CJ for You: vethathiriya channel

vethathiriya channel

Showing posts with label vethathiriya channel. Show all posts
Showing posts with label vethathiriya channel. Show all posts

Do people benefit from this service called Vethathiriyam or not? Is there truth in the records? Can't you give it away for free? What is this Vethathiriya journey like?


பத்தோடு பதினொன்றாக, அரைகுறையாக ஏதோ சொல்லுகிறீர்கள். இதில் வேதாத்திரியம் என்று பெயர்வேறு? உங்களுக்குத் தோன்றுவதை சொல்லி பெரிய ஆளாக நினைக்கிறீர்கள். பதிவுகளில் உண்மை இல்லாமல், வளவள என்று பிதற்றலாக இருக்கிறது. பதிவுகள் இப்படி இருக்க, இதில் அடிக்கடி ஜாதகம் பார்க்கிறேன் என்று காசு வேறு கேட்கிறீர்கள். பதிவுகளை காண மெம்பராகவும் ஆகவேண்டுமா? யோகம் இலவசமாக எல்லோருக்கு போய்சேர வேண்டும் என்று உங்கள் மகரிஷி சொல்லவில்லையா? இதில் முகத்தை வேறு காட்டுகிறீர்கள், சகிக்கவில்லையே. பேசாமல் சும்மா இருக்கலாம்!




வழக்கமாக, ஒரு கேள்விக்கு பதில் தருவதற்கு பதிலாக, கருத்து பதில் தருவது இந்தப்பதிவாகும். மேலே நீங்கள் படித்த கருத்து, ஒருவர் தந்ததல்ல. என்னுடைய வேதாத்திரிய காணொளி பதிவுகளை கண்டுவிட்டு, சில அன்பர்கள் தந்த பின்னூட்டத்தின் தொகுப்பு இது. பல்வேறு காலங்களில் இப்படியான பின்னூட்டங்களும், இதைவிட பலமான பின்னூட்டங்களும் வந்தன. இப்போதும் ஏதோ ஒரு சில பின்னூட்டங்கள் இப்படி வருவதுண்டு. அவைகளை, நான் பொதுவெளிக்கு வரமால் தடுத்து அழித்துவிடுகிறேன். ஆனால் குறிப்பாக எடுத்து வைத்துக் கொள்வேன்.

இத்தகைய நபர்கள், தங்களின் ஈகோ என்ற தன்முனைப்பை, இப்படி பொதுவெளியில் காட்டிக் கொள்கிறார்கள். கூடுதலாக, ஏன் இணைய பிச்சை எடுக்கிறாய்? என்றுகூட கேட்டிருக்கிறார்கள். இவர்களுக்கு பதில் சொல்லுவது, எரியும் தீயில் பெட்ரோலை ஊற்றுவது போலாகும். என்னுடைய கைபேசி எண் பொதுவெளியில் தான் இருக்கிறது. அதோடு, கிட்டதட்ட இருபது ஆண்டுகளாக, உலக அளவில், இணைவழியில்தான், என் ஓவிய வேலைகள், கட்டண சேவையாக நடந்துகொண்டிருக்கிறது. அப்படி இருக்கையில், காசுக்காக, இந்த வேதாத்திரிய சேவை என்று இவர்கள் நினைக்கிறார்கள். அவர்கள் கைபேசி எண் கொடுத்தால், நான் பேசி பதில் தரவும் தயார், ஆனால் அவர்கள் அதை தருவதில்லை.

வேதாத்திரியத்தில், என்னுடைய பதினெட்டு வயதில், இணைந்து தீட்சை பெற்றுக்கொண்டு, இன்றுவரை (2024 வரை) கிட்டதட்ட, முப்பத்தியாறு ஆண்டுகள் அனுபவம் எனக்குண்டு. சும்மா வெறுமனே, வேதாத்திரியா காணொளி சேவை ஆரம்பிக்கவில்லை. அப்படி இருக்குமானால், நான் உங்களோடும், வேதாத்திரியாவோடும் ஏழு ஆண்டுகள் பயணத்தை பெற முடிந்திருக்குமா? ஆம். வேதாத்திரியா ஏழாவது ஆண்டில் பயணிக்கிறது.

வேதாத்திரி மகரிஷியிடம் ஒரு அன்பர் கேட்டார். ‘சுவாமிஜி, நீங்கள் ஆரம்ப காலத்திலே சொன்னதிற்கும், இப்போது சொல்லுவதற்கும் மாற்றமே இல்லையே. அதே கருத்தையே விளக்கிச் சொல்லுவதாகவே அமைகிறதே எப்படி?’

இதற்கு வேதாத்திரி மகரிஷி ‘நான், எல்லாமே முழுமையாக உணர்ந்த பிறகுதான், எழுதினேன், சொன்னேன். அதனால் அதில் உண்மை மட்டும் தான் இருக்கிறது. அதுதான் இன்னமும் தொடர்கிறது. மற்றவர்கள், தங்கள் ஆரம்ப காலத்தில் ஒருவகையிலும், உண்மை உணர்ந்த பிறகு மற்றொருவகையாகவும் சொல்லுவார்கள். ஆனால் நான், உண்மை உணர்ந்து கொள்ளாமல் எதையுமே பகிரவில்லையே’ என்று சொல்லுகிறார்.

இந்த அடிப்படையில்தான். நானும், 1988ம் ஆண்டு தீட்சை பெற்று, 1991ல் ஆசிரியர் பயிற்சி பெற்று, 1993 வரை, கற்றுக்கொடுக்கும் ஆசிரியராக சேவையில் இருந்தும், பொதுவெளியில் எதுவும் சொன்னதில்லை. 2018ம் ஆண்டு, மெய்ப்பொருள் உண்மை விளங்கிக் கொண்ட பிறகுதான், வேதாத்திரியா எனும் காணொளி தளத்தை ஆரம்பித்து, என் பதிவுகளை தந்தேன். எனக்கு இணையத்தில் கிடைத்த ஏமாற்றம், மற்ற அன்பர்களுக்கு கிடைக்கவேண்டாமே? என்ற நோக்கத்தில்தான், வேதாத்திரிய அன்பர்களுக்கு உதவும் வகையில், பதிவுகளை தந்துகொண்டு இருக்கிறேன்.

வேதாத்திரிய தத்துவ உண்மை மாறாமல், அதன் வழியிலே மட்டும் நின்று, வேறெந்த யோக, வேத, புராண, இதிகாச, யோகி, முனிவர், ஞானி, மகான், சாதனையாளர், தத்துவமேதை இப்படி எந்த கருத்துக்களையும் இணைக்காமல், எடுத்துக்காட்டாமல் பதிவுகளை தருவது வழக்கம். அந்த வகையில்தான். இந்த ஏழு ஆண்டு பயணம் தொடர்கிறது. அதற்கு மதிப்பளிக்கும் வகையில்தான், கிட்டதட்ட 38 ஆயிரம் அன்பர்கள், பகிர்வாளர்களாக இருக்கிறார்கள்.

வேதாத்திரி மகரிஷியின் கருத்துக்களை தருவதில், இது பத்தோடு பதினொன்றுதான். அதில் மாற்றுக் கருத்தில்லை. எனக்கு தோன்றுவதை சொல்லாமல், என் அனுபவத்தை, வேதாத்திரியத்தோடு சொல்லுகிறேன். அதுதான் உண்மை. நான் யார்? என்று எனக்குத் தெரியும். நான் எளியவன். எனக்கென்று பிம்மத்தை கட்டிக்கொண்டிருப்பவன் அல்ல. பதிவுகள் பிதற்றல் என்றால், ஏழு ஆண்டு பயணம் இருக்கமுடியுமா? அன்றாடம் வளரமுடியுமா?

கர்ம வினை குறித்த ஜோதிட ஆய்வு என்பது நன்கொடை சேவை. இதில் என்னுடைய பல்லாண்டுகால அனுபவ அறிவு, நேரம், ஆராய்ச்சி, முடிவு, திருத்தம், அதை ஒழுங்கு செய்து, கட்டுரையாக மாற்றுதல் என்று பல்வேறு செலவுகளும், வேலைகளும் இருக்கின்றன. உங்களுக்கு சும்மா தந்தால், எனக்கு கிடைப்பதெல்லாம் சும்மா இல்லையே?! அதற்கு நீங்கள் மாற்றுவழி செய்வீர்களா? விருப்பம் உள்ளோருக்கான அழைப்பு என்றுதான் தலைப்பு தந்திருக்கிறேன். அதை நீங்கள் படிக்கவில்லையா?!

வேதாத்திரிய பதிவுகள், முன்கூட்டியே பார்க்க, உறுப்பினர் சேவை உண்டு, இது யூடுயூப் தரும் சேவைதானே தவிர நான் ஏற்படுத்தவில்லை. என்வழியாக, யூடுயூப் நிறுவனமும் காசு பார்க்கிறது என்பதை நீங்கள் அறிவீர்களா?

யோகம் இலவசமாக எல்லோருக்கும் போய்சேர வேண்டும் என்று உங்கள் மகரிஷி சொல்லவில்லையா? இந்த கருத்தை, நீங்கள் ஆழியார் சென்று, அங்கே உள்ள தலைமை குழுவிடம் சொல்லுங்களேன். நான் ஒரு சாதாரணன். என்னிடம் சொல்லி பிரயோஜனம் இல்லை.

        முகத்தை காட்டக்கூடாது என்பதுதான் என்னுடைய எண்ணமும் முடிவும். ஆனால், என் வார்த்தைகளின் உண்மைத்தன்மையை தீர்மானிக்க முகம் அவசியம் என்பது எனக்குத்தெரியும். உங்களுக்கு சகிக்கவில்லை  என்பதற்காக, நான் முகத்தை மாற்றிக்கொள்ளவும் முடியாது. நீங்கள் இனி பார்க்காதீர்கள், என் முகத்தை இணையத்திலும், நேரிலும் கூட. போதுமா?!

இப்படியெல்லாம் பதில் சொல்லி, ஏனெய்யா உன் நேரத்தை வீணாக்குகிறாய்? என்று என் நண்பர் கேட்டார். ஆனால் இந்த பதிலை எல்லாம், அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். அந்த தூண்டுதலும், URGEம் அவர்களுக்கு தேவைப்படுகிறது. இனி அவர்கள் திருப்தி அடையலாம். இனி பின்னூட்டம் தந்தாலும், அதற்கும் பதில்தர நான் தயார்.

வேதாத்திரிய காணொளி சேவையின் பயணம் குறித்த காணொளி, இதோ.

வேதாத்திரியாவும் நீங்களும் உண்மை தத்துவ விளக்கமும் ஏழாமாண்டு பயணமும் Vethathiriya & Your Realization
வாழ்க வளமுடன்.
-

What is my journey in Vethathiriyam like?!


வேதாத்திரியத்தில் என்னுடைய பயணம் எப்படிப்பட்டது?!


நானும் வேதாத்திரியமும்

அருள்நிதி பயிற்சிக்காக, ஆழியாறில் 1991ம் ஆண்டு, டிசம்பர் மாதம் 27ம் தேதி மாலையில் அங்கே சென்றடடைந்தோம், அங்கே, முதலில் நாங்கள் கண்ட காட்சி இன்னும் அதே மலர்ச்சியோடு, ஆம், குருமகான் வேதாத்திரி மகரிசி, மாலை நடைப்பயணத்தில் எங்களை நோக்கி வந்துகொண்டிருந்தார். சிறிது நேரம் எங்கள் குழுவோடு பேசிவிட்டு வாழ்த்தினார். மறுநாள்  28 முதல் 29, 30 ம் தேதிவரை, வேதாத்திரி மகரிஷி அவர்கள் நிகழ்த்திய ஆசிரியர் பயிற்சி பெற்றுக் கொண்டோம். அவ்வப்பொழுது எனக்கு கிடைத்த உணவு இடைவேளை நேரத்திலும், அன்றைய நாள் பயிற்சி முடிவிலும், அருள்நிதி சான்று பெற்று, நான் வாழ்த்துகளை பெற்ற நேரத்திலும் ‘நான் தகுதியுள்ளவன் தானா?’ என்ற கேள்வி எனக்குள் எழுந்துவந்தது உண்மையே.

ஆனால், ஒரு தகுதி, ஏற்கனவே தகுதியுள்ள ஒருவரால் வழங்கப்படுகிறது என்றால், ‘நிற்க அதற்குத்தக’ என்பது தான் அதன் அர்த்தம். உண்மையாக, இந்த இயற்கையும், நம்மை அப்படித்தான் அரவணைத்து நடத்திச் செல்கிறது. தவறிவிட்டால், தண்டிக்கவும் செய்கிறது அல்லவா?

யார் வேண்டுமானாலும், வேதாத்திரிய தீட்சை பெறலாம் என்றாலும், நம்மில் சிலருக்கே அது கிடைத்தது. ஏன்? நாம் தகுதி பெற்றதினால் தானே? 

சராசரி நபர்களுக்கும மட்டுமின்றி தேடுவோருக்கும் கூட இன்னும் கிடைத்தபாடில்லையே?! அதுதான் இயற்கையின் நிகழ்வாகிறது. எனவே நீங்கள், வேதாத்திரியத்தில் இணைந்ததையும், தீட்சை பெற்றதையும், மகிழ்ந்து, வாழ்த்துங்கள். பிறவியில் கிடைத்த பெரும் பேறு என போற்றுங்கள். அதற்கு உங்களுக்கு விளக்கம் தந்த ஆசிரியர்கள் அல்லது துணை செய்த நண்பரை நினைத்தும் வாழ்த்துங்கள்.

