CJ for You: universal magnetism

universal magnetism

Showing posts with label universal magnetism. Show all posts
Showing posts with label universal magnetism. Show all posts

Anyone can do the practice of biomagnetic gazing? will it give you immense power? Someone saying that we can make our lives better and get what we want. Is that really the truth? Explain


வாழ்க வளமுடன் ஐயா, ஜீவகாந்த பெருக்கம் பயிற்சியை யார் வேண்டுமானாலும் செய்யலாம் என்ற் சொல்லப்படுகிறது. அதனால் அபரிதமான சக்தி கிடைக்கும். நம் வாழ்க்கையை மிகசிறப்பாக அமைத்துக் கொள்ளலாம் என்றும், நினைத்ததை பெறலாம் என்றும் சொல்லுகிறார்களே? அது உண்மைதானா? விளக்கம் தருக.



வேதாத்திரிய அன்பர்கள் கூட, இப்படியான கேள்வியை கேட்பது வியப்பாக இருக்கிறது. எனினும் நீங்கள் ஆரம்ப சாதகராக இருந்தால், அதற்குரிய விபரங்கள், உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம். இந்த பதிவின் வழியாக உண்மையை அறிந்துகொள்ளுங்கள்.

இணைய உலகில், தடுக்கிவிழுந்தால் தகவல்கள் என்று, எல்லோருமே அள்ளிப்போடுகின்றனர். அது உண்மையா?, பொய்யா? தனக்கு அனுபவம் உண்டா? என்றெல்லாம் சொல்லுவதில்லை. ஏதேனும் கேள்வி கேட்டால், அவர்களின் பதில் என்ன? எங்கேயோ படித்தேன், யாரோ சொன்னார்கள், இப்படியெல்லாம் பெயர் தெரியாத சித்தர் சொன்னார் என்று மழுப்புவார்கள். அதை இவர்களே, செய்து பலன்கண்டார்களா? என்றும் தெரியவில்லை. இதையெல்லாம் பார்த்து, நீங்களும் குழப்பிக்கொள்ள வேண்டாமே? அதுவும், வேதாத்திரியத்தில் இருந்து கொண்டு, உண்மை விளக்கம் பெறாமல் இருக்கலாமா?

ஜீவகாந்தம் என்ற உண்மையை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அதை பெருக்கிக் கொள்வதற்கான பயிற்சி செய்ய, உடலை, மனதை தகுதியாக்கிக் கொள்ள வேண்டும். அதற்கென்று நேரம் அமைத்துக் கொள்ள வேண்டும். அதற்கான வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். முறையான வழிமுறைகளை, ஆசிரியரின் வழியாக கற்றுத்தேர வேண்டும். சும்மா, வெறுமனே எனோ தானோ என்று, ஜீவகாந்த பெருக்க பயிற்சியை செய்யமுடியாது. அப்படி செய்யவும் கூடாது. அதனால் ஏற்படும் தவறான விளைவுகள், உங்கள் உடலையும், மனதையும் பாதிக்கலாம் என்பதை அறிந்து கொள்ளுங்கள். உங்கள் உயிருக்கும் கூட பிரச்சனை தருவதாக அமைந்துவிடலாம். எனவே, கவனமாக இருங்கள்.

உங்களுக்கென்று, பயிற்சி வழங்கப்படும் வரை பொறுமையாக காத்திருங்கள். தெளிவாக, ஆசிரியரிடம் கற்றுக்கொண்டு பிறகு, பயிற்சி செய்யுங்கள். சரிதானே? இந்த காணொளி தரும் விளக்கத்தையும் அறிந்து கொள்ளுங்கள்.

ஜீவகாந்த பெருக்கம் யார் வேண்டுமானாலும் செய்யலாமா? செய்தால் என்ன பலன் கிடைக்கும்? உண்மை விளக்கம்
வாழ்க வளமுடன்
-

What is the meaning of Genetic Center in the Vethathiriya Yoga?


