CJ for You: gift

gift

Showing posts with label gift. Show all posts
Showing posts with label gift. Show all posts

Nature's Gift 2


 இயற்கையின் பரிசு! 

அன்பர்களே, 

இந்த கட்டுரைப்பதிவு, அமேசான் கிண்டில் (Amazon Kindle) மின்னூல் பதிப்பாக வெளியிட்ட காரணத்தால், இங்கே பதிவிட முடியாமைக்கு வருந்துகிறோம். சலுகையான விலையில் கிடைப்பதாலும், எழுத்தாளருக்கு உதவும் என்ற கருத்திலும் அங்கே வாங்கலாம் அல்லது இலவசமாகவும் படிக்கலாம். நூலுக்கான இணைப்பு இதோ:

https://www.amazon.in/dp/B09PRSDL3G 

-

Present by
Sugumarje

Compansation and Athma Shanti


பரிகாரமும், ஆத்மா சாந்தியும்

Arulmigu Magudeshwarar Temple - Kudumudi - Erode Distric, Tamilnadu, India.


நேற்று கொடுமுடி (Kodumudi) , மகுடேஷ்வரர் திருக்கோவில் (Magudeshwarar Sivan Temple) காவிரி (River Cauvery) ஆற்றங்கரைக்கு செல்லும் பயணம் நேர்ந்தது.  அந்த கோவிலுக்கு செல்லும் எல்லா வீதிகளிலும், பரிகார் (ஹிந்தி) கடை இருக்கிறது. அங்கே இறந்தவர்களுக்கு கருமாதி எனப்படும் ஆத்மா சாந்தி, வாழ்க்கை வசதி தடை விலக்கல். திருமண வாய்ப்பு உருவாக்குதல் என்ற  வகையில் பரிகாரம் செய்வதற்கான எல்லா பொருட்களும், செட் செட்டாக (ஒரே தொகுப்பாக) விற்கப்படுகிறது. பூக்கடைகளும், வண்ணப் பூமாலை கடைகளும் நிறைய இருக்கின்றன.

வீதியின் வழியே செல்லும் எல்லோரையும்,

“வாங்க பரிகாரமா? நான் செய்து தருகிறேன்” என்று கை பிடித்து அழைக்காத குறையில் பரிகாரம் நடத்தும் விற்பனர்கள் இருக்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட பிரிவினர் என்றல்லாது எல்லோரும் இதில் இறங்கிவிட்டார்கள் என்று நினைக்கத் தோன்றுகிறது.

கொடுமுடியின் இந்த ஸ்தலம், பரிகாரத்திற்கு மட்டுமே என்று எண்ணிவிட வேண்டாம். மனித ஆத்மாவின் வாழ்க்கை முடிவுக்கு மட்டுமல்ல, மனித வாழ்க்கையின் தொடக்கமான திருமணமும் இக்கோவிலில் நிகழ்த்தப்படுகிறது. 

Ritual athma santhi parikar at Cauvery river - Kodumudi


திருச்சி மாவட்டத்திற்கும் நுழையும் காவிரி, அகண்ட காவிரி என்று அழைக்கப்படும். ஆனாலும், இங்கே கொடுமுடியிலும் அகண்ட காவிரியாகத்தான் ஓடிவருகிறாள். இப்போதும், முழங்கால் நீரில் மூழ்கும் அளவில் நீர் ஓடிக்கொண்டிருக்கிறது. குறிப்பாக, வடக்கிலிருந்து தெற்காக பாய்ந்துவரும் காவிரி ஆறு, கொடுமுடியில்தான் கிழக்கு நோக்கி பாய்ந்து, கரூர், திருச்சி மாவட்டங்கள் வழியாக, தஞ்சை, கும்பகோணம் மாவட்டங்களை அடைந்து கடலில் தஞ்சமாகிறது. கொடுமுடி காவிரியில் குட்டியாக நிறைய மீன்களும் வலம் வருகின்றன. இதுவரை இப்பெரும் ஆற்றை கண்டிராத குழந்தைகள், மீண்டும் மீண்டும் நீரில் இறங்கி எழுவதை காணமுடிந்தது. இப்படியெல்லாம் குழந்தை குழந்தையாகவே இருப்பதை இங்கேதான் கண்டேன்.

