CJ for You: caricaturelives

caricaturelives

Showing posts with label caricaturelives. Show all posts
Showing posts with label caricaturelives. Show all posts

Name changes, self-description post by Sugumarje


sugumarje


ஒத்துபோகிற தன்மை!

ஒரு கேரிகேச்சர் என்ற கேலிச்சித்திரம் எழுதுபவனாக இருந்தவன், தன்னையறியும் பயணத்தில் எனக்கு கிடைத்த அனுபவத்தின் உந்துதலில் இதை பிறருக்கும் சொல்லலாம் என்ற கருத்தில் 2018 உருவானதுதான், வேதாத்திரிய சானல். தொடங்கும் பொழுது அதற்கு சூட்டப்பட்ட பெயர், Coincide Channel, இதன் நேரடியான தமிழ் மொழிபெயர்ப்பு ‘ஒத்துப்போகிற தன்மை’ என்பதாகும், இந்த பெயரிலேயே, என்னுடைய உண்மை விளக்கத்தை சொல்ல நினைத்தேன். அதாவது மனிதனின் மனமும், இறைநிலையும் ஒத்துப்போகிற தன்மையில் இருக்கிறது என்பதே ஆகும். இதன் மூலக்கருத்து ‘அலையலையாய் இயங்கும் மனதின் அடித்தளமே நிலைபொருள், அது தெய்வம்’ என்று குரு மகான் வேதாத்திரி மகரிஷி சொன்னதாகும்.


வேதாத்திரிய சானல்

என் பள்ளித்தோழர், சக வேதாத்திரிய பயணி, இந்த YouTube பெயரை கேட்டுவிட்டு, இப்படியெல்லாம் பெயர்வைத்தால், வேதாத்திரிய அன்பர்களுக்கு பயன்படுவதில் சிரமம் இருக்கும், பெயரை மாற்றுக  என்றார். உடனடியாக ‘வேதாத்திரிய சானல்’என்று பெயர் மாற்றம் செயப்பட்டது. அதுதான் இன்னமும் தொடர்கிறது, பதிவுகளையும் வழங்கி வருகிறோம்.

நீண்ட பயணம்

நான் யார்? என்று தன்னையறிதல் என்பது நீண்டபயணம் தான். அதற்கு முயற்சி, ஆர்வம், சூழ்நிலை, செயல்பாடு என்று எல்லாமே கூடி வர வேண்டும். முக்கியமாக நம் கர்மா என்ற வினைப்பதிவுகளின் வெளிப்பாடுகளை ஏற்றுக்கொள்ளவும் தயாராக வேண்டும். ‘என்ன வாழ்வதை விட்டுவிட்டு தன்னை அறிகிறயா, விடுவேனா உன்னை!’ என்று பல குழப்பத்தை ஏற்படுத்தும். அடிக்கிற காற்றில் பறக்கிற சருகு போல நாம் இருந்துவிட வேண்டியது அவசியம். இதை தாங்கிக்கொள்ள முடியாமலும், இதெல்லம் நமக்கு அவசியமா? குறுக்கு கேள்வியாலும்தான், நான் யார்? தன்னையறிதலை கைவிட்டு விடுகிறார்கள். எனக்கு என் முன்னோர்களின் ஆசி இருந்ததாக கருதுகிறேன்.

தன்னிலை விளக்கம்

என்னுடைய வாழ்வில் என்னை / என் வாழ்க்கையை புரட்டிப்போட்ட ஆண்டு 2016 என்று சொல்லலாம். 2017 கிட்டதட்ட தன்னையறிதலுக்கு தகுதியாகிவிட்டேன். 2018 ம் ஆண்டு, எனக்குள் இறையாற்றல், அறிவாகவும் இருந்து செயல்படுகிறது என்பதையும், வெளியாக இருக்கிற இறையாற்றலின் சூழ்ந்தழுத்தத்தினால் தான் நான் இயங்கிக்கொண்டும் இருக்கிறேன், அதே இறையாற்றலினால்தான் நான் உலகியல் வாழ்வில் உணர்வைப் பெறும், இறையாற்றலையே உணரக்கூடிய  மனமாகவும் இருக்கிறேன் என்பதை உணர்வாக பெற்றேன். இதோ, என்னுடய வேதாத்திரிய பயணம் விபரம்...

18 வயதில் தீட்சை (1988 ம் ஆண்டு) 

21 வயதில் அருள்நிதி (1991 ம் ஆண்டு)

47 வயதில் தன்னையறிதல் (2017 ம் ஆண்டு)

53 வயதில் நிறைபேற்று நிலை (2023 ம் ஆண்டு)

மொத்தமாக 34 ஆண்டுகள் ஆகும்.

நான் யார்?

இந்த விளக்கங்களை, அதாவது, நான் இந்த வேதாத்திரியத்தில் பெற்ற அனுபவங்களை, என்னுடைய எழுத்திலும், குரலிலும் பதிந்து வெளியிட்டுள்ளேன். ஏன் அப்படி ஒரு திட்டமும் ஆர்வமும் எழுந்தது என்றால்? வேதாத்திரி மகரிஷி சொன்னது போல, ‘அறிந்த உண்மை நம்மை சும்மா விடாது, அதை எப்படியாவது பிறரிடம் சொல்லி, அவர்களும் அந்நிலை பெற துணையாக நிற்கும்’ என்பதே உண்மை. ஆனால், இந்த நவீன காலத்தில், கரோனா நோய்த்தொற்றுக்குப்பிறகு, தகவல் தொடர்பாகவும், கருத்து பரிமாற்றமாகவும், யுடுயூப் (YouTube) மாறிவிட்ட பிறகு, எனக்கும் அதுவே சரியாக தோன்றியது. 2009 ம் ஆண்டில் இருந்து YouTube உறுப்பினராக இருந்தாலும் கூட, நம் வேதாத்திரியம் 2018ம் ஆண்டுதான் பகிர ஆரம்பித்தேன்.அதுவும் சந்தேகமற, உண்மை அறிந்த பிறகே!. ஆனால், கிட்டதட்ட ஐந்து ஆண்டுகளாக, இன்றுவரை 729 காணொளிகள் பதிவேற்றிய நிலையிலும், என்னைவிட என்பகிர்வுகளை புரிந்து கொண்டு, வேதாத்திரிய சானலை பகிர்ந்துள்ள 18200 அன்பர்களைக் கடந்தும் கூட, சிலர்  என்னை நீ யார்? என்றுதான் கேட்கத்தான் செய்கிறார்கள்.

 1) ஒரு செய்தியை, விளக்கத்தை, பதிவை, கட்டுரையை, காணொளியை, குரல்பதிவை தருவது யார்?

2) அவருடைய அனுபவம் என்ன?

3) எப்போது இருந்து இந்த சேவையை பகிர்ந்தளிக்கிறார்?

4) அவருடைய சிறப்பு ஏதேனும் உள்ளதா?

5) இதற்குமுன் என்ன செய்தார்?

6) அவர் பின்புலம் என்ன? என்றெல்லாம் ஆராய்வதே இல்லை. பதிவாக செய்திருந்தாலும் அதை பார்ப்பதில்லை, படிப்பதில்லை.

வேதாத்திரி மகரிஷியின் ஓவியத்தை காட்டி,
அவரிடமே கையெழுத்து வாங்கிய பொழுது (1993 ம் ஆண்டு)


நேற்று முளைத்த காளான்

கடந்த முப்பத்திநான்கு ஆண்டுகளாக வேதாத்திரிய பயணத்தில், என் அனுபத்தில், தன்னிலை விளக்கம் பெற்றபிறகு, என்னை அவர்கள் பார்க்கும் பார்வையும், பதிலுரைக்கும் முறையும், நேற்று முளைத்த காளான் என்றுதான் இருக்கிறது. ஒரு உண்மை சொல்லட்டுமா? ஓவ்வொரு மனிதனும் முகம்பார்க்கும் கண்ணாடி மாதிரி. ஒருவர் தன் அனுபத்தை வைத்துத்தான், அடுத்தவர் எப்படிப்பட்டவர் என்று பார்ப்பார். அதில் தன் முகம்தான் அதில் தெரியும். பழகிப்பார்க்கும் பொழுதுதான், ‘அடடா இவர் நம்மளை மாதிரி இல்லையே, நாம நினைச்ச மாதிரியும் இல்லையே’ என்று தோன்றும். 

சேவையில் எழுந்த தயக்கம்

வேதாத்திரி மகரிஷி அவர்களின் நேரடியான வகுப்பில் கலந்து அருள்நிதி ஆகிவிட்ட பிறகு, மன்றத்தில் சேவையில் இருந்தாலும் கூட, நான் யார்? என்று தன்னையறியாமல், இறையுணர்வு பெறாமல், சுத்தவெளி தத்துவம் உணர்வாக பெறாமல் எனக்கு சேவையில் ஈடுபட முடியவில்லை. லட்டை சுவைத்தால் தானே லட்டு எப்படி இருக்கும் என்று பிறருக்கு சொல்லமுடியும்? லட்டு குறித்து பிறர் சொன்னதையும், படித்ததையும் அடுத்தவருக்கு எப்படி சொல்வது என்று எனக்குள் தயக்கம். அதனால் நானாகவே மன்ற செயல்பாடுகளில் விடுவித்துக்கொண்டேன்.

அதன்பிறகு எந்த ஒரு மன்றத்தில் நான் சேவையில் இல்லை. ஆனாலும் வேதாத்திரியத்தை நானும் விடவில்லை, அதுவும் என்னை விடவில்லை. இதனால் எனக்கு மன்றம் சார்ந்த சேவையில் எந்த நிலைபாடும் பெறவில்லை.அதாவது, பெயருக்கு முன்னால் போட்டுக்கொள்ளும் தகுதி நிலையிலும், பெயருக்குப் பின்னால் போட்டுக்கொள்ளும் தகுதி நிலையிலும் எனக்கு அக்கறையில்லை.

by Sugumarje for Caricaturelives

by Sugumarje for personal collection


சுகுமார்ஜெ (Sugumarje)

கடந்த 1996 ம் ஆண்டு முதல் என்னோடு கணிணி இணைந்து கொண்டது, அந்த கணிணி ஆர்வத்தின் வழியாகவே, வேலைகளிலும் ஆர்வம் வர, 2003 ம் ஆண்டு மல்டிமீடியா எனும் வேலையில் தொடர்ந்து வருகிறேன். 2007 ம் ஆண்டு நிறுவனம் சாராத, தனி நபர் சேவையாக, CARICATURELIVES என்ற கேரிகேச்சர் ஓவிய நிறுவனம் நடத்தி வருகிறேன். இப்போதும் சில ஓவிய வேலைகள் உண்டு. இந்த வேலை நிறுவனத்தின் வழியாக என்பெயர் சுகுமார்ஜெ (Sugumarje). இன்றும் கூட இணையத்தில் தேடினால் என்னைபற்றி தெரிந்து கொள்ளமுடியும். ஆனால், வேதாத்திரிய சானலை பொறுத்தவரை, அதற்கு தகுதியுள்ள பெயராக வைப்போம் என்றுதான், அருள்நிதி சுகுமாரன்.ஜெ. (திருச்சிராப்பள்ளி) என்று வைத்துக்கொண்டேன். ஏதோ கொஞ்சம் தெரிந்தவர், அறிந்தவர் சொல்லுகிறாரே என்று நம்புவார்கள் அல்லவா? அதனால்தான்!

அருள்நிதி என்பது முழுமையை குறிக்கும் சொல். தகுதி இல்லாவிட்டாலும், நமக்கு அது கிடைத்துவிடுகிறது. ஒரு பிச்சைக்காரர் தன் குழந்தையை ‘ராஜா’ என்று கொஞ்சுவது போல. யார் கண்டார்கள், அக்குழந்தை நிஜமாகவே ராஜா ஆகலாம் அல்லவா? அதுபோல ‘நீ உன் தகுதியில் நின்றிரு’ என்பதற்காகத்தான் ‘அருள்நிதி’ என்ற பட்டம் கிடைக்கிறது. ‘நிற்க அதற்குத் தக’ என்ற ஆசான் திருவள்ளுவரின் குறளை நினைவு கூர்க.

பெயரில் குழப்பம்?

ஆனால் என்ன நிகழ்ந்தது என்றால், அருள்நிதி என்றுதானே இருக்கிறது, எனவே பதிவுகளை பார்ப்போர், என்னடா இது அருள்நிதி என்று பெயருக்கு முன்னால் போட்டிருக்கு? இவ்வளவு பேசுகிறானே? எல்லாம் தெரிந்த்து போலவேறு பேசுகிறான்? இந்த ஆண்டுதான் அருள்நிதி ஆனாலும் ஆகிருப்பான். இப்பவே இவ்வளோ திமிறா? என்று நினைப்பார்கள் போலிருக்கிறது. அதனால்தான் அடிக்கடி நம் வேதாத்திரிய சேனலில், என்மீது வன்ம கருத்துக்கள் பதியப்பட்டன சிலரால். நான், என்கருத்தை, உண்மையை, அதை விளக்கமாக சொல்லியும், பெரிய இவனா நீ?  நீ என்ன மகரிஷியா? அவரை வைத்து பிழைக்கிறாயே? என்ற அளவில் கேட்டுவிட்டனர். அருள்நிதிக்கு பதிலாக, துணை பேராசிரியர், பேராசிரியர், முதுநிலை பேராசிரியர் என்று போட்டிருந்தால், பேசாமல் போயிருப்பார்களோ என்னவோ?! வாட்சாப் குழுவிலும் ‘உனக்கு ரொம்ப தெரியுமோ?’ என்று யாரேனும் கேட்பதுண்டு.

