CJ for You: supreme power

supreme power

Showing posts with label supreme power. Show all posts
Showing posts with label supreme power. Show all posts

What is God really? How to know or realize? Give an explanation.


வாழ்க வளமுடன் ஐயா, இறை என்பது உண்மையில் எது? எப்படி தெரிந்து கொள்வது அல்லது உணர்ந்து கொள்வது? விளக்கம் தருக.


இறை என்ற வார்த்தையிலேயே ஓர் உண்மை இருக்கிறது எனலாம். தமிழ் மொழியின் சிறப்பு, அந்த வார்த்தையிலேயே அதனுடைய இயல்பும் இருப்பது ஆகும். இறை, என்பது எங்கும் நிறைந்து இருக்கும் ஒன்றை குறிப்பதாகும். இதை இறைந்து இருக்கிறது என்றும் சொல்லமுடியும். உதாரணமாக, உங்களிடம் உள்ள ஒரு கண்ணாடி பொருளை கீழே போட்டால் உடைந்து சிதறும் அல்லவா? கண்ணுக்குத் தெரியாத சிறு சிறு துகள்களாகவும் அவை இருக்கலாம். அவை எல்லாம் இறைந்து கிடக்கிறது எனலாம். தெரியாது ஆனால், காலை வைத்தால், ரத்தம் வரும் அளவிற்கு பாதத்தை பதம் பார்க்கும்தானே?

இந்த இயற்கையோடு, நாம் காணும் பொருட்களோடு, உயிர்களோடு, இந்த பிரபஞ்சத்தோடு ‘இறைந்து இருக்கும்’ ஒரு பேராற்றலையே ‘இறை’ என்று முன்னோர்கள் நமக்கு சொல்லிக் கொடுத்தார்கள். அதையே நாமும் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

இத்தகைய பேராற்றலை, குறிப்பாக உணர்த்தும் வகையில்தான்,  பக்தியாகவும் மலர்ந்தது. அதை ஏற்போரும் உண்டு, மறுப்போரும் உண்டு. அது அவரவர்கள் நிலைபாடும், உண்மை அறியாமையுமே ஆகும். ஆனால் இறைந்து கிடப்பது உண்மை என்பதை யாராகிலும் மறுக்கமுடியுமா? இதை மேலும், குருமகான் வேதாத்திரி மகரிஷியின் வார்த்தைகளின் வழியாகவே அறியலாம். இந்த காணொளி காண்க.

இறை என்பது உண்மையில் எது என்று உங்களுக்குத் தெரியுமா?

வாழ்க வளமுடன்

Why need to call that one is the God, Almighty, Supreme Power, and Divine?


இறை, இறைவன், கடவுள், தெய்வம், எல்லாம் வல்லவன், இப்படி சொல்வதெல்லாம் அவசியமானதுதானா?

வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.

கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, இறை, இறைவன், கடவுள், தெய்வம், எல்லாம் வல்லவன், இப்படி சொல்வதெல்லாம் அவசியமானதுதானா?


பதில்:

இறை, இறைவன், கடவுள், தெய்வம், எல்லாம் வல்லவன் என்ற வார்த்தைகள் தரும் உண்மையை நீங்கள் இன்னும் அறியவில்லை. அறிந்துகொள்ளவும் மறுக்கிறீர்கள். ஒன்றும் தவறில்லை. இந்த வார்த்தை மற்றும் உண்மையில் உங்கள் அனுபவம் அப்படி இருக்கிறது. மேலும் நீண்டகாலமாக சில கருத்துக்களை கொண்டிருப்பவர்கள் உடனடியாக மாற்றிக் கொள்ளவும் முடியாது. அதோடு உங்கள் பார்வையில், பொய்கள் தான் கண்ணில் பட்டிருக்கிறது. அதனாலும் கூட நீங்கள் இந்த கருத்தில் இருக்கலாம். வேறு யாரெனும் ஒரு வழிகாட்டியின் அறிவுரையாலும் அப்படியாக கருத்தில் நின்றிருக்கலாம். உங்களைப்பொறுத்தவரை அப்படி சொல்வது அவசியமில்லைதான்.

