CJ for You: raghu kethu shadow planets

raghu kethu shadow planets

Showing posts with label raghu kethu shadow planets. Show all posts
Showing posts with label raghu kethu shadow planets. Show all posts

Horoscope research service for all



 எல்லோருக்குமான ஜோதிட / ஜாதக ஆலோசனை சேவை

வேண்டும் ஆலோசனை

கடந்த ஆண்டு, ஜாதகம் வழியாக, கர்மா என்ற வினைப்பதிவு குறித்து சிலருக்கு ஆலோசனை வழங்கினேன். அந்த நிகழ்வு, ராகு கேது குறித்த, என் ஆராய்ச்சிக்காக நடத்தப்பட்டது. ஒருவாரம் மட்டும்தான் அதை செயல்படுத்தினேன். பிறகு அந்த சேவை நிறுத்திவிட்டேன். பல நாட்களாக மீண்டும் அதை செயல்படுத்துக என்று சில அன்பர்கள் கேட்டுக் கொண்டார்கள். அதன்படி, வேதாத்திரிய சேவையை தரும் இந்த வேளையிலும், ஜாதக ஆலோசனையை தருவதற்கு முடிவு செய்துள்ளேன்.

இங்கே நாம் எதைப்பகிர்ந்து கொண்டாலும், அதற்கு எசப்பாட்டு பாடுவதற்கு நாலு அன்பர்கள் வந்துவிடுவார்கள். எதையுமே முழுதாக புரிந்து கொள்ளாமல், ஆராய்ந்து பார்க்காமல் உடனே எதையாவது மறுத்து பேச வேண்டும், தான் அறிவாளி என்று காட்டவேண்டும் என்று துடிப்பார்கள். ‘வேதாத்திரியத்தில் இருப்பவர்களுக்கு, ஜோதிடம், ஜாதகம் தேவையா?’ என்பார்கள். அவர்களிடம் நான் சொல்லுவதும், கேட்பதும் என்னவென்றால் ‘உங்களுக்கு தேவையில்லை என்றால் நீங்கள் ஒதுங்கிக் கொள்ளுங்களப்பா! துரியாதீத தவத்தில் ஏன் சந்திரன், சூரியன் என்று போகிறீர்கள்? டைரக்டா போக வேண்டியதுதானே?’ 

ஜாதக ஆலோசனை

நான் வழங்கும் இந்த சேவை, மற்ற ஜோதிட நிபுணர்கள் சொல்லும் நிலையிலிருந்து மாறுபடும். அதாவது அவர்கள் பரிபாசை பாடல்கள், ஆய்வு குறிப்புக்கள், பலவிதமான குறிப்பேடுகள், அனுபவம், பல ஜோதிட நூலகள் படிப்பறிவு, பல ஜாதக குறிப்பு ஆராய்ச்சி என்பதாக, இவற்றைக் கொண்டு பலன்களை, பரிகாரங்களை சொல்லுவார்கள்.

ஆனால், இங்கே நாம், வேதாத்திரியத்தில் இருப்பதால் அடிப்படையான, நேரிடையான விளக்கமும், அனுபவ குறிப்பும் கொண்டு சொல்லப்படும். காரணம் நமக்கு எது பஞ்சபௌதீக தோற்றங்களாக, நம் பிரபஞ்சத்தில், கிரகங்களாக, இயற்கையாக, பொருட்களாக, தனிமங்களாக, ஜீவன்களாக, மனித உயிர்களாக வந்திருக்கிறது என்ற உண்மை தெரியும். கிரகங்கள் என்ன தன்மையில் இருக்கிறது? எத்தகைய அலைகளை வீசுகிறது? எப்படி நமக்குள் பாதிப்பை, நன்மையை, சமநிலையை உருவாக்குகிறது? என்பதும் தெரியும். மேலும் குறிப்பாக, மனம் என்பது என்ன? அதன் தன்மை என்ன? எப்படி செயல்படுகிறது என்பதும் நாம் அறிவோம். முக்கியமாக, இருந்த இடத்திலிருந்தே, பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும் தெரியும். இதன்வழியாக, நம் பிறப்பு ஜாதக குறிப்பில் இருக்கும் உண்மையை இயல்பாக, தெளிவாக, வெட்டவெளிச்சமாக சொல்லிட முடியும்.

நமக்கு நாமே பரிகாரம்

குழப்பமில்லாத தானே தன்னால் தீர்த்துக்கொள்ளும் பரிகாரங்களும் தெரியும். கோவில் குளமென்று அலைய தேவையின்றி, தவத்தாலும், செயல்களாலும், திருத்தங்களாலும் நாம் அதை பரிகாரமாக தீர்க்கலாம். மேலும் நாம் கற்ற அகத்தாய்வும், தற்சோதனையும் உதவுமே! எனவே நமக்கு தெரியவேண்டியது என்ன? என் ஜாதகம் வழியாக, என் துன்பச் சிக்கலுக்கு தீர்வு தெரிகிறதா? என்பது மட்டுமே. அதைத்தான் இங்கே நான் வழங்கும் சேவை தருகிறது. இந்த இடத்தில் என்னுடைய நண்பரை (காலமாகிவிட்டார்), நினைவுபடுத்த வேண்டியுள்ளது. நானும் அவரும் பல ஆய்வு கட்டுரைகளை 12 ஆண்டுகளுக்கு முன்பே தொடர்ந்து வழங்கி வந்திருக்கிறோம். அவரும் பரிகாரத்தை, மற்ற சோதிட நிபுணர்கள் போல சொல்லாமல் ‘நீங்களே செய்து கொள்ளுங்கள் உங்கள் நடவடிக்கைகள், செயற்பாடுகள் மூலமாக’ என்பார். 