ஆனால் நான் எதையுமே பிரச்சனையாக கருதாமல், எது உண்மையோ, எது விளக்கமோ, எதை புரியவைக்க வேண்டுமோ அதில் நான் தவறுவதில்லை, பூசிமொழுகி பேசும் கலை எனக்கு வரவில்லை. ஆனாலும் நம் வேதாத்திரிய இரண்டொழுக்க பண்பாட்டின் படி, மனதுக்கு துன்பம் தருவதில்லை (அவர்கள் எனக்கு கொடுத்தாலும் கூட) அந்த உண்மையை அவர்கள் புரிந்து கொள்ளாமலேயே அடுத்தடுத்த கேள்விவை வாக்குவாதமாக மாற்றுவது எனக்கு பிடிக்கவில்லை. எனவேதான் வேதாத்திரிய சானலில், பின்னூட்டமிடுவது முடக்கப்பட்டது.  இங்கேயும் ஒரு உண்மை சொல்லட்டுமா? பின்னூட்டம் வழியாக, பெரும்பாலோர் தான் என்ற அகங்காரத்தைத்தான் பதிவு செய்கிறார்கள்.

இனி என் பெயர்...

அருள்நிதி சுகுமாரன்.ஜெ. (திருச்சிராப்பள்ளி) என்ற பெயருக்குப் பதிலாக, சுகுமார்ஜெ (Sugumarje) என்றே செயல்பட முடிவு செய்துள்ளேன். பெயரில் மதிப்பை தூக்கி அலைவது எனக்கு தேவையில்லை என்று கருதுகிறேன். அந்த விளக்கத்திற்காகவே, இந்த மிக நீண்ட கட்டுரை.

ஒரு பூ மலர்கிறது, வாசனை பரப்புகிறது. நாம் பார்த்தாலும் பார்க்காவிட்டாலும், ரசித்தாலும் ரசிக்காவிட்டாலும், பயன்கொண்டாலும், கொள்ளாவிட்டாலும், இழப்பு அந்த பூவுக்கு இல்லை என்பது உங்களுக்கு தெரியும் தானே?! 

'ஐயா, இதென்ன கதை? நாளைக்கும் பூ பூக்கும் தானே?!’

’ஆமாம், நாளைக்கும் பூக்கும், மறுநாளும் பூக்கும், அடுத்த மாதமும், ஆண்டும் பூக்கும். ஆனால் அதே பூ பூப்பதில்லையே; 

வாழ்க வையகம், வாழ்க வளமுடன்!







Rebuild the art business for our customer



என்னைப்பொறுத்தவரை இந்தியர்களுக்கு ஓவிய அறிவு கொஞ்சம் அதிகம் தான். எப்படியென்றால், ஒரு ஓவியருக்கே தெரியாத, அறியாத, கற்றுத்தேறாத ஓவிய அறிவு நம் இந்தியமக்களுக்கு உண்டு. அவ்வறிவை அந்த ஓவியருக்கே கற்றுத்தரவும் தயங்காத ஆற்றல் கொண்டவர்கள். 

இதனால்தான், ஒரு ஓவியராக இந்தியாவில் பிழைப்பை நடத்துவது பஞ்சப்பாடு தரும். இது என் அனுபவத்திலிருந்து தருகிறேன். ஒருவேளை இவர்களோடு எப்படி ஓவிய வியாபாரம் செய்வது என்று அறியாத ஓவியனாகக்கூட நான் இருந்திருக்கலாம். அதனால் இந்த, என்னுடைய கணிப்பில் தவறிருந்தால்  சக ஓவியர்கள் என்னை மன்னிக்கவும்.

கிட்டதட்ட பதிமூன்று ஆண்டுகளாக, ஓவியத்தை மட்டுமே தொழிலாக வைத்துக்கொண்டு பிழைப்பை ஓட்டியிருக்கிறேன். கொஞ்சம் அங்கங்கே பஞ்சர் ஆன இடங்களில் எனக்கு தெரிந்த பிற, Graphics design, web design and developing, sound and video editing என்றெல்லாம் அவதாரம் எடுத்து சரி செய்திருக்கிறேன்.

ஒரு விரலை சுட்டினால், மூன்றுவிரல் நம்மைத்தான் காட்டுமாமே?! அப்படி ஏதேனும் இந்த சமூகத்தை குறை சொன்னால் “நீ” சரி இல்லை என்பதுதான் இந்த சமூகத்தின் பதிலடி. இருக்கலாம். அதன் பாடத்தை அல்லது விளக்கத்தை கடந்த ஒரு வருடத்தில் படித்து தெளிந்தேன். என்னா அடி?! தவிலுக்கு இரண்டுபக்கமும் அடி என்பதுபோல.

வாங்கிய  ஓவிய வேலைகளில் ஒருவர் கூட மிச்சம் வைக்காமல், இதை திருத்து, அதை திருத்து, இது என் மூஞ்சி இல்லை, தாடையை குறை, கன்னத்தை குறை, முடியை இப்படி திருத்து?! என்றெல்லாம் எனக்கு ஓவியம் கற்றுக்கொடுத்தார்கள்

முக்கிய நிகழ்வாக ஒரு கஷ்டமர்,  அவர் கேட்ட மாதிரிபடம் போல வரைந்து கொடுத்த பிறகு, இது நான் இல்லை, ஏற்கனவே கொடுத்த என் போட்டொ பார்த்து வரைந்து தாருங்கள் என்றார். மறுபடி முதலிருந்து வரைந்து கொடுக்க, இந்த பெண் முகம் குண்டாக இருக்கிறது சரி செய்க என்றார். சரி செய்து கொடுக்க இரண்டாவது முறை ஒப்புக்கொண்டார். ஏறக்குறைய வேலை முடிந்தது.  அடுத்து எழுத்துக்கள் பதிக்கும் வேலை. ஒரு கொடிபோல போட்டு அதில் எழுத்து கேட்க அப்படியே வரைந்து கொடுத்தேன். எனக்கு இந்த கொடி வேணாம், வேறு வேண்டும் வேறு வண்ணத்திலும் வேண்டும் என்றார்.

நான் எதற்கடா வம்பு என்று ஒரு பத்து கொடி மாதிரிகளையும், பத்து வண்ணங்களையும் கொடுத்து எதுவேண்டும் என்று சொல்லுக என்றேன். அதற்கு அந்த கஷ்டமர், இப்படி கேட்ட எப்படி? அந்த படத்தில் வைத்து காமிக்கவும் என்றார். 

யப்பா சாமி, இதுக்காக, உங்க சாய்ஸ்க்காக 10 மாதிரி அனுப்பிவைக்கிற பழக்கம் என்கிட்ட இல்லை. எதுவேண்டுமென்று சொன்னால் அதை வைத்து முடித்து அனுப்புகிறேன் என்றேன். அதற்கு அவரிடம் பதிலில்லை. சரி என்று நானே ஒரு மாதிரிவடித்து அனுப்ப, எனக்கு பிடிக்கலை,  வேறே வேண்டும் இத்தனை ஓவியம் செய்யறீங்க, எது பெட்டர்னு நீங்கதானே தரனும்?! என்று அந்த கஷ்டமர் பதில்தர,

என் அனுபவத்தில் எது சரியாக இருக்கும் என்று கொடுத்தால்தான் நீங்க மாற்ற சொல்லுகிறீர்களே? இதெல்லாம் சரிபட்டுவராது, உங்களுகாக என் முழு நேரத்தையும், முழு வேலைலையும் செய்துகொண்டிருக்க முடியாது, என்ன வேணும் என்று சொன்னால்தான் கேட்பதை தரமுடியும். எல்லாமே புதிதாக வரைவது தான் எங்கள் வேலை. பழசை புதிதாக தரும் மாயம் எங்களுக்கு தெரியாது. உங்களுக்கு தேர்ந்தெடுக்க தெரியாவிட்டால், இத்தோடு நிறுத்திக்கொள்வோம். உங்களுக்கு பிடித்தவகையில் வேறு யாரிடமாவது ஓவியம் வாங்கிக்கொள்க என்று சொன்னேன். நான் சொன்னதை புரிந்துகொள்ளும் நிலையில் அந்த கஷ்டமர் இல்லை. அவர் கொடுத்து சிறு அட்வான்சோடு நிறுத்திவிட்டேன். எனக்குத்தான் 5 நாள் ஓவியவேலை கெட்டது. அந்த ஓவியம் அந்த கஷ்டமரின் விருப்பம் என்பதால் வேறு யாருக்கும் மாற்றித்தரவும் முடியாது.

காசை வாங்கி ஓவியம் தருவதாலும், கஷ்டமர் நமக்கு கடவுள் (மகாத்மா காந்தி சொன்னது) என்பதாலும், கொஞ்சம் கூட கோபமே என்வார்த்தைகளில் வராத வகையில் மிக மிக அமைதியாகவேதான் பதில் கொடுப்பேன். ஆனாலும் அந்த வார்த்தைகளுக்கு அவர்களின் பதிலடி பலமாகவே இருக்கும். தரையோடு படுத்து காலை ஏதாவது செய்வதற்கு, கைகொடுத்து நட்பாக விலகிவிடலாமே?! ஆனாலும் சிலரை திருப்தி படுத்த இறையாலும் முடியாது.

இப்படியான கொடுமையான நிகழ்வில், கரோனா தொற்று நோயும் கலந்துகொள்ள, என் ஓவியவேலைகளும் தனிமைப்படுத்திக் கொண்டுவிட்டன. சரி, இந்த இடைவெளியும் நல்லதுதான், என்னை ஆற்றுப்படுத்தும் என்றெண்ணி, சிலர் அப்படியும் கேட்ட ஓவியங்களை, வாங்குவதில்லை என்று சொல்லிவிட்டேன். என் வாட்ஸப்பில், இந்த ஓவியர் புது ஓவிய வேலைகளை வாங்குவதில்லை என்றும் ஸ்டேடஸ் போட்டுவிட்டிருந்தேன்.

வழக்கமாக எனக்கு பிடித்த வேலைகளிலும், பொழுதுபோக்குகளிலும் நேரம் கழிந்தன. இதற்கிடையில் நான், இனிமேலும் இப்படி ஓவியம் வரைந்துதான் பிழைக்கனுமா? என்று அகத்தாய்வு செய்ய ஆரம்பித்துவிட்டேன். 

மேலும் இந்த எல்லாம் தெரிந்த, ஓவியரைவிடவும், ஓவிய அறிவுகொண்ட இந்திய மக்களை சும்மா விடலாமா? வேலை தருகிறார்களோ இல்லையோ ஒரு ஓவியரையும், ஓவியத்தையும் மதிக்க கற்றுக்கொடுக்க வேண்டாமா? சிந்தித்தேன்.

அதன் விளைவுதான் என் புதிய “caricaturelives website" அவதாரம். இனி உங்க போக்குக்கு நான் இல்லை. 

1) இதுதான் ஓவியம், நீயே தேர்ந்தெடுத்து தரும் உன் போட்டோ கொண்டு அதன் மாதிரியாக - கவனிக்கவும், அதன் மாதிரியாக ஓவியம் கிடைக்கும்

2) திருத்தங்களுக்கு இடமில்லை

3) தலைப்புக்கு, வாக்கியத்துக்கு இடமுண்டு

4) எழுத்துப்பிழை திருத்தம் உண்டு, எழுத்து மாற்றமில்லை (போட்டது போட்டதுதான்)

5) இதைச்சேர், அதைச்சேர் என்று சேர்க்கும் பொருளுக்கெல்லாம் இடமில்லை

6) இந்த குதிரை சவாரி, மாட்டுவண்டி சவாரி, பைக், கார், பிளேன் சவாரி எல்லாம் கிடையாது

7) விலை திருத்தம் கிடையாது

8) ஒரு ஓவியத்திற்கு 14 நாள் ( இருவாரம்) ஆகும்

 9)பின்புலம் வெள்ளை வண்ணம்தான். 

10) இந்த சும்மா Soft copies கிடையாது, ஒரே விலை ஒரே High resolution soft copies any format (without layers)

என்று மாற்றங்களை, கடந்த அக்டோபர் 10 முதல் கொண்டுவந்துவிட்டேன்.  இனி தொடங்கும் வேலைகளுக்கு காத்திருக்கிறேன். Coustmer ஆ கஷ்டமாரா என்று பார்த்துவிடவேண்டியதுதான்.


இவண்

சுகுமார்ஜி


    

Open Statement for Commercial Caricature from Artist



Open Statement:

Stopped working for commercial caricature service.

Dear ones! We stopped working and provide a caricature paintings you liked, adorable. We're really sorry.

The main reason for this, is that, we do not have knowledge and experience to the extent you know the art and painting.

Anyway a painting is a creation. Just as nature creates its creations. A creation is always completed piece. This is the truth.

The painter creates a painting. That is the completeness of his knowledge. But you are disgusted by the painter and the creation by saying, "You change this, change that, draw like this, draw like that, it is chubby, it is fat, slim, and curvy, not like me, looks like someone else". Yes, you can comment like this, why you are giving some money to the Artist.

In fact, does the artist draw from your photocopy you provided? Are you unaware of this fact?

Thus for every work he buys, for every person, if he continues to learn painting, what is the fate of that painter? So you okay to teach a art to the Artist?

Otherwise without this difficulty for you, the right method is to draw yourself.

It was only after receiving this explanation that we stopped offering caricature painting. Please forgive us. Thanks to the loved ones who have supported so far.

by Caricaturelives

---------------------

ஒரு மனம் திறந்த அறிக்கை:

வியாபார ரீதியிலான கேரிகேச்சர் சேவை நிறுத்தப்பட்டது.

