CJ for You: sound

sound

Showing posts with label sound. Show all posts
Showing posts with label sound. Show all posts

Not speak is silence, isn't it? What's the big deal about that? And is it possible not to speak in this world? Some men, saints and gurus are silent. Is that really silence too? Explain


வாழ்க வளமுடன் ஐயா, வாய்பேசாமல் இருந்தாலே மௌனம் தானே? அதில் என்ன பெரிய விசயம் இருக்கிறது? மேலும் இந்த உலகில் பேசாமல் இருக்கமுடியுமா? சில மனிதர்கள், சாமியார்கள், ஞானிகள் பேசாமல் இருக்கிறார்களே? அதும் மௌனமா? விளக்கம் தருக.

உங்கள் ஆர்வத்தை வரவேற்கிறேன். மௌனம் இறைவனின் மொழி என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? இந்த பிரபஞ்சம் முழுவதுமே அப்படியான மௌனம் நிரம்பி இருக்கிறது. நமக்குள்ளும் அப்படியான மௌனம் இருந்தது. இருக்கிறது. ஆம், நாம் தாயின் கருவறையில் இருக்கும் பொழுது அப்படித்தான் இருந்தோம். பிறந்த பிறகுதான் அந்த மௌனத்தை கலைத்தோம். இன்றுவரை, இப்போது வரை அந்த மௌனத்தை கடைபிடிக்கவில்லை என்றும் சொல்லலாம் தானே?

மௌனம் யோகத்தில் மிக சிறப்பானது. எனினும் வாய்மூடி பேசாமல் இருப்பதற்கும், மௌனமாக இருப்பதற்கும் மிகப்பெரிய வித்தியாசம் உண்டு. இந்த வித்தியாசத்தை தொலைத்துவிட்டுத்தான், பெரும்பாலோர் மௌனம் இருக்கிறேன் என்று சொல்லிக் கொள்கின்றனர். 

        யாராவது எதாவது கேட்பார்கள், நாம் எதையாவது சொல்லி மாட்டிக் கொள்வோம் என்பதற்காகவே, மற்றவர்களோடு பேசுவதை தவிர்த்து, மௌன நாடகம் நடிப்பவர்களும் இந்த உலகில் உண்டு. அப்படி தோற்றம் தருகின்ற பல்லாயிரக்கணக்கான குருமார்கள், ஞானிகள், சாமியார்கள் என்ற ‘அடைமொழிக்குள்’ அவர்கள் இருக்கிறார்கள். நீங்கள் எளிதில் அவரை அடையாளம் கண்டு, அவரிடம் இருந்து ஒதுங்கி விலகி, ஏமாறாமல் உங்களை காத்துக்கொள்ளலாம்.

சிக்கல் என்ன என்றால், யார் வாய்மூடி இருக்கிறார்கள், மௌனமாக இருக்கிறார்கள் என்று உடனடியாக அறிந்துகொள்ள முடியாது. ஆனால், சிறிது நேரம், அவரின் அருகே இருந்து கவனித்தால், அவர் உண்மையாகவே மௌனத்தில் இருக்கிறாரா? வாய்மூடி இருக்கிறாரா? என்பதை அறிந்துவிடலாம்.

எப்படி? இதற்கான விளக்கத்தை இந்த காணொளி வழியாக தெரிந்து கொள்ளலாம். மேலும், உங்கள் கேள்விக்கான உண்மையும் இந்த காணொளியில் கிடைக்கும்.

நாம் பேசாமல் இருந்தால் இறைவன் பேசுகிறானா? மௌனம் உண்மைவிளக்கம் அறிவோமா?#silence #divine

வாழ்க வளமுடன்

What kinds of benefit will rise when we greets someone?


மற்றவர்களை வாழ்த்தும் பொழுது என்ன விதமான நன்மைகள் ஏற்படுகின்றன? 

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, மற்றவர்களை வாழ்த்தும் பொழுது என்ன விதமான நன்மைகள் ஏற்படுகின்றன? 