வேதாத்திரி மகரிஷியின் கைரேகை

ஏதோ ஒரு நிகழ்வில், ஒருவர் மகரிஷியிடம், 

‘நான் உங்கள் கைரேகையை பார்க்கலாமா?’ என்று கேட்டிருக்கிறார். மகரிஷியும் சிரித்துக்கொண்டே ‘சரி பாருங்கள்’ என்று சொல்லியுள்ளார். கைரேகைகளை ஆய்ந்து பார்த்துவிட்டு, விளக்கம் சொல்லிவிட்டு, 

‘ஐயா, ஐம்பத்திநான்கு ஆண்டுக்காலம் வாழ்வீர்கள்’ என்று சொன்னாராம். மகரிஷியோ ‘நான் வந்த வேலை இன்னும் முடியலையேய்யா? அது இன்னும் காலம் ஆகுமே? ஏதாவது இந்த ஐம்பத்திநான்கை நீடிக்கும் வழி இருக்கிறதா? என்று கேட்டிருக்கிறார்.

அதற்கு அந்த கைரேகை பார்த்தவர் ‘அதெல்லாம் எனக்கு தெரியாதுங்க, நீங்களேதான் எதாவது வழி தேடனும், இல்லைன்னா தெய்வத்துகிட்ட முறையிடனும்’ என்றாராம்.

நடந்தது என்ன? வேதாத்திரி மகரிஷி அவர்கள், தன்னுடைய 96 வயதில்தான் உடல், உதிர்த்து வான் காந்தத்தில் தன்னை நிறைத்துக் கொண்டார். தன்னுடைய 95 வயது நிறைவிலேயே ‘நான் வந்த வேலை முடிந்துவிட்டது, நான் போகிறேன், யாருக்கும் பாரமில்லாமல்’ என்று சொல்லிவிட்டார் என்பதும் முக்கியமாக குறிப்பிட வேண்டும்.

ஜாதக சேவைக்கு?!

இதன் வழியாக பெற்றப்படும் ஜோதிட, ஜாதக சேவைக்கு Rs. 2500/- (ஒரு நபர்/ ஒரு ஜாதக குறிப்பு) என்ற வகையில் செலுத்திட வேண்டும்.

கைபேசி App வழியாக செலுத்துக:

9442783450@UPI

வங்கி வழியாக செலுத்திட விபரம்:

AC Name: J.SUGUMARAN
SB Ac: 50100081694540
IFSC: HDFC0000058
Branch: THILLAINAGAR (Tiruchirappalli, Tamilnadu, INDIA)

பலன்கள் பெற

உங்கள் ஜாதகுறிப்பு அனுப்புக. அக்குறிப்பு உங்களுக்கு எழுதப்படவில்லை என்றால்,
1) பெயர்
2) தாய்/தந்தை பெயர்கள்
3) ஆண்/பெண்
4) பிறந்த தேதி/மாதம்/வருடம்
5) பிறந்த நேரம்
6) பிறந்த ஊர்/மாவட்டம்/நாடு
7) தற்பொழுது வசிக்கும் முகவரி
8) கைபேசி எண்
9) வாட்சாப் (WhatsApp)எண்
10) (ஆராய்ச்சி விளக்கம் பெற்றுக்கொண்ட பிறகு)ஏதேனும் 7 கேள்விகள்  ஆகிய முழு விபரங்களை அனுப்புக.

ஜாதக குறிப்பு மின்னஞ்சல் வழியாக அனுப்ப: checkmyhoroscope@gmail.com

ஜாதக குறிப்பு வாட்சாப் (WhatsApp) வழியாக அனுப்ப: wa.me/+919442783450

கூடுதலாக நீங்கள் நன்கொடை செலுத்திய விபரமும் தெரிவிக்க வேண்டும். நன்கொடை செலுத்தப்படாத ஜாதக குறிப்புக்கள், ஆலோசனைக்கும், ஆய்வுக்கும் ஏற்றுக்கொள்ளப்படாது என்பதை அறிக.

விபரமான, விளக்கமான, ஆய்வு முடிவுகள், எழுத்து வடிவிலான PDF மின்னஞ்சல் வழியாக பெற, குறைந்தது 7 நாட்கள் முதல் 15 நாட்கள் வரை காத்திருக்கவும்.

இந்த சேவை சிறுது காலம் நீடிக்கும் என்பது உறுதி.

குறிப்பு: இந்த சேவை குறித்து, நேரடியாக கைபேசி அழைப்பு செய்வதை தவிர்க்கவும். வாட்சாப் (WhatsApp) மட்டும் தொடர்பு கொள்க!

வாழ்க வையகம், வாழ்க வளமுடன்!

Raghu and Kethu - Part 01


 ராகுவும் கேதுவும் - பகுதி 01


ராகுபோல கொடுப்பாரும் இல்லை, கேதுபோல கெடுப்பாடும் இல்லை என்று பொதுவாக சொல்லுவார்கள். எப்போதும் போலவே இந்தக்கட்டுரை சோதிட ரீதியிலானது அல்ல. உண்மை விளக்கத்தின் அடிப்படையில், ஆராய்ச்சிக்கான கட்டுரை. 

