றும் எனக்கு பதில் கிடைத்தது...

ஆக நான் இன்னமும் பாடம் படித்துக்கொண்டிருக்கிறேன். எப்படி ஏமாறக்கூடாது என்று, ஓவ்வொரு ஏமாற்றப்படுவதிலும்.

You-are-sexiest


இந்த உலகம், இணையதளங்களால் ஒரே கிராமமாக மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டன. இணையத்தில் இருக்கிற சமூகவலைத்தளங்கள் இந்த சேவையை சிறப்பாக செய்துவருகின்றன...



முதன்மையாக பேஸ்புக்... எனக்கு இரண்டு பெயர்களில் கணக்கு இருக்கிறது. Caricaturist Sugumarje, Sugumarje Caricaturist என்று மட்டுமே. என் ஓவியங்களும், என் கருத்துக்களும், பின்னூட்டங்களும் இதில் வலம் வந்துகொண்டிருக்கிறது... எனக்குப்பிடித்த கருத்துக்கள் இருந்தால் அதை என் பக்கங்களில் பகிர்ந்துகொள்வதும் உண்டு... நான் ஓவியன் என்பதால், என் ஓவிய நண்பர்கள், வளரும் ஓவியர்கள் எனக்கு தன் ஓவியங்களை தெரிவிப்பார்கள். அதில் என் கருத்துக்கள் இடம்பெறும்.

66A தீவிரமாக்கப்பட்ட பிறகு என் கருத்துக்களை பல முறை சோதனை செய்தபிறகே பதிப்பது வழக்கம். நான் ஓவியராக இருந்தபோதும் அரசியல், தனிமனித நையாண்டி தவிர்த்துவருகிறேன்... பொதுவாகவே சிரிப்பை மறந்த நம் மனிதர்களுக்காக, மனதை பாதிக்காத வகையில் கேலி, கிண்டல் செய்து பின்னூட்டமும், தகவலும் தருவது என் வழக்கம். ஆனபோதிலும் அதை தவறாக சுட்டிக்காட்டினால் அதை அழித்துவிடவும் தயங்குவதில்லை.

சமூக வலை என்பதால், எந்த நாட்டினரும் நம் நண்பராகும் சாத்தியம்  நிறைவேறுகிறது. அப்படி சில பெண் நண்பர்களும் என் நட்புவட்டத்தில் இருக்கிறார்கள். பாலுணர்வை தூண்டும் எந்த பதிவையும் நான் செய்ததில்லை. சில் நண்பர்கள் ஒருசில அரைகுறை பதிவு போட்டால் அதையும் அவர்கள் பக்கமே கேலி செய்வதுண்டு. முரண்பாடான படங்களோ, கருத்தோ என் நட்புக்களில் காணப்பட்டால், என்னை தொடரும் பெண் நண்பர்களுக்கும் பாதிக்குமே என்பதால், அதை சுட்டிக்காட்டி திருத்தமுயல்வேன். இல்லையேல் என் நட்புவட்டத்திலிருந்து நீக்கிவிடுவேன். அப்படியான ஒருவரை என் நட்பாக இணைப்பதும் இல்லை.

ஒரு பெண் நண்பர் தன் ஒளிப்படங்களை பதிவிட்டபோது, வழக்கம்போலவே வேடிக்கையாக...

 “உங்கள் முகம் தெளிவில்லாமல் இருக்கிறது?!”
 “நீங்கள் ஏன் நல்ல போட்டோகிராபரை தேர்ந்தெடுக்க கூடாது?”
 “இதில் அழகாக இருக்கிறீர்கள்!”
 “இந்த போட்டொவில் இருப்பது நீங்களா? அடையாளமே தெரியவில்லை”

இப்படியெல்லாம் பின்னூட்டமிட்டிருந்தேன்... இந்த வாரத்தின் முதல்நாள் அந்த பெண் நண்பர் தன் பக்கத்தில் பதிக்கிறார்...

“சிலர் என் ஒளிப்படத்தில் எனக்குப்பிடிக்காத சிலவற்றை பின்னூட்டமிடுகின்றனர். எது சொன்னாலும் சந்தேகம் அவர்களுக்கு... நான் இறைவனை வணங்குகிறேன்... இனிமேல் அவர்கள் என் ஒளிப்படங்களின் மீது ***** ***** நிறுத்திக்கொள்ள வேண்டும். 

இனிமேல் இப்படி செய்தால் அவர்களை நீக்க எனக்கு எந்த தயக்கமும் இல்லை. என் தனிவாழ்க்கையில் நுழைய இவர்கள் யார்?

**** ***

இப்படி சொன்னதிற்கு மன்னிக்கவும்!”

இதற்கு நான் “இப்படி செய்வது வருந்ததக்க ஒன்று... அவர்களை நீக்கிவிடுங்கள்” என்றேன்..

அதற்கு அவர் “இந்த கூட்டத்தில் நீயும்தான் இருக்கிறாய்... இதை சொல்ல வருத்தமாக இருக்கிறது” என்றார்.

