Home » Posts filed under night
Why getting sleeping disorder and dreaming on everyday? Any solution?
September 26, 2023 Sugumarje
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, அடிக்கடி கனவுத்தொல்லை இருக்கிறது. தூக்கமும் இல்லை. இதற்கான காரணம் என்ன?
பதில்:
உங்கள் வாழ்வில் நீங்கள் அதிகம் உணர்ச்சி வசப்படுபவராக இருக்கிறீர்கள். மேலும் ஏதெனும் நடந்துவிடுமோ என்ற பயமும், அதனோடு கூடிய சிந்தனைக் குழப்பங்களும் உங்களுக்கு இருக்கிறது என்றும் உறுதியாக சொல்லலாம். உங்களில் செயலில் நீங்கள் சரியாக இருந்தால் ஏன் பயம் வருகிறது? எனவே உங்களுடைய எந்த செயலிலும் கவனமாக, சரியாக செய்கிறேனா? என்று கவனியுங்கள். அல்லது திட்டமிட்டு அந்த செயலை செய்யுங்கள். பேசும்பொழுதும் கூட அப்படி கவனிக்க வேண்டும். ஏதோ தோன்றியது சொல்லிவிட்டேன் என்று பேசிவிடக்கூடாது. இதனால் நீங்களும் வருத்தப்படுவீர்கள், எதிராளும் வருத்தப்படுவார். அதுவே உங்களை குழப்புகிறது.
இந்த குழப்பங்கள், பயம், சிந்தனை தடுமாற்றம் எல்லாமே உங்கள் அடிமனதில் மிகத்தெளிவாக பதிந்துவிடும். நீங்கள் தூக்கத்தில் இருக்கும் பொழுது, புறமனம் இயங்காத நிலையில், அடிமனம் விழித்துக்கொள்கிறது. அதுதான் இப்படியெல்லாம் செய்தாய், இப்படி விளைவு வந்தது என்றெல்லாம் எடுத்துக்காட்டும். பிறர் இப்படி செய்தார்கள் என்றும் சொல்லிக்காட்டும். இனிமேல் இந்தமாதிரி செய்யலாமே என்று உங்களுக்கு பாடமும் நடத்தும்.
உங்கள் கனவில், எக்காலத்திற்கும் பொருந்துவதாகவே காட்சிகள் அமையும். அடிமனம் விழித்துக்கொண்டால் உங்களுக்கு தூக்கமும் தடைபடும். ஆழ்ந்த தூக்கம் கிடைக்காது. எவ்வளவு நேரம் தூங்கினாலும், தூக்கக் கலக்கமும், உடல்சோர்வும் இருக்கும். முக்கியமாக மனதில் நிம்மதி உணர முடியாது. இதனால், அன்றைய புதிய நாளும் கெட்டுப்போக வாய்ப்பு அதிகமாகிவிடும்.
நீங்கள் வேதாத்திரிய யோகம் கற்றவரானால், இரவில் தூக்கமின்மையும், கனவுகளும் வந்து தொல்லை தருமானால், சாந்தி தவம் செய்துவிட்டு பிறகு தூங்கப்பழகுங்கள். ஒரு மூன்று நாள் இரவில் தவம் செய்துவந்தால் மாற்றம் கிடைக்கும். உங்கள் செயலில், சிந்தனையில், பேச்சில் கவனமாக இருந்து, நல்லதை பேசுவேன், நல்லதை செய்வேன் என்று உறுதிபட இருங்கள். பிறர் மனவருத்தம் பட ஏதும் செய்யாது தவிர்த்துப் பழகுங்கள். இந்த பழக்கத்தை தினமும் கடைபிடித்தால், கனவுத்தொல்லையில் இருந்தும், தூக்கமின்மையில் இருந்தும் மீண்டுவிடலாம்! மேலும் மனவருத்தம் தரும் சினிமா, தொலைகாட்சி, கைபேசி காட்சி பார்க்காதீர்கள். அதுவும் காரணமாக அமைந்திருக்கும் என்பதே உண்மை!
வாழ்க வளமுடன்.
action / avoid / depression / disorder / do and get / dreaming / everyday / getting / good for all / mind / night / sleeping / sleepy / solution / subconscious / thinking / thoughts / tired / virtues / words
Why advised to avoid the meditation practice at night times?
