CJ for You: food

food

Showing posts with label food. Show all posts
Showing posts with label food. Show all posts

why does man need food? How does the need for food help? Can you survive without food?


வாழ்க வளமுடன் ஐயா, மனிதனுக்கு உணவு ஏன் தேவை? உணவின் அவசியம் எப்படி உதவுகிறது? உணவில்லாமல் வாழ முடியுமா?

உலகில் வாழும் மனிதனுக்கு மட்டுமல்ல, உயிருள்ள, அசைவுள்ள, எல்லா ஜீவன்களுக்குமே உணவு அவசியம். இடம் விட்டு இடம்நகராத, செடி, மரங்களுக்குக் கூட உணவின் தேவையும், அவசியமும் இருக்கிறது என்பதை நாம் அறிவோம்தானே? என்னவென்றால், அது தானாகவே, காற்றின் வழியாகவும், வெப்பத்தின் வழியாகவும், மண்ணின் வழியாகவும், நீரின் வழியாகவும் உணவை தயாரித்து கொள்கிறது. விஞ்ஞானத்தின் வழியாகவும் நீரூபணம் செய்யப்பட்டிருக்கிறது. இன்னும் விளக்கமாக, வேதாத்திரி மகரிஷி அவர்களின் கருத்தை அப்படியே எடுத்துக்கொண்டு பார்க்காலாம்.

மனிதன் இப்பூவுலகின்மீது வாழ்ந்து கொண்டிருக்கிறான். இப்பூவுலகம் 25000 மைல் சுற்றளவு உடையது. தன்னைத் தானே மணிக்கு 1042 மைல் வேகத்தில் சுற்றிக் கொண்டுள்ளது. எந்த ஒரு பொருளும் வேகமாகச் சுற்றும் பொழுது இறைவெளியின் சூழ்ந்தழுத்தம் (Self Comprehensive Surrounding Pressure Force) காரணமாக ஒரு மைய ஈர்ப்பு விசை அமைந்து விடுகிறது. 

உலகம் சுழலுகின்ற வேகத்தில் அதன் விளிம்பில் மையத்தை விட்டு விலக்கும் சக்தி (Gravitational Repulsive Force) அல்லது தள்ளும் சக்தி உண்டாகிறது.

உடலானது கோடானுகோடி செல்களால் கட்டப்பட்டுள்ளது. பலகோடி பிறவிகளில் வந்த பரிணாம வேகத்தில் உடலில் உள்ள விண் என்ற லேசான நுண்ணியக்கத் துகள்கள் மேல் நோக்கு வேகத்தைப் பெற்றுள்ளன, பூமியின் மையத்தை விட்டு விலகும் ஆற்றலால் பூமியின் மேல் வாழுகின்ற மனித உடலில் உள்ள நுண்ணியக்கத் துகள்கள் உடலை விட்டுத் தொடர்ந்து (Thrown up) விசிறியடிக்கப்படுகின்றன. அதனால் உடலில் நுண்ணியக்க ஆற்றலில் தொடர்ந்து இழப்பு ஏற்படுகிறது.

அதே போல பூமியின் மைய ஈர்ப்பு ஆற்றலால் வேகம் குறைந்த முதிர்வுற்ற (Worn out Cells) துகள்கள் பூமியை நோக்கி உதிர்ந்து விடுகின்றன. இவ்வாறு ஒவ்வொரு நிமிடத்திற்கும் மனித உடலில் உள்ள தசை, நரம்பு, எலும்பு, மூளைகளிலிருந்தும் கோடிக்கணக்கான செல்களை உடல் இழந்து கொண்டிருக்கிறது.

அதே நேரத்தில் ஒவ்வொரு நிமிடமும் கோடிக்கணக்கான புதிய சக்தி மிக்க செல்கள் உணவிலிருந்தும், காற்றிலிருந்தும், நீரிலிருந்தும், கோள்களிலிருந்தும் உடலைப் புதுப்பித்துக் கொண்டிருக்கின்றன. இதனால் உடலின் இழப்பானது சரிக்கட்டப்படுகிறது.

இதை ஒரு உதாரணத்தினால் அறிந்து கொள்ளலாம். நாம் உடலைச் சரியாக எடை போட்டுக் கொள்வோம். ஒரு முழுநாள் நீரைத்தவிர எந்த உணவும் எடுத்துக் கொள்ளாமல் இருப்போம். அடுத்தநாள் காலை உடலை எடை போட்டுப் பார்த்தால் குறைந்த பட்சம் 50 கிராமிலிருந்து அதிக பட்சம் 200 கிராம் வரை உடலின் எடை குறைந்திருக்கும். இதிலிருந்து உடல் தான் இழந்த அணுக்களை உணவால் புதுப்பித்துக் கொள்வதை அறியலாம்.