படித்துரை முழுதும், யாரோ அவிழ்த்துப்போட்ட துணிகளும், உள்ளாடைகளும் கவனிப்பாரற்று கிடந்தன. உன் வாழ்க்கை சோகத்தோடு, இதையும் அங்கே போட்டுவிட்டு திரும்பிப் பார்க்காமல் போய்விடு என்று யார் பரிகாரம் சொன்னது என்று தெரியவில்லை. 

பரிகார ஸ்தலம் என்றால், புண்ணியத்தை வேண்டிப்பெரும் இடம்தானே?! அதை எப்படி தூய்மையாக, சுகாதாரமாக, மற்றவர்களும் வந்துபோகவேண்டும் என்ற கவனத்தோடு, பெரும் நோக்கத்தோடு உபயோகப்படுத்தும் நிலை, நம்மிடம் அறவே இல்லை, அங்கே குவிந்து கிடக்கும் குப்பைகளும், நாற்றங்களும், ஆற்றின் கரையில் மிதக்கும் வேண்டாத பொருட்களும், பரிகாரத்திற்குப்போய் வந்து நமக்கே பரிகாரம் செய்துகொள்ள வேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்திவிடும் போலிருக்கிறது.

பரிகார விற்பனர்கள் அங்கங்கே குடில்கள், வீடுகள் அமைத்திருக்கிறார்கள். அதன் வாசலில் தற்காலிக பந்தல் அமைத்து, வேண்டுவோருக்கு பரிகார சடங்குகள் செய்துதருகிறார்கள். அவர்கள் வீட்டு வாசலில் அவர்கள் மட்டுமே உட்காரும், பிளாஸ்டிக் இருக்கைகள் உள்ளன. நாம் உட்கார்ந்தால் அடுத்த நொடி “அங்கே போய் உட்காருங்க” என்று கிளப்பிவிடுகிறார்கள். செருப்பைக்கூட அங்கே தனிப்பட்ட ஓரிடத்தில்தான் கழற்றி வைக்கவேண்டியுள்ளது. 

Tree around the snake stones and deities


பெரிய ஆலமரமும், நாக சிலைகள் அடுக்கப்பட்ட கல் மேடையும், ஆற்றின் கரையெங்கும் இருக்கிறது. அதைச்சுற்றியுள்ள தரைப்பகுதியில்தான், பரிகார சடங்குகள் நிகழ்த்தித் தரப்படுகின்றன. சிலர் வேண்டுதலாகவே நாக சிலைகள் வாங்கி வணங்கி, அந்த ஆலமர மேடையில் வைத்துவிடுகிறார்கள். பரிகாரத்திற்கு நாங்கள் அங்கே விசாரித்தவகையில், பரிகார சடங்கு செய்ய தொகை, குறைந்தபட்சமாக மூவாயிரம் ரூபாய் என்று கேள்விப்பட்டேன். அதுபோக அங்கே விரித்துவைத்திருக்கும் சடங்கு பொருட்களும், நவதானியங்களும், மளிகை சாமான்களும், காய்கறிகளும், பழங்களும், வாழை இலைகளும் கூட, பரிகார விற்பனர்களுக்கே சென்றுவிடும். கூடுதலாக ஒரு பித்தளை சொம்பு, ஒரு பட்டுக்கரை வேட்டியும் தானம் உண்டு. வசதி இருப்பவர்கள் இன்னும் கூடுதலாக செய்யலாம். அந்தக்காலத்தில் பசுமாடும், கன்றுக்குட்டியும் தானம் தருவார்கள். கொடுமுடி மகுடேஷ்வரர் திருக்கோவில் காலம் கிட்டதட்ட இரண்டாயிரம் என்று சொல்லுகிறார்கள். ஆகவே இத்தகைய பரிகாரமும் அக்காலம் முதற்கொண்டே நடந்திருக்கவும் வாய்ப்புள்ளது.