இதை படித்தவுடன், நான் “சரி, இனி இவரிடமிருந்து விலகிக்கொள்ளலாம்” என்று முடிவு செய்து, அந்தப்பக்கம் இனி போகக்கூடாது என்று முடிவெடுத்தேன்...

ஒரு அரைமணிக்குப்பிறகு என் தகவல் பலகைக்கு, அந்த பெண் நண்பரே பேச ஆரம்பித்தார்...

என் மீது குற்றச்சாட்டை அடுக்க ஆரம்பித்தார்.... கடைசியாக... “நட்பாக இருப்பதென்றால் இரு, இல்லையேல் வெளியேறு” என்றார்...

“சரி. இனிமேல், இந்த நொடிமுதல் நான் உங்கள் நண்பரில்லை. வணக்கம்” சொல்லிவிட்டு அவரை எந்தகாரண,கருத்தும் சொல்லாது என் நட்புவட்டத்திலிருந்து நீக்கிவிட்டேன்....

கடைசியாக அவர் சொன்னது இதுதான் - “You are a Sexiest!"


Artist in Life Line



ஒரு ஓவியன் எழுதக்கூடாதாம்... வருத்தம் தரும் செய்தியோடு இந்த வார்த்தையையும் படித்தேன்... ஆம்... ஓவியனின் கைகள் வரையத்தானே வேண்டும்...

“நான் ஒரு ஆர்டிஸ்ட்”
“அப்படியா வேறே என்ன செய்யறீங்க?”
“ஐயா, நான் ஒரு ஆர்டிஸ்ட்”
“சரிங்க, வேறே என்ன வேலை பார்க்கிறீங்கன்னு கேட்டேன்”

யாரையாவது புதிதாக சந்திக்கும்பொழுது இப்படியான கேள்விகளை நான் எதிர்கொள்வேன்... கடைசி வரை ஒரு ஆர்டிஸ்டாக இந்த உலகில் நீ வாழ்ந்திருக்க முடியாது, வாழவே முடியாது என்பதாகவே அவர் தன் கேள்விகளை கேட்பார்...

ஒரு ஆர்டிஸ்ட் நிலைமை அப்படித்தான் இருக்கிறது... உண்மைதான்... இன்னும் ஒரு சிலர்...
“வருமானம் எல்லாம் சரியாக இருக்கா?”
“எப்படி சமாளிக்கிறீங்க?”

இவர்கள் என் பதிலில் எதிர்பார்க்கும் எல்லாவகையான கூலி வேலைகளும்,(சம்பளம் வாங்கினாலும் அது கூலிதானே...) பார்த்து சலித்துப்போய், போங்கடா நீங்களும் உங்க வேலையும் என்று புலம்பிவிட்டே ஓவியத்தை கையிலெடுத்தேன். அதுவரை இது சோறும், குழம்பும் தராது என்ற நினைப்பிலே கைவிட்டதை...

படிப்பாக இருந்தால் அதிக படிப்புவேண்டும்... அதிலும் தொடந்த படிப்பு வரிசை முக்கியம்... நிலம் விற்று, நகை அடகுவைத்து, மதிய சாப்பாட்டை தள்ளிவைத்து அப்பன் செலவு செய்து படிக்கவைத்த படிப்பு தகுதிமட்டுமே... சம்பளமோ மிக சொற்பம்...

அதிக சம்பளமிருந்தாலோ அவனுக்கு காலணி கயிறைக்கூட முடிச்சிடும் வேலைபார்க்க வேண்டும்...(நாகரீகமாக சொன்னேன்)

அறிவாளி முட்டாளிடம் வேலைபார்க்க வேண்டியிருக்கும். ஒன்றுமே தெரியாதவனிடம் உலக நடப்பை சொன்னாலும் ஒருவேலைக்கும் ஆகாது. எப்பொழுது வெளியே அனுப்புவானோ என்ற பயத்தோடு நாட்களை கழிக்கவேண்டும்...

“சம்பளம் வாங்கறேலே... செஞ்சா என்னா?” கேட்பார்கள்....


வருமானம் அதிகமில்லை என்றாலும், வருத்தமில்லை, சோகமில்லை, புலம்பலில்லை, மன் அழுத்தமில்லை. ஒரு மனிதன் பணத்தேவை வெளியில் கடன் வாங்காதிருந்தால்... இன்றைக்கும், நாளைக்கும் பணம் போதும்.

இன்று இறந்தால், நாளை அவனை நல்லடக்கம் செய்யும் அளவுக்கு இருக்கவேண்டும். திருமணமாகியிருந்தால் அவள் தன் அழுகை நிறுத்தும் வரைக்கும் போதுமானது, பிறகு அவள் தன் வழி பார்த்துக்கொள்வாள்...

சரி... இரண்டு தொழிலாளிகள் “யோவ் நானும் கூலிதான்யா” என்று கூறும்பொழுது ஏற்படுகிற அதே விசயங்கள் “நானும் ஆர்டிஸ்ட் தாங்க” எனும் போது கிடைப்பதில்லை...