இதற்கு விளக்கமாக, குரு மகான் வேதாத்திரி சொன்ன உண்மைகளையே இங்கே குறிப்பிடுகின்றேன். ஒரு பொருளை நாம் தூக்குவது என்றால், நம்மால் எவ்வளவு தூக்கமுடியுமோ அவ்வளவு எடை கொண்ட பொருளைதான் தூக்க முடியும். காய்கறி அங்காடியில் உள்ள ஒரு மனிதர், தன் முதுகில் கிட்டதட்ட 50 கிலோ முதல் 100 கிலோ வரை தூக்கமுடியும். அதை நாம் வழக்கமாக பார்க்கிறோம். அதற்குமேல் என்றால் யாராலும் முடியாது. உங்களால் முடியும் என்றால் முயற்சிப்பதில் தவறில்லை. இப்போது ஓர் உண்மை நமக்கு தெரியவரும். தூக்கும் பொருளைவிட நாம் வலுவாக இருந்தால்தான், அந்த பொருளை தூக்கமுடியும். ஒரு மேஜைமேல் பத்து மூட்டைகளை அடுக்கினால் மேஜை உடைந்து நொறுங்கிவிடும் அல்லவா?

இப்போது உங்களுக்கு ஒரு காட்சி தருகிறேன். இந்த பூமி எவ்வளவு வலு உடையது என்பது உங்களுக்கு தெரியுமா? எத்தனையோ கோடி டன் எடை இருக்கலாம். அத்தகைய பூமியை தாங்கிக் கொண்டிருப்பது யார்? உடனே இதற்கு இயற்கை என்று நீங்கள் பதில் தருவீர்கள். ஆம் இயற்கைதான், தன்னிலே இந்த பூமியை மிதக்கவிட்டுக்கொண்டு இருக்கிறது. அந்த இயற்கைக்குத்தான் மதிப்பு கொடுத்து, வார்த்தைகளாலும் மதிப்பு கொடுத்து, இறை, இறைவன், கடவுள், தெய்வம், எல்லாம் வல்லவன் என்று பலவிதமான் பெயர்களில் அழைக்கிறோம். அந்த வார்த்தை இருக்கின்ற மதிப்பை உணராதவர்களுக்கு, அது மிக சாதாரணமான ஒலியாகவும், வார்த்தையாகவும் தான் தெரியும்.

நம்முடைய வாழ்வில் இன்று ஜனநாயகம் வந்துவிட்டதால், எந்த நாட்டு மக்களும் (ஒரு சிலர் தவிர) அவர்கள் நாட்டின் ஜனாதிபதியையும் மதிப்பதில்லை, பிரதமரையும் மதிப்பதில்லை. ஆனால் அந்தக்காலத்தில் அரசன், அரசி என்றால் பெரும் மதிப்பு கொண்டிருப்பார்கள். இப்போதும் சிலர் தங்களை அரச பரம்பரை என்று சொல்லிக் கொள்வதை கவனிக்கலாம். அதில் அவர்களுக்கு பெருமை கிடைத்துவிடுகிறது. அந்தவகையில், அரசன், அரசி என்று நேரில் பார்த்தாலும், பார்க்காவிட்டாலும் அந்த மதிப்பை நாம் வழங்குவோம் இல்லையா?! (ஒரு கற்பனையாக அந்தக்காலத்தில் நீங்கள் வாழ்வதாக நினைத்துப்பாருங்கள்).

இதுபோன்றதான உயர்ந்த மதிப்புத்தான், இறை, இறைவன், கடவுள், தெய்வம், எல்லாம் வல்லவன் என்ற சொல்லிலும் அடங்கி இருக்கிறது. எனினும் உங்களுக்கு என்ன விருப்பம் இருக்கிறதோ அப்படி அழைக்கலாம். யாரும் உங்களை குறை சொல்லப்போவதில்லை. என்றாலும் உணர்வால் நீங்களே உங்களையறியாமல் அப்படி சொல்லும் காலமும் வரலாம்!

வாழ்க வளமுடன்.

-

Who doesn't believe in God, can rise if he, she comes into yoga?


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, என் நண்பருக்கு கடவுள் நம்பிக்கை இல்லை, அவர் யோகத்தில் வந்தால் உயரமுடியுமா?