அன்பானவர்களே! நீங்கள் விரும்பிய, கேட்கக்கூடிய கேரிகேச்சர் ஓவியங்கள் வரைவதை நிறுத்திவிட்டோம். உண்மையிலேயே நாங்கள் வருந்துகிறோம்.

அதற்கான காரணங்களில் முக்கியமானது, உங்களுக்கு ஓவியம் தெரிந்த அளவிற்கு, எங்களுக்கு அது குறித்த அறிவும், அனுபவமும் இல்லை என்பதுதான்.

ஆனால், ஓரு ஓவியம் என்பது படைப்பு. எப்படி இந்த இயற்கை தன் படைப்புக்களை உருவாக்குகிறதோ அப்படியானது. ஒரு படைப்பு என்பது எப்போதுமே முழுமையானது. இதுதான் உண்மை.

ஒரு ஓவியத்தை ஓவியன் படைக்கிறான். அவனுடைய கற்று தேர்ந்த அறிவின் முழுமை அப்படைப்பு. ஆனால் நீங்கள், காசு தருகிறேன் என்பதற்காக, இதைமாற்று, அதை மாற்று, இப்படி வரை, அப்படி வரை, குண்டாக இருக்கிறது, ஒல்லியாக இருக்கிறது, என் முகம் போல இல்லை, வேறுயாரோபோல இருக்கிறது என்று சொல்லி ஓவியனையும், படைப்பையும் அசிங்கபடுத்துகிறீர்கள்.

உண்மையில், ஓவியன் நீங்கள் வழங்கிய உங்களின் புகைப்பட பிரதியில்ருந்துதானே வரைந்து தருகிறான்? இந்த உண்மையை நீங்கள் அறியாது இருக்கிறீர்களா?

உங்கள் விருப்படி ஓவியம் வரையவேண்டுமென்றால், உங்களிடம் இருந்துதான் அந்த ஓவியன் கற்றுக்கொள்ள வேண்டும். இப்படியாக தான் வாங்கும் ஓவ்வொரு வேலைக்கும், ஓவ்வொரு நபரிடமும், அவன் ஓவியம் கற்றுக்கொண்டே இருந்தால், அந்த ஓவியனின் கதி என்னாவது? 

இல்லையெனில் உங்களுக்கு இந்த சிரமம் இல்லாமல், நீங்களே வரைந்துகொள்வதுதான் சரியான முறை. 

இந்த விளக்கம் பெற்ற பிறகுதான், நாங்கள் ஓவியம் வழங்குவதை நிறுத்திவிட்டோம். தயவு செய்து எங்களை மன்னிக்கவும். இதுவரை ஆதரவு அளித்த அன்பர்களுக்கு நன்றி. 

கேரிகேச்சர்லைவ்ஸ்

---------------------

Artist life in the world


ஒரு தொழில்முறை ஓவியனாக என்னை நிறுத்திக்கொண்டது என் வாழ்வில் நான் அடைந்த சிறப்பான முன்னேற்ற நிலை. பல ஆண்டுக்காலமாக, பொழுதுபோக்காக சிலரின் அன்புக்காகவும் ஓவியங்களை வரைந்து கொண்டிருந்தவன் நான். கேரிகேச்சர்லைவ்ஸ் என்று ஒரு சுயநிறுவனம் தொடங்கி, வாடிக்கையாளர்கள் கேட்டுக்கொண்டபடி, அவர்களின் குறிப்பில், அவர்களுக்கு பிடித்த அளவில், அவர்களின் முகம், பாவம் மாறாமல் வரைந்து தந்துகொண்டிருக்கிற இந்தகாலம், கிட்டதட்ட 17 ஆண்டுக்கால பயணம்.


கடந்த வாரத்தில் என் உறவினர் இல்லத்தில், ஒரு பெரியவரை சந்தித்தேன். நல்ல மத்திய அரசு நிறுவனத்தில் வேலையில் பணியாற்றியவர், தற்போது பணி ஓய்வில், தான் கட்டிய 5 வீடுகளின் வாடகை வசூல்தான் இப்போதைய அவரின் பணி. என்னைவிட இருபத்தியாறு வயது கூடியவர். தன் மகளும், மகனும் வெளிநாட்டில் இருக்கிறார் என்ற பெருமையுடையவர். அன்றுதான் அவரை நேரில் பார்த்தேன். இதற்குமுன்பே அவரின் “மேற்கூறிய” தகவல்கள் எனக்கு கிடைத்திருந்தன.
“வணக்கம் நல்லாயிருக்கீங்களா?”
“நான் நல்லாயிருக்கேன். என்ன வேலைல இருக்கீங்க?”
“நான் ஓவியரா இருக்கேன். இதோ இந்த மாதிரியான ஓவியங்கள்தான் பாருங்க” என்று என் கைபேசி திரையை காட்டினேன்.
“அது சரி, வேறே வேலைல எதும் இல்லையா?”
“--------”
“இதுல என்னத்த கிடைச்சிட போகுது? வாழ்க்கை நல்லபடியா போகுதா?”
நான் உணர்ச்சிவசப்படாமல் “அதெல்லாம் போகுது போகுது” என்றேன்.
“போனா சரிதான்”
இனி பேசி பயனில்லை என்றபடி, நான் வாசலுக்கு வந்து நின்றுகொண்டேன். அந்த பெருசு வெளியேறினபிறகுதான் உள்ளே செல்லவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.

ஒரு ஓவியனைப்பற்றிய மதிப்பீடு இவ்வளவுதான். அடப்பாவிகளா. மனிதகுலத்தின் முதல் மலர்ச்சியே ஓவியம்தானடா? அதையே இப்படி செல்லாக்காசாக நினைத்துவிட்டீர்களேடா? கொஞ்சம் மனவேதனைதான். ஆனாலும் “நாங்க அடிவாங்காத ஏரியாவே கிடையாது, தம்பி போவீங்களா” என்று கைப்பிள்ளையாக கடந்துவந்த பாதையில் அமைதியானேன்.

காலச்சுழற்சி பின்னோக்கி ஓடியது.
“வீட்டில இருக்கிற நேரமெல்லாம், வரைஞ்சிகிட்டே இருக்கான்பா”
“அப்படியா, அப்ப இவன் தேறமாட்டான்” சொன்னவர் சில ஓவியங்களை வரைந்து வீட்டில் மாட்டியிருக்கிறார். ஆனால் வேறு தொழில் செய்துகொண்டிருந்தார்.

“சுகு, நீ என்ன இவனைமாதிரி வரைஞ்சிகிட்டே இருப்பியாம். ஓவியன் வரையறவன் விளங்கமாட்டான்பா” நண்பனின் அம்மா சொன்னார்.

என் வீட்டில், என் தாயும், தந்தையும், சகோதரிகளும், சகோதரனும் ஓவியத்தின் பொருட்டு ஒரு குறையும், குற்றச்சாட்டும்  வைத்ததில்லை. நான் பல நேரங்களில், இத்தகைய, அவர்களின், என் ஓவியம் குறித்தான ஏற்றுக்கொள்ளல் தன்மை குறித்து வியந்திருக்கிறேன்.

சமீபமாக ஓவியம், ஓவியன் குறித்த சமூக நிலை, கீழிறிங்கிக்கொண்டிருக்கிறது. கிட்டதட்ட படுத்துவிட்டது என்று கூட சொல்லலாம். நான் சொல்லுவது, சமுக அன்பர்கள் கேட்டுக்கொண்டதறு இணங்க வரையும், பழங்கால முறையில் வரைவதும், நவீன முறையில் கணிணி துணை கொண்டு  வரைவதுமான ஓவியங்கள் மட்டுமே.

தனக்கு தெரிந்ததை, தன் அனுபத்தை, தன் எழுச்சியை வரைந்து, காட்சிப்படுத்தி, அதற்கென்று காத்திருக்கும் அன்பர்களுக்கு விற்பனை செய்யும், ஓவியகலைஞர்களின் போக்கு தனி. அத்தகைய ஓவிய வட்டத்திற்குள் நான் நுழைந்ததில்லை. இனி நுழையப்போவதும் இல்லை.

என்பாதையும், பயணமும் தனியானது. தனி ஒருவன், ஓவியனாக முகமறியா அன்பருக்கு, அவர் கேட்டுக்கொண்டபடி வரைந்து, அதற்கான விலையில் பணம் பெறுவது என்ற அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக மாறி, தொழிலாக செய்துகொண்ருக்கும் ஓவியர் என்ற வரிசையில் நான் நின்றிருப்பது எனக்கு பெருமையே.
“நீ மட்டும் எப்படி இந்த நிலைக்கு வரமுடிந்தது? ஏன் என்னால் முடியவில்லை?”
“இந்த முறையில்மட்டுமே, வாழக்கை உங்களால் ஓட்ட முடிகிறதா? எப்படி?”
“எனக்கும் இந்த வழியை காட்டிகொடுங்களேன்”
புன்னகை மட்டுமே என்பதிலாக இருந்திருக்கிறது.

சமீபமாக என்று ஆரம்பித்தேன் அல்லவா? அதை இன்னும் விளக்குகிறேன். கடந்த டிசம்பர் மாதம் முதல், தற்போது கடந்த பிப்ரவரி மாதம் வரையும் நான்பார்த்த எல்லா வாடிக்கையாளரும், எனக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தினார்கள். அதற்கு முன்பும் ஒரு சில வாடிக்கையாளர்கள் மூலம் வரும், சகஜமாக எடுத்துக்கொள்வேன். ஆனால் வேலைகொடுத்த அனைவருமே அப்படி செய்தபோது கொஞ்சம் கலங்கித்தான்போனேன்.

ஒரு ஓவியம் என்பது, படைத்தல், அதில் குறைகள் என்று கண்டுபிடிப்பவனும், அதை இப்படி திருத்திக்கொடு என்று கேட்பவனும் முட்டாள். கொஞ்சமும், ஓவியம் குறித்த எந்த அனுபவமும் இல்லாதவன் என்றும் நான் சொல்லுவேன். Critic என்று சொல்லபடுபவனும் முட்டாளே. இயற்கையை குறைகாண்பானா அவன்? குறை நிறைகள் தான் இயற்கை.

Quora வில் ஒரு குறிப்பு எழுதியிருந்தேன். என்றைக்கு ஒருவன் முதன் முதலில் ஓவியம் வரைந்தானோ அவன் ஓவியன். அதை பார்த்துக்கொண்டிருந்த இன்னொருவன்தான் Critic

ஒரு மனிதனின், ஒருபக்க காது வித்தியாசமிருக்கிறதே? நீ என்ன செய்தாய்? ஒட்டுபோட்டுக்கொண்டாயா?
ஒரு மனிதனின், ஒரு கண் சிறுத்திருக்கிறதே? இமைகளை விரிக்கச்சொல்லி மருத்துவம் பார்த்தாயா?
சிரித்தால் இதழ் ஒருப்பக்கம் கோணலாக போகிறதே, வாழ்வில் சிரிக்காமலேயேவா நாட்களை கடத்துகிறாய்?
நிறுத்து, நீ ஓவியன், காசுக்காக வரையும் ஓவியன், நீ கொடுப்பதை நான் காசு கொடுத்து பெற்றுக்கொள்ள நாங்களென்ன முட்டாளா? எங்களுக்குள்ளும் ஓவியன் இருக்கிறான் (?!) நான் எப்படி கேட்கிறேனோ அப்படி வரைந்துதருவதுதான் உன்வேலை.  படைப்பு கிடைப்பு என்று பினாத்துகிறாயே?!

எத்தனை அடி? எவ்வளவு அடி? யப்பா?

ஒரு கணிணி அல்லது கைபேசி விளையாட்டில், எதிரியை கொன்று குவிக்க, குவிக்க மீண்டும் மூண்டும் முளைத்தெழும் எதிரியைப்போலவே, ஒவ்வொரு முகமுடியை மாட்டிக்கொண்டு, அதே வாடிக்கையாளர் வந்து எனக்கு வேலை கொட்டுப்பதுபோலவே எனக்கு திகிலாக இருக்கும். இன்னுமா இது முடியலை என்று என் மனம், பழைய வேலையோடு ஒப்பிட்டுப்பார்த்து திடுக்கிடச்செய்யும்.

ஓவியத்தில் திருத்தமெல்லாம் ஏற்றுக்கொள்ளாதீர்கள் என்று பலதுறைகளைச் சார்ந்தோர் எனக்கு சொன்னபோதிலும், வாடிக்கையாளரிடமிருந்து பணம் பெறுகிறோம், அதனால் அவர்களின் திருப்திக்காக சில திருத்தம் செய்வதில் தவறில்லை என்பது என் கருத்தாகவே இருந்தது. ஒரு ஒளிப்பட கருவி, (Camera) இருப்பதை எடுத்துக்காட்டும் என்ற அளவில் கூட, “ஒருஓவியனுக்கு” மதிப்பில்லாமல் போனது அதிசயமே.

இதில், இப்படியும் கேட்பார்கள். “எனக்கு Soft copy மட்டும் போதும்” இதை எங்கே, யாரிடம் கற்றுக்கொண்டார்கள் என்று தெரியவில்லை. இதன் பொருள் என்னவென்றால் “ நீபாட்டுக்கு உனக்கு தகுந்த விலையை சொல்லாதே, கொஞ்சம் சீப்பா விலை சொல்லு” (நான் என்னய்யா, வாழைப்பழ கடையா போட்டிருக்கேன்?) முழு ஓவியம், பெரிதாக வரையாமல், எப்படி சீப் சாப்ட் காப்பி கொடுக்கமுடியும்?!

