CJ for You: thiruvalluvar

thiruvalluvar

Showing posts with label thiruvalluvar. Show all posts
Showing posts with label thiruvalluvar. Show all posts

How we can pass the difficulties with smile by the way of Thirukkural Truth?


இடுக்கன் வருங்கால் நகுக என்ற திருக்குறளுக்கான உண்மை விளக்கத்தை, குரு மகான் வேதாத்திரி மகரிஷி சொல்லியிருப்பதாக அறிகிறேன். அந்த விளக்கத்தை பகிர்வீர்களா?

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா! இடுக்கன் வருங்கால் நகுக என்ற திருக்குறளுக்கான உண்மை விளக்கத்தை, குரு மகான் வேதாத்திரி மகரிஷி சொல்லியிருப்பதாக அறிகிறேன். அந்த விளக்கத்தை பகிர்வீர்களா?

பதில்:  

இடுக்கண் வருங்கால் நகுக அதனை
        அடுத்தூர்வது அஃதொப்ப தில்.

இதற்கான உரை விளக்கம், தமிழறிஞர் மு. வரதராசன் அவர்கள் வழங்குவது என்ன? துன்பம் வரும்போது (அதற்காக கலங்காமல்) நகுதல் வேண்டும், அத் துன்பத்தை எதிர்த்து வெல்லவல்லது அதைப் போன்றது வேறு இல்லை’ என்று சொல்லுகிறார். இதுபோலவே பலரும் சொல்லுவார்கள் என்பதுதான் பொதுவானது. சராசரி மக்கள், இக்குறளின் உண்மையை ‘தானாகவே’ புரிந்து கொள்ளக்கூடிய மக்களும் உண்டு. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, ஆசான் திருவள்ளுவரால் எழுதப்பட்ட, திருக்குறள், மூலமான, நம் தாய்மொழியான தமிழில் எழுதப்பட்டது, அது இன்னமும் எழுத்து, பொருள், அர்த்தம் வடிவில் மாறாமல் இருப்பது அதிசயம்தானே? உலகில் பெரும்பாலான பழமையான குறிப்புக்கள் இன்னமும் புரிந்துகொள்ளப்படாமல், சிதைவுற்று விட்டது. ஆனால், தமிழ் சமுதாயம் அக்காலத்தில் இருந்து, பல்வேறுவகையான சான்றுகளை இன்னமும் பொக்கிஷமாக வைத்திருக்கிறது. உலகில் தமிழுக்கு கிடைத்த, இந்த அற்புதம் வேறு எந்த மொழி, இன சமுதாயத்திற்கும் இல்லை என்றே சொல்லுகிறார்கள். நம்மில் பலர் இந்த உண்மை தெரியாமலும் இருக்கிறார்கள்.

‘இடுக்கண் வருங்கால் நகுக அதனை, அடுத்தூர்வது அஃதொப்ப தில்’ என்று வாசிக்கும் பொழுதே, அதன் அர்த்தம் நமக்கு புரிந்துவிடும் என்றாலும் கூட, துன்பம் வந்தால் சிரித்துவிடுக, இதைத்தவிர அத்துன்பத்தை கடந்து செல்ல வேறு வழியில்லை, என்பதாக மிக எளிய விளக்கமாகக் கொள்ளமுடியும். 

குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள், தேர்ந்தெடுத்த சில, திருக்குறள்களுக்கு மட்டுமே, உரை விளக்கம் எழுதி அதை நூலாக தந்திருக்கிறார். அது போதுமானது என்றும் சொல்லுகிறார். இன்றைய காலத்தில், தமிழ் நன்கு பேச, படிக்க, அறிந்த யாவரும் ‘திருக்குறள் உரை’ எழுத தயாராகவே இருக்கிறார்கள். இனி, இக்குறளுக்கு,  வேதாத்திரி மகரிஷி அவர்களின் விளக்கத்தை காண்போம்.