வேதாத்திரி மகரிஷி அவர்களின் பதில்:

யாரும் யாரையும் எளிதில் வாழ்த்திவிட மாட்டார்கள். அதற்கென்று ஒரு நிறைவான மனமும், சூழ்நிலையும் அமையவேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். மேலும் ஏதேனும் ஒருவகையில் இரண்டுபேருக்குமான நன்மையும் இருக்க வேண்டும், கிடைத்திருக்க வேண்டும் என்றும் நினைப்பார்கள். அப்போதுதான் அவரை / பிறரை வாழ்த்த முடியும் என்று முடிவும் செய்திருப்பார்கள். ஆனால் நிஜத்தில் அப்படியா கணக்கு போட்டுக் கொண்டு வாழ்த்த வேண்டியதில்லை. 

மனதின் நுண்ணிய நிலையிலே நாம் வாழ்த்துக் கூறும்போது அவர்களுக்கும் நமக்கும் தெரியாமலேயே இரண்டுபேருடைய அடித்தளமான அந்த உயிர்நிலையில் ஒரு பரஸ்பர ஓட்டம் ஏற்படுகின்றது.  ஊடுருவிப் பாய்ந்து நிற்கின்றோம்.  இரண்டு தடவை நாலு தடவை வாழ்த்த வாழ்த்த,  நமக்கும் அவர்களுக்கும் ஒரு தொடரியக்கம் வந்து விட்டதானால் அது எப்பொழுதும் நமக்கு அலை வீசிக் கொண்டிருக்கும். அந்த அலை நாம் நினைத்தாலும் நினைக்காவிட்டாலும் முன்பே ஏற்படுத்திவிட்ட தொடர்புப்படி வந்து கொண்டும் போய்க்கொண்டும் இருக்கும். அந்தத் தொடர் அறுபடாது இருக்கும்.

அதனால் அவருக்கு வேண்டியதை நாம் செய்ய வேண்டும் என்று நினைப்பது, நமக்கு வேண்டியதை அவர்கள் செய்ய வேண்டும் என்று நினைப்பது, அவர்கள் நன்மைக்காக நாம் எண்ணுவது இவை எல்லாம் சாதாரண நிகழ்ச்சியாக மாறிவிடும். அப்படி வாழ்த்தி வாழ்த்தி எப்பேர்ப்பட்டவர்களையும் நண்பர்களாக மாற்றிவிட முடியும்.  அவர்களுடைய செயல்களைத் திருத்திவிட முடியும்.  எண்ணங்களை எல்லாம் ஒழுங்குபடுத்திவிட முடியும்.  நல்லவர்களாக மாற்றிவிட முடியும். 

நாம் அந்த அளவு உறுதி பெற்று விட்டால் வாழ்த்துவது பழக்கத்திற்கு வந்துவிட்டால் அந்த மனநிலையிலே அந்த எல்லையிலே அந்த மையத்திலே நிற்கக்கூடிய அளவிற்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டால் நாம் நினைக்கும் போதெல்லாம் அது வாழ்த்தாக முடியும்

வாழ்க வளமுடன்.

-

Please explain the truth and secret philosophy of the 'Who Am I?'


‘நான் யார்?’ என்ற தத்துவத்தை விளக்கிச் சொல்லிவிட முடியுமா? அதை எப்படி புரிந்துகொள்வது?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, ‘நான் யார்?’ என்ற தத்துவத்தை விளக்கிச் சொல்லிவிட முடியுமா? அதை எப்படி புரிந்துகொள்வது?


வேதாத்திரி மகரிஷி அவர்களின் பதில்:

‘நான் யார்?’ தன்னையறிதலை புரிந்து கொள்வதல்ல, நாமே நமக்குள்ளாக உணர்ந்து கொள்வதாகும், வார்த்தைகளாலும், விளக்கங்காலும் சொல்லி புரியவைத்தாலும், புரிதல் அறிவு என்ற நிலையில் நமக்குள் உள்வாங்கப்படுமே அன்றி, மெய்யறிவாக கிடைத்துவிடாது. கனியை, சுவைத்து சாப்பிடாமல் கையில் வைத்துக்கொண்டு அதன் சுவையை சொல்லுவது போன்றதாகும் என்பதை விளங்கிக்கொள்க. எனினும் உங்கள் கேள்விக்கான விளக்கம் இதோ!

