CJ for You: being with nature

being with nature

Showing posts with label being with nature. Show all posts
Showing posts with label being with nature. Show all posts

Whenever we start meditating and doing penance at home, we fall asleep within a few seconds. Sometimes I fall asleep like that. This is why I do not meditate or do penance. How to avoid this?


வீட்டில் எப்போது தியானம்,  தவம் செய்ய ஆரம்பித்தாலும் சில நொடிகளில் தூக்கம் வந்துவிடுகிறது. சில நேரம் தவ மையங்களிலும் அப்படி தூங்கிவிடுகிறேன். இதனாலேயே தியானமோ, தவமோ செய்வதில்லை. இதை தவிர்ப்பது எப்படி? விளக்கம் தருக.

உங்களுக்கு பொதுவான தூக்கம், பற்றாக்குறை இருக்கலாம் என்று நினைக்கிறேன். ஒரு மனிதன், நாள் ஒன்றுக்கு நிறைவாக எட்டு மணி நேரம் தூங்கவேண்டியது அவசியம். உடல் நிலை குறையோடு இருந்தால், இந்த நேரம் இன்னும் அதிகமாகலாம். ஆனாலும், சராசரியான திடமான உடல்நலம் கொண்ட மனிதனுக்கு, ஆறு மணி நேர தூக்கம் போதுமானது என்றுதான் ஆய்வுகள் சொல்லுகின்றன. அது நம்மிடையே இருக்கும் நண்பர்கள் வழியாகவும் அறிந்துகொள்ள முடியும்.

இந்த எட்டு அல்லது ஆறு மணி நேர தூக்கம் மாறும்பொழுதுதான், சிக்கல் உண்டாகிறது. தூக்கம் என்பது, உடலுக்கும் உடல் உறுப்புகளுக்கும் சக்தி ஊட்டம் தருகின்ற மாபெரும் சக்தியாகும். முக்கியமாக மனம், புத்துணர்வு இந்த தூக்கத்தால்தான் கிடைக்கிறது. மனதோடு இணைந்த மூளையும் அமைதி அடைகிறது. கண்கள் ஒளி பெறுகின்றன. உங்களுக்கு தூக்கம் பற்றாக்குறை என்றால், முதலில் கண்கள், மூளை, மனம், உடலுறுப்புக்கள் பிறகு உடல் என்று வரிசையாக பாதிப்படைகிறது. எனவே முதலில் உங்கள் தூக்கத்தை கவனியுங்கள்.

எந்தெந்த வகையில், தூக்கம் இழப்பாகிறது என்று ஆராயுங்கள். சிலர் இரவு முழுவதும் விழித்திருப்பதும், காலையில் தூங்குவதும் உண்டு. இது இயற்கைக்கு விரோதமான செயல்பாடாகும். மனிதன் இரவு செயல்படுவன் அல்ல. எனவே இரவு பத்து மணிக்கு தூங்கி, அதிகாலை ஆறு மணிக்கு எழுவது, மிகச்சரியானதும், இயல்பானதும் ஆகும். என்றாலும், தியானம் என்ற தவம் செய்வதற்கு, அதிகாலை நான்கு முப்பதுக்கு விழிக்கலாம் நல்லதே. ஒருவேளை தூக்கம் வருமானால், பயிற்சிகளை முடித்துவிட்டு சிறிது நேரம் உறங்கலாம் தவறில்லை.

உங்கள் உடல், தானாகவே, இயல்பாகவே தூக்கத்தை கேட்கும். அந்த நேரத்தில் அக்கறை கொண்டு, உடனே தூங்கச் செல்வது சிறப்பு, நல்ல பழக்கமும் கூட. அதற்கு மாறாக, தூக்கத்தை கெடுத்துக்கொண்டு, சினிமாபார்ப்பதும், நிகழ்ச்சிகளை பார்ப்பதும், விழா கூட்டங்களில் இருப்பதும் தவறு. எனினும் எதிர்பாராத நிகழ்வுகளில், தூக்கம் தொலைப்பது வாழ்வில் இயல்புதான். அது எப்போதாவது என்பதால் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். ஆனால், எனக்கு பிடித்திருக்கிறது என்ற கருத்தில், இயற்கைக்கு விரோதமாக செயல்படக்கூடாது.

இதோ, இந்த காணொளிகள் வழியாக மேலும் பல உண்மைகளை அறிக.

தியானம் தவம் செய்யும் பொழுது தூக்கம் வருவது ஏன்? அதை தவிர்ப்பது எப்படி? உண்மை அறிவோம்.

