Home » All posts
Caricaturist Sugumarje Interview
October 02, 2015 Sugumarje
On past Friday, 02nd October 2015...
The New Indian Express made my Great! My interview published on "City Express" Trichy City Edition...
I am happy sharing with all. Thanks for supporters and Friends. I also thanks to my Parents, Sisters, Brother and my wife. Sure they are superb supporter to me for reach this level.
You can read on this epaper too
http://epaper.newindianexpress.com/603004/The-New-Indian-Express-Tiruchy/02.10.2015#page/17/1
My Hearty Thanks to Reporter and Photographer at The New Indian Express Newspaper.
The New Indian Express made my Great! My interview published on "City Express" Trichy City Edition...
![]() |
| Click image - view bigger - easy to read |
I am happy sharing with all. Thanks for supporters and Friends. I also thanks to my Parents, Sisters, Brother and my wife. Sure they are superb supporter to me for reach this level.
You can read on this epaper too
http://epaper.newindianexpress.com/603004/The-New-Indian-Express-Tiruchy/02.10.2015#page/17/1
My Hearty Thanks to Reporter and Photographer at The New Indian Express Newspaper.
Caricature Workshop
September 29, 2015 Sugumarje
கடந்த வாரத்தில் நடந்த கேரிகேச்சர் பயிலரங்கத்தில் நான் செயல்பட்ட சில விபரங்களை சொல்ல விரும்புகிறேன். இந்த கேரிகேச்சர் என்கிற ஒன்றை புது விசயமாக, இதை எப்படி செய்கிறார்கள், நாமும் இதை கற்றுக்கொள்ளவேண்டுமே என்ற ஆர்வத்தில் இன்றைய இளைஞ, இளைஞிகள் கூட்டம் இருப்பதை நாம் அறிவோம்.
அவர்களுக்காகவே இந்த கேரிகேச்சர் பயிலரங்கம் விழா குழுவினரால் நடத்தப்பட்டது. நான் பயிற்றுனராக கலந்துகொண்டேன்.
ஒரு கல்லூரியில், அதும் புகழ்பெற்ற கல்லூரியில் எனும் பொழுது, (NIT, TRICHY)கற்றுக்கொடுப்பவரும் திறமையானவராகவே இருப்பார் என்பது உண்மைக்கு ஏற்ப, நான் இந்த பயிலரங்கத்தை எப்படி பயனுள்ளதாக தரவேண்டும் என்பதற்காக, கடந்த ஒரு மாதகாலமாக என் வழக்கமான வேலைகளூடே, புது முயற்சிகளை செய்துபார்த்துக்கொண்டேன்.
பேஸ்புக், எண்ணற்ற நண்பர்களை எனக்கு தந்திருப்பதால், ஒரு புது முயற்சி என்றால், அதில் என்னோடு இணைந்திருக்கிற ஒரு நண்பருக்கு, பிறந்தாள் பரிசாக ஒரு கேரிகேச்சர் செய்தாலே, அந்த புது முயற்சிகளை செய்துபார்த்துவிடலாம்... அதை அவர் விரும்புகிறாரா என்பது உள்ளூர கேள்வி எழும்பினாலும், அவர் நிச்சயமாக வேண்டாம் ஒதுக்கமாட்டார். ஏனென்றால், அவரின் நண்பர்கள், அந்த ஓவியத்தை பார்த்து, அதிலிருக்கிற கிண்டலை புரிந்துகொண்டு அந்த நண்பரை மகிழ்ச்சிப்படுத்துவர், அதனாலே நான் தப்பித்துவிட சந்தர்ப்பம் கிடைத்துவிடும்...
பயிலரங்கத்தில் கேரிகேச்சர் இடம்பெறுகிறது என்பதை நன்கு விளம்பரப்டுத்திக்கொண்டதால் எதிர்பார்த்தபடி நிறைய மாணவ மாணவியர்கள் கலந்துகொண்டனர், என்றாலும் இன்னமும் நிறைய எண்ணிக்கையில் வந்திருந்தால் அமைப்பாளர்களுக்கு கூடுதல் திருப்தி அளித்திருக்கும்...
காலை ஒரு வகுப்பும், பிற்பகலில் ஒரு வகுப்புமாக இரண்டாக பிரித்து பயிலரங்கம் நடத்தினோம்... இரண்டு வகுப்புகளுக்கும் சிறியவித்தியாசம் அமைத்துக்கொண்டேன். முதல் பயிலிரங்கத்தில், சில மாணவர்கள், நான் கேரிகேச்சருக்கான விளக்கங்களை தந்துகொண்டிருந்தபோதே கொட்டாவி விட்டதை காணமுடிந்தது. சில கவனம் பிசகி, வாயடைக்கப்பட்டிருந்த கைபேசியில் சில ஒளிப்படங்களை பார்த்து அவர்களாகவே வரைய முனைந்தது அறிந்தேன்... இதனால் முதல் வகுப்பில் அவர்கள சோர்வுறச்செய்த விசயங்களை அடுத்தவகுப்பில் தவிர்த்துவிட்டேன்...
அடுத்து நான் இதுவரை என்ன செய்திருக்கிறேன், என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்று சொன்னதோடு நிறுத்திக்கொண்டேன். நான் என் கைபேசியிலும், கைபலகையிலும், கணிணியிலும் எடுத்துவைத்திருந்த எண்ணற்ற கேரிகேச்சர்களை காட்டவே இல்லை. அவற்றையெல்லாம் காட்டும்பொழுது, ஒரு திறமையாளன் செய்த ஓவியமாகவே அவர்களுக்குப்படும், கூடவே இதை காண்பித்து என் தற்பெருமையை காட்டிக்கொள்வதாகவும் தோன்றும். இதைப்போல நான் செய்யமுடியுமா என்று அவர்களை பயமுறுத்துவதாகவும் அமையலாம்...
ஒரு கோடுக்கூட மிகச்சரியாக வரையத்தெரியாத, கற்றுக்கொள்வதற்காக வந்திருக்கும் அவர்களுடைய தன்னம்பிக்கையை வலுவூட்ட நினைத்தே, அந்த பயிலரங்கள் முழுவதும் ஒரு வெற்றுத்திரையில், ஒவ்வொன்றாக வரைந்து, வரைந்தே அவர்களுக்கு விளக்கினேன்.
சாதாரணமாக ஒரு கோடு போடுவதற்கும், தன்னபிக்கையோடு கோடுபோடுவதற்கும் வித்தியாசத்தை, வந்திருந்த எல்லா மாணவ, மாணவிகளுக்கும் அவர்களுடைய பயிற்சி ஏட்டில் வரைந்து காட்டி, அதையே அவர்களையும் தொடரச்செய்தேன்.
