CJ for You: species

species

Showing posts with label species. Show all posts
Showing posts with label species. Show all posts

If human race starts from monkeys, who no tails to human? What happened on that?


குரங்கில் இருந்து வந்தவன் மனிதன் என்றால், குரங்குகளுக்கு இருந்த வால் எங்கே போயிற்று? மனிதனுக்கு ஏன் வால் இல்லை?




வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா! குரங்கில் இருந்து வந்தவன் மனிதன் என்றால், குரங்குகளுக்கு இருந்த வால் எங்கே போயிற்று? மனிதனுக்கு ஏன் வால் இல்லை?


பதில்: 

நகைச்சுவையை தூண்டுவதாக இருந்தாலும், ஆழ்ந்து சிந்திக்ககூடிய கேள்வி இது. ஓரளவில் இதை இங்கே, விளக்க முயற்சிக்கிறேன். இதற்கான பதிலை, செயற்கை நுண்ணறிவின் வழியே கேட்டபொழுது. அது தந்த ‘விஞ்ஞான ரீதியிலான’ பதிலை  இங்கே தருகிறேன்.

ஏறக்குறைய 25 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, மனிதர்கள் மற்றும் குரங்குகளின் மூதாதையர் குரங்குகளிடமிருந்து மரபணு ரீதியாக வேறுபட்டு அதன் வாலை இழந்தனர். நமது உடலியலில் இந்த வியத்தகு மாற்றத்திற்கு காரணமான மரபணு மாற்றத்தை யாரும் அடையாளம் காணவில்லை - இது வரை. நேச்சர் இதழில் வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வில், நமது முன்னோர்களின் வால்களை இழக்கச் செய்யும் தனித்துவமான டிஎன்ஏ பிறழ்வை ஆராய்ச்சியாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர். இந்த பிறழ்வு TBXT மரபணுவில் அமைந்துள்ளது, இது வால் விலங்குகளில் வால் நீளத்தில் ஈடுபடுவதாக அறியப்படுகிறது.


ஆராய்ச்சியாளர்கள் விலங்குகளின் இரண்டு குழுக்களின் டிஎன்ஏவை ஒப்பிட்டுப் பார்த்தனர்: குரங்குகள், வால்கள் மற்றும் ஹோமினாய்டுகள் (மனிதர்கள் மற்றும் குரங்குகள்). TBXT மரபணுவில் மக்கள் மற்றும் குரங்குகளில் இருக்கும் ஆனால் குரங்குகளில் இல்லாத ஒரு பிறழ்வை அவர்கள் கண்டறிந்தனர். இந்த பிறழ்வின் விளைவுகளை சோதிக்க, ஆராய்ச்சியாளர்கள் மரபணு மாற்றப்பட்ட ஆய்வக எலிகள் இந்த பண்பு2 வேண்டும்.

எனவே, மனிதர்கள் மற்றும் குரங்குகளில் வால் இழப்பு இந்த குறிப்பிட்ட மரபணு மாற்றத்திற்கு காரணமாக இருக்கலாம். மில்லியன் கணக்கான ஆண்டுகளாக பரிணாமம் நம் இனத்தை எவ்வாறு வடிவமைத்துள்ளது என்பது கவர்ச்சிகரமானது!

இந்த விளக்கம் உங்களுக்கு போதுமானது என்றால், இதனோடு நிறுத்திவிடலாம். ஆனால், பாமரமக்களின் தத்துவஞானியான வேதாத்திரி மகரிஷி, இந்த விளக்கங்களைக் கடந்து, அந்த உண்மையை தன்னுடைய, ‘உயிரின பரிணாமம்’ வழியாக கண்டறிகிறார். அதையே நமக்கு விளக்கியும் சொல்லுகிறார்.


குரங்கில் இருந்து வந்தவன் என்று விஞ்ஞானம் சொன்னாலும், அதிலும் ஒரு சிறு மாற்றத்தை அவர் விளக்குகிறார். குரங்குகளில் 18 வகையான இன வகைகள் உண்டு என விஞ்ஞான ஆய்வு பட்டியலிடுகிறது.  இந்த அடிப்படை Ape species வகையில் இருந்து, வால் இல்லாத குரங்குகளாக கொரில்லா, சிம்பன்சி, ஒராங்குடான், ஜிப்பான் மற்றும் பானாபாஸ் என்பன இருக்கின்றன.