தடுப்பும் ஏற்பும்

ஒரு சராசரி நடுத்தரவர்க்க மனிதருக்கு நடக்கும் நிகழ்வான, படிப்பு, வேலை, வளர்ச்சி, உயர்வு என்று எல்லாவற்றிக்கும் போராட்டமும், தடுமாற்றமும், நமக்கு யார் உதவுவார்கள்? என்ற எதிர்பார்ப்பும், ஏமாற்றமும் எல்லோருக்கும் பொதுவானதே ஆகும். எனக்கும் அப்படித்தான். ஆனால், அப்படி நிகழும் பொழுது, ஏதோ ஒருவகையில் நீங்கள் செலுத்தப்படுகிறீர்கள் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். அதுதான் யோகத்தில் சிறப்பாகும்!

நீங்கள், ஏதேனும் ஒரு நாள், துணைக்கு யாருமற்று, தனித்து நின்று பழகும் பொழுதுதான்,
உலகியலில் பிறமனிதர்கள் எப்படி?
நம்மோடு ஏன் இப்படி பழகுகிறார்கள்?
இப்பொது இருக்கும் சூழ்நிலையை எப்படி ஏற்பது?
நாம் எப்படி நம்மை மாற்றிக்கொள்வது?
அதை எப்படி அதை அணுகுவது?

என்ற அனுபவம் கிடைக்கும். அதன்வழியாகவே, ஒரு தனியனாக உங்களை நீங்கள் உணர்ந்தால்தான், நிஜமாக நீங்கள் எந்த நிலையில் இருக்கிறீர்கள் என்பதுகூட உங்களுக்கே தெரியவரும். அதுவரை ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்தான். 

ஆனால் இவை எல்லாம், இயல்பாக, இயற்கையாக நிகழும் ஒன்றுதானே? அதை விழிப்பாக, ஓர் ஆராய்ச்சியாக எடுத்துக்கொண்டால், நம்மை திருத்தும் ஒரு தடுப்பும், அதன்வழியாக ஏற்பும்   இயற்கையே நிகழ்த்துகிறது என்று தெரிந்து கொள்ளலாம். எனவே நமக்கு நிகழ்கின்ற எதுவுமே காரணமின்றி நிகழ்வதில்லை. நாம் செல்லும் பாதையில், போக்குவரத்தை சரிசெய்வதைப் போல காலம் செயல்படுகிறது. விபத்து ஏற்படுகிறது என்றால் அது நம் கவனக்கோளாறே ஆகும்.

உண்மை விளக்கம்பெற உதவுவீர்

தனி மனிதன், நான் யார்? என்று தன்னை அறியவும், தன் மூலம் அறிந்து பிறவிக்கடன் தீர்க்கவும் ‘பிரம்மஞானம்’ போதும். ஆனால், அருள்நிதி பயிற்சி ஏன் பெறுகிறோம்? கற்றுக்கொண்ட விளக்கத்தில் ஆழ்ந்து, தேர்ந்து, உண்மையறிந்த பிறகு, நம்மைப்போலவே, துன்பத்தில் சிக்கித்தவிக்கும், சகமனிதரை நாம் உயர்த்துவதற்கு உதவலாம் அல்லவா? அதற்காகவே

ஆனால் வேதாத்திரியத்தில், இது கட்டாயமல்ல. உங்களுக்கு அப்படியான விருப்பம் இருந்தால் பிறருக்கு சொல்லித்தரலாம். மேலும் வேதாத்திரியத்தை, உலகெங்கிலும் எடுத்துச்செல்லும் வகையில் மனவளக்கலை  வழியாக. அருள்நிதி நிலையும், கூடுதலாக, துணைப்பேராசிரியர், பேராசிரியர் என்ற நிலைகளும் கொண்டுவரப்பட்டது. 

ஒரு மனிதன் தன்னை உயர்த்திக்கொள்வது மட்டுமல்ல, சக மனிதருக்கும், காலம் காலமாக மறைந்திருக்கும் உண்மை விளக்கத்தை அறியத் தரவேண்டும் என்பது, நம் குருமகான் வேதாத்திரி மகரிஷி அவர்களின் திட்டம். அதன்படியே இன்று, வேதாத்திரியம் பரந்து விரிந்து இருப்பதை நாம் காணமுடியும்.

கர்மா எனும் வினைப்பதிவு தாக்கமும் கழிவும்!

எப்படியோ நாம் பிரம்மஞானம், பெற்று அருள்நிதி ஆகிவிட்டோம், இன்னும், துணைப்பேராசிரியர், பேராசிரியர் என்றும் ஆகிவிட்டோம். ஆனால் நாம், தன்னை அறிதலிலும், இறையுண்மை உணர்தலிலும் எப்படி இருக்கிறோம்? என்பது அவரவருக்கே தெரியும் உண்மையாகும்.

இதற்கு நம் கர்மா என்ற வினைப்பதிவின் பங்கு அளப்பறியது. என்னதான் வேதாத்திரிய சேவையில் இருக்கிறோம் என்றாலும் அதன் தாக்கம் ஒவ்வொருவரும் அறிவார். தனியாக இங்கே நான் விளக்கத் தேவையில்லை. நம் ஓவ்வொரு நொடி வெளிப்பாடிலும் கர்மா வரவும், பற்றும் இருப்பதை உணர்ந்தால் போதுமானது.  வரவில் கவனமாக இருப்பது முக்கியம். 

புலிவால் பிடித்த கதை

குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள், தன் 50 வயது நிறைவில், உலக வாழ்வு போதும் என்ற முடிவோடு, முழுமையாக, எல்லாவற்றிலிருந்தும் விலகி, வேதாத்திரிய சேவையை ஏற்றுக்கொண்டார். 

1988 முதல், இத்தனை ஆண்டுகளாக, ஆர்வம், பயிற்சி, முயற்சி, ஆராய்ச்சி, முடிவு என எனக்கு வேதாத்திரியம் வழியாக, உண்மை வரவர, என் சூழல் மிகுந்த மாற்றம் நிகழ்ந்தது. தானாகவே 2017ம் ஆண்டில் அந்த உண்மைக்குள் நான் விழ ஆரம்பித்தேன். 2018 ல் நிறைப்பேறு நிலை என்பது புரிய ஆரம்பித்தது. எப்போதுமே எனக்குத் தெரிந்ததை, பிறருக்கு சொல்லும் பழக்கமும், சொல்லித்தரும் பழக்கமும் உண்டு.

அந்த வழியாக, வழக்கமான பணிகளோடு, வேதாத்திரியமும் பிறருக்குத் தரலாம் என்றெண்ணி ஆண்டு 2018 ல் ஆரம்பித்ததே ‘வேதாத்திரிய சானல்’ ஆகும். ஆண்டு 2019 ல் டிசம்பரில், பெரும் தொற்றான கோவிட் பரவ, என்னுடைய வழக்கமான பணிகள் பாதிக்கபட, முழுதான பணியாக வேதாத்திரிய சேனலில் பதிவேற்றம் செய்வது என வந்துவிட்டது. இன்று இந்த ஆண்டு 2023-லும், ‘நீ முழுமையாக இதில் இரு’ என்பதாகவே சூழல் அமைந்துவிட்டது.

ஆம் புலிவாலை சும்மா பிடிக்கப்போக அதில் சிக்கிவிட்டேன் என்ற பழமொழி போலத்தான் சொல்லவேண்டும். வேதாத்திரியத்தை நான் விட்டால்கூட, வேதாத்திரியம் என்னை விடாது. இப்பொழுது எனக்கு வேதாத்திரியம் தவிர வேறெதும் தெரியாது என்ற நிலையில் நின்று கொண்டிருக்கிறேன். அதனால் தான், வேதாத்திரியத்தில் வழக்கமான பதிவுகளோடு கூடுதலாக தனிப்பட்ட சேவையும் தரலாம் என்று முடிவெடுத்தேன். அதை நன்கொடை பெற்று நடத்தக்கூடிய நிலையில் தான் நான் இருக்கிறேன்.

ஏனென்றால், முழுதாக வேதாத்திரியத்தில் இயங்கினால், உலகியல் பணிகளில் தொய்வு வருவது இயல்பானதே ஆகும். இதை நம் குருமகான் வேதாத்திரி மகரிஷி அனுபவித்தும் இருந்தார். அவர் ‘அடுத்த வேளை சாப்பாடு கிடைக்குமா? என்று காலம் தள்ளிய நாட்கள் அவை’ என்கிறார். ஆனால், இறையுண்மையை, நான் யார்? என்ற தன்னையறிதலை, பிறவிக்கடன் தீர்க்கும் உன்னதத்தை, ஏளனமாக பார்ப்பவர்கள் பலர் உண்டு. அவர்கள்தான்  இந்த சேவையில் ஈடுபடுபவர்களையும் ஏளனம் செய்வார்கள். அதுகுறித்து, தன்னை அர்ப்பணித்து சேவையில் இறங்கியவர்கள் வருத்தம் கொள்வதில்லை!

எதிர்பார்ப்பில்லை

நான் யாரிடமும் எதையும் எதிர்பார்க்கமாட்டேன், எல்லாம் வல்ல இறைநிலை, என்னை பார்த்துக்கொள்ளும்’ என்பது நம் குருமகான் வேதாத்திரி மகரிஷி, வேதாத்திரிய சேவையில் இருப்பவர்களுக்கு சொல்லித்தரும் சங்கல்பம். நானும் இந்த சங்கல்பத்தின் வழியேதான் வேதாத்திரிய சேவையில் இறங்கியுள்ளேன். நான் இறங்கினேன் என்பது தவறு, இறைநிலையே என்னை தன்னில் நகர்த்திக் கொண்டது என்று சொல்லலாம். ஆனாலும், யாருக்கு எப்பொழுது எது எங்கே கிடைக்கவேண்டும் என்பதை, காலமும், அதனோடு இருக்கும் பேராற்றலும், பேரறறிவும் தானே தீர்மானிக்கிறது.  எனவே காத்திருக்கிறேன்!

வாழ்க வையகம், வாழ்க வளமுடன்!

Sereveyo Center for Self-realization by Vethathiriya Yoga 04


Shri Vethathiri Maharishi- Art by Sugumarje


CENTER FOR THE SELF-REALIZATION BY VETHATHIRIYA YOGA



சுருக்கமாக ‘SEREVEYO’ (செரெவியொ) என்ற பெயரில் இந்த, வேதாத்திரிய யோகம் வழியாக, தன்னையறிதல் (குண்டலினி யோக அடிப்படையில்)  என்ற சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

அன்பர்களே, முக்கியமாக இந்த சேவை வழியாக, குண்டலினி யோக தீட்சை, காயகல்ப பயிற்சி வழங்கப்படுவதில்லை. எனவே அவற்றை, ஆழியாறு அறிவுத்திருக்கோவில், உங்கள் நகரில் அமைந்திருக்கும் மனவளக்கலை மன்றங்கள், தவ மையங்களில் தொடர்பு கொண்டு  கற்றுக்கொள்ளலாம். அதன்படி வேதாத்திரியம் வழியாக கற்றுக்கொண்ட அன்பர்களுக்கும், ஆர்வமுள்ளோர்க்கும் உதவும் வகையில் இந்த சேவை வழங்கப்படுகிறது

அந்த வகையில், சேவை இரண்டு வகையாக செயல்படுகிறது. 


முதலாவது/ நன்கொடை வழியில் சேவை / நேரடி இணையவழி தொடர்பு சேவை
1) இணையம் வழியான கருத்தரங்கு, கலந்துரையாடல் அதன் பிறகான கேள்விக்கான பதில் நிகழ்வாக இருக்கும். இதில் நன்கொடை செலுத்திய அனைவரும் ஒரே நேரத்தில் கலந்து கொண்டு பயன்பெறலாம். நேரடியாக தத்துவ விளக்கம், கேள்வி பதில்! தனி நபருக்கான நன்கொடை Rs.999/- காலை  / மாலை  என இருநேர நிகழ்வு.
ஒரு நபர் தனியாக, விரும்பினால், ஒரு பகிர்வுக்கு, ஒரு நாளில் 30 to 40 நிமிடங்கள் மட்டுமே செல்லுபடியாகும்.(Google Meet or Zoom)
அதற்குப்பிறகு அவரே தொடர முடியாது. மறுநாள் வரை காத்திருக்க வேண்டும், எனவே அடுத்த வாய்ப்பு வேறு நபருக்கு வழங்கப்படும். இப்படியாக நன்கொடை அதிகபட்சமாக 30 நாட்கள் மட்டுமே செல்லுபடியாகும்
இதற்கு நன்கொடை Rs. 999/- செலுத்தியவர்கள் WA.ME/919442783450 என்ற வாட்சாப் (WhatsApp) வழியாக விபரமளித்தால், அவர்களுக்கான இணைய கருத்தரங்கு இணைப்பு சுட்டி (Link) அனுப்பிவைக்கப்படும். இதை பிறருக்கு பகிர்வது தவறு என்று அறிந்து கொள்க! நீங்கள் பகிர்ந்து வேறு யாரேனும் வர அனுமதிக்காதீர்கள்.
நன்கொடை செலுத்தாதவர்கள் இணைவதற்கு அனுமதி மறுக்கப்படும். We will block that persons, who entered to webinar without donate.
இந்த நிகழ்வு ஒருபோதும் இணையத்தில், வேறுயாரும் பார்ப்பதற்காக பதிவாக பகிரப்படாது


இரண்டாவது/ நன்கொடை வழியில் சேவை / YouTube பதிவுகள் வழியான சேவை
2a) அடிப்படை உறுப்பினருக்கான விரிவான தகவல்கள், கருத்துக்கள், ஆலோசனைகள், விஞ்ஞான விளக்கங்கள் அடங்கிய காணொளிகள் (YouTube ல்) உறுப்பினர் / Membership வழியாக, நன்கொடை Rs.299/- ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து புதிய காணொளிகள் கிடைக்கும்!
2b) தவமும் தவவிளக்கமும் பயன்களும், அனுபவங்களும், விளக்கங்களும் கொண்ட காணொளிகள் பெற நன்கொடை Rs.799/- ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து புதிய காணொளிகள் கிடைக்கும்!
2c) இறை உண்மை ஆய்வு பதிவுகள், தனையறியும் பயணத்தில் கண்ட உண்மைகள், ஆராய்ச்சிகள், பயன்கள், கிடைத்த விளக்கங்கள் ஆகியன பலவித தலைப்பிலான காணொளிகள். நன்கொடை Rs.1.999/- ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து புதிய காணொளிகள் கிடைக்கும்!
இதற்கான நன்கொடையை இங்கே YouTube வழியாகவே, அதன் வரையறைக்குட்பட்டு செலுத்தி பயன் பெறலாம். எங்கள் சேவை இந்நிர்வாகத்தால் கண்காணிக்கப்படும் என்றும் அறிக!
இந்த காணொளிகளை பொதுவெளியில் யாரும் பார்க்க முடியாது

விளக்கமாக!
வேதாத்திரியத்தில் என் 34 ஆண்டுகளுக்கு மேலான அனுபவ அறிவை தருகிறேன். எனவே சரியான நபர்களுக்கு சேரவேண்டும் என்றும் விரும்புகிறேன். அவர்களின் வளர்ச்சியில் என் பங்காக சிலவற்றை தரவும் எண்ணம் கொண்டுள்ளேன். எங்களின் அனுபவம், உழைப்பு, அறிவுப்பகிர்வு இவையெல்லாம் சரியான அன்பர்களுக்கு, தேவையானவர்களுக்கு, நோக்கத்தின் வழியாக முன்னேற துடிப்பவர்களுக்கு மட்டுமே சேரவேண்டும் என்று விரும்புகிறோம்.

