What do the planets do to me?! - 01 | CJ

What do the planets do to me?! - 01

What do the planets do to me?! - 01


கிரகங்கள் என்னை என்ன செய்கிறது?!


பூமியும் ஓர் கோள் தான்!

கிரகங்கள் என்பதை விட கோள்கள் சிறப்பான வார்த்தையாக உள்ளது. அவை கோள வடிமானவை. இயங்குபவை என்றும் அர்த்தமாகும். இந்த பிரபஞ்சம் முழுதும் கோள்களால் நிரம்பியவை என்பதை ஒரு நொடி சிந்தித்துப்பாருங்கள். அத்தகைய கோள்களின் கூட்டத்தில், சூரியன் எனும் குடும்பத்தில் உள்ள, ஒரு கோளில், பூமியில் நாம் வாழ்ந்து வருகிறோம். சூரியனோடு ஒப்பிட்டால், பூமி மிகச்சிறியது, மனிதன் நிலை என்ன?

ஆனால் ஒரு சிறு துளியில் ஆரம்பித்த உயிர்வாழ்க்கை, ஓர் உயிர் தாவரமாகி, தன் மூலம் அறிந்து இன்புற்று வாழும், ஆறாம் நிலை மனிதனாக முழுமை பெற்றிருக்கிறது. எனினும் மனிதரில் பெரும்பாலோர் இவ் உண்மை உணரவில்லை. அவர்களுக்கு அதனினும் வேறான ஒரு வாழ்க்கை போதுமானதாக இருக்கிறது. சரி அவர்கள் மெதுவாக வரட்டும். 

நாம் வாழ்ந்து கொண்டிருப்பது, புவி என்ற ஒரு கோளில்தான் என்பதை மறந்திட வேண்டாம். எனவே கோள்கள் பொய்யில்லை. அக்கோள்கள் நம்மோடு தொடர்புடையன என்பதும் பொய்யில்லை. எனவே இந்த சூரிய குடும்பம் பொய்யில்லை. இந்த பிரபஞ்சமும் பொய்யில்லை.


அப்படியானல் இந்த கோள்கள் நம்மை என்ன செய்கின்றன?

சூரியனின் அலை

புரட்டாசி மாதம் துவங்கி கார்த்திகை மாதம் வரை மழைக்காலம், நம் இந்திய நாட்டில். நம் இந்தியா ஒரு தீபகற்பம் என்பதால், முக்கடல் சூழ்ந்திருக்க, அவ்வப்பொழுது புயல் வந்து தாக்கும். அப்படியான ஒரு மழை, பெருமழை வருகிறது. நகரமும், ஊரும் வீடும், மழையில் ஊறி, நமக்கும் குளிர் எடுத்து நடுங்க, என்று வெப்பம் வரும் என்று காத்திருப்போம். அதாவது சூரியனுக்காக காத்திருப்போம். 

சூரியன் என்ற கோள் என்ன செய்கிறது? அதன் அலைகளை 8 நிமிட பயணத்தில் பூமியை நோக்கி செலுத்துகிறது. அவ்வலைகள் பூமியில் காற்று மண்டலம் வழியாக நுழைந்து, ஒளியாக மாறி, இடங்களிலும், பொருட்களிலிலும் பட்டு தெறிக்க, அங்கே வெப்பம் ஏற்படுகிறது. அதன் வழியாக சராசரியான வெப்பம் ஏற்பட்டு குளிர் விலக்கப்படுகிறது. நம் உடலிலும் சூரியனின் அலை மூலமாக வெப்பம் உணர்ந்து மகிழ்கிறோம். வெப்பம் அதீதமானால் போதும் என்று நிழலுக்கு நகர்கிறோம்.


எல்லாம் அலைகள்

சூரியனிடமிருந்து ஒளி வருகிறதா? அலை வருகிறதா?

அலைதான் ஒளியாக தன்மாற்றம் பெறுகிறது என்று வேதாத்திரி மகரிசி தெளிவு செய்துள்ளார். இல்லை என்கிறீர்களா? சரி ஒளி என்றே நீங்கள் வைத்துக்கொள்ளுங்கள். எனக்கு ஆட்சேபனை இல்லை. 

எல்லா கோள்களில் இருந்தும் அலை வருகிறது, உங்களைப் பொறுத்தவரை ஒளி வருகிறது. ஆனால் இங்கே அலை என்று அர்த்தம் கொண்டே படிப்போமே!  அப்படியானல் இந்த பிரபஞ்சம் முழுதும் இருக்கும் கோள்கள், சூரியன்கள், நட்சத்திரங்கள் இவற்றில் இருந்தும் அலைகள் வரும் அல்லவா? ஆம்.

மேலும் நாம் காணுகின்ற ஒவ்வொரு பொருளில் இருந்தும் அலை வருகிறது. அவை இயங்கலாம் அல்லது இயங்கா பொருளாகவும் இருக்கலாம்.


உங்களிடமிருந்தும் அலைகள்

என்னிடமும், உங்களிடமும் இருந்தும் அலைகள் வருகின்றன. ஆனால் நாம் அந்த அளவிற்கு நுணுகி அதை அணுகுவதில்லை. அதனால் அதை விளங்கிக்கொள்ள அல்லது விளக்கிக்கொள்ள கடினமாக இருக்கும். உங்களோடு ஒரு நண்பர் நட்பு பாராட்டுகிறார் என்றால் உங்களுக்கும், அவருக்கும் ஒரு சமமான அலைகள் தொடர்பில் இருக்கின்றன. 

எப்போதும் உங்களோடு ஒருவர், வம்புச் சண்டை இழுத்துக்கொண்டே இருக்கிறார் என்றால், உங்களுக்கும் அவருக்கும் ஒத்துமையான அலைகள் இல்லை என்றே கருதவேண்டும். அதை சரி செய்யலாமா? செய்யலாம்,

தடாலென்று அவர் கைகளை பிடித்து, “நண்பரே, ஏதோ என் தவறாகவே இருக்கட்டும், அப்படி செய்திருக்க கூடாது. இனிமேல் உங்களை துன்புறுத்தும் விதமாக, மனதிற்கு விரோதமாக நான் நடந்துகொள்ள மாட்டேன்” என்று சொல்லிவிடுங்கள். அவரும் கையிலிருப்பதை கீழே போட்டுவிட்டு, “சரி விடுங்க, பரவாயில்லை” என்று சொல்லலாம். அவரே உங்களை கட்டி அணைத்துக்கொண்டாலும் ஆச்சரியமில்லை. 

இன்னும் அலை வரும்!

இந்த கட்டுரையின் இரண்டாம்பாகம் படிக்க:

இங்கே படிக்கலாம்

-----

Present by:





Thanks to Image by: Nasa