CJ for You: cause and effects

cause and effects

Showing posts with label cause and effects. Show all posts
Showing posts with label cause and effects. Show all posts

Why we are living anytime with love and attraction?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, ஆண் பெண் பாலுறவு குறித்த ஈர்ப்பு எப்போதும் இருப்பது ஏன்?


பதில்:

அதுதான் இயற்கை. இதில், இந்த ஆணுக்கு பெண்மேல் ஈர்ப்பு, பெண்ணுக்கு ஆண்மேல் ஈர்ப்பு என்பது அவர்வர்களின் தவறு என்று வருந்த வேண்டியதில்லை. ஆனால் அதை முறைப்படுத்திக் கொள்ளாவிட்டால், அவர்கள் வாழும் வாழ்க்கை நாசமாகிவிடும். அதனால்தான் முன்னோர்கள், அறிஞர்கள், வாழும் மக்கள் நலம்காப்போர், தகுந்த காலம் வரை காத்திருக்கவும், தகுந்த துணை தேடி, திருமணம் என்ற பந்தத்தில் ஒருவருக்கு ஒருவர் என்ற நலம் சார்ந்து வாழவும், அவர்கள் குழந்தை பெற்று, காத்து வளர்த்து ஆளாக்கிடவும், வழிவகை செய்துவைத்தார்கள்.

உண்மையிலேயே, நம் பிறப்பே பாலுறவின் தீர்வு தானே? நம் பெற்றோரின் நிறைவான இன்பத்தின் வழியாகத்தானே நாம் இந்த உலகில் பிறந்தோம். அதனாலேயே அதன்பால் ஈர்ப்பு வருவது இயல்பு என்றுதான் குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்களும் குறிப்பிடுகின்றார். மேலும் அவர் விளக்கிடும் பொழுது, கருவாக இருந்து, இந்த உடல் கட்டப்படுவதற்கு, வித்துநாதமும், அதன் ஆற்றலுமே செலவாகிறது. அந்த கட்டமைப்பில் முழுமை வந்துவிட்டால், ஆண் பெண் பருவ வயதிற்கு வந்துவிடுகிறார்கள். அதாவது தன்னைப்போல இன்னொரு உயிரை உருவாக்கிக் கொள்ளக் கூடிய தகுதியை, இயற்கை அவர்களுக்கு வழங்கிவிடுகிறது. மேலும் வித்துப்பையில் ஏற்படும் தேக்கம், பாலுறவு தூண்டுதலையும் ஏற்படுத்துகிறது.

இதனால்தான், பருவ வயதினர்கள் அதீத பாலுறவு ஆர்வத்தில் இருக்கிறார்கள். தவறான வழிகாட்டல், பிறரின் தூண்டுதல், சூழ்நிலையின் தாக்கம் இவற்றால், இயற்கைக்கு மாறான பாலுறவு இன்பத்தில் திளைக்கிறார்கள். அதனால் வாழ்க்கை சிக்கலாக்கிக் கொள்கிறார்கள். இதிலிருந்து பருவ வயது ஆணும், பெண்ணும் விலகி விளக்கம் பெறவேண்டும். அதற்காகவே மனவளக்கலை வழியாக, காயகல்ப யோகம் எனும் சிறந்த பயிற்சியும் வழங்கப்படுகிறது.

முக்கியமாக, ஆண் பெண் பாலுறவு குறித்த ஈர்ப்பு எப்போதும் இருப்பது இல்லை என்பதே உண்மை. வித்தின் தன்மை மாறமாற, அதன் அளவு குறையக்குறைய ஈர்ப்பு இருந்திடாது. இதற்கு, உடலில், மனதில் ஏற்படும் மாற்றங்களும், வயதும் காரணமாக அமைகிறது. தெளிந்த அறிவோடு வாழப்பழகிக் கொண்டால், பாலுறவு ஈர்ப்பை அளவோடும், முறையோடும் அனுபவித்து, இன்பம் நிறைந்து வாழலாம்.

வாழ்க வளமுடன்.

Why should I carry someone's karma? Want to solve?


யாருடைய கர்மாவையோ நான் எதற்காக தூக்கி சுமக்கவேண்டும்? தீர்க்கவும் வேண்டும்?


