Home » Posts filed under male and female
How imaginary thoughts affected the family and individual?
June 04, 2024 Sugumarje
பொதுமக்களின் உணர்ச்சி பெருக்கத்தை விட, கணவன் மனைவி என்ற குடும்ப அமைப்பையும், ஆண், பெண் ஆகியோரின் மன, எண்ண ஓட்டங்களையும் சில கற்பனைகள் எப்படி பாதிக்கிறது?
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, பொதுமக்களின் உணர்ச்சி பெருக்கத்தை விட, கணவன் மனைவி என்ற குடும்ப அமைப்பையும், ஆண், பெண், ஆகியோரின் மன, எண்ண ஓட்டங்களையும் சில கற்பனைகள் எப்படி பாதிக்கிறது?
பதில்:
காதல் காட்சிகளாகிய படங்களை அடுத்தடுத்துப் பார்ப்பது கணவன் மனைவி உறவில் சலிப்பைத் தரும். காதல் காட்சியில் நடிக்கும் நட்சத்திரங்கள் இருவரும் பார்க்கும் ரசிகர்களுக்கு ஆணுக்குப் பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் உள்ளத்தில் மானசீகக் காதலர்களாக இடம் பெற்றுவிடுவார்கள்.
அடுத்தடுத்து அந்த மானசீகக் காதலியையோ காதலனையோ பார்க்க வேண்டுமென்று அவர்களையும் அறியாமல் மனோவேகம் ரசிகர்களையும் இழுத்துச் செல்லும். பலர் உள்ளங்களைக் கவர்ந்து பணம் ஈட்ட வேண்டுமென்று பட அதிபர்கள் கூலிக்காக ஆண் பெண் இருவரையும் அமர்த்திக் கொள்ளுகிறார்கள்; நாணம் விட்டு நடிக்கச் செய்கிறார்கள்.
காதலர்களாக படக் காட்சியில் நடிக்கும் நடிகர்களுடைய கவர்ச்சியான உடைகளையும் நாணமற்ற முறைகளையும் அடிக்கடி பார்த்துப் பழகிக் கொண்ட குடும்பத்தவர்கள் தங்கள் வாழ்வில் இயல்பாக உயர்வாக ஒழுங்காக அமைந்த காதல் இன்பத்தை விருப்பத்தோடு நுகர முடியாது.
ஓட்டல்களில் தினமும் பலவிதமான ருசிகளையுடைய சிற்றுண்டிகளை உண்டு பழகி விட்டவர்கட்கு வீட்டுச் சிற்றுண்டி போதிய சுவை தருமா ? படக்காட்சிக் கவர்ச்சியிலும் மானசீகக் காதலர் உருவத்திலும் பல தடவை தன்னை மறந்து ஈடுபட்டு தன் உள்ளத்தில் வலுவேற்றிக் கொண்டவர்களுக்கு எவ்விதம் இயற்கையான காதல் நிறைவான இன்பத்தை அளிக்க முடியும்?
வாழ்க வளமுடன்.
-
பதிலின் மூலம் வேதாத்திரி மகரிஷி அவர்கள்
act / disappointment / drama / exception / fake / false / family / Imagine / individual / male and female / mind / mindset / people / reality / screen / serial / social / tele serial / web serial
Why Kayakalpa yoga morning exercise has 2 stages on level 3?
September 24, 2023 Sugumarje
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
கேள்வி:
வாழ்க வளமுடன் ஐயா, காயகல்ப பயிற்சியில், காலை மூன்று பயிற்சிகளில், நான்காவதாக ஆண்களுக்கு மட்டும் தனி நிலை என்பது ஏன்?
பதில்:
சித்தர்கள் வழியான, உடலை உறுதி செய்து, வித்துநாதம் காக்கும் அற்புத பயிற்சியே காயகல்பயோக பயிற்சி ஆகும். இந்த புராதனமான இக்கலையை, முழுமைசெய்து வடிவமைத்தவர், குரு மகான வேதாத்திரி மகரிசி அவர்களே. காலையில் செய்தும் பயிற்சி மூன்று, அதில் மூன்றாவது பயிற்சியில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனி நிலை அமைக்கப்பட்டிருக்கிறது.
அதாவது ஆண்களுக்கு கூடுதலாக ஒரு நிலை உண்டு. இதற்கான காரணம், பெண்களுக்கு உள்ளமைந்த கர்பப்பை, மற்றும் இனப்பெருக்க உறுப்புக்களில் அழுத்தம் வரக்கூடாது என்பதற்காகவும், அதனால் வேறுவிதமான பாதிப்புக்களும், தொந்தரவுகளும் ஏற்படுத்திக்கொள்ளக் கூடாது என்பதற்காகவும் மூன்றாவது பயிற்சி நிலையிலேயே பத்து அஸ்வினி முத்திரையும், ஒரு ஓஜ்ஸ் மூச்சும் செய்துவந்தால் போதுமானது ஆகும்.
ஆண்களுக்கு இனப்பெருக்க உறுப்பு உடலை விட்டு வெளிப்புறமாக அமைந்திருப்பதால், மூன்றாவது பயிற்சியின் முதல் நிலையில் 10 அஸ்வினி முத்திரையும், ஒரு ஓஜ்ஸ் மூச்சு செய்வதற்குமுன் உடலை வளைக்கும் விதமாக, கால்களுக்குள் கைகளை கோர்த்த நிலையில் வந்தபிறகு ஓஜ்ஸ் மூச்சு வெளியிட வேண்டும் என்று பயிற்சி வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
இதற்கான உண்மை விளக்கம், நீங்கள் இந்த காயகல்ப யோகப் பயிற்சியை கற்கும் பொழுதே சொல்லித்தரப்பட்டிருந்தாலும், நீங்கள் அதில் கவனமின்றி மறந்திருக்க வாய்ப்பு உண்டு எனினும் இப்பொழுது அறிந்துகொண்டது நன்மைதானே.