தவம் செய்யும் பொழுது தூக்கம் வருகிறதா? ஏன்? வேதாத்திரி மகரிஷியின் விளக்கம் அறிவோமா?

வாழ்க வளமுடன்.

Devotion has become obsolete. Where will this end up? That's worrying. Do children and young people grow up without devotion? Is this correct?


வாழ்க வளமுடன் ஐயா,  இன்றைய காலத்தில், பக்தி என்பது காலாவதி ஆகிவிட்டதே? இது எங்கே போய் முடியுமோ? என்று கவலையாக இருக்கிறது. குழந்தைகளும், இளைஞர்களும் பக்தி இல்லாமலேயே வளர்கிறார்களே? இது சரிதானா? வேதாத்திரியம் என்ன சொல்லுகிறது? விளக்கம் தருக.


இந்த கேள்வி, எந்த காலகட்டத்திலும் உருவாக் கூடிய கேள்விதான். பொதுவாக மாற்றம் ஒன்றுதான் மாற்றமில்லாதது என்று அடிக்கடி சொல்லுவார்கள். அதுபோல, இவ்வுலகில் மக்களின் வாழும் முறை, அனுபோகம், அனுபவம் எல்லாமே மாறிக்கொண்டேதான் இருக்கும். நேற்றையபோல இன்று இருப்பதும் இல்லயே! அப்டேட் என்று சொல்லக்கூடிய, இருக்கும் நிலைக்கு தகுதி உயர்த்திக் கொள்ளுதல் அவசியமாக இருக்கிறது.

இந்த மாற்றங்கள் குறித்து நாம் கவலைப்பட ஏதுமில்லை. நாமும் இந்த சமூகத்தில் ஓர் அங்கமே என்றாலும் கூட, தனியாக சமூகத்தில் மாற்றத்தை கொண்டுவர முடியாது. அதற்குப் பதிலாக, நாம், நம்முடைய குடும்பத்தில் மாற்றத்தை செயல்படுத்திக் கொண்டால் போதுமானது. ஆம், நம்மை எப்படி, நம்முடைய பெற்றோர்கள், வழிப்படுத்தினார்களோ, அதுபோல நாம், நம்முடைய வாரீசுகளை, வழிப்படுத்திட வேண்டும். 

இந்த உலகில் பெரும்பான்யோரும், பெரியோர்களும், பெற்றோர்களும். குழந்தைகளை வழிப்படுத்திட தவறுகின்றனர். தனக்குத் தெரிந்ததை, குழந்தைகளும் தெரிந்துகொள்ளட்டும் என்று விட்டுவிடுகின்றனர். இப்படியான நிலை கூடாது. எந்தெந்த வயதில் எதை அறிந்துகொள்ள வேண்டுமோ. அவ்வப்பொழுது அறிந்துகொண்டால் போதாதா?

பக்தி என்பது உண்மையாகவே காலாவதி ஆகிவிட்டது என்று தோற்றமளிக்கிறது. ஆனால், தன்னாலும், மற்றவர்களாலும் எதுவுமே முடியாது என்ற நிலை வரும்பொழுது, கைகள் தானாக குவிந்து, ‘கடவுளே’ ‘இறைவா’ என்று வணங்குவதை தவிர்க்க முடியாது. இதை நீங்கள் கூட அனுபவத்தில் கண்டிருக்கலாம். ஆனால், நமக்கு உண்மைகளை உதாசீனம் செய்துதானே பழக்கம்?

நாம் ஏதேனும் விளக்கம் சொன்னால், ‘அப்படியானால், கடவுளை, இறைவனை காட்டு’ என்று நம்மிடம் வம்புக்கு வருவார்கள். விஞ்ஞானம் சொல்லுகிற, ஒரு அணுவைக்கூட உன் கண்ணால், பார்க்கமுடியாதே? விஞ்ஞானிகளும், இன்னமும் அணுவை முழுமையாக பிரித்து பார்த்திடவும் இல்லை என்பதை நீங்கள் அறிவீர்களா? அணுவிலும் அணுவாய், வெட்டவெளியாக இருப்பதை எப்படி காண்பாய்? உண்மையாகவே, அதை நீ பார்த்துக்கொண்டுதான் இருக்கிறாய்! ஆனால், அதை நம்பவும் மறுக்கிறாய்! சரிதானே? 

இந்த நிலையில்தான், நாம், நம்மளவில், திருத்தங்களை ஏற்படுத்திக்கொள்வது சிறப்பு. இதை வேதாத்திரி மகரிஷி, தன்னுடைய கவிதையிலும் சொல்லுகிறார்.