பெரும்பாலான சோதிட அறிவு, கற்றலின் சாரத்தை ஒட்டியும், அவற்றை உடனடியாக ஞாபகத்தில் கொண்டுவருவதைக் கொண்டும் அமைவன. இதில் ஆராய்ச்சி என்றால், ஏற்கனவே கற்றதை, வேறு சில கருத்துக்களோடு ஒப்பிட்டுப்பார்ப்பது என்பதாகவே அமைகிறது. சில நம்பிக்கைகளின் அடிப்படையிலும் அமைகிறது. ஆனால் நேரடியாக அந்தந்த கிரகங்களின் தன்மையோடு, ஒத்துமையான அலைவரிசையோடு நின்று பெறப்படுவது இல்லை. ஆனால் அதற்கு சாத்தியம் உண்டு. யாரெனும் ஒரு சிலர் அப்படியான நிலையில், உண்மைகளை எடுத்துச் சொல்வதும் உண்டு. இந்தக்கட்டுரையில் உள்ள விளக்கங்கள், நேரடியாக கணக்குகள் அற்று, கிரகங்களின் தன்மையில் சொல்லப்படுவதாகும். எந்தஒரு மூல நூல், குறிப்பு இவற்றிலிருந்து எடுத்தாளப்பட்டது இல்லை. 

ராகு, கேது ஆகிய கிரங்களின் உருவாக்கம், தோற்றம், அமைப்பு ஆகிய கதைகள் ஏற்கனவே உங்களுக்கு தெரிந்திருக்கும். பொதுவாகவே நம் நாட்டில் 100 க்கு 99 நபர்கள் ஜோதிடம் அறிந்தவர்கள் எனலாம். அதை ஆய்வு செய்து ஆலோசனை சொல்லுபவர்கள் கிட்டதட்ட 51 நபர்கள் எனலாம். இதன்காரணமாக நேரடியாக நாம் கட்டுரைக்கு சென்றுவிடலாமே!

ராகு கேது என்ற நிழல் கிரகங்கள் ஜாதகனுக்கு என்ன சொல்ல வருகிறது? பார்ப்போம்!

வாழ்க வளமுடன்!

Is the whole universe in astrology chart? Part 1


 முழு பிரபஞ்சமும் ஜோதிடத்தில் உள்ளதா?

(Image credit: NASA/JPL)



Demo Horoscope only


Demo Planet Position Chart only


அன்பர்களே,

இந்த கட்டுரைப்பதிவு, அமேசான் கிண்டில் (Amazon Kindle) மின்னூல் பதிப்பாக வெளியிட்ட காரணத்தால், இங்கே பதிவிட முடியாமைக்கு வருந்துகிறோம். சலுகையான விலையில் கிடைப்பதாலும், எழுத்தாளருக்கு உதவும் என்ற கருத்திலும் அங்கே வாங்கலாம் அல்லது இலவசமாகவும் படிக்கலாம். நூலுக்கான இணைப்பு இதோ:

https://www.amazon.in/dp/B09PVN7GWG

-

Present by
Sugumarje

What do the planets do to me?! - 02


கிரகங்கள் என்னை என்ன செய்கிறது? - 02



இந்த கட்டுரையின் முதல்பாகம் படிக்க:
இங்கே படிக்கலாம்

கிரக ஆராய்ச்சி - நவீன வரலாறு

உலகில் வாழும் எல்லோருக்குமே ஒரளவு ஜோதிடம் குறித்த அறிவு இந்நாளில் வளர்ந்திருக்கிறது என்பது உண்மை. ஜோதிடத்தை மறுத்துப்பேசும் ஆட்களும் அதற்கேற்பவே இருக்கிறார்கள் என்பதும் உண்மை. இதில் அணுவியல், அறிவியல் வளர்க்கும், வளர்ந்த மேற்கத்திய நாடு மக்களும் விதிவிலக்கல்ல. விண்வெளியில், பூமியிலிருந்து 400 கிலோ மீட்டர் உயரத்தில், ஒரு கால்பந்து விளையாட்டு மைதானம் நீள அகல அமைப்பில், ஆனால் ஒரு பெரிய ஆங்கில எழுத்து H போல மிதந்து, ஒரு நாளைக்கு 16 முறை பூமியை வலம் வரும், சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையம் இருக்கும் காலத்திலும், சோதிடம் சக்கைபோடு போடுகிறது. 


சூரினின் வெப்பக்கதிர்களை ஆராய்ச்சி செய்யும் துணைக்கோள் அணுப்பிவைத்து, சூரியப்புயலை படம் எடுத்து அனுப்பிவிட்டது, அந்த படங்களை ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கிறார்கள். சூரியகுடும்பத்தை விட்டு வெளியே போய்விட்டது ஒரு தொலைநோக்கி துணைக்கோள், அதன் வழியாகவே பிரபஞ்சம் எவ்வளவு பெரிது என்பதற்கான யூகத்திற்கு, சான்றுகள் கிடைத்தது. இப்பொழுது புதிதாக, இந்த பிரபஞ்சம் உருவாவதர்கு காரணமாக சொல்லப்படும் பெரும் வெடிப்பு குறித்த ஆராய்ச்சிக்காக, முற்றிலும் பெரிய நவீன தொலைநோக்கு துணைக்கோளும் அனுப்பியாகி விட்டது.  


கடந்த வருடத்தில், செவ்வாய் கிரகம் நோக்கி, ஆராய்ச்சிக்காக அனுப்பிவைக்கப்பட்ட துணைக்கோளும், ட்ரோனும், மண், நில பரிசோதனை வண்டியும் கூட, செவ்வாயில் வெற்றிகரமாக இறங்கி, அதன் அதன் வேலைகளை செய்து, அதன் மாதிரி படங்களை, செய்திகளை பூமிக்கு தந்துகொண்டு இருக்கிறது. தனுசு ராசிக்கட்டத்தில் அமைந்திருக்கும், இப்போதைக்கு பெரிதாக காணப்படும், கருந்துளையையும், உலகின் பல இடங்களில் அமைந்திருக்கும், நவீன வானியல் தொலைநோக்கி வழியாக, பகுதி பகுதியாக படம் எடுத்து, இணைத்து, அக்கருந்துளையின் உண்மை வடிவத்தையும் உலகுக்கு அறிவித்து விட்டார்கள். இப்படியாக விஞ்ஞானம் ஒருபக்கம், அந்த கிரங்களையே துளைத்துக் கொண்டிருக்கையில், ஜோதிடம் குறித்தான நம்பிக்கை மாறவே இல்லை என்பதையும் கருத்தில் கொள்வது அவசியம்.


