CJ for You: shanti

shanti

Showing posts with label shanti. Show all posts
Showing posts with label shanti. Show all posts

What is the old method to fix the meditation energy stagnation?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, சாந்தி தவம் அந்தக்காலத்தில் இல்லை என்றால், வேறெப்படி சமாளித்தார்கள்?


பதில்:

உண்மைதான். வேதாத்திரி மகரிஷியின் காலத்திற்கு முன்பே, சாந்தி தவம் என்ற இறங்குபடி தவம், யாரோலோ எங்கேயோ உருவாக்கம் பெற்று உலகில் நடைமுறையில் இருந்துவந்திருக்கிறது. ஆனால் அது எல்லோருக்கும் கிடைக்கும் வகையில் பரலாக்கப்படவில்லை. இதனால், வழக்கமான, கடினமான, பிரச்சனைகள் மிகுந்த தவமுறைகள்தான் அங்காங்கே செயல்முறையில் இருந்தன. அதனால், தவம் இயற்றிடும் யோகியர்கள் பலவழிகளில் துன்பமே அனுபவித்தனர் என்பதுதான் உண்மை.

சாந்தி யோகம் என்ற சாந்தி தவத்தை நமக்கு வழங்கிய வேதாத்திரி மகரிஷி அவர்களுமே, தன்னுடைய தவ ஆற்றலின் தேக்கத்தால் அவதியுற்றார் என்று நீங்கள் அறிவீர்களா? அந்த தவ ஆற்றலின் தேக்கப்பிரச்சனைகள் குறித்து அவரே அனுபவமும் பெற்றிருக்கிறார். அதை தன்னுடைய உரைகளிலும், என் வாழ்க்கை கதை நூலிலும், ஞானக்களஞ்சிய கவிகளிலும் குறிப்பிட்டுள்ளார். நீண்ட நாட்கள் அந்த பிரச்சனைகளுக்கு வழிதெரியாமல் திண்டாடி, பிறகுதான் அதை வழிப்படுத்திக்கொள்ள அவருக்கு வழிபிறந்தது. அது எப்படி? எங்கு என்பதை, நம் ‘வேதாத்திரிய யோகா’ காணொளி தளத்தில் பதிவாக தந்திருக்கிறேன். நீங்கள் என்னுடைய குரல்வழியாக உண்மையை அறிந்துகொள்ளலாம்.

-

இதோ அதற்கான சுட்டி(Link): https://youtu.be/hvSv2YuMhyg?feature=shared

-

வாழ்க வளமுடன்.
-

உலகம் பார்ப்பதற்கு முன்பாகமவே, உங்களுக்கு மட்டுமே முதலில் காணக் கிடைக்கும் பதிவுகள் பெறலாம், . உறுப்பினராக இணைந்துகொள்க.

Join this Channel - Only you can get posts that are available to see first, before the world sees it. 

https://www.youtube.com/channel/UCKov60ULoBQ76KIiUXhLL-A/join

-


How many meditation can practice per day and which one is best?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, ஒரு நாளைக்கு எத்தனை தவம் செய்யலாம்? எந்த தவம் அதிகம் செய்யவேண்டும்? அது எப்படி உதவும் என்று சொல்லுங்கள்!


பதில்:

ஒரே மூச்சாக மூன்று கேள்விகளை அடுக்கி வீட்டீர்கள். நல்லதுதான். மனவளக்கலை வழியாக கற்றுக்கொண்ட தவங்கள் அனைத்துமே தொடர்ந்து செய்து வரலாம். எனினும் ஒருநாள் என்று எடுத்துக்கொண்டால், காலை, நண்பகல், மாலை என்று மூன்று நேர தவம் போதுமானது. இரவு நேரம் / படுக்கைக்கு முன்னதாக தவம் என்பதை ஆரம்ப நிலையில் உள்ளவர்கள் செய்யத்தேவையில்லை.

பிரம்மஞானி / அகத்தாய்வு நிலைகள் முடித்தவர்கள் / அருள்நிதி / ஆசிரியர்கள் இரவில் தவம் செய்யலாம். அதுவும் ஆராய்ச்சி அடிப்படையில் துரியதவம் மிகச் சரியானது. துரியாதீதம் என்ற உயர்நிலை தவம் இரவில் செய்வதை தவிர்க்கலாம் என்பது பொதுவான கருத்து. மற்றபடி பொதுவாகவே துரியதவம் எல்லோருக்குமே அற்புதமானது. துரியதவம் நன்கு ஆழ்ந்து கற்றுத்தேர்வது உதவும், துரியாதீத நிலைக்கு தானாகவே அது உங்களை உயர்த்திதரும் என்பதும் உண்மை.

அதுப்போல தவ ஆற்றல் கூடினால் சாந்திதவம் கட்டாயமாக செய்தாக வேண்டும். அதற்காக வெள்ளிக்கிழமை வரை காத்திருக்கவும் அவசியமில்லை. 

ஆரம்பகாலத்தில் ஆக்கினையில் நல்ல தேர்ச்சியும், பிறகு துரியத்தில் நல்ல தேர்ச்சியும் இருந்தால்தான், துரியாதீதத்தின் பயன்களை நன்கு பெறவும் முடியும்.

அதுபோலவே இறைநிலைதவமும் மிகசிறப்பு வாய்ந்தது. மற்றபடி, நித்யானந்த தவம் தினமும் செய்துவரலாம். வேறுபல சிறப்பு தவமும் செய்துவரலாம். ஆனாலும் ஒருநாள் என்று எடுத்துக்கொண்டால், அடிக்கடி தவம் செய்வதில் ஆர்வம் வந்தாலும் தவிர்ப்பது நல்லது, மூன்று தவம் போதுமானதே. இதில் கூட்டுத்தவம் கணக்கில் சேர்க்கவில்லை.

வாழ்க வளமுடன்.