இவ்வாறு உடலின் ஆற்றல் இழப்பிற்கு சேர்க்கைக்கும் இடையில் நாள் தோறும் மனிதன் சாவிலிருந்து தப்பிப் பிழைத்துக் கொண்டேயிருக்கிறான். இதனால் தான் வாழ்க்கைக்கு “பிழைப்பு” என்றே பெயர் வந்தது. என்பதாக விளக்கம் தருகிறார்.

வாழ்க வளமுடன்

-

My stomach often gets into trouble. There is no interest in food. There is also sluggishness without appetite. What is the solution?


என்னுடைய வயிறு அடிக்கடி பிரச்சனைக்குள்ளாகிறது. உணவில் நாட்டம் இருப்பதில்லை. பசி இல்லாமல் மந்தமாகவும் இருக்கிறது. வீட்டில் சாப்பிட்டாலும், வெளியே சாப்பிட்டாலும் பிரச்சனையே. இதற்கு தீர்வு என்ன?

உணவு என்பது ஜீவன்களின், உயிர்களின் அடிப்படையானது. உயிர்வாழ்வதிலும், உடலை வளர்த்துக் காத்து, மனதையும் உயிரையும் காத்துக்கொள்வதிலும், உணவு தான் முக்கியமானது ஆகும். மேலும் இந்த உணவுதான் ஏழு தாதுக்களாகவும் மாறி, வாழ்வை, வாழும் பொழுது வளமாக்குகிறது. இப்படி முக்கியத்துவமான உணவை, நாம் கையாளும் விதம், சிறப்பாக இல்லை என்பது உண்மை. ஆனால், உணவு கலாச்சாரம், அதற்குரிய மதிப்பு, உலகெங்கும் உள்ளது. அது, ஒவ்வொரு வீட்டிலும், ஒவ்வொரு உணவு விடுதியிலும் இருக்கிறது.

உணவு என்பதைக் கொண்டே, அதை பரிமாறுபவர்களின் குணாதசியத்தை அறியலாம். அந்த உணவை செய்தவரின் அக்கறையை, அன்பை அறியலாம். அதுபோலவே அந்த உணவை உண்பவரின் நடவடிக்கையைக் கொண்டு, அவரின் குணாதசியத்தையும் அறியலாம். இங்கே ஒரு உணவின் வழியாக, எப்படியான தொடர்புகள் நம்மையறியாமல் உருவாகிறது என்று சிந்தித்து தெரிந்து கொள்ளமுடியும்.

ஆனால் இதையெல்லாம் அறிந்துக் கொள்ளக்கூடிய சூழலை நாம் கைக்கொள்வதில்லை. ஏனென்றால் அப்படியான அவசர உலகில் நாம் வாழ்கிறோம். அப்படியான நிலையில்தான் நீங்களும் இருக்கிறீர்கள் என்று எண்ணுகிறேன். அதுபோலவே, அமைதியாக, பொறுமையாக, ரசித்து, ருசித்து, அனுபவித்து சாப்பிடுபவர்கள், மிகமிகக் குறைவு. இந்த பிரச்சனை, உங்களுடைய உணவால் வந்திருக்கிறது என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், அது மிக குறைவே. அப்படியென்றால், இந்த பிரச்சனையின் மூலம் என்ன என்றால், உங்களுடைய மனமும், உங்கள் உடலும், உடல் உறுப்புக்களும் ஆகும். அப்படியா? என்று திகைக்கிறீர்களா? ஆம், அதுதான் உண்மை.

ஆனால், இந்த பிரச்சனையை, மருத்துவரின் வழியாக தீர்க்கவே நான் வழிமொழிகிறேன். என்றாலும். உங்களுடைய இந்த உணவு தொடர்பான பிரச்சனையை தீர்க்க காயகல்ப யோக பயிற்சி உதவும். இதைக்குறித்த சில உண்மைகளை, இந்த காணொளி வழியாக காணலாம்.

உணவுக்கும் முன்பும், நீர் அருந்தும் முன்பும் காயகல்ப பயிற்சி செய்யவேண்டுமா? ஏன்? Kayakalpa Yoga!