ஜோதிடம் வழி எது?

பலப்பல வகையில், ஜோதிடம் நம் வாழ்நாளில் கலந்து பிண்ணிக் கொண்டது. இதை யார் ஆரம்பித்து வைத்தார்கள் என்ற ஆராய்ச்சி தேவையில்லை. இதில் வியாபார, வணிக பிண்ணனி உண்டா என்று ஆராய்ந்தாலும் அதுவும் சரியாக இல்லை. ஏனென்றால் ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்னால், அதாவது அரசர்கள் நாடாண்ட காலங்கள் வரை, ஜோதிடர்கள் காசுக்காக ஜோதிடம் பார்க்கவில்லை. ஆனால் ஒரு ஜாதகன் மனம் உவந்து கொடுப்பதை வாங்கிக்கொள்ள மறுக்கமாட்டார்கள். மேலும் ஜோதிடம் ஒரு கலையாக மதிக்கப்பட்டதால், மற்ற கலைஞர்களோடு, ஜோதிடர்களும் சமூகத்தில் மதிக்கப்பட்டார்கள். மேலும் அரசர்களின் ஆலோசகர்களாகவும் இருந்தனர். அவர்களுக்கு தகுந்த சன்மானம் வழங்கப்பட்டது.

அந்த வழியாக வளர்ந்த ஜோதிடமே, தற்காலத்தில் பணத்திற்காக, வாழ்வாதாரமாக மாறி தொழிலாகவே எங்கும் பரவலாகிவிட்டது. மேலும் கூர்ந்த அறிவுள்ள யார்வேண்டுமானாலும் கற்றுத்தேர்ந்து, ஜோதிடத்தை தொழிலாக செய்யலாம் என்றும் மாறிவிட்டது. 


ஊன்றிபோனது

ஜோதிடம் மக்களிடம் மிகுந்த சிறப்பு அடைந்ததற்கு முக்கிய காரணம், தன் குடும்பம், தொழில், வறுமை நிலை மாறுமா என்ற கேள்வியில்தான். எப்போதுமே நல்ல பொருள், பணம், நிலம், வீடு, வசதி என்று வாழ்பவன், நிச்சயமாக ஜோதிடத்தை நம்ப மறுப்பான். சிலர் கடவுளையே கூட நம்ப மறுப்பான் என்பதும் உண்மை. ஒரு ஏழை தனக்கு பிறக்கும் குழந்தை வழியாக, தன் நிலைமையும், குடும்ப வறுமையும் மாறிவிடும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில்தான், பிறந்த அந்த குழந்தைக்கு ஜாதகம் எழுதி, அதற்கான பலன் பார்க்கிறான். இந்த பழக்கமே தொடர்ந்து இன்றுவரை வந்துகொண்டிருக்கிறது. 


அலைத்தொடர்பு

கிரகங்கள் எப்போதும், தன் சுழற்சியினால் அலைகளை இந்த பிரபஞ்சம் முழுவதும் வீசிக் கொண்டிருக்கின்றன. அந்த அலைகளில் நேரடியாக நாம் வாழும் பூமியை வந்தடைவதில்லை. அந்த அலைகள் வரும் வழியில் வேறென்ன கிரகங்கள் இருக்கிறதோ அதனுடைய அலைகளையும் இணைத்துக் கொண்டே வருகிறது. மொத்தமாக மனிதர்கள் மட்டுமல்ல, எல்லா உயிரினங்களோடும், உயிரற்ற பொருட்களோடும் தொடர்புகொண்டு, பூமியின் மையம் நோக்கி நகர்ந்தும் அல்லது பூமியைக்கடந்தும் செல்கிறது. இது ஓவ்வொரு நொடியும் மாறிக்கொண்டே இருக்கும் தன்மை கொண்டது.

அந்த அலைகள், மனித மனதோடு பெரும்பகுதியும், உடல் உறுப்புக்களோடு பிற பகுதியும் செயல்படுகிறது. உதாரணமாக உடல் உறுப்புக்களில்

கிரகம்உறுப்பு
சூரியன்எலும்புகள்
புதன்தோல்
சுக்கிரன்ஜீவசக்தி
சந்திரன்இரத்த ஓட்டம்
செவ்வாய்மஜ்ஜை
குருமூளைச் செல்கள்
சனிநரம்புகள்
ராகு-கேதுஓஜஸ் எனும் உயிர்சக்தி

அந்த அலைகள் எவ்வாறு செயல்படுகிறது என்ற உண்மையையே, கிரகங்கள் என்னை என்ன செய்கிறது? என்ற தலைப்பாக பார்த்துக்கொண்டிருக்கிறோம். ஒரு விதை மண்ணில் விதைக்கிறோம், அல்லது தானாகவே மரத்தின் விதைகள் மண்ணில் விழுகிறது என்றும் வைத்துக் கொள்ளலாம். அந்த விதை ஈர மண்ணில் விழுந்தால் தானாகவே வேர் பிடித்துக் கொள்ளும் அல்லது மழைக்காக காத்திருக்கும். நாம் விதைத்தால் நாமே தண்ணீர் ஊற்றி காப்போம். 

