CJ for You: agna chakra

agna chakra

Showing posts with label agna chakra. Show all posts
Showing posts with label agna chakra. Show all posts

Detailed information about the Manonmaniya Thavam


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, மனோன்மணிய தவம் குறித்து உண்மை விளக்கம் தருக!


பதில்:

மனோன்மணிய தவம், இப்பொழுது தவிர்க்கப்பட்டுவிட்டது. இதுப்போல பல தவங்கள், அதன் அடிப்படை நிலை கருதி நிக்கப்பட்டது. காரணம், நாம் நேரடியாகவே உயர்நிலை தவங்கள் கற்றுவிடுகிறோம். எனவே அத்தகைய உயர்நிலை தவங்கள் கற்கும் நிலையில், அதற்கு மாறான நிலைகொண்ட தவங்கள் தேவை குறைந்துவிடுகிறது. ஆனால் ஆரம்ப காலத்தில், கற்றுக்கொடுக்கப்பட்டது. 

ஏனென்றால், அன்பர்கள் படிப்படியாக உயர்நிலைக்கு வரவும், அவர்கள் தவங்களை, குண்டலினி சக்தி நிறையும் ஆதார, சக்கர நிலைகளை புரிந்து கொள்ளவும் தேவைப்பட்டது. ஆனால் காலமாற்றத்தில், அன்பர்களின் ஆர்வம், முயற்சி இவற்றை கருத்தில் கொண்டும், அவர்களின் தினசரி வாழ்வியல் சூழல் தன்மையைக் கொண்டும், நேரடியாகவே உயர்நிலை தவங்கள் கற்றுக்கொடுக்கப்படுகிறது. அன்பர்களின் நோக்கம் நிறைவேற, கற்ற தவங்களை, தடையில்லாமல் தொடர்ந்து செய்துவருவதில்தான் இருக்கிறது.

எனவே, தவிர்க்கப்பட்ட தவங்களை நாம் மீண்டும் கற்று செய்துவருவது நல்லதுதான் எனினும், அது தேவையில்லை என்பதே கருத்தாக நிற்கிறது.

இதை இன்னும் விளக்கமாக புரிந்து கொள்ள வேண்டுமென்றால். மனோன்மணியம் என்பது, பீனீயல் சுரப்பி என்று விஞ்ஞானத்தில் குறிப்பிடப்படும் ஒரு சக்கரம், ஆதாரமாகும். இந்த மனோன்மணி என்பதை துரிய சக்கரத்தின், அடிப்புற நிலை, மூலை நிலை எனலாம். நாம் இந்த இடத்தில் மனம் செலுத்தி தியானித்து பழக, மனோன்மணிய தவம் சித்தர்களால் உருவாக்கப்பட்டது. இந்த மனோன்மணிய இடத்தை, இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள, ஆக்கினை வழியாக உள்முகமாகவும், தலை உச்சியிலிருந்து கீழாகவும் ஒரு கோடு வரைந்தால், இரண்டு கோடுகளும் இணையும் புள்ளி எனலாம். சிலர் இரு காதுகளின் மேல்புறத்தின் வழியாக கோடுவரைந்தால், அக்கோட்டின் மையப்புள்ளி என்றும் கூறுவார்கள்.

மனோன்மணிய தவம், இணையத்தில் காணக்கிடைப்பதால், அதன்வழியாக நீங்கள் தவம் இயற்றலாம். தவறில்லை.

வாழ்க வளமுடன்.

How to understand and perform the Shanti Thavam?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்

கேள்வி

வாழ்க வளமுடன் ஐயா, சாந்தி தவத்தை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. எப்படி அந்த சாந்தி தவம் செய்வது? இதுவரை எனக்கு முழுமையாகவில்லை ஏன்?


பதில்:

சாந்தி தவம் என்பது அற்புதமான, சித்தர்களின் கொடை என்று வேதாத்திரி மகரிஷி அவர்கள் குறிப்பிடுவார். தவத்தில் ஆழ்ந்து செல்லச்செல்ல, உடல் அந்த தவ ஆற்றலை தாங்கமுடியாமல் பல்வேறு வேதனை வெளிப்படுத்தும். இதனால் உடல், மனம், உயிரும் பாதிப்படையும். இதை சீர் செய்து, திருத்தம் பெறுவதற்காக உண்டான தவமே, சாந்தி தவம். இதை இறங்குபடி தவம் என்றும் சொல்லுவார்கள்.

யோகத்தில் தவம் செய்பவர்களுக்கு மட்டுமல்லாமல், பக்தி வழியில் அதீதமாக இருப்போருக்கும் கூட இந்த சாந்தி தவம் உதவுகிறது என்பது உண்மை. அப்படி பக்தி வழியில், பாதிப்படைந்தோர்க்கும், குரு மகான் வேதாத்திரி மகரிஷி, இத்தவத்தை வழங்கி அவர்களுக்கு ஆறுதல் கொடுத்திருக்கிறார்.

யோகத்தில் உயர்வு மட்டும் இல்லை, அவ்வப்பொழுது அதீத தவ ஆற்றலை, உடல் ஏற்றுக்கொள்ளவும் பழக்கவேண்டும். குண்டலினி சக்தியை, ஆக்கினையில் இருந்து, மூலாதரம் கொண்டுவந்து நிறுத்துவதே சாந்தி தவம் ஆகும். ஆரம்ப தவசாதகர்கள், வாரத்தில் ஒருநாள், வெள்ளிக்கிழமை கட்டாயமாக சாந்திதவம் செய்யவேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.