வாழ்க வளமுடன்

-

Do you know the true secret of the great life force you receive? Do you know how to protect it?


உங்களுக்கு கிடைக்கும் மகத்தான உயிர்சக்தியின் உண்மை ரகசியம் அறிவோமா? அதை எப்படி பாதுகாக்கலாம் தெரியுமா?


இந்த உலகில் நிலையாக இருப்பதை, அசையாமல் இருப்பதை பொருள் என்கிறோம். ஆனால் அசையும் ஒவ்வொன்றையும், உயிர் என்று அழைக்கிறோம். அசையும் ஒரு கருவிக்கு, மின்சாரம் என்ற சக்தி அவசியமாகிறது. அதுபோல ஜீவன்களுக்கு, உயிர் சக்தி அவசியமாகிறது. மனிதனுக்கும் அவ்வாறு தான். எனினும், மனிதனுக்கு மட்டுமே அந்த சக்தியை, இன்னும் அதிகமாக கூட்டிக்கொள்ளவும், இருப்பாக்கி வைக்கவும் முடிகிறது. இந்த சக்தியால் தான், நாம் தினமும், இயங்குகிறோம், உழைக்கிறோம், சேவை செய்கிறோம், இன்பங்களை அனுபவிக்கிறோம். இந்த சக்தி நான்கு வகையாக கிடைக்கும். 

நாம் உண்கின்ற உணவு வழியாகவும், நாம் சுவாசிக்கும் காற்றின் வழியாகவும், வானில் உலாவுகின்ற நட்சத்திரங்கள், கோள்கள் வழியாகவும், பூமியின் மையத்தில் எழுகின்ற அணுக்களின் வழியாகவும், உயிர் சக்தி நமக்கு கிடைக்கிறது. இதை நாம் தினமும், உடலுக்குள்ளாக தக்கவைக்க வேண்டும் அல்லவா? அதற்காகவேதான், தூக்கம் என்பது அமைகிறது. அந்த தூக்கம் ஆழ்ந்த அமைதியான, கனவுகள் இல்லாத, அரை விழிப்பு இல்லாத, தூக்கமாக இருக்க வேண்டியது அவசியம். உயிர் சக்தியை கூட்டுவது மட்டுமில்லாமல், நம்முடைய சக்தி இழப்பையும் கூட, தூக்கம் சரி செய்கிறது.

இந்த உயிர்சக்தி, நமக்கு இருப்புக்கு மேலே இருந்தால், மகிழ்ச்சி என்பது உங்களோடு இருக்கும். கவலை, வருத்தம், சோர்வு, அசதி, வலி இப்படி எதுவுமே உங்களை அணுகாது. அதோடு யாருக்காவது உதவலாமே? என்ற எண்ணம் உங்களுக்குள் மேலோங்கும். முதலில் நீங்கள் மகிழ்வாக, சந்தோசமாக இருக்கலாம். உங்கள் வீட்டில் மற்றவர்களை சந்தோசப்படுத்தலாம். உங்கள் வாழ்க்கைத் துணையை பாராட்டி மகிழலாம். அன்பை பெருக்கலாம். உங்கள் நண்பரோடு நட்பை பாராட்டலாம். சமூகத்திற்கும் உங்களுடைய பங்கை அளித்து, நீங்களும் பயன்பெறலாம். இவ்வளவு நன்மைகள் இருக்கிறது.

ஆனால், நாம், ஏற்கனவே இருக்கிற, உயிர்சக்தியை இழந்துகொண்டே, ஒவ்வொரு நாளும் தடுமாறுகிறோம். தூக்கத்தை தள்ளிப் போடுகிறோம். காரணமில்லாமல் சினம் கொள்கிறோம். நம்மோடு இருப்பவர்களிடமே கோபத்தை காட்டுகிறோம். அடிக்கடி கவலை, குழப்பம், தடுமாற்றம் நிகழ்கிறது. உடல் சோர்வாக இருக்கிறது. மிச்சமிருக்கும் சக்தியை, ஆர்வத்தாலும், ஆசையாலும், எதிர்பார்ப்பாலும், தவறாகவும் பயன்படுத்தி, சிக்கிக் கொள்கிறோம். வாழ்வே வேண்டாம் என்ற முடிவுக்கும் வந்து விடுகிறோம் தானே? இதற்கெல்லாம் ஒரே வழி, உயிர்சக்தி விளக்கமும், சிந்தனையுமே ஆகும்.