எல்லாம் சரிதான், ஆனால் முக்கியமான உண்மை என்ன தெரியுமா? பரிகாரத்தால் ஒரு பயனுமில்லை. பரிகாரம் செய்வதால், இறைவனும் மகிழ்ச்சி கொள்வதில்லை, ஆத்மாவும் சாந்தியடைவதில்லை. 

இறை மனிதர்கள் செய்யும் எந்த தந்திரங்களையும் ஏற்றுக்கொள்ளும் தன்மை கொண்டதல்ல. நமக்கென்று நம் கருமையத்தில் ஏற்கனவே இருக்கிய வினைப்பதிவுகளையும், நாமே வரவழைத்துக்கொண்ட வினைப்பதிவுகளை அவ்வப்போது ஆராய்ச்சி செய்து, மனதையும், உடலையும், தூய்மை செய்து கொள்வதுதான் சரியான வழி. இதற்கு யோகமும், தவமும் முக்கிய தேவை. உடற்குறைகளை போக்கிக்கொள்ள அதற்கான உடற்பயிற்சியும் தேவை. அதன்றி,  உனக்கு, இது செய்கிறேன், அது செய்கிறேன் என்மீது கருணைமழை பொழி என்று வேண்டுவது அபத்தம். இறைக்கு படைக்கும் பொருளனைத்தும் இறை படைத்ததே தவிர, உனதானது எது?!

ஒரு ஆத்மா சாந்தி பெற, இறந்தவரின் நினைவில் நின்று, வாழ்த்தி வணங்கி, அவர் விட்டுச்சென்ற நற்செயல்களை செய்வதும், அல்லது  உறவினர்கள், உதாரணமாக, வாழ்க்கை துணைவர், மகன், மகள், பேரக்குழந்தைகள் ஆகியோர், அவரின் பெயரில் நன்மைகளை மக்களுக்கு செய்வதுமே, இறந்தவரின் ஆத்மா சாந்தியடைய வழி செய்யும். குலதெய்வம் என்று சொல்லப்படுகிற முறையும் இதுவே. காலம் காலமாக, ஒருகுடும்பத்தில் குலதெய்வம் வழிபாடு, வாழ்ந்து மறைந்த முன்னோர்களை நினைந்து வழிபடும் முறையாகவே இருந்துவருவது உண்மை. 

இந்த பரிகார சடங்குகளில் சொல்லப்படும் மந்திரங்களில் இருக்கும் பொது அர்த்தம் என்ன தெரியுமா? 

“சிவம், சக்தி, விநாயகன், கந்தனுக்கான இறைத்துதிகளும், வணக்கங்களும், பிறகு, சூரியன், சந்திரன், புதன், சுக்கிரன், செவ்வாய், குரு, சனி, இராகு, கேது ஆகிய கிரங்களுக்கான வணக்கங்களும், நான்கு தலைமுறை பாட்டனார், கொள்ளுதாத்தா, தாத்தா, தந்தை, இறந்து போன நபர் ஆகியோரின் பெயர் சொல்லி அவர்களை நினைத்து வணங்கி, உங்கள் பெயரில் இதை நடத்தி, எங்களை ஆசீர்வதிக்க வேண்டியும், உங்களுக்காக இதை தானமாக வழங்கவும் செய்கிறோம். எங்களோடு கலந்திருந்து நீங்கள் உன்னதம் அடைவீர்களாக. உங்கள் பெயரில் பிண்டம் வைத்து ஆற்றில் விடுகிறோம். (மீன், காகம் போன்ற) உயிரினங்களாக வந்து பசி தீர்த்துக்கொள்வீர்களாக. இனியும் நாங்கள் தானம், தருமம் செய்து எங்களை திருத்திக்கொள்கிறோம்” என்பதாக அமைந்திருக்கிறது.  