கை நடுங்காமல், அழுத்தியும், லேசாகவும் கோடுகள் போடுவதற்கான பயிற்சிகளை கொடுத்தேன். இயற்கையான பொருட்கள் எந்த மனித நெறிகளுக்கும் அடங்காத அமைப்பையும், மனிதன் உருவாக்கிய அனைத்தும் வரையறைக்குட்பட்டே இருப்பதையும் விளக்கினேன்.
எல்லாவற்றிற்கும் ஒரு அடிப்படை தோற்றம் இருப்பதையும், அதில் ஒவ்வொரு அடையாளங்கள் இருப்பதையும் காட்டினேன். மனித முகம் பொதுவான ஒரு அளவீடை கொண்டிருப்பதும், அந்த அளவிலேயே எல்லா முகங்களையும் எப்படி அமைக்கலாம் என்பதையும் வரைந்தே காட்டினேன்.
முகத்தின் வகைகள், அதன் பகுதிகளை தனித்தனியாக வரைந்து அவர்களை பதிந்துவைத்துக்கொள்ள செய்தேன்...மாதிரியாக என் முகத்தையே பலவிதமாக வரைந்தும் காட்டினேன்.
ஒரு கேரிகேச்சர் ஓவியர் ஒரு முகத்தை எப்படி கவனிக்கிறார்? என்னன்ன விசயங்களை எடுத்து, தன் ஓவியத்தில் மிகைப்படுத்துகிறார்? இதில் நான் எந்த அளவில் அதை தருகிறேன்? ஒரு நபரை கேரிகேசராக வரைந்தால் அவருக்கு பிடிக்கிறதா இல்லையா என்பதையும் நான் விளக்கினேன். ஒரு மாணவரையும், மாணவியையும் என் எதிரில் வைத்து, அவர்களின் முக அடையாளங்களை சொல்லி, அவர்களை அந்த நிமிடத்திலேயே கேரிகேசராக வரைந்து காட்டினேன்... எனக்கு பாராட்டாக கைத்தட்டுகளை அளித்தனர்...
தினமும், கண்ணாடியில் அவர்கள் முகத்தை அவர்களே பார்த்துக்கொள்வதால், அந்த முகத்தில் உள்ள அடையாளங்களை அறியச்செய்து, அதையே நீங்கள் ஓவியமாக்குங்கள் என்று பயிற்சி செய்ய சொன்னேன். அவர்கள் வரைந்துகொண்டிருக்கையில், நான் ஓவ்வொருவரின் ஓவியத்திலும் அவர்கள், இன்னமும் சேர்த்துக்கொள்ளவேண்டிய சில விசயங்களை சொல்லியும், வரைந்தும் காட்டினேன்.
ஒரு வகுப்புபிற்கான நேரம் கடந்தும் ஆர்வமாக வரைந்துகொண்டிருந்தனர். கூடுதாலாக நான் விரும்பும் எல்லா மாணவ, மாணவியருக்கும், அவர்களை நானே கேரிகேச்சராகவும் வரைந்துதந்தேன்...
உண்மையாகவே இந்த நேரத்திற்குள் அவர்கள் கேரிகேச்சரை ஒரு தூண்டுதாலாக வைத்து, தன் முயற்சி, பயிற்சிகளால் செமைப்படுத்திக்கொண்டால் மட்டுமே அதை செய்ய இயலும்... ஆனால் அதுவே இந்த நேரத்திற்குள்ளாக, இவ்வளவு விசயங்களையாவது அங்கே தரமுடிந்ததே என நான் திருப்திபட்டுக்கொண்டேன்...
பயிலரங்க அமைப்பாளர்களுக்கு என் மனம் கனிந்த நன்றி...
அவர்களுக்காகவே இந்த கேரிகேச்சர் பயிலரங்கம் விழா குழுவினரால் நடத்தப்பட்டது. நான் பயிற்றுனராக கலந்துகொண்டேன்.ஒரு கல்லூரியில், அதும் புகழ்பெற்ற கல்லூரியில் எனும் பொழுது, (NIT, TRICHY)கற்றுக்கொடுப்பவரும் திறமையானவராகவே இருப்பார் என்பது உண்மைக்கு ஏற்ப, நான் இந்த பயிலரங்கத்தை எப்படி பயனுள்ளதாக தரவேண்டும் என்பதற்காக, கடந்த ஒரு மாதகாலமாக என் வழக்கமான வேலைகளூடே, புது முயற்சிகளை செய்துபார்த்துக்கொண்டேன்.
பேஸ்புக், எண்ணற்ற நண்பர்களை எனக்கு தந்திருப்பதால், ஒரு புது முயற்சி என்றால், அதில் என்னோடு இணைந்திருக்கிற ஒரு நண்பருக்கு, பிறந்தாள் பரிசாக ஒரு கேரிகேச்சர் செய்தாலே, அந்த புது முயற்சிகளை செய்துபார்த்துவிடலாம்... அதை அவர் விரும்புகிறாரா என்பது உள்ளூர கேள்வி எழும்பினாலும், அவர் நிச்சயமாக வேண்டாம் ஒதுக்கமாட்டார். ஏனென்றால், அவரின் நண்பர்கள், அந்த ஓவியத்தை பார்த்து, அதிலிருக்கிற கிண்டலை புரிந்துகொண்டு அந்த நண்பரை மகிழ்ச்சிப்படுத்துவர், அதனாலே நான் தப்பித்துவிட சந்தர்ப்பம் கிடைத்துவிடும்...
பயிலரங்கத்தில் கேரிகேச்சர் இடம்பெறுகிறது என்பதை நன்கு விளம்பரப்டுத்திக்கொண்டதால் எதிர்பார்த்தபடி நிறைய மாணவ மாணவியர்கள் கலந்துகொண்டனர், என்றாலும் இன்னமும் நிறைய எண்ணிக்கையில் வந்திருந்தால் அமைப்பாளர்களுக்கு கூடுதல் திருப்தி அளித்திருக்கும்...
காலை ஒரு வகுப்பும், பிற்பகலில் ஒரு வகுப்புமாக இரண்டாக பிரித்து பயிலரங்கம் நடத்தினோம்... இரண்டு வகுப்புகளுக்கும் சிறியவித்தியாசம் அமைத்துக்கொண்டேன். முதல் பயிலிரங்கத்தில், சில மாணவர்கள், நான் கேரிகேச்சருக்கான விளக்கங்களை தந்துகொண்டிருந்தபோதே கொட்டாவி விட்டதை காணமுடிந்தது. சில கவனம் பிசகி, வாயடைக்கப்பட்டிருந்த கைபேசியில் சில ஒளிப்படங்களை பார்த்து அவர்களாகவே வரைய முனைந்தது அறிந்தேன்... இதனால் முதல் வகுப்பில் அவர்கள சோர்வுறச்செய்த விசயங்களை அடுத்தவகுப்பில் தவிர்த்துவிட்டேன்...