வாழ்க வளமுடன்.

Why human need food? What is the necessity of that and how it will give the power?


மனிதனுக்கு உணவு ஏன் தேவை? அதன் அவசியம் என்ன? அது எப்படி நமக்கு சக்தியாகிறது?

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, மனிதனுக்கு உணவு ஏன் தேவை? அதன் அவசியம் என்ன? அது எப்படி நமக்கு சக்தியாகிறது? 

பதில்:

மனிதன் இப்பூவுலகின்மீது வாழ்ந்து கொண்டிருக்கிறான். இப்பூவுலகம் 25000 மைல் சுற்றளவு உடையது. தன்னைத் தானே மணிக்கு 1042 மைல் வேகத்தில் சுற்றிக் கொண்டுள்ளது. எந்த ஒரு பொருளும் வேகமாகச் சுற்றும் பொழுது இறைவெளியின் சூழ்ந்தழுத்தம் (Self Comprehensive Surrounding Pressure Force) காரணமாக ஒரு மைய ஈர்ப்பு விசை அமைந்து விடுகிறது. 

உலகம் சுழலுகின்ற வேகத்தில் அதன் விளிம்பில் மையத்தை விட்டு விலக்கும் சக்தி (Gravitational Repulsive Force) அல்லது தள்ளும் சக்தி உண்டாகிறது.

உடலானது கோடானுகோடி செல்களால் கட்டப்பட்டுள்ளது. பலகோடி பிறவிகளில் வந்த பரிணாம வேகத்தில் உடலில் உள்ள விண் என்ற லேசான நுண்ணியக்கத் துகள்கள் மேல் நோக்கு வேகத்தைப் பெற்றுள்ளன, பூமியின் மையத்தை விட்டு விலகும் ஆற்றலால் பூமியின் மேல் வாழுகின்ற மனித உடலில் உள்ள நுண்ணியக்கத் துகள்கள் உடலை விட்டுத் தொடர்ந்து (Thrown up) விசிறியடிக்கப்படுகின்றன. அதனால் உடலில் நுண்ணியக்க ஆற்றலில் தொடர்ந்து இழப்பு ஏற்படுகிறது.

அதே போல பூமியின் மைய ஈர்ப்பு ஆற்றலால் வேகம் குறைந்த முதிர்வுற்ற (Worn out Cells) துகள்கள் பூமியை நோக்கி உதிர்ந்து விடுகின்றன. இவ்வாறு ஒவ்வொரு நிமிடத்திற்கும் மனித உடலில் உள்ள தசை, நரம்பு, எலும்பு, மூளைகளிலிருந்தும் கோடிக்கணக்கான செல்களை உடல் இழந்து கொண்டிருக்கிறது.

அதே நேரத்தில் ஒவ்வொரு நிமிடமும் கோடிக்கணக்கான புதிய சக்தி மிக்க செல்கள் உணவிலிருந்தும், காற்றிலிருந்தும், நீரிலிருந்தும், கோள்களிலிருந்தும் உடலைப் புதுப்பித்துக் கொண்டிருக்கின்றன. இதனால் உடலின் இழப்பானது சரிக்கட்டப்படுகிறது.

இதை ஒரு உதாரணத்தினால் அறிந்து கொள்ளலாம். நாம் உடலைச் சரியாக எடை போட்டுக் கொள்வோம். ஒரு முழுநாள் நீரைத்தவிர எந்த உணவும் எடுத்துக் கொள்ளாமல் இருப்போம். அடுத்தநாள் காலை உடலை எடை போட்டுப் பார்த்தால் குறைந்த பட்சம் 50 கிராமிலிருந்து அதிக பட்சம் 200 கிராம் வரை உடலின் எடை குறைந்திருக்கும். இதிலிருந்து உடல் தான் இழந்த அணுக்களை உணவால் புதுப்பித்துக் கொள்வதை அறியலாம்.

இவ்வாறு உடலின் ஆற்றல் இழப்பிற்கு சேர்க்கைக்கும் இடையில் நாள் தோறும் மனிதன் சாவிலிருந்து தப்பிப் பிழைத்துக் கொண்டேயிருக்கிறான். இதனால் தான் வாழ்க்கைக்கு “பிழைப்பு” என்றே பெயர் வந்தது

வாழ்க வளமுடன்.

-

பதிலின் மூலஉரை: வேதாத்திரி மகரிஷி அவர்கள்

-

Why human need food? can we avoid? any science truth on it?