பிண்டம் வைத்து வணங்கி, சமைக்காத அவ்வுணவை ஆற்றில் விடும்பொழுது, மீனுக்கும், காகத்திற்கும் இரை வேண்டுமானால் கிடைக்கலாம். ஆத்மாவுக்கு என்ன? என்று விடைதருவார் யாருமில்லை. ஒரு நபர் செய்யும் பரிகார சடங்கு, நான்கு தலைமுறை ஆத்மாவுக்கு சாந்தி தரும் என்பது வியப்புக்குரிய செய்தி. இது குறித்த தெளிவு யாரிடமும் இல்லை. கேள்வி கேட்கவும் தயங்கி, எல்லோரும் செய்வதால் நானும் செய்கிறேன் என்றே பதில் கிடைக்கும். இதை செய்யாவிட்டாலும் குற்றம் என்று புலம்பவும் செய்வார்கள். பிறர் ஏதேனும் கேள்வி கேட்டு ஏளனம் செய்வார்கள் என்ற பயமும், இதைக்கூட செய்யமுடியாத என்ன என்ற கிண்டலும், ஒருவேளை “சாந்திபெறாத ஆத்மாவால்” தங்கள் குடும்பத்தில் ஏதேனும் தீங்கு நேருமோ என்ற குழப்பமுமே காரணம். ஆனால் உண்மை என்னவெனில், வாழ்ந்த மனிதரின் இறப்பு பற்றிய விளக்கம் தெரியவில்லை. வாழும் மனிதருக்கு தன் வாழ்வு குறித்தும் அக்கறை இல்லை. தானும் இறப்போமே அப்போது என்ன ஆகிவிடுவோம் என்ற உள் தேடல் கேள்வியும் இல்லை. அக்கேள்விக்கான பதிலைத்தேடவும் ஆர்வமில்லை.

“இறந்தவனை சுமந்தவனும், இறந்துட்டான், அதை இருப்பவனும் எண்ணிப்பார்க்க மறந்துட்டான்”

பின்குறிப்பு: இப்பதிவு யாரையும் புண்படுத்தும் நோக்கத்தோடு எழுதப்படவில்லை. யோகம், தவம், உடற்பயிற்சி என்ற சிந்தனை தூண்டுதலுக்காகவே எழுதப்பட்டது. இறை, ஒருகுறிப்பிட்ட இன மறுப்பாளர்கள் இக்கட்டுரையை மேற்கோள் காட்டக்கூடாது என்று எச்சரிக்கப்படுகிறது. 

photos thanks to: tripadvisor, Tamilnadu Tourism and June3 studio


Keep it safe, will become history


 பாதுகாப்பாக வைத்திருங்கள், வரலாறாக மாறும்!



ன்று, எனது அத்தையை நினைவு கூறவேண்டியதாக இருந்தது. தன் கணவரின் மறைவிற்குப்பிறகு, குடும்ப பொறுப்புக்களிலிருந்து விலகி,  தான் உண்டு, தன் காரியும் உண்டு என்று, அமைதியாக தன் வாழ்நாளை கழித்துக் கொண்டிருந்தவர். தன் எதிர்ப்பைக்கூட புன்சிரிப்பாக தரும் பண்புக்கு தன் வாழ்வின் கடைசிக்காலங்களில் வந்திருந்தார். எனக்கு சில நுணுக்கங்களையும், திறமைகளையும், சிந்தனைகளையும், ஆன்மீக சிந்தனைகளையும் அவ்வப்போது எனக்கே தெரியாமல் ஊக்குவித்தவர் என்பதை என் 14 வயதிற்கு பிறகுதான் அறிந்துகொண்டேன்.

நூல் பின்னல் வேலைகளும் (Embroidery), கோலங்களும் (Mandala), சிறிய பூ, இலை ஓவியங்களும் (Flower and Leaft Arts), காகிதத்தில், கத்தரிக்கோலால் அங்கங்கே வெட்டி புதிது புதிதாக வடிவங்களை உருவாக்குவதும் (Paper cutting design works) அவரின் திறமைகள், அவற்றை எனக்கும் சொல்லிக் கொடுத்திருக்கிறார். அதெல்லாம் இக்கால குழந்தைகளுக்கு ஆர்வமில்லை, அப்படி கற்றுக்கொள்ளும் பொறுமையும் இல்லை. 