திரைப்படத்தில், செந்தில், கவுண்டமணி கடத்தல் பேரம் பேசுவதுபோல, இப்படியான வாடிக்கையாளர்களுக்கு, எத்தகைய விலை சொன்னாலும், அது சீப் ஆகாது. இன்னும் குறை, அட்ஜஸ் பண்ணு. ரவுண்டப் பண்ணு... எல்லா மொழிகளிலும் கேட்பார்கள்.

திருத்தம், திருத்தம், திருத்தம் ?! மாற்றம் ஒன்றுதானே மாறாது :P போதுமடா சாமி என்றாகிவிட்டது.  எப்போதுமே, நாம் நம்முடைய வாழ்வில் சந்திக்கும் ஓவ்வொரு நபருக்கும் ஒரு தொடர்பு, விட்டகுறை தொட்டகுறை என்பது நிச்சயமாக இருக்கிறது. இருந்தாகவும் வேண்டும் என்பதுதான் இந்த இயற்கையின் விதி. தானாக வந்ததாகவும் இருக்கலாம். தானே சேர்த்ததாகவும் இருக்கலாம். இதன் மூலமாக, நம் வினைப்பதிவுகள் ஓவ்வொன்றாக கழிகின்றன. திருத்தம் பெறுகின்றன. அவர்கள் மூலமாக அவன் சுத்தம் செய்யபடுகிறான். உண்மையாகவே நான் அவர்களுக்கு, மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறேன். என்னுடைய சுயத்தை பரிசோதனை செய்ய வாய்ப்புத்தந்தவர்கள் அவர்களே. என் பலத்தையும்,  என் பலவீனத்தையும் எனக்கு வெளிச்சம்போட்டு காட்டி, என் சுயபலத்தை உணரச்செய்தவர்கள். நன்றி, நன்றி, நன்றி என் வாடிக்கையாளர்களே.

இந்த 17 வருடங்களில், 12 வருடங்கள் பெரும்பான்மையான வாடிக்காளார்களின் நன் மதிப்பை பெற்றிருக்கிறேன். ஓவ்வொருவரும், கடைசியாக, “மன்னிக்கனும் சார், உங்களை ரொம்ப கரைக்சன் கேட்டு நோகவைத்துவிட்டேன், பொறுமையாக எல்லாம் சரி செய்து கொடுத்ததற்கு நன்றி” என அவர்களே தானாக சொல்லும்படிச்செய்து, நட்பாகவே முடித்துவைத்திருக்கிறேன். தற்போதைய என்னுடைய பலம், இதுதான். அதோடு நம்பிக்கை. உடனுக்குடன் தகவல். என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதற்கான விளக்கங்கள். அவர்களே வியந்து பாராட்டுமளவுக்கு. நான் இந்த இடத்தில்தான் நிமிர்ந்து நிற்கிறேன்.

எல்லாம் நிகழ்வன, நிகழ்ச்சியே, தோற்றமாயைகளே, எங்கள் வேதாத்திரி மகரிசியும், மகாகவி பாரதியும் சொல்லியதை, அனுபவங்களாக, ஆராய்ச்சியால் கண்ட உண்மையில் நான் ஏற்றுக்கொண்டிருக்கிறேன். மனிதன் பல நிலைகளில், பலதரங்களில், பல காலங்களில் அனுபவித்து வாழலாம், ஆனால் பிறப்பு எப்படி நிகழ்ந்ததோ அப்படி, இறப்பும் காத்துக்கொண்டிருக்கிறது. இறப்பை வெறுக்கலாம், மறக்கலாம், வராது என்று நம்பலாம், மருத்துவத்தால், யோகத்தால், உடல் சாதனையால் தள்ளிவைக்கலாம் கொஞ்சநாளைக்கு... ஆனால் இறப்புக்கான அந்த டிக்கெட்டை யாராலும் வாபஸ் பெற முடியாது. அப்படி போய்ச்சேர்ந்தவர்களின் தோள்கள்மீதுதான் நாமும் நின்றுகொண்டிருக்கிறோம்.

நான், என் பயணத்தில் அடுத்த இலக்கு நோக்கி பயணிக்கதொடங்கியதாக எண்ணுகிறேன். முக்கியமாக ஒன்றை சொல்லவேண்டுமானால், இந்த பயணத்தையும், இலக்கையும் நான் தீர்மானிக்கவில்லை. நான் அதை தொடங்கவும் இல்லை. நான் ஒரு பயணி, ஏதோ ஒன்றை என்னை எடுத்துச்செல்கிறது. நான் அதனிடம் என்னை சில வருடங்களுக்கு முன் ஒப்புக்கொடுத்துவிட்டேன்.  அந்த பயணத்திற்கும், அந்த வழியில் நான் காணப்போகும் காட்சிகளுக்கும், சென்றடையும் இலக்குக்கும் நான் மனம் விரித்தும், மனம் ஒடுங்கியும், காத்திருக்கிறேன், விழிப்புநிலையில். ஆனால் எந்த எதிர்பார்ப்புமின்றி.

வேலையை எளிமையாக்குவதற்கு ஓப்படைப்பதைத்தவிர வேறு வழியில்லை.

Drawing - Never Stop Learning



ஒரு ஓவியன் தன் வளர்ச்சியில், அவன் கற்ற ஓவிய நுணுக்கங்களையும் வளர்ச்சிக்குட்படுத்தவேண்டியது அவசியம். என்றோ கற்ற வித்தை காலாகாலத்திற்கும் போதுமானது என்பது வாழ்வில் ஏமாற்றத்தை தரும்.

Left - Recent / Right - Done 6yr before
நான் ஆரம்பகாலத்தில் ஓவியம் வரைந்ததற்கும், இப்போதைய நிலையில் ஓவியம் வரைவதற்கும் மிக நீண்ட வளர்ச்சி இருப்பதை தெரிந்துகொள்கிறேன். ஆனாலும் இன்னமும் கூட தினம்தினம் புதிய நுணுக்கங்களை, என்னிலும் இளைய ஓவியர்களிடமிருந்தே கற்றுக்கொள்கிறேன். Template என்று பட்டியலிட்ட ஓவிய முறைகளில் நான் கண்டிப்பாக இல்லை. அதில் நான் சேரவும் மாட்டேன்...

கேரிகேச்சர் என்ற ஓவிய முறையில் என் கற்றுத்தேர்வுகளை தனிப்பதிவாக போடுமளவுக்கு உண்டு... (முயற்சிக்கிறேன்)

என் வாடிக்கையாளர்களுக்கு தரும் ஓவியங்களிலும், அவ்வப்போதைய என் மாற்றத்தை தந்துகொண்டிருப்பேன். ஒரேமாதிரி ஓவியம் என்பதை நான் செய்வதே இல்லை. இன்னும் சொல்லப்போனால், என் ஓவியத்தையே நான் மறுபதிப்பு செய்வதை தவிர்த்துவிடுவேன்.

இளைய தலைமுறை ஓவியர்களின் ஓவியங்கள், Tumblr, Behance, Deviantart இப்படியான தளங்களில் காணக்கிடைக்கின்றன. நீங்களும், ஆர்வமுள்ள ஓவியர்களும், (போட்டோவை தடவுவதை விட்டுவிட்டு) பென்சிலும், பேப்பருமாக நிறைய, (or Mousepen and pad) கற்றுத்தேர்ந்து உங்களை வளப்படுத்திக்கொள்ளுங்கள். உலகம் விரைவாக மாற்றம்பெறும்ப்போது கையறு நிலையில் இருக்கவேண்டாமே...!

தொடர்ந்து முயற்சியுங்கள்.... உங்கள் ஓவியம் நன்கு விலைபோகும், கிடைக்கும் “லைக்”கை விட அதிகமாக...

You are kicked


அடிமேல் அடி :D

ஆரம்பகாலங்களிலேயே, மற்ற எந்த கேரிகேச்சர் ஓவியரும் தராத தரத்தில் நான் தருவதை அறிந்துகொண்டதால், இதுதான் என் ஓவியத்தின் விலை என்ற நிலையில் கொடுத்தேன். ஆனால் நிறைய  வாடிக்கையாளார்கள் கேட்டுக்கொண்டபடி, ஒரு குறிப்பிட்ட விலை வைத்து, அதிகம் பாதிப்படையாமல், அவர்களாகவே விரும்பியும் தரும் வகையில், இதுவரை என் ஓவியங்களை கொடுத்துவந்தேன்.

முன் பணம் கூட வாங்காமல், ஆரம்பித்து முடித்து தரும்போது, இது எனக்கு பிடிக்கலை என்ற ஒரே சொல்லில் என் உழைப்பை உதாசீனப்படுத்தியதால், முன்பணம் கொடுத்தால் மட்டுமே இனி வேலை ஆரம்பிக்கப்படும் என்று மாற்றிக்கொண்டேன். ஆனால் நண்பர்களுக்கும், அவர்களின் அறிமுகத்துக்கும் கொஞ்சம் சலுகை கொடுக்கப்பட்டது. ஆனாலும் காலப்போக்கில் முன்பணம் முக்கியம் என்பதை அவர்களுக்கு புரியவைத்து, முடித்துக்கொடுத்தவுடன் மீதம் பெற்றுக்கொள்வது தொடர்ந்தது.

முக்கியமாக என் ஓவியவேலைகளில், முதல் நிலையில் கோட்டுவோவியம் அனுப்பி, குறைகளை கேட்டு திருத்தி, மறுபடியும் எத்தனை திருத்தம் வேண்டுமோ அத்தனை வாய்ப்புக்களையும் தந்து, பிறகுதான் வண்ண நிலைக்கு வருவேன். அப்போதும், வண்ணத்தை மாற்றுதல், பின்னணி அமைப்பு, பொருள் மாற்றியும் தருவேன், எந்த முகசுழிப்புமில்லாது.

என் நண்பர்கள் யாருமே இந்த திருத்தம் தருவதை ஏற்றுக்கொள்ளவே இல்லை. ஓவியம் என்பது ஒருமுறை என்பதான படைப்பு, இதில் நெளிவு, சுழிவு, திருத்தத்திற்கு இடமே இல்லை என்றே கூறிவந்தனர். நான் அவர்களிடம் சொல்லுவேன்... ஒருவர் இதற்காக பணம் செலுத்துகிறார். ஆகவே தான்  விரும்பியதை அவர் கேட்கிறார், அவருக்கான ஓவியம், வியாபாரமாக்குகிறேன் என்பதால், திருத்தம் ஏற்றுக்கொள்வதில் பிழை இல்லை என்றே சொல்லிவந்தேன்.

இந்த ஓவியங்களில், வாங்குபவர்களுக்கே தெரியாத, கவனிக்கமுடியாத சிறப்புக்களை தருவேன். ஒரு ஓவியம் போல இன்னொன்று இல்லாதவகையில், என் கையொப்பமில்லாமல், நானே உரிமை கொண்டாடி என் தளத்தில், பிற தளத்தில் பகிர்ந்துகொள்ளாமல், எந்த வடிவ கோப்பாகவும் தருவேன்.

கடந்தமாதம் instagram ல் என் தனிபட்ட பொழுதுபோக்கு ஓவியங்களை பார்த்து நிறையமக்கள் என்னிடம் ஓவியம் கேட்டனர், அதற்கான விலை கேட்டு தயங்கினர். சரி, இவர்களுக்காக தரம் குறைக்காமல், கோப்பின் அளவை குறைத்து தரலாமே என்று ஐந்து விதமான விலைப்பட்டியல் தயாரித்து அதன்படி ஓவியம் செய்துதர எண்ணினேன். ஏதோ ஒரு சில வேலைகள் கிடைத்தன.

ஆனால் பெரும்பான்மையோர், ஓவியம், ஓவியன் அவனின் உழைப்பு இப்படி எந்த அறிவுமே இல்லாமல், காசு கொடுக்கிறேன் பேர்வழி என்று, எனக்கு ஓவியபாடமே எடுக்குமளவுக்கு, என் பொறுமையை சோதித்துவிட்டனர்.  அதோடு தினமும், காலையும் மாலையும் அழைத்து என்னவாயிற்று? இதை அப்படி போடுங்க, இதை இப்படி போட்டுங்க என்று திருத்தங்கள்...

கேட்கும் எல்லா திருத்தம் செய்து கொடுத்தும், இன்னும் திருத்தம் வேண்டும் என்ற மன நிலையிலேயே இருந்து, கொடுத்த முன் பணத்தோடு, இதுவரை திருத்தங்கள் செய்ததற்கு நன்றி, எனக்கு இந்த ஓவியம் தேவையில்லை என்றும், இதை வாங்கி நான் என் திருமண அழைப்பிதழில் இடும் காலம் கடந்துவிட்டது வேண்டாம் என்றும் தவிர்த்துவிட்டனர்.  எனக்கோ என் உழைப்பும், ஓவியமும் வீணான நிலை. உடல் சோர்வும், மனச்சோர்வும், கண் எரிச்சலுமே மிச்சம். ஆனால் சில ஓவிய பாடத்தோடு இப்படியான மனிதர்களின் குணாதிசங்களை அறிந்துகொண்ட திருப்தி

முக்கியமாக ஓவியம், அது தொடர்பான அறிவு, ஓவியன், அவனின் படைப்பு சுதந்திரம், அவனின் உழைப்பு இப்படி அந்த விபரங்களுமே அறியாதிருக்கிறார்கள். ஒளிப்படம் என்பது வேறு, ஓவியம் என்பது வேறு என்ற வித்தியாசம் தெரிவதில்லை, என் முகம் மாதிரி இல்லை என்று கிண்டலடிக்கிறார்கள். எத்தனை கேமரா, எத்தனை லென்சு, எத்தனை ஒளி கொண்டு ஒருவரை ஒளிப்படமெடுத்தாலும் ஒன்று போல ஒன்று இருப்பதில்லை, முகத்தை இடது வலது திருப்பினால் கூட ஒரேமாதிரி இருக்காது என்பதும் உண்மை. இதில் ஓவியம் எப்படி 100% வரும்? போட்டோவையே Smudge Tool கொண்டு தேய்த்தால் 101% கூட கொண்டுவரலாம்... ஒரு ஓவியன் தான் கற்றுத்தேர்ந்த திறமையை கொண்டுதான் பார்த்ததை, ஓவியமாக்குகிறான். கேட்பவர்களுக்கு, அவர்கள் சொல்லும் காட்சியை பதிவுசெய்கிறான், அதற்கு விலை அல்ல வெகுமானம் பெற்றுக்கொள்கிறான்.

