Home » Posts filed under eroticism
How you describe the Vethathiriya Kayakalpa Yoga Practice is the best for better life?
February 20, 2025 Sugumarje
காயகல்பம் செய்வதால் உடறுறவில் நாட்டம் குறையும்தானே? ஆண் பெண் உடறுறவே யோகத்திற்கு எதிரானதுதானே? பிறகு எப்படி காயகல்பம் கற்றுக்கொண்டால் நல்லது என்று சொல்லுகிறீர்கள்? பிறகு இன்பம் கொடுக்கவும் முடியாது, பெறவும் முடியாது, குழந்தையும் பிறக்காது என்பதுதானே உண்மை?
Why we are living anytime with love and attraction?
August 25, 2023 Sugumarje
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
கேள்வி:வாழ்க வளமுடன் ஐயா, ஆண் பெண் பாலுறவு குறித்த ஈர்ப்பு எப்போதும் இருப்பது ஏன்?
பதில்:
அதுதான் இயற்கை. இதில், இந்த ஆணுக்கு பெண்மேல் ஈர்ப்பு, பெண்ணுக்கு ஆண்மேல் ஈர்ப்பு என்பது அவர்வர்களின் தவறு என்று வருந்த வேண்டியதில்லை. ஆனால் அதை முறைப்படுத்திக் கொள்ளாவிட்டால், அவர்கள் வாழும் வாழ்க்கை நாசமாகிவிடும். அதனால்தான் முன்னோர்கள், அறிஞர்கள், வாழும் மக்கள் நலம்காப்போர், தகுந்த காலம் வரை காத்திருக்கவும், தகுந்த துணை தேடி, திருமணம் என்ற பந்தத்தில் ஒருவருக்கு ஒருவர் என்ற நலம் சார்ந்து வாழவும், அவர்கள் குழந்தை பெற்று, காத்து வளர்த்து ஆளாக்கிடவும், வழிவகை செய்துவைத்தார்கள்.
உண்மையிலேயே, நம் பிறப்பே பாலுறவின் தீர்வு தானே? நம் பெற்றோரின் நிறைவான இன்பத்தின் வழியாகத்தானே நாம் இந்த உலகில் பிறந்தோம். அதனாலேயே அதன்பால் ஈர்ப்பு வருவது இயல்பு என்றுதான் குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்களும் குறிப்பிடுகின்றார். மேலும் அவர் விளக்கிடும் பொழுது, கருவாக இருந்து, இந்த உடல் கட்டப்படுவதற்கு, வித்துநாதமும், அதன் ஆற்றலுமே செலவாகிறது. அந்த கட்டமைப்பில் முழுமை வந்துவிட்டால், ஆண் பெண் பருவ வயதிற்கு வந்துவிடுகிறார்கள். அதாவது தன்னைப்போல இன்னொரு உயிரை உருவாக்கிக் கொள்ளக் கூடிய தகுதியை, இயற்கை அவர்களுக்கு வழங்கிவிடுகிறது. மேலும் வித்துப்பையில் ஏற்படும் தேக்கம், பாலுறவு தூண்டுதலையும் ஏற்படுத்துகிறது.
இதனால்தான், பருவ வயதினர்கள் அதீத பாலுறவு ஆர்வத்தில் இருக்கிறார்கள். தவறான வழிகாட்டல், பிறரின் தூண்டுதல், சூழ்நிலையின் தாக்கம் இவற்றால், இயற்கைக்கு மாறான பாலுறவு இன்பத்தில் திளைக்கிறார்கள். அதனால் வாழ்க்கை சிக்கலாக்கிக் கொள்கிறார்கள். இதிலிருந்து பருவ வயது ஆணும், பெண்ணும் விலகி விளக்கம் பெறவேண்டும். அதற்காகவே மனவளக்கலை வழியாக, காயகல்ப யோகம் எனும் சிறந்த பயிற்சியும் வழங்கப்படுகிறது.