வேதாத்திரியத்தில் சொல்லப்படுகின்ற ‘கருமையம்’ என்பது குறித்து விளக்கம் தருக.

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, வேதாத்திரியத்தில் சொல்லப்படுகின்ற ‘கருமையம்’ என்பது குறித்து விளக்கம் தருக.


பதில்:

கருமையம் என்ற பொருளும், அதன் உண்மையும், வேதாத்திரியத்தின் சிறப்பு ஆகும். கருமையம் நம்முடைய பொக்கிஷம் என்கிறார், வேதாத்திரி மகரிஷி. இந்த பிரபஞ்சத்தில் எப்பொருளுக்கும், கருமையம் உண்டு எனினும், உயிரின பரிணாமத்தின் வழியாக அமைந்த கருமையம், தனிச்சிறப்பு  பெற்றிருக்கிறது. இந்த கருமையமும், ஒவ்வொரு மனிதருக்கும் நிச்சயமாக உண்டு என்பதை மறவாதீர்.

        ஒரு மனிதனின், வாழும் காலத்தில் எப்படி அதன் செயல்பாடு இருக்கிறதோ, அதே தன்மையில் எப்போதும் இருக்கும். அதாவது தன்னுடைய பதிவுகளில் இருப்பதை, வெளிக்காட்டிக்கொண்டே இருக்கும் என்று அர்த்தமாகிறது. இது எவ்வளவு காலம் என்றால், கருமையத்தின் களங்கள் தீர்க்கப்படும்வரை எனலாம். இந்த களங்கம் என்பதுதான், கர்ம வினைப்பதிவுகள் என்றாகின்றன.

வாழும் ஒருமனிதன், இறந்து போனால், எல்லாம் முடிந்தது என்பதில்லை. குரு மகான் வேதாத்திரி மகரிஷி, ‘வாழ்ந்து மறைந்த அந்த மனிதனின் கருமையமும், அதன் பதிவுகளும் அழிவதில்லை’ என்கிறார். மேலும், அவரின் விளக்கத்தின் வழியாக அறிவோம்.

கருமையம் (Genetic Center) மிக வியப்பான செயல்களை ஆற்றிக் கொண்டிருப்பதை ஆழ்ந்து ஆராய்ந்தால் உணர்ந்து கொள்ளலாம். கருமையம் என்பது காந்த அலைத் திணிவு. நுண்ணிய ஜீவ இனங்களிலிருந்து அவை பரிணாமத்தால் உயர்ந்து மனிதனாகும் வரையில் கருமையம் தனது செயலை நிறுத்துவதில்லை; தன்மைகளை இழப்பதும் இல்லை.

உடல் காலத்தால் மாறிக்கொண்டு இருக்கும். அதை உடலுக்கு இறப்பு என்று சொல்கிறோம். ஆனால், அதிலடங்கியிருந்த உயிர்த்துகளோ, பிரபஞ்சம் முழுவதும் இயங்கிக் கொண்டு இருக்கும் உயிர்த்துகளோடு கலந்து விடும். உடலை விட்டு வெளியேறிய இந்தக் காந்த அலைக்கு அதன் இயக்க நியதியினாலும், இதுவரையில் இணைத்துக் கொண்ட தன்மையினாலேயும் ஒரு சிறப்பு நிலை உருவாகிவிடுகிறது.

வான் காந்தத்தில் (Universal Magnetism) மிதக்கும் இத்தகையக் கருமையமானது அதன் சிறப்புக்கு ஏற்பச் செயல்படக்கூடிய, விளைவுகளைத் தரக்கூடிய பொருத்தமான ஜீவ இனத்தோடு இணைந்து விடும்.