அடுத்து நான் இதுவரை என்ன செய்திருக்கிறேன், என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்று சொன்னதோடு நிறுத்திக்கொண்டேன். நான் என் கைபேசியிலும், கைபலகையிலும், கணிணியிலும் எடுத்துவைத்திருந்த எண்ணற்ற கேரிகேச்சர்களை காட்டவே இல்லை. அவற்றையெல்லாம் காட்டும்பொழுது, ஒரு திறமையாளன் செய்த ஓவியமாகவே அவர்களுக்குப்படும், கூடவே இதை காண்பித்து என் தற்பெருமையை காட்டிக்கொள்வதாகவும் தோன்றும். இதைப்போல நான் செய்யமுடியுமா என்று அவர்களை பயமுறுத்துவதாகவும் அமையலாம்...
ஒரு கோடுக்கூட மிகச்சரியாக வரையத்தெரியாத, கற்றுக்கொள்வதற்காக வந்திருக்கும் அவர்களுடைய தன்னம்பிக்கையை வலுவூட்ட நினைத்தே, அந்த பயிலரங்கள் முழுவதும் ஒரு வெற்றுத்திரையில், ஒவ்வொன்றாக வரைந்து, வரைந்தே அவர்களுக்கு விளக்கினேன்.சாதாரணமாக ஒரு கோடு போடுவதற்கும், தன்னபிக்கையோடு கோடுபோடுவதற்கும் வித்தியாசத்தை, வந்திருந்த எல்லா மாணவ, மாணவிகளுக்கும் அவர்களுடைய பயிற்சி ஏட்டில் வரைந்து காட்டி, அதையே அவர்களையும் தொடரச்செய்தேன்.
கை நடுங்காமல், அழுத்தியும், லேசாகவும் கோடுகள் போடுவதற்கான பயிற்சிகளை கொடுத்தேன். இயற்கையான பொருட்கள் எந்த மனித நெறிகளுக்கும் அடங்காத அமைப்பையும், மனிதன் உருவாக்கிய அனைத்தும் வரையறைக்குட்பட்டே இருப்பதையும் விளக்கினேன்.
எல்லாவற்றிற்கும் ஒரு அடிப்படை தோற்றம் இருப்பதையும், அதில் ஒவ்வொரு அடையாளங்கள் இருப்பதையும் காட்டினேன். மனித முகம் பொதுவான ஒரு அளவீடை கொண்டிருப்பதும், அந்த அளவிலேயே எல்லா முகங்களையும் எப்படி அமைக்கலாம் என்பதையும் வரைந்தே காட்டினேன்.முகத்தின் வகைகள், அதன் பகுதிகளை தனித்தனியாக வரைந்து அவர்களை பதிந்துவைத்துக்கொள்ள செய்தேன்...மாதிரியாக என் முகத்தையே பலவிதமாக வரைந்தும் காட்டினேன்.
ஒரு கேரிகேச்சர் ஓவியர் ஒரு முகத்தை எப்படி கவனிக்கிறார்? என்னன்ன விசயங்களை எடுத்து, தன் ஓவியத்தில் மிகைப்படுத்துகிறார்? இதில் நான் எந்த அளவில் அதை தருகிறேன்? ஒரு நபரை கேரிகேசராக வரைந்தால் அவருக்கு பிடிக்கிறதா இல்லையா என்பதையும் நான் விளக்கினேன். ஒரு மாணவரையும், மாணவியையும் என் எதிரில் வைத்து, அவர்களின் முக அடையாளங்களை சொல்லி, அவர்களை அந்த நிமிடத்திலேயே கேரிகேசராக வரைந்து காட்டினேன்... எனக்கு பாராட்டாக கைத்தட்டுகளை அளித்தனர்...
தினமும், கண்ணாடியில் அவர்கள் முகத்தை அவர்களே பார்த்துக்கொள்வதால், அந்த முகத்தில் உள்ள அடையாளங்களை அறியச்செய்து, அதையே நீங்கள் ஓவியமாக்குங்கள் என்று பயிற்சி செய்ய சொன்னேன். அவர்கள் வரைந்துகொண்டிருக்கையில், நான் ஓவ்வொருவரின் ஓவியத்திலும் அவர்கள், இன்னமும் சேர்த்துக்கொள்ளவேண்டிய சில விசயங்களை சொல்லியும், வரைந்தும் காட்டினேன்.
ஒரு வகுப்புபிற்கான நேரம் கடந்தும் ஆர்வமாக வரைந்துகொண்டிருந்தனர். கூடுதாலாக நான் விரும்பும் எல்லா மாணவ, மாணவியருக்கும், அவர்களை நானே கேரிகேச்சராகவும் வரைந்துதந்தேன்...
உண்மையாகவே இந்த நேரத்திற்குள் அவர்கள் கேரிகேச்சரை ஒரு தூண்டுதாலாக வைத்து, தன் முயற்சி, பயிற்சிகளால் செமைப்படுத்திக்கொண்டால் மட்டுமே அதை செய்ய இயலும்... ஆனால் அதுவே இந்த நேரத்திற்குள்ளாக, இவ்வளவு விசயங்களையாவது அங்கே தரமுடிந்ததே என நான் திருப்திபட்டுக்கொண்டேன்...
பயிலரங்க அமைப்பாளர்களுக்கு என் மனம் கனிந்த நன்றி...
Caricature Workshop at Festember
September 27, 2015 Sugumarje
Caricature Workshop at Festember 2015
by Caricaturist Sugumarje
The Festember 2015 team in NIT, Trichy; talks with me for
their idea, to run Caricature workshop on past July onwards. Everyone knows, it will be run on September
month on NIT campus. Various students come to join on this Festember, one of
the great events on every year.
I accepted and marked the date on my schedule desk after the
long day’s discussion. The team set 25th September on their
Festember 2015.
On that day of 25th I reached NIT on my bike (PassionXPro)
at that time, near to 9.30am onwards. In
entrance I inform to guards, write my details on their record. Then I reached Orion
Building is located on the left side, opposite of the Canteen.
After some introduction with Team, they set LCD projector
with my laptop and check the Wacom pen tablet with some Caricatures. Yes here,
I used digital equipments for this Caricature workshop. We started the workshop
First batch at 11.00 am. Second batch started on 3.30pm. Totally we are being with
more than 90 students. I come to know and happy, they loved the Caricature and
very interesting to learning something new from me.
I started the workshop with my work experience, how I start
the Caricature, how I set it for me as a business, how the caricature makes an interesting
on everyone with my bad English… I request all students to draw something on notebook
for understanding their art knowledge level.
Sure they are superb in art. Most of students do best in line art, some
students has jerk lines, but they did their best.