நாளிதழ்களிலும், வாரபத்திரிக்கைகளிலும், திருமண அழைப்பிதழ்களிலும் காணப்படும் சிறுசிறு அச்சுவடிவங்களை தனியே பிரித்தெடுத்து, அழகாக வேறொரு அமைப்பில் ஓட்டி அழகுபடுத்துவார். உதாரணமாக, ஒரு அட்டையில் ஒட்டப்பட்ட போட்டோவில் (Photo Mounded) இந்த “வெட்டி எடுக்கப்பட்ட” வடிவங்களை அமைத்து, முப்பரிமான காட்சியை (3D Vision) ஏற்படுத்துவார். அதற்குப்பிறகு அதை, வெளியே ஒளிப்பட கடைகளில் கொடுத்து, மரச்சட்டங்களில் அமைத்து, சுவரில் தொங்கவிடக்கூடிய வகையில் மாற்றிக்கொள்வார். அப்படியான படங்கள்தான் எங்கள் வீட்டை அழகுபடுத்திக்கொண்டிருந்தன. 


முக்கியமாக அவருக்கு, இருள்பச்சை வண்ண இரும்புபெட்டி ஒன்று உண்டு. அதற்கு பூட்டு எதுமில்லை. ஆனால் என் அத்தையை தவிர வேறு யாரும் திறப்பதற்கு அனுமதி இல்லை. அந்தக்காலத்தில் மர அலமாரியும், ஒரு தனியாக தூக்கமுடியாத அளவில் பெரிய இரும்பு பெட்டியும்தான், மணமக்கள் சீதனமாக வழங்கப்படுவது வழக்கம். அத்தகைய இரும்புபெட்டியோடும், அலமாரியோடும், ஒரு பெரிய ஜமுக்காளம், அதில் மணமக்கள் பெயரும் பின்னப்படிருக்கும், இரண்டு பட்டு உறை போர்த்திய தலையணையும் உண்டு. (Trunk Box, Woodden Wardrobe, Bedsheet, Silk cloth covered pillows)

என் அத்தை வைத்திருந்த பெட்டியில், எனக்கு விபரம் தெரிந்து பார்த்தவரையில், அங்கே இருந்தவை காகிதங்கள், அட்டைகள், பைகள், வண்ண வேலைப்பாடு கொண்ட வாழ்த்து அட்டைகள், பட்டு துணிகள், திருமண அழைப்பிதழ்கள், முழுவடிவ வருட நாட்காட்டி அட்டைகள், ஓவியங்கள், இறைவன் ஓவிய படங்கள் (Printed papers, Multicolor printed papers, Greeting cards, Silk cloths, Wedding invitations, Yearly, days calendar, Art and Drawings, God pictures) எடுத்தால் கையோடு ஒடிந்து வருமளவு மக்கிப்போன பக்கங்கள் கொண்ட நூல்கள் (Old Printed Books). (உதாரணமாக, குமரேச சதகம் நூல்) இப்படி கலவையாக இருக்கும். தனக்கு கிடைக்கும் எல்லா பொருட்களிலும், கலை மிகுந்திருக்கும் காகிதங்களை சேர்த்து வைத்துக்கொள்வதை தன் வாழ்நாளின் கடைசி வரையிலும் விட்டுவிடவில்லை. தன்னுடைய சொத்துபோல இவற்றை பாதுகாத்து வந்தார்.


நாங்கள் கூட்டுக்குடும்பமாக (Joint Family) வாழ்ந்திருந்தோம். அவ்வகையில் ஏதேனும், உறவினர்கள், சொந்தபந்தங்கள் வகையில் திருமணம், சடங்கு, காதுகுத்து, கிரகபிரவேஷம் என்று எவ்வகையில் அழைப்பு பத்திரிக்கை  (Invitations) வைத்தாலும், ஒன்றுக்கு மூன்று கிடைக்கும். அதில் ஒன்று, அப்படியே என் அத்தையின் இரும்பு பெட்டிக்குள் போய்விடும். வேறு யாரேனும் ரத்த உறவினர்கள், வேண்டாம் என்று தூக்கி எறிந்த சில ஒளிப்படங்களைக்கூட (Family Photograph) என்னிடம் இருக்கட்டும் என்று வாங்கி வைத்துக் கொள்வார். 

சிறுவயதில், நாங்கள் கிண்டலடிப்போம்...

‘இதெல்லாம் குப்பைக்கு போகிற சமாச்சாரம், இதனாலே என்ன பயன்?”