முக்கியமாக, ஆண் பெண் பாலுறவு குறித்த ஈர்ப்பு எப்போதும் இருப்பது இல்லை என்பதே உண்மை. வித்தின் தன்மை மாறமாற, அதன் அளவு குறையக்குறைய ஈர்ப்பு இருந்திடாது. இதற்கு, உடலில், மனதில் ஏற்படும் மாற்றங்களும், வயதும் காரணமாக அமைகிறது. தெளிந்த அறிவோடு வாழப்பழகிக் கொண்டால், பாலுறவு ஈர்ப்பை அளவோடும், முறையோடும் அனுபவித்து, இன்பம் நிறைந்து வாழலாம்.
வாழ்க வளமுடன்.
age / attraction / cause and effects / eroticism / guide / life / live / male and female / marriage / mature / Nature / parents / perfect / rules / sexual vital fluid / social / understand / wedding
How we get extreme feel in life bond and why called is as eroticism
August 08, 2023 Sugumarje
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, உடலுறவின் பொழுது அதிக இன்பம் எழுவது ஏன்? ஆனாலும் அதை சிற்றின்பம் என்று சொல்லுவது ஏன்?
பதில்:
இந்தக்கேள்வி, எல்லோருக்கும் பயன்பெறும் பதிலை பெற்றுத்தரக்கூடிய கேள்வி, மனிதவாழ்வின் தொடக்கமே, பாலுறவில்தானே ஆரம்பிக்கிறது. ஆணும் பெண்ணும் இணைந்துதான் ஒரு புதிய உயிரை உருவாக்ககூடிய தேவையை, இந்த இயற்கையும், தெய்வீகமும் ஏற்படுத்தி, பாதுகாத்து முழுமையாக்கியும் உள்ளது. இந்த பாலுறவு, அதன்வழியான புதிய உயிரனம் என்ற பண்பு, ஈர் அறிவு பரிணாமத்தில் தொடங்கிவிடுவதாக, விஞ்ஞான அறிஞர்கள் சொல்லுகிறார்கள்.
மேலும் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும், தன்னுடைய பருவ வயதில் ஏற்படும் பாலுறவு ஆர்வம் இயல்பானதே, இயற்கையானதே அதில் தவறு ஒன்றும் இல்லை. ஆனால், நாம் வாழும் உலகில், சமூக அமைப்பில், ஒரு கட்டுப்பாடு உள்ளது. இது ஒவ்வொரு நாட்டிற்கு ஒவ்வொரு அளவுமுறை, வயது, வழிகள், சட்டம், விதிகள் உருவாக்கப்பட்டிருக்கிறது. நம் இந்தியநாட்டில் பருவ வயது என்பது ஆணுக்கு 21 எனவும், பெண்ணுக்கு 18 என்றும் அமைந்திருக்கிறது. ஆனால் இயற்கையில் ஆணுக்கு 14 வயதிலும், பெண்ணுக்கு 10 முதல் 14 வரையிலான காலத்தில் பருவ தூண்டலும், அதன் உயர்வும் கிடைத்துவிடுகிறது.
உண்மையாகவே இந்த 10 முதல் 14 வயதில், பாலுறவு குறித்த விளக்கமும், அதன் விளைவும், அதை சமாளிக்கக் கூடிய தகுதியும் இருக்குமா என்றால் இல்லை. அதனால், இக்கால கட்டத்தில் பெரியவர்கள் / பெறோர்களின் / அறிஞர்களின் உதவியும், அக்கறையும், ஆலோசனையும் தேவைப்படுகிறது. இல்லையேல், பருவ வயது ஆணும் பெண்ணும் பாலுறவு இன்பத்தில் ஆழ்ந்து, அதன் தாக்கத்தில் தங்கள் வாழ்வையும், எதிர்காலத்தையும் சிதைத்துக் கொள்வார்கள்.
