CJ for You: blood

blood

Showing posts with label blood. Show all posts
Showing posts with label blood. Show all posts

Please let me know the Vethathiriya simplified exercise within simple words!


எளியமுறை உடற்பயிற்சி சிறப்பு குறித்து எத்தனையோ விபரங்கள் இருக்கின்றன. அவை படிக்க கேட்க அலுப்பூட்டுகிறது. அதனால் சுருக்கமாக சொல்லமுடியுமா?



வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, எளியமுறை உடற்பயிற்சி சிறப்பு குறித்து எத்தனையோ விபரங்கள் இருக்கின்றன. அவை படிக்க கேட்க அலுப்பூட்டுகிறது. அதனால் சுருக்கமாக சொல்லமுடியுமா?

பதில்:

வேதாத்திரிய எளியமுறை உடற்பயிற்சியின் சிறப்பை மிக எளிமையாக, சுருக்கமாக சொல்லமுடியுமே. குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள், ஆரம்ப காலம் முதலாகவே, எளியமுறை உடற்பயிற்சியில் அவ்வப்பொழுது குறைகளை நிவர்த்தி செய்துகொண்டே வந்தார். ஆண்பாலருக்கு மட்டுமல்லாமல், பெண்பாலருக்கும் உண்டான பொருத்தங்கள், விளைவுகள், சங்கடங்கள், பலன்கள் இவற்றை ஆராய்ந்து திருத்தங்களும் செய்து வந்தார். அதை மறுபயிற்சியில் திருத்தங்களோடு சொல்லியும் வந்தார். அறிவும், அனுபவமும் கொண்ட மருத்துவர்களையும், மருத்துவ ஆலோசகர்களையும் கலந்தாலோசித்தும், அவர்கள் சொன்ன கருத்துக்களையும் ஏற்று, திருத்தம் அமைத்துக் கொண்டபிறகுதான், முழுமையான இப்போது இருக்கும், வேதாத்திரிய எளியமுறை உடற்பயிற்சி நமக்கு கிடைத்திருக்கிறது.

இந்தபயிற்சியில், அதை வடிவமைத்த வேதாத்திரி மகரிஷியே எளிய விளக்கங்களை மட்டுமே தந்து நிறுத்திக்கொண்டார். கேட்பவர்களையும், பயிற்சியில் ஆர்வமுள்ளவர்களையும், பயிற்சி கற்றுக்கொண்டவர்களையும், கற்றுக்கொண்டு இருப்பவர்களையும் குழப்பவில்லை. ஆனால் இன்று அதற்கு மாறான போக்கு வந்துவிட்டது, விபரம், நுணுக்கம், அற்புதம், அது இது என்று பல்வேறு வகையான, பல்லாயிரக்கணக்கான தகவல்கள் ‘வேதாத்திரிய எளியமுறை உடற்பயிற்சியில்’ கிடைக்கிறது. காலத்தின் மாற்றம் என்பதில் ஐயமில்லை. எனவே ஏற்றுக்கொள்ளக் கூடியதுதான்.

இதனால்தான், உங்களுக்கு எளியமுறை உடற்பயிற்சி சிறப்பு குறித்து எத்தனையோ விபரங்கள் இருக்கின்றன. அவை படிக்க கேட்க அலுப்பூட்டுகிறது. உங்கள் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் மிக எளிமையாக, சுருக்கமாக இங்கே உண்மைகளை தருகிறேன். உலகில் இப்போதும் நாம் செய்துவருகின்ற எல்லாவிதமான உடற்பயிற்சிகளும் நம்முடைய உடல் இயக்கத்தை சரி செய்கிறது. இதில் வயதுக்கு ஏற்றமாதிரியான பயிற்சிகளும் உண்டுதான். சில உடற்பயிற்சிகள் குறிப்பிட்ட இடங்களில் இருக்கும் எலும்புகள், தசைகள் இயக்கங்களை மறு சீரமைப்பும் செய்கிறது. வலி ஏற்படுத்தினாலும், நாளைடைவில் தானாக சரி செய்யும். உடலுக்கு போதுமான இரத்த ஓட்டத்தையும் காற்று சுழற்சியையும் தடையற்று இயக்குகிறது, உடல்வெப்பம் இயல்பாகிறது. என்றாலும் கூட, சில அசைவுகள் முரண்பாடானவை என்பதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

