CJ for You: shakti

shakti

Showing posts with label shakti. Show all posts
Showing posts with label shakti. Show all posts

Is it beneficial for us to multiply or biomagnetism gazing practice? Isn't it? How to retain it?


ஐயா, ஜீவாகாந்தம் பெருக்கப்பயிற்சி நமக்கு நன்மை தருகிறதா? இல்லையா? எப்படி அதை தக்கவைத்துக் கொள்வது?


ஜீவாகாந்தம் என்பது நம் உடலுக்குள்ளாக ஓடிக்கொண்டே இருக்கின்ற மின்சார சக்தி என்று உதாரணமாக கொள்ளலாம். இந்த சக்தி ஓட்டத்தின் வழியாகவே நம்முடைய அன்றாட செயல்பாடுகள், நினைவுகள், சிந்தனைகள், உணர்வு எல்லாமே நிகழ்கிறது. எண்ணங்களின் வழியாகவும், ஐம்புலன்களின் வழியாகவும் செலவாகிக் கொண்டும் இருக்கிறது. நம்முடைய உடலில் எப்போதும், போதுமான அளவில் இந்த ஜீவகாந்தம் இருக்க வேண்டியதும் அவசியம். இந்த இயற்கையும் அந்த ஜீவகாந்தத்தின் வரவையும், செலவும் கண்காணிக்கிறது என்பதும் உண்மை. ஒருவேளை ஏதேனும் வகையில், அதிகமான ஜீவகாந்த இழப்பை நாம் இழந்திட தயாரானால், இந்த இயற்கை, இனி உன்னால் முடியாது, பொறுமை என்று எச்சரிக்கிறது. தடுக்கிறது. இதை நீங்கள் அனுபவமாக உணரவும் முடியும்.

இதை ஏன் ஜீவகாந்தம் என்று அழைக்கிறார்கள்? காரணம் இருக்கிறது. மறை பொருளாக இருந்த இந்த ஆற்றலை, நம்முடைய சித்தர்கள் கண்டுணர்ந்து, காந்தம் என்றுதான் பெயரிட்டார்கள். இந்த காந்தத்தை, வேறெந்த வகையிலும் ஒப்பிட்டுப்பார்க்க முடியாது. உடலுக்குள்ளாக இருக்கும் இந்த ஆற்றல், ஜீவகாந்தம் என்றும், பிரபஞ்சத்தில் இருக்கும் இதேமாதிரியான ஆற்றல் வான் காந்தம் என்றும் அழைக்கப்படும்.

ஜீவகாந்த பெருக்கம் என்பது, நமக்குள் இருக்கும் ஆற்றலை பெருக்கிக் கொள்ளும் ஓர் வழிமுறை ஆகும். இருப்பு அதிமானால், நமக்கு குறைவில்லாத, நிறைவான நன்மை கிடைக்கும் அல்லவா? அதுதான் இந்த பயிற்சியில் உண்டாகிறது. ஆனால், இதை செலவிடாமல் பாதுகாக்கவும் வேண்டும்.

இதை இந்த காணொளி வழியாக அறிந்து கொள்வோம். இந்த காணொளியில், கருவுற்ற தாய்மார்களும், கர்ப்பிணி பெண்களுக்கும் இந்த ஜீவகாந்த பெருக்கப்பயிற்சி எப்படியான பலனை தருகிறது என்ற உதாரணத்தின் மூலம், உண்மையை நீங்கள் அறியலாம். 


வாழ்க வளமுடன்.

-

Why Vethathiriyam not mentioned Shivan, Shakti and all?


ஆன்மீகத்தில் சிவன் என்பது எப்போதும் உண்டு. இப்போதுள்ள யோகசாதனையிலும் சிவன், ஆதிசிவன், சக்தி உண்டு. இவை எல்லாமே வேதாத்திரியத்தில் ஏன் சொல்லப்படவில்லை?