மனிதனுக்கு உணவு ஏன் தேவை? உணவின் தேவையின்றி வாழ முடியாதா? அதில் ஏதேனும் விஞ்ஞான விளக்கம் உள்ளதா?

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்

கேள்வி:

வாழ்க வளமுடன் சுவாமிஜி, மனிதனுக்கு உணவு ஏன் தேவை? உணவின் தேவையின்றி வாழ முடியாதா? அதில் ஏதேனும் விஞ்ஞான விளக்கம் உள்ளதா?


வேதாத்திரி மகரிஷியின் பதில்:

மனிதன் இப்பூவுலகின் மீது வாழ்ந்து கொண்டிருக்கிறான்.  இப்பூவுலகம் 25000 மைல் சுற்றளவு உடையது.  தன்னைத் தானே மணிக்கு 1042 மைல் வேகத்தில் சுற்றிக் கொண்டுள்ளது.  எந்த ஒரு பொருளும் வேகமாகச் சுற்றும் பொழுது இறைவெளியின் சூழ்ந்தழுத்தம் (Self Compressive Surrounding Pressure Force) காரணமாக ஒரு மைய ஈர்ப்பு விசை அமைந்துவிடுகிறது.

        உலகம் சுழலுகின்ற வேகத்தில் அதன் விளிம்பில் மையத்தை விட்டு விலக்கும் சக்தி (Gravitational Repulsive Force) அல்லது தள்ளும் சக்தி உண்டாகிறது.

உடலானது கோடானகோடி செல்களால் கட்டப்பட்டுள்ளது. 

பலகோடி பிறவிகளில் வந்த பரிணாம வேகத்தில் உடலில் உள்ள விண் என்ற லேசான நுண்ணியக்கத் துகள்கள் மேல் நோக்கு வேகத்தைப் பெற்றுள்ளன.  பூமியின் மையத்தை விட்டு விலகும் ஆற்றலால் பூமியின் மேல் வாழுகின்ற மனித உடலில் உள்ள நுண்ணியக்கத் துகள்கள் உடலை விட்டுத் தொடர்ந்து (Thrown Up) விசிறியடிக்கபடுகின்றன.  அதனால் உடலில் நுண்ணியக்க ஆற்றலில் தொடர்ந்து இழப்பு ஏற்படுகிறது.

அதே போல பூமியின் மைய ஈர்ப்பு ஆற்றலால் வேகம் குறைந்த முதிர்வுற்ற (Worn  out Cells) துகள்கள் பூமியை நோக்கி உதிர்ந்து விடுகின்றன.  இவ்வாறு ஒவ்வொரு நிமிடத்திற்கும் மனித  உடலில் உள்ள தசை,  நரம்பு, எலும்பு, மூளைகளிலிருந்து கோடிக்கணக்கான செல்களை உடல் இழந்து கொண்டிருக்கிறது.

        அதே நேரத்தில் ஒவ்வொரு நிமிடமும் கோடிக்கணக்கான  புதிய சக்தி மிக்க செல்கள் உணவிலிருந்தும், காற்றிலிருந்தும், நீரிலிருந்தும், கோள்களிலிருந்தும் உடலைப் புதுப்பித்துப் கொண்டிருக்கின்றன.  இதனால் உடலின் இழப்பானது சரிகட்டப்படுகிறது.

இதை ஒரு உதாரணத்தினால் அறிந்து கொள்ளலாம்.  நாம் உடலைச் சரியாக எடை போட்டுக் கொள்வோம்.  ஒரு முழுநாள் நீரைத் தவிர எந்த உணவும் எடுத்துக் கொள்ளாமல் இருப்போம்.  அடுத்தநாள் காலை உடலை எடை போட்டுப் பார்த்தால் குறைந்த பட்சம் 50 கிராமிலிருந்து அதிக பட்சம் 200 கிராம்வரை உடலின் எடை குறைந்திருக்கும்.  இதிலிருந்து உடல் தான் இழந்த அணுக்களை உணவால் புதுப்பித்துக் கொள்வதை அறியலாம்.

இவ்வாறு உடலின் ஆற்றல் இழப்பிற்கும் சேர்க்கைக்கும் இடையில் நாள் தோறும் மனிதன் சாவிலிருந்து தப்பிபிழைத்துக் கொண்டேயிருக்கிறான்.  இதனால் தான் வாழ்க்கைக்கு பிழைப்பு என்றே பெயர் வந்தது.