மேலும் பெண்ணுக்கு அந்த வயதில், குழந்தை உருவாகிவிடுமானால், அது மிகப்பெரும் சமுதாய கேடாக மாறிவிடும். அந்த வயதில் அவள் குழந்தையை பெற்றெடுக்கவும் வலிமையற்று இருப்பாள், வளர்க்கவும் முடியாது. இந்த சமூகமும் அதை ஏற்றுக் கொள்ளாது. இதனால்தான் குறிப்பிட்ட காலம் வரை காத்திருந்து, திருமணம் என்ற பந்தம் அமைத்து, இவளுக்கு இவன், இவனுக்கு இவள் என்று ஒப்புதலையும், சமூகம் ஏற்கும் நிலையையும், இவனின், இவளின் குழந்தை இது என்ற நிலைபாட்டையும் உருவாக்கிக் தருகின்றனர். இதனால்தான், பாலுறவை, தகுந்த வயதுவரை காத்திருந்து பெறவேண்டும் என்ற நிலையில்தான் அதை ‘சிற்றின்பம்’ என்று வாழ்வோர், அறிஞர்கள் சொல்லிவருகின்றனர்,
மேலும் யோகத்தில் இருப்பவர்களும் ‘சிற்றின்பம்’ என்று சொல்லுவது வழக்கம். அதற்கான காரணம், யோகத்தின் வழியாக, நான் யார்? என்று தன்னை அறிந்து, இறையுணர்வு பெற்றால், அதுதான் பேரின்பம் என்ற கருத்தில், மற்றது எல்லாம் சிற்றின்பம், குறையுடைய, முழுமையடையாத, நிறைவைத்தராத இன்பம் என்று சொன்னார்கள்.
சரி, உடலுறவின் பொழுது ஏன் அதிக இன்பம் எழுகிறது? அல்லது அப்படித்தோன்றுகிறது? இதற்கான காரணம், நாம் உணர்கின்ற, பெறுகின்ற, அதீத இன்பத்தை, நம்முடைய உயிராற்றலின் மூலமாகவும், அதன் வழியாக வருகின்ற ஜீவகாந்தம் என்ற இயக்கத்தாலும் பெறுகின்றோம். பாலுறவில் இந்த ஜீவகாந்தம் தன் இழப்பில் கூடுதலாக செலவாகிறது என்பதும் உண்மை. அதனால் அந்த இழப்பை ஈடு செய்ய, உயிரில் ஏற்படும் மாற்றம், ஒருவித மயக்கத்தை ஏற்படுத்துவதால், அது நமக்கு அதீத இன்பமாகவும் தோன்றுகிறது. ஆனால் அது தொடருமானால், உயிரிழப்பும் நேரலாம். கவனம்.
வாழ்க வளமுடன்.
Explain the someone says, kayakalpa yoga will reduce the happiness of life?
August 02, 2023 Sugumarje
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, காயகல்பம் கற்றுக்கொண்டால், காம இன்பத்தில் ஆர்வம் குறைந்துவிடும் என்று சொல்லுகிறார்களே? அது உண்மையா?
பதில்:
காயகல்பம் கற்றுக்கொண்டவர்கள் அப்படி சொன்னார்களா? காயகல்ப யோகபயிற்சியின் உண்மை அறியாதவர்கள், அதை கற்றுக்கொள்ள ஆர்வம் இல்லாதவர்கள், அதை விரும்பாதவர்கள் சொல்லுகின்ற கட்டுக்கதைதான் அது. லட்டு இனிப்பானது என்று சொன்னால் நீங்கள் என்ன சொல்லுவீர்கள். இல்லவே இல்லை இனிப்பு என்று நிச்சயமாக சொல்லுவீர்கள். ஏன்? எப்படி? ஏற்கனவே லட்டு சாப்பிட்டு இனிப்பை சுவைத்த அனுபவம் இருக்கிறது அல்லவா? அதன் வழியாக அந்த பதிலை சொல்லுவீர்கள். யாரேனும் ஒருவர், உங்களிடம் ‘லட்டு சாப்பிடாதே கசக்கும்’ என்று சொல்லியிருந்தால், இன்று நீங்கள் லட்டின் சுவையை சொல்லமுடியுமா?
காயகல்ப யோகக்கலை, வேண்டாத, முரண்பாடான, காம இன்ப நினைவுகளை, அந்த ஊக்குவித்தலை தடுக்கிறது. சரி செய்கிறது. ஆனால் இயற்கையாக இருக்கின்ற, எழுகின்ற காம இன்பத்தை குறைக்கிறது என்று உங்களை ஏமாற்றுகிறார்களே, அதற்குப் பதிலாக, இன்னமும் நிறைவாக, முழுமையாக அனுபவிக்க துணை செய்கிறது என்பதுதான் உண்மை. எனவே கட்டுக்கதைகளை நம்பாதீர்கள்.
