What is the necessity of exercise? what is the difference within exercise and yoga asana? | CJ

What is the necessity of exercise? what is the difference within exercise and yoga asana?

What is the necessity of exercise? what is the difference within exercise and yoga asana?


நம்முடைய வாழ்வில், உடற்பயிற்சியின் அவசியம் என்ன? யோகாசனத்திற்கும் உடற்பயிற்சிக்கும் உள்ள வேறுபாடு என்ன?

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, நம்முடைய வாழ்வில், உடற்பயிற்சியின் அவசியம் என்ன? யோகாசனத்திற்கும் உடற்பயிற்சிக்கும் உள்ள வேறுபாடு என்ன?


பதில்:

ஒரு மனிதனுடைய வாழ்வியல் இயக்கங்கள், அவனுடைய எண்ணம், சொல், செயல் இவற்றை அடிப்படையாக கொண்டுள்ளது. இதில் அவனின் உடல், மனம், மூளை ஆகிய முக்கிய பங்கு வகிக்கிறது. உடல், மனம், மூளை ஆகிய மூன்றிலும், அந்த இயக்கம் எல்லாமே பதிவாகவும் மாறிவிடுகிறது. பிறந்த குழந்தையின் இயக்கம், பெரும்பான்மையாக, பரம்பரை வழியான, உடல் செல்களின் பதிவுகளாக இருக்கிறது எனலாம். 

        நம்முடைய தினசரி நடவடிக்கைகளில், நாம் ஒன்றி செய்யும் பொழுது கற்பதும், பிறகு அனுபவத்தில் தானாக நடப்பதையும் இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம். உதாரணமாக, கார் ஒட்டிப் பழகும் பொழுது, அடிப்படை முதல், பலவித நுணுக்கங்களை நாம் கற்றுத்தேர்கிறோம். ஆரம்பத்தில் பயம் இருந்தாலும் கூட, நம்பிக்கையோடு கற்றுக்கொள்கிறோம். ஓராண்டு காலத்திற்குள்ளாகவே, உடல், மூளை, மனம், கண்கள் கூடி இயங்க, கார் ஓட்டுதல் தானாகவே நடைபெறுவதை நாம் உணரமுடியும். அதாவது, இயல்பான ஒர் வெளிப்பாடாக மாறிவிடும். இதுவே கற்றல், அனுபவம், இயல்பு என்றாகிறது.

இப்படியாக நல்லதும், தீயதும் நமக்குள் பதிகிறது. தீயுது நம்மிடம், நமக்குள்ளாக தேங்குமானால், அது வலியாகவும், நோயாகவும்கூட மாறிவிடும். அதை மாற்றிடவே, நம்மை திருத்தி அமைத்தல் அவசியம். இப்படி உடல், மனம், மூளை ஆகிய பதிவுகள் திருத்தியமைக்க, உடற்பயிற்சி நிச்சயமாக உதவுகிறது. குரு மகான் வேதாத்திரி மகரிஷி சொல்லுவதை, நாம் இங்கே கவனிப்போமா?

பாவப் பதிவுகள் உடலில் நோயாகவும், உள்ளத்தில் களங்கமாகவும் தோன்றிக் கொண்டிருக்கின்றன. நோய்கள் உடலில் தான் தொற்றிக் கொண்டிருக்கின்றன. உடலில் தேங்கியுள்ள நோய்களின் பதிவுகளை போக்குவதற்கு செல்களிடையே சீரான இயக்கம் தேவை. செங்கல்லை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி சிமிண்டால் இணைத்து கட்டிடம் கட்டுவதைப் போல, செல்களினால் இந்த உடம்பு கட்டப்பட்டு அதை சீவகாந்தம் இணைத்துப் பிடித்துக் கொண்டுள்ளது.

ஒரு செயலைச் செய்கிறோம் என்றால் அந்தச் செயலுக்குத் தகுந்தவாறு உடல் செல்களைச் சீரமைத்தால் தான் அதைச் செய்ய முடியும். உதாரணமாக நீரில் நீந்த வேண்டும் என்றால் முதலில் பயிற்சி செய்து உடற்செல்களைப் பழக்கி விட்டால் பிறகு எப்பொழுது நீரில் விழுந்தாலும் உடற்செல்கள் அதன் பழக்க வழியே இயங்கி நம்மைக் கரை சேர்த்து விடும். ஒரு தடவை செய்து பழகிவிட்டால் மீண்டும் மீண்டும் அந்த வழியே தான் அந்தச் செல்கள் இயங்கும். செயல்களுக்குத் தகுந்தபடி செல்களை அமைக்கப் பழகி விட்டால் அதன்படி அவை இயங்கும்.

நாம் பிறந்தது முதல் இன்று வரை என்னென்ன செயல்களைச் செய்து பழகினோமோ, அந்தச் செயல்களுக்குத் தகுந்தவாறு செல்கள் நமது உடலில் அமைந்துள்ளன. அதை நன்மையான முறையில் மாற்றி அமைக்கவில்லை என்றால் மனதால் ஒன்றைச் செய்யலாம் என்று நினைத்தாலும் உடலானது அதற்கு ஒத்து வராது. அதனால் செல்கள் அனைத்தும் காந்த துருவ அமைப்பில் (Polarity arrangement) அமைந்துள்ளது. அதற்குள் காந்த சக்தி சுழன்று ஓடிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு செல்லும் அந்த காந்தத்தை வாங்கி அழுத்தம், ஒளி, ஒலி, சுவை, மணம் என மாற்றி உடலை நடத்தி வருகின்றது.

ஆகவே மனிதன் செயல்புரிய உடற்செல்களின் சீரான இயக்கம் தேவை. உடற்செல்களின் இயக்கத்திற்கு உடற்பயிற்சி தேவை. யோகாசனம் என்பது வடமொழி. உடற்பயிற்சி என்பது தமிழ், என்பதாக தெளிவான விளக்கம் அளிக்கிறார், குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

வாழ்க வளமுடன்.

-