September 06, 2023 Sugumarje
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, இரவில் தவம் செய்வதை ஏதற்காக தவிர்க்கச் சொல்லுகிறார்கள்?!
பதில்:
இரவில் தவம் செய்யக்கூடாது என்பதல்ல. செய்யலாம். ஆனால் அதற்கு நன்கு ஏற்கனவே பழக்கப்பட்டிருக்க வேண்டியது அவசியமாகும். குறைந்தது 12 மாதங்களாவது தொடர்ந்து, நாள் தோறும் தவம் செய்து பழகியிருந்தால், இரவில் தவம் செய்வதில் எந்தப் பிரச்சனையும் இருக்கப் போவதில்லை. ஆனால், தவம் கற்ற ஆரம்ப நிலை சாதகர்கள், இரவில் தவம் செய்வதை தவிர்க்க வேண்டும். முக்கியமாக எல்லோருமே, அதாவது எந்த நிலையில் தவம் கற்றோரும் கூட, உச்ச தவமான துரியாதீத தவத்தை இரவில் செய்யக்கூடாது என்பது பொதுவான விதி என்று சொல்லலாம். அதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. அதை விளக்கமாக சொல்லி உங்கள் மனதை குழப்பமடையச் செய்ய எனக்கு ஆர்வமில்லை. தவிர்த்துவிடலாம் என்றால் அதை அப்படியே ஏற்றுக்கொள்வது சரியானதுதான். இல்லை நான் முயற்சிப்பேன் என்றால், அது உங்கள் சமர்த்துதான்.
சரி, ஏன் இரவில் தவம் தவிர்க்கப்பட வேண்டும்? என்று கேட்பீர்களானால், முதலில் தவம் என்பது என்ன? என்ற கேள்விக்கான விடையை பெற வேண்டும். நீங்கள் உங்களுடைய மனதை ஒரு நிலையில் குவித்து தவம் செய்கிறீர்கள். அந்த நேரத்தில் உங்கள் கவனம் அதில் மட்டுமேதான் இருக்கும். உங்கள் சூழல் குறித்த எந்த ஒரு கவனமும் அங்கே இருக்காது. ஆரம்பத்தில் இருக்கும் என்றாலும் போகப்போக கவனம் தவத்தில் மட்டுமே இருக்கும்.
இரவு என்பது இருட்டானதுதானே ஓய்வானதுதானே என்பீர்கள்! அது யாருக்கு? இரவு சில உயிரிங்களுக்கு இயக்கமும் கொடுக்கும். பூச்சிகள், வண்டுகள், எலிகள், பல்லிகள், பாம்புகள் இப்படி பல உண்டு. அந்தநேரத்தில், தீடீரென்று எற்படும் வெளிச்சம் கூட உங்களை பாதிக்கும், யாராவது கதவை தட்டினால் கூட பாதிக்கும். இப்படி பல பிரச்சனைகள் எழ வாய்ப்பு உண்டுதானே?!
என்னதான் பாதுகாப்பு என்றாலும் கூட, ஒரு கொசு போதுமே உங்கள் தவத்தை கெடுக்க?! இதனால் மனமொன்றிய நிலையில் ஏற்படும் பிரச்சனைகளால், மனதின் இயல்பு பாதிப்படையும், அதனால் உடலும் கெடும், செய்கிற தவமும் கெடும். அதன்வழியாக உங்கள் தூக்கமும் கெடும். மறுநாள் அலுவல்களும் கெடும் அல்லவா?! எனவே இதையெல்லாம் கவனத்தில் கொண்டு இரவில் தவம் செய்வது குறித்து சிந்தித்துப் பாருங்கள். தேவைப்பட்டால், சாந்திதவம் மட்டும் செய்யலாம். ஏனென்றால் அதில் மனமும், உடலும் அமைதியை நோக்கித்தான் செல்கிறது!
வாழ்க வளமுடன்.
avoid / body / concentration / depression / flood light / insects / lizard / meditation / mind / mosquito / night / noise / practice / problem / rats / reject / senses / snake / sound / thavam