இப்பொழுது நீங்கள் கேட்ட முக்கியமான விஷயத்திற்கு வருவோம். அதுதான் வால். இந்த வால் எப்படி இருக்கும் என்று பார்த்திருக்கிறீர்களா? தொட்டும் பார்த்திருக்கிறீர்களா? அது சின்னஞ்சிறு வடிவான எலும்புகளின் இணைப்பில், அந்த எலும்புகளைக் கவர்ந்த கொழுப்புச்சதைகள் என்று சொல்லலாம். அது முதுகுத்தண்டின் அடிப்பகுதியில், முக்கோன வடிவிலான ‘காக்சைக்ஸ்’ என்ற தண்டுவட எலும்புவால் பகுதி என்ற கடைசி எலும்புபகுதிலிருந்து வருகிறது. 


இந்த  ‘காக்சைக்ஸ்’ மனித குரங்குக்கு கொஞ்சம் வளர்ந்து நின்றது. மனிதனுக்கோ வளரவே இல்லை. இதுதான் பரிணாமத்தின் சிறப்பாகும். எதனால் இது நிகழ்ந்தது? என்ற கேள்வியை வேதாத்திரி மகரிசியின் முன்வைத்தால், குரங்குகள், நிமிர்ந்து நடக்க முனைந்தபொழுது, வால் அதன் வளர்ச்சி மாற்றத்தை சந்திக்கிறது என்கிறார். பூமியின் ஈர்ப்புக்கு எதிரான நிலையில், வாலும், அதுசார்ந்த எலும்புகளும் தன்னை மாற்றிக்கொண்டன / வளர்ச்சியை தடுத்துக்கொண்டன என்றும் சொல்லலாம். அந்த வகையில், மனிதனுக்கு முன்னோடி என்றால் கொரில்லா, சிம்பன்சி என்ற இரண்டைமட்டுமே சொல்லமுடியும். வால் இருக்கும் மற்ற எல்லா குரங்குகளையும் சொல்லிவிட முடியாது.

இந்த மாற்றம் உடனடியாக வந்தது என்று கருவதற்கு இடமில்லை. பலகோடி ஆண்டுகளின் மாற்றத்தில்தான் இது நிகழ்ந்தது. இப்போதும் கூட சில மனிதர்களுக்கு, கூடுதலாக மற்றொரு எலும்பு தோன்றி மறைவதுண்டு, மருத்துவர்கள் அறுவைசிகிச்சை வழியாக அதை நீக்குவதும் உண்டு. வேதாத்திரியத்தில், உயிரின பரிணாமம் என்ற பாடத்தை நன்கு விளங்கிக் கொள்ளுங்கள். இங்கே குறிப்பிடப்படாத பல உண்மைகள் உங்களுக்கு புரியவரும்.

வாழ்க வளமுடன்.

-

Is the human fate on the Horoscope or astrology chart and available solution for that?


ஜாதகத்தின் வழியாக தலையெழுத்து என்பதை நாம் பார்க்கமுடியுமா? அது உண்மைதானா? அதற்கு பரிகாரமும் உள்ளதா?

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா! ஜாதகத்தின் வழியாக தலையெழுத்து என்பதை நாம் பார்க்கமுடியுமா? அது உண்மைதானா? அதற்கு பரிகாரமும் உள்ளதா?


பதில்: 

வானியலில் சூரியன், நிலவு இவற்றின் அருகாமையையும், தூரத்தில் தெரியும் கோள்களையும் நட்சத்திரங்களையும் கண்டு மகிழ்ந்த மனிதன், அவற்றின் ஒளியையும், அவற்றின் அலைகளையும் அது தரும் தூண்டுதலையும் அறிந்து தொகுத்து தந்த விளக்கமே ஜோதிடம் ஆகும். பன்னெடுங்காலமாக, பல குறிப்புகள் வழியாக, ஜோதிட உண்மைகள் உலகில் நிலவிவருகிறது. ஜோதிடம் பெருங்கடல் என்று சொல்லுவார்கள். அதுபோலவே முழுமையாக எல்லாமே அறிந்த சோதிடர் என்று யாரையும் குறிப்பிட்டுச் சொல்ல வழியின்றி, அவரவர் அவர்வாழ்வில் கற்றுத்தேர்ந்த நிலையில்தான், ஜோதிட உண்மைகளை சொல்லிவருகிறார் என்பதுதான் உண்மை. பெரும்பாலான ஜோதிடர்கள் கற்றுக்கொண்டேதான் இருக்கிறார்கள் என்பதையும் சொல்லவேண்டும். 