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா! ஆன்மீகத்தில் சிவன் என்பது எப்போதும் உண்டு. இப்போதுள்ள யோகசாதனையிலும் சிவன், ஆதிசிவன், சக்தி உண்டு. இவை எல்லாமே வேதாத்திரியத்தில் ஏன் சொல்லப்படவில்லை?


பதில்: 

அன்பரே, மிக நீண்ட ஆராய்ச்சிக்குரிய கேள்வியை கேட்டுவிட்டீர்கள். இதை இங்கே எழுத்தில் விளக்கமாக சொல்லிவிட முடியாது. அதை நேரடியாக, உங்கள் முன்னால் சொன்னால்தான் சரியாக புரிந்துகொள்ளவும் முடியும். உங்களுக்கு இந்த கேள்விக்கான பதில் நிச்சயமாக கிடைக்கவேண்டும் என்றால், யாரேனும் உங்கள் ஆசிரியரிடம் கூட கேட்டு தெரிந்துகொள்ளலாம். எனினும் சில அடிப்படை உண்மைகளை, விளக்கங்களை இங்கே தருகிறேன். ஓரளவுக்கு உங்களுக்கான புரிதலை தரும் என்று நம்புகிறேன்.

ஒரு உண்மையை, மதிப்பான பொருளை, நிகழ்வை தெரிந்துகொண்ட நீங்கள், அதை பிற மக்களிடமும், சராசரி மனிதனிடமும், உங்களைவிட கல்வியில் ஆரம்பநிலையில் உள்ளவரிடம், கல்வி அறிவே இல்லாதவரிடம் சொல்லுவதென்றால் எப்படி சொல்லுவீர்கள்? ‘இது இப்படியானது’ என்று உயர்வாகத்தானே சொல்லுவீர்கள். அப்படி சொல்லவில்லை என்றால், அதன் தரம் தாழ்ந்துவிடும். மக்கள் அதை விட்டு விலகிச்சென்றுவிடுவார்கள். தேவையும், அவசியமும் இல்லை என்று போய்விடுவார்கள். உண்மைதானே?

அப்படியானால், நீங்கள் மெய்ப்பொருளை உணர்ந்தவராக இருந்தால்? அதை எப்படி சொல்லுவீர்கள்? இப்பொழுது ஒரு விளக்கம் உங்களுக்கு கிடைத்திருக்கும் அல்லவா? அதுபோலவே, மெய்ப்பொருள் உண்மையறிந்த ஞானிகள், மனிதனி பிறப்பின் கடமையே, அந்த மெய்ப்பொருளை உணர்வதுதான் என்பதை, மக்களுக்கு விளக்கம் தருவதற்காகவே, அந்த மெய்ப்பொருளை ‘சிவம்’ என்று சொன்னார்கள். உயிரினங்களை ‘சீவன்’ என்று சொன்னார்கள். சிவம் என்பது நிலையானது, உயர்வானது, மெய்யானது என்று பொருள் தரும் வார்த்தையாகும். ஆனால் பின்னாளில்தான் அது சிவனாக மாறிவிட்டது. சீவன் என்பதற்கு பொருத்தமாகக்கூட சிவன் வந்திருக்கலாம்.

மெய்ஞானிகள் சொன்ன, சிவம், சிவன், சக்தி, சீவன் என்பதற்கும், ஆன்மீகவாதிகள் சொல்லுகிற சிவம், சிவன், சக்தி, சீவன் என்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. முன்னது தெளிவானது. பின்னது திறை மறைக்கப்பட்டு ஜோடிக்கப்பட்டதாகும். நாமும் பழங்காலமாக மெய்ஞானிகள் சொன்னதை விட்டுவிட்டு, ஆன்மீகவாதிகள் சொன்னதை பெற்றுக்கொண்டு வந்துவிட்டோம். உண்மைதானே? சிவம் என்றாலும் சிவன் என்றாலும் ஒரு காட்சி அல்லவா வந்து நிற்கிறது. வார்த்தை சொல்லும் உண்மை இங்கே மாறிவிட்டதே? இதை குரு மகான் வேதாத்திரி மகரிஷி உணர்ந்துதான், வேதாத்திரியம் தனிப்பாதையில் நடைபோட வழி வகுத்தார். உண்மையை, உள்ளது உள்ளபடி உணர்ந்தால்தான், விளக்கமும், நிறைவும் கிடைக்கும் என்றுதான் தன் வேதாத்திரிய பயிற்சிகளையும் வடிவமைத்தார். இன்றும் அது தொடர்கிறது.