யாரோ ஒருசிலர் இப்படித்தான் என்று நினைத்தால் இது தொடர்கதையாகிவிட்டது... அடிமேல் அடிவிழ நான் விழித்துக்கொண்டேன்... இதற்குமேலே தாங்குவதற்கில்லை :D

இன்று முதல் ஒரே ஒரு விலைப்பட்டியல், ஒரு திருத்தங்களும் ஏற்றுக்கொள்வதற்கில்லை. முழுபணம் கொடுத்தால் மட்டுமே வேலை பெற்று, ஓவியமாக்கப்படும். ஓவியம் முடிந்த நிலையில் ஒரு சிறு மாதிரி அவர்களுக்கு அனுப்பி, திருப்தியா என கேட்கப்படும், ஆம் என்றால், அந்த ஓவியத்தின் முக்கிய, பெரிய அளாவிலான கோப்பு அனுப்பிவைக்கப்படும். திருப்தி இல்லை என்றால் அவர்கள் செலுத்திய தொகையிலிருந்து பாதி, அவர்களுக்கே அனுப்பிவைக்கப்படும் என்ற முடிவுக்கு வந்துவிட்டேன்.

#முடியலை

Say no template caricature


Say no template Caricature, be Pride with Caricaturelives...

Caricaturelives never start with Templates, You are ready to pay a bill for your caricature, then why pay for old work or template? Are you sure, your caricature is being in 10+1 row? You are OK with head changes with template bodies? Have you no idea or no feel with your individuality?

Be Pride with Caricaturelives, Be individuality with your caricature... only at Caricaturelives

Share your theme or idea and get ever fresh, individual caricature for your wedding, birthday, retirement,  gift, personal and invitation caricatures.


feel free to whatsapp: +91 9442783450 or email: caricaturelives@gmail.com
visit: www.caricaturelives.com

Doodle Art 6


After long break, i do this doodle art.

I love this solid color based out-put, it gives a great feel. It is really very different from my official caricature art. But i like do more

it is very fun and enjoyed

Click the photos and see big size and  feel it. If  you have a any question, let me know via email. Thanks :)
This is me :P

One of  my Girl, she called me as Grandpa :D

Based on Photo ,got on Google

Based on Photo- I follow her on Instagram

Pinup Girl - I am a Instagram follower 

Based on Photo on Tumblr Search

Based on Photo of my friend photo collection on Facebook

THE EVOLUTION OF ART BY CARICATURIST-03


சூரியக்கதிர் மாத இதழுக்கு நேர்காணல் கேள்விகளும், பதில்களும்
பகுதி 03


17. அசலைப்போல ஓவியமா, அனுபவ ஓவியமா?

ஒரு ஓவியம் கற்கும் மாணவர் அசலைப்போலவே வரைந்துதருவதில் கற்றுத்தேர வேண்டியது அவசியம். ஆனால் அதில் தன் அனுபவத்தை காலப்போக்கில் இணைத்தே தரவேண்டும். இருப்பதை அப்படியே தர, இப்பொதெல்லாம் கேமரா முதற்கொண்டு, இயந்திரங்கள்கூட வந்துவிட்டன. அசலைப்போலவே வரைந்தால் மட்டுமே ஓவியன் என்றும், அதுவே தகுதியானது என்ற முட்டாள்தனம் இந்தியாவில் மட்டுமே காணக்கிடைக்கிறது. இப்படி எதிர்பார்த்தால் நூறு பேருக்கு ஒருவரே அப்படி வரையலாம். மற்றவர்கள் எல்லாம் இன்னும் கற்றுக்கொண்டே இருக்கவேண்டியதுதான். ஒரு போட்டோவை, நகல் எடுத்து வரைந்து அனுப்பினால் உலகநாடுகளில் மதிக்கவே மாட்டார்கள். இங்கேதான் ஆகா, ஓகோ என்று புகழ்ந்து அந்த ஓவியரை வளரவிடாமல் செய்கின்றனர். இதில் சிலர், தன் புகழுக்காக, போட்டோவையே சிற்சில வேலைகள் செய்து ஓவியமாக்கி ஏமாற்றவும் செய்கின்றனர்

ஆனால் ஓவியம் அப்படி அசலைப்பொல வரைவது மட்டுமல்ல. தன் அனுபவத்தை அந்த கோடுகளிலும், வண்ணங்களிலும் கொண்டுவருபவனே நல்ல ஓவியன்

-----

18. பொழுதுபோக்கு நிலையா, தொழில் பயன்பாடா? இதை சந்தைப்படுத்தி விற்பனை செய்யமுடிகிறதா?

ஓவியத்தை பொறுத்தவரை, பொழுதுபோக்காக கற்றுத்தேர்ந்து, தொழில்முறை ஓவியராகமாறி, சந்தைப்படுத்தவும் செய்கின்றனர். முக்கியமாக, தன் ஓவியம் உலக அளவில் கிடைக்கும் மேலான தகுதி கொண்டிருக்கிறதா, இல்லை இன்னும் சில அனுபவங்களை பெற வேண்டுமா என்பதை சோதனை செய்துகொள்ளவேண்டும். இப்போது இணையம் மூகமாக உலகம சுருங்கியிருக்கிறது. யார் எங்கிருந்தாலும், யாரோடும் தொழிலை, சந்தைப்படுத்துதலை செய்துகொள்ள இயலும். எனவே தொழிலாக செய்யும்பொருட்டு இதை சந்தைப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கின்றன. ஓவியம் பிறரை கவருமானால், கண்டிப்பாக அது விலைபோகும். ஆனால் அந்த நிலைக்கு வர நாம் தொடர்ந்து முயற்சிக்கவேண்டியது அவசியம். 

-----

19.தானாக இதை கற்றுத்தேர முடியுமா? என்ன வழி?

நிச்சயமாக முடியும் என்றே சொல்லுவேன். தானாக கற்றுத்தேர அவசியான எல்லா விசயங்களையும், பிறரின் அனுபவங்கள் மூலம் கற்றுக்கொள்ளலாம். இந்த ஓவியத்துறையில் வல்லவர்கள் தங்கள் கட்டுரைகளை, ஓவிய நுணுக்கங்களை, பழகுவதற்கான வழிமுறைகளை, நூல்களாகவும், வீடியோவாகவும் தனியாக விற்பனைக்கும், இணையத்திலும் தருகின்றர். சிலர் இதை தொழிலாகக்கூட செய்கின்றனர். ஆனால் ஏமாற்றி பணம் செய்பவர்களை தவிர்த்து, உண்மையான ஓவியர்களை, அவர்களின் படைப்புக்களால் அடையாளம் கண்டு, கற்றுத்தேர்ந்து யார் ஒருவரும் சிறப்பிக்க இயலும். 

-----

20. ஓவியம் குறித்த மன நிலை உலகநாடுகள், இந்தியாவில் எப்படியிருக்கிறது? 

பாராட்டதகுந்த அளவில் இல்லை. நான் கிண்டலாக சொல்லுவேன். இந்தியர்கள் மட்டுமே எல்லாம் தெரிந்தவர்களாக காட்டிக்கொள்வார்கள். 
“இது நான் இசைத்த பாடல்” என்று சொன்னால், “இதென்ன, நானும் அந்த காலத்தில் இதை விட அருமையான பாடல் இசைத்திருக்கிறேன்” என்று சொல்லுவார்கள். “இது நான் சமைத்த உணவு, சுவை பாருங்கள்” என்றால். “இதென்ன விசயம், நான் இதைப்போல ஒன்றை செய்யும்போது... ” என்று பதில் வரும். “இது நான் எடுத்த ஒளிப்படம், எப்படி இருக்கிறது” என்றால். “நான் என் பழைய கேமராவில், இப்படி எடுத்திருக்கிறேன்... இதில் முக்கியமாக...” என்று அறிவுரை ஆரம்பித்துவிடுவார்கள். இதைப்பொலவே ஓவியம் முதலான எல்லாவற்றிலும்.... 

உலக நாடுகளில் பெற்றோர்கள் குடும்ப சூழ்நிலைகேற்ற வேலை பார்த்தாலும், தங்கள் குழந்தை எதை விரும்புகிறதோ, அந்த விருப்பத்தின்படியே படிக்க ஆர்வமூட்டுகின்றனர். தான் நினைத்தை செய்யும் நிலை உலக நாடு குழந்தைகளுக்கு இருக்கிறது. இந்திய குழந்தைகளுக்கு, பெற்றோரின் ஆசைப்படி அவன்/அவள் ஒரு டாக்டராகவோ, ஒரு இஞ்சினியராகவோ மட்டுமே முடியும். தன் ஆசையை தன் குழந்தைமீது திணிக்கும் வன்முறைதான் இது. கேட்டால் பொருளாதார நிலையை சொல்லுவார்கள். பிடித்தவேலையை செய்தால் கிடைக்கும் நிம்மதியை தொலைத்துவிட்டு, கைபேசியிலும், இணையத்திலும், மது போதைகளிலும் தேடிக்கொண்டிருக்கும் இளைஞ தலைமுறைகளை நான் உதாரணம் காட்ட இயலும். 

குழந்தைகளுக்கு வழி காட்டுங்கள், பிடித்துதள்ளாதீர்கள் என்றே பெற்றோர்கள் கேட்டுக்கொள்கிறேன். 

-----

21. இந்த நிலை மாற என்ன செயலாம் என்று நினைக்கிறீர்கள்?

இந்த நிலைப்பாடுகளில் அரசு, நிர்வாகங்கள், தலைவர்களை எல்லாம் நான் குறைசொல்லி தப்பிக்க தயாரில்லை. இந்த உலகில் இன்னமும் பொழுபோக்கு எனும் மிகப்பெரும் தொழில் சிறந்து விழங்குகிறது. அதில் ஓவியமும் ஒன்றே. எந்த ஒரு விசயத்தையும் ஒரு ஓவியமாக தர, புரியாத ஒன்றையும் புரியவைக்கவும் இயலும். ஒரு திட்ட அறிக்கையை இன்னமும் ஒரு பென்சில், ஓவியம், காகிதம் இவற்றில் முடிக்காது, திட்டத்தில் இறங்க எந்த நிறுவனமும் தயாரில்லை. தன் நிறுவன ஊழியர்கள் மன அழுத்தத்திலிருந்துவிடுபட ஓவியம் கற்றுத்தரும் வகுப்புக்களை நடத்துகின்றனர். 

தொழில்முறை ஓவியராக மாற, ஓவியம் கற்றுத்தேர்தலின் பொழுது நிச்சயமாகவே கொஞ்சம் காலத்தை கொடுத்துத்தான் அனுபவத்தைபெற இயலும், ஆனால் மிக நிம்மதியான ஒரு வேலையாக, ஓவியம் இருப்பதை அறியலாம், அதை பிறருக்கு கற்றுத்தருவதையும் கூட தொழிலாக செய்யமுடியும். பெற்றோர்கள் தன் குழந்தையை பணம் செய்யும் கருவியாக மாற்றாது, அவனை/ அவளை, அவர்களின் தனித்தன்மையை மதித்து அவர்களுக்கான வழிகாட்டியாக இருக்கலாம். ஓவியத்தை தொழிலாக செய்யலாமா, வேண்டாமா என்பதை அவர்களே கூட முடிவு செய்யும் பக்குவத்திற்கு வர விடவேண்டும் என்பதும் என் வேண்டுகோள்.

-----

22. இந்த கேரிகேசர் கற்கும் மாணவர்களுக்கும், தொழில்சார் ஓவியர்களுக்கும் உங்கள் கருத்தாக என்ன சொல்லுவீர்கள்? 

கற்றது கையளவு, கல்லாதது உலகளவு என்று ஒளவை சொல்லிச்சென்றதுபோல கேரிகேச்சரில், உங்களை எல்லாவகைகளிலும் சோதனை செய்துபார்க்கும் கட்டுப்பாடற்ற நிலை உண்டு. நான் இப்படித்தான் வரைவேன் என்று வட்டம் போட்டுக்கொள்ளாமல், நான் இப்படியும் வரைவேன் என்று தன் நிலை மாற்றிகொள்ளவும் தயாராக இருக்கவேண்டும். ஆனால் நிச்சமாக உங்களின் பாணி மாறவே கூடாது. 
தயக்கமே இல்லாமல் ஒரு கோடு போட்டு பழகவேண்டும், அதில் நிச்சயமற்ற தன்மை இருக்கக்கூடாது. பிற ஓவியர்களோடு கருத்துவேறுபாடின்றி பழகி, ஓவிங்கள் பற்றிய கருத்துக்களை பகிர்ந்துகொள்ளவேண்டும். எப்போதுமே பயிற்சியையும், கற்றலையும் நிறுத்துதல் கூடாது. அப்படியிருந்தால்தான் தொழில்முறை ஓவியராகவும் சிறக்கமுடியும்.