ஒரு ஜோதிடம் என்பது, குழந்தை பிறக்கும் நேரத்தில், பூஉலகைச் சுற்றிலும் அமைந்திருக்கும் கிரகம், கோள்கள், நட்சத்திரங்களின் நிலை ஆகும். இதில் கரு உருவான நாள் முதலாகவே அவற்றின் அலைவீச்சு துவங்கிவிடுகிறது என்பதையும் நாம் அறியமுடியும். ஒவ்வொரு ஜாதகத்திலும் கர்ப்பச்செல் என்ற கணக்கின் வழியாக இதை, ஜோதிடர்கள் குறிப்பார்கள். இந்த குறிப்புகள் வழியாக, எங்கும், எவ்விடத்திலும் அக்குழந்தையின் ‘தலையெழுத்து’ என்று எதுவும் இல்லை. அப்படியான தாக்கங்களை  கிரகம், கோள்கள், நட்சத்திரங்கள் தருவதும் இல்லை. தலையெழுத்து என்பது இல்லையானால், எல்லாமே பொய்தானே? என்ற எதிர்கேள்விக்கும் இங்கே இடமில்லை. மண்ணில் விதைக்கும் எந்த ஒருவிதைக்கும் கூட, எங்கோ இருக்கும் கோள்களும், நட்சத்திரங்களும் தூண்டுதலை தருகிறது என்று நிரூபிக்கிறார்கள் என்பதை நாம் அறிவோம்.

ஒரு குழந்தையின் ஜாதக குறிப்பின் வழியாக, அக்குழந்தையின் இயல்பு, குணாதசியம், வளர்ச்சி என்பதை சொல்லமுடியும். அடிப்படையாக அக்குழந்தையின் ‘அக நிலை’ என்ன என்பதையும் சொல்லமுடியும். குழந்தை பிறந்த அந்த குடும்பத்தின், பரம்பரையின் சூழல் யூகமாக சொல்லவும் முடியும். கர்மா என்றா வினைப்பதிவுகளின் தொடர்ச்சியை கணித்தும் சொல்லமுடியும். என்ன மாற்றங்களை கற்றும், பழகியும், உலகியலில் நன்மையை பெறலாம் என்பதையும் சொல்லமுடியும்.

அந்த வகையில், ஒரு குழந்தையின் தலையெழுத்து, ஜோதிடத்தில் இல்லை. பரிகாரம் என்பதும் இல்லவே இல்லை. மனதிற்கு திருப்தி அளிப்பதாக, அந்த நேரத்திற்கு ஏதெனும் செய்யலாமே தவிர, வேறெதும் நன்மை இல்லை. பரிகாரம் என்பதால் எந்த மாற்றமும் நிகழ்ந்துவிடுவதில்லை. செயலுக்கு தகுந்த விளைவு என்ற இயற்கையின் நீதியில் இருந்து, தப்பிக்க எந்த வழியும் இல்லை என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

        ஜோதிடம் என்பது ஒரு குறிப்பு. ஒரு திட்ட வரையறை. இயற்கையின் பிரித்தறியமுடியாத, ஒரு பாகமாகவே உலகில், தாவரம் முதல் மனிதன் வரை எல்லா ஜீவன்களும் பரிமாற்றம் பெற்றவை என்பதை மறவாதிருங்கள். அந்த நிலையில் மனிதனுக்கு தன்னுடைய ஆறாம் அறிவின் முழுமையில் கிடைத்த ஒர் ஆராய்ச்சி தான் இந்த ஜோதிடம். இதை தவறாக பயன்படுத்துவோர் ஏராளம். அவர்களை அவர்கள் வழியிலேயே விட்டுவிடுவோம்.

வாழ்க வளமுடன்.

-

How to understand the pattern, precession and regularity?


தன்மை, துல்லியம், இயக்க ஒழுங்கு இந்த மூன்றும் ஒவ்வொரு பொருளிலும் எவ்வாறு உள்ளது? அதை எப்படியாக புரிந்துகொள்வது?

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, தன்மை, துல்லியம், இயக்க ஒழுங்கு இந்த மூன்றும் ஒவ்வொரு பொருளிலும் எவ்வாறு உள்ளது? அதை எப்படியாக புரிந்துகொள்வது?