வாழ்க வளமுடன்.

-

If we worship at home pooja, the grace will be same as like a temple level?


வீட்டிலேயே பூஜை அறை அமைத்து வழிபடும் இடத்திலும்கூட, கோவில், ஆலயத்தில் இருக்கும் அதே சிறப்பான ஆற்றலும் சக்தியும் இருக்குமா? நமக்கு உதவுமா?

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி: 

வாழ்க வளமுடன் ஐயா, வீட்டிலேயே பூஜை அறை அமைத்து வழிபடும் இடத்திலும்கூட, கோவில், ஆலயத்தில் இருக்கும் அதே சிறப்பான ஆற்றலும் சக்தியும் இருக்குமா? நமக்கு உதவுமா?


பதில்:

பக்தியில் இயல்பாகவே ஆர்வம்கொண்டு, அதை கடைபிடித்து வரும் இந்திய நாட்டில், ஒவ்வோர் வீட்டிலும், பூஜை வழிபாடு உண்டு. அவரவர்கள் தங்கள் பொருளாதார வசதிகேற்ப, ஒரு பூஜை அறை, ஒரு தடுப்பு, ஒரு பெட்டகம், ஒரு அலமாரி அமைத்து அங்கே, இறை உருவம், படம், பொருட்கள் கொண்டு வழிபாடு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்கள். இப்போது கட்டும் நவீன வீடுகளிலும் கூட எளிமையாக பூஜை அறை உண்டு. அது இல்லையென்றால் வீடு முழுமை அடைவதில்லை என்ற ஒரு கருத்தும் இருப்பதை நாம் அறிந்திடமுடியும். அதை மற்றவர்கள் கிண்டல், கேலி செய்தாலும், தேவை என்ற மனப்பாங்கு இருப்பதை மறுக்கமுடியாது. இறைவழிபாட்டில் ஓர் உந்துதலாகவும், யோகத்திற்கு அடிப்படையாகவும் இருக்கின்ற பக்தியை எப்படி நாம் மறுத்திட முடியும்? வளர்ந்த பெரியவர்களுக்கு தேவையில்லாது இருக்கலாம். ஆனால், நாளைய தலைமுறையாக வளர்ந்து வரும் குழந்தைகளுக்கு ஒழுக்கமும், நற்பண்பும், தன்னை மீறிய சக்திக்கு வணக்கம் செலுத்தி, மதித்து, இயற்கை ஒழுங்கமைப்பை ஏற்று வாழ்ந்து, தன்னை யார்? என்று அறிந்து பிறப்பின் முழுமையை அடைவதற்கும் பக்தி தேவைதானே?