இந்த தவம் செய்வது மிக எளிதே, சாதாரணமாக பத்மாசனத்தில் அமர்ந்து கொண்டு, முதுகுதண்டு நேராக இருக்கும்படி வைத்துக்கொள்ள வேண்டும். மூலாதாரம் என்ற சக்கரத்தை, ஆதாரத்தை மட்டும் நினைத்து தவம் இயற்ற வேண்டும். வேறு எந்த சக்கரத்தையும் நினைவில் கொண்டுவரக் கூடாது. மனம் அந்த மூலாதரம் என்ற இடத்தில் நிலைத்து நிற்கவும் பழகிக் கொள்ள வேண்டும். காலை 10 நிமிடம், மாலை 10 நிமிடம் செய்தால் போதுமானது.

வெள்ளிக்கிழமை பெரும்பாலும், எல்லா மனவளக்கலை அன்பர்களும் சாந்தி தவம் செய்வதால், நமக்கும் அத்தகைய நிலை கைவரப்பெறும். ஒரு நாள் உங்களுக்கு போதுமானதாக இல்லாமல் இருந்தால், அதாவது தலைபாரம், உடல்வலி தொடர்ந்தால், மறுநாளும், சனிக்கிழமையும் கூட இந்த சாந்தி தவமே செய்துவரலாம், தவறொன்றும் இல்லை.

வாழ்க வளமுடன்.

வேதாத்திரியம் குறித்த கேள்வி பதில்கள் இந்த WhatsApp குழுவழியாகவும் பெறலாம்!

How many meditation will practice on the starting level?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்



கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, ஆரம்ப தவசாதகர் ஒரு நாளைக்கு எத்தனை தவம் செய்யலாம்?


பதில்:

ஆரம்ப தவசாதகர் என்றால், முதலில் எளியமுறை உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். ஏனென்றால், தவத்தில் அமர்ந்தால், மிக எளிதாக, உடல் வலி ஏதும் இல்லாமல் இருக்கவேண்டும். முதுகுதண்டு நேராக இருக்கும்படி நிமிர்ந்து உட்கார வேண்டியது அவசியம். சாதரண பதமாசனத்தில் அமர்ந்தால் போதும் என்றாலும் கூட, அதில் கூட கால்வலி எதுவும் வரக்கூடாது. 

உடலில் வலி, சோர்வு இருந்தால் தவம் மிகச்சரியாக இயற்ற முடியாது, அந்த தவமும் உதவாது, இடைப்பட்ட நேரத்திலேயே முடித்துவிடத் தோன்றும். எனவே உடல் அதை எல்லாம் பொருட்படுத்தாத நிலையை, உடற்பயிற்சியால் வரவழைத்துக் கொள்ள வேண்டும். இதற்கு ஒருவாரம் முதல் ஒருமாதம் எடுத்துகொள்வது நல்லதுதான். கூடவே காயகல்பமும் செய்து பழகி வந்தால் இன்னமும் நன்மை கூடும், தவமும் சிறக்கும்.

ஆரம்ப தவசாதகருக்கு, ஆக்கினை முதல் துரியாதீதம் வரை கற்ற அனுபவம் பெற்றிருப்பார் என்றாலும் கூட, முதல் வாரம் ஆக்கினை தவம் மட்டுமே செய்துவரலாம். ஒருநாளைக்கு இரண்டு முறை தவம் இயற்றினால் போதுமானதே. அதிகாலையில் மற்றும் மாலையில் என்று அமைத்துக் கொள்ளலாம். மற்ற நேரங்களில் அந்த அனுபவத்தி நினைத்துப் பார்ப்பதாக நேரத்தை செலவிட்டுக் கொள்ளலாம்.

அடிக்கடியோ, ஒரு நாளைக்கு பல நேரமோ, அதிக நேரமோ தவம் இயற்ற வேண்டியதில்லை. ஒரு தவம் இயற்ற எந்தளவு நேரம் தரப்பட்டிருக்கிறதோ அந்த நேரம் மட்டும் இயற்றினால் போதுமானது. அமிர்தம் என்பதற்காக அடிக்கடி உண்ணக்கூடாது என்பார்கள். அதுபோலவே தவமும் என்று சொல்லலாம்.

ஆக்கினை தவம் இயற்றிவரும் நாட்களில் ஒரு சிலருக்கு, தவ ஆற்றல் கூடிவிடும். அதனால் தலைபாரம் உணர்ந்தால், உடனடியாக சாந்தி தவம் செய்து, அதிகமான தவ ஆற்றலை, உடலுக்கு தேவையான ஆற்றலாக மாற்றிக்கொள்ளலாம். 

உங்களின் ஆரவம், முயற்சி, ஆராய்ச்சி அதிகமாக இருந்தாலும் கூட, ஒருநாளைக்கு இருவேளை தவம் என்பது, ஆரம்ப சாதகருக்கு பொருத்தமானது.

வாழ்க வளமுடன்.

வேதாத்திரியம் குறித்த கேள்வி பதில்கள் இந்த WhatsApp குழுவழியாகவும் பெறலாம்!

Why can not feel at moolathar chakra on shanthi meditation



Vethathiriya Question and Answer
by 

Vethathiriya Channel 


#VethathiriMaharishi #VethathiriyaChannel #VethathiriyaQandA
வேதாத்திரிய கேள்வி - பதில், ஆக்கினை, துரியம் போல, சாந்தியில் ஏன் உணர முடிவதில்லை?, எப்படி செய்வது?