நான் யார்? பொருளா? சக்தியா? உடலா? அறிவா? உயிரா? இவை ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரிக்க முடியுமா? என ஆழ்ந்து சிந்தித்தால் இவற்றில் எதுவும் தனித்து இல்லை. எல்லாம் சேர்ந்த ஒரு இயக்கச் சிறப்பே “நான்” என அறிவோம். உடல் வரையில் எல்லை கட்டி அது வரையில் “நான்” என்று எண்ணியிருந்த காலமும் உண்டு. அன்று வரை அறிவு அறிந்திருந்த பக்குவ நிலை அது.

உருவத்தை ஆராயுங்கால் அது அணுக்களின் கூட்டமாகத் தோன்றுகிறது. அறிவை நோக்கி ஆராயுங்கால் அது உடலியக்க சக்தியின் ஒரு பிரிவு இயக்கம் என விளங்குகின்றது. சக்தி என்பது என்ன என ஆராயுங்கால் அது எங்கும் நிறைந்த ஒரு அகண்டாகாரப் பெருவெளியின் எழுச்சி அணுவின் மூலம் இயக்க வேகமான நிலை எனத் தெளிவாகி விடுகின்றது.  ஆகவே அகன்ற பெருவெளியாக, அணுவாக, இயக்கச் சக்தியாக, அறிவாக இருக்கும் பல்வேறு நிலைகளும் ஒன்றாகக் காட்டும் ஒரு பேரியக்கமே “நான்” எனப்படுவது.

ஒளி அல்லது ஒலி எழுச்சி பெறும் பொருட்களின் நிலை, இயக்கம் இவைகளுக்கேற்பப் பல பேத அளவாக இருந்த போதிலும் ஒளி, ஒலி என்ற தத்துவத்தில் வேறுபட்டவை அல்ல. அதுபோலவே எல்லா சீவன்களிலும் உள்ள அறிவு பலபேத நிலைகளில் இயங்கிய போதிலும் அறிவு என்ற தத்துவத்தில் ஒன்றே. ஆகவே “நான்” பரவெளி என்ற நிலையில் எங்கும் நிறைந்த பூரணமாகவும், சக்தி என்ற நிலையில் அணுக்களின் கூட்டுப் பக்குவப் பரிணாமச் சந்தர்ப்பச் சந்திப்புகளுக்கேற்பப் பலவித இயக்க வேறுபாடுகளாகவும், அறிவு என்ற நிலையில் அந்தந்த ஜீவராசிகளின் புலன் அமைப்பு, தேவை, பழக்கம், சூழ்நிலை, அனுபவம் இவைகளுக்குப் பல பேதப்பட்ட நிலைகளாகவும் உருவம் என்ற நிலையில் அணுக்களின் கூடுதலுக்கேற்பப் பலவித அமைப்புகளாகவும் இருக்கிறேன் எனக் கொள்ளுதல் சரியான முடிவாகும்.

எனவே நான் வேறு, பிரபஞ்சம் வேறு அல்ல. நான் வேறு, இயற்கை வேறு அல்ல. நான் என்பதை எதிலிருந்தும் பிரித்து எடுக்கவோ, பிரித்துப் பேசவோ முடியாது. ஒன்றாகவும் பலவாகவும் எல்லாமாக ஏகத் தொடர் நிலையில் இருப்பதே “நான்” என்பதாகும். அரூப நிலையில் ஏகமாக, உருவ நிலையில் சிதறுண்டு தோன்றும் பலவாக, அரூபத்தில் உருவங்கள் அனைத்தும் அடக்கம் பெற்றும், உருவங்கள் அனைத்திலும் அரூப நிலை நிறைந்தும் ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரிக்க முடியாத அகன்ற பேரியக்கமாகிய தத்துவமே “நான்” என்பதாகும்.