On lesson intro level, I clear them; What is art? How it
explore our thoughts? How we use as a Language? Why we interesting on art and
all
On lesson level, I give the difference between the Traditional
art, Realism, Modern art, Cartoon and Caricature with some sample art. Then I give
the basic of the Caricature with sample drawing… How Caricature exaggerated the
person’s identity? How Caricaturist understands the person or object? How they
bring out in their Caricature art?
On Study level, I give an idea to understand the facial recognize
with their own face, surely, every day they see themselves and record on mind
when standing opposite the mirror. And I
did demo Caricature with on boy student and one girl student on stage. I explain
to all students, how I see this boy/girl and what I seeing and how I exaggerate
on the Caricature. I did live draw on my laptop with my Wacom Pen tablet. After
some minutes they give great applause and happy with my result on Caricature.
On Study second level. I teach them different between with
Natural object and Human created object. Actually Human Created objects are
surely has the form, geometry and all. And I give some guide to, How you see
the object and subjects? How you make a proportion? How is anatomy works?
On third level, I give a lesson for their fingers with Foundation
steps of art, Human head parts, how we prepare, how to fix any face on that
form, after compete that, I request them, “do draw yourself as a Caricature. If
you not remind you in mind, do click, make a selfie and draw”
After 20 more minutes, I checked everyone, do some
suggestion sketch, and educate them…
Finally I run a Live Caricature with Students. Really I was happy with them on the Caricature Workshop and I gave my best. The result it superb and every on love that.
Finally I run a Live Caricature with Students. Really I was happy with them on the Caricature Workshop and I gave my best. The result it superb and every on love that.
Thanks to the Festember 2015, Caricature Workshop team, Miss. Ananthi,
Miss. Keerthana, Miss. Madhumitha, Miss. Rathika and Mr. Mahendran, are made
this great event to NIT Students on Festember 2015. Thanks to all!
Caricature / caricaturist-sugumarje / festember / NIT / trichy / workshop
Let Do Art
June 18, 2015 Sugumarje
ஓவியர் அரஸ்
என் பதின்ம வயதுகளில் தன் ஓவியங்களால் என்னை வசீகரித்தவர். அழகாக வளைந்து நெளியும் கோடுகளாலும், வண்ணங்களை வீசி மேலும் அழகு சேர்த்து, கதைக்கு மேலும் மெருகூட்டி அக்கதையை படிக்கத்தூண்டுவார்...
எத்தனை எத்தனை ஓவியங்கள் இன்னமும் என் கண்ணுக்குள்ளே சுழன்றோடுகின்றன. இவர் ஓவியங்களில் ஆண்கள் ஏறக்குறைய “ரஜினி”சாயலிலும், பெண்கள் “ராதா” சாயலிலும் இருப்பதை உணர்ந்திருக்கிறேன்...
அந்தக்காலம் என்பது சற்றேறக்குறைய முப்பதாண்டு காலம் முன்னேதான். ஒரு ரசிகன் தூர நின்றுதான் தன்னை தன் மனம் கவர்ந்தவர்களுக்கு அறிமுகப்படுத்திக்கொள்ள இயலும், சில வேளைகளில் அதும் நிறைவேறாது... என் வாழ்வில் அப்படி யாரையும் நான் நேரடியாக சந்தித்தது இல்லை... பேஸ்புக், டிவீட்டர் வந்தது... கொஞ்சம் நெருங்கி நான் உங்கள் ரசிகன் என்று அவர்களுக்கு தெரியப்படுத்த முடிகிறது.
நான் முழுநேர ஓவியனாக மாறுவதற்கு முன்னால், சில அடிப்படை ஓவியம் பழக “அரஸ்” அவர்களின் ஓவியங்களை பார்த்து வரைந்திருக்கிறேன். வண்ணங்களும் நிறைத்து பழகியிருக்கிறேன்... ஆனால் எனக்கென நினைத்தபோக்கில்... ஒரு ஓவியனின் கடினகாலப்பகுதி தனக்கென ஒரு பாணி உருவாக்கும் காலமே... பழகும் காலத்திலேயே இதை கவனத்தில் கொண்டால் சீக்கிரமே தன் பாணியை தக்கவைக்கலாம்...
அந்த பதின்வயதுகளில் நான் ஓவியத்தை பொழுதுபோக்காகவும், நண்பர்களுக்கு வரைந்து தருவதாகவும், சிறு குழந்தைகளை மகிழ்விப்பதற்க்காகவுமே நான் ஓவியம் வரைந்துகொண்டிருந்தேன்... நான் முழுநேர ஓவியனாக மாறிப்போனது அதிசயமே...
நான் அதிசயித்த ஒரு ஓவியரை, நான் வரைந்து என்னை அறிமுகப்படுத்துகொள்வென் என்பதும் ஒரு அதிசய நிகழ்வே...
நான் வருத்தப்படும் நிலை ஒன்றை இங்கே தெரியப்படுத்துகிறேன்... கிட்டதட்ட மூன்று தலைமுறைகள், என்காலத்தில் கிடைத்த ஓவிய அனுபவத்தை இழந்து திரிகின்றனர்... இது இந்தியாவின் சாபக்கேடு... ஓவியம் தொடர்பான வேலையில் இருப்பவர்களுக்கு கூட மிகச்சரியாக ஓவியம் குறித்த அறிவும், அனுபவமும் இல்லாதிருக்கிறார்கள். தாத்தாவிற்கு ஓவிய அறிவில்லை, அதனால் பிள்ளைக்கும் இல்லை, பிள்ளைக்கு இல்லாததால் அவர் பேரனுக்கும் இல்லை... ஆக பேரனுக்கு இல்லாததால்...
வெளிநாடுகளில் 16 வயதிற்குள்ளாக இருக்கும் இளைஞர்கள், மிக திறமையாக ஓவியங்கள் கற்று தேர்ந்து, அதற்கான அறிவைப்பெற்று, அனுபவ ஓவியருக்கு நிகராக, ஓவியங்களை வரைந்து வெளியிட்டு, வேலையையும், விற்று பணத்தையும் பெற்று, தான் தனக்கு பிடித்தவேலையில் ஈடுபட்டு மிக நிறைவாக வாழ்வதை, கொஞ்சம் வலையில் தேடினால் கண்டுபிடிக்கலாம்...
மனம் நிறைவில்லாத நிலையில், பக்குவம் கிடைபதில்லை... எங்கே பார்த்தாலும் ஒரே சண்டைக்காடு... தானும் நிம்மதியின்றி பிறரையும் நிம்மதியின்றி கெடுத்து, கெட்டொழுகின்றனர்...
பிறக்கும் பொழுது எல்லோரும் ஓவியரே... ஆனால் அதை காப்பாற்றி தொடர்ந்து முயற்சி செய்பவரே ஓவியராகிறார்... நவீன ஓவிய பிதா “பிக்காசோ” சொன்னதாகும்...