ஒரு விதைக்குள் மரம் ஒளிந்திருக்கிறது என்பது உங்களுக்கு தெரிந்தது தானே? மரம் உள்ளே இருக்கிறது என்பதர்காக, விதைத்த உடனே மரமாகிவிடுவதில்லை. அதற்கென்று காலம் தேவைப்படுகிறது. ஒரு விதை மரமாக வேண்டும் என்பதற்கான வழிமுறை, (கணிணி மென்பொருள் போல அல்லது வீடு கட்ட உதவும் மாதிரி படம் போல) அந்த விதைக்குள் இருக்கிறது. அந்த வழிமுறையை அவ்வப்பொழுது தூண்டுவதற்கு இந்த கிரகங்கள் உதவுகின்றன. ஏனென்றால் காலம் என்பது கிரங்கங்களின் சுழற்சியை அடிப்படையாக கொண்டதுதானே?! அப்படியானால் ஒரு விதைக்கும், மரத்திற்கும் ஜாதகம் எழுதலாமா என்று நீங்கள் கேட்க நினைப்பது புரிகிறது. எழுதலாம் தவறில்லையே!


மனிதனுக்குள் தூண்டுதல்

இதைப்போலவேதான், மனிதனும் அவனின் வளர்ச்சி, வாழ்க்கை முறை, நடவடிக்கை, அவனின் முன்வினைபயனாக இனி செய்யவிருப்பது, பெற இருப்பது என்பதாக அவனுக்குள் வழிமுறை அமைந்திருக்கிறது. அது அவன் வாழும் காலத்தில் தானாகவே வெளிப்படும் என்பதும் உறுதி. அல்லது அவன் அவனுடைய எண்ணங்களாலும், சொல்லாலும், செயலாலும் வரவழைத்துக் கொள்வான். ஏற்கனவே தாயின் வயிற்றில் கரு, உடலாக மாறிடும் பொழுதே, கிரகங்களின் ஆளுமை பார்த்தோம். குழந்தையாக வளர்ந்து, பிறந்து வெளி வரும் காலத்தில், தனித்த உயிராக மாறிவிடுவதால், தனியான ஜாதக குறிப்பும் அமைந்து விடுகிறது.

அந்த ஜாதக குறிப்பின் படியே, அந்த குழந்தையின் உடல், மன, உயிர் நிலைமை, பெற்றோரிடம், பெரியவர்களிடம் நடந்துகொள்ளும் முறை, வெளியிடம் சமூகத்தில் நடந்துகொள்ளும் முறை, நட்பு, பகை, ஆர்வம், சிறப்பு, பொருளீட்டும் வாய்ப்பு, எதிர்பாலின கவர்ச்சி, அரசு உதவி, தெய்வ உதவி, ஆயுள் இப்படி பலப்பல தலைப்புக்களில் ஜோதிடர்கள் ஆராய்ந்து பலன் சொல்ல துவங்குகிறார்கள். இந்த குறிப்பின்படி சொல்லுவதெல்லாம் அப்படியே சிறப்பாக அமைந்துவிடுமா என்றால் அங்கேதான், இந்த இயற்கை ஒரு தடுப்பு வைக்கிறது.


நடந்தது, நடப்பது, நடக்கப்போவது

ஒரு ஜோதிடர் எந்த மனிதருக்கும், அவனின் ஜோதிடத்தை ஆராய்வாரானால், நடந்ததும், நடப்பதும் ஏறக்குறைய சரியாக அமைவது போல இருக்கும். நீ இப்படிப்பட்டவன், உனக்கு இந்த இடத்தில் நோய் வந்திருக்கும். நீ பிறந்த பொழுதே குடும்பத்தில் வறுமை, தகப்பனோடு ஒற்றுமையில்லை, ஊரெல்லாம் கடன் வாங்கிவிட்டாய், திருமணம் தள்ளிப்போகிறது. குலதெய்வம் வழி விடவில்லை. குழந்தை தாமதம், தொழிலில் சிறப்பில்லை. கடல் கடந்துபோய் சம்பாரித்தால்தான் நல்லது. இப்பொழுது வீடு, நிலம் வாங்க வழியில்லை. நட்பு சரியில்லை, திருட்டுத்தனம் செய்யாதே மாட்டிக்கொள்வீர், அரசோடு மோதாதே என்றெல்லாம் சொன்னால் ஆமாங்க, சரிங்க என்ற பதில்தான் ஜாதகர் தருவார். 

ஆனால் நடக்கப்போவதை கணித்து சொன்னால், அம்மனிதர் வாய்பிளந்து கேட்டு சந்தோசம் செய்து, ஜோதிடர் கேட்ட பணத்தை அல்லது அதற்கு மேலாக கொடுத்து வீட்டிற்கு திரும்புவார். ஆனால் ஜோதிடர் சொன்ன காலம் வரும்பொழுது, சில பலன்கள் தலைகீழாக நடக்கும் அல்லது நடக்காது. ஏன்?


மனம் கிரகத்தை தொடர்புகொள்ளுமா? 

மனிதன் தன்னுடைய மனதால் வாழ்கிறான். அப்போதும், இப்போதும், எப்போதும் அப்படித்தான். இதில் மாற்றத்திற்கு இடமே இல்லை. ஏற்கனவே கிரகங்கள் மனித மனதோடு தொடர்பு கொள்ளும் என்றும் கண்டோம் அல்லவா? அது உண்மையானால், மனமும் கிரகங்களோடு தொடர்பு கொள்ளுமே!  