வாழ்க வளமுடன்

Sharva Vashya Dhana Agarshana Sankalpa - Complete information


Sharva Vashya Dhana Agarshana Sankalpa


Welcome dear friends,

Here I wish you and your family be blessed by the divine.

Today we come to know the greatness of the sankalpa. You can use this for your healthy and wealthy on this life forever. That sankalpa is called by, Sharva vashya dhana agarshana sangalpa.

--

Did you check or analysis the name? 

What it mean? 

The sharva vashya means, you can collect all what you need.

Dhana means, the prosperity.

Agarshana means, you can attract for your life by the action.

sankalpa means, the mantra, chanting.

--

Do you know the truth of how this sankalpa works?

The ancestors, like as siddhars found, the sound makes vibrates and it stimulates the universal magnetism. yes, this vibrations forms at and into the universal power and collect, come back with benefits, what we need as per as our request. Actually the nature, universal power is working as a providence. This is working based on entra, tantra and mantra. The sharva vashya sangalpa is a mantra. We attach the entra by the pooja and worship and next we attach the tantra by a calling angels with the requirements.

--

How we calling the Angles?

You come to understand the magical effort on this sankalpa, some of angels based on our requests and we call them with their names. They are the replica of the our needs.

--

How many times you will be chant this Sankalpa?

Some of interruptions in our life, the interruptions will happen by our karma, unruled thoughts, word, deeds and some of planets, starts waves. As per our action on demand by this sankalpa, the interruptions will clear on the time and our need will be provided on within our lifetime. Please do this sankalpa perfectly, calm and with belief.

--

How to start this, Sharva vashya dhana agarshana sankalpa at your home?

Set you as usual pooja room or make it like as in hall too. Collect some of your friends, neighbors or relatives and friends or you can do it as single.

Lightning the 5 faces brass standby lamp by ghee or best light oils.

Put it on the big rounded brass or silver plate.

Collect 108 coins. Any coin or use one rupee or 2 rupee coins, for pouring to under the lamp by 108 times. You can reuse this coins for all every time of sankalpa.

Collect some of white flowers, for pouring to under the lamp by 108 times.

Take and make a white rice coated with turmeric powder, for pouring to under the lamp by 108 times.

Make sweetly milk like as payasam or candy to share it all after end of the pooja.

You can use Agarpathi or benzoin smokes for this pooja time.

--

Care about it.

This sankalpa is sound vibrated base, so keep perfect sound for every word in this sankalpa start to end by 108 times. Some of people will criticize you, Why you do this sankalpa for 108 times, just do it for 9 times only. Just refuse them. If you need full of benefit by this sankalpa, please do it 108 times.

--

When you can do this sankalpa?

Any day you can do this sankalpa pooja. but pournami, the full moon day is very special. Sometimes you can choose Guru hora and Sukra hora. East or south face is best for this sankalpa pooja. 

--

How you modify the sankalpa based on your needed?

After the end of the sankalpa word, Un Vasam Aanar Pol, just change the next word like as, 

My family members get recover from problems,

Will get that job based on my experience,

Need to success on this project,

and as you like anyway!

Please do this for perfect or complete form only. Do not use it for just desire.

--

What is root of the, Sharva vashya dhana agarshana sankalpa?

No one guess. No detailed information is available. But by the greatness, this sankalpa is working for all. Sri, Guru mahan vethathiri maharishi, share this sankalpa for his disciples on that time for problem fixing. By the way it spread all over the world with name of Sri, Guru Mahan Vethathiri Maharishi. 

--

How to chant this mantra?

Here we happy to share, the complete detailed playlist videos from out 'Vethathiriya Channel'. Please check and hear, the method of, how to chant this sankalpa with sri, Guru Vethathiri Maharishi voice. Please listen and hear carefully!

Link: Sankalpa Playlist

-

Thanks for joining with Vethathiriya Channel, subscribe the channel for more videos!

Be blessed by the  Divine! 

--

Here the Sankalpa in words!

Hari Om, Sriyum, Aiyum, Kliyum, Chavvum.

Chandra Lakshmiye Namaha!

Krum Kreem, Swarna Lakshmiye Namaha!