வீட்டிலேயே  பூஜை அறை அமைத்து வழிபடுகிறோம் என்றால், அங்கே நெய் விளக்கு தீபம் இருக்கும், மந்திரங்கள் சொல்லப்படும், மனதை உற்சாகப்படுத்தும்மலர்களின் அலங்காரம், அவற்றின் நறுமணம் இருக்கும். படைப்பாக வைக்கும் பழங்கள், பலகாரங்கள் ஆகியன இருக்கும். வேண்டுதல் ஏதுமில்லை என்றாலும், வழிபாடு முடித்துவிட்டால், ஒரு திருப்தியை ஒவ்வொருவராலும் உணரமுடியும் என்பது உண்மைதான். நிச்சயமாகவே வீட்டிலேயே பூஜை அறை அமைத்து வழிபடும் இடத்திலும்கூட,  சிறப்பான ஆற்றலும் சக்தியும் இருக்கும். ஆனால், கோவில், ஆலயத்தில் இருக்கும் அதே அளவில் என்று எதிர்பார்க்கமுடியாது. காரணம், கோவில், ஆலயம் என்பது ஆற்றல், சக்தியை ஏற்று அதை தக்கவைத்துக் கொள்ளும் வழிமுறையிலேயே அமைப்பதாகும். அந்த ஆற்றல் களம் அபரிதமாக இருக்கும். அது எப்படி என்றால், யாகம் வளர்ப்பதாலும், ஆறுகால பூஜைகள் செய்வதாலும், கும்பாபிஷேகம் நிகழ்த்துவதாலும், தீப ஆராதனை, அபிஷேகம் செய்வதாலும், ஏளாரமான மக்கள் வணங்குவதாலும், அந்த இடத்தை சுற்றுவருவதாலும், அந்த வழிபாடு தளத்தில் ஆற்றல் களம் திணிவுபெறும். அதுபோலவே அவரவர்களுக்கு தேவையான ஆற்றலையும், உந்துதலையும் தந்துகொண்டே இருக்கும்.

கோவில், ஆலய வழிபாடுகளில் புதைந்திருக்கின்ற, கருத்துருவான இறை உண்மை அவர்களுக்குள் உடனடியாகவும், அதை நினைக்கும்பொழுதும் கிடைத்துக்கொண்டே இருக்கும். அது அவர்களின் மலர்ச்சிக்கும், உயர்வுக்கும் உறுதுணையாக இருக்கும்.  வீட்டில் அந்த அளவிற்கு கிடைத்திடுதல் அபூர்வமாகும். எனினும் ஏதேனும் ஒருவகையில் துணைசெய்யும் என்பதில் ஐயமில்லை. எனினும், பருவம் வந்தோரும், வயதில் பெரியோர்களும் இந்த வழிபாடுகள் தாண்டி, இதில் உள்பூர்வமாக பொதிந்து இருக்கின்ற, இறை தத்துவத்தை அறிவதற்கு முயற்சிக்க வேண்டியது அவசியம். அந்த நிலையில் உயர்ந்திட, யோகத்தில் ஆர்வம் வரவேண்டும். அப்போதுதான் நம்முடைய பிறப்பின் நோக்கம், கடமை நிறைவேறிடும். பூஜை வழிபாடு மட்டுமே போதும் என்று நின்றுவிடுவது முழுமையில்லை என்பதை நினைவுகொள்க.

இந்த பூஜை, வழிபாடு, அதன் தொடர்பான விசயங்களை மறுப்பவர்களையும், கிண்டலும், கேலியும் செய்பவர்களை புறந்தள்ளுங்கள். அவர்களுக்கு புரியவில்லை என்றால் அப்படியே விட்டுவிடுங்கள். அப்படிப்பட்டவர்களுக்கு விளக்கம் சொல்லி உங்கள் நேரத்தை வீண் செய்யாதீர்கள். உங்களுக்கு விருப்பமானதை தொடர்வதில் எந்த தவறும் இல்லை. அதில் உண்மையோடும், உண்மையை நோக்கியும் பயணியுங்கள்.  

வாழ்க வளமுடன்

-

Why felt peace when worship at temple better then the meditation?


தியானம் செய்வதை விடவும், கோவிலுக்குச் சென்றால் ஒரு நிம்மதி கிடைப்பதை நன்றாகவே உணர்கிறேன். இதன் காரணம் என்ன? இது சரியானதா?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி: 

வாழ்க வளமுடன் ஐயா, தியானம் செய்வதை விடவும், கோவிலுக்குச் சென்றால் ஒரு நிம்மதி கிடைப்பதை நன்றாகவே உணர்கிறேன். இதன் காரணம் என்ன? இது சரியானதா?