ஒரு துன்பம் என்பது எப்போது எழுகிறது? நம்முடைய எண்ணம், சொல், செயலால் எழுகின்ற விளைவாகும். பிறராலும் அது நமக்கு விளைவாக வரும். அடுத்து, இயற்கையால் நிகழக்கூடியதாக இருக்கும். சில வகையில், சமுதாயம், உலகம் என்ற நிலையிலும் நாம் மட்டுமல்ல, அனைவருமே துன்பத்தை ஏற்கவேண்டி வரலாம். இங்கே நமக்கு வரும் துன்பம் என்பதை மட்டுமே கவனத்தில் கொண்டாலும், அது ஒருவகையில் ‘கர்மா என்ற வினைப்பதிவின் செயல்பாடு’ என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். சஞ்சிதம், பிராரப்தம், ஆகாமியம் என்ற மூன்றடுக்கு கர்ம வினைகள் நம்மிடம் உண்டு. அது ஒவ்வொன்றாக வெளியேறிட வேண்டும். அந்த களங்கம் தீரவேண்டும். அப்போதுதான், இறையுணர்வு நம்மிடம் மிகுதியாகும். அந்த கர்ம வினைகளை தீர்க்கவே பிறவியும் எடுத்தோம் என்பதும் உண்மையே.

இப்போது, ஒரு துன்பம் நமக்கு எழுகிறது என்றால், இங்கே நம்முடைய கர்ம வினைப்பதிவில் ஒன்று கழிந்துவிட்டது. அது நம்மிடமிருந்து விலகுகிறது என்று உணர்ந்து கொண்டு, நிம்மதியை உணர்ந்து, மனதில் அமைதி கொள்ள வேண்டும். இந்த தெளிவான உண்மையைத்தான் ஆசான் திருவள்ளுவர், ‘இடுக்கண் வருங்கால் நகுக ' என்று சொல்லுகிறார். என்பதான விளக்கத்தை, குரு மகான் வேதாத்திரி மகரிஷி தருகிறார். வேதாத்திரிய பதிப்பகம் வழங்கிய, வேதாத்திரி மகரிஷியின் திருக்குறள் உரை விளக்கம் நூலை வாங்கி, மேலும் உண்மைகள் அறிக.

வாழ்க வளமுடன்.

-

What is lifeforce? Why it is separated? Can we protected?


உயிர் என்பது என்ன? அது ஏன் காலத்தால் போய்விடுகிறது? தடுக்கமுடியாதா?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, உயிர் என்பது என்ன? அது ஏன் காலத்தால் போய்விடுகிறது? தடுக்கமுடியாதா?


பதில்:

எளிமையாக கேள்வி கேட்டுவிட்டீர்கள், அதில் எவ்வளவு ஆழ்ந்த இயற்கை உண்மைகள், ரகசியங்கள் அடங்கியுள்ளன என்பதை அறிவீர்களா? இத்தகைய உயிர் குறித்த எல்லா உண்மைகளையும் சித்தர்கள் அறிந்து உணர்ந்து முழுமையும் அடைந்தார்கள். சித்து என்று அழைக்கப்படும் உயிரை அறிந்ததால்தான் ‘சித்தர்கள்’ என்றும் அழைக்கப்பட்டனர். விளக்கிட கடினமே என்றாலும் கூட, இந்த பதிவில் முடிந்தளவு எளிமையாக விளங்கிக் கொள்ள முயற்சிப்போம். எல்லோருக்குமே பயன்படும் வகையில் உதவும் என்று நினைக்கிறேன். இந்த இடத்தில், குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்களை வாழ்த்தி வணங்குவோம். குப்பையாக குழப்பிக் கிடந்த உண்மைகளை அழகாக, சிதையாமல் எடுத்து, அழக்குகளை நீக்கி மிக தெளிவாக, எளிமையும் செய்து, மாற்றுக்கருத்துக்கு இடம் தராமல், விளக்கித்தந்தவர் வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

