CJ for You: humanity and human

humanity and human

Showing posts with label humanity and human. Show all posts
Showing posts with label humanity and human. Show all posts

What do the planets do to me?! - 01


கிரகங்கள் என்னை என்ன செய்கிறது?!


பூமியும் ஓர் கோள் தான்!

கிரகங்கள் என்பதை விட கோள்கள் சிறப்பான வார்த்தையாக உள்ளது. அவை கோள வடிமானவை. இயங்குபவை என்றும் அர்த்தமாகும். இந்த பிரபஞ்சம் முழுதும் கோள்களால் நிரம்பியவை என்பதை ஒரு நொடி சிந்தித்துப்பாருங்கள். அத்தகைய கோள்களின் கூட்டத்தில், சூரியன் எனும் குடும்பத்தில் உள்ள, ஒரு கோளில், பூமியில் நாம் வாழ்ந்து வருகிறோம். சூரியனோடு ஒப்பிட்டால், பூமி மிகச்சிறியது, மனிதன் நிலை என்ன?

ஆனால் ஒரு சிறு துளியில் ஆரம்பித்த உயிர்வாழ்க்கை, ஓர் உயிர் தாவரமாகி, தன் மூலம் அறிந்து இன்புற்று வாழும், ஆறாம் நிலை மனிதனாக முழுமை பெற்றிருக்கிறது. எனினும் மனிதரில் பெரும்பாலோர் இவ் உண்மை உணரவில்லை. அவர்களுக்கு அதனினும் வேறான ஒரு வாழ்க்கை போதுமானதாக இருக்கிறது. சரி அவர்கள் மெதுவாக வரட்டும். 

நாம் வாழ்ந்து கொண்டிருப்பது, புவி என்ற ஒரு கோளில்தான் என்பதை மறந்திட வேண்டாம். எனவே கோள்கள் பொய்யில்லை. அக்கோள்கள் நம்மோடு தொடர்புடையன என்பதும் பொய்யில்லை. எனவே இந்த சூரிய குடும்பம் பொய்யில்லை. இந்த பிரபஞ்சமும் பொய்யில்லை.


அப்படியானல் இந்த கோள்கள் நம்மை என்ன செய்கின்றன?

சூரியனின் அலை

புரட்டாசி மாதம் துவங்கி கார்த்திகை மாதம் வரை மழைக்காலம், நம் இந்திய நாட்டில். நம் இந்தியா ஒரு தீபகற்பம் என்பதால், முக்கடல் சூழ்ந்திருக்க, அவ்வப்பொழுது புயல் வந்து தாக்கும். அப்படியான ஒரு மழை, பெருமழை வருகிறது. நகரமும், ஊரும் வீடும், மழையில் ஊறி, நமக்கும் குளிர் எடுத்து நடுங்க, என்று வெப்பம் வரும் என்று காத்திருப்போம். அதாவது சூரியனுக்காக காத்திருப்போம். 

சூரியன் என்ற கோள் என்ன செய்கிறது? அதன் அலைகளை 8 நிமிட பயணத்தில் பூமியை நோக்கி செலுத்துகிறது. அவ்வலைகள் பூமியில் காற்று மண்டலம் வழியாக நுழைந்து, ஒளியாக மாறி, இடங்களிலும், பொருட்களிலிலும் பட்டு தெறிக்க, அங்கே வெப்பம் ஏற்படுகிறது. அதன் வழியாக சராசரியான வெப்பம் ஏற்பட்டு குளிர் விலக்கப்படுகிறது. நம் உடலிலும் சூரியனின் அலை மூலமாக வெப்பம் உணர்ந்து மகிழ்கிறோம். வெப்பம் அதீதமானால் போதும் என்று நிழலுக்கு நகர்கிறோம்.


எல்லாம் அலைகள்

சூரியனிடமிருந்து ஒளி வருகிறதா? அலை வருகிறதா?