Vang Sung Dung Ring, Veera Lakshmiye Namaha!

Om, Hum Sarva Baghya Lakshmiye Namaha!

Navvyum Mavvum Nadu Ezhuthagiya Surya Lakshmiye Namaha!

Theiva Vasya, Bhootha Vasya, Loga Vasya, Raja Vasya.

Jana Vasya, Purusha Vasya, Sthree Vasya, Putra Sampath Vasya.

Naga Logathil Undagindra Sarva Jeeva Pranigalum,

Un Vasam Aanar Pol,

En Vasam Aaga

Vasya Vasya Om Swaha!

-

Why can not practice meditation at home and is not satisfied too?


எவ்வளவோ முயற்சித்தாலும் வீட்டில் தவம் செய்யமுடியவில்லை. செய்தாலும் திருப்தி இல்லை ஏன்?

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, எவ்வளவோ முயற்சித்தாலும் வீட்டில் தவம் செய்யமுடியவில்லை. செய்தாலும் திருப்தி இல்லை ஏன்?


பதில்:

இன்றைய காலகட்ட விஞ்ஞான வளர்ச்சியில், அதன் முன்னேற்றங்களை நாம் எல்லோருமே இங்கே அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். அந்தவழியாக வந்த பொருட்கள், வாகனங்கள் என்றும் நம்மிடையே குவிந்து கிடக்கிறது. இன்னமும் வந்துகொண்டேதான் இருக்கிறது. அதனுடைய தேவைகளும் நமக்கு வேண்டியதாகவும் உள்ளது. இவ்வளவுக்கு இடையிலும் நாம், நம்முடைய வாழ்க்கையை அமைத்து அதை திறமாக நடத்தவேண்டியுள்ளது, அதோடு அதில் விளையக்கூடிய பிரச்சனைகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டியதாக இருக்கிறது. மேலும் உள்முக தேடலுக்கான தவமும் செய்ய விரும்புகிறோம். தடையாகிறது.

உதாரணமாக, அதிகாலை எழுந்து, தவம் செய்ய அமர்ந்துவீட்டீர்கள். கண்கள் மூடி சில நொடிகளில், உங்கள் கைபேசி அழைக்கிறது. அதை கவனம் செலுத்தாமல் தவம் செய்கிறீர்கள். இப்போது அழைப்பு நின்றுவிட்டது. ஆனால் மறுபடி அழைக்கிறது. இப்போது நாம் அதை எடுப்பதா? விடுப்பதா? குழப்பம்தானே வரும்?

இதுபோல, வண்டி, வாகனங்களின் ஒலி, இரைச்சல், சாலை வியாபார குரல்கள், எங்கேயோ இருந்து குரைக்கும் நாய்கள் அதன் சண்டை ஒலி, உங்கள் வீட்டில் சமையலையில் இருந்து, தீடீரென்று வரும் ஒலிகள். உங்கள் குழந்தைகளின், அவர்களுக்கிடையேயான பிரச்சனையில் அடிதடி சண்டை ஒலிகள். அழுகைக் குரல், எதிர்பாரமல், உங்கள் மடியில் வந்து உட்காரும், குழந்தை, செல்லப்பிராணிகள் என்று இப்படி இன்னும் பல உண்டு.  இவையெல்லாம் கடந்து, அமைதியாக தவம் இயற்றுவது என்பது கொஞ்சம் கடினமே!

உங்களின் தவத்திற்கான நேரத்தை, அதிகாலை 04:30 முதல் 05:30 மணிக்குள்ளாக முடித்துவிட முடிந்தால் மிக நல்லது. வாய்ப்பிருந்தால், அருகில் உள்ள, தவ மையத்திற்கு சென்று கூட்டுத்தவம் செய்துவரலாம். அதற்கென்று உங்கள் வேலைகளை, கடமைகளை கெடுத்துக்கொள்ளாது இருக்கவும் வேண்டும். உங்களை வருத்திக் கொள்ளவும் கூடாது. இதற்காக தனிமையான இடம் தேர்வு செய்வது கடினம், அது நல்லதும் இல்லை. கோவில், வழிபாடு தளங்களில் செய்யலாம் என்றாலும் அதுவும் பிரச்சனையாகலாம்.