வேதாத்திரி மகரிஷி அவர்களின் பதில்:

        நாம்  வாழும் இந்த நவீன அணுவியல், வானியல் விஞ்ஞான உலகில், மேட்டர் என்ற நிறையையும், எனர்ஜி என்ற ஆற்றலையும், தனிப்பட்டு விளக்கிட முடியாமல், இருப்பதை அப்படியே ஏற்று, எல்லாவகையான முன்னேற்றங்களையும் மக்களுக்கு வழங்கி வருகிறார்கள். ஆன்மீக வழியில், உண்மை உணர்ந்த மெய்ஞானிகள், இந்த மேட்டர் மற்றும் எனர்ஜியில் என்ன உள்ளது என்பதையும், அதை எப்படி உணர்ந்தும் கொள்ளலாம் என்றும் விளக்குகிறார்கள். இதோ வேதாத்திரி மகரிஷி, அதனில் இருக்கும் உள்ளடக்கத்தை விளக்குகிறார்.

உலகம் என்று எடுத்துக்கொண்டால், அதன் அளவு என்ன? இரசாயனங்களில் அளவு என்ன? என்பதனை இன்றுள்ள விஞ்ஞானிகள் ஓரளவிற்கு உணர்ந்துள்ளார்கள். அந்தக் காலத்தில் இருந்தவர்களும் ஓரளவிற்கு இந்தக் கிரகத்தில் இன்னின்ன சக்தி அதிகம் என்று சொல்லியிருக்கிறார்கள். எந்தப் பொருளால் ஒன்று ஆக்கப்பட்டதோ அது அதன் தன்மை. 

பூமி மணிக்கு 1,000 மைல் வேகத்தில் 24 மணி நேரத்திற்குள் ஒரு சுற்று தன்னைத்தானே சுற்றிக் கொள்கிறது. சூரியனைச் சுற்றும் பாதையில் மணிக்கு 67,000 மைல் வேகத்தில் சென்று 365¼ நாளில் அதை வலம் வருகிறது. இது சிறிதும் காலம் தவறாமல் சரியாக அமையும். இதுவே அதன் துல்லியம். 

இரசாயனப் பொருட்களிலுள்ள நுண்ணணுவின் சுழல் விரைவுக்கேற்ப காந்தத் தன்மாற்ற வேறுபாடுகள் உண்டாகின்றன. அதே விண்துகள்களின் சுழல் விரைவுக்கேற்ப அதன் திணிவும் வடிவமும் அமைகின்றன, இதுவே வடிவம். 

        பரமாணு நிலையிலிருந்து அவை கூடி ஒரு சிறு வடிவமாக மாறி, குறிப்பிட்ட விரைவில் இயங்கும்போது ஏற்பட்டு மாறிக்கொண்டே வரும் ரசாயனத் தன்மைகளும் மற்ற சிறப்புகளும் துல்லியம் அல்லது தன்மைகள் ஆகும். 

இந்த இயக்க நியதி மாறாது. பூமி தன்னுடைய மற்ற இயல்பூக்கத்தையும் நடத்திக் கொண்டு, சூரியனையும் சுற்றி வருகிறது. இச்செயல்பாட்டைத்தான் இயக்க ஒழுங்கு என்கிறோம். இதுவே காலம் அல்லது இயக்கச்சீர்மை ஆகும். 

        பூமி அதிக அளவு சூடு ஆகிவிட்டதென்றால் வெப்பக் குழம்பை “எரிமலை” யாக வெளியேற்றுகின்றது. இது காலத்தால் நடக்கும் இயக்க ஒழுங்காகும். இதுபோல் ஒவ்வொரு பொருளுக்கும் தன்மை, துல்லியம், இயக்க ஒழுங்கு என்ற மூன்று குணங்களும் உண்டு. 

ஒரு ரோஜாச்செடியை எடுத்துக் கொண்டால் அதன் இலை, தண்டு இவ்வாறுதான் இருக்கும் என்பது அதன் தன்மை. 