தனக்கு நிகழ்ந்த பிரச்சனைகளின் அடிப்படையில்தான், அம்மனிதன் தன்னுடைய ஜாதக ஆராச்சியை தொடங்குகிறான். அந்த நொடியே அவனுடைய மனம், கிரங்களை நோக்கி கவனம் கொண்டு விடுகிறது. அந்த எண்ணமேதான், ஒரு ஜோதிடரை பார்க்கும்படி அவனை தூண்டுகிறது. ஜாதக பலன் பார்க்கிறான். ஜோதிடர் சொல்லும் கருத்துக்களை கேட்கிறான். அவர் சொன்ன விளக்கம், வழிமுறைகள் கேட்டுக் கொள்கிறான். இப்பொழுது அவனுக்குள், அவனுடைய ஜாதக்கபடி, தனக்கு நல்லது செய்யும் கிரகம், கெட்டது செய்யும் கிரகம் என்று வகைப்படுத்திக் கொள்கிறான். ஒரு எச்சரிக்கையை அமைத்துக் கொள்கிறான். ஆனால் அதே கவனம் நீண்ட நாளைக்கு இருப்பதில்லை மறந்தும் விடுவான். பிறகு வழக்கம்போலவே ஜாதக பலன்களையே மறந்துவிடுவான். எல்லாம் என் தலையெழுத்து, அதுதானே நடக்கும் என்று தனக்குள் சொல்லிக்கொள்வான். 


தூண்டுதல்

இந்த நிலையில்தான் கிரங்கள் எப்போதும் செய்வதை செய்கின்றன. அது என்ன? தூண்டுகின்றன. ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் ஆரம்ப காரணியாக கிரகங்கள் இருக்கின்றன. ஒரு மனிதன் அதைக் குறித்து கவனம் வைத்தாலும், வைத்துக்கொள்ளா விட்டாலும் அவனுக்குள் அக்கிரகங்கள் தூண்டுதலைத் தருகின்றன. ஆமாம், பிரபஞ்சம் முழுதும் இருக்கும் கிரகங்கள், மனிதனை தூண்டுகின்றன.


கட்டுரை இந்த பகுதியோடு முடிகிறது. 

வாழ்க வளமுடன்!


Present by:

Thanks to Images to: Internet source copyright to it's owners

Non-Miracle Eclipse Event


 அதிசயமல்லாத நிகழ்வு


நேற்றைய நாள்

நேற்று அமாவாசை (புதுநிலவு நாள்) மற்றும் சூரிய கிரகணம் (வளைய கிரகணம்) நாளுமாக அமைந்தது. அதாவது முழுமையாக சூரியனை மறைக்காது, அதன் உள்ளடக்க அளவிற்கு நிலவு மறைப்பது, வளைய கிரகணம் ஆகும். இந்த சூரிய கிரகணம் நம் இந்திய பகுதியில், அருணாச்சலம் மாநில பகுதிகளில் மட்டுமே காணக்கிடைக்கும் என்றனர். காரணம், இதன் கடல்மட்டத்திலிருந்து உயர்ந்திருக்கும் நிலப்பரப்பு ஆகும்.  பூமியின் வடகோள் பகுதி நாடுகளான ரஷ்யா, கனடா ஆகிய நாடுகளில் முழுமையாக காணக் கிடைத்தது. இது குறித்த செய்தி, காணொளி தேடுகையில், வேறுபல செய்திகளை நான் கண்டறிந்தேன். 


நிகழ்வது என்ன?

Image subject to the copyrights 


ஒரு புதுநிலவு நாள் (அமாவாசை) , முழு நிலவு (பௌர்ணமி) நாள் என்பது ஒவ்வொரு மாதத்தில் நிகழ்வதுதான். கிரகணங்கள் மட்டுமே குறிப்பிட்ட அந்த கால கட்டங்களில் நடைபெறுகிறது. பூமியும்  சந்திரனும் சூரியனும் சந்திக்கின்ற புள்ளிகள் தான் ராகு, கேது என்று அமைகின்றன. அந்த இடத்தில் மிகச்சரியாக, முழு நிலவு நாளில் சந்திரகிரகணமும், புதுநிலவு நாளில் சூரிய கிரகணமும் நடைபெறும். 

Image subject to the copyrights 

சூரியன், பூமியிலிருந்து கிட்டதட்ட 9 கோடி மைல் தூரத்தில் இருக்கிறது. நிலவு பூமியிலிருந்து 2 இலட்சத்து 86 ஆயிரம் மைல் தூரத்தில் இருக்கிறது. அளவுகளில் சந்திரனே மிகச்சிறியது. அதை விட மிகப்பெரிது பூமி, பூமியை விட மிக மிகபெரியது சூரியன். ஆனால் நாம் பூமியிலிருந்து பார்க்கும் பொழுது “இயற்கையின் அதிசயமாக” நிலவு அளவிற்கு சூரியனும் அல்லது சூரியன் அளவிற்கு நிலவும் இருப்பதை (மாய அளவுகளில்) காணலாம். இதனால் நிலவு தன் பாதையில் சூரியனை மறைப்பதும் (சூரிய கிரகணம்), பூமி தன் ஓட்டத்தில், நிலவுக்கான சூரிய ஒளியை மறைப்பதும் (சந்திர கிரகணம்) முழுமையாக நிகழ்கிறது. 