பதில்:

தியானம் செய்வதை விட நிறைவான நிம்மதி என்பது, நீங்கள் இன்னமும் தியானத்தை சரியாக செய்யவில்லை என்பதைத்தான் காட்டுகிறது. தியானம் என்பதை நீங்கள் எப்படியாக புரிந்துகொண்டிருக்கிறீர்கள் என்பது தெரியவில்லை. தியானம் முழுமையான தீர்வாக அமைந்து, நல்ல நிறைவைத் தரும், மனதுக்கு தேவையான ஊக்கம் தந்து நிம்மதியாக இருக்கவும் துணையாக இருக்கும். தன்னையறிதலுக்கு மனமும் தயாராக இருக்க பழகியும்விடும். இதை இப்படியாகச் சொல்லுவதால் கோவிலுக்கு போகவேண்டிய அவசியமில்லை என்ற கருத்துக்கும் குறுக்காக நீங்கள் வந்துவிட வேண்டிய அவசியமில்லை.

இப்போது கோவிலுக்குச் சென்றால் ஏன் மனம் அமைதியாகிறது? உங்களுக்குத் தேவையான, உங்கள் மனதிற்கு தேவையான ஒரு ஆற்றல் அங்கே நிரம்பி இருக்கிறது. அந்த ஆற்றல் அங்கே, வழிபாட்டு இடங்களில் தினமும், வழிபாடுகளால் உருவாக்கம் செய்யப்பட்டு தேக்கி வைக்கப்படுகிறது. எப்படி மின்கலங்களில், நமக்குத் தேவையான மின்சாரத்தை தேக்கிவைத்து, மின்சாரம் இல்லாத நிலைகளில், நேரங்களில் பயன்பாடு செய்கிறோமோ அப்படியாக. கோவிலில், வழிபாட்டுத்தலங்களில் இந்த ஆற்றல் எப்போதும் வெளிவந்துகொண்டே இருக்கும். நமக்கும், நம்மைப்போன்ற எல்லா ஜீவங்களுக்குமே அந்த ஆற்றல் உதவி செய்யும் என்பது உண்மை.

இதைத்தான் குடமுழுக்கு என்று, பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை சீர் செய்கிறார்கள். ஊக்கப்படுத்துகிறார்கள். மக்களும் அன்றாடம் அவ்விடங்களுக்குச் சென்று வருவதால் பயனும் அடைகிறார்கள். ஆனால் யோகத்தில் தீட்சை எடுத்துக்கொண்டு பயணிக்கும் ஒரு அன்பருக்கு, கோவிலுக்குப் போய்தான் அந்த ஆற்றலை பெறவேண்டும் என்ற நிலை மாறிவிடுகிறது. தியானத்தில், மனதையே அதற்கு தகுந்தபடி மாற்றி அமைப்பதால், உங்களைச் சுற்றி இருக்கும் ஆற்றலின் வழியாகவே அந்த நிறைவையும், நிம்மதியையும் பெறுவதற்கு பழகிவிடுகிறது.

நீங்கள் இன்னமும் தியானத்தில் ஆழமாக செல்லவில்லை, பழகிக்கொள்ளவில்லை என்று தெரிகிறது. அதுவரை இப்படியான அனுபவம் உங்களுக்கு இருக்கும் என்று நம்பலாம். என்றாலும் தவறில்லை. தொடர்ந்து தியானம் செய்யுங்கள். அந்த ஆற்றல் உங்களுக்குள் தானாகவே நிரம்புவதை உணர்வீர்கள். நிறைவும் நிம்மதியும் இயல்பாக கிடைக்கும் என்பதை அறிவீர்கள். உடனே நீங்கள் கோவிலுக்கு செல்வதை நிறுத்திவிடலாம் என்று நான் சொல்லவே இல்லை. வழக்கம் போல சென்றுவாருங்கள். பயன்பெறுங்கள். இது உங்களுக்கு மட்டுமல்ல. எல்லா அன்பர்களுக்குமே சொல்லுகிறேன்.