வாழ்க வையகம்    வாழ்க வளமுடன்.

-

Does a dead soul leave immediately? Where is it going?


இறந்த உயிர் உடனடியாக வெளியேறிவிடுமா? எங்கே போகிறது?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி: 

வாழ்க வளமுடன் ஐயா, இறந்த உயிர் உடனடியாக வெளியேறிவிடுமா? எங்கே போகிறது?


பதில்:

கருவிலே தொடங்கிடும் நம்முடைய உயிரின் பயணம், பிறந்து வாழ்கின்ற காலமுழுவதும் கூடவே பயணித்து, குறிப்பிட்ட காலத்தில், வாழ்நாளின் முடிவில் உடலை விட்டு பிரிந்துவிடும். இது இயற்கையின் நியதியாகும். எந்த மாற்றத்திற்கும் உட்பட்டதல்ல. இது எல்லா ஜீவன்களுக்குமே உரித்தானதுமாகும். குரு மகான் வேதாத்திரி மகரிஷி சொல்லுவது போல, ‘இது இயற்கையின் நீதி. இதில் தப்பித்தோர் யாருமில்லை. ஒரு நூறாண்டு என்று எடுத்துக்கொண்டால், அன்று வாழ்ந்தவர்கள் இன்று இல்லை. இன்று வாழ்ந்து கொண்டிருப்பவர்கள், அடுத்த நூறாண்டுகளில் இருக்கப்போவதும் இல்லை’.

நம்முடைய உடல், உயிர், மனம் கூடவே இன்னொன்றான ஆன்மா (ஆத்மா) இதில் நாம் யார்? என்ற கேள்வி எழுவது இயல்பு. அந்த நாம் யார்? என்று நான் சொல்லுவதை விட, ‘நான் யார்?’ நீங்களே உங்களுக்குள்ளாக கேட்கும் பொழுதான் அங்கே உங்களுக்கான ஆராய்ச்சி தொடங்கும். எனவே அதில் நான் குறுக்கே நிற்கப்போவது இல்லை. ஆனால் நாம் உயிர் அல்ல என்பதை மட்டும் என்னால் சொல்ல முடியும்.

‘ஆனால் நாம் உயிரால்தானே வாழ்கிறோம்’ என்று சொல்லுவீர்கள். ஆம் அது உண்மைதான். நாம் + உயிரால் = வாழ்கிறோம். இங்கே நாம் தனித்து நிற்பதை அறிவீர்களா? உயிரால் வாழ்கிறோம்,. உயிரில்லையேல் நாமும் இல்லை. அப்படியென்றால் நாம் யார்? அதுதான் ‘நான் யார்?’ என்ற கேள்வியில் கிடைப்பதாகும்.

உயிர், தினமும் நம்மைவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக பிரிந்து கொண்டேதான் இருக்கிறது. அதனால்தான் காலையில் இருக்கும் உற்சாகம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து, சோர்ந்துபோய், களைத்து உறங்கிவிடுகிறோம். சிலர் மயக்கமே அடைந்துவிடுகிறார்கள். அதை சரிசெய்யவே, காற்று, தண்ணீர், உணவு, பூமியின் மையப்பகுதியில் இருந்து வரும் சக்தி அலைகள் நமக்கு உதவுகிறது. என்றாலும், ‘ஒரு நாள் என்பது உயிரை அறுத்தெறியும் வாள்’ என்றுதான் ஆசான் திருவள்ளுவர் தன் குறள் வழியாக சொல்லுகிறார். அதுவும் உண்மைதான்.

வாழ்நாளின் காலம் முடிந்துவிட்டால், காலன் வந்துவிட்டான்  என்று சொல்லுவார்கள். வடநாட்டில் காளி என்றும் சொல்லுவார்கள். உயிர் உடனடியாக நம் உடலை விட்டு வெளியேறிவிடும். உயிரின் தன்மை எப்போதும் தனித்தன்மை வாய்ந்தது. உடனடியாக வெளியேறி, உடலுக்கு அப்பாலுள்ள, விண் துகள்கள் களத்தோடு இணைந்துவிடும். ஏன்? வெளியே விண்ணாக (ஆகாஷ்) இருப்பதுதான் உடலளவில் உயிராக இருக்கிற உண்மை அறிவீர்களா? மற்றபடி உயிர் எங்கேயும் போய்விடுவதில்லை. 