உங்கள் பிள்ளைக்கு ஓவியம் பிடிக்கும், அவன் வரைகிறேன் என்று சொன்னால். அவனுக்கு ஒரு காகிதத்தையும், வரைகோலையும் கையில் கொடுங்கள்... உங்களுக்கு ஓவியம் தெரியுமென்றால், அவனுக்கு கற்றும் கொடுங்கள்... இல்லையேல் அவனிடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள்...
![]() |
| Click the Image, See Bigger View |
எத்தனை எத்தனை ஓவியங்கள் இன்னமும் என் கண்ணுக்குள்ளே சுழன்றோடுகின்றன. இவர் ஓவியங்களில் ஆண்கள் ஏறக்குறைய “ரஜினி”சாயலிலும், பெண்கள் “ராதா” சாயலிலும் இருப்பதை உணர்ந்திருக்கிறேன்...
அந்தக்காலம் என்பது சற்றேறக்குறைய முப்பதாண்டு காலம் முன்னேதான். ஒரு ரசிகன் தூர நின்றுதான் தன்னை தன் மனம் கவர்ந்தவர்களுக்கு அறிமுகப்படுத்திக்கொள்ள இயலும், சில வேளைகளில் அதும் நிறைவேறாது... என் வாழ்வில் அப்படி யாரையும் நான் நேரடியாக சந்தித்தது இல்லை... பேஸ்புக், டிவீட்டர் வந்தது... கொஞ்சம் நெருங்கி நான் உங்கள் ரசிகன் என்று அவர்களுக்கு தெரியப்படுத்த முடிகிறது.
நான் முழுநேர ஓவியனாக மாறுவதற்கு முன்னால், சில அடிப்படை ஓவியம் பழக “அரஸ்” அவர்களின் ஓவியங்களை பார்த்து வரைந்திருக்கிறேன். வண்ணங்களும் நிறைத்து பழகியிருக்கிறேன்... ஆனால் எனக்கென நினைத்தபோக்கில்... ஒரு ஓவியனின் கடினகாலப்பகுதி தனக்கென ஒரு பாணி உருவாக்கும் காலமே... பழகும் காலத்திலேயே இதை கவனத்தில் கொண்டால் சீக்கிரமே தன் பாணியை தக்கவைக்கலாம்...
அந்த பதின்வயதுகளில் நான் ஓவியத்தை பொழுதுபோக்காகவும், நண்பர்களுக்கு வரைந்து தருவதாகவும், சிறு குழந்தைகளை மகிழ்விப்பதற்க்காகவுமே நான் ஓவியம் வரைந்துகொண்டிருந்தேன்... நான் முழுநேர ஓவியனாக மாறிப்போனது அதிசயமே...
நான் அதிசயித்த ஒரு ஓவியரை, நான் வரைந்து என்னை அறிமுகப்படுத்துகொள்வென் என்பதும் ஒரு அதிசய நிகழ்வே...
நான் வருத்தப்படும் நிலை ஒன்றை இங்கே தெரியப்படுத்துகிறேன்... கிட்டதட்ட மூன்று தலைமுறைகள், என்காலத்தில் கிடைத்த ஓவிய அனுபவத்தை இழந்து திரிகின்றனர்... இது இந்தியாவின் சாபக்கேடு... ஓவியம் தொடர்பான வேலையில் இருப்பவர்களுக்கு கூட மிகச்சரியாக ஓவியம் குறித்த அறிவும், அனுபவமும் இல்லாதிருக்கிறார்கள். தாத்தாவிற்கு ஓவிய அறிவில்லை, அதனால் பிள்ளைக்கும் இல்லை, பிள்ளைக்கு இல்லாததால் அவர் பேரனுக்கும் இல்லை... ஆக பேரனுக்கு இல்லாததால்...
வெளிநாடுகளில் 16 வயதிற்குள்ளாக இருக்கும் இளைஞர்கள், மிக திறமையாக ஓவியங்கள் கற்று தேர்ந்து, அதற்கான அறிவைப்பெற்று, அனுபவ ஓவியருக்கு நிகராக, ஓவியங்களை வரைந்து வெளியிட்டு, வேலையையும், விற்று பணத்தையும் பெற்று, தான் தனக்கு பிடித்தவேலையில் ஈடுபட்டு மிக நிறைவாக வாழ்வதை, கொஞ்சம் வலையில் தேடினால் கண்டுபிடிக்கலாம்...
மனம் நிறைவில்லாத நிலையில், பக்குவம் கிடைபதில்லை... எங்கே பார்த்தாலும் ஒரே சண்டைக்காடு... தானும் நிம்மதியின்றி பிறரையும் நிம்மதியின்றி கெடுத்து, கெட்டொழுகின்றனர்...
பிறக்கும் பொழுது எல்லோரும் ஓவியரே... ஆனால் அதை காப்பாற்றி தொடர்ந்து முயற்சி செய்பவரே ஓவியராகிறார்... நவீன ஓவிய பிதா “பிக்காசோ” சொன்னதாகும்...
உங்கள் பிள்ளைக்கு ஓவியம் பிடிக்கும், அவன் வரைகிறேன் என்று சொன்னால். அவனுக்கு ஒரு காகிதத்தையும், வரைகோலையும் கையில் கொடுங்கள்... உங்களுக்கு ஓவியம் தெரியுமென்றால், அவனுக்கு கற்றும் கொடுங்கள்... இல்லையேல் அவனிடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள்...
aras / Art / Artist / Caricature / caricaturist / drawing / learn-art / learning / sugumarje / அரஸ்
Ask a boon
June 16, 2015 Sugumarje
சென்னையிலிருந்து பல்லவன் தொடர் வண்டியில் திருச்சி வந்துகொண்டிருக்கிறேன். மதிய வேளையில் கிளம்பி இரவு திருச்சி வந்து பின்னிரவில் காரைக்குடி வரை செல்லுமாறு நீடிக்கப்பட்டிருக்கிறது... எப்பொதும் நான் தேர்வு செய்வது சாளரம் சார்ந்த இருக்கை... வண்டியின் விரைவில் முகத்தில் மோதிதள்ளும் காற்று தரும் அனுபவம் விட்டுவிட முடியுமா?