இத்தகைய பயிற்சிகளில், கவனம் செலுத்தி வந்த குருமகான் வேதாத்திரி மகரிஷி, அதை முழுவதுமாக சீராக்க நினைத்து ஆராய்ந்தார். ஓவ்வொரு நாட்டிற்கு செல்லும்பொழுதெல்லாம். அவர்களின் சமூக கட்டமைப்பில் இருக்கும் உடல், மனம் தொடர்பான வேலைகள், பயிற்சிகளை கேட்டுத்தெரிந்து கொண்டார். அதை பயிற்சியாக இணைத்தும்கொண்டார். அதனால், வேறெந்த உடற்பயிற்சிகளுக்கும் மேலாக வேதாத்திரிய எளியமுறை உடற்பயிற்சி உடலுறுப்புக்களின் இயக்கத்தை சீரமைத்து வலு ஊட்டுகிறது.

உடலில் ஒவ்வொரு உறுப்புக்களிலும், சதை, தசை, எலும்பு ஆகியவற்றின் இயக்கங்களிலும், அவற்றின் மூலக்கூறு, செல் அமைப்புகளிலும் நாம் செய்கின்ற செயல்கள், இயக்குகின்ற இயக்கங்கள் பதிவுகளாகிவிடுகின்றன. தேவைக்கேற்றபடி தானாகவோ, விரும்பும் பொழுதோ, சூழ்நிலையாகவோ அவை மறுபடி செயலாக மலர்கின்றன. அப்படியாக, இதுவரை நாம் செய்துவந்த செயல்களின் வழி

பதிந்த தேவையற்ற முரண்பாடான உடலியக்க பதிவுகள் சீராக்கப்படுகின்றன. இவை எல்லாவற்றையும் விடவும் முக்கியமாக, இயற்கையோடு ஒன்றிணைந்து உடல், மனம், உயிர் ஒத்துழைப்பாக இயங்க வழி தருகிறது!

வாழ்க வளமுடன்
-

Any best solution and prevention as lifelong to our body?


நம் உடலில் நோய்வராது காப்பதற்கு சிறந்த வழி உள்ளதா? நீண்டநாள் உதவிடுமா?




வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, நம் உடலில் நோய்வராது காப்பதற்கு சிறந்த வழி உள்ளதா? நீண்டநாள் உதவிடுமா?

பதில்:

இந்த உலகில் வாழ்கின்ற எல்லா உயிர்களுக்கும் நோயும், அதன் தாக்கமும், குணமடைதலும் உண்டு. அது இயற்கயாகவும் உண்டாகும். சில சூழ்நிலை காரணாகவும் வந்துவிடும். நாமே உருவாக்கியும் சிக்கிக் கொள்வோம். 2019ம் ஆண்டு உலகை பாதித்த கரோனா தொற்றுநோய், மனிதர்கள், தன்னுடைய ஆய்வகத்தில் உருவாக்கியதன் விளைவுதானே? அது இன்னமும் மிச்சம் மீதியாக ஆங்காங்கே தொடரத்தான் செய்கிறது. சிலவகை நோய், நோய்க்கிருமிகள், தாவரங்களை நாம் உணவாக உட்கொள்வதின் மூலமாக வந்துவிடுகிறது. வேறு சில நோயும், நோய்கிருமிகளும் பறவைகள், விலங்குகள், வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகள் வழியாகவும் நம்மை வந்துடந்து பாதிக்கிறது.