என்ன? ஏதேனும் என்னோடு வாள் சுழற்ற தயாராக இருக்கிறீர்களோ? பார்க்கலாம்.

வாழ்க வளமுடன்

-

The spider's action and effects based on unnatural food



யோகத்தில் ஆர்வம்

கடவுளே இல்லை என்ற ஒரு தலைமுறையும் அவர்களின் மூன்று தலைமுறையினரும் நம்மோடு வாழ்ந்து வரும் காலம் இது. அப்படிபட்ட இடத்தில், தன்னையறியவும், இறையுண்மை பெறவும், யோகத்தில் ஆர்வம் எழுமா என்பதே சந்தேகம்தான். அதையும் மீறி யோகத்தில் இணைய விரும்பினால், சரியான குரு யார்? என்றும் சந்தேகம் எழுவது இயல்பு. வேறுவழியே இல்லை அவரவர், தன்னறிவின் துணை குருவையும், அவரின் விளக்க உரைகளை, விளக்கங்களை கேட்டு, பார்த்து, படித்து உண்மை ஆராய்ந்து தாங்களேதான் முடிவுக்கு வர வேண்டும். நான் சொன்னேன் என்பதற்காக, வேதாத்திரியத்தை பிடிப்பதும் சரியல்ல!

யோகத்தில் கட்டுப்பாடுகள்

பொதுவாக உலகில் எந்தவகையில் உள்ள யோக அமைப்பில் இணைந்தாலும் சில கட்டுப்பாடுகள் தரப்படுவதுண்டு. முதலாவதாக உடை, ஒழுக்க பழக்கங்கள், உணவு, தங்கும் விடுதி முறைகள், பிறரோடு பழகும் விதம், காலை எழும் நேரம், பயிற்சி கட்டுப்பாடுகள், இரவு படுக்கை நேரம் என இன்னும் பலவாறாக அமையும். இதற்கு ஒப்புகை அளித்தால் உள்ளே இருக்கலாம், இல்லையேல் அந்த அன்பர், தகுதியில் மீறிவிட்டார் என்று வெளியேற்றப்படுவார்.

உணவு மாற்றம்

யோக சாதனையில் இணைபவர்களுக்கு, அக்காலம் முதல் இக்காலம் வரை இருக்கும் பெரிய பயம், நினைத்ததை சாப்பிட முடியாதே என்பதுதான். ஏதோ இந்தக்காலகட்டத்தில் யோக அமைப்புக்கள் உள்ளன. இல்லை என்றால், 

நீ யோகத்தில் சேர்கிறாயா என்று கேட்டால்‘நான் என்ன பிச்சை எடுத்தா சாப்பிட முடியும்?’ என்று பதில் அளிப்பார்கள்.

யோகிகள் எல்லாருமே பிச்சை எடுக்க வேண்டும் என்று யார் சொன்னார்கள் என்றே தெரியவில்லை. அது அந்தக்கால கம்பிகட்டும் வேலை என்பதாக தெரிகிறது. சரி அந்த ஆராய்ச்சி இப்போது வேண்டாம். ஆனாலும், யோகத்தில் இணைந்தால், இந்தந்த உணவு தான் உண்ணவேண்டும் என்ற திட்டம் உண்டு. ஏனென்றால் உடலை தேவையில்லாமல், இயல்பு மீறி ஊக்கிவிக்கக் கூடாது. சில தடகள விளையாட்டு வீரர்களுக்கு வீராங்கனைகளுக்கு ஊக்க மருந்து சோதனை செய்யபடுவதை அறிவீர்கள் தானே?! 

உடலை அதன் இயல்பு மீறி பலகாலமாக நாம் மாற்றிக்கொண்டுள்ளோம் என்பதே உண்மை. அதனால் நமக்கு பிடித்ததே உணவாகிவிட்டது. உடலுக்கு இது ஏற்குமா? வயிறுக்கு இது ஏற்குமா? செரிமானத்திற்கு இது ஏற்குமா? என்ற கேள்விகள் எழுவதே இல்லை. ஏதேனும் சொன்னால் எதிர்கேள்விக்கு குறைவில்லாமல் கேட்பார்கள். ஊக்குவிக்கும் உணவுகூட பரவாயில்லை தான். ஆனால்!