உண்மையிலேயே உங்கள் இல்லம் போன்ற அமைதியான, பாதுகாப்பான, இடம் இந்த உலகிலேயே இல்லை என்பதே பொதுவானது.

இவ்வளவு பிரச்சனைகளையும் ஏற்று, கடந்து தவம் செய்தாலும், மனம் அதில் நிலைப்பது மிக கடினம். ஏனென்றால், தவத்தின் வழியாக, மனதை அதன் இயல்புக்கு திருப்ப முயற்சிக்கிறோம். ஆனால் சூழலின் காரணமாக அது மேலும் கொந்தளிக்கிறது என்பதால் அந்த தவம் உங்களுக்கு உதவாது. அதனால்தான் முன்பைவிடவும் குழப்பமாகிறது. திருப்தி அளிக்காது. நிம்மதியற்றும் போகிறது. இந்த தவம் இயற்ற தடையாக இருப்பது எல்லாம் என்ன? என்று ஒரு ஆராய்ச்சி செய்யுங்கள். எதையெல்லாம், எவற்றையெல்லாம் சரி செய்ய முடியும் என்று முடிவு செய்யுங்கள். அதை சரி செய்யுங்கள். உங்களால் எதுவும் செய்யமுடியாது என்றால், தவம் செய்து உங்களை, உங்கள் இயல்பை கெடுத்துக்கொள்ளாமல், தவத்தையே கொஞ்ச காலத்திற்கு தள்ளிவைத்து விடுங்கள். அதுதான் நல்லது. சூழல் சரியானால் பிறகு ஆரம்பியுங்கள். தவறில்லை!

வாழ்க வளமுடன்.

-

Why advised to avoid the meditation practice at night times?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.




கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, இரவில் தவம் செய்வதை ஏதற்காக தவிர்க்கச் சொல்லுகிறார்கள்?!


பதில்:

இரவில் தவம் செய்யக்கூடாது என்பதல்ல. செய்யலாம். ஆனால் அதற்கு நன்கு ஏற்கனவே பழக்கப்பட்டிருக்க வேண்டியது அவசியமாகும். குறைந்தது 12 மாதங்களாவது தொடர்ந்து, நாள் தோறும் தவம் செய்து பழகியிருந்தால், இரவில் தவம் செய்வதில் எந்தப் பிரச்சனையும் இருக்கப் போவதில்லை. ஆனால், தவம் கற்ற ஆரம்ப நிலை சாதகர்கள், இரவில் தவம் செய்வதை தவிர்க்க வேண்டும். முக்கியமாக எல்லோருமே, அதாவது எந்த நிலையில் தவம் கற்றோரும் கூட, உச்ச தவமான துரியாதீத தவத்தை இரவில் செய்யக்கூடாது என்பது பொதுவான விதி என்று சொல்லலாம். அதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. அதை விளக்கமாக சொல்லி உங்கள் மனதை குழப்பமடையச் செய்ய எனக்கு ஆர்வமில்லை. தவிர்த்துவிடலாம் என்றால் அதை அப்படியே ஏற்றுக்கொள்வது சரியானதுதான். இல்லை நான் முயற்சிப்பேன் என்றால், அது உங்கள் சமர்த்துதான்.

சரி, ஏன் இரவில் தவம் தவிர்க்கப்பட வேண்டும்? என்று கேட்பீர்களானால், முதலில் தவம் என்பது என்ன? என்ற கேள்விக்கான விடையை பெற வேண்டும். நீங்கள் உங்களுடைய மனதை ஒரு நிலையில் குவித்து தவம் செய்கிறீர்கள். அந்த நேரத்தில் உங்கள் கவனம் அதில் மட்டுமேதான் இருக்கும். உங்கள் சூழல் குறித்த எந்த ஒரு கவனமும் அங்கே இருக்காது. ஆரம்பத்தில் இருக்கும் என்றாலும் போகப்போக கவனம் தவத்தில் மட்டுமே இருக்கும்.