“இதற்கு பதிலாக பணத்தை சேர்த்துவைத்திருந்தால் நல்லா இருக்குமே?”

“ஏன் இந்த கிறுக்குத்தனம்?”

“இந்த முட்டாள் தனத்தை வேறுயாரேனும் செய்வார்களா என்ன?”

இப்படியாக பல வகையில் கேள்விகளை கேட்டு திணறடிப்போம். எல்லாவற்றிற்கும் புன்னகையே பதிலாக இருக்கும். ஆனால் அத்தையின் மனதிற்குள் ஒரு சோகம் இருந்திருக்கலாம் என்று இப்போது புரிகிறது. பொழுதுபோக்காக, தன் இரும்புப்பெட்டிக்குள் சேர்த்து வைத்த அந்த பொருட்களின் மதிப்பு அல்லது நோக்கம், எனக்கு அப்போது அறிந்துகொள்ளும் பக்குவம் இல்லை. ஆனால் சில காலத்திற்குப்பிறகு, ஓவியர், நடிகர். சிவக்குமார் (Artist, Actor Sivakumar) அவர்களின் தேசப்பிதா காந்தி (Mahatma Gandhiji) ஓவியத்தை (Ink stroke Art) பிரதி எடுத்து வரைந்ததை பத்திரப்படுத்தும் பொழுதுதான் என் அத்தையில் நோக்கமும் புரிந்தது. மேலும் என் வாழ்வில் நானே மிகவும் விரும்பி சில பொருட்களையும், தகவல்களையும், கடிதங்களையும், (உதாரணமாக, என் கவிதை, ஓவியம் இவற்றை பாராட்டி நம் இந்திய ஜனாதிபதி, அப்துல்கலாம் அவர்களின் (Indian President A.P.J. Abdul Kalam) நன்றிக் கடிதம்,  அமெரிக்க ஜனாதிபதி க்ளிண்டன் (American President Bill Clinton) சார்பாக அவரின் அலுவலர்,  என்னை பாராட்டி எழுதிய கடிதம்) அவ்வப்போது நான் வரையும் ஓவியங்கள் இப்படியெல்லாம் பாதுக்காக்க நினைத்த தருணங்களில், என் அத்தையின் தகவல் சேமிப்பில் உயர்ந்த மதிப்பு கொண்டிருந்தேன். 

என்றாவது ஒருநாளோ அல்லது பொங்கலுக்கு முதல்வாரத்தில், வீடு வெள்ளையடிக்கும் பொழுது, இருப்பதை கழித்துப்போடும் சாக்கில், வெறுமனே தூசி தட்டி மீண்டும் அடிக்கி வைக்கும் நேரத்தில், அத்தையோடு நானும் அந்த இரும்புபெட்டியில் இருந்த பழைய சேமிப்பினை பார்த்து ரசித்து, காலத்தை பின்னோக்கி நினைப்பதுண்டு. ஆனாலும் இத்தகைய “குப்பையான” கால சேமிப்பு யாராலும் மதிக்கப்படவில்லை என்பது உண்மைதான். மிக முக்கியமான காரணம், குடும்பத்தின் பொருளாதார தேடல். ஓவ்வொருவரும் எப்படி தன்னிறைவு அடைவது என்ற நிலையிலேயே இருந்ததால், அத்தையையே யாரும் கண்டுகொள்ளாத நிலைதான். நானே கூட வேலைக்கு சென்ற நாட்களில் பழைய குறிப்புக்கள் குறித்தோ, இரும்பு பெட்டி குறித்தோ அத்தையிடம் பேசுவதில்லை. அத்தைக்கும்  தன் பேரக்குழந்தைகளோடு கலந்து பேசி, கவனித்து, கூடவே இருந்ததில், இரும்புபெட்டி பக்கம் செல்ல நேரமில்லை. மேலும் அத்தையின் இரும்புபெட்டி, வீட்டில் இடத்தை அடைக்கிறது என்று பரண்மேலும் போட்டாகிவிட்டது சோகம். 