------


பகுதி ஒன்று, இரண்டு முந்தைய பதிவுகளில் கிடைக்கும்.

THE EVOLUTION OF ART BY CARICATURIST-02


சூரியக்கதிர் மாத இதழுக்கு நேர்காணல் கேள்விகளும், பதில்களும்
பகுதி 02

8. நீங்கள் விரும்பிய கேலிச் சித்திரம், அதை வரைந்தவர்கள் என 5 நபர்களைப் பற்றி குறிப்பிடுங்களேன்.

Jack Davis - இவரை ஏற்கனவே பார்த்தோம், தன் 90 வயதில்தான் “நான் இப்போதும் வரையமுடியும், ஆனால் நான் எதிர்பார்த்ததுபோல் இல்லை” என்று சொல்லியவர், தன் பென்சிலுக்கு ஓய்வு கொடுத்துள்ளார்.

Magesh - கேரளாவை சேர்ந்தவர் - வழக்கமான ஓவிய முறை, கணிணி வழியாக ஓவியம் வரவதிலும் தேர்ந்தவர். அனிமேசன் நிறுவனத்தில் தலைமை பணியில் இருக்கிறார்.

Tiago Hoisel - சாவ் பாலோ, பிரேசில் நாட்டை சேர்ந்தவர்- ஓவியராகவும், தலைமை வடிவியலாளராகவும்  பணியிலிருக்கிறார் 
https://www.behance.net/hoisel

Lumen - க்ரெச்னயா பெடரிய, ரஷ்யா நாட்டை சேர்ந்தவர் - ஓவியராகவும், தலைமை வடிவியலாளராகவும், கார்டூனிஸ்டாகவும் பணியிலிருக்கிறார்

Anthony Geoffroy - லியோன், பிரான்சு நாட்டை சேர்ந்தவர். ஓவியராக பணியிலிருக்கிறார்

-----

9. அரசியல்வாதிகள், கேலிச்சித்திரம் குறித்த சுவையான விஷயங்கள் ஏதும் உள்ளனவா?

அரசியல் விமர்சன கேலிசித்திரங்களில் பொதுவாகவே நான் பயந்தாங்கொள்ளி... வீட்டிற்கு ஆட்டோவருமே அதனால்தான். சில பத்திரிக்கைகளில் அப்படி கேட்டுக்கொண்டனர். ஆனால், பத்திரிக்கைகளில் பணிபுரிந்தால் மட்டுமே “அப்படியான” ஓவியங்கள் தர இயலும் என்று சொல்லி தவிர்த்துவிட்டேன்.

கேரிகேச்சர், கார்ட்டூன் இவைகளையெல்லாம் இயல்பான, நகைச்சுவையாக புரிந்துகொள்ளும் தன்மை வட்டத்தலைவரிலிந்து, நாட்டின் முதல்குடிமகன் வரை இல்லை எனலாம். அதனால் அந்த “அதீத முயற்சி” இதுவரை செயததில்லை, இனி செய்யவும் ஆர்வமில்லை.

அதைப்போலவே சினிமா புகழ் மனிதர்களையும் நான் வரைவதில்லை. ஆனாலும் ரசிகர்களின் வற்புறுத்தலுக்கும், எனக்குப்பிடித்த நபர்களையும் நான் வரைந்திருக்கிறேன். அப்படி, திரு. பாலுமகேந்திரா அவர்களை வரைந்து வெளியிட்டபோது, என் நண்பர் திரு. சுகா, அந்த ஓவியத்தை திரு. பாலுமகேந்திரா அவர்களிடம் அழகாக, பரிசாக மாற்றி சேர்ப்பித்துள்ளார். இந்த ஓவியம்வரைந்தவரை பாராட்டியே தீரவேண்டும் என்று திரு. பாலுமகேந்திரா சொல்ல, நான் அந்த நேரங்களில் சுகாவிடம் கைபேசி என் பகிர்ந்துகொள்ளாததால், திரு. பாலுமகேந்திராவின் பாராட்டை ஒரு வீடியோவாகவே பதிந்து எனக்குத்தந்தார். எதிர்பாராத இந்த மிகப்பெரும் பாராட்டால் மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன். என் ஓவியத்தின் மூலமாக தான் பெருமையடைவதாக திரு. பாலுமகேந்திரா சொல்லி வாழ்த்தினார். 

திரு ஏபிஜெ. அப்துல்கலாம், குடியரசு தலைவராக இருந்தநாட்களில், அவரின் ஓவியமும், கவிதையும் அனுப்பிவைத்ததற்கு, பாராட்டி கடிதம் அனுப்பினார். அதுபோலவே அமெரிக்க குடியரசு தலைவராக திரு. பில் கிளிண்டன் இருந்தநாட்களில், என் ஓவியத்தைபாராட்டி அவரின் பாராட்டுக்கடிதம் கிடைத்தது.  

----

10. உங்கள் கேலிச்சித்திர அனுபவத்தில் நீங்கள் ரசித்த சில அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

எதேனும் ஒரு நிகழ்ச்சியில், நேரடியாக நபர்களை கேரிகேச்சராக வரைந்துதரும்பொழுதுமட்டுமே அவர்களின் ரசனைகளை உடனுக்குடன் அறியமுடியும். அப்படி நிறைய உண்டு.

ஒரு திருமண நிகழ்வில் வரைகிறேன். அந்த திருமண சடங்கில் தலைமை புரோகிதர், தன் வேலைக்களுக்கு இடையில் என்னை கவனித்திருக்கிறார். சடங்கு முடிந்தவுடன் என் அருகில் நின்றுகொண்டு நான் வரைவதை பார்த்துக்கொண்டிருந்தார். பிறகு.. “ஆஹா. என்ன அற்புதமாக வரைகிறீர்கள்?!” என்று சொல்லியவாறே என் கைகளை தன் கைகளோடு இணைத்து குலுக்கி, என் கைகளுக்கு முத்தம் கொடுத்தார். “சரஸ்வதி குடியிருக்கா” என்று சொல்லிக்கொண்டார். அதோடு தன்னை வரையச்சொல்லி எதிரில் அமர்ந்தார். வரைந்து கொடுத்ததும், அவரின் சீடர்களோடு தன் ஓவியத்தை காட்டி சந்தோசத்தை பகிர்ந்துகொண்டு எனக்கு நூறு ரூபாய் அன்பளிப்பாக தந்தார். நான் இப்படியான நிகழ்வுகளில் இதைஎல்லாம் ஏற்றுக்கொள்வதில்லை. எனவே உங்கள் அன்புபோதும் என்றேன். மிகுந்த வற்புறுத்தலினாலும், விழாவிற்கு அழைத்தவரும் “இதெல்லாம் கொடுப்பிணை சார், வாங்கிக்கங்க” என்று சொன்னபிறகே பெற்றுக்கொண்டேன்.   

ஒரு இல்லத்தில் நிகழ்ந்த திருமண வரவேற்பு நிகழ்வில், குழந்தைகளுக்கு கேரிகேச்சர் வரைந்து தந்துகொண்டிருந்தேன். எல்லோருமெ தன்னுடைய கேரிகேச்சரை கையில் வைத்துகொண்டு சிரித்து, கேலி, கிண்டல் செய்துகொண்டிருப்பதைகண்ட ஒரு பெண் (ஐம்பது வயதிற்கு மேலாக இருக்கலாம்) தயங்கியவாறே என்னிடம் வந்து எனக்கும் வரைந்து தருவீர்களா? என்று கேட்டார்... “இப்படிகேட்கவே தேவையில்லை, உடனே அமருங்கள்” என சொல்லி எதிரே அமரவைத்து கேரிகேச்சர் ஓவியம் தந்தேன். மிகுந்த மகிழ்ச்சியோடு வாங்கிச்சென்றார்.

ஒரு மருத்துவ கூட்டத்தில் வந்திருந்த மருத்துவர்களுக்கு, கேரிகேச்சர் வரைந்து தந்துகொண்டிருந்தேன். ஒரு மருத்துவர், விழா அமைப்பினர் வற்புறுத்தலுக்காக என் எதிர் அமர்ந்தார். என்னைப்போலவே முன் தலையில் அவருக்கு முடியில்லை, நீள் சதுர முகம், படர்ந்த மீசை, அடர்த்தியான புருவங்கள் இப்படி சில அடையாளங்களை கொண்டிருந்தார். இவரை உட்காரவைத்துவிட்டு அமைப்பாளர்கள் அடுத்த மருத்துவரிடம் பேசிக்கொண்ட்டிருக்க, நான் இவரை வரையும் முன்பே, “இயல்பாக இருங்கள், இது கேலிக்காக மட்டுமே வரையும் ஓவியம், இதிலிருக்கும் நகைச்சுவையை ரசியுங்கள்” என்று சொல்லிவிட்டு வரைய ஆரம்பித்தேன். முழுதும் வரைந்து அவரிடம் தந்ததும், ஓவியத்தைப்பார்த்து அவர் முகம் சுளித்ததை கண்டேன், அதோடு சட்டென எழுந்துவாறே அந்த ஓவியத்தை ஒரு கையால் நான் கவனிக்கமாட்டேன் என்ற நினைப்பில் “கசக்கி” தன் மறுகையில் மறைத்துக்கொண்டு போய்விட்டார். நிச்சயமாக அது அங்கே இருந்த குப்பைக்கூடைக்கு போயிருக்கலாம். 

-----

11. கேரிகேச்சரிஸ்ட் என்னும் சொல் நம் தமிழ் மக்களிடையே பரவலாகப் போய் சேர்ந்திருக்கிறதா?

கேரிகேச்சர், ஆர்டிஸ்ட் என்ற இணைப்பே கேரிகேச்சரிஸ்டாக வந்திருக்கின்றது. கார்டூன், கார்டூனிஸ்ட் என்ற நிலையில் இல்லாவிட்டாலும், இளையர்களிடம் கேரிகேச்சர் மிகுந்த ஆர்வத்தை ஏற்படித்தியிருக்கிறது. இந்திய அளவில் இப்போது இதை கற்க, வெளிப்படுத்த, சோதனை ஓவியங்கள் தர ஆரம்பித்திருக்கின்றனர். இதனால் இந்த கேரிகேச்சரிஸ்ட் என்னும் சொல்லும் பரவ ஆரம்பித்திருகிறது. மக்களுக்கு சுலபமாக சேர்க்கக்கூடிய நிலையிலிருக்கும் பத்திரிக்கைகள், வார இதழ்கள், தொலைக்காட்சிகள் கேரிகேச்சர் என்ற விசயத்தை சேர்த்துக்கொள்வதில்லை. ஒரே ஒரு இதழ் வாராவாரம் ஒரு கேரிகேசரை தந்து கொஞ்சம் தெரியப்படுத்திக்கொண்டிருக்கிறது. 

நான் என் நண்பர்களுக்கு அன்பளிப்பாக கேரிகேச்சர் வரைந்து அதை இணையத்தில் பகிவர்தன் மூலம், நண்பர், அவர்தம் நண்பர் என்று பலபேருக்கு “இந்த கேரிகேச்சர், கேரிகேச்சரிஸ்ட்” சென்று சேர்கிறது. பேஸ்புக், டிவீட்டர் மூலமாக பரவலாகிவருகிறது.

எதாவது ஒரு தமிழ்சினிமாவில், ஒரு கதாநாயகன், “கேரிகேச்சரிஸ்டாக” நடித்தால் தமிழ்நாடெங்கும் புகழ்பெற்ற சொல்லாகிவிடும் என்று நினைக்கிறேன். 

-----

13. இப்போது சட்டென்று உங்களை ஒரு கேலிச்சித்திரம் வரையச் சொன்னால், வரைவதற்கு எந்த ஆளுமையைத் தேர்ந்தெடுப்பீர்கள்

என்னையே உதாரணமாகக்கொண்டு வரைந்துவிடுவேன். நான் நடத்தும் பயிற்சி வகுப்புகளில் கூட நான்தான் எனக்கு பரிசோதனை எலி. பிறரை வரைந்தால் “இதென்ன இப்படி இருக்கு” “நானா இது?” “கொஞ்சம் இந்த மூக்கை திருத்துங்கள்” “கன்னம் ரொம்ப குண்டாயிருக்கு” “உதடு இன்னும் சிறுத்துவரவேண்டும்” என்று எனக்கு பாடம் சொல்ல ஆரம்பித்துவிடுவார்கள். 

-----

14. உங்கள் கேரிகேச்சர் ஓவியங்களில் மாற்றங்களை ஏற்றுக்கொள்வீர்களா? அப்போது உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?

நான் நிகழ்ச்சிகளில் நேரடியாக நபர்களை வரையும் கேரிகேச்சர்களில் திருத்தங்கள் சொன்னால் “இது அப்படித்தான் இருக்கும்” என்று சொல்லிவிடுவேன். அந்த திருத்தங்கள் சொல்பவருக்கு “கேரிகேச்சர்” பற்றிய விழிப்பு இல்லாதிருக்கும், அதுதான் உண்மை. சிலர் “எனக்கு இந்த கேலி வேண்டாம் சாதரணமாக வரைந்துதாருங்களேன்” என்று கேட்டால் அதுபடி  வரைந்துகொடுத்து அவர்களை திருப்திபடுத்துவேன். குறைசொல்லும் நிலையில் இதுவரையிலும் நான் கோபம் கொண்டதில்லை. “கேரிகேச்சர்”குறித்து விளக்கமளித்து, அது ஏன் இப்படி வரையப்படுகிறது என்று புரியவைப்பேன்.