வாழ்க வளமுடன்
-

Shall we get Ashtamasiddhi by joining yoga? Is it true and how?


யோகத்தில் இணைவதால் அஷ்டமா சித்தி, சித்துக்கள் இப்படி எத்தனையோ அதிசயங்கள் நிகழும் என்கிறார்கள் உண்மைதானா?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, யோகத்தில் இணைவதால் அஷ்டமா சித்தி, சித்துக்கள் இப்படி எத்தனையோ அதிசயங்கள் நிகழும் என்கிறார்கள் உண்மைதானா?


பதில்:

ஆம், சித்தர்கள் இதை, தங்களுடைய கவிதை நூல்கள் வழியாக, புரிந்துகொள்பவர் அறிந்துகொள்வார் என்ற குறிப்பாக எழுதி வைத்தார்கள். அதை அக்காலம் முதல் இக்காலம் வரை நேரடியாக அர்த்தம் புரிந்து கொள்ளாமல் பரப்புரை செய்பவர்கள் மிகுந்திருக்கிறார்கள். இப்போதைய தேடுதலில் கிடைத்த விபரம் என்ன என்று இங்கே பகிர்கின்றேன். படித்துப்பாருங்கள்.

அஷ்டமா சித்துக்களும், மூலிகை மந்திரங்களும்

அணிமா - அணுவைப் போல் சிறிதான தேகத்தை அடைதல்.

மகிமா - மலையைப் போல் பெரிதாதல்.

இலகிமா - காற்றைப் போல் இலேசாய் இருத்தல்.

கரிமா - கனமாவது-மலைகளாலும், வாயுவினாலும் அசைக்கவும் முடியாமல் பாரமாயிருத்தல்.

பிராப்தி - எல்லாப் பொருட்களையும் தன்வயப் படுத்துதல், மனத்தினால் நினைத்தவை யாவையும் அடைதல், அவற்றைப் பெறுதல்.

பிராகாமியம் - தன் உடலை விட்டு பிற உடலில் உட்புகுதல். (கூடு விட்டுக் கூடு பாய்தல்)

ஈசத்துவம் - நான்முகன் முதலான தேவர்களிடத்தும் தன் ஆணையைச் செலுத்தல்.

வசித்துவம் - அனைத்தையும் வசப்படுத்தல்,

-

உச்சாடனம் - மூலிகைகளால் மந்திரித்து வியாதிகள், பேய், பிசாசுகள், மிருகங்கள், எதிரிகள், உடலில் ஏறிய விஷங்களை விரட்டும் செயலே உச்சாடனம்.

ஆகர்ஷணம் - துர்தேவதைகள், தேவதைகள், இறந்து போன ஆன்மாக்கள் போன்றவற்றை அழைத்துப் பேசுவது.

பேதனம் - ஒன்றை வேறொன்றாக மாற்றிவிடுவது. மனிதர்களை, மிருகங்களைப் பேதலிக்கச் செய்வது.

மோகனம் - மயங்கச்செய்வது.

வசியம் - மனிதர்களை, விலங்குகளை வசியம் செய்வது.

வித்துவேஷணம் - விருப்பமில்லாமல் செய்வது அல்லது வெறுப்பை உண்டாக்குவது.

மாரணம் - எதிரிகளை மிரட்டி, கொல்வது.

தம்பனம் - பிற மனிதர்களின் செயல்களை. இயக்கங்களை தடுப்பது.

(நன்றி: இணையதளங்களின் பகிர்வுகள்)

-

இவை எல்லாமே பொதுவாகவே சித்து என்றுதான் அழைக்கப்படுகிறது. இது செயல்படுகிறதோ இல்லையோ? புரிந்து செய்யமுடியுமோ இல்லையோ? பொருந்துமோ பொருந்தாதோ? எப்படி இருந்தாலும் கூட, இதை நாம் பொய் என்றால், நம்மை ஒருவழி செய்துவிடுவார்கள். அதனால் நாமும் நம்பிக்கொள்ளலாம். குரு மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள், மக்கள் மனதை மயக்கி, மயக்கத்தில் ஆழ்த்தும் சித்துக்கள் வேண்டாம் என்று சொல்லுகிறார். உண்மையாகவே, நீங்கள் மேற்சொன்ன பட்டியலை படித்துப்பாருங்கள்.