போதை தரும் உணவுகள்

உடலுக்கு, மனதுக்கு, மூளைக்கு போதை தரும் உணவுகள் முற்றிலும் தவிர்க்கபட வேண்டும் இந்த யோக சாதனைக்கு. ஏன் என்றால், நீங்கள் எதை நோக்கி நகர்கிறீர்களோ அது முற்றிலும் நிகழாது. ஒரு பிறழ்ந்த மயக்கத்தில் நீங்கள் சிக்கி விடுவீர்கள். அப்படி போதை தரும் பொருட்கள் என்னென்ன என்று நான் இங்கே குறிப்பிடுவது தேவையில்லை. அது இக்கட்டுரைக்கு முக்கியமும் அல்ல.

அமெரிக்க நாஸா ஆய்வு

ஒரு போதைப்பொருள் என்னென்ன செய்கிறது? எப்படியெல்லாம் இயக்கங்களை பாதிக்கிறது? மனிதனை மட்டுமா? எல்லா உயிரினங்களையுமா? என்று அமெரிக்க அறிவியல் / விண்வெளி நிறுவனமான நாஸா ஆராச்சி செய்ய முயன்றது. அவர்கள் அவ்வராய்சிக்கு எடுத்துகொண்டது, சிலந்தி பூச்சி. சில வகை ஊக்க / போதை உணவுகள் அதற்கு உணவாகக் கொடுத்து. அதனுடைய செயல், நடவடிக்கைகளில் என்னென்ன மாற்றங்களை, அந்த ஊக்க / போதை உணவுகள் விளைவிக்கின்றன என்று ஆராய்ந்தனர். 

அந்த ஆராய்ச்சியின் முடிவு இங்கே!

அந்த ஆராய்ச்சியில், நாம் சிலந்தி பூச்சியை அதன் போக்கில் விட்டுவிட்டோம். ஆனால் அதன் செயல் / நடவடிக்கை எப்படி இருக்கிறது / இருந்தன என்று பார்க்கலாமா? இதோ...


-

இதன் முடிவுகளை நான் தனியாக, கட்டுரையாக தரவேண்டிய அவசியமின்றி, நீங்களே பார்த்து புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். ஏதேனும் கேள்விகள் இருக்குமானால், கேளுங்கள் அல்லது அமெரிக்க நாஸாவிடமே கேட்டுவிடுங்களேன்!

-

வாழ்க வையகம், வாழ்க வளமுடன்!

-

Thanks to: image by https://www.sciencenews.org/ and article idea source from: @WallStreetSilv  (twitter) and NASA (USA)

Body isn't your servant - Final post


இந்த உடல் உன் வேலைக்காரனல்ல, அப்படியானால் யார்? 





வணக்கம் அன்பர்களே!


உங்களுக்கு பரிசாக கிடைத்த உடல் மற்றும் உடல் உன் வேலைக்காரன் அல்ல எனும், 

இந்த பதிவு மற்றும் இதன் தொடர்ச்சி பதிவுகள் அனைத்தும், அமேசான் வழியாக ”இயற்கை வழங்கிய உங்களுக்கான பரிசு” எனும் தலைப்பில் மின்நூலாக வெளிவருவதால், இங்கே பதிவிட முடியாமைக்கு வருந்துகிறேன். உங்கள் ஆதரவுக்கு நன்றி.


அமேசான் கிண்டில் மின்நூல் வழியாக வாங்க அல்லது படிக்க, கீழே சுட்டுக.

இயற்கை வழங்கிய உங்களுக்கான பரிசு



----------------------

Photos Thanks to: Hian Oliveira / Eiliv-Sonas Aceron / National Cancer Institute



You and Your Gifted Body


 நீங்களும் உங்களுக்கு பரிசாகக் கிடைத்த உடலும்!


வணக்கம் அன்பர்களே!


உங்களுக்கு பரிசாக கிடைத்த உடல் மற்றும் உடல் உன் வேலைக்காரன் அல்ல எனும், 

இந்த பதிவு மற்றும் இதன் தொடர்ச்சி பதிவுகள் அனைத்தும், அமேசான் வழியாக ”இயற்கை வழங்கிய உங்களுக்கான பரிசு” எனும் தலைப்பில் மின்நூலாக வெளிவருவதால், இங்கே பதிவிட முடியாமைக்கு வருந்துகிறேன். உங்கள் ஆதரவுக்கு நன்றி.


அமேசான் கிண்டில் மின்நூல் வழியாக வாங்க அல்லது படிக்க, கீழே சுட்டுக.

இயற்கை வழங்கிய உங்களுக்கான பரிசு


-------------------

Image thanks to: krakenimages @krakenimages