        ஒரு விதையைப் போட்டால் இத்தனை நாட்களில் செடி வளரும். இத்தனை நாட்களில் பூ பூக்கும். அந்தப் பூவை உண்டால் இன்னது ஏற்படும். இது விளைவு. இவை துல்லியம். அது பூத்தவுடன் அதன் இதழ்கள் வாழும் காலம், அது குறிப்பிட்ட காலத்தில் தளர்ச்சியுற்று இலையுதிர்வது, அது இத்தனை நாட்கள்தான் வளரும், வாழும் என்பது, அந்தச் செடியின் முடிவு இவையெல்லாம் காலத்தை ஒட்டி நடைபெறுவது இயக்க ஒழுங்காகும். 

இவ்வாறு ஒவ்வொரு சடப் பொருளிலும், ஒவ்வொரு உயிரிலும் அதன் தன்மை, துல்லியம், இயக்க ஒழுங்கு என்ற முத்தன்மைகளையும் காணலாம். 

வாழ்க வளமுடன்.

-

I am grieving the death of a pet I loved What to do?


பாசமாக வளர்த்த செல்லப்பிராணி இறந்த துக்கம் என்னை வாட்டுகிறது என்ன செய்வது?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி: 

வாழ்க வளமுடன் ஐயா, பாசமாக வளர்த்த செல்லப்பிராணி இறந்த துக்கம் என்னை வாட்டுகிறது என்ன செய்வது?


பதில்:

ஒருவகையில் வார்த்தைகளால் ஆறுதல் செய்யமுடியாத இழப்பீடுதான். என்றாலும் உங்கள் உங்கள் கேள்விலேயே ‘பாசம்’ என்றொரு வார்த்தையிலேயே பதில் இருக்கிறது. ஆமாம். உறவு, நட்பு என்பதைக் கடந்து பாசம் என்று வரும்பொழுது, அதிகமான பிணைப்பு உருவாகிவிடுகிறது. இதை கொடுக்கல் வாங்கல் என்றும் சொல்லமுடியும். அதில் ஒரு எதிர்பார்ப்பும் வந்துவிடும். ஆனால் செல்லப்பிராணிகள் அதன் அளவில்தான் இருக்குமே தவிர மனிதனுக்குண்டான, எதிர்பார்ப்பு இருப்பதில்லை.

இன்றைய உலகில், செல்லப்பிராணிகள் அன்பாக இருக்கின்றன என்ற கருத்து நிலவுவது, அன்றைய நாட்களிலும் இருந்து வந்ததுதான். மனிதனோடு பழக்ககூடிய பிராணிகள் தன்னளவில், தன்னுடைய அடிப்படை குணத்தை கொஞ்சமாவது குறைத்துக்கொள்கின்றன எனலாம். வேறெந்த காட்டு விலங்கினங்களையும் நாம் பழக்கிட முடியாது, செல்லப்பிராணியாக வளர்க்கவும் முடியாது.

உங்களுக்கான தீர்வாக, அதிலிருந்து கடந்து வருவதுதான் நல்லது. இறப்பு என்பது எல்லா ஜீவன்களுக்கும் பொதுவான ஒன்றாக இருக்கையில் அதற்கு நாம் தயார்செய்து கொள்வதுதான் சிறந்தது. உங்களால் முடிந்தளவு, வாழ்த்துக்களால் அதை சரிசெய்யுங்கள். இறந்த துன்பத்தையும், இழப்பையும் அடிக்கடி நினைப்பதைவிடவும், அந்த செல்லப்பிராணியோடு, நீங்கள் மகிழ்வாக இருந்த தருணங்களை நினைத்துப்பாருங்கள். அதையே மனதிற்குள் ஓடவிடுங்கள். அப்படி நீங்கள் பழகிவிட்டால், துக்கம் உங்களிடமிருந்து தானாகவே விலகிவிடும்.

உங்களுக்குத்தெரியுமா? பெரும்பாலான செல்லப்பிராணிகள், மனிதர்களுக்கு எதிரான உயிர்ச்சுழலைக் கொண்டுள்ளன. அதனால் நம்முடைய யோக பயணத்தில், அவைகளின் நெருக்கும் ஒருதடையை ஏற்படுத்தும். முடிந்தளவு அவைகளிடம் இருந்து விலகி இருத்தல் நல்லதுதான். இயற்கையாக நடந்த ஒரு நிகழ்வை நீங்கள் கடந்து நின்று, இனி உங்களை மாற்றிக்கொண்டு, யோகத்தின் வழியில் பயணியுங்கள். மனதில் அமைதி நிலவிட மாற்றம் கிடைக்கும் என்பது உறுதி.

வாழ்க வளமுடன்

-