பதில்:

யோகம் குறித்த ஒரு உண்மையை நீங்கள் புரிந்துகொள்வது வேண்டும். யோகம் என்பது உலகில் வாழும் எல்லா மக்களுக்கும், இனி வரப்போகிற தலைமுறை மனிதர்களுக்கும் பொதுவானது தான். இதில் மாற்றுக்கருத்தே இல்லை. கடவுள் நம்பிக்கை இல்லாதவர் எப்படியேனும் வேறேதோ ஒன்றின்மீதோ, இயற்கையின் மீதோ நம்பிக்கை வைத்திருக்கலாம். அப்படி நம்பிக்கை கொஞ்சமாவது இருந்தால் மட்டுமே, யோகம் என்பது என்ன? என்றாவது தெரிந்துகொள்ள ஆர்வம் பிறக்கும். பொதுவாகவே, உலகில் உள்ள யாருமே உடனடியாக இந்த யோகத்தில் ஆர்வமாக வந்து இணைந்து கொள்வார்கள் என்று எதிர்பார்ப்பது தவறு!

யோகத்தை நேரடியாக அணுகிட முடியாத எளிய மக்களுக்காகவேதான், யோகத்தில் உயர்ந்த முன்னோர்கள், பக்தியை உருவாக்கி அதன் வழியாக நன்மைகள் பெற்றிட வழி வகுத்தார்கள். அதையும் கூட கடவுள் (கட+உள்) என்ற வினைச்சொல்லாகவும் அமைத்தார்கள்.

ஒரு மனிதர் இப்பொழுது யோகத்தில் இணைந்துகொண்டு, தன்னை திருத்தி, தன் கர்ம வினைப்பதிவுகளின் களங்கம் நீக்கி, தன் வாழ்வில் பிறவி நிலையை உயர்த்திட நினைக்கிறார் என்றால் அதற்கு காரணம், அவருடைய முந்தைய தலைமுறையினர்களான, பெற்றோரோ, தாத்தா, பாட்டியோ, அதற்குமுன் இருந்தவர்களோ நினைத்திருக்கலாம். அந்த நினைப்பு வழிவழியாக வந்து, இவருக்கு உந்துதலை தந்திருக்கிறது என்பதுதான் அர்த்தம். இப்படியான ஒருவர், யாருடைய ஆலோசனையும் இன்றியே தானாக, யோகத்தில் இணைந்துவிடுவார்கள். இது உங்கள் வாழ்வில், உங்களுக்கே கூட நிகழ்ந்திருக்கலாம்.

அதுபோல, கடவுள் நம்பிக்கை இல்லாதவர், எது கடவுள் என்ற தேடுதலைக் கொண்டிருந்தால், யோகத்தில் இணைந்து உயரலாம். அதுவல்லாது கடவுளே இல்லை, கடவுளே பொய், அதற்கு ஈடாக இயற்கையை மதிப்பளிப்பதும், இயற்கையை வனங்குவதும்கூட முட்டாள்தனம் என்ற ரீதியில் இருப்பாரேயானால், யோகத்திற்கு அவராகவும் வரமாட்டார். நீங்கள் ஆலோசனை தந்தாலும் வரமாட்டார்.

மேலும் பக்தி என்பது யோகத்திற்கான முதல்படியும் ஆகும். பக்தி இல்லாமல் நேரடியாக யோகத்திற்கு வருவதும், அதை பின்பற்றுவதும் கடினமே!

வாழ்க வளமுடன்.

-

Method of realize the Divine by the words


வேதாத்திரிய கேள்வியும் பதிலும்.


கேள்வி:

வாழ்க வளமுடன் ஐயா, இந்த இறை, இறைவன், கடவுள், தெய்வம் என்பது இல்லாமல் யோகத்தில் பயணிக்க முடியாதா?