ராகு, கேது நிலை

இந்த ராகு, கேது இரண்டையும், ஜோதிட நூலார்கள் கிரகங்களாக எடுத்துக் கொண்டார்கள்.  உண்மையில் இவை காணக் கிடைக்காத நிழல் கிரகங்கள் என்று சொல்லப்படும். வேதாத்திரியத்தின் அடைப்படையில் இவை இரண்டும், சூரியனில் இருந்து வெளிவரும் சுத்தவெளியாகும். சூரியனில் எப்போதும் அணுச்சிதைவு ஏற்படுக்கொண்டே இருப்பதை நாம் அறிவியல் ரீதியாகவும் அறிவோம். அந்த சிதைவின் காரணத்தால், மையத்தில் ஏற்படும் அழுத்தம் வெளியாகி, தன்னிடத்தில் தாங்காது பீறிட்டு, சூரியனிலிருந்து வெளிக்கிளம்புகிறது. சில அணுவியல் வல்லுனர்கள் இதை “கரும்புள்ளி” (Block Spots) என்றும் சொல்லுகிறார்கள். 

இத்தகைய சுத்தவெளிப்பாதை சூரியனின் இரண்டுபக்கங்களிலும் பாய்ந்து, சூரியமண்டலத்தை கடந்தும் செல்கிறது. இந்த ஒரு பக்கத்தைத்தான் ராகு என்றும், மறு பக்கத்தை கேது என்றும் குறிப்பிடுகிறார்கள். இரண்டும் எதிர் எதிராக 180 கோணத்தில் அமையும்.

சந்திரனில் இருந்து வரும் ஒரு கோடு அதில் எதிரும் புதிருமாக 180 கோணத்தில் புள்ளிகள் என்றும் ஜோதிட வல்லுனர்கள் சொல்லுவதுண்டு, ஆனால் வேதாத்திரியத்தில் சூரியனில் இருந்து கரும்புள்ளிகள் வழியாக பீறிட்டு கிளம்பும் வெளி என்பதுதான் உண்மை. 

இந்த படங்கள் உங்களுக்கு ஒரு விளக்கத்தை தரலாம் என்று நினைக்கிறேன்.

Copyrights to caricaturist-journal.blogspot.com

இவை எல்லாமே உண்மை என்பதால், இந்த சூரிய, சந்திர கிரகணங்கள் மற்றும் கோள்கள் இவற்றால் எழும் பாதிப்புக்களும் உண்மைதானா? இதன் அடிப்படையில் சோதிடமும் உண்மைதானா? என்ற கேள்விகள் எழும் தானே? இக்கேள்விக்கான விரிவான பதிலை அடுத்த பதிவில் காணலாம். 


உண்மை என்ன?

இந்த பிரபஞ்சத்தில் எல்லாமே அணுக்களின் கூட்டு. இத்தகைய அணுக்களின் கூட்டு என்பது அணுவியல் அளவில் நின்றுவிடுகிறது. ஆனால் வேதாத்திரியத்தில் அணுவையும் கடந்து, விண்களின் கூட்டு என்றும், அதனினும் கடந்த பரமாணுக்களின் கூட்டு என்பதாக அமையும். இவை சுத்தவெளியின் சூழ்ந்தழுத்தால் சுழன்றுகொண்டே இருப்பதால், வான்காந்தம் உருவாகி அவை இந்த பிரபஞ்சம் எங்கும் பரவிக்கொண்டே இருக்கும்.

இந்த வான்காந்தத்தில் எந்தெந்த பொருட்களில் இருந்து உருவானதோ அதன் தன்மைகளை கொண்டிருக்கும். எந்த கிரகம் எந்த தன்மையை பெற்றிருக்கிறதோ அத்தகைய தன்மையை, இந்த வான்காந்தமும் பெற்றிருக்கும் என்கிற உண்மையும் தெளிவாகிறது. 

நமது உடலும் இந்த பரமாணுக்களின் கூட்டுதானே? அந்த வகையில் நமக்குள் ஏற்படுகின்ற வான் காந்தத்திற்கும், பிரபஞ்சத்தில் உருவாகும் ஜீவ காந்தத்திற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. இதில் வலிமை, அளவில் பெரிது என்ற அளவுகளும் இல்லை. ஆனால் ஒன்றோடு ஒன்று கலக்கும் பொழுது, அந்ததந்த அளவிலான மாற்றத்தை தருகிறது. இத்தகைய மாற்றம் நம்மால் ஏற்றுக்கொள்வதாகவோ, ஏற்றுக்கொள்ள முடியாததாகவோ அமையும். ஆகவே ஏற்றுக்கொண்டால் நன்மை, ஏற்றுக்கொள்ள முடியாதபோது தீமை என்ற அளவில் நாம் புரிந்துகொள்ளலாம்.


முக்கிய தன்மைகள்

வெளி என்பதற்கு சூழ்ந்தழுத்தும் ஆற்றலும், வான்காந்தம் மற்றும் ஜீவகாந்தத்திற்கு சூழ்ந்தழுத்த ஆற்றலும் விலக்கும் ஆற்றலும் சம அளவில் இருக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 


ஓதங்கள்

Image subject to the copyrights 


இந்த தன்மைகளின் அடிப்படையில், சூரியனும், நிலவும் தனக்குறிய வான்காந்த அலைகளை கொண்டிருக்கின்றன. நிலவு சூரியனின் முன் நேராக வந்து நிற்கையில், தன்னியல்பாக பூமியில் சில தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அந்தவகையில் கடல் தன் இயல்பில் இருந்து எழும்புகிறது, இதுவே ஓதம் எனப்படும். இப்படி ஓதம் ஒருபக்கம் உயர்கையில் இன்னொருபக்கம், ஓதம் தாழ்ந்து போகவும் செய்யும். 


உதாரணமாக,  உயர்ந்த ஓதமும் தரும், தாழ்ந்த ஓதமும் தரும். படம் காண்க.





 நன்றி: www.elitereaders.com


புரிதல் என்ன?