இரவு என்பது இருட்டானதுதானே ஓய்வானதுதானே என்பீர்கள்! அது யாருக்கு? இரவு சில உயிரிங்களுக்கு இயக்கமும் கொடுக்கும். பூச்சிகள், வண்டுகள், எலிகள், பல்லிகள், பாம்புகள் இப்படி பல உண்டு. அந்தநேரத்தில், தீடீரென்று எற்படும் வெளிச்சம் கூட உங்களை பாதிக்கும், யாராவது கதவை தட்டினால் கூட பாதிக்கும். இப்படி பல பிரச்சனைகள் எழ வாய்ப்பு உண்டுதானே?!

என்னதான் பாதுகாப்பு என்றாலும் கூட, ஒரு கொசு போதுமே உங்கள் தவத்தை கெடுக்க?! இதனால் மனமொன்றிய நிலையில் ஏற்படும் பிரச்சனைகளால், மனதின் இயல்பு பாதிப்படையும், அதனால் உடலும் கெடும், செய்கிற தவமும் கெடும். அதன்வழியாக உங்கள் தூக்கமும் கெடும். மறுநாள் அலுவல்களும் கெடும் அல்லவா?! எனவே இதையெல்லாம் கவனத்தில் கொண்டு இரவில் தவம் செய்வது குறித்து சிந்தித்துப் பாருங்கள். தேவைப்பட்டால், சாந்திதவம் மட்டும் செய்யலாம். ஏனென்றால் அதில் மனமும், உடலும் அமைதியை நோக்கித்தான் செல்கிறது!

வாழ்க வளமுடன்.

Smallest bones in the human body



மிகச்சிறு எலும்புகள்

அன்பர்களே, மனிதன், பரிணாமத்திலும், தன்மாற்றத்திலும் முழுமையாக வந்து நிறைந்த உயிரினம் என்பதில் எந்த ஐயமும் இல்லை. ஆனால் அந்த உண்மையை, அம்மனிதனே உணர்ந்தறியாமல் வாழ்வது வருத்தத்திற்கு உரியதே. எனினும் அவ்வபொழுது மாற்றங்களும் வந்துகொண்டேதான் இருக்கின்றன. மனிதனும் தன்னை ‘நான் யார்?’ என்கேட்க ஆர்வம் கொண்டுதான் வருகிறான் என்பதை நாம் காணவும் முடிகிறது.

மனிதனாகிய நாம் சிறப்பு என்றால், நமக்குள் இருக்கக்கூடியதும் சிறப்பாக இருக்கும் அல்லவா? அப்படியாக, நம்முடைய உடலில் மிகச்சிறிய எலும்புகள் எவை என்று கேட்டால் என்ன பதில் சொல்லமுடியும்? நடுப்புற காது பகுதியில் அமைந்துள்ள மூன்று எலும்புகளே ஆகும்!


அவை என்னென்ன?

தமிழில் அந்த எலும்புகளை சம்மட்டியுரு, பட்டையுரு மற்றும் ஏந்தியுரு என்று அதன் வடிவத்தைக் கொண்டு அழைக்கிறார்கள். இந்த மூன்று எலும்புகளும், ஒலி உணர்வு கடத்தியாக இணைந்தே செயல்படுகின்றன. இந்த எலும்புகள் நடுக்காது பகுதியில், உள்ளே மேல்புறமாக அமைந்துள்ளதால், சாதாரணமாக பார்த்துவிடமும் முடியாது. மேலும் நடுப்புற காதின் முன்புறம், அதாவது வெளிக்காதின் முடிவுப்பாதையில், ஒலியை வாங்கி அதிரவைக்கும் சவ்வுபடலம் மறைத்தும் இருக்கும். எனவே பார்ப்பது கடினமே!