சமீபமாக, வேதாத்திரியத்தில் நம் கைகளை உயர்த்தினால், வேதாத்திரி மகரிஷியைத் தவிர பற்றிக்கொள்ள யாருமில்லை என்று சொல்லுகிற அன்பர்களின் மனக்குறையை, நாங்கள் போக்கிட முயற்சிக்கிறோம்.

மேலும் இங்கே இணையம் வழியாக அறிவுத்திருட்டு அதிகமாக நிகழ்வதை காணமுடியும். ஒருவருடைய பதிவை, அவரிடம் கேட்காமல், தெரியப்படுத்தாமல், நன்றி சொல்லாமல், யாருடையது என்றும் சொல்லாமல், ஏதோ தானே ஆராய்ந்து கண்ட உண்மைபோல பேசி, அவர்களுடைய பெயரில் பகிர்ந்து விடுவார்கள். ஆனால், வேதாத்திரிய சானலில், ஒருபோதும், யாருடைய பதிவையும் எங்கள்பதிவாக வெளியிட்டதில்லை. வேதாத்திரி மகரிஷி பதிவுகள், ஏற்கனவே பொது தன்மையில் உள்ளதால், அவை மட்டுமே இருக்கும். மற்ற எல்லா பதிவுகளிலும் எங்கள், சிந்தனையும், உழைப்பும், ஆராய்ச்சியும், அனுபவங்கள் மட்டுமே இருக்கிறது.

மேலும் என் ஓவிய வாழ்க்கையிலும், 16 ஆண்டுகளாக இந்த பிரச்சனையை நான் சந்தித்து இருக்கிறேன். நான் வரைந்த ஓவியம் ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட அடுத்த பத்து நிமிடத்திற்குள்ளாக, அந்த ஓவியத்தை எடுத்து திருத்தி, மேலும் ஓவியத்தில், என் கையெழுத்தை அழித்துவிட்டு, தன் பெயரில் வெளியிட்டவரிடம் கேட்டதற்கு, ‘இணையத்தில் வந்துவிட்டால், அது உன் சொத்து அல்ல’  என்று என்னிடம், தெனாவட்டாக பதில் சொன்னவரோடு முரண்பட்டு அவரை என் நட்பு பட்டியலில் இருந்து நீக்கியுள்ளேன்.

மேலும் 2c) திட்ட வழியாக இணையும் அன்பர்களுக்கு மட்டும், பகிரப்படும் சில ஆய்வு பதிவுகளுக்கு, கூடுதலாக அதன் வடிவ கோப்பும் (PowerPoint Document) தர முடிவு செய்துள்ளோம் எனினும், எல்லாவற்றிற்கும் அப்படி தர இயலுமா என்பது கடினமே. வார்த்தையாலும், ஒளிப்படங்களாலும், ஓவியத்தாலும் சொல்லமுடியாத உண்மைகளும் இருக்கின்றனவே. எனினும் உங்கள் சந்தேகங்களை தீர்க்கவே நாங்கள் தயாராக உள்ளோம். வாய்ப்புக்களை பயன்படுத்திக்கொள்ள, அன்புடன் வரவேற்கிறோம்
.
இந்த சேவை வழியாக, என்னோடு துணை நிற்கும், குரு மகான் வேதாத்திரி மகரிஷிக்கும், இன்னும் பல நல்ல சித்தர் பெருமக்களுக்கும் என் நன்றி.

-
குறிப்பு: ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு நன்கொடை திட்டத்தை அகற்றிவிடலாம் என்று நினைக்கிறேன்! அருட்பேராற்றலும், குரு மகானும் அந்நிலை அமைந்திட உதவட்டும்!
-

வாழ்க வையகம், வாழ்க வளமுடன்.
-
Link for 1st part: Sereveyo Part1

Name changes, self-description post by Sugumarje


sugumarje


ஒத்துபோகிற தன்மை!

ஒரு கேரிகேச்சர் என்ற கேலிச்சித்திரம் எழுதுபவனாக இருந்தவன், தன்னையறியும் பயணத்தில் எனக்கு கிடைத்த அனுபவத்தின் உந்துதலில் இதை பிறருக்கும் சொல்லலாம் என்ற கருத்தில் 2018 உருவானதுதான், வேதாத்திரிய சானல். தொடங்கும் பொழுது அதற்கு சூட்டப்பட்ட பெயர், Coincide Channel, இதன் நேரடியான தமிழ் மொழிபெயர்ப்பு ‘ஒத்துப்போகிற தன்மை’ என்பதாகும், இந்த பெயரிலேயே, என்னுடைய உண்மை விளக்கத்தை சொல்ல நினைத்தேன். அதாவது மனிதனின் மனமும், இறைநிலையும் ஒத்துப்போகிற தன்மையில் இருக்கிறது என்பதே ஆகும். இதன் மூலக்கருத்து ‘அலையலையாய் இயங்கும் மனதின் அடித்தளமே நிலைபொருள், அது தெய்வம்’ என்று குரு மகான் வேதாத்திரி மகரிஷி சொன்னதாகும்.


வேதாத்திரிய சானல்

என் பள்ளித்தோழர், சக வேதாத்திரிய பயணி, இந்த YouTube பெயரை கேட்டுவிட்டு, இப்படியெல்லாம் பெயர்வைத்தால், வேதாத்திரிய அன்பர்களுக்கு பயன்படுவதில் சிரமம் இருக்கும், பெயரை மாற்றுக  என்றார். உடனடியாக ‘வேதாத்திரிய சானல்’என்று பெயர் மாற்றம் செயப்பட்டது. அதுதான் இன்னமும் தொடர்கிறது, பதிவுகளையும் வழங்கி வருகிறோம்.

நீண்ட பயணம்

நான் யார்? என்று தன்னையறிதல் என்பது நீண்டபயணம் தான். அதற்கு முயற்சி, ஆர்வம், சூழ்நிலை, செயல்பாடு என்று எல்லாமே கூடி வர வேண்டும். முக்கியமாக நம் கர்மா என்ற வினைப்பதிவுகளின் வெளிப்பாடுகளை ஏற்றுக்கொள்ளவும் தயாராக வேண்டும். ‘என்ன வாழ்வதை விட்டுவிட்டு தன்னை அறிகிறயா, விடுவேனா உன்னை!’ என்று பல குழப்பத்தை ஏற்படுத்தும். அடிக்கிற காற்றில் பறக்கிற சருகு போல நாம் இருந்துவிட வேண்டியது அவசியம். இதை தாங்கிக்கொள்ள முடியாமலும், இதெல்லம் நமக்கு அவசியமா? குறுக்கு கேள்வியாலும்தான், நான் யார்? தன்னையறிதலை கைவிட்டு விடுகிறார்கள். எனக்கு என் முன்னோர்களின் ஆசி இருந்ததாக கருதுகிறேன்.

தன்னிலை விளக்கம்

என்னுடைய வாழ்வில் என்னை / என் வாழ்க்கையை புரட்டிப்போட்ட ஆண்டு 2016 என்று சொல்லலாம். 2017 கிட்டதட்ட தன்னையறிதலுக்கு தகுதியாகிவிட்டேன். 2018 ம் ஆண்டு, எனக்குள் இறையாற்றல், அறிவாகவும் இருந்து செயல்படுகிறது என்பதையும், வெளியாக இருக்கிற இறையாற்றலின் சூழ்ந்தழுத்தத்தினால் தான் நான் இயங்கிக்கொண்டும் இருக்கிறேன், அதே இறையாற்றலினால்தான் நான் உலகியல் வாழ்வில் உணர்வைப் பெறும், இறையாற்றலையே உணரக்கூடிய  மனமாகவும் இருக்கிறேன் என்பதை உணர்வாக பெற்றேன். இதோ, என்னுடய வேதாத்திரிய பயணம் விபரம்...

18 வயதில் தீட்சை (1988 ம் ஆண்டு) 

21 வயதில் அருள்நிதி (1991 ம் ஆண்டு)

47 வயதில் தன்னையறிதல் (2017 ம் ஆண்டு)

53 வயதில் நிறைபேற்று நிலை (2023 ம் ஆண்டு)

மொத்தமாக 34 ஆண்டுகள் ஆகும்.

நான் யார்?

இந்த விளக்கங்களை, அதாவது, நான் இந்த வேதாத்திரியத்தில் பெற்ற அனுபவங்களை, என்னுடைய எழுத்திலும், குரலிலும் பதிந்து வெளியிட்டுள்ளேன். ஏன் அப்படி ஒரு திட்டமும் ஆர்வமும் எழுந்தது என்றால்? வேதாத்திரி மகரிஷி சொன்னது போல, ‘அறிந்த உண்மை நம்மை சும்மா விடாது, அதை எப்படியாவது பிறரிடம் சொல்லி, அவர்களும் அந்நிலை பெற துணையாக நிற்கும்’ என்பதே உண்மை. ஆனால், இந்த நவீன காலத்தில், கரோனா நோய்த்தொற்றுக்குப்பிறகு, தகவல் தொடர்பாகவும், கருத்து பரிமாற்றமாகவும், யுடுயூப் (YouTube) மாறிவிட்ட பிறகு, எனக்கும் அதுவே சரியாக தோன்றியது. 2009 ம் ஆண்டில் இருந்து YouTube உறுப்பினராக இருந்தாலும் கூட, நம் வேதாத்திரியம் 2018ம் ஆண்டுதான் பகிர ஆரம்பித்தேன்.அதுவும் சந்தேகமற, உண்மை அறிந்த பிறகே!. ஆனால், கிட்டதட்ட ஐந்து ஆண்டுகளாக, இன்றுவரை 729 காணொளிகள் பதிவேற்றிய நிலையிலும், என்னைவிட என்பகிர்வுகளை புரிந்து கொண்டு, வேதாத்திரிய சானலை பகிர்ந்துள்ள 18200 அன்பர்களைக் கடந்தும் கூட, சிலர்  என்னை நீ யார்? என்றுதான் கேட்கத்தான் செய்கிறார்கள்.

 1) ஒரு செய்தியை, விளக்கத்தை, பதிவை, கட்டுரையை, காணொளியை, குரல்பதிவை தருவது யார்?

2) அவருடைய அனுபவம் என்ன?

3) எப்போது இருந்து இந்த சேவையை பகிர்ந்தளிக்கிறார்?

4) அவருடைய சிறப்பு ஏதேனும் உள்ளதா?

5) இதற்குமுன் என்ன செய்தார்?

6) அவர் பின்புலம் என்ன? என்றெல்லாம் ஆராய்வதே இல்லை. பதிவாக செய்திருந்தாலும் அதை பார்ப்பதில்லை, படிப்பதில்லை.

வேதாத்திரி மகரிஷியின் ஓவியத்தை காட்டி,
அவரிடமே கையெழுத்து வாங்கிய பொழுது (1993 ம் ஆண்டு)


நேற்று முளைத்த காளான்

கடந்த முப்பத்திநான்கு ஆண்டுகளாக வேதாத்திரிய பயணத்தில், என் அனுபத்தில், தன்னிலை விளக்கம் பெற்றபிறகு, என்னை அவர்கள் பார்க்கும் பார்வையும், பதிலுரைக்கும் முறையும், நேற்று முளைத்த காளான் என்றுதான் இருக்கிறது. ஒரு உண்மை சொல்லட்டுமா? ஓவ்வொரு மனிதனும் முகம்பார்க்கும் கண்ணாடி மாதிரி. ஒருவர் தன் அனுபத்தை வைத்துத்தான், அடுத்தவர் எப்படிப்பட்டவர் என்று பார்ப்பார். அதில் தன் முகம்தான் அதில் தெரியும். பழகிப்பார்க்கும் பொழுதுதான், ‘அடடா இவர் நம்மளை மாதிரி இல்லையே, நாம நினைச்ச மாதிரியும் இல்லையே’ என்று தோன்றும். 