வாழ்க வளமுடன்.
Why we are living anytime with love and attraction?
August 25, 2023 Sugumarje
வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.
கேள்வி:வாழ்க வளமுடன் ஐயா, ஆண் பெண் பாலுறவு குறித்த ஈர்ப்பு எப்போதும் இருப்பது ஏன்?
பதில்:
அதுதான் இயற்கை. இதில், இந்த ஆணுக்கு பெண்மேல் ஈர்ப்பு, பெண்ணுக்கு ஆண்மேல் ஈர்ப்பு என்பது அவர்வர்களின் தவறு என்று வருந்த வேண்டியதில்லை. ஆனால் அதை முறைப்படுத்திக் கொள்ளாவிட்டால், அவர்கள் வாழும் வாழ்க்கை நாசமாகிவிடும். அதனால்தான் முன்னோர்கள், அறிஞர்கள், வாழும் மக்கள் நலம்காப்போர், தகுந்த காலம் வரை காத்திருக்கவும், தகுந்த துணை தேடி, திருமணம் என்ற பந்தத்தில் ஒருவருக்கு ஒருவர் என்ற நலம் சார்ந்து வாழவும், அவர்கள் குழந்தை பெற்று, காத்து வளர்த்து ஆளாக்கிடவும், வழிவகை செய்துவைத்தார்கள்.
உண்மையிலேயே, நம் பிறப்பே பாலுறவின் தீர்வு தானே? நம் பெற்றோரின் நிறைவான இன்பத்தின் வழியாகத்தானே நாம் இந்த உலகில் பிறந்தோம். அதனாலேயே அதன்பால் ஈர்ப்பு வருவது இயல்பு என்றுதான் குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்களும் குறிப்பிடுகின்றார். மேலும் அவர் விளக்கிடும் பொழுது, கருவாக இருந்து, இந்த உடல் கட்டப்படுவதற்கு, வித்துநாதமும், அதன் ஆற்றலுமே செலவாகிறது. அந்த கட்டமைப்பில் முழுமை வந்துவிட்டால், ஆண் பெண் பருவ வயதிற்கு வந்துவிடுகிறார்கள். அதாவது தன்னைப்போல இன்னொரு உயிரை உருவாக்கிக் கொள்ளக் கூடிய தகுதியை, இயற்கை அவர்களுக்கு வழங்கிவிடுகிறது. மேலும் வித்துப்பையில் ஏற்படும் தேக்கம், பாலுறவு தூண்டுதலையும் ஏற்படுத்துகிறது.
இதனால்தான், பருவ வயதினர்கள் அதீத பாலுறவு ஆர்வத்தில் இருக்கிறார்கள். தவறான வழிகாட்டல், பிறரின் தூண்டுதல், சூழ்நிலையின் தாக்கம் இவற்றால், இயற்கைக்கு மாறான பாலுறவு இன்பத்தில் திளைக்கிறார்கள். அதனால் வாழ்க்கை சிக்கலாக்கிக் கொள்கிறார்கள். இதிலிருந்து பருவ வயது ஆணும், பெண்ணும் விலகி விளக்கம் பெறவேண்டும். அதற்காகவே மனவளக்கலை வழியாக, காயகல்ப யோகம் எனும் சிறந்த பயிற்சியும் வழங்கப்படுகிறது.
முக்கியமாக, ஆண் பெண் பாலுறவு குறித்த ஈர்ப்பு எப்போதும் இருப்பது இல்லை என்பதே உண்மை. வித்தின் தன்மை மாறமாற, அதன் அளவு குறையக்குறைய ஈர்ப்பு இருந்திடாது. இதற்கு, உடலில், மனதில் ஏற்படும் மாற்றங்களும், வயதும் காரணமாக அமைகிறது. தெளிந்த அறிவோடு வாழப்பழகிக் கொண்டால், பாலுறவு ஈர்ப்பை அளவோடும், முறையோடும் அனுபவித்து, இன்பம் நிறைந்து வாழலாம்.
வாழ்க வளமுடன்.
age / attraction / cause and effects / eroticism / guide / life / live / male and female / marriage / mature / Nature / parents / perfect / rules / sexual vital fluid / social / understand / wedding
Nature's Gift
December 25, 2021 Sugumarje
இயற்கையின் பரிசு!
அன்பர்களே,
இந்த கட்டுரைப்பதிவு, அமேசான் கிண்டில் (Amazon Kindle) மின்னூல் பதிப்பாக வெளியிட்ட காரணத்தால், இங்கே பதிவிட முடியாமைக்கு வருந்துகிறோம். சலுகையான விலையில் கிடைப்பதாலும், எழுத்தாளருக்கு உதவும் என்ற கருத்திலும் அங்கே வாங்கலாம் அல்லது இலவசமாகவும் படிக்கலாம். நூலுக்கான இணைப்பு இதோ:
https://www.amazon.in/dp/B09PRSDL3G
-
baby / being with nature / child / desire / embryo / exception / give birth / happiness / human race / living beings / male and female / molded toys / replica / result / youth



.jpg)