என் இருக்கைக்கு அருகே, ஒரு இளைஞன் (டி சர்ட், ஜீன்ஸ்), எதிரே ஒரு பெண் (மடிப்பு பிசகாத சேலை), ஆண் (பேண்ட், முழுக்கை சட்டை).. இடதுபக்கம் நடைபாதைக்கு அப்புறத்தில் இரு பெண்கள் (சாதா பட்டு சேலை), அவர்களுக்கு எதிர் இருக்கையில் இரண்டு ஆண்கள் (கதர் சட்டை வேட்டி). பெண்கள் இருவரும் கிட்டதட்ட ஐம்பதை நெருங்குபவர்களாக இருக்கும். ஆண்கள் அறுபது தொடக்கமாக இருக்கலாம்,
நானாக பேச்சை தொடங்கும் வழக்கம் எனக்கில்லை என்பதால்... என்னை ஆளைவிடுங்கப்பா என்று நினைத்து, என் ஓவிய காகிதங்கள் எடுத்து வெறுமனே வரைந்து பழக ஆரம்பித்தேன். கதர் சட்டை வேட்டியில், கனத்த ஒருவர் “யாரையடா கலாய்க்கலாம்” என்றபடி துறுதுறுத்தது எனக்கு புரிந்தது... தங்களுக்கிடையேயான வியாபாரம் குறித்து இன்னொரு கதர் சட்டை வேட்டியிடம் புலம்பியவாறு வந்தார். இடையே தொடர்வண்டி ஊழியர்கள் விற்கும் சில திண்பண்டங்களை வாங்கி சாப்பிட்டுக்கொண்டனர். அதை எங்கள் எல்லோருக்கும் பகிர நினைக்கையில் எல்லோரும் மறுத்துவிட்டோம்.
தொடர்வண்டி வேகமெடுத்திருந்தது... “என்னாய்யா இது, என்னமோ விழுந்த வீடு மாதிரியா ஊருக்கு போறது, கலகலன்னு பேசி சிரிச்சிக்க வேணாமா?” என்று பேசிக்கொண்டே... என் அருகில் இருந்த இளைஞரை கேட்டார்...
“என்ன திருச்சிக்கா தம்பி?”
“ஆமாங்க”
“படிக்கிறீங்களா?”
“இல்ல, வேலைக்கி போயிட்டுருக்கேன்... லீவ்க்கு ஊருக்குபோறேன்”
“எவ்வளோ சம்பளம்?”
நான் குரலாக கேட்டுக்கொண்டிருக்க, எல்லோரும் அந்த உரையாடலை கவனிப்பது புரிந்தது...
“மாசம் 7500 ரூபாய்”
“போதுமா?”
“பத்தாதுதான்... இனி போகப்போக ஏறும்”
“நம்பலாமா”
“அப்படித்தான் சொல்லிருக்காங்க”
“என்ன படிச்சீங்க?”
“இஞ்ஜினியரிங்”
“எவ்வளவு செலவாச்சு?”
“கிட்டதட்ட ஐந்து லட்சரூபா”
“ஹ்ம். பேசாம அத பேங்கல் போட்டு, நீ தள்ளுவண்டி தள்ளி சம்பாதிச்சா கூட மாசம் பத்தாயிரம் சம்பாதிக்கலாமே?!”
கேட்ட எல்லோரும் சிரிக்க ஆரம்பித்தனர்... இளைஞனின் முகமோ தொங்கிப்போக, இந்த ஆள் கிட்ட எதுக்குடா வாய் கொடுத்தோம் என்றிருந்தது...
கதர் சட்டை வேட்டி, எல்லோரையும் பார்த்து...
“ஏங்க, சிரிக்கிறதுக்காக இத சொல்லலீங்க... நிலவரத்தை சொன்னேன், தம்பி தப்பா நினைக்காத, நாங்கல்லாம் வியாபாரிங்க, எங்களுக்கு காசு போட்டா, காசு வரணும் அவ்வோளோதான் தெரியும்... நல்லா நீயும் யோசிச்சாகூட இதுல இருக்கிற உண்மை புரியும்... அப்புறம், நீங்களும் திருச்சி தானா?”
எதிரே அமர்ந்திருந்த இருபெண்களை நோக்கி கேட்டார்.
“நாங்க ஸ்ரீரங்கம்”
“அதென்னா, அதும் திருச்சீலதானே இருக்கு”
மீண்டும் எல்லோரும் சிரிக்க ஆரம்பித்தனர்...
நகைச்சுவை வழியாக பிறரை கவர்தல் என்பது அவருக்கு வாய் வந்த கலையாக இருக்கும் என்பது தெரிந்தது... இதற்கிடையில் அந்த இளைஞன், எழுந்து வாசல் அருகே நின்று ஓடுகிற மரங்களையும், மலைகளையும் பார்க்க ஆரம்பித்துவிட்டான்.
ஓவொருவராக நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று கேட்டுக்கொண்டே, என்னை நோக்கி, என்னிடம் அதே கேள்வியை கேட்டார்...
“நான் ஓவியர்”
“அதான் என்னை ஆளை விடுங்கடான்னு, அப்போ இருந்து என்னமோ பேப்பர்ல கிறுக்க ஆரம்பிச்சிட்டீங்க, பார்த்தென்... தனி உலகத்திலே இருக்கிறவங்க ஆச்சே”
நான் புன்னகைத்தேன்...
“ஓவியம்ன்னா என்னமாதிரியான ஓவியம்?”
“உங்களை வரைந்தே காட்டிவிடுகிறேன்”
“பார்த்தீங்களா... நாமலாம் வாய் வலிக்க பேசினா, இவரு பேசாம, ஓவியம் வழியா பேச போறாரு”
கொண்டுவந்திருந்த ஓவிய அட்டையில், கரித்துண்டு (Charcoal) மூலமாக அவரை கேரிகேச்சராக (Caricature) செய்தேன்... ஒரு நிமிடத்திற்குள்ளாக வரைந்து அவரிடம் தந்தேன்.
“நானா இது... எவனோ மாதிரி இருக்கு?!”
“அப்படித்தான் உங்களுக்கே தோன்றும்”
“ஓஹோ... சரி வரைஞ்சி கொடுத்திட்டீங்க... இதை வச்சி என்னா பன்றது?”
எல்லோரும் சிரிக்க ஆரம்பித்தனர்.
நானும் அவரை நோக்கி புன்னகைத்தேன்...
மனதிற்குள் “நீங்கள் ஒரு கழுதையாக இருக்கும்பட்சத்தில் அந்த காகிதத்தை சாப்பிடலாம்” என்று சொல்லிக்கொண்டேன்.
“ஒரு ஓவியத்தை என்ன செய்வது என்று கேட்பவருக்கு, நான் ஓவியம் தந்தது தப்புத்தான்... அதை கொடுங்க”
“அட, ஏன் தம்பி கோச்சுகிறீங்க... உங்க ஞாபகமா வச்சிக்கிறேன்... நன்றி”
“நல்லது”
அதற்கடுத்த உரையாடல்களை கவனிக்காது, ஓவியத்தில் நான் கவனம் இழந்தேன். அடுத்து என்ன பேசினார் என்பது என் காதுகளை தூண்டவில்லை... இப்படி இருக்கும் சில சாமனியர்களுக்கு, அந்த கடவுளே கூட கண்ணுக்கு தெரிவதில்லை... ஆனாலும் இத்தகைய மனிதர்களை நான் குறை சொல்லுவதற்கில்லை...