உயிர் என்று அழைக்கப்படும் ஆகாஷ் துகள்கள், பஞ்சபூத தத்துவத்தின் முதல் நிலையாகும். கண்ணுக்கும் கருவிக்கும் எட்டாத நிலையிலும், கருத்துக்கும் மிக எளிதில் சிக்கிடாத நுண்ணியது இந்த உயிர்த்துகள்கள். இதை தமிழில், வேதாத்திரியத்தில் விண் என்றும் சொல்லுகிறோம். மனிதர்களாகிய, நம்முடைய உடல் மண் என்ற பஞ்சபூத தன்மை கொண்டது, அதனூடாக, நீராக இரத்தம், வெப்பமாக உடல் சூடு, காற்றாக மூச்சுக்காற்று ஆகிய நான்கு பஞ்சபூதங்கள் இருப்பதை நாம் அறிவோம். இதில் ஐந்தாவதாக, முதல் நிலை பஞ்சபூதமான உயிர் இணைந்தால், நாம் இந்த புவியில் உயிரோடு, உணர்வோடு வாழ்கிறோம் என்று அர்த்தமாகிறது.

இந்த உயிர் மிக மிக நுண்ணியதும், லேசானதும் ஆகும். எனவே இது இயற்கையின் சக்தியால் நீண்டகாலம் ஒரே இடத்தில் தங்கிட வாய்ப்பில்லை. ஆசான் திருவள்ளுவர், மிகத்தெளிவாக தன்னுடைய குறள் வழியாக இதை சொல்லுகிறார்,

நாளென ஒன்றுபோற் காட்டி உயிர்ஈரும்
வாளது உணர்வார்ப் பெறின். (நிலையாமை, குறள் 334)

உயிரானது, ஒவ்வொருநாளும் இந்த உடலைவிட்டு நகர்ந்து போய்க்கொண்டேதான் இருக்கிறது. ஒருநாள் என்பது உடலையும் உயிரையும் இணைக்கும் இணைப்பை வாளால் அறுத்துக்கொண்டே இருக்கிறது என்பதை உணர்வாக பெற்று அறிந்து கொள்ளுங்கள். என்று குறளில் சொல்லுகிறார்.

இதன்படி காலத்தால், இயற்கையாகவே உயிர் உடலைவிட்டு நகர்ந்து கொண்டேதான் இருக்கிறது. ஏதோ ஒருநாளில் முழுதாக போய்விடுகிறது. அன்றைக்கு ஒருநபர் இறந்துவிடுகிறார் என்று புரிந்துகொள்கிறோம். இதில், இந்த இயற்கைக்கு முன்பாக, அதன் விதிக்கு முன்பாக நாம் ஒன்றுமே இல்லை. அதனால் அதன்போக்கில் நிகழும் ஒன்றை தடுக்கவும் வழியில்லை. ஆனால் இது ஏன் நிகழ்கிறது? இந்த பிறப்பும் இறப்பும் எதனால்? என்ற கேள்வி உங்களுக்கு எழுமானால், யோகம் அதற்கான பதிலை தரும். வாழ்கின்ற நாளுக்குள் அதை அறியவும் முயற்சிக்கலாம் என்பதும் உறுதி.

ஆசான் திருவள்ளுவர், தன் குறள்வழியாக தருகின்ற இன்னொரு உண்மையையும் இங்கே சொல்லிவிடுகிறேன்.

புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு. (நிலையாமை, குறள் 340)

உடம்பில் ஒரு மூலையில் குடியிருந்த உயிர்க்கு, நிலையாகப் புகுந்திருக்கும் வீடு இதுவரையில் அமையவில்லையோ? என்ற விளக்கத்தை - மு. வரதராஜன் அவர்கள் தருகின்றார்.

உயிர் குறித்த உண்மைகளை எடுத்துரைத்த ஆசான் திருவள்ளுவரையும், ஔவையார், சித்தர்கள், ஞானியர்கள், மகான்கள், யோகியர்கள், ஆசான் வேதாத்திரி மகரிஷி அவர்களையும் மீண்டும் வாழ்த்தி நினைவு கூர்வோம்.

வாழ்க வளமுடன்.

-