இயற்கையின் இயல்பாகவே தன்னைத்தானே சரி செய்துகொள்ளும் நிலை உடலுக்கும், உடல் உறுப்புகளுக்கும் உண்டு. அதில் ஏமாற்றமும், பலன் இல்லாது போலும் பொழுதும்தான் அது நோயாக வடிவமெடுக்கிறது. 
நம்முடைய வாழ்க்கையில், நமக்கு இந்த உடலை மிகச்சரியாக இயக்காமல் இருந்தாலும், அதிகமான வேலையை ஒரு உறுப்புக்கு கொடுத்தாலும் வலி வந்துவிடும் என்பது நமக்குத் தெரியும். அந்த வலி சரியானபடியாக தீர்கப்படாவிட்டால், அதுவே நோயாகவும் மாறிவிடும் என்பதை முதலில் கவனத்தில் கொள்ளவேண்டும்.

உணவு, நொறுக்குதீணி, அதீத சுவை, திடீர் உணவுகள் எடுத்துக்கொள்வதில் கவனம் வேண்டும். உடலுக்கு பொருத்தமானதா? என்பதை ஆராயவேண்டும். பசி வந்தால் மட்டுமே உணவு என்ற முறைக்கு மாறவேண்டும். நேரம் கடத்துதலும், நேரம் சுருக்குதலும் செரிமான உறுப்புகளை பாதிக்கும். 
உடலுக்குள்ளாக இயங்குகின்ற காற்றோட்டம், வெப்ப ஓட்டம், இரத்த ஓட்டம் இந்த மூன்றும் ஒன்றை ஒன்று பாதிக்கப்படாமல் இயங்கிட வேண்டியது அவசியம். அதற்கு நம்முடைய உடலும், உடல் உறுப்புகளும் சரியாக பயன்படுத்திடவும் வேண்டும். அந்த பயன்பாடு இப்போதைய உலக வாழ்வியலில் பெரும்பாலோர்க்கு இல்லை.

இதனால் உடல் அங்காங்கே சோர்வுற்று வலியாகவும், நோயாகவும் மாறிவிடுகிறது. இளம் வயதுவரை எட்டிப்பார்க்காத பரம்பரை வழியாக வந்த நோய்கள், குறிப்பிட்ட காலத்தில் வெளியேறியும் நம்மை பாதிக்கிறது. தகுந்த மருந்துகளை உட்கொள்வதின் மூலமும், எடுத்துக்கொள்வதின் வழியாகவும் தீர்க்கலாம். இல்லையேல் அது நீடித்த நோயாக மாறி, குணப்படுத்த முடியாத  நிலைக்குப் போய்விடும்.

மருந்தில்லா மருத்துவம் என்றாலும், அதற்கு முன்பாக, இந்த உடல் நோய் இல்லாத தன்மையில் வைத்துக்கொண்டால் தானே அது உதவும்?! நோய் வந்தபிறகும், முற்றியபிறகு அது எப்படி உதவமுடியும்?

மிகசரியான பருவ வயதில் உடல் அசைவுக்கு பழகவேண்டும். வேதாத்திரி மகரிசி வழங்கிய எளியமுறை உடற்பயிற்சி மிகச்சரியான தீர்வு. வருமுன் காப்பது என்ற நிலையில், வலி, நோயை தடுத்துக்கொள்ள நல்ல வழி. எனினும் எல்லாவயதினரும், எந்த வலி, நோய் நிலையில் உள்ளவரும்கூட கற்றுக்கொண்டு பயிற்சியை தொடர்ந்து செய்துவரலாம். வலி, நோயின் தீவிரம் குறைந்து குணமளிக்கும். என்றாலும் மருந்தும் அவசியம். தொடர்ந்து செய்துவரும்பொழுதுதான், மருந்தில்லா நிலைக்கு உடலும், உறுப்புகளும் பழக்கமாகலாம். அதுவரை மருந்துகளை நிறுத்திவிடாமல் தொடர்வும் வேண்டும். இதற்கிடையில் மருத்துவரின் ஆலோசனையையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

வேதாத்திரி மகரிசி வழங்கிய எளியமுறை உடற்பயிற்சி எல்லாவயதினரும் செய்யலாம். அதன் வழியாக உடல், மன, உயிர் வளம் காக்கலாம். வாழ்நாள் நீடிப்பும் செய்யலாம். இயற்கையோடு இணைந்த உடல் இயக்கத்தை பெறலாம். வாழ்வில் பசிக்கு உணவு என்பதைபோல, உடலுக்கு எளியமுறை உடற்பயிற்சி என்றவகையில் மாற்றிக்கொள்ள வேண்டும்.