காலத்தாலும், வயோதிகத்தாலும் அத்தைக்கு இரு கண்ணிலும், அறுவைசிகிச்சை செய்தும்,  ஒரு கண்ணில் கொஞ்சம் கொஞ்சமாக பார்வையும் குறைந்துவிட்டது. ஆனாலும் கிடைப்பதை தனியே ஒரு பிளாஸ்டிக் பையில் சேமிக்கும் பழக்கம் குறையவில்லை.

திருமணத்திற்குப்பின், நான், எனக்கு கிடைத்த வேலையின் காரணமாக திருச்சியில் வாழத்துவங்கி விட்டேன். அத்தை, மதுரைக்கு சென்றுவிட்டார். அந்த இருள்பச்சை வண்ண இரும்புபெட்டி அவரோடு கூடவே, எங்கள் வீட்டிலிருந்து அவரின் பெரிய மகன் வீட்டில் இருந்து. ஆனால் அங்கேயும் பரணில் தான் அதற்கு இடம் கிடைத்தது. வாரத்தில் அல்லது மாதத்தில் ஒரு முறை, என் அத்தையை பார்த்து பேசி வருவதாக அமைந்தது. கடந்த 2002ம் ஆண்டில் தன் உடல் நலக்குறைவால் இயற்கையோடு கலந்தார். அத்தையே போனபிறகு, இரும்புபெட்டி குறித்த கவனமும் போய்விட்டது. ஆனாலும் யாரும் அதில் கைவைக்கவும், தூக்கி எறியவும் யோசனை எழவில்லை. 

கடந்தவாரம், மதுரையில் வீடு பெயிண்ட் அடித்து, பொருட்களை கலைத்து அடுக்கும்பொழுது, அத்தையின் அந்த இருள்பச்சை வண்ண இரும்புபெட்டி திறக்கப்பட்டது. எங்களின், எங்கள் குடும்பத்தை சார்ந்தோரின் தொடர்பான, ஒளிப்படங்களும், திருமண அழைப்பிதழ்களும், ஓவியங்களும், குறிப்பு மற்றும் தகவல்களும் வெளியே எடுக்கப்பட்டன. எடுத்துப்பார்த்து மகிழ்ந்து, அதை மின்னணு பிரதி எடுத்து, (Digitalized copy) அந்தந்த குடும்ப உறவினர்களுக்கும், பேரப்பிள்ளைகளுக்கும், வாரிசுகளுக்கும் அனுப்பப்பட்டது.

“ஆஹா, எங்க அப்பா கல்யாண பத்திரிக்கை, சூப்பர்”

“ஹே, எங்க தாத்தா, பாட்டி போட்டோ”

“சூப்பர், எங்களோட காதுகுத்து பத்திரிக்கை”

“அட என்னோட சின்ன வயது போட்டோ”

“ஹா எங்கம்மா சின்ன வயசிலே”

“ஹாஹா, எங்க அப்பா என்னா ஸ்டைலா போட்டாலே இருக்கார் பாரு”

இப்படியாக பலவகையிலான குதூகலம் பரவியது எல்லோரிடமும். அத்தை காலமாகி 19 வருடங்களுக்குப்பிறகு, கிட்டதட்ட 70 ஆண்டுக்கால தகவல் குறிப்புக்களும், பதிவுகளும் இன்னமும் அப்படியே தன்னை வெளிப்படுத்துகின்றன. 

இன்றைக்கு குப்பையாக தோன்றலாம், காலத்தால் வரலாறு ஆகலாம்.

Thanks and Photos Source from: rashminotes.com and photocase.com

Say no template caricature


Say no template Caricature, be Pride with Caricaturelives...

Caricaturelives never start with Templates, You are ready to pay a bill for your caricature, then why pay for old work or template? Are you sure, your caricature is being in 10+1 row? You are OK with head changes with template bodies? Have you no idea or no feel with your individuality?

Be Pride with Caricaturelives, Be individuality with your caricature... only at Caricaturelives

Share your theme or idea and get ever fresh, individual caricature for your wedding, birthday, retirement,  gift, personal and invitation caricatures.


feel free to whatsapp: +91 9442783450 or email: caricaturelives@gmail.com
visit: www.caricaturelives.com