சேவையில் எழுந்த தயக்கம்

வேதாத்திரி மகரிஷி அவர்களின் நேரடியான வகுப்பில் கலந்து அருள்நிதி ஆகிவிட்ட பிறகு, மன்றத்தில் சேவையில் இருந்தாலும் கூட, நான் யார்? என்று தன்னையறியாமல், இறையுணர்வு பெறாமல், சுத்தவெளி தத்துவம் உணர்வாக பெறாமல் எனக்கு சேவையில் ஈடுபட முடியவில்லை. லட்டை சுவைத்தால் தானே லட்டு எப்படி இருக்கும் என்று பிறருக்கு சொல்லமுடியும்? லட்டு குறித்து பிறர் சொன்னதையும், படித்ததையும் அடுத்தவருக்கு எப்படி சொல்வது என்று எனக்குள் தயக்கம். அதனால் நானாகவே மன்ற செயல்பாடுகளில் விடுவித்துக்கொண்டேன்.

அதன்பிறகு எந்த ஒரு மன்றத்தில் நான் சேவையில் இல்லை. ஆனாலும் வேதாத்திரியத்தை நானும் விடவில்லை, அதுவும் என்னை விடவில்லை. இதனால் எனக்கு மன்றம் சார்ந்த சேவையில் எந்த நிலைபாடும் பெறவில்லை.அதாவது, பெயருக்கு முன்னால் போட்டுக்கொள்ளும் தகுதி நிலையிலும், பெயருக்குப் பின்னால் போட்டுக்கொள்ளும் தகுதி நிலையிலும் எனக்கு அக்கறையில்லை.

by Sugumarje for Caricaturelives

by Sugumarje for personal collection


சுகுமார்ஜெ (Sugumarje)

கடந்த 1996 ம் ஆண்டு முதல் என்னோடு கணிணி இணைந்து கொண்டது, அந்த கணிணி ஆர்வத்தின் வழியாகவே, வேலைகளிலும் ஆர்வம் வர, 2003 ம் ஆண்டு மல்டிமீடியா எனும் வேலையில் தொடர்ந்து வருகிறேன். 2007 ம் ஆண்டு நிறுவனம் சாராத, தனி நபர் சேவையாக, CARICATURELIVES என்ற கேரிகேச்சர் ஓவிய நிறுவனம் நடத்தி வருகிறேன். இப்போதும் சில ஓவிய வேலைகள் உண்டு. இந்த வேலை நிறுவனத்தின் வழியாக என்பெயர் சுகுமார்ஜெ (Sugumarje). இன்றும் கூட இணையத்தில் தேடினால் என்னைபற்றி தெரிந்து கொள்ளமுடியும். ஆனால், வேதாத்திரிய சானலை பொறுத்தவரை, அதற்கு தகுதியுள்ள பெயராக வைப்போம் என்றுதான், அருள்நிதி சுகுமாரன்.ஜெ. (திருச்சிராப்பள்ளி) என்று வைத்துக்கொண்டேன். ஏதோ கொஞ்சம் தெரிந்தவர், அறிந்தவர் சொல்லுகிறாரே என்று நம்புவார்கள் அல்லவா? அதனால்தான்!

அருள்நிதி என்பது முழுமையை குறிக்கும் சொல். தகுதி இல்லாவிட்டாலும், நமக்கு அது கிடைத்துவிடுகிறது. ஒரு பிச்சைக்காரர் தன் குழந்தையை ‘ராஜா’ என்று கொஞ்சுவது போல. யார் கண்டார்கள், அக்குழந்தை நிஜமாகவே ராஜா ஆகலாம் அல்லவா? அதுபோல ‘நீ உன் தகுதியில் நின்றிரு’ என்பதற்காகத்தான் ‘அருள்நிதி’ என்ற பட்டம் கிடைக்கிறது. ‘நிற்க அதற்குத் தக’ என்ற ஆசான் திருவள்ளுவரின் குறளை நினைவு கூர்க.

பெயரில் குழப்பம்?

ஆனால் என்ன நிகழ்ந்தது என்றால், அருள்நிதி என்றுதானே இருக்கிறது, எனவே பதிவுகளை பார்ப்போர், என்னடா இது அருள்நிதி என்று பெயருக்கு முன்னால் போட்டிருக்கு? இவ்வளவு பேசுகிறானே? எல்லாம் தெரிந்த்து போலவேறு பேசுகிறான்? இந்த ஆண்டுதான் அருள்நிதி ஆனாலும் ஆகிருப்பான். இப்பவே இவ்வளோ திமிறா? என்று நினைப்பார்கள் போலிருக்கிறது. அதனால்தான் அடிக்கடி நம் வேதாத்திரிய சேனலில், என்மீது வன்ம கருத்துக்கள் பதியப்பட்டன சிலரால். நான், என்கருத்தை, உண்மையை, அதை விளக்கமாக சொல்லியும், பெரிய இவனா நீ?  நீ என்ன மகரிஷியா? அவரை வைத்து பிழைக்கிறாயே? என்ற அளவில் கேட்டுவிட்டனர். அருள்நிதிக்கு பதிலாக, துணை பேராசிரியர், பேராசிரியர், முதுநிலை பேராசிரியர் என்று போட்டிருந்தால், பேசாமல் போயிருப்பார்களோ என்னவோ?! வாட்சாப் குழுவிலும் ‘உனக்கு ரொம்ப தெரியுமோ?’ என்று யாரேனும் கேட்பதுண்டு.

ஆனால் நான் எதையுமே பிரச்சனையாக கருதாமல், எது உண்மையோ, எது விளக்கமோ, எதை புரியவைக்க வேண்டுமோ அதில் நான் தவறுவதில்லை, பூசிமொழுகி பேசும் கலை எனக்கு வரவில்லை. ஆனாலும் நம் வேதாத்திரிய இரண்டொழுக்க பண்பாட்டின் படி, மனதுக்கு துன்பம் தருவதில்லை (அவர்கள் எனக்கு கொடுத்தாலும் கூட) அந்த உண்மையை அவர்கள் புரிந்து கொள்ளாமலேயே அடுத்தடுத்த கேள்விவை வாக்குவாதமாக மாற்றுவது எனக்கு பிடிக்கவில்லை. எனவேதான் வேதாத்திரிய சானலில், பின்னூட்டமிடுவது முடக்கப்பட்டது.  இங்கேயும் ஒரு உண்மை சொல்லட்டுமா? பின்னூட்டம் வழியாக, பெரும்பாலோர் தான் என்ற அகங்காரத்தைத்தான் பதிவு செய்கிறார்கள்.

இனி என் பெயர்...

அருள்நிதி சுகுமாரன்.ஜெ. (திருச்சிராப்பள்ளி) என்ற பெயருக்குப் பதிலாக, சுகுமார்ஜெ (Sugumarje) என்றே செயல்பட முடிவு செய்துள்ளேன். பெயரில் மதிப்பை தூக்கி அலைவது எனக்கு தேவையில்லை என்று கருதுகிறேன். அந்த விளக்கத்திற்காகவே, இந்த மிக நீண்ட கட்டுரை.

ஒரு பூ மலர்கிறது, வாசனை பரப்புகிறது. நாம் பார்த்தாலும் பார்க்காவிட்டாலும், ரசித்தாலும் ரசிக்காவிட்டாலும், பயன்கொண்டாலும், கொள்ளாவிட்டாலும், இழப்பு அந்த பூவுக்கு இல்லை என்பது உங்களுக்கு தெரியும் தானே?! 

'ஐயா, இதென்ன கதை? நாளைக்கும் பூ பூக்கும் தானே?!’

’ஆமாம், நாளைக்கும் பூக்கும், மறுநாளும் பூக்கும், அடுத்த மாதமும், ஆண்டும் பூக்கும். ஆனால் அதே பூ பூப்பதில்லையே; 

வாழ்க வையகம், வாழ்க வளமுடன்!







Sereveyo Center for Self-realization by Vethathiriya Yoga 03


 


நான் யார்? என்ற தன்னையறியும் சேவை வழங்க தயாராகிறேன் 03

இறுதிக்கேள்வியும் அதற்கான பதிலும்

-

கேள்வி: சரி, ஏன் பணம் வாங்கித்தான் ஆகவேண்டுமா?

என் பதில்: இப்பொழுதான் நீங்கள் புரிந்துகொண்டு ஏற்கும் நிலைக்கு வந்திருக்கிறீர்கள். நன்றி. 

ஆம், நன்கொடை வழங்கிய பிறகு என்று அமைத்தால்தான், ஆர்வக்கோளாறு மிக்க சிலரை கட்டுப்படுத்த முடியும். முட்டிமோதும் கூட்டத்தை ஒழுங்குபடுத்த முடியும். சும்மா தானே கிடைக்கிறது, சும்மாதானே தருகிறார், நாம் கேட்டால் என்ன? என்று, தானாக சிந்தித்து அறிந்துகொள்ளக்கூடிய விசயத்திற்குக்கூட என்னுடைய நேரத்தை வீணடிப்பார்கள். தீடீரெனெ எல்லாமே எனக்கு சொல் என்று மல்லுக்கு நிற்பார்கள். சொன்னாலும், மறுத்து மறுத்து மறுபடி அடுத்தடுத்த கேள்விக்குச் செல்வார்கள். முழுநாள் எடுத்துக்கொண்டு, நன்றாக விளக்கமளித்தாலும் கூட, கொஞ்சமும் புரிந்து கொள்ள மறுப்பார்கள். பிறகு என்னையே குறை சொல்லுவார்கள். ஏதோ நான் அவர்களிடம் பாடம் படிப்பதுபோல நிலைமை மாறிவிடும். 

மேலும் தினமும் வந்து நிற்பார்கள்,  என் சுதந்திரத்தை அது கெடுக்கும். நீதானே சேவை செய்கிறேன் என்றாய்? இதோ இதற்கு விளக்கம் சொல் என்று, கொஞ்சமும் தொடர்பில்லாத ஒரு கேள்வியை என்னிடம் கேட்பார்கள். பிறகு சொல்லுகிறேன் என்று தவிர்த்தாலும், என்னை குறை சொல்லுவார்கள். இதற்கு நீங்கள் சொன்னபதில் சரியில்லை. உண்மையிலேயே இது இப்படி இருக்கிறது என்று, ஏற்கனவே ஒரு பதிலை வைத்துக்கொண்டு, அதுபோல நான் சொல்லுகிறேனா என்று என்னையே பரிசோதனை செய்வார்கள்.

உங்களுக்கே இந்த புரிதல் இல்லை, இதுலே நீங்க எனக்கு வழி சொல்றீங்களோ? என்று என்னையே கிண்டலடித்துவிட்டு கிளம்புவார்கள். அதை ஊர்முழுக்க பேசுவதுப்போல, சமூக வலைத்தளங்களில் எழுதி போட்டுவிட்டு, லைக்குகளை அள்ளுவார்கள். உண்மையாக இப்படியான ஆர்வக்கோளறு ஆசாமிகளை, அடிப்படை பயிற்சியில் கூட முழுமைபெறாத அன்பர்களை, ஏதோ நானும் வேதாத்திரிய அன்பர் என்று சொல்லிக்கொள்பவர்களை இதன் மூலமாக தவிர்க்கலாமே! ஆனாலும் அவர்கள் வருவார்கள் அதை நான்மட்டும் தடுக்கவும் முடியாதுதான்!

தன்னையறிதலில் யாருக்கு உண்மையிலேயே ஆர்வமுள்ளதோ அவர்கள் வரட்டும். இறையுணர்வு பெறுவதில் யாருக்கு அக்கறை உள்ளதோ அவர்கள் வரட்டும். வேதாத்திரிய விளக்கத்தில் யாருக்கு உண்மையான விளக்கம் தேவைப்படுகிறதோ அவர்கள் வரட்டும். யாருடைய மனதில், இவரிடம் கேட்டால் சில உண்மைகள் புரியும் என்று நம்புகிறார்களோ அவர்கள் வரட்டும். அவர்களுக்கு நான் உதவவே காத்திருக்கிறேன். என்னுடைய நோக்கமும் அதுவே!

இப்பொழுது நாம் போற்றி வணங்கிக் கொண்டிருக்கும் நம் குருமகான் வேதாத்திரி மகரிஷியும், தன் ஆரம்ப காலத்தில் இப்படியான, கசப்பான அனுபவங்களை பெற்றார். ஆனால் அது நிலைக்கவில்லை. பொதுவாகவே உலகில் மக்களை உயர்த்திட விரும்பும் ஓவ்வொருவருக்கும் ஏற்படும் அனுபவம் இது. நான் அந்தளவுக்கெல்லாம் இல்லை என்பது எனக்கும் தெரியும். ஆனால், வேதாத்திரிய அன்பர்களின் திண்டாட்டம் எனக்கு உறுத்துகிறது! அதனால்தான் இந்தசேவையை நான் தர விரும்பினேன்.

வேதாத்திரிய பாடங்கள் மிக அருமையாக எல்லோருக்கும் கிடைத்துவிடுகின்றன. சான்றிதழும், பட்டயமும் இன்னும் பலப்பலவும் கிடைத்துவிடுகிறது. ஆனால் அதற்குப்பிறகு அவர்கள் கற்ற வேதாத்திரியம் அவ்வளவுதான். பெரும்பாலோர், ஆசிரியராக, பேராசியராக இன்னும் வருகின்ற ஆரம்ப சாதகருக்கு சொல்லித்தர ஆர்வமாகிவிடுகிறார்கள். ஆனால், ஏற்கனவே கற்றுக்கொண்ட, வேதாத்திரியர்களுக்கு, வேதாத்திரியத்தில் முன்னேற துடிப்பவர்களுக்கு வழி என்ன? இந்தக் கேள்விதான் என் முன் நின்றது. அதுவே என்னை இந்த நிலைக்கு கொண்டுவந்தது எனலாம். இதற்கு மேலும் என்ன சொல்ல வேண்டும்?!