முக்கியமாக உங்கள் உடலை பேணிக்காப்பதில், உங்களுக்கு மட்டுமே அக்கறை உண்டாக வேண்டும். அதில் ஆர்வம், முயற்சி, பயிற்சி இவைகளும் முக்கியமாகும்.

வாழ்க வளமுடன்.
-

Vethathiri Maharishi Simplified exercise, you and your health


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, எளியமுறை உடற்பயிற்சி செய்ய நினைக்கும் பொழுதெல்லாம் ஏதேனும் வேலை வந்து தடுக்கிறது. அதனாலேயே தொடர முடியவில்லையே?! என்ன செய்வது?!


பதில்:

நல்லதுதான், இதற்கு நம் வேதாத்திரி மகரிஷி அவர்கள் சொல்லுகிற பதிலை பார்க்கலாமா? ‘இதெல்லாம் சப்பைகட்டு, உங்களுக்கு செய்ய விருப்பமில்லை அதான் விசயம்’ என்கிறார். ஆம் அது உண்மைதானே? நீங்களும், உங்கள் உடலும், உடல் உறுப்புக்களும் நன்றாக, நீண்டநாள், எந்த நோய்தாக்கமும் இல்லாமல், வலி, சோர்வு ஏதும் இல்லாமல், காலை முதல் மாலை, இரவு என நாள் முழுவதும் உற்சாகமாக இருக்கவேண்டும் என்று நினைத்தால், எளியமுறை உடற்பயிற்சி செய்வதில் என்ன தயக்கம் வந்துவிடப்போகிறது?

இந்த எண்ணம் வந்துவிட்டால், முதலில் அதை செய்துவிட்டுத்தானே மற்ற வேலைகளை பார்ப்பீர்கள்? ஆனால் உங்களுக்கு உங்கள் உடலைவிட வேறு ஏதோ ஒன்று தேவையாக இருக்கிறது. முக்கியமாக தெரிகிறது. அதனால் எளியமுறை உடற்பயிற்சி செய்ய ஆர்வமில்லை, செய்தால் அப்படி என்ன ஆகிவிடப்போகிறது? செய்யாமல் விட்டாலும் ஒன்றும் குறையில்லை. நான் நன்றாகத்தானே இருக்கிறேன் என்றும் நீங்கள் நினைக்கிறீர்கள். சரி, நீங்கள் நன்றாக இருப்பதாக நினைப்பது சரிதான் தவறல்ல. ஆனால் உண்மையிலேயே உங்கள் உடலும், உடல் உறுப்புக்களும் நன்றாக இருக்கிறதா? என்று கேள்வி கேட்டு அதற்கான சோதனையை செய்திருக்கிறீர்களா? இல்லையா?

நீங்கள் எளியமுறை உடற்பயிற்சியை தவிர்க்கும் அளவிற்கு, உடல் நலத்தோடு இருக்கிறீர்கள் என்பது சிறப்பு. அதற்காக வாழ்த்துகிறேன். அந்த உடல் நலத்தை அப்படியே பேணி காத்திடுங்கள் அது போதும். எளியமுறை உடற்பயிற்சி செய்துதான் ஆகவேண்டும் என்று நானோ, வேறு யாருமோ, எவருமோ கட்டாயப்படுத்தவில்லை. உங்களுடைய பசிக்காக நீங்கள் தான் உணவு உண்ண வேண்டும் இல்லையா? அதுப்போலவே உங்களுக்கு தேவை என்றால் தான் எளியமுறை உடற்பயிற்சி செய்யவேண்டுமே தவிர கட்டாயத்திற்காக வற்புறுத்தலுக்காக பயமுறுத்தலுக்காக செய்ய வேண்டாமே?!

இனி உங்கள் முடிவுதான்! 

வாழ்க வளமுடன்.