அது முதற்கொண்டு கருமையம் இணைத்துக் கொண்ட ஜீவனுடைய ஆன்மா, அந்த இணைப்பினாலான சிறப்புக்களையும் பெற்றுவிடும். இவ்வாறு வாழும்போதே சந்ததிகள் மூலம் பல்லாயிரம் தலைமுறைகளுக்கும் தொடர்ந்து வருவதும், உடலை விட்ட பின்னர்கூடத் தனது தகுதிக்கேற்ற ஒரு கருமையத்தோடு இணைந்து கொள்வதும், சாதாரண மன நிலையிலுள்ள மனிதனால் சரியாக உணர்ந்து கொள்ள முடியாது.

எனினும் இறையாற்றலால் நிகழ்ந்து கொண்டு இருக்கும் இந்த வியத்தகு கருமையம், பேரியக்க மண்டல இரகசியங்கள் அனைத்தையும் அடக்கமாகப் பெற்ற ஒரு இயற்கை நியதியாகும்.

தன்னிலை விளக்கமானாலும் சரி, இறைநிலை விளக்கமானாலும் சரி, இக்காந்தக் "கருமையத்தை" உணர்ந்து கொள்ளாத முன்னம் தெளிவாக உணர்ந்து கொள்ள முடியாது, என்பதாக, விளக்கம் அளிக்கிறார், வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

வாழ்க வளமுடன்.

-

பதிலின் மூலம் வேதாத்திரி மகரிஷி அவர்கள்

-

Do all the planets rotate in a circle?



 
வானியல் நிகழ்வு!

அன்பர்களே, ஒரு வானியல் நிகழ்வு குறித்த உண்மையை நாம் தெரிந்து கொள்வோம். வேதாத்திரிய அன்பர்களாகிய நமக்கு இந்த உண்மை அககாட்சியாக பதிவாகும் என்பது உறுதி. சராசரி வானியல் ஆர்வமுள்ள அன்பர்களுக்கும் இந்த விளக்கக்கட்டுரை உதவும்.


சூரியக்குடும்பம்

நம்முடைய உலகியல் வாழ்வில் நமக்கு, பெற்றோரும், குழந்தைகளாக நாமும், நமக்கும் திருமணம் ஆகிவிட்டால், குழந்தைகள் பிறப்பதும், அவர்கள் நம் பெற்றோருக்கு பேரப்பிள்ளைகள் ஆகிவிடுவதும் ஒரு குடும்ப அமைப்பு. அதுபோலவே இந்த சூரியன், தாத்தாகவோ, கொள்ளுத்தாத்தாவாகவோ இருக்க. அதன் காந்த ஈர்ப்பு அலைகளுக்குள் சிக்கிய கோள்கள், சூரியனை மையமாகக் கொண்டு, தனக்குத்தானே சுற்றிக் கொண்டும், சூரியனையும் சுற்றிவருவதை நாம் அறிவோம். இந்த கிரகங்க கூட்டங்கள் சூரியன் தலைமையில், சூரிய குடும்பம் என்று அழைக்கப்படுவதையும் நாம் அறிவோம்.


காந்த அலையின் தூரம்?!

எவ்வளவு தூரம் இந்த சூரியனின் காந்த அலை வீச்சு உள்ளது என்று ஆராய்ந்தால், சூரியனுக்கும் பூமிக்கும் இருக்கும் தூரத்தைப் போல் 30 மடங்கு தூரத்தில் இருக்கும் நெப்டியூன் வரை உள்ளது என்கிறார்கள். அதற்கு அடுத்து கோள்கள் இல்லை அதனால், அந்த வீச்சு அளவு சரியானது தானா? என்பதற்கும் விளக்கமில்லை. எனவே இந்த காந்த அலைவீச்சுக்கு உட்பட்ட எந்த கோளும் சூரியனைத்தான் மையமாக்கொண்டு சுழன்றாக வேண்டும் என்பது அதன் தலையெழுத்து! (கிரகத்துக்கே தலையெழுத்தோ?)


கடைசிக்கோள் புளூட்டோ?!