இன்னமும் உலகியல் ரீதியாக, விளக்கமாக சொல்லுவதென்றால், நீங்கள் ஏதேனும் ஒரு வேலைக்கு செல்லுவதாக இருந்தால், உடனே உங்களை தேர்ந்தெடுத்து விட மாட்டார்கள். உங்களை சோதிப்பார்கள். சரியான நபரா? தகுதி உள்ளவரா? சொன்னால் கேட்பாரா? கருத்தை ஏற்றுக்கொள்வாரா? வாக்குவாதம் செய்யக்கூடியவரா? உண்மையிலேயே இந்த வேலையில் ஆர்வம் உள்ளவரா? எவ்வளவு காலம் நீடிப்பார்? அக்கறை உள்ளவரா? வழக்க பழக்கங்கள் எப்படி இருக்கிறது? மற்றவர்களோடு எப்படி பழகுவார்? மரியாதை அறிந்தவரா? அசட்டை செய்பவரா? முட்டாள்தனங்களை கொண்டவரா? தன்னை நம்புபவரா? அடுத்தவர்களை மதிப்பவரா? அவர்களுடைய கருத்தை ஏற்பவரா? முடிவுக்காக சிந்திப்பாரா? ஆலோசனைகளை கேட்டு ஏற்பவரா? தன்முடிவில் நிற்பவரா? இன்னும் பலப்பல. இந்த கேள்விக்கெல்லாம் விடை அறிந்த பிறகுதான், உங்களை அந்த நிறுவனத்தில் அமர்த்திக் கொள்வார்கள். இதெல்லாம் ஒரு வடிகட்டல்தான். அப்படியாகவே ஒரு வடிகட்டலை நான் இங்கே அமைக்கிறேன். இதிலும் கூட சிலர் வருவார்கள்தான். அவர்களின் நோக்கமறிந்து, விளக்கமளிக்கவும் என்னை தயார் செய்துள்ளேன் என்பதே உண்மை. இப்பொது உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.

இந்த நன்கொடை என்னை ஊக்கப்படுத்தும், இன்னும்பல வேதாத்திரிய ஆய்வுகளை செய்யவும், அதை உங்களுக்கே பகிரவும் துணையாக நிற்கும்!

-

வாழ்க வையகம், வாழ்க வளமுடன்!

Link for 4th part: Sereveyo Part4

Sereveyo Center for Self-realization by Vethathiriya Yoga 02



நான் யார்? என்ற தன்னையறியும் சேவை வழங்க தயாராகிறேன் 02

இனி கேள்வி பதில்!
-

கேள்வி: இதெல்லாம் எங்களுக்கு அவசியமில்லை!

என் பதில்: சரி எனக்கும் உங்களுக்கு சொல்லித்தர வேண்டுமென்ற கட்டாயமில்லையே!

-

கேள்வி: இப்படியெல்லாம் வேதாத்திரியத்தை வித்து காசு பாக்கனுமா?

என் பதில்: என் அனுபவ அறிவை பகிர்கிறேன்.  நீங்கள் என்னிடம் பெற்றுக்கொள்ளும் வகையில் மதிப்பளிப்பதற்காகவே சிறிய அளவிலான நன்கொடை பெறுகிறேன். அந்தப்பணம் இணைய பயன்பாட்டுக்கும், மின்சாரத்திற்கும், வேதாத்திரிய ஆராய்ச்சியை உங்களுக்கே திருப்பி பகிரவும் உதவுமல்லவா?. சரி உங்களுக்கு எங்கே சும்மா கிடைக்கிறதோ அங்கே உயர்வுபெற வாழ்த்துகிறேன்.

-

கேள்வி: இதெல்லாம் ஒரு இறை அனுபவமா?

என் பதில்: இல்லையா? அப்படியானால் என்னை விட்டுவிடுங்கள்

-

கேள்வி: எதோ புலம்பல் போல இருக்கிறது. யோகத்திற்குரிய ஒன்றுமே இல்லை. வேதாத்திரியத்தில் எவ்வளவு உண்மைகள் இருக்கிறது தெரியுமா?

என் பதில்: இருக்கிறது என்றால் அதையே நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். எனக்கு வேண்டாமே!

-

கேள்வி: நீங்கள் நன்றாக, துரியாதீத தவமும், அகத்தாய்வும் செய்து பயன்பெற வேண்டுகிறேன். வேதாத்திரியத்தின் உண்மை அறிய வாழ்த்துக்கள்.

என் பதில்: நல்லது, என் மீதான உங்கள் அக்கறைக்கு நன்றி!

-

கேள்வி: உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? வேதாத்திரியத்தை நீங்கள் பிறருக்கு தருவதற்கு?

என் பதில்: என் 34 (2023ல்) ஆண்டுகால வேதாத்திரிய அனுபவம் இருக்கிறது. நீங்கள் என்னை வாதத்திற்கு அழைக்க விரும்புகிறீர்களோ? வேதாத்திரி மகரிஷியிடமே சிலர் அவரை வாதத்திற்கு அழைத்தப்போது, அதில் அவர் சிக்கியதில்லை. எனக்கு தகுதி இல்லை என்று நீங்கள் நினைத்தால், என்னை விட்டுவிடுங்கள். நானும் வாதத்திற்கு தயாரில்லை. என்னிடம் யாரெனும் வந்தால் கூட நீங்கள் தடுத்துவிடலாம், சரியா? உங்கள் விருப்பம் போல செய்யுங்கள். 

-

கேள்வி: ஊருல இப்படித்தான் நிறைய பேரு கிளம்பிட்டாங்க!

என் பதில்: ஆமாம், வேதாத்திரியத்தை பிறருக்கு சொல்லித்தருவதை கடமையாகவே சிலர் வைத்திருக்கிறார்கள். நானெல்லாம் சும்மா!

-

கேள்வி: இதை நம்பி உங்க கிட்ட விளக்கம் பெற்றால் விளங்கின மாதிரிதான்!

என் பதில்: உங்களுக்குத் தனியாக தேடிவந்து சொல்லிதர வேண்டுமென்று எனக்கொன்றும் அக்கறை இல்லை. என்னை தேடி வருபவர்களுக்கு மட்டும் தரவிருக்கிறேன். என்னிடம் வருவது யார் என்று அருட்பேராற்றல் பார்த்துக்கொள்ளும்! நீங்கள் கவலைப்பட ஒன்றுமில்லை!

-

கேள்வி: ஹூம் நல்லா ஏமாத்த ஆரம்பிச்சுட்டாங்கய்யா!

என் பதில்: உங்கள் அனுபவத்தில் அப்படியான நபர்களிடம் சிக்கி சீரழிந்திருக்கிறீர்கள் என்று தெரிகிறது. அதற்கு நான் என்ன செய்யமுடியும்? என்னிடம் யாரும் ஏமாற மாட்டார்கள். ஒருவேளை ஏமாற்றப்பட்டால் உங்களிடம் வந்துதான் முறையிடுவார்கள்!

-

கேள்வி: இப்படி பணம் செலுத்தி உங்க கிட்ட தெரிஞ்சுக்கனும்னு அவசியமில்லை!

என் பதில்: நான் ஓவியன், அதை தொழிலாக கொண்டவன். என்னுடை 60 நிமிடங்களின் மதிப்பு ரூபாய் 2000 (INR) ஆகும்.  ஆனால், இங்கே வேதாத்திரியத்தை தருவதை என் விருப்பமாக மட்டுமே கொண்டுள்ளேன்.  சும்மா கொடுத்தால், அதை உடனே தூரப்போட்டு விடுவீர்கள், உங்களுக்கு ஒரு அக்கறையும் எழாது. இது சும்மா வந்ததுதானே என்ற எண்ணம் தான் உங்களுக்கு இருக்கும். எனவே உங்களுக்கு அவசிமில்லை என்றால், எதற்கு என்னிடம் வந்து இப்படி சொல்லுகிறீர்கள்?

-

கேள்வி: இப்படியெல்லாம் பணத்திற்கு வேதாத்திரியத்தை பரப்பச் சொல்லி வேதாத்திரி மகரிஷி சொன்னாரோ?

என் பதில்: மனிதனுக்கு ஐந்து கடமைகள் இருப்பதாக, வேதாத்திரி மகரிஷி சொல்லியுள்ளார். அதில் உழைப்பதும் பொருளீட்டுவதும், சும்மா இருந்து யாருக்கும் பாரமில்லாமல் வாழவேண்டுமென்பதும் உண்டு. நான் என் வேதாத்திரிய அனுபவத்தை, நான் கற்ற தொழில்நுட்ப அறிவால், உழைத்து உங்களுக்கு தருகிறேன். மேலும் வேதாத்திரி மகரிஷி அவர்களை வாழ்நாள் முழுதும் பார்த்துக்கொள்ள பல்லாயிரம் அன்பர்கள் இருந்தனர். எனக்கு அப்படி யாருமே இல்லையே? நீங்கள் என்னை, என் வாழ்க்கையை பார்த்துக் கொள்கிறீர்களா? நான் சும்மா தருகிறேன். சம்மதமா?!

-

கேள்வி: உங்கள் வாழ்க்கையை நீங்கள் தானே பார்க்கனும், நாங்க எதுக்கு உங்களை தாங்கனும்?!

என் பதில்: சும்மா தந்தா என்ன என்ற கேள்விக்கு பதிலாகத்தான் சொன்னேனே தவிர, என்னை தாங்குங்கள் என்று வேண்டவில்லை. யாரையும் எதிர்பார்த்தும் வேதாத்திரியர் வாழ்வதில்லை. என் உழைப்பிற்கு சிறிய கூலியே இது!

-

கேள்வி: எங்க யோகசாதனை முன்னேற்றத்தை நாங்களே பார்த்துக் கொள்கிறோம்!

என் பதில்: அருமை, அதைத்தான் வேதாத்திரி மகரிஷி அவர்களும் விரும்பினார். உங்கள் முயற்சியில் வெற்றி பெற வாழ்த்தி மகிழ்கிறேன்.

-

கேள்வி: உங்களுக்கு பணம் கிடைத்துவிடும். இதுனால எங்களுக்கு என்ன லாபம்?

என் பதில்: லாபம் உத்திரவாதம் எல்லாம் தீட்சை பெற்றுக்கொள்ளும் பொழுது கேட்டீர்களா? இது அப்படியல்ல. உங்கள் வாழ்நாளுக்குள் உண்மை அறிய, நான் அறிந்த வேதாத்திரியத்தின் வழியாக, என்னுடைய பணி ஒரு தூண்டுகோல். வேறொன்றுமில்லை. பணத்தை மட்டுமே பார்க்கும் உங்கள் வேதாத்திரிய பயணம் தொடரட்டும்!

-

கேள்வி: எப்படியோ உங்க பொழைப்பும் கொஞ்ச நாள் நல்லா ஓடும். அனுபவிங்க!

என் பதில்: எனக்கு இது அவசியமே இல்லைதான். ஆனால் தெளிந்த அறிவை தருவது, தானாக எழும் ஆர்வம். வேதாத்திரி மகரிஷி, அறிந்த உண்மை உங்களை, விடாது இயக்கும் என்று சொல்லுகிறார். அதுபோலவே, இயற்கை என்னை செலுத்துகிறது. அவனும், அவளும் நான் தானே? அவர்களுக்கு இதை பகிர மாட்டாயா? அவர்கள் துன்பப்படுவதை வேடிக்கை பார்க்கிறாயா? என்று என்னை கேள்வி கேட்கிறது. நான் என்ன செய்யட்டும்? உண்மையிலேயே, உண்மை விளக்கத்தில் சிக்கித்தவிப்பவருக்கு மட்டுமே உதவ விரும்புகிறேன்.

-

கேள்வி: இந்த பணத்தை நாங்கள் ஆழியாறுக்கே அனுப்பி விடுகிறோமே? உங்களுக்கு ஏன் தரவேண்டும்?

என் பதில்: மிகச்சரி, நானும் என் அனுபவத்தை ஆழியாறுக்கே அனுப்பி விடுகிறேனே! எனக்கும் நிம்மதிதான்.

-

கேள்வி: நீங்க சொல்லிக்குடுக்காம போய்ட்டா எங்களுக்கு கிடைக்காம போய்டுமா? நல்ல கதைங்க!

என் பதில்: இறை அப்படியாரையும் கைவிட்டு விடுவதில்லைதான். எப்படியாவது உங்களுக்கு அந்த அனுபவத்தை தரும். வேதாத்திரி மகரிஷி எனக்கு காட்டிய பாதையை, உங்களுக்கு காட்டி, இந்த வழியில் சென்றால் உங்களுக்கு உதவும் என்கிறேன். அடபோய்யா, நானே போய்க்கிறேன் என்கிறீர்கள். சரி பயணியுங்கள், தன்னம்பிக்கையோடு!

-

கேள்வி: ஆஹா உடனே இது உங்க கர்மா, குருமான்னு ஆரம்பிச்சுருவீங்களே?

என் பதில்: உங்கள் கிண்டலுக்கு இங்கே இடமில்லை. அது எப்படிவேண்டுமானலும் இருக்கட்டும். உண்மை குறித்து உங்களுக்கே கவலை இல்லை என்கிறபோது எனக்கேன் கவலை.

-

கேள்வி: பாமர மக்களின்  தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி தத்துவத்திற்கு காசு கேட்பது தவறு என தெரியவில்லையா?

என் பதில்: என் உழைப்பை, அனுபவ அறிவை, பகிர்வுகளை சும்மா பெற உங்களுக்கு உறுத்தலாக இல்லையா?! அப்படி தருபவர்களை ஊக்கப்படுத்தவும் மாட்டீர்களா? என்னிடம் கேட்ட இதே கேள்வியை எல்லாபக்கமும் நீங்கள் கேட்க தயாரா?

-

கேள்வி: கடைசியா என்ன சொல்ல வர்றீங்க?

என் பதில்: யாருக்கு விருப்பமோ அவர்களுக்கு நான் உதவுவேன். அந்த உதவிக்கு ஒரு குரு சீடன் என்ற உறவை காப்பது போலத்தான் இந்த நன்கொடை. மற்றவர்களை நான் சிரமப்படுத்த விரும்பவில்லை. 