உருவ வழிபாடு சிறுகுழந்தைகட்கு மட்டும் 

   உயர்ந்த முறை; மனதுவளம், அடக்கம் இவைபழக 

பருவமடைந்தோர்கட்கு பதினெட்டாண்டின் மேல் 

   பருப் பொருட்கு மூலநிலை விண்ணுணரும் அறிவும் 

அருவநிலை அகத்துணரும் அகத்தவம் இப்பார் 

   அனைத்தும் வாழ்மக்களுக்கும் பொதுத்தேவை உய்ய 

கருவழியே நற்பிறப்பும் மும்மலங்களான 

   கறை மறைந்து மனிதகுலம் மேன்மை வளம் எய்தும். 


குழந்தைகளை நல்வழிபடுத்த, வருங்காலத்தில் சிறப்பாக வாழ, எது நல்லது தரும்? என்பதை புரிந்து கொண்டு சிறக்கவும், முன்னேறவும், பக்தி அவர்களுக்கு அறிமுகப்படுத்தபட வேண்டும். இங்கே உருவ வழிபாடு கொஞ்சகாலத்திற்கு அவசியம். தானாக சிந்திக்கும் ஆற்றலும், தெளிவைத்தேடி பயணிக்கும் விருப்பமும் வந்துவிட்டால், குறைந்தபட்சமாக பதினெட்டு வயது எனலாம். இந்த வயதில் அவர்களை பக்தி கடந்த யோகத்தில், பயணிக்கச் சொல்லி வழிகாட்டலாம். எனவே, சமுகம் குறித்த அக்கறை இருந்தாலும்கூட, நாமும் அந்த சமூகத்தில் அங்கமாக இருப்பதால், நம்மளவில் மாற்றம் செயல்படுத்தினால் போதுமானது ஆகும். அதுவே மனதுக்கு நிறைவாகவும் இருக்கும்.

வாழ்க வளமுடன்.

-

Nature's Gift 2


 இயற்கையின் பரிசு! 

அன்பர்களே, 

இந்த கட்டுரைப்பதிவு, அமேசான் கிண்டில் (Amazon Kindle) மின்னூல் பதிப்பாக வெளியிட்ட காரணத்தால், இங்கே பதிவிட முடியாமைக்கு வருந்துகிறோம். சலுகையான விலையில் கிடைப்பதாலும், எழுத்தாளருக்கு உதவும் என்ற கருத்திலும் அங்கே வாங்கலாம் அல்லது இலவசமாகவும் படிக்கலாம். நூலுக்கான இணைப்பு இதோ:

https://www.amazon.in/dp/B09PRSDL3G 

-

Present by
Sugumarje

Nature's Gift


 இயற்கையின் பரிசு!



அன்பர்களே, 

இந்த கட்டுரைப்பதிவு, அமேசான் கிண்டில் (Amazon Kindle) மின்னூல் பதிப்பாக வெளியிட்ட காரணத்தால், இங்கே பதிவிட முடியாமைக்கு வருந்துகிறோம். சலுகையான விலையில் கிடைப்பதாலும், எழுத்தாளருக்கு உதவும் என்ற கருத்திலும் அங்கே வாங்கலாம் அல்லது இலவசமாகவும் படிக்கலாம். நூலுக்கான இணைப்பு இதோ:

https://www.amazon.in/dp/B09PRSDL3G 


-

Present by
Sugumarje

Body isn't your servant


 உடல் உன் வேலைக்காரனல்ல.









வணக்கம் அன்பர்களே!


உங்களுக்கு பரிசாக கிடைத்த உடல் மற்றும் உடல் உன் வேலைக்காரன் அல்ல எனும், 

இந்த பதிவு மற்றும் இதன் தொடர்ச்சி பதிவுகள் அனைத்தும், அமேசான் வழியாக ”இயற்கை வழங்கிய உங்களுக்கான பரிசு” எனும் தலைப்பில் மின்நூலாக வெளிவருவதால், இங்கே பதிவிட முடியாமைக்கு வருந்துகிறேன். உங்கள் ஆதரவுக்கு நன்றி.


அமேசான் கிண்டில் மின்நூல் வழியாக வாங்க அல்லது படிக்க, கீழே சுட்டுக.

இயற்கை வழங்கிய உங்களுக்கான பரிசு


---------------

Thanks images to:

Isaac Quesada @isaacquesada / Dainis Graveris @dainisgraveris / Naassom Azevedo @naassomz1