அலைதான் ஒளியாக தன்மாற்றம் பெறுகிறது என்று வேதாத்திரி மகரிசி தெளிவு செய்துள்ளார். இல்லை என்கிறீர்களா? சரி ஒளி என்றே நீங்கள் வைத்துக்கொள்ளுங்கள். எனக்கு ஆட்சேபனை இல்லை. 

எல்லா கோள்களில் இருந்தும் அலை வருகிறது, உங்களைப் பொறுத்தவரை ஒளி வருகிறது. ஆனால் இங்கே அலை என்று அர்த்தம் கொண்டே படிப்போமே!  அப்படியானல் இந்த பிரபஞ்சம் முழுதும் இருக்கும் கோள்கள், சூரியன்கள், நட்சத்திரங்கள் இவற்றில் இருந்தும் அலைகள் வரும் அல்லவா? ஆம்.

மேலும் நாம் காணுகின்ற ஒவ்வொரு பொருளில் இருந்தும் அலை வருகிறது. அவை இயங்கலாம் அல்லது இயங்கா பொருளாகவும் இருக்கலாம்.


உங்களிடமிருந்தும் அலைகள்

என்னிடமும், உங்களிடமும் இருந்தும் அலைகள் வருகின்றன. ஆனால் நாம் அந்த அளவிற்கு நுணுகி அதை அணுகுவதில்லை. அதனால் அதை விளங்கிக்கொள்ள அல்லது விளக்கிக்கொள்ள கடினமாக இருக்கும். உங்களோடு ஒரு நண்பர் நட்பு பாராட்டுகிறார் என்றால் உங்களுக்கும், அவருக்கும் ஒரு சமமான அலைகள் தொடர்பில் இருக்கின்றன. 

எப்போதும் உங்களோடு ஒருவர், வம்புச் சண்டை இழுத்துக்கொண்டே இருக்கிறார் என்றால், உங்களுக்கும் அவருக்கும் ஒத்துமையான அலைகள் இல்லை என்றே கருதவேண்டும். அதை சரி செய்யலாமா? செய்யலாம்,

தடாலென்று அவர் கைகளை பிடித்து, “நண்பரே, ஏதோ என் தவறாகவே இருக்கட்டும், அப்படி செய்திருக்க கூடாது. இனிமேல் உங்களை துன்புறுத்தும் விதமாக, மனதிற்கு விரோதமாக நான் நடந்துகொள்ள மாட்டேன்” என்று சொல்லிவிடுங்கள். அவரும் கையிலிருப்பதை கீழே போட்டுவிட்டு, “சரி விடுங்க, பரவாயில்லை” என்று சொல்லலாம். அவரே உங்களை கட்டி அணைத்துக்கொண்டாலும் ஆச்சரியமில்லை. 

இன்னும் அலை வரும்!

இந்த கட்டுரையின் இரண்டாம்பாகம் படிக்க:

இங்கே படிக்கலாம்

-----

Present by:





Thanks to Image by: Nasa 

Perfect Judgement


 நின்று கொல்லும் இறை 


உலகில் எல்லோருக்குமே இறை உணர்வு எந்த வகையிலாவது கிடைத்துக் கொண்டிருக்கிறது. தான் உணர்ந்ததை பிறருக்கு தர வேண்டும் என்ற ஒரு மேம்போக்கான எண்ணம், உண்மை அறிந்தவர்களிடம் நிறைந்திருக்கும். அந்த வழியில்தான் நமக்கு முன்னே சித்தர்கள், ஞானிகள், மகான்கள் இந்த உலகுக்கு உண்மைகளை, அதை கண்டறியும் வழிகளையும் தந்தார்கள். 

சிலர் வெளிப்படையாக தந்தாலும், முக்கியமான உண்மைகளை, நீயே இந்த வழியாக தேடி எடுத்துக்கொள் என்று மறைத்தும் வைத்தார்கள். ஆனால் உண்மையை சொல்லாமல் விடவில்லை. ஏனென்றால், உண்மை என்பது சரியான நபருக்கு போய்ச்சேர வேண்டும் என்ற எண்ணம்.