-

கேள்வி: ஒருவேளை யாருமே வரவில்லை என்றால் என்ன செய்வீர்கள்?

என் பதில்: எனக்கொன்றும் உடனடியாக யாரையும் தன்னையறிதலுக்கு உயர்த்த வேண்டும் என்ற நிலை இல்லை. அந்த இயற்கை அமைப்பை, நீங்களோ, நானோ வேகப்படுத்தவும் முடியாது. ஆனால், பிறவிக்கடன் தீர்க்காமல், தன்னை அறியாமல், எது இந்த இயற்கை என்பதை அறியாமல், இந்த உலகைவிட்டு போகும் நீங்கள்தான் கவலைப்படவேண்டும். தன்னிலையறிந்த ஒருவருக்கு ஒரு இழப்பும் இல்லை. உங்களுக்கு இறையாற்றல் இன்னொரு வாய்ப்பு உங்கள், மகன், மகள் வழியாக தரக்கூடும். எனவே உங்களுக்கும் கவலையில்லை!

-

கேள்வி: கடைசியா ஒரு கேள்வி. சும்மா கிடைக்குமா?

என் பதில்: இல்லை!

-

அன்பர்களே, இத்தனை கேள்விகளில் ஏதேனும் ஒன்றாவது உங்கள் கேள்வியாக இருக்கக்கூடும். இத்தனை பதில்கள் சொல்லியும், உங்களுக்கு மீண்டும் ஏதேனும் கேள்விகள் எழுமானால், அதை பின்னூட்டத்தில் கேட்கலாம். அதற்கும் பதில் தர தயாராக உள்ளேன். 

அடுத்தும் ஒரு கேள்வியும் பதிலும் பதிவு உண்டு, அதையும் படித்துப்பார்க்க உங்களை வரவேற்கிறேன்.

வாழ்க வளமுடன்.

Link for 3rd part: Sereveyo Part3

Sereveyo: Center for Self-realization by Vethathiriya Yoga 01



நான் யார்? என்ற தன்னையறியும் சேவை வழங்க தயாராகிறேன் 01

பிறப்பின் நோக்கம்?!

இந்த உலகில் நான் பிறக்கும் பொழுது எனக்கு என்ன நோக்கம் இருந்தது என்று எனக்குத்தெரியாது. வேதாத்திரி மகரிஷி அவர்கள், 

என்னையறிவே நான் உலகில் வந்தேன்,
வந்தபின் எனைமறந்தேன் எந்தன்வினை மறந்தேன்’ 

என்று சொன்னது போல எனக்கு விளக்கமெல்லாம் கிடைக்கவில்லை. எனினும், ஏதோ என் முன்னோர்களின் விருப்பமும் ஆசியும் என்னை இயக்கியது எனலாம். பள்ளிக்காலங்களிலேயே வீட்டில் இருந்த, என் தாத்தாவின் நூல்களான, பழைய யோக நூல்கள், ஜாதக நூல்கள், பகவத்கீதை விளக்கம் இப்படி கொஞ்சமாக் புரட்டிப்பார்திருக்கிறேன். அகத்தியர், திருமூலர், இன்னும் பல சித்தர்கள், பிறகு ராமகிருஷ்ண பரமஹம்சரும், சாரதாதேவி அம்மையாரும், விவேகாநந்தரும், காஞ்சி பெரியவரும் அப்போதே அறிமுகமாகிவிட்டார்கள். ரமண மகரிசியும் அவ்வாறே. உயர்நிலை பள்ளி படிக்கும்பொழுது ஓஷோ, சிவானந்தா, சின்மயானந்தா, பாபா, இன்னும் பலரும் கூடவே ஜக்கி வாசுதேவ் போன்ற சிலரும் பத்திரிக்கைகள் வாயிலாக அறிமுகமானார்கள். ஆனால் வேதாத்திரி மகரிஷி, எங்கள் பகுதியில் இருந்த நூலகம் வழியாக அறிமுகமானார்

தீட்சையும் பயணமும்

எனினும், உடனடியாக இவர்தான் பொருந்தமானவர் என்ற முடிவெல்லம் இல்லை. அவரின் சங்கற்பம் என்ற Autosuggestion என்னை கவர்ந்தது. என்றாலும் சொல்லிக்கொண்டே இருந்தால் எப்படி? என்ற கேள்வியும், நேரில் பார்த்தால் ஏதேனும் விளக்கம் கிடைக்குமா என்ற எண்ணமும் வந்தது. சென்னையில் இருக்கும் சங்கத்தில், எப்படி நான் போய் எப்படி இணைவது? என்வயதில் அங்கே ஏற்றுக்கொள்வார்களா? வீடும் விடாதே? என்ற குழப்பம் எழுந்தது. ஆனால், சில நாட்களுக்குள்ளாக என் பள்ளித்தோழன் வழியாக, இங்கேயே தவ மையம் இருக்கிறது என்று அறிந்து, இதை ஏன் முன்னமே என்னிடம் சொல்லவில்லை என்ற சிறிய கோபத்தோடு, என் பதினெட்டு வயதில் (ஆண்டு 1988), என் வீட்டில் பெற்றோர், உடன்பிறந்தோர், பிறரிடமோ கலந்து ஆலோசிக்காமல், கருத்து கேட்காமல், நானே சுயமாக முடிவெடுத்து, வேதாத்திரி மகரிஷியின் மனவளக்கலையில் என்னை இணைத்துக் கொண்டேன். ஆக்கினை தீட்சையும் பெற்றுக் கொண்டேன்.

தொடர்ந்த மனவளக்கலை பயணத்தில், தவம், உடற்பயிற்சி, காயகல்பம், அகத்தாய்வு முடித்து ஆண்டு 1991ல் ஆழியாரில், வேதாத்திரி மகரிஷி அவர்கள் நடத்திய முன்று நாள் ஆசிரியர்/ அருள்நிதி கலந்து கொண்டு பட்டயம் பெற்றேன். நான் ஓவியன் என்பதால், அங்கேயே மகரிஷி அவர்களை வரைந்து, நிகழ்வின் இறுதியில் அவரிடம் ஆசீ வாங்கும் பொழுது, ஓவியத்தைக் காட்டி பாராட்டு பெற்றேன். எனது மன்றத்தில் துரியம் வரை தீட்சை வழங்கும் ஆசிரியராக சேவையில் இருந்தேன் எனினும், தன்னிலை விளக்கத்தை, உண்மையை உணராமல் பிறருக்கு அதைச் சொல்லித்தர எனக்கு விருப்பம் எழவில்லை. அது ஒரு குறையாக இருந்துகொண்டே இருந்தது. 1993ம் ஆண்டில், மகரிஷி அவர்களை மறுபடி சந்திக்கும் வாய்ப்பு வந்தது. இந்த முறை, நீர்வண்ண ஓவியம் வரைந்து, அவரிடமே காட்டி, பாராட்டையும் பெற்று, அவருடைய கையெழுத்தையும் அதில் பெற்றுக் கொண்டேன். இந்த விபரங்களை நானே பேசி குரல் பதிவாக, வேதாத்திரிய சானலில் தந்துள்ளேன்.

உண்மை விளக்கம்!

அதற்குப்பிறகு மன்றத்தில் இணைந்து சேவை தருவதில் எனக்கு பின்னடைவு ஏற்பட்டது. அடுத்தடுத்த நிலைகளான, மன்ற பொறுப்பாசிரியர், பேராசியர் என்ற நிலையில் எனக்கு ஆர்வமும் இல்லை. எதற்கு வந்தேனோ, அதை பெற்றுக்கொண்டேன். போதுமே? இனி நாம் தேடிக்கண்டடைய வேண்டியதுதான் என்ற முடிவில், மன்றத்திற்கு போகவில்லையே தவிர, என்னுடைய ஆர்வமும், முயற்சியும் விட்டுவிடவில்லை. பெரும்பாலும் துரியத்தில் நிலைத்திருப்பது தானாகவே நிகழும் அளவிற்கு, தவத்தில் நான் ஆர்வமானேன். 2001 ம் ஆண்டு எனக்கு திருமணம் நிகழ்ந்தது. அதன்பிறகே, திருச்சிராப்பள்ளியில் வேலை நிமித்தமாக குடிபுகுந்தேன். இங்கும் கூட நான் எந்த மன்றத்திலும் என்னை இணைத்துக் கொள்ளவில்லை. ஆனால் முழுதாக என்னை வேதாத்திரியத்தில் ஈடுபடும்படிச் செய்ய எனக்கு ஒர் விபத்து நடந்தது.

2016ல் எனது இருசக்கர வாகனத்தின் பயணிக்கையில், ஒரு டிப்பர் லாரியில் இடித்து கீழே விழுந்து மூர்ச்சையானேன். வலதுகை மேல் எலும்பு உடைந்து, கட்டுபோட்டு 45 நாள் வீட்டில் இருந்திட, எனக்கு வேதாத்திரி மகரிஷியே துணை என்றாகி விட்டது. அடிக்கடி அவர் வழங்கிய தத்துவ விளக்கத்தை கேட்பதும், ஞானமும் வாழ்வும் நூல் படிப்பதும், ஞானக்களஞ்சிய கவிகள் படிப்பதும் ஆராய்வதும் என் நேரத்தை எடுத்துக் கொண்டன. உடலும் நானும் நல்ல நிலைக்கு வந்தபிறகும் அதை இன்னும் அதிகமாக தொடர்ந்தேன். ஆராய்ந்தேன். 2017ம் ஆண்டு இறுதியில் வெட்டவெளி தத்துவம் புரிந்தது. மேலும் தொடர, 2018ல் இறையுணர்வு பெற்றேன். நிலைப்பேற்று நிலையிலிருந்து நிறைப்பேறு நிலை அடைந்தேன் எனலாம். நான் அடைந்தேன் என்பதை விடவும், அது என்னை ஏற்றுக்கொண்டது என்பதே சரியாகும்.

கிடைத்த மாற்றம்!

அந்த விளக்கம் நிலை தந்த ஊக்கத்தில், கவிதைகள் எனக்குள் எழுந்தன. எழுதிய கவிகள், வேதாத்திரி மகரிஷியின் கவிதைப்போலவே அமைந்ததைக் கண்டேன். இதை படித்த என் நண்பர்களும், பிறரும் கூட உறுதி செய்தார்கள். எனக்கு என்மேல் நம்பிக்கை வர, வேதாத்திரிய சானல் என்ற, YouTube காணொளி தளத்தை ஆரம்பித்து, பதிவுகள் செய்யலானேன். என் பள்ளித்தோழர், சக வேதாத்திரி பயணியும் என்னோடு இணைந்து கொண்டார். இன்றுவரை பதிவுகளை தொடர்கிறோம். மேலும் தினமும் வேதாத்திரி கவிதைகள் எழுதி அதை 7 தலைப்பிலான நூலாகவும் வெளியிட்டுவிட்டேன். இன்னமும் எழுதிக்கொண்டிருக்கிறேன். அவைகளும் நூலாக வெளி வரும்.

சேவையில்!

தினமும் YouTubeல் Shorts வழியாகவும் வேதாத்திரிய கருத்துக்களை தந்துகொண்டு, நிறைய அன்பர்களை, வேதாத்திரிய சானல் தொடர்பாளர்களாக பெற்றிருக்கிறேன். பெற்றுக்கொண்டும் வருகிறேன். பெரும்பாலும் வேதாத்திரி மகரிஷி சொன்னதை, வார்த்தை மாறாமல் அப்படியே சொல்லாமல், எனக்கு என்ன புரிந்ததோ, நான் என்ன அனுபவத்தை பெற்றேனோ அதைத்தான் என்னுடைய பதிவாக தருகிறேன். இதனால் நான் வேதாத்திரியத்தில் தனிப்பட்டு தெரிவதாக சிலர் சொல்லியுள்ளார்கள். உண்மையும் அதுவே. மேலும் நான் என்னுடைய விருப்பத்தின் பெயரில்தான், வேதாத்திரியத்தை பிறருக்கு கொண்டு செல்வதில் ஆர்வமாக உள்ளேன். ஆம் தனிமனிதனாகவும், சில நண்பர்களின் துணையோடும். விரைவில் தனியான அமைப்பு ஒன்றை உருவாக்கி உறுப்பினர்களை இணைக்கும் திட்டமும் தயாராகிக் கொண்டிருக்கிறது.

விபத்தில் கிடைத்த முழுமை அனுபவம்!

இதற்கிடையில் முழுமையாக என்னை அறிந்துகொள்ளும் வாய்ப்பும், என்னில் இறை என்று வேதாத்திரி மகரிஷி எடுத்துக்காட்டிய நிகழ்வும், இன்னொரு விபத்து வழியாக, ஆம், 2023ம் ஆண்டு மார்ச் 4ம் தேதி, மீண்டும் இருசக்கர வாகன பயணத்தில், பச்சை விளக்கு எரிந்த சிக்னலில் இருந்து கிளம்பும்பொழுது, யாரோ ஒரு ஆட்டோ ஓட்டுனர் இடித்து என்னை தள்ளிவிட்டு விரைதோடி விட்டார் என்று அங்கே இருந்தவர்கள் சொன்னார்கள் என்று என் மைத்துனர் 2 நாள் கழித்து என்னிடம் சொன்னார்.