ஐயா, அது இருக்கிறதோ இல்லையோ, ஆனால் நாங்கள், சர்வதேச வானியல் ஒன்றியம்(?!) (IAU)புளூட்டோவை ஆராய்ந்து ‘குள்ளக்கிரகம்’ என்று சொல்லி தகுதி நீக்கம் செய்துவிட்டோம். எனவே கடைசிக் கோள் புளூட்டோ அல்ல என்கிறார்கள்.


வட்டமும் நீள்வட்டமும்

சூரியன் தன்னைத்தானே சுற்றிக்கொள்வதை நாம் அறிவதில்லை. விஞ்ஞானிகள், சூரியனின் மேல் ஏற்படும் கரும்புள்ளிகளைக் கொண்டும், அதன் நெருப்பு அலைகளைக் கொண்டும் கண்டு கொண்டார்கள். சூரியனை மையமாகக் கொண்டு, புதன், சுக்கிரன், நாம் வாழும் புவி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய கிரகங்கள் சுற்றி வருகின்றன. இந்த சுற்று வட்டமாக சுற்றுகிறது என்றுதான் பெரும்பாலோனோர் கருதுகிறார்கள். அதைத்தான் நம்புகிறார்கள். கொஞ்சம் விஞ்ஞானம் அறிந்தோர், அது வட்டம் இல்லைய்யா, நீள் வட்டமாக சுற்றி வருகிறது என்பார்கள். 

விஞ்ஞானிகள் இதையும் மறுக்கிறார்கள். நீள்வட்டம்தான் ஆனால் ஒரே மாதிரியான நீள் வட்டமல்ல. அது சாய்ந்து சாய்ந்து நிகழும் என்கிறார்கள். இதை இன்னொரு விதமாக சொன்னால், நாம் சமையலறையில் ஆப்பம் ஊற்றினால், மாவு ஊற்றிய கையோடு, ஆப்பச்சட்டியை கையால் எடுத்து, அப்படியும் இப்படியும் சுழற்றி விடுவோம் அல்லவா? அதுபோல இந்த கோள்கள் / கிரகங்கள் சூரியனை சுற்றிவருகின்றன என்று விளக்கம் அளிக்கிறார்கள் வானியல் விஞ்ஞானிகள்.

உண்மையை சொல்லப்போனால், அவர்கள் சொன்னதை அவர்களே மறுத்து மறுத்து, புதிதுபுதிதாக மாற்றிக்கொண்டே இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.




உயரும் சுழல்படிக்கட்டு!

Spiral என்ற உயரும் சுழல் என்ற வடிவத்தை நீங்கள் பார்த்திருக்கலாம். ஒரு வீட்டில் மாடிப்படி நீண்டு வைக்க இடமில்லை என்றால். ஒரு குறிப்பிட்ட இடத்தில் வட்டமாகவே படிகள் அமைத்து, அப்படியே அந்த படிகளை மேலே உயர்த்திக்கொண்டே போவதுதான் ‘Spiral என்ற உயரும் சுழல்படிக்கட்டு’ ஆகும். அதுபோன்றே இந்த கோள்கள் / கிரகங்கள் சுழன்றுகொண்டே, சூரியனை பின் தொடர்கின்றன என்றால் மிகையில்லை.



இந்த உண்மையை ஆராய்ந்த வானியல் விஞ்ஞானிகள், அதை ஒரு காட்சி வடிவமாக உருவாக்கி நமக்கு அறியத்தருகிறார்கள். இதோ நீங்களும் கண்டு இந்த வானியல் உண்மை விளக்கம் அறிந்து கொள்ளுங்கள்.

காணொளி



-

Thanks to images and vides, copyrighted to original owner, here we used educational purpose only!

-

அன்பன்

சுகுமார்ஜெ (Sugumarje)

வாழ்க வையகம், வாழ்க வையகம், வாழ்க வளமுடன்!