பதில்: 

பயணிக்கமுடியும். ஆனால், அந்த முழுமையான உணர்வும், மெய்ப்பொருள் உண்மையும், பேரறறிவும், பேராற்றலின் தன்மையும் விடுபட்டுப்போக வாய்ப்புள்ளதே? ஆனால் ஒன்று தெளிவாக சொல்ல முடியும். நீங்கள் சொன்ன ‘இறை, இறைவன், கடவுள், தெய்வம்' என்ற என்பதின் வழியாக உங்களுடைய புரிதலில் தவறு இருக்கலாம் அல்லது ஏமாற்றம் இருக்கலாம்.

ஒரு நாட்டினை ஆளுகின்ற அரசன் என்று வைத்துக்கொள்ளலாம். அரசன் என்று கூட சொல்லாமல் அரசர் என்றுதான் சொல்லுவார்கள். பாருங்கள், ஆரம்பத்திலேயே நாம் மதிப்பு கொடுத்துவிட்டோம் அல்லவா? இந்த அரசர் என்ற ஒரு ஆட்சியாளரை, நீங்கள் நேரில் பார்த்தால் தான் மதிப்பு கொடுப்பீர்களா? கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். அரசர்கள் உலகையும், நாட்டையும் ஆண்ட காலம் மலையேறி விட்டதுதான். என்றாலும் கூட ஒரு கற்பனையாக அப்படி உங்களை, அந்த அரசர் ஆளுகின்ற, ஆளுமை செய்கின்ற நாட்டின், குடிமகனாக (அந்தக்குடி அல்ல) உங்களை நினைத்துப் பாருங்கள்.

அரசர் என்ற வார்த்தையை கேட்டாலே உங்களுக்கு ஒரு மரியாதையும், வணக்கமும் தானாகவே வந்துவிடும் அல்லவா? நீங்கள் நேரடியாக அரசர் குறித்த உண்மை தெரிந்துகொள்ளாவிட்டாலும் கூட, உங்கள் பெற்றோர், மற்றோர், உறவினர், பொதுமக்கள் ஆகியோரின் நடவடிக்கைகளிலும், பழக்கங்களின் வழியாகவும், அவர்கள் உங்களுக்குச் சொன்ன சம்பவங்கள் மூலமாகவும் அப்படியான நிலைக்கு நீங்கள் வந்திருப்பீர்கள்தானே?!

இதுதான் நீங்கள் சொன்ன ‘இறை, இறைவன், கடவுள், தெய்வம்' என்ற சொற்களின் வழியாக நிகழ்கிறது. எல்லைகட்டிய மனதாலும், நமது ஐம்புலன்களாலும், மெய்ப்பொருளான உண்மையை நாம் புரிந்துகொள்ளவும், உணர்ந்து கொள்ளவும் முடியாது. அதற்கு நம்மை தயார் செய்வதற்காகவாவது இப்படியான உயர்வான உண்மையை விளக்கிச்சொல்லும், இறை, இறைவன், கடவுள், தெய்வம் என்ற நிலை முக்கியம். அற்பமான, அழிந்து, மறைந்து, சூனியமாக போகக்கூடிய ஒன்றிலிருந்து விடுபட்டு, பெருமான் மாணிக்கவாசகரின் வார்த்தைகளால் ‘ஆக்கம், அளவு, இறுதி’ இல்லாத அந்த தெய்வீகத்தை வெறுமனே உங்களால் புரிந்துகொள்ள முடியுமா?

‘ அவ்வளவுதானே? இதெல்லாம் எங்களால முடியாதாய்யா?, ரொம்ப சுலபம்’ என்று கூட நீங்களும், உங்கள் மனமும் சொல்லலாம். தவறில்லை நீங்கள் உங்கள் வழியில் முயற்சியுங்கள். நீங்கள் வெறுமனே பற்றி இருக்கிற யோகத்தை விட்டுவிட்டுங்கள். அப்போதுதான் நீங்களாக முயற்சித்தீர்கள் என்று உங்களால் சொல்லவும் முடியும்.

அப்படியெல்லாம் இல்லை, நான் முயற்சிக்கிறேன் என்று நீங்கள் நினைத்தால், முதலில், இறை, இறைவன், கடவுள், தெய்வம் என்பதில் இருக்கிற உண்மையை புரிந்துகொள்ள முயற்சியுங்கள். பிறகு உங்கள் பயணம் சிறப்பாகும். 

வாழ்க வளமுடன்.