காம இன்பதை அதிகப்படுத்தினாலும் நோய்வரும், இயற்கைக்கு முரணாக குறைத்தாலும் நோய்வரும் என்பதை நீங்கள் அற்வீர்களா? அப்படி இயற்கையாக உள்ளபோது எப்படி, காயகல்பம் கற்றுக்கொண்டால், காம இன்பத்தில் ஆர்வம் குறைந்துவிடும் என்று சொல்லுகிறார்கள் என்று புரியவில்லை. உங்களுக்கு கிடைக்கும் நல்ல வாய்ப்பை, தானும் பெறாமல், உங்களையும் பெற விடாமல் தடுக்கிறார்கள் என்பதுதான் உண்மை. அதற்கு இடமளிக்காமல், நீங்களே நேரில் மனவளக்கலை மன்றம் சென்று, வேதாத்திரிய காயகல்ப யோகப்பயிற்சியின் உண்மை அறிந்து, உடனே கற்றுக்கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்.
adolescent / body / eroticism / genetic center / happiness / healthy / Kayakalpa practice / kayakalpa yoga / kundalini / life force / magnetism / man and woman / mind / sexual vital fluid
What is VithuNatham as Sanskrit? As woman have it?
July 28, 2023 Sugumarje
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, வித்துநாதம் என்றால் என்ன? அது பெண்களுக்கும் உண்டா?
பதில்:
நாம் இந்த உலகில் பிறப்பதற்கு காரணமே, வித்து நாதம் சேர்க்கைதானே?! வித்து என்பது ஆண்கள் உடலில் உருவாகும் ஏழாவது தாது ஆகும், நாதம் என்பது பெண்கள் உடலில் உருவாகும் ஏழாவது தாது ஆகும். ஆனால் பிரித்துச்சொல்லாமல், வித்துநாதம் என்றுதான் அக்காலம் முதல் சொல்லுவது வழக்கம். பெண்களுக்கும் உண்டா? என்று கேட்பது உங்களின் அறியாமையை வெளிப்படுத்துகிறது. அதை திருத்திக்கொள்ள வேண்டும்.
பொதுவாக பெண்களுக்கு, காம இன்பத்தின் உச்சத்தில், ஆண்களுக்கு வெளிப்படுவது போலவே வெளிப்படுவது இல்லை. ஏனென்றால் பெண்களுக்கான பாலுறவு சக்தி என்ற நாதம், ஆண்களுக்கான பாலுறவு சக்தியான வித்து (விந்து) போல இல்லை என்பதே உண்மை. இதனால் வெளிப்பட்டாலும் கூட அதை நாம் தெரிந்துகொள்வதும் கடினமே. இதன் காரணமாக, பெண்களுக்கு இல்லை என்று கருதுவிடக்கூடாது.
பெரும்பாலும் அது ஏதும் நிறமற்ற நீர் போல, திரவம் போல வெளிப்பட்டுவிடும் என்பதுதான் உண்மை.
இந்த நாதமும், வித்துவும் கூடி, சக்திபெற்று, அதன்வழியாகவே கருமுட்டையை அடைந்து ஜீவனாக வளரும்படி இயற்கை வியத்தகு நிகழ்ச்சியை நடத்துகிறது. எனவே வித்து நாதம் என்பது, ஆண், பெண்ணுகான பாலுறவு சக்திதான் என்பதை அறிந்து கொள்க.
முக்கியமாக, இந்த வித்துநாதம், இயல்பாக திணிவு பெற்றால்தான், பாலுறவில் ஆர்வம் வரும். ஆனால் இக்காலத்தில், அப்படியல்லாது ஆர்வத்திலும், பழக்கத்திலும், விருப்பத்திலும் அதை வெளியேற்றி இன்பம் அடைவது என்று பருவ வயதினரும், இளம் வயதினரும் வாழ்கிறார்கள். வித்துநாதம் வீணாக வெளியேறினால் அது உடலையும், மனதையும், உயிரையும் பாதிக்கும். எனவே அப்பழக்கத்தை, தகுந்த ஆலோசனையோடு மாற்றிடவேண்டியது அவசியமாகும்.
வாழ்க வளமுடன்.


.jpg)