ஒரு நண்பர் என்மீது மிகுந்த கோபத்தில் “ஒரு படைப்பை குறை சொல்லும் மனிதர்களோடு எதற்கு வேலை செய்வது? பணத்தை திருப்பி கொடுத்துவிடவேண்டியதுதானே. நான் அப்படித்தான், குறை சொன்னால் பொறுத்துக்கொள்ளமாட்டேன்” என்றார். ஆங்கிலத்தில், சில குறை சொல்லும் மனிதர்களை மற்றவர்கள் திருத்தும் நிலைக்கு, “அவனுக்கு கற்றுக்கொடுத்தேன்” என்பார்கள். அதுபோலவே தெரியாத ஒன்றை தெரியப்படுத்தி விளக்கமளித்தலும், சரி செய்தலும் நிச்சயம் வேண்டும்

தொழில்சார்ந்த கேரிகேச்சர்களிலும், இப்படி நடக்கும். பலமுறை திருத்தங்கள் கேட்டு பெறுவார்கள். இதனால் இந்த திருத்தங்களுக்கும் தனி விலை சேர்க்கும் நிலையும் இருக்கிறது. அவர்கள் பணம் கொடுத்துவாங்குவதால் அந்த திருத்தங்களை நாம் செய்யவேண்டியிருப்பது உண்மை. இத்தகைய திருத்தங்களால் ஓவியன் குறைபட்டுபோவதில்லை மாறாக அனுபவமே பெறுகிறான்.

-----

15. இப்போதும் கேலிச்சித்திரம் வரையக் கற்றுக்கொள்ளும் விருப்பில் மக்கள் இருக்கின்றனரா? கேலிச் சித்திரம் வரையக் கற்றுக்கொள்ள விரும்புபவர்கள் என்ன செய்ய வேண்டும்? யாரைப் பார்க்க வேண்டும்? நீங்கள் வகுப்பு எடுக்கிறீர்களா?

குழந்தை பருவத்தில் எல்லா குழந்தைகளும் ஓவியம் வரைய ஆர்வமாகவே இருக்கிறார்கள். “இனிமே படம் வரைஞ்சே, கையை ஒடைச்சிபோடுவேன்”என்ற அம்மாவின் பயமுறுத்தலால், அந்த குழந்தை பென்சிலே எடுப்பதில்லை. ஸ்கேல்வைத்து கோடுகள் போடுவதை தவிர. அந்த கோடு போடவே, ஓவியம் கற்கலாம் என்பதும், ஸ்கேல் இல்லாமல் நேரான கோடுபோடும் அறிவை அதுதரும் என்பது அம்மாவிற்கு தெரிவதில்லை. காரணம், அவங்க அம்மாவும் அவங்களை அப்படித்தான் சொல்லியிருப்பார்கள். ஓவியம் படிப்பை கெடுப்பதாக ஒரு நினைப்பு அவர்களுக்கு. இதனாலேயே தனக்குப்பிடித்த விசயத்தைசெய்யவே குழந்தைகள் தயங்குகிறார்கள். காலப்போக்கில் தன் குழந்தை தவிர்த்துவிட்ட ஒன்றை, பள்ளியில் தரப்படும் ஓவியத்தை, தன் பிள்ளை ஒழுங்காகசெய்யவில்லையெ என்று கவலை கொண்டு, ஒரேநாளில் ஓவியம் கற்க, எங்களை மாதிரி ஓவியர்களிடம் அழைத்துவருகின்றனர். 

இந்தவயதிலும் நான், சக ஓவியர்களில் படைப்புக்களிலிருந்து ஓவியம் கற்றுத்கொண்டுதான் வருகிறேன். இப்படி இருக்கையில் உடனெ ஓவியம் கற்றுக்கொள்ளுதல் முடியாத ஒன்று. பள்ளி மேல்நிலை இறுதிமுடித்தவர்கள். சென்னை, கும்பகோணம் ஓவிய கல்லூரியில் சேர்ந்து படிக்கலாம். இதில் ஆராய்ச்சி பட்டபடிப்புவரை செல்லமுடியும். ஆனால் இதற்கு அவர்கள் நடத்தும் ஓவிய பரிட்சையில் தகுதி பெறவேண்டும்.

கேரிகேசர், கார்டூன் போன்ற கேலிசித்திர வகுப்புகள் தனியாக நடத்தப்படுவாதாக தெரியவில்லை. ஆனால் ஒருநாள், இரு நாள் பயிற்சி முகாம் நடத்தப்படுகின்றன. ஓரளவுக்கு ஓவியம் படைக்கத்தெரிந்தவர்களே இதில் கலந்துகொண்டு பயன்பெற முடியும். ஆனால் கேலிசித்திரம் குறித்த ஒரு அறிமுகத்திற்கு இது உதவும்.

நான் என் அலுவலகத்தில் அடிப்படை ஓவியங்கள் முதல் வண்ணக்கலவை ஓவியங்களை வரை கற்றுத்தருகிறோம். கூடுதலாக ஆர்கிடெக்ட் படிக்கதேவையான தகுதி தேர்வுக்கான (NATA) வழிமுறைகளும் கற்றுத்தருகிறோம்.

ஓவியம் கற்க மட்டுமல்ல. அதுதொடர்பான கேள்விகளுக்கும் பதில்தர என்னை யாவரும் தொடர்புகொள்ளலாம்.

-----

16. இந்த ஓவியவகை கற்றலில் அடுத்த நிலை என்ன?

கேரிகேச்சர் கற்றலில் சில அடிப்படை விசயங்கள் உள்ளன. ஏறக்குறைய அடிப்படை ஓவியம் கற்றலின் அதே பாடங்களே இதற்கும் போதும். ஆனால் அதை வெளிப்படுத்தும் நிலையில் மட்டுமே மாற்றம் கொண்டிருக்கிறது. இதை ஓவியமாக செய்யும் அதேவேளையில் தனக்குக்கிடைத்த ஓவ்வொரு முகங்களையும் வரைந்து பழகி, உதாரணமாக ஒரே முகத்தை ஒரு பத்துவிதமாக, என்னென்ன செய்தால் என்னென்ன மாற்றங்களை அந்த முகம் தருகிறது என்கிற முயற்சியில் ஈடுபட்டு அனுபவம் பெறவேண்டும். பிறர் கேரிகேச்சர் ஓவியங்களை கண்டும், அதில் அவர் தருகிற விசயங்களை பழகவேண்டும், ஒருபோதும் அதேபோல செய்யாது, தன் அனுபவத்தை அதில் தர வேண்டும். கற்றல் எல்லையில்லாதது.

பகுதி ஒன்று முந்தைய பதிவிலும், மூன்றும் அடுத்த பதிவுகளில் கிடைக்கும்.

THE EVOLUTION OF ART BY CARICATURIST-01


கடந்த நவம்பர் மாதம் 2015ல், சூரியகதிர் மாத இதழில் வெளியான எனது பேட்டியை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்... இதில் பிரசுரமாகாத சில கேள்வி-பதில்களும் இணைந்திருக்கின்றன.

சூரிய கதிர் இதழ் ஆசிரியருக்கும், கேள்விகளால் எனக்குள் என்னைத்தேடச்செய்து பதில்களை தரச்செய்த கவிஞர், எழுத்தாளர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர் திருமதி. மதுமிதா அவர்களுக்கும் நன்றி.

சூரியக்கதிர் மாத இதழுக்கு நேர்காணல் கேள்விகளும், பதில்களும்
பகுதி 01

1. ஓவியம் வரைதல் என்பதை எந்த வயதில் ஆரம்பித்தீர்கள்? நீங்கள் வரைந்த முதல் ஓவியம் உங்களுக்கு நினைவிருக்கிறதா? 

என் ஆறுவயதுகளில் யானை வரைந்தது நினைவில் நிலைத்திருக்கிறது என்பதால், அதற்கு முன்பே கூட வரைய முயற்சித்திருக்க வாய்ப்புள்ளது. என் தந்தை பொழுதுபோக்காக சில ஓவியங்கள் வரைவதை கண்டு இந்த ஆர்வம் வந்திருக்கலாம். காலப்போக்கில், ஒவியத்தில் நான் ஆர்வமாயிருந்ததைக்கண்டு, எந்ததடையும் செய்யாது, அவரே சில திருத்தங்கள் சொல்லித்தந்ததும் உண்டு. ஆனாலும் நான் தனித்து நிற்க முயற்சித்த காலங்களிலேயே அவர் இல்லை.

நான் என் இளமைக்காலம் முதலே மிகச்சுதந்திரமாக உணர்ந்தேன். என் ஒரு சகோதரிகள். என் சகோதர் என்னை எந்த விதத்திலும் கட்டுப்படுத்தியது இல்லை. இதனால் என் எல்லா ஆர்வங்களுக்கும் நல்ல தீனி கிடைத்தது... ஓவியத்தில் ஒரு முழுமை கிடைக்க உதவியது.

-----

2. சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் என்னும் பழமொழிப்படி, ஆர்வம் இல்லையென்றாலும் வரைய வரைய தான் சித்திரம் வருமா, வரையும் ஆர்வம் இருந்தாலே தானாக ஓவியம் வரைய வந்துவிடுமா?

நாம் எந்த மொழியிலும் எழுதுகிற எழுத்துக்கெல்லாம் ஓவியமே ஆதாரம். அந்த ஓவியத்தின் இன்னொரு பரிணாமம் தான் எழுத்தாக உருமாறியிருக்கிறது. இன்னமும் சீன, பாரசீக, ஜப்பான எழுத்துக்களில் வினைச்சொல்லுக்கு ஆதாரமாக எழுத்துருவை காணமுடியும். ஆக நன்றாக எழுதுபவரே கூட ஓவியம் வரையவும் முடியும். நாம் பொதுவாகவே மிக தெளிவாக, கசங்களில்லாத, உயிர்ப்பாக வரைவதுதான் ஓவியம் என்ற முடிவுக்கு வருகிறோம். அப்படியில்லவே இல்லை. ஒரு ஓவியத்திற்கான வரையறை எதுவுமே கிடையாது. குழந்தையின் கிறுக்கலும் ஓவியமே. அந்த கிறுக்கல் உருவமாக மாற்றமடைவது பயிற்சியினால் கிடைக்கும். அந்த பயிற்சி ஆர்வமிருந்தால் மட்டுமே கிடைக்கும்.

சில கலைகள் சொல்லிக்கொடுக்காமல் வரும், அதில் ஓவியம் முதன்மையானது. தானாக கற்று, தனித்து நின்று ஓவியராக வெளிப்படுவர்கள் அதிகம். நானும்கூட அதில் ஒருவனே...

பிக்காசோ சொன்னது போல, பிறக்கும் நிலையில் எல்லோருக்குள்ளும் ஓவியனிருக்கிறான், ஆனால் தன்னை ஓவியனாக நிலை நிறுத்துவது தொடர்ந்த பயிற்சிகளால் மட்டுமே.

-----

3. ஓவியத்தின் வகைகளில் இயற்கை, பூக்கள், விலங்குகள், மனிதர்கள்  என சித்திரம் தீட்ட எத்தனையோ பிரிவுகள் இருக்கையில்,  ஒரு ஓவியருக்கு ஒரு பிரிவைத் தேர்ந்தெடுக்கத் தோன்றுவது அவரின் ஆர்வம், விருப்பம் சார்ந்த விஷயம் மட்டுமா? அல்லது இயற்கை பிறவியில் அவருக்கு அளித்த கொடையாக அதைப் பார்க்க வேண்டுமா?

ஓவியம், அடிப்படை ஓவியம், காண்பதை அப்படியே வரைதல், தன் அனுபவத்தை அதி ல் சேர்த்தல், கருப்பொருளாக வரைதல், மனதில் தோன்றும் உணர்வுகளின் அடிப்படையில் வரைதல் இப்படி பல பிரிவுகளில் ஒருவர் கற்றுத்தேரவேண்டிவரும். அந்தந்த வயது, அனுபவம், சொல்லித்தரும் ஓவிய ஆசிரியர் இப்படியும் அவர்களின் ஆர்வம் தூண்டப்படும், தன் ஓவிய வெளிப்பாடுகளில், எளிதான, வேகமான, தெளிவான கருத்தை சொல்லும் ஓவியங்களை வகைப்படுத்தி, இது எனக்கு நன்றாக செய்ய முடிகிறது என்ற நிலையிலேயே தன் பாணியை தேர்ந்தெடுக்கின்றனர்.

உலகின் பொருளாதார நிலையில் ஓவியன் நிலைமை, கொஞ்சம் கடினமானதே. இதனாலும் தான் நினைத்ததை, தனக்கு தன் பிழைப்புக்கு உதவும் வகையிலும் பாணியை தயார்படுத்திக்கொள்கின்றனர். நான் கேரிகேச்சர் எடுத்துக்கொண்டதற்கு, இதை யாரும் அதிகமாக இங்கே இந்தியாவில் செய்யாததும், எனக்கு இது சுலபமாக கைவரப்பெற்றதும் காரணமாகும். பொழுதுபோக்காக செய்ய ஆரம்பித்தது என் வயிற்றுபாட்டுக்கு உதவும் நிலைக்கு உயர்ந்தது. இன்று இந்த கேரிகேச்சர் ஓவியத்தொழிலே என் முழு நேர பணியாகும்.

இயற்கையாகவும் குறிப்பிட்ட சிலவகை பாணியை கொண்ட ஓவியர்களும் உள்ளனர். இது அவர்களின் மூதாதையரின் ஆர்வத்தால், அவர்களுக்குள் விளைந்த நிலையாகும்.

-----

4. சித்திரம் தீட்டுதல் என்பது பல பிரிவுகளைக் கொண்டதாக இருக்கையில் நீங்கள் கேலிச் சித்திரம் வரைவதை எப்படி ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்?