இதோ பாருங்கள்


காணொளியாக காண்க


இரண்டாவது தோற்றமும் உணர்வும்

இந்த பிரபஞ்ச தோற்றத்திற்கு முன்னதாக, ஐந்து பௌதீக தோற்றத்தில், இரண்டாவது தோற்றம் ‘காற்று’ஆகும். அந்த காற்று தன்மாற்றத்தில்தான் ஒலியாக மலர்கின்றது. உயிரினங்களாக வந்த பரிணாமத்திலும், தன்மாற்றத்திலும் ஒலியை உணரும் கருவியாகவே ‘காது’ என்ற உறுப்பு உருவானது. ஊர்வனவற்றில் பாம்புக்கு காது இல்லை என்பது உங்களுக்கு தெரியுமா? 

‘ஏங்க, அதுதான் மகுடி ஊதினா எங்கிருந்தாலும் வந்திருதே!?’

மகுடி ஊதி. அதிலிருந்து வரும் ஒலி அலையை, பாம்பு அதிர்வாக மட்டுமே பெறுகிறது, மேலும் தன் பார்வையின் மூலமாகவும் அவ்வதிர்வை பெறுகிறது என்பதே உண்மை.

செவித்திறன் குறைவு

பெரும்பாலும் இயற்கையாக செவித்திறன் குறைவு வந்தால், அக்குழந்தை பேசுவதில், கற்றுக்கொள்வதில் தடுமாற்றத்தை பெறும். காரணம் சில காண்போம். 1) நடுக்காதில் உள்ள சவ்வு பாதிப்பு, துளை, சரியான வளர்ச்சி இன்மை 2) சவ்வோடு இணைந்த எலும்புகள் பலவீனம் 3) அதிர்வை பெற்று கடத்த முடிவதில்லை 4) உட்காதுக்கு எந்த அதிர்வும் கிடைக்காத தன்மை Etc,.

நாம் காதுகளை கவனமின்றி, பாதுகாப்பின்றி பயன்படுத்துவதாலும் செவித்திறன் பாதிக்கப்படலாம். 1) காது குடைதல் 2) அதிக ஒலி எழுவதை அடிக்கடி கேட்பது, அந்த இடங்களில் வாழ்வது, அப்படியான இடங்களில் வேலை செய்வது 3) காதுகளை முழுதாக மூடியபடி அதிரும் இசை கேட்பது 4) தண்ணீர், எண்ணைய், பிறவற்றை காதுக்குள் விட்டுக்கொள்வது 5) தூங்கும் பொழுது ஏதேனும் பூச்சிகள் காதுக்குள் சென்று பாதிப்பை ஏற்படுத்துவது 6) குழந்தையாக இருக்கும் பொழுது கன்னத்தில் அடிவாங்கியது 7) காது பாதிக்கப்படும் அளவில் எதிர்பாராத வாகன விபத்து, தடுமாற்றம், நோய் ஆகியன Etc,.

முக்கியமாக குழந்தையை, கன்னத்தில் அறைவதை பெற்றோர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். 

இயற்கையின் உன்னதம்

அற்புதமான இந்த இயற்கையின் வடிவமைப்பை கண்டீர்களா? வேறு யார் செய்தார் இதை? யாரேனும் நமக்காக செய்தார்களா? நமக்குள் பொருத்தினார்களா? இப்போது நாம் வாங்குகிற ஆப்பிள் ஏர்போட் போல யார் தயாரித்தார்கள்? யார் அதற்கு சக்தி அளிக்கிறார்கள்? என்றைக்காவது நாம் யோசித்ததுண்டா? அப்படியானால் அதை நாம் எப்படி பாதுகாக்க வேண்டும்? மனிதனில் எல்லாம் அடங்கியுள்ளது என்று பெருமை பேசுகிறோமே தவிட உண்மையை ஆராய்ந்து அறிந்தோர் மிகச்சிலர் அல்லவா? நீங்கள் ஆராய விரும்பினால், இயற்கை தன்னை உங்களுக்கு எல்லாவற்றையும் வழங்க தயாராகவே இருக்கிறது என்ற விபரம் உங்களுக்குத் தெரியுமா? 

வாழ்க வையகம், வாழ்க வளமுடன்!

-

Thanks to: Wikipedia, @microscopicture and twitter. Photos and video used here for education purpose only and copyright to owners