இதனால் உண்மையிலேயே உங்களுக்கு ஆவதென்ன? ஏதேனும் பிரயோஜனம் உண்டா? மக்களுக்கு நன்மை ஏற்படுமா? இதனால் நீங்கள் உயர்வை அடைந்துவிடுவீர்களா? எந்த அளவிற்கு உங்கள் வாழ்க்கை நலம் பெறும்? மக்களின் அன்பை பெறமுடியும்? பொன்னும் பொருளும் புகழும் அதிகாரமும் நிறைய கிடைத்துவிடுமா? என்றெல்லாம் கேட்டு ஆராய்ச்சி செய்து அதற்கான பதிலை கண்டுபிடியுங்கள்.

முக்கியமாக, இந்த பட்டியலில் இருக்கின்ற எந்த ஒரு சித்து வேலைக்கும், ஆதாரம் ஏதுமில்லை. இதற்கெல்லாம் முழுமையான பாடம் உண்டா? யாரிடம் கற்பது? சொல்லித்தரும் நபர்கள் உண்டா? அவர் என்ன செய்கிறார்? எப்படி அதை பிறருக்கு கற்றுக்கொடுப்பார்? எதன் அடிப்படையில் அதை பிறருக்கு வழங்குவார்? என்பதும் தெரியவில்லை.

யோகம் என்றாலே எதோ மாயாஜாலம், சித்தர்கள் என்றாலே வித்தைக்காரர்கள் என்று கருத்து மேலோங்கி பரவிவிட்டது. நீங்களும் நானும் நம்பும் அளவிற்கு. ஆனால் சித்தர் என்றால், சித்து என்ற உயிராற்றலை உணர்ந்து அறிந்தோர் என்பதுதான் சித்தர் ஆகும். அந்த உண்மையை எல்லா யோகசாதனை அமைப்புக்களும் தருகிறது. வேதத்திரியமும் அதில் உண்டு. 

ஏற்கனவே கர்மா என்ற வினைப்பதிவுகளால் சிக்கித்தவிக்கும் ஒருவருக்கு, இந்த சுமைவேறு தேவைதானா? இருக்கிற வாழ்நாளில் இதை தீர்க்கவே காலமில்லாதபோது, அஷ்டமா சித்துக்களும் அவசியம் தானா? நான் யார்? என்ற பிறவியின் கடமையும், நோக்கமும் நிறைவேற்றுவதை விட்டு, இதற்காக காலம் கடத்துவது சரியானதுதானா? தன்னை அறிதலையும், இயற்கையின் உன்னதம் அறிவதையும், இறையுணர்வு பெறுவதையும் விட முக்கியத்தும் வாய்ந்ததா? இதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

வாழ்க வளமுடன்

-

What is the purpose of worship the Deepa Aradhana?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, நெருப்பை தீபமாக வணங்குவதால் என்ன நன்மை வந்துவிடப்போகிறது என்று விளக்குவீர்களா?


பதில்:

உலகில் உள்ள பெரும்பாலான மக்களிடம் நெருப்பை வணங்கும் பழக்கம், உளப்பூர்வமாக இருக்கிறது. காரணம் ஆதிகாலத்தில் நம் முன்னோர்கள் அப்படி வணங்கிவந்த பழக்கம்தான். தற்கால நவீன விஞ்ஞான காலத்தில், ‘இதையெல்லாம் வணங்குவதா? என்ன ஒரு மூட நம்பிக்கை’ என்று விலகி இருக்கிறார்கள் எனலாம். ஒன்றை ஏற்பதும், மறுப்பதும் அவரவர் விருப்பம்தானே தவிர குறை சொல்லுவதற்கு ஏதுமில்லை.