2006 ம் ஆண்டு வரை, பார்ப்பதை அப்படியே வரைவதையே செய்துவந்தேன். கிடைக்கும் காகிதத்தில் வரைந்து நண்பர்களிடம் காட்டி பெருமைசெய்துகொள்வதைத்தவிர ஏதும் செய்ததில்லை. சிலருக்கு அன்பளிப்பாக அந்த ஓவியங்களை தந்துவிடுவதும் உண்டு, ஓவிய சந்தை இருப்பது தெரிந்தாலும் அதில் நுழைய சில தயக்கங்கள் இருந்தது. இதனால் எனக்கு கிடைத்த கணிணி வரைகலை மட்டுமே ஆரம்ப நாட்களில் தொழிலாக செய்துவந்தேன்.

ஆனாலும் வேலைகளோடு 2001ம் ஆண்டுமுதலே இணையம் எனக்கு அறிமுகமாகி, 2003ம் ஆண்டுகளில் இணையத்தில் அதிக நேரம்  வேலையோடு வேலையாக செலவிட வாய்ப்பு வந்தது. மேற்கு நாடுகள் எப்போதும் நம்மை விட எந்த நிலைகளிலும் ஒரிரு ஆண்டுகள் முன்னிலையிலேயே இருப்பார்கள். அப்படி காண்கையில் கார்டூன் போல், ஆனால் வித்தியாசமாக, ஒரு மனிதரின் அடையாளங்களை மாற்றாது, கொஞ்சம் மிகைப்படுத்தி, கேலியை மையமாகக்கொண்ட ஒரு ஓவியத்தை ஆங்கில இணைய பத்திரிக்கைகளில் காணமுடிந்தது. அதன் கேலி எனக்கு பிடித்திருந்தது.

எப்போதும் ஒரு வித்தியாசமே, புதிய கவனத்தை உருவாக்கும். அதனால் அந்த கேரிகேச்சரை எப்படி செய்திருக்கிறார்கள் என்று ஆராயமுனைந்தேன். மேலும், மேலும் இந்த கேரிகேச்சர் குறித்து பார்த்தும், அதைப்போல வரைந்தும் சோதனை செய்துகொண்டேன். என் ஆரம்பகால கேரிகேச்சர்களில், நானே சில சோதனைகள் செய்து பார்த்துக்கொள்வேன். அதில் விகாரம் அதிகமாக இருப்பதை காணலாம், பற்கள் வரிசை, உதடுகள், காதுகள், மூக்கு, கண்கள் பெரிதாக வரைந்து தள்ளினேன்.

ஆனால் ஒரு ஒளிப்படம் எடுத்தாலே “இது என்னை மாதிரி இல்லை” என்று புறந்தள்ளும் “ஓவிய ஆர்வலர்கள்” மத்தியில் இது எடுபடாது என்பதை நான் உணர்ந்து,  கேலி செய்தாலும், அவர்களுக்கு பிடிக்கும் வகையில், அவர்களை சற்றே மிகைபடுத்தும் நிலைக்கு பழகி அதுவே என் பாணியாக வைத்து பயணிக்கிறேன். சந்தைப்படுத்துகிறேன்.

-----

5. தன்னைப் போன்ற அழகான ஓவியத்தை விரும்பும் மக்கள், போட்டோ எடுப்பதை விடவும் ஓவியம் வரைந்து பெற்றுக் கொள்வதில் ஆர்வமாகவும், தன்னுடைய அழகிய முகத்தை கேலிச்சித்திரமாக மாற்றிப் பார்ப்பதில் விருப்புடன் இருக்கிறார்களா?

வழக்கமாக நான் சொல்வதுண்டு, “எல்லோருக்கும் கேரிகேச்சர் ரொம்ப பிடிக்கும், அதில் தன் முகம் இல்லையென்றால் மட்டும்”.

முந்தைய பதிலில் சொன்னதுபோல, ஓவ்வொருவிதமான ஒளியில், ஓவ்வொருவிதமான பிண்ணனியில், வெவ்வேறு வகை லென்சுகளில் எடுக்கும் ஒளிப்படங்களில், நிச்சயமாகவே ஒருவரின் முகம் வெவ்வேறு தோற்றத்தில் இருக்கும். சப்ஜெக்ட், கேமரா, கேமராமென் என்ற பினைப்பு இருப்பதால் இது நான்தான் என்று வேறு வழியில்லாமல் ஏற்றுக்கொள்வார். சில திருமண போட்டோ ஆல்பம் பார்த்துவிட்டு, போட்டோகிராபரை ஏசும், அடிக்கக்கூட வரும் முட்டாள் கூட்டங்கள் உண்டு. அப்படி இருக்கையில் கையால் வரையும் ஓவியத்தை குறை சொல்லாமல் வாங்குபவர் பத்துக்கு ஐவர் என்று சொல்லலாம்.

ஒரு கண்காட்சியில் நான் நேரடியாக நபர்களை ஓவியம் வரைந்து கொண்டிருந்தேன். ஒரு பெண் வந்து, “சார், என்னை எவ்வளவு கிண்டல் செய்ய முடியுமோ அவ்வளவு கிண்டல் செய்து வரைந்துகொடுங்கள்” என்றார்... வரைந்துமுடித்ததும் “வாவ்” என்று சந்தோச கூச்சலிட்டு மகிழ்ச்சியோடு விடைபெற்றார். இந்த அளவுக்கு ஆர்வமாக இருப்பவரும் உண்டு. இந்த சந்தோசத்தைப்பார்த்த என் நண்பர்... “நானும் உங்களைப்போல ஓவியம் கற்று. இப்படி மக்களை சந்தோசப்படச்செய்யவேண்டும், கற்றுக்கொடுங்கள்” என்றார்...

-----

6. மக்களிடையே கேலிச்சித்திரத்துக்கான வரவேற்பு எப்படி இருக்கிறது?

பத்தாண்டுகளுக்கு மேலான என் பயணத்தில், கேரிகேச்சருக்கான நிலை அற்புதமாக இருக்கிறது... இது இன்னும் சிறக்கும். இந்த ஓவியங்களில் ஒவ்வொரு ஓவியருக்கும் ஒரு பாணியை கொண்டிருப்பதால் எது சிறந்தது என்று கூற இயலாது. தன்னால் முடிந்த சிறப்பை அந்த ஓவியத்தில் அளிக்கிறார்கள் என்பதே உண்மை. வாடிக்கையாளார்களுக்கு எது, எந்தவகையான பாணி பிடிக்கும் என்பதை பொறுத்து ஓவியர்களுக்கு வரவேற்பு கிடைக்கும். இந்த ஓவியங்களில் ஓவியத்திற்கான ஓவியரின் அனுபவம் மட்டுமே உயர்வாக இருக்கும். இதனால் அப்படியான ஓவியர்களின் ஓவியத்திற்கு தனித்த விலை இருக்கும். அந்தவிலை மிகசாதாரணருக்கு கடினமாக இருக்கும். இதனால் நகர்புறங்களில் மட்டுமே இது சிறப்பாகிறது,

ஆனாலும் இதன் கேலித்தன்மை எல்லோரையும் கவர்வதால் “எப்படியாயினும்” எங்களுக்கு இதுபோல ஓவியம் வேண்டும் என்று விரும்பி கேட்டுக்கொள்பவர்களும் உண்டு. குறிப்பாக இளம் காதலர்கள், திருமணம் செய்யப்போகும் ஜோடிகள் தங்கள் திருமணத்திற்கு இத்தகைய கேரிகேச்சர்களை தங்கள் பத்திரிக்கைகளில் சேர்க்கவும், பெரிதாக தங்கள் இல்லங்களில் வைத்துக்கொள்ளவும் மிக ஆர்வமாக இருக்கின்றனர். என் ஆரம்ப காலங்களில் என் வாடிக்கையாளர்கள், கடல்கடந்த நாட்டிலிருந்து கிடைத்தனர். இப்பொதோ மிக அருகிலுள்ள நகரங்களில் இருந்தும் ஓவியங்கள் பெற்றுச்செல்கின்றனர்.

-----

7. கேலிச்சித்திரத்துக்கு உங்களுக்கு ஆதர்சமாக யாரைக் குறிப்பிடுவீர்கள்?

எல்லோருக்கும் அறிமுகமான லியானர்டோ டா வின்சி கேரிகேச்சருக்கு இணையான, சில விகாரமாக, இயல்புக்குமாறான தோற்றம் கொண்டவர்களை வரைந்திருப்பதான ஓவிய குறிப்புக்கள் இருக்கின்றன.

எனக்கு குறிப்பாக சொல்லவேண்டும் என்றால், அமேரிக்க நாட்டிலிருந்து வெளியாகும் MAD (https://en.wikipedia.org/wiki/Mad_(magazine)) எனும் நகைச்சுவை பத்திரிக்கையில் 1952 ல் ஓவிய ஆசிரியராக பணியாற்றிய ஜேக் டேவிஸ் (Jack Davis) (https://en.wikipedia.org/wiki/Jack_Davis_(cartoonist)) அவர்களை சொல்வேன். நான் அப்போதெல்லாம் பிறந்திருக்கவில்லையாதலால், தற்காலத்தில் இணையம் வழியாக அவரின் படைப்புக்களை கண்டே அறிந்துகொண்டேன். இவரின் பாணி இப்போதைய காலத்தை ஒத்திருப்பதை அறியலாம்.


மேலும் விட்டிகிராபி (wittygraphy), பிகேன்ஸ் (Behance) என்னும் இணையதளகளில் நிறைய தொழில்முறை கேரிகேச்சர்கள் தங்கள் படைப்புகளை தந்துகொண்டிருந்தனர். அவர்களின் படைப்புகளிலிருந்தும் நான் கற்றுகொண்டு என் பாணியை வெகு சீக்கிரமே கண்டறிந்தேன். முக்கியமாக கேரிகேச்சரின் வெளிப்பாடு அந்த கதாபாத்திரத்தின் முக்கிய அடையாளங்களை கொண்டுவருவதான கேரிகேச்சர்களில் நான் கவனம் செலுத்துவேன். அப்படிப்பார்த்தால், என் ஆர்வத்திற்கு ஈடு கொடுத்தவர்களாக நிறைய ஓவியர்களை சொல்ல இயலும்...


பகுதி இரண்டும், மூன்றும் அடுத்த பதிவுகளில் கிடைக்கும்.



The Evolution of Art by Caricaturist


Past November 2015,
The Suryakathir, monthly magazine published my interview. I am happy to share with you this interview pages. Thanks to Suryakathir Editor and team and My friend Poet, Writer. Ms.Madhumitha, who bring out the answers from me (by my inner search)

Page 01 - Click image for see bigger

Page 03 - Click image for see bigger
Page 03 - Click image for see bigger

Caricaturist Sugumarje Interview


On past Friday, 02nd October 2015...
The New Indian Express made my Great! My interview published on "City Express" Trichy City Edition...

Click image - view bigger - easy to read


I am happy sharing with all. Thanks for supporters and Friends. I also thanks to my Parents,  Sisters, Brother and my wife. Sure they are superb supporter to me for reach this level.

You can read on this epaper too

http://epaper.newindianexpress.com/603004/The-New-Indian-Express-Tiruchy/02.10.2015#page/17/1

My Hearty Thanks to Reporter and Photographer at The New Indian Express Newspaper.

Caricature for Gift


Caricature for Birthday Gift

This one is done  for New Style -
Caricature with Real Photos on a Background...  Really it look nice!

If you need "Caricature" like this?
Make call +91 9442783450 or
Whatsapp me: +91 9442783450 or
Mail to: caricaturelives@gmail.com


Visit: www.caricaturelives.com


Caricature service for all


Nowadays, I am available on 16 hours per day for my clients via Caricaturelives. Yes.. it helps to make a wonderful caricature on clients satisfaction.
Images based on free Stock
Now everyone loves Caricature, but no one ready to see their exaggerated face... so most of client needs Portrait type face and tiny body or cartoon type body.

On my Caricaturelives, gives perfect style face and bodies with world standard style and format. Caricaturelives never use template on orders. Each one client's order is created with individual style. theme, concept and dress-codes. Caricaturelives ready to do new type with client's interest.

Caricaturelives has own website... www.caricaturelives.com
Most of search engines listed and helps to reach my website directly. This site is build with clear details, rate and samples also. Someone says... "Your website has great story" Yeah... lot of details on there. Caricaturelives not believe on fluorescent words!

And Why I am available on 16 hours? Every client takes attention on their caricature. They want best result... so I give a updates, "what is going on?" via sms, whatsapp, facebook messenger and emails. Smart-phones works well on this section...

Whatsapp is now mostly used by all. easy to share our notes, images and video too. (Recorded voice service available)

My clients send their photos, concept detail etc via whatsapp. And I reply as same as by their sketch and updates. Original Master Digital document will be send via email or cloud storage only.

I try to give my best service to my clients. So get connect with me by name of Caricaturelives on...

Mobile: +91 9442783450
Whatsapp: +91 9442783450
Hike: +91 9442783450
BBMme: 7E2333AE

and
Blog: caricaturist-journal.blogspot.com
Facebook: Facebook.com/Caricaturelives
Twitter: twitter.com/Caricatuelives

Live Caricature at Trichy


Presented Live Caricature for Dr, Reddys Lab, Hyderabad at Hotel Sangam, Trichy...

Some Picture Updates

















Need Live Caricature?
Register on 3 days before on Event!
call: 91 944278 3450
Whatsapp: 91 9442783450
email: caricaturelives@gmail.com

visit: www.caricaturelives.com