இந்த உலகில் அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை, இரட்டை எண்ணம் கொண்ட மனிதர்கள்  வாழ்ந்திருக்கிறார்கள், வாழ்கிறார்கள். எப்படியெனில், ஒன்றை இலவசமாக எதிர்பார்ப்பார்கள். வேண்டி வணங்கி, அழுது புரண்டு பெற்றுக்கொள்வார்கள். அதற்கு கைமாறாக எதும் செய்ய மாட்டார்கள். சிறிது காலம் கழித்து அதன் பலனை பெற்று அனுபவிப்பார்கள். வேறு ஒரு நபர் வந்து கேட்டால், “நான் ஒன்றும் சும்மா பெறவில்லை. இது உனக்கு வேண்டுமானால், இவ்வளவு பணமோ, பொருளோ கொடுத்து பெற்றுக்கொள்” என்று சொல்லிவிடுவார்கள். இவர் பெற்றதோ இலவசம், அதை அப்படியே பகிர்ந்து கொடுக்க மனமில்லை. 

இன்னும் உண்மையை சொல்லப்போனால், இவர் பெற்ற பலனை தரப்போவதில்லை. அதை பகிரவும் முடியாது. ஆனால் அந்த வித்தையை, அறிவை தர மறுக்கிறார். இதனாலே அந்த உண்மை, அவரளவில் நின்று விடுகிறது. பொருள் வாங்காமல் தரமாட்டேன் என்று முடிவு செய்து விடுவதால் அது அழிந்தும் போய்விடும். இந்த மாதிரியான நபர்களிடம் சிக்கிவிட கூடாது என்பதில், சித்தர்கள் கவனமாக இருந்தனர் என்று சொல்லலாம். 

ஆனாலும், சித்தர்கள் உண்மை உணர்ந்தவர்கள். அவர்கள் இத்தகைய தவறான மனப்போக்கு கொண்ட மனிதர்களை தண்டிப்பதில்லை. ஏனென்றால், அவரவர்க்கு அவரே நீதியரசர். எனவே தான் செய்த செயலுக்கு, இயற்கையின் வினை விளைவு நீதியால் தண்டிக்கப்படுவார். அது எப்பொழுது என்பது அவருக்கு தெரியாது. 

இதன் அடிப்படையில்தான், அரசன் அன்று கொல்வான், இறை நின்று கொல்லும் என்று சொல்லுவார்கள்.

வாழ்க வளமுடன்.

-----

Thanks to image by: BBC

Finding Life in the MARS


 



செவ்வாய் கிரகத்தில் வாழ்க்கைத்தேடல்


இத்தனை பெரிய அண்டத்தில்

கிட்டிய அரிய வையத்தில்

அத்தனை இன்பம் கெடுத்துவைத்தாய்

உந்தனை நீ திருத்தியுயர்த்தாமல்

எத்தனை கிரகம் கிடைத்தென்ன?


இந்த பிரபஞ்சம் பெரியது என்பது நமக்கு தெரியும். எவ்வளவு பெரிது என்றால் அதற்கு பதில் இல்லை. கூடவே இன்னும் விரிந்துகொண்டே இருக்கிறது என்றும் சொல்லுகிறார்கள், தூரத்தில் தெரியும் நட்சத்திரங்களின் நகர்வை வைத்து ஆராய்ச்சி செய்து அதன் அடிப்படையில். இத்தனை நட்சத்திரங்களின், சூரியன்களின் இடையே, நம் சூரிய குடும்பத்தில் ஒன்றாக “பூமி” அமைந்து அதில் உயிர் வாழ்க்கை சூழல் அமைந்து நாம் மனிதர்களாகி நிறைவு பெற்றிருக்கிறோம்.


இன்னும் இதுபோல் பிறிதொரு “பூமி” இருக்கிறதா? என்ற ஆராய்ச்சியும் இங்குள்ள அறிவியலாளர்களால் ஆராயப்பட்டு வருகிறது. இது நீண்ட பயணம், விடை என்று கிடைக்கும் என்பதும் தெரியாது.