ஆனாலும் நெருப்பு என்றால் கொஞ்சமாவது பயம் இருக்கத்தானே செய்கிறது? இல்லை என்று மறுப்பீர்களா? பெரும் நெருப்பு உண்டாக சிறு பொறி போதுமே, உலகில் பெரும் காடுகள் பற்றி எரிந்து சாம்பலாகின்றன. காரணம் அறியமுடியாமல் திணறுகிறார்கள் என்பதுதான் உண்மை. மேலும் அந்த நெருப்பை வெறுமனே கண்டு ஒதுக்கிடாமல், அதை ஒரு முறை அனுபவமாக பெற்றிருக்கிறீர்களா? அந்த அனுபவம் இன்னும் பலவிதமான உண்மைகளை உங்களுக்குச்சொல்லும்.

ஆதிகால மனிதன், நெருப்பைக்கண்டு அஞ்சினான். நெருப்பின் தன்மை, தாக்கம், வளர்ச்சி, படருதல், அழித்தல், சாம்பலாக்கிடுதல் என்று எல்லாம் கண்டு திகைத்தான். அதனால் அதில் ஏதோ தெய்வத்தன்மை உள்ளது என்று உணர்ந்து அதை வணங்கினான். என்றாலும் கூட அந்த நெருப்பை, பக்குவமாக கையாண்டு, உணவை சமைக்கவும் கற்றுக்கொண்டான் என்பது மகத்தான உண்மைதானே?!

இப்போது உங்களுக்குத்தோன்றும் ‘அடுப்பில், சமையலுக்கு எரியும் நெருப்பை ஏன் தீபமாக வணங்க வேண்டும்? முட்டாள்தனம் இல்லையா?’ என்று கேட்ப்பீர்கள். இப்படி நீங்கள் கேட்பதாக இருந்தால், உங்களுக்கும் நெருப்பிற்கும் உள்ள தொடர்பில் விலகி இருக்கிறீர்கள். அந்த நெருப்பை அனுபவமாக பெறவில்லை என்று உறுதியாக சொல்லலாம்! முக்கியமாக, வெப்பம் தான் நெருப்பாக மாறுகிறது. நம் உடலில் சராசரி வெப்ப நிலையாக 98.6 ஃபாரன்ஹீட் டிகிரி வெப்பம் இருக்கிறது. அது அந்த அளவில் இருந்தாகவேண்டும். குறைந்தாலும், கூடினாலும் உயிர்வாழ்தலில் சிக்கல்தான்.

பஞ்சபூதங்கள் என்று சொல்லப்படும் பௌதீக தோற்றத்தில் மூன்றாவது நிலையே, வெப்பம் ஆகும், இந்த வெப்பம் தன்மாற்றம் பெற்றால் நெருப்பாக மாறிவிடும். நெருப்பு நிலையானதல்ல, உடனே அது எரிந்து / எரித்து மறைந்துவிடும். அந்த நிலையில் அங்கே ஒரு தெய்வீக மாற்றமும் நிகழ்கிறது. இந்த உண்மை அறிந்த அறிவார்ந்த முன்னோர்கள், ஆதிகாலத்தில் பயந்துபோய் வணங்கிய தன்மையை விலக்கி, உண்மையோடு தெய்வீகமாக, தீபாராதனை வழியில் வணங்கலாம் என்று வழியமைத்தார்கள். தீபராதனையை கண்களால் பார்ப்பதும், தீபத்தை கைகளால் ஏற்று கண்களில் ஒற்றிக்கொள்வதும் அந்த ஆற்றலை, சக்தியை நமக்குள் உள்வாங்கிக் கொள்வதாகும். இதுதான் நெருப்பை தீபமாக வணங்குவதால் கிடைக்கும் நன்மையாகும்.

வாழ்க வளமுடன்.