என்ன நடந்தது?. அந்த விபத்தில்,

மறுபடியும் நான் மூர்ச்சையானேன். அங்கிருந்தவர்கள், ஆம்புலன்ஸ் வரவழைத்து, என்னை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பிவிட்டார்கள். ஆனால் அங்கே காத்திருக்கும் பொறுமை தாளாது, CSI மிஷன் மருத்துவமனைக்கு என் வீட்டார் அழைத்துவந்து விட்டார்கள். இங்கே என்னுடைய இடது காலர் எலும்பு உடைந்து சேரவேண்டிய கட்டாயமாகிவிட்டது. சுவாரஸ்யமாக, விபத்துக்குப் பிறகு, மயக்கம் தெளிந்த பிறகு  மருத்துவமனையில், 15 மணி நேரம் நான் எப்போதும் போல இருந்திருக்கிறேன், என் வீட்டாரை கைபேசி வழியாக மருத்துவமனைக்கு வரவழைத்ததும் நானே. ஆனால், இன்றுவரை அந்த 15 மணி நேரம் என்ன நிகழ்ந்தது என்பதும், எப்படி அந்த விபத்து நடந்தது என்றும் என் ஞாபக அடுக்குகளில் பதிவாகவில்லை, யோசித்தாலும் கிடைக்கவில்லை. அதுகுறித்து எனக்கு கவலையில்லை, இது எனக்கு மிக நல்ல ஒரு அனுபவம், என் அறிவுக்குக் கிடைத்த பாடமும் கூட, யாருக்கு கிடைக்கும் இப்படியான ஒரு சந்தர்ப்பம்? அந்த பாடமும் என் விளக்கமும், பின்னாளில் தனி கட்டுரையாக தர விரும்புகிறேன்

இது, இந்த விபத்து மார்ச் 4ம் தேதி நிகழ்ந்தது அல்லவா, 8ம் தேதி மருத்துவமனையிலிருந்து வீட்டிக்கு அனுப்பிவிட்டார்கள். வீட்டில் அன்று நான் முடிவெடுத்தேன். வேதாத்திரியத்தை கொண்டுசெல்வதில் நேரடியான முறையும் வேண்டும் என்றும், அதற்கு இணையவழி வகுப்பும் தேவை என்றும் திட்டமிட்டேன். அதன்படியே நானே அதை வடிவமைத்து முழுமையும் செய்தேன்.

அந்த அறிவுப்பு இதுவே!

🔎 click the image and see it on big view



இந்த
1) இணைய வழி நேரடி கருத்தரங்கு, கேள்வி பதில் சேவையோடு,
2) வேதாத்திரிய சானலிலும், தன்னிலை விளக்கத்திற்கு உதவும் ஆய்வுகள் காணொளி சேவையும் உண்டு.

இந்த இரண்டு சேவைகளிலும் உங்களால் பெறப்படும் நன்கொடைகள், உங்களுக்கு பகிர்ந்தளிக்கும் வேதாத்திரிய ஆய்வுகளுக்கே பயன்படும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. நீண்ட நாட்களுக்கு உதவும் வகையில் தொடர்ச்சியான சேவை கிடைக்கும்! 

இதன்படி நான் தீட்சையும்,  மற்ற பயிற்சிகளும் வழங்குவதில்லை. ஆனால் கற்றுக்கொண்டு வந்தவர்களுக்கு, எப்படி தன்னை அறிவதில் உயரலாம்? எவ்வகையில் விழிப்புணர்வு பெறலாம்? இறையுணர்வை எப்படி உணரலாம்? பேரறறிவோடு எப்படி எப்போதும் கலந்திருக்கலாம்? என்ற விளக்கங்களை, சந்தேகங்களை தீர்க்கும் பதில்களை என் அனுபவ அறிவிலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.

வேதாத்திரி மகரிஷி சொன்னது போலவே, ‘உணர்ந்து விட்டீர்கள் என்றால் அது உங்களை சும்மா இருக்க விடாது’ என்பதை நான் உண்மை என்றே கருதுகிறேன்.

இதன் தொடர்ச்சியாக, சில கேள்வி பதில்கள் பகுதி உண்டு. அதையும் படிக்க உங்கள் வரவேற்கிறேன். நன்றி. 

வாழ்க வளமுடன்.

-

Link for 2nd part: Sereveyo Part 2

Service Guru Thakshina Fund Fees Donate


 சேவை, குரு காணிக்கை, நன்கொடை, பணம் சேகரிப்பு, கட்டணம்

அன்பர்களே,

வேதாத்திரிய சானல், வேறெந்த அமைப்பையும், அறக்கட்டளையையும், சங்கத்தையும் சார்ந்தது அல்ல. எங்களின் நேரத்தில் பெரும் பகுதியை செலவு செய்து ஓவ்வொரு பதிவுகளாக, “சொந்தமாக” தந்து கொண்டிருக்கிறோம். வெறுமனே எல்லோரையும் போல, குரு புகழ் பாடிக்கொண்டிருபவர்களும் நாங்கள் அல்ல. நம் வேதாத்திரி மகரிசியே அதை விரும்பியதும் இல்லை. தானாகவே தனக்கு ஒரு மதிப்பும் அளித்துக் கொள்ளாதவர். மற்றவர் தருவதையும் விரும்பாதவர். தன்னை குரு என்று கூட சொல்லாமல், பேராற்றலே எல்லோருக்கும் குரு என்ற சொல்லியவர்.

நம் குருமகான் வேதாத்திரி மகரிசி, உணர்ந்து ஓதியதை, நாங்கள் ஓதி உணர்ந்து 34 ஆண்டுகள் வேதாத்திரிய பயணத்தில், நாங்களும் உணர்ந்து ஓதுபவர்களானோம். அதைத்தான் 2018 முதல் வேதாத்திரிய சானல் வழியாக தந்து கொண்டிருக்கிறேன். அதில் என் நண்பரும் இணைந்து கொண்டார். 

குரு மகான் வேதாத்திரி புகழ்பாடுவதும், அவர் பதிவுகளை தருவதும் சரி, ஆனால் நீ என்ன கற்று உணர்ந்தாய்? என்பது எல்லோருக்கும் எழும் பொதுவான கேள்வியே. அந்த கேள்விக்கான பதில்தான் எங்களது பதிவுகள். 

ஒருவர், தன் குருவின் புகழ் பாடினால், அவர் தன்னளவில் வளர்ச்சி இல்லாமல், குருவோடு நின்றுவிட்டார் என்றுதான் அர்த்தம். அவர் சரணாகதியே ஆனாலும் கூட, அவருக்கென்று தனி கருத்து ஏதுமில்லை. எல்லாமே குரு, குருதான் எல்லாமே. இதில் தவறில்லை. ஆனால் இந்த அன்பர், தன் கருத்தாக எதையுமே சொல்ல முடியாது. சொன்னாலும் மாட்டிக்கொள்வார். குரு மகான் வேதாத்திரி இப்படிப்பட்ட அன்பர்களை ஏற்படுத்தியது இல்லை. என்னைப்போல நீயும் மாறுக என்றுதான் வாழ்த்தியிருக்கிறார்.

நாங்களும், குரு மகான் வேதாத்திரி மகரிசி அவர்களை சரணாகதி அடைந்தவர்கள் தான். ஆனால் அவரளவில் நிற்காமல், எங்கள் பயணத்தில் கிடைத்த அனுபவங்களை ஆராய்ந்து தெளிந்தோம். உண்மை அறிந்தோம். அதை வார்த்தையால் விளக்குவது கடினம். 

-

* இதுவரை எங்களை புரிந்துகொள்ளாத அன்பர்களுக்கு நாங்கள் வாய்ப்பு தருகிறோம். நீங்கள் விரும்பினால் எங்களை, உங்கள் அறிவாட்சித்தரத்தால் அளந்து பார்க்கலாம். நாங்கள் தயார்.

-

குரு மகான் வேதாத்திரி மகரிசியிடமே, உங்களுடைய சிஷ்யர்கள் உங்களை மாதிரி இல்லை, அவர்களை எப்படி தரத்தில், உண்மை உணர்ந்தவர்களாக ஏற்றுக்கொள்வது? அப்படி ஒருவரை காட்டுங்கள், நான் காலில் விழுந்து நமஸ்கரிக்கிறேன் என்றார். அதற்கு மகரிசி அவர்கள் “உங்கள் அறிவாட்சித் தரத்தின்படிதான் அவர்களை பார்க்கிறீர்கள். எந்த அளவைக்கொண்டு அப்படி சொல்லமுடியும்? அதோடு உங்கள் வணக்கத்தை எதிர்பார்த்தும் அவர்கள் இல்லை, உங்களை உயர்த்திக்கொள்ள என்ன வழியோ அதைப்பாருங்கள், குறைகாண்பது வேண்டாம்” என்று சொல்லியுள்ளார்.

அதுபோலவே வேதாத்திரிய சானலில், 07/10/2022 அன்று நான் பதிவிட்ட ஒரு பதிவிற்கு அப்படியான வாதம் வந்துவிட்டது. 

-

அங்கே பதிவிட்டது இதுதான்!

-

அன்பர்களே, ஜூம்  (zoom) இணையம் வழியாக, கேள்வி & பதில், சந்தேகம் & விளக்கம், தனித்தனி நபருக்கும் கிடைக்கும். யோகம், தவம், பொதுவாழ்க்கை, மனக்குழப்பம், இறை விளக்கம் ஆகிய, இதன் தொடர்பான உண்மைகள் பெறலாம்.

1) குரு காணிக்கையாக ஒருநாளைக்கு ரூபாய் 300 GPay வழியாக செலுத்தவேண்டும்.

2) 90 நிமிடங்கள் (இரண்டு பிரிவுகளாக) ஒருநாள் மட்டும் விளக்கம் கிடைக்கும்.

3) எந்த நேரம் உங்களுக்கு தேவை என்ற விபரம் தெரிவிக்கலாம்

3) பணம் செலுத்திய உடன், ஜூம் இணைப்பு வழங்கப்படும்

பணம் அனுப்ப GPay ID  xxxxxxxxxxxxxx

-

இதற்கு ஒருவர் பின்னூட்டமிட்டார்.

பின்னூட்டம் X: இந்தத் தொகை SKY டிரஸ்டுக்கு செல்லுமா?

என்னுடைய பின்னூட்டம்: இந்த சேவை வழங்குவது WCSC, SKY Trust இல்லை


இன்னொருவர் பின்னூட்டமிட்டார்.

பின்னூட்டம் Y: குரு காணிக்கை என்றால் ஸ்கை ஆழியாருக்குத்தான் வழங்க முடியும். வேறு யாரும் நன்கொடை கேட்பதை ஏற்கமாட்டோம்

என்னுடைய பின்னூட்டம்: சரி அப்படியானல் வருந்துகிறேன். பணம் செலுத்தாதவர்களுக்கு சேவை வழங்க முடியாது. வாழ்க வளமுடன்.

சிறிது நேரத்தில் இதை நான் அழித்துவிட்டேன், முதல் கோணல் முற்றும் கோணலாக மாறிவிடும் என்பதால்!

-

நான் மறுபடியும் ஒரு பதிவிட்டேன்.

அன்பர்களே, ஜூம்  (zoom) இணையம் வழியாக, கேள்வி & பதில், சந்தேகம் & விளக்கம், தனித்தனி நபருக்கும் கிடைக்கும். யோகம், தவம், பொதுவாழ்க்கை, மனக்குழப்பம், இறை விளக்கம் ஆகிய, இதன் தொடர்பான உண்மைகள் பெறலாம் என்று பதிவிட்டிருந்தோம். அதற்காக வருந்துகிறோம்,

இவை எங்கே கிடைக்குமோ, அங்கேயே நீங்கள் பெற்றுக் கொள்ளவும். 

வாழ்க வளமுடன்!

-

இதற்கு என்னமாதிரியான வாதங்கள் நிகழ்ந்தது என்பதை நான் இங்கேயும் தருகிறேன்.

பின்னூட்டம் A: Super இப்போது தான் நீங்கள் சரியாக பதிவிட்டு இருக்கிறீர்கள். வாழ்க வளமுடன் வேதாத்திரியம் வியாபாரமாக்கப் படுகிறதே என்று வருத்தமாக இருந்தது

எனது பின்னூட்டம்:  நன்றி, ஓவ்வொரு அன்பருக்கும் அவரவர் வினைப்பதிவு செயல்படுகிறது. மெய்யுணர்ந்த ஆசிரியரின் சேவையை ஏற்கும் பக்குவமில்லை. வாழ்க வளமுடன்!

பின்னூட்டம் A: எதிர்பார்ப்பு இன்றி செய்வதே சேவை அல்லவா?

எனது பின்னூட்டம்: அதுதான் வழக்கமாக கொடுப்பதாயிற்றே, அதை நாம் மறுப்பதற்கில்லை. ஆனால் பதில், “தனித்தனி நபருக்கும்  கிடைக்கும்” என்ற வார்த்தை பதிவிடப்படிருப்பதை கவனிக்க மறந்தீர்போலும். நல்லது. இதுவும் எனக்கு இறை கொடுத்த பாடமே என்பதை உணர்ந்து கொள்கிறேன். வாழ்க வளமுடன்.

பின்னூட்டம் B: வணக்கம்  தனித்தனியாக என்பதை  கவனித்தால்தான்  வேதாத்திரி மகரிஷியின்  அனுபவ விரிவை  புரிந்துகொண்டு  விளக்கம் அளிப்பீர்களா  அல்லது  தங்களது  நான் யார்  என்ற முழுமையின்  உச்சபட்சஅறிவின்  உணர்வின் தெளிவில்  உங்கள் விளக்கம் இருக்குமா?

எனது பின்னூட்டம்: அன்பரே, உங்களுக்காக தனியே பதில், கிழே தந்திருக்கிறேன்.

பின்னூட்டம் B: இவை எங்கே கிடைக்குமோ அங்கே சென்று  பெற்றுக் கொள்ளுங்கள்  என்று  பதிவில் உள்ளதை  கண்டு சேர்த்து கவனித்தால்தான்  உங்கள் விளக்கத்தை வேண்டி விரும்பினேன்   உங்கள் பதில்   வாழ்க வளமுடன்

பின்னூட்டம் A: ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். இனிப்பை சுவைக்க எறும்புக்கு, விளம்பரம் தேவை இல்லை. இனிப்பு இருந்தால் எறும்பு தானாக வரும் .மேலும் ...மேலும் சுயநலம் கருதாமல் மக்களின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு பிரதிபலன் பாராமல் உழைத்து இறைத்தொண்டாற்றிய  மகான்கள் பலர் ..... புரிந்து கொண்டு செயல்படுங்கள்.. 