நாம் வாழும் பூமியே கொஞ்சம் பாதிக்கப்படுமென்றால், அதில் வாழும் உயிரினமான மனிதனும் பாதிக்கப்படுவான் தானே?. மனிதனின் உடலும் 70% நீரால் ஆனதுதானே! உடலுக்குள்ளாக ஓடுகின்ற இரத்தமும் நீரின் ஒரு நிலையே.  அதனால் மனித உடல் பாதிக்கப்படலாம். அதோடு நிலவின் வான்காந்த அலைகள், மனித மன அலைகளோடு அல்லது ஜீவகாந்த அலைகளோடு நெருக்கமான தொடர்புடையது. இதனால் மனிதனின் மன நிலையும் தடுமாறலாம். இன்னமும் கூட சில நுண்ணிய தொழிற்கருவி பயன்படுத்தும் வல்லுனர்கள், மனம் ஒன்றி வேலைசெய்யும் தொழிலாளார்கள் இத்தகைய நாட்களில் விடுமுறை எடுத்துக்கொள்வதை காணலாம். 


கூடுதலான விளக்கமாக

மனிதனின் உடலும், மனமும் பாதிக்கப்படுவதால்...

1) உடல் உறுப்பு இயக்கங்களில் சிறு மாற்றம் உண்டாகலாம்.

2) உணவு செரித்தல் தடை, தாமதம் உண்டாகலாம்

3) எண்ணம் சிதறலாம், முடிவுகளில் குழப்பம் வரலாம்

4) கருவிகளால் தன்னையோ, பிறரையோ காயப்படுத்துவது நடக்கலாம்

5) இந்த நாளில் உடல் உறவில் திளைத்தால், புத்தி சுவாதீனமற்ற குழந்தை உண்டாகலாம் அல்லது கரு பாதிப்பு உண்டாகலாம்

6) நோய்க்கான மருந்து பயன்படாமல் போகலாம்

7) ஏற்கனவே மனநோய் கொண்டோர் நிலைகொள்ளாமல் தவிக்கலாம்

8) நோயாளிகளுக்கு நோய்தன்மை உயரலாம்

9) உயிர் போகாது இழுத்துக்கொண்டிருந்த முதியோர் இறக்க நேரிடலாம்

10) குண்டலினி யோகத்தில் ஆர்வமுள்ளோர்க்கு தீட்சை பலனளிக்கும்

11) ஏற்கனவே தீட்சை பெற்றுக்கொண்டோர் தவம் சிறக்கும்

12) விழிப்புணர்வோடு இருப்போர்க்கு சிந்தனை சிறக்கும்.


உண்மைபோல புரட்டு

மேற்கண்ட 12 குறிப்புக்களோடு சில பல நிகழலாமே தவிர, வேறெந்த பாதிப்பும் நிகழ்ந்து விடுவதில்லை. ஆனால், பொதுவாகவே எல்லோரும், மக்களை பயமுறுத்தி, “கடவுள்” பயம் காட்டி, ஏதோ உலகமே ஒரு கெட்ட சரிவை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதான “உண்மைபோல புரட்டு” பகிரப்படுகிறது. வீட்டிற்கு, நாட்டிற்கு, உலகுக்கு ஆபத்து என்றெல்லாம் அள்ளித்தெளிக்கிறார்கள். அப்பதிவுகளையும் பல்லாயிரம்பேர் பார்த்து ரசித்திருக்கிறார்கள்.

இன்னும் மேலே “இந்த மந்திரம் சொல்லுங்கள், இந்த பதிகம் பாடுங்கள், இந்த பக்திபாடலை பாடுங்கள்” என்று மொத்தமாக மடை மாற்றுகிறார்கள். 


என்ன செய்யலாம்?!

உங்கள் வழக்கமான வேலைகளை, திட்டங்களை எல்லாம் சற்றே ஒதுக்கி வைத்துவிட்டு, இயற்கையாக வானில் நடக்கும் அற்புதங்களை ஏற்றுக்கொள்ளுங்கள். அமைதியாக இருங்கள். உங்களுக்கு பிடித்த எளிமையான செயல்களில் ஈடுபடலாம். திட்டமோ தீர்மானமோ வேண்டாம். உணவை தள்ளிப்போடலாம். வீட்டிற்கு வெளியே தாராளமாக வரலாம். தோட்டங்களில் ஓய்வு எடுக்கலாம். நல்ல இசை கேட்டுக்கொண்டே தூங்கலாம்.

கிரணங்களை பார்ப்பதில், சூரிய கிரகணங்களை வெறும் கண்களால் பார்ப்பது ஆபத்து. நேரடியான ஆதீத சூரிய ஒளி கண்களை குருடாக்கும். எனவே தகுந்த பாதுகாப்பு கண்ணாடிகளை உபயோகிக்கலாம். எப்படியும் தொல்லைகாட்சியிலும், யூடூயுபிலும் காட்டுவார்கள் அதை கண்டு மகிழுங்கள். சந்திர கிரகணம் கண்களுக்கு பாதிப்பு ஏற்படுவதில்லை என்று சொல்லப்படுகிறது. எனினும் அதற்கும் தகுந்த பாதுபாப்பு கண்ணாடிகள் கிடைக்கின்றன. 

சந்திரகிரகணம் வெறும் கண்ணால் பார்க்கலாமா? ஆங்கில வளைத்தளம் - விளக்கம்


அன்பர்களே

நீங்கள் உங்களை, தவறாக வழிநடத்தும் அல்லது பயமுறுத்தும் “பொது ஆலோசனையாளர்களிடம்” இருந்து தள்ளி நிறுத்துங்கள். 

வாழ்க வளமுடன்.