வேதாத்திரியத்தில் ஆழ்ந்து விட்டால் தானாக தெரியக்கூடிய உண்மைகள், வெளிப்பார்வைக்கு பொருத்தமாக இருப்பதில்லை, புரிவதும் இல்லை. முன்னோர்கள் என்னுடைய முன்பிறவி, என்குழந்தைகள் என்னுடைய பிற்பிறவி என்பது, கர்மா என்ற வினைப்பதிவுகளின் அடிப்படையில் சொல்லுவது மட்டுமே. ஒருவர் முன்னாலும் பிறப்பதில்லை, பிற்பாடும் பிறப்பதில்லை. வாழ்வது ஒருமுறை, இறப்பதும் ஒருமுறையே.

ஆனால் கர்மா என்ற வினைப்பதிவு அப்படியல்ல. ஒரு சட்டையில் ஒட்டிய தூசி போல. யார் அதற்கு உரிமையாளரோ அவர் துடைக்கவேண்டும். அல்லது யார் அதை உரிமை கொண்டாடுகிறார்களோ அவர் துடைக்கவேண்டும். இந்த சட்டைதான் நம் உடல், சட்டையின் தூசி கர்மா. யாருமே தனியா வானத்திலிருந்து குதித்து பிறப்பதில்லையே! தாத்தாவின் சொத்து பேரனுக்கு என்றால், தாத்தாவின் கர்மா பேரனுக்கு வராமல் போகுமா? வேண்டாம் என்றாலும் இறைநிலை விடாது. (இறையே இல்லை என்றால் இயற்கை என புரிந்துகொள்க)

மேலும், மனிதனின் பிறப்பு ‘நான் யார்?’ என்று அறியவே மலர்ந்தது. அதற்கு தடையாக இருப்பது கர்மா என்ற வினைப்பதிவுகள். அந்த தடையை,  ஒருவர் அதை தீர்க்காதவரை, மகன், மகள், பேரன், பேத்தி, கொள்ளுப்பேரன், கொள்ளுப்பேத்தி இப்படியே, ‘இந்தா, தீர்க்கப்படாத இந்த கர்மாவை தீர்’ என்று ஒவ்வொரு பிறவியிலும், இறை அல்லது இயற்கை  கொடுத்துக் கொண்டே இருக்கும்.

எவருடைய கர்மாவோ எனக்கெதற்கு? நான் ஏன் சுமக்கவேண்டும்? தீர்க்க வேண்டும்? என்ற கேள்வி எழுவது இயல்பு. அது நம் மூளையின் அறிவு சார்ந்தது. ஆனால் கர்மா கருமையம் சார்ந்தது, மூளை மண்ணோடு மண்ணாகலாம், சாம்பலும் ஆகலாம். கருமையம் அப்படியே நகர்ந்து விடும், ஆண், பெண் வித்தின் வழியாக!

நீங்கள் மனம் விரும்பி வைத்திருக்கும் பொருளில், கறை இருந்தால் அதை அப்படியே விட்டுவிடுவீர்களா? 

கர்மா எனக்கில்லை என்று சொல்லுவதாக இருந்தால், ஏன் உங்கள் நடவடிக்கைகள், உங்களின் முன்னோர்கள் மாதிரி, தாத்தா மாதிரி, பாட்டி மாதிரி இருக்கின்றன? உங்கள் சொந்த வழக்க பழக்கங்களை ஏன் நீங்கள் செயல்படுத்துவதில்லை?! கற்றுக் கொள்ளவில்லையா?! கற்றது பதியவில்லையா? செயல்படுத்த முடியவில்லையா?! 

இன்னமும் யோசிக்கலாம், ஆராயலாம்! வாழ்க வளமுடன்.


Nature's Gift 2


 இயற்கையின் பரிசு! 

அன்பர்களே, 

இந்த கட்டுரைப்பதிவு, அமேசான் கிண்டில் (Amazon Kindle) மின்னூல் பதிப்பாக வெளியிட்ட காரணத்தால், இங்கே பதிவிட முடியாமைக்கு வருந்துகிறோம். சலுகையான விலையில் கிடைப்பதாலும், எழுத்தாளருக்கு உதவும் என்ற கருத்திலும் அங்கே வாங்கலாம் அல்லது இலவசமாகவும் படிக்கலாம். நூலுக்கான இணைப்பு இதோ:

https://www.amazon.in/dp/B09PRSDL3G 

-

Present by
Sugumarje