நான் தியானம் கற்றுணர்ந்தபொழுது... அன்பொளி மாத இதழில் படித்தது...
வேதாத்திரி மகரிஷியிடம்...
“ஐயா, பிறவிப்பயன் போக்க, தன் பிறப்பை உணர்ந்து, தவமியற்றி தன்னை தூய்மை செய்துகொள்ளும் வாய்ப்பாக நாங்கள் உங்களிடம் வந்திருக்கிறோம். ஆனால் இது அறியாமல் வறுமையிலும், இது பற்றி ஒன்றுமே அறியாத ஒரு குடியானவன் இருக்கிறானே, சொன்னாலும் உதாசீனம் செய்கிறானே அவனை நினைத்து எனக்கு வருத்தமாக இருக்கிறது... என்ன செய்வது” என்று கேட்க...
“இந்தபிறவியில் நீங்கள் உங்களை தூய்மை செய்துகொள்ளவேண்டும் என்பது உங்களுக்கு கிடைத்த வரம். அந்த குடியானவனுக்கு அது இன்னமும் கிடைக்கவில்லை. இனிவரும் காலங்களில் கிடைக்கலாம், அல்லது அவன் வழி வருவோருக்கு கிடைக்கலாம். அவனை அப்படியே விட்டுவிடுதல் நலமே”
நான் ஓவியத்தை மதிக்காதவர்களையும் அப்படியே விட்டுவிடுகிறேன்...
என் இருக்கைக்கு அருகே, ஒரு இளைஞன் (டி சர்ட், ஜீன்ஸ்), எதிரே ஒரு பெண் (மடிப்பு பிசகாத சேலை), ஆண் (பேண்ட், முழுக்கை சட்டை).. இடதுபக்கம் நடைபாதைக்கு அப்புறத்தில் இரு பெண்கள் (சாதா பட்டு சேலை), அவர்களுக்கு எதிர் இருக்கையில் இரண்டு ஆண்கள் (கதர் சட்டை வேட்டி). பெண்கள் இருவரும் கிட்டதட்ட ஐம்பதை நெருங்குபவர்களாக இருக்கும். ஆண்கள் அறுபது தொடக்கமாக இருக்கலாம்,
நானாக பேச்சை தொடங்கும் வழக்கம் எனக்கில்லை என்பதால்... என்னை ஆளைவிடுங்கப்பா என்று நினைத்து, என் ஓவிய காகிதங்கள் எடுத்து வெறுமனே வரைந்து பழக ஆரம்பித்தேன். கதர் சட்டை வேட்டியில், கனத்த ஒருவர் “யாரையடா கலாய்க்கலாம்” என்றபடி துறுதுறுத்தது எனக்கு புரிந்தது... தங்களுக்கிடையேயான வியாபாரம் குறித்து இன்னொரு கதர் சட்டை வேட்டியிடம் புலம்பியவாறு வந்தார். இடையே தொடர்வண்டி ஊழியர்கள் விற்கும் சில திண்பண்டங்களை வாங்கி சாப்பிட்டுக்கொண்டனர். அதை எங்கள் எல்லோருக்கும் பகிர நினைக்கையில் எல்லோரும் மறுத்துவிட்டோம்.
தொடர்வண்டி வேகமெடுத்திருந்தது... “என்னாய்யா இது, என்னமோ விழுந்த வீடு மாதிரியா ஊருக்கு போறது, கலகலன்னு பேசி சிரிச்சிக்க வேணாமா?” என்று பேசிக்கொண்டே... என் அருகில் இருந்த இளைஞரை கேட்டார்...“என்ன திருச்சிக்கா தம்பி?”
“ஆமாங்க”
“படிக்கிறீங்களா?”
“இல்ல, வேலைக்கி போயிட்டுருக்கேன்... லீவ்க்கு ஊருக்குபோறேன்”
“எவ்வளோ சம்பளம்?”
நான் குரலாக கேட்டுக்கொண்டிருக்க, எல்லோரும் அந்த உரையாடலை கவனிப்பது புரிந்தது...
“மாசம் 7500 ரூபாய்”
“போதுமா?”
“பத்தாதுதான்... இனி போகப்போக ஏறும்”
“நம்பலாமா”
“அப்படித்தான் சொல்லிருக்காங்க”
“என்ன படிச்சீங்க?”
“இஞ்ஜினியரிங்”
“எவ்வளவு செலவாச்சு?”
“கிட்டதட்ட ஐந்து லட்சரூபா”
“ஹ்ம். பேசாம அத பேங்கல் போட்டு, நீ தள்ளுவண்டி தள்ளி சம்பாதிச்சா கூட மாசம் பத்தாயிரம் சம்பாதிக்கலாமே?!”
கேட்ட எல்லோரும் சிரிக்க ஆரம்பித்தனர்... இளைஞனின் முகமோ தொங்கிப்போக, இந்த ஆள் கிட்ட எதுக்குடா வாய் கொடுத்தோம் என்றிருந்தது...
கதர் சட்டை வேட்டி, எல்லோரையும் பார்த்து...
“ஏங்க, சிரிக்கிறதுக்காக இத சொல்லலீங்க... நிலவரத்தை சொன்னேன், தம்பி தப்பா நினைக்காத, நாங்கல்லாம் வியாபாரிங்க, எங்களுக்கு காசு போட்டா, காசு வரணும் அவ்வோளோதான் தெரியும்... நல்லா நீயும் யோசிச்சாகூட இதுல இருக்கிற உண்மை புரியும்... அப்புறம், நீங்களும் திருச்சி தானா?”
எதிரே அமர்ந்திருந்த இருபெண்களை நோக்கி கேட்டார்.
“நாங்க ஸ்ரீரங்கம்”
“அதென்னா, அதும் திருச்சீலதானே இருக்கு”
மீண்டும் எல்லோரும் சிரிக்க ஆரம்பித்தனர்...
நகைச்சுவை வழியாக பிறரை கவர்தல் என்பது அவருக்கு வாய் வந்த கலையாக இருக்கும் என்பது தெரிந்தது... இதற்கிடையில் அந்த இளைஞன், எழுந்து வாசல் அருகே நின்று ஓடுகிற மரங்களையும், மலைகளையும் பார்க்க ஆரம்பித்துவிட்டான்.
ஓவொருவராக நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று கேட்டுக்கொண்டே, என்னை நோக்கி, என்னிடம் அதே கேள்வியை கேட்டார்...
“நான் ஓவியர்”
“அதான் என்னை ஆளை விடுங்கடான்னு, அப்போ இருந்து என்னமோ பேப்பர்ல கிறுக்க ஆரம்பிச்சிட்டீங்க, பார்த்தென்... தனி உலகத்திலே இருக்கிறவங்க ஆச்சே”
நான் புன்னகைத்தேன்...
“ஓவியம்ன்னா என்னமாதிரியான ஓவியம்?”