எனது பின்னூட்டம் :  உங்கள் அக்கறைக்கும் ஆலோசனைக்கும் நன்றி,  ஆனாலும் தாயானவள் வலிந்து உணவு ஊட்டவில்லையானல் குழந்தை வளர்ச்சி குன்றிப்போய்விடும். வாழ்க வளமுடன்.

பின்னூட்டம் C: சரியான முடிவு.நீங்கள் அப்படி ஆலோசனை தருவீர்கள் என்றால்.1 நாள் மட்டும் இலவசமாக தந்திருக்க வேண்டும்.

எனது பின்னூட்டம்:  நல்லது, இனிமேல் திருத்திக் கொள்ளலாம். வாழ்க வளமுடன்

-

பின்னூட்டம் B: என் குருநாதர் வேதாத்திரி மகரிஷியின்  அவர் முகம் காணா மாணவன் நான்  அவரின் உன்னத செயலுக்கு இழுக்காக இருக்கிறது உங்கள் பதிவு   வேதாத்திரியத்தை படித்து  ஆசிரியர் பணி  செய்பவர்கள்  இறைவனுக்கே  பணி செய்பவர்கள் ஆகிறார்கள்  இதை சற்று புரிந்து கொள்ளுங்கள்  பாடத்தை மனப்பாடம் செய்வதால் மட்டும்  புரியும் நிலை இருந்தாலும்  புரிந்ததாகாது  உணர்ந்தால் மட்டுமே   அது முழுமையாக. உணர்ந்துகொண்டதாக ஆகும்  அப்படியிருக்கையில்  பயிற்சியின்போது   அனுபவத்தில்  சில நிலைகளை  உணர்ந்தவர்  மேலும் தெளிவு பெற படித்த உங்களிடம்  விளக்கம் கேட்டால்  உங்கள் நிலைப்பாடு என்ன. படித்த அறிவில்  உங்கள் பதில் இருக்குமா  அல்லது  அனுபவ உண்மையை உணர்ந்த நிலையில் இருக்குமா ???

எனது பின்னூட்டம்: வணக்கம், இந்த மாதிரியான வாதத்திற்கும், கேள்விகளுக்குமே நான் காத்திருந்தேன் என்பது உண்மை. ஏனென்றால் அப்போதுதானே நானும் சில உண்மைகளை உங்களோடு பகிர்ந்து கொள்ள முடியும்.

நீங்கள் என்னுடைய அனுபவ உரைபதிவுகளை பார்க்க, கேட்கவில்லை என்றே கருதுகிறேன். நம் வேதாத்திரி மகரிசி சொன்னது போலவே, நான் உணர்ந்து ஓதுகிறேனா இல்லையா என்பதை, இங்கே பகிரும் பதிவுகளே சொல்லும். இந்த வேதாத்திரிய சானலில் இருக்கும் 533 பதிவுகளில், ஒரு சில பதிவுகள்தான் நேரடியாக, நம் வேதாத்திரி மகரிசி குரலில் இருக்கும். மற்ற எல்லா பதிவுகளும், குருமகான் சொன்னதை, நாங்கள் புரிந்து கொண்டவிதத்தில், அதன் சாரம் மாறாமல் நாங்கள் தந்தவையே. இதற்கு 13450 பகிர்வார்களே சாட்சி.

கிட்டதட்ட 300 கவிதைகள் எழுதியிருக்கிறேன். நம் மகரிசியின் மாக்கோலம் கவிதைகள் விளக்கம் ஒரு பாகம் எழுதியிருக்கிறேன், மூன்று உடல், மன நலன் குறித்த கட்டுரை எழுதியிருக்கிறேன். அவையெல்லாம் அமேசான் கிண்டில் நூலாக விற்பனைக்கு கிடைக்கிறது. தற்பொழுதும் எண்ணம் குறித்த கவிதைகள் எழுதிக்கொண்டிருக்கிறேன். இதை எல்லாம் எந்த மாதிரியானது என்பதை நீங்களே ஆராயுங்கள்.

என் வயது 53, என்னுடைய 18 வயதில் தீட்சை எடுத்துக்கொண்டேன். 34 ஆண்டுகால வேதாத்திரிய பயணத்தில் நான் பெற்ற உண்மைகள்தான் இங்கே பதிவுகளாக 2018 ஆண்டு முதல் மலர்ந்திருக்கிறது.

என் ஓவியங்களுக்காக இரண்டு முறை, நேரடியாக குருமகான் வேதாத்திரி மகரிசி அவர்களை சந்தித்ததும், அவரின் கையொப்பம் கேட்டு வாங்கியதும் என் அனுபவங்கள்.

உங்களிடம் இருக்கும் அளவுகோலில் என் அறிவையும் தெளிவையும் அளந்து கொள்ளலாம். தவறேதும் கருதமாட்டேன். வாழ்க வளமுடன்.

-

இதோடு இன்றைய வாதம் நின்றிருக்கிறது, இது தொடருமா என்பது நாளை தெரியும். பார்க்கலாம்.

வாழ்க வையகம், வாழ்க வளமுடன்!

Medicine that doesn't work?!


வேலை செய்யாத மருந்து?!



கேட்காமல் கொடுப்படும் எந்த மருந்தும் நன்கு பலன் அளிக்காது. இந்த வார்த்தையின் உண்மை என்னவென்றால், அந்த மருந்துக்கு மதிப்பிருக்காது, அதாவது நோயாளி, கேட்காமல் வைத்தியர் கொடுத்த மருந்து அல்லவா? அதனால் இது வேலை செய்வதில் சந்தேகம் கொண்டு, நோயாளி நம்பிக்கை இழப்பார். சில நேரம், வைத்தியரையே “ஆகாத” வைத்தியர் என்று நோயாளி நினைத்துவிடவும் வாய்ப்பு அதிகம்.

“ஐயோ என்னால், தாங்க முடியவில்லை. இந்த நோய் துன்பத்திலிருந்து என்னை விடுவியுங்கள்” என்றவாறு நோயாளி நொந்து, வைத்திரியரிடம் மருந்து கேட்டிருந்தால், வைத்தியர் எந்த மருந்தை கொடுத்திருந்தாலும் கூட, நோயாளியின் நம்பிக்கையில் குணமாகிவிட சாத்தியம் உண்டு. 

இந்த உதாரணங்களைப்போலவே, நவீன கால உலகில், YouTubeல், வேதாத்திரிய சானல் வழியாக யோக, தவ, இறை உண்மைகளை விளக்கும் காணொளிகளை நாங்கள் தருவதும், அதை அன்பர்கள் பார்ப்பதும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

பெரும்பாலான அன்பர்களின் ஆதரவு, வேதாத்திரிய சானலுக்கு உண்டு. அவர்களை வாழ்த்தி மகிழ்கிறோம். ஆனால் உண்மைகள் மிகுதியாக போய் சேரவில்லையே என்ற ஆதங்கம் எங்களுக்கு உண்டு.

அன்பர்களே, இந்தக்கதையை கேளுங்கள்.

ஒரு ஞானியைக் கண்டு, ஒருவன் ,

“எனக்கும் யோகத்தில் ஆர்வமாக இருக்கிறது. கற்றுக்கொடுங்கள்”

“அப்படியா நாளைக்காலை என் ஆசிரமத்திற்கு வா”

“இன்றைய நாளிலேயே என்னை ஏற்றுக்கொள்ள மாட்டீர்களா?” என்றான் ஆர்வத்தில்.

“நாளைதான் உனக்கு பரிட்சை, அதில் தேர்ந்தால் ஏற்றுக்கொள்கிறேன்”

மறுநாள் அதிகாலை ஆசிரமம் சென்றுவிட்டான். ஞானி அப்பொழுதான் ஆற்றில் குளிக்க தயாராக நின்று கொண்டிருந்தார்.

“என்னோடு வா”

இவனும், ஞானியோடு கூட நடந்து ஆற்றை வந்தடைந்தான். ஞானி அவனின் கை பிடித்து இழுத்துக்கொண்டே, ஆற்றுக்கு நடுவில் இடுப்பளவு நீரில் நின்றுகொண்டார். திடீரென, அவனின் கழுத்தை பிடித்து அழுத்தி, தலை முழுதும் நீருக்குள் இருக்குமாறு அழுத்தப்பிடித்து அமுக்கினார். பதறிப்போய் அவன் தன்னை விடுவித்துக்கொள்ள போராடினான். ஞானி தன் கைகளை விலக்கி அவனை மேலே எழச்செய்தார். அவனோ மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கிக்கொண்டிருந்தான்.

“இப்போது உனக்கு என்ன தேவையாக இருந்தது?” என்று ஞானி கேட்டார்.

“மூச்சுக்காற்று”

“அதுபோல உனக்கு எப்போது யோகம் தேவைப்படுகிறதோ அப்போது என்னிடம் வா” என்று சொல்லிவிட்டு, “என்னிடம் உன்னை ஒப்புவிக்க உன் மனம் எப்பொழுது தயாராகிறதோ அதுவரை காத்திரு” என்றார்.

சீடனாக வந்தவனுக்கு, அப்பொழுதான் ஒரு ஞானியிடம், யோகம் கற்பதற்கான தகுதி என்ன என்பதை உணர்ந்தான்.

நாளை இன்னொரு உதாரண கதையோடு தொடர்வோம் அன்பர்களே!

வாழ்க வளமுடன்!




Greet Your Children for their Greatness


உங்கள் குழந்தைகளின் மேன்மைக்காக, அவர்களை வாழ்த்துங்கள்!


 
உங்கள் அன்புக்குழந்தை தூங்கும்போது, அருகில் சென்று, மெலிதான குரலில், அன்பாக, திருத்தமாக சொல்லுங்கள். 


ஓவ்வொரு நாளும் திரும்பத்திரும்ப, தினமும் சொல்லுங்கள். அவளது ஆல்ஃபா மன நிலை அதனை ஏற்று, அக்குழந்தையின் ஆழ்மனம் தூண்டப்படும். ஆழ்மனம் தூண்டப்பட்டால் படிப்படியாக படிப்படியாக மாற்றங்கள் நிகழும். உடன்பாட்டு சூழல் தோன்றும். இதை சொல்லச்சொல்ல உங்கள் கண்ணோட்டமும் மாறும். அக்குழந்தையின் மீது உங்களுக்கு நம்பிக்கை உருவாகும். 


உங்கள் பேச்சும், தொனியுமே மாறும். சூழல் மாறும். உங்களின் உயர்ந்த எண்ண அலைகள் அக்குழந்தையை தழுவி அன்பு செய்யும். மனம் மாறும், மாற்றங்கள் நிகழும். வாழ்வு புத்துணர்ச்சியோடு மலரும். தொடர்ந்து வாழ்த்தி வாழ்த்தி மகிழுங்கள். மாற்றத்தை விரைவில் உணர்வீர்கள். வாழ்க வளமுடன். 



உங்கள் அன்பு மகளுக்கான வாழ்த்து!

---

என் மகளே, நீ வாழ்க. நீ நல்ல முயற்சி உடையவளாக இருக்கிறாய். உடல்நலம் மிக்கவளாக இருக்கிறாய். நல்ல சூழலைப் பெற்றவளாக இருக்கிறாய். நல்ல குணங்களை இயற்கையாகவே நீ பெற்றிருக்கிறாய்.


நன்கு உழைப்பவளாக நீ வளர்கிறாய், வாழ்வில் வெற்றி பெறுகிற எல்லா உடன்பாட்டு எண்ணங்களையும் நீ கொண்டிருக்கிறாய். நல்வாழ்வு பெறுவதற்கான எல்லா அம்சங்களும் உன் உள்ளும், புறமும் நன்கு நிரம்பியிருக்கிறது. உன்னிடத்தில் தெய்வீகம் நிரம்பியுள்ளது. நீ அருளாற்றல் பெற்றவளாக நல்லறிவுடனும், நலத்துடனும் வாழ்க வளமுடன்.

----


உங்கள் அன்பு மகனுக்கான வாழ்த்து!

---

என் மகனே, நீ வாழ்க. நீ நல்ல முயற்சி உடையவளாக இருக்கிறாய். உடல்நலம் மிக்கவனாக இருக்கிறாய். நல்ல சூழலைப் பெற்றவனாக இருக்கிறாய். நல்ல குணங்களை இயற்கையாகவே நீ பெற்றிருக்கிறாய்.


நன்கு உழைப்பவனாக நீ வளர்கிறாய், வாழ்வில் வெற்றி பெறுகிற எல்லா உடன்பாட்டு எண்ணங்களையும் நீ கொண்டிருக்கிறாய். நல்வாழ்வு பெறுவதற்கான எல்லா அம்சங்களும் உன் உள்ளும், புறமும் நன்கு நிரம்பியிருக்கிறது. உன்னிடத்தில் தெய்வீகம் நிரம்பியுள்ளது. நீ அருளாற்றல் பெற்றவனாக நல்லறிவுடனும், நலத்துடனும் வாழ்க வளமுடன்

---


இவ் வாழ்த்துகளை தினமுமே சொல்லலாம். கூடுமானவரை தொடர்ந்து ஒரு வாரம் (ஏழு நாட்கள்) சொல்லுங்கள். இப்படி வாழ்த்துவதை மாதத்திற்கு ஒருமுறை என்றும் வைத்துக்கொள்ளலாம். உங்கள் செல்லங்களின் வளர்ச்சியில் நல்ல முன்னேற்றத்தை தரும். நிச்சயமாக பலன் அளிக்கும் உண்மை இது. வாழ்க வளமுடன். 

----

காணொளி வாயிலாக அறியலாம்!

----

Photos thanks to: @Kevin Keith