ஒரு ஒவியன் எவ்வகையிலும் ஒரு புரவலரை சார்ந்தே இருக்கவேண்டியுள்ளது... ஓவியம் வரைய காலி வயிறும், அரை பட்டினியும் இல்லாத நிலைவேண்டும். தன் ஓவியத்தை கேட்டுவாங்கிக்கொள்ளும் அன்பர்கள் முக்கியம்... படுக்க இடமில்லாமல் இடத்தை அடைத்துக்கிடக்கும் ஓவியங்களை, ஊர் ஊராக தூக்கிக்கொண்டு அலைய நேரிடும். உயிர்கொடுத்து வரைந்த ஓவியத்தை, கடைசியிலோ, ஓரத்திலேயோ வைக்காமல் காட்சிபடுத்தவேண்டும்... அதை வாங்குபவர்கள் வரவேண்டும் என்பதும் முக்கியம்... இன்னொருவகையில், பத்திரிக்கைகளுக்கு ஓவியத்தை அனுப்பிவிட்டு, பிஸ்கெட்டுக்காக நாவை தொங்கப்போட்டு காத்திருக்கவேண்டும். இப்படி இன்னும் சொல்லிக்கொண்டே இருக்கலாம்...

இந்தவகை ஓவியனில் இருந்து நான் சற்று மாறுபடுகிறேன்... நான் மரசட்டத்திலோ, அட்டையிலோ ஓவியம் வரைவதில்லை. எல்லாம் கணிணி... இடத்தை அடைக்காத கோப்புகளாக... எது விற்குமோ, எது வாங்கிக்கொள்ளபடுமோ அந்தவகை... அந்த என் வகை கேரிகேச்சர்... இது எப்படி சாத்தியம்?

வாசல்கள் திறந்துதான் இருக்கிறது... நாம் மூடிய சாளரங்களையே பார்த்துக்கொண்டிருக்கிறோம்... வேறெதோ வேலைகளில் பிழைத்தவன் திடீரெனெ ஒருசில நாளின் முழு ஓவியனாக மாறிக்கொள்ளமுடிகிறபோது ஓவியராகவே இருக்கவேண்டும் என்றே வளர்ந்த உங்களால் ஏன் இயலாது???

தமிழகத்தின் முன்ணணி ஓவியர் ஒருவரோடு பேசும் பொழுது, என்னைக்கேட்டு மிகவும் மகிழ்ந்து, என்கைகளை இறுகப்பற்றி...
“கேட்க ரொம்ப சந்தோசமா இருக்கு” என்றார்.

ஒரு ஓவியனை மதிக்கும் சமூகமும், தலைவரும் நம் நாட்டில்... மன்னிக்க, என் நகரத்தில் இல்லை... நகரத்தில் இருந்தாலல்லவா நாட்டில் தெரியவரும்.... அதோடு ஓவியம் தொடர்பான எந்த விசயமும் குழந்தைகளிடத்தில் சொல்லப்படுவதில்லை... கற்றுக்கொடுக்கப்படுவதில்லை... அப்படியிருந்தாலும் மேல்நிலைகல்வியில் அந்தப்பாடங்கள் இல்லை. கல்வி நிலையங்களும் கழுவி ஊத்தியாயிற்று... பிறகெப்படி ஓவியம் மதிக்கும் சமூகம் வரும்???

இயல் இசை நாடகத்தில்  அரசும் ஓவியத்தை ஊத்தி மூடியாகிவிட்டது... ஓவியம் தொடர்பான அரசு வழங்கும் பட்டங்கள் விபரம் மக்களை சேர்வதில்லை.

இத்தகைய நிலையிலும் நான் குழந்தைகள், பெரியவர்களுக்கான ஓவிய வகுப்பை வரும் மே மாதம் முதல் தொடர்கிறேன். வருங்காலமாவது சிறப்பாகட்டும்.

என் பதின் வயதில் நான் கேட்டவை...
என் நண்பரின் அம்மா,
“பேப்பர்லயும், சொவத்திலயும் கிறுக்காதடா... கிறுக்குறவன் உருப்படமாட்டாண்டா” என்று சொல்லுவார்....
என் உறவினர் என்னை அருகில் வைத்துக்கொண்டே தன் நண்பரிடம்...
“எப்பப்பார்த்தாலும் வரைஞ்சிகிட்டே இருக்கான்பா...”
“வரையறானா, அப்ப விளங்காதே... பேசாம இவனை வேலைக்கு அனுப்புங்க”
என் வீட்டில்...
“வரைஞ்சி வரைஞ்சி குப்பைய போடுறதே இவனுக்கு வேலையாபோச்சு”

இந்த்மாதிரியான வசவுகளையும் மீறி ஓவியம் பழகி, பணம் செலுத்தி, வருடங்களையும், வயதையும் தொலைத்து, பட்டம் வாங்கி முழு ஓவியனாக வருபவன், தனக்கான செலவுக்காகவும், தன் வீட்டிற்காகவும் படும்பாடு அதிகம்...

அடுத்தமுறை “நான் ஒரு ஆர்டிஸ்ட்” என்று நான் சொன்னால் பாராட்டி மகிழுங்கள்...

கேள்விகளால் துளைக்காத அந்தநாள் எங்கள் இனத்திற்கு விரைவில் வரட்டும்...