“உங்களை வரைந்தே காட்டிவிடுகிறேன்”
“பார்த்தீங்களா... நாமலாம் வாய் வலிக்க பேசினா, இவரு பேசாம, ஓவியம் வழியா பேச போறாரு”
கொண்டுவந்திருந்த ஓவிய அட்டையில், கரித்துண்டு (Charcoal) மூலமாக அவரை கேரிகேச்சராக (Caricature) செய்தேன்... ஒரு நிமிடத்திற்குள்ளாக வரைந்து அவரிடம் தந்தேன்.
“நானா இது... எவனோ மாதிரி இருக்கு?!”
“அப்படித்தான் உங்களுக்கே தோன்றும்”
“ஓஹோ... சரி வரைஞ்சி கொடுத்திட்டீங்க... இதை வச்சி என்னா பன்றது?”
எல்லோரும் சிரிக்க ஆரம்பித்தனர்.
நானும் அவரை நோக்கி புன்னகைத்தேன்...
மனதிற்குள் “நீங்கள் ஒரு கழுதையாக இருக்கும்பட்சத்தில் அந்த காகிதத்தை சாப்பிடலாம்” என்று சொல்லிக்கொண்டேன்.
“ஒரு ஓவியத்தை என்ன செய்வது என்று கேட்பவருக்கு, நான் ஓவியம் தந்தது தப்புத்தான்... அதை கொடுங்க”
“அட, ஏன் தம்பி கோச்சுகிறீங்க... உங்க ஞாபகமா வச்சிக்கிறேன்... நன்றி”
“நல்லது”
அதற்கடுத்த உரையாடல்களை கவனிக்காது, ஓவியத்தில் நான் கவனம் இழந்தேன். அடுத்து என்ன பேசினார் என்பது என் காதுகளை தூண்டவில்லை... இப்படி இருக்கும் சில சாமனியர்களுக்கு, அந்த கடவுளே கூட கண்ணுக்கு தெரிவதில்லை... ஆனாலும் இத்தகைய மனிதர்களை நான் குறை சொல்லுவதற்கில்லை...
நான் தியானம் கற்றுணர்ந்தபொழுது... அன்பொளி மாத இதழில் படித்தது...
வேதாத்திரி மகரிஷியிடம்...
“ஐயா, பிறவிப்பயன் போக்க, தன் பிறப்பை உணர்ந்து, தவமியற்றி தன்னை தூய்மை செய்துகொள்ளும் வாய்ப்பாக நாங்கள் உங்களிடம் வந்திருக்கிறோம். ஆனால் இது அறியாமல் வறுமையிலும், இது பற்றி ஒன்றுமே அறியாத ஒரு குடியானவன் இருக்கிறானே, சொன்னாலும் உதாசீனம் செய்கிறானே அவனை நினைத்து எனக்கு வருத்தமாக இருக்கிறது... என்ன செய்வது” என்று கேட்க...
“இந்தபிறவியில் நீங்கள் உங்களை தூய்மை செய்துகொள்ளவேண்டும் என்பது உங்களுக்கு கிடைத்த வரம். அந்த குடியானவனுக்கு அது இன்னமும் கிடைக்கவில்லை. இனிவரும் காலங்களில் கிடைக்கலாம், அல்லது அவன் வழி வருவோருக்கு கிடைக்கலாம். அவனை அப்படியே விட்டுவிடுதல் நலமே”
நான் ஓவியத்தை மதிக்காதவர்களையும் அப்படியே விட்டுவிடுகிறேன்...
Move now
June 07, 2015 Sugumarje
ஆ, ரம்பம்...
யாரோ ஒருவர் நம்மை கவனித்துகொண்டே இருப்பதுபோலான எண்ணத்தின் அடிப்படையில் இங்கே சுயவிளக்கம் தரவேண்டிதாகிறது... இது ஏளத்திற்குரியதுதான்...
எழுதுவதை நிறுத்தியதற்கு காரணம் கிடைத்தது போலவே எழுத ஆரம்பிக்கவும் காரணங்கள் கிடைக்கிறது. கடந்த பத்து மாதங்களுக்குப்பிறகு அதே தளத்தில் வேறாக நிற்கிறேன்... அதனால் என் எழுத்துக்களில் ஓவியப்பின்ணணி கலந்திருக்கும் என்று நம்பலாம். என் ஓவிய வேலைகளின் அனுபவம் சார்ந்த நிகழ்ச்சிகளை தருவேன்... முன்சொன்னதுபோலவே எழுத்துக்கள் மூலமாக கொஞ்சம் என்னை நிறுத்திச்செல்லும் நிகழ்வாக ஆரம்பித்திருக்கிறேன்.
இதுமுடிவாக
நினைத்த மறுகணம்
வேறென்றின் நுனி
பற்றியிருந்திருக்கிறேன்...
பின்னது மறந்து
கடந்துசெல்ல
ஏதேனும் ஒன்றின் ஆரம்பம்
ஓவியனுக்கு மட்டுமல்ல
எல்லோருக்கும்
தேவையாகவே இருக்கிறது...
சுவாசித்தல் அற்றுப்போகும்வரை.
யாரோ ஒருவர் நம்மை கவனித்துகொண்டே இருப்பதுபோலான எண்ணத்தின் அடிப்படையில் இங்கே சுயவிளக்கம் தரவேண்டிதாகிறது... இது ஏளத்திற்குரியதுதான்...
எழுதுவதை நிறுத்தியதற்கு காரணம் கிடைத்தது போலவே எழுத ஆரம்பிக்கவும் காரணங்கள் கிடைக்கிறது. கடந்த பத்து மாதங்களுக்குப்பிறகு அதே தளத்தில் வேறாக நிற்கிறேன்... அதனால் என் எழுத்துக்களில் ஓவியப்பின்ணணி கலந்திருக்கும் என்று நம்பலாம். என் ஓவிய வேலைகளின் அனுபவம் சார்ந்த நிகழ்ச்சிகளை தருவேன்... முன்சொன்னதுபோலவே எழுத்துக்கள் மூலமாக கொஞ்சம் என்னை நிறுத்திச்செல்லும் நிகழ்வாக ஆரம்பித்திருக்கிறேன்.
இதுமுடிவாக
நினைத்த மறுகணம்
வேறென்றின் நுனி
பற்றியிருந்திருக்கிறேன்...
பின்னது மறந்து
கடந்துசெல்ல
ஏதேனும் ஒன்றின் ஆரம்பம்
ஓவியனுக்கு மட்டுமல்ல
எல்லோருக்கும்
தேவையாகவே இருக்கிறது...
சுவாசித்தல் அற்றுப்போகும்வரை.
Artist / caricaturist / sugumarje / Writes / கவிதை
Subscribe to:
Comments
(
Atom
)