ஆனாலும், நமக்கு கிட்டதட்ட 6 கோடி மைல் தொலைவிலிருக்கும், செவ்வாய் என்ற கிரகத்தை ஆராய்ச்சிக்கு உட்படுத்தும் திட்டத்தில், மிகப்பெரும் முன்னேற்றத்தில் முதல் நிலையை அடைந்துவிட்டார்கள் என்று சொல்லலாம். செவ்வாய் கிரகத்தில். “உயிர் வாழ்க்கை சூழல்” இருந்ததா? இருக்கிறதா? அல்லது இருக்கப்போகிறதா? என்பது குறித்து, தற்பொழுது ஆராய்ச்சி செய்துகொண்டு இருக்கிறார்கள்.


இந்த பிரபஞ்சத்தில். இயற்கையாக் மலர்ந்த “பூமி”யில் வாழ்ந்து, பலவகைகளிலும் கெடுத்து விட்டு, இதற்கு மாற்றாக “மனிதனே” தானாக ஒரு பூமியை, இன்னொரு கிரகத்தில் அமைக்க நினைக்கிறான். இதற்கிடையே, மனிதனுக்குள் எழுந்த, அல்லது அடக்கிவைக்கப்பட்டிருந்த “மண்” ஆசை, அந்த செவ்வாய் என்கின்ற மண் கிரகத்திற்கே ஆசைப்பட்டு விட்டான். 



கையிலிருப்பதை தவறவிட்டு, இன்னொன்றுக்கு ஏங்குவதில் மனிதனைத் தவிர ஏது உயிரினமும் இல்லை. பூமியை இப்போதிருக்கும் செவ்வாயாக மாற்றிவிட்டு, செவ்வாயை தற்போதுள்ள பூமியாக மாற்றும் வித்தை மனிதனுக்கு மட்டுமே தெரியுமோ?! விந்தையோ விந்தை.


இவனுக்கு செவ்வாயும் பத்தாது என்பதை விளக்கியாகவேண்டும். முதலில் மனிதன், தன்னை உணர்ந்து, இயற்கையை உணர்ந்து, தான் இந்த இயற்கையின் வளர்ச்சியில், பரிணாமத்தில் வந்த முழுமை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு மனிதனும், ஒவ்வொருவரோடு ஒருவர், இயற்கையாகவே பிணைக்கப்பட்டுள்ளதை அறிந்துகொள்ள வேண்டும். 


மனதை ஆராய்ச்சி செய்து விளக்கிக்கொள்ளாமல், கிரகத்தை ஆராய்ச்சி செய்வதில் ஒரு பலனும் இருக்கப்போவதில்லை. இந்த மனம் அவ்வளவு புதையலை வைத்துக்கொண்டிடுக்கிறது. அதில் மனிதாபமானமும் உண்டு, கூரான பற்களை நீட்டிக்கொண்டு கழுத்தைக்கடிக்கும் மிருகத்தனமும் உண்டு, பாதம் கடித்து விஷத்தை செலுத்தும் விஷப்பல்லும் உண்டு. 


தனக்குள்ளிருக்கும் பழமையை அறுத்தெடுக்காமல், எத்தனை உயரமடைந்தாலும் ஒரு பலனும் முழுமையாக கிடைக்கப்போவதில்லை. அனுபவத்திற்கும் வரப்போவதில்லை. எத்தனை பிறவி எடுத்தாலும், பூமியின் எந்த மூலையில் வாழ்ந்தாலும், செவ்வாய் போன்ற இன்னொரு கிரகத்தில் வாழ்ந்தாலும், மனிதத்தன்மையை உணர்ந்து, அறிந்து, தெளிந்து, மனம் இதனாக, மனிதனாக முழுமையடையாமல் ஒரு பலனும் அடையப்போவதில்லை.


மனிதனாக முழுமையடைந்தால், செவ்வாய் கிரமென்ன, இந்த பிரபஞ்சமே அவனுக்கு சொந்தமானதாக இருப்பதை உணர்வான்.


வாழ்க வளமுடன்

------